என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    கத்தரிக்காய் சிலருக்கு பிடிக்காது. ஆனால் கத்தரிக்காயை வைத்து இந்த முறையில் பிரியாணி செய்தால் சூப்பராக இருக்கும். இப்போது இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாசுமதி அரிசி - ஒரு கப்,
    பிஞ்சுக் கத்திரிக் காய் - கால் கிலோ (நறுக்கவும்),
    சின்ன வெங்காயம் - ஒரு கப்,
    மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,
    புளித்தண்ணீர் - 2 கப்,
    கடுகு - ஒரு டீஸ்பூன்,
    தக்காளிச் சாறு - கால் கப்,
    கொத்தமல்லித்தழை  - சிறிதளவு,
    நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    அரைக்க :

    காய்ந்த மிளகாய் - 5,
    தனியா - ஒரு டீஸ்பூன்,
    வெந்தயம் - அரை டீஸ்பூன்,
    கடலைப்பருப்பு - ஒரு டேபிள் ஸ்பூன்,
    சீரகம் - அரை டீஸ்பூன்.



    செய்முறை :

    * சின்னவெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * கத்தரிக்காயை காம்பு நீக்காமல் நான்கு பாகமாக வரும் படி வெட்டிகொள்ளவும். பார்க்க பூப்போல இருக்கும்.

    * பாசுமதி அரிசியை நீரில் 15 நிமிடம் ஊறவிட்டு, நீரை வடிக்கவும்.

    * வாணலியில் நெய்விட்டுச் சூடாக்கி அரிசியை சில நிமிடங்கள் வறுத்துக்கொள்ளவும்.

    * வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடாக்கி, அரைக்க கொடுத்துள்ளவற்றை வறுத்து, ஆறியதும் சிறிதளவு உப்பு சேர்த்து மிக்சியில் போட்டு பொடி செய்துகொள்ளவும்.

    * குக்கரில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடுகு தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்...

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளிச் சாறு சேர்த்து வதக்கவும்.

    * அடுத்து அதில் வறுத்து அரைத்த பொடி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து ஒரு கிளறு கிளறவும்.

    * அடுத்து அதில் நறுக்கிய கத்தரிக்காய் சேர்த்து வதக்கவும்.

    * புளித்தண்ணீர் ஊற்றி, ஒரு கொதி வந்ததும் அரிசியைப் போட்டுக் கிளறி, அடுப்பை மிதமான தீயில் வைத்து வேகவிட்டு, வெந்ததும் கொத்தமல்லித் தழை தூவி இறக்கி பரிமாறவும்.

    * சூப்பரான கத்தரிக்காய் பிரியாணி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    அசைவத்திற்கு இணையான மாற்று காளான். இன்று காளான் வைத்து ஸ்பைஸியான பிரியாணியை எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாசுமதி அரிசி - ஒரு கப்,
    நறுக்கிய பட்டன் காளான் - ஒரு கப்,
    தக்காளி, வெங்காயம் - தலா 2
    ரெட் சில்லி சாஸ், சோயா சாஸ் - தலா ஒரு டேபிள்ஸ்பூன்,
    மிளகு - சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்,
    இஞ்சி - சிறிய துண்டு,
    உடைத்த முந்திரி - ஒரு டேபிள்ஸ்பூன்,
    எண்ணெய் - நெய் கலவை, உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    * இஞ்சி, தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * அரிசியைக் கழுவி, 10 நிமிடங்கள் ஊறவைத்து, நீரை வடிக்கவும்.

    * வாணலியில் சிறிதளவு நெய் விட்டு அரிசியை சில நிமிடங்கள் வறுத்துக்கொள்ளவும்.

    * தக்காளியைச் சுடுநீரில் சிறிது நேரம் போட்டு எடுத்து, தோலை உரித்து விட்டு மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்.

    * குக்கரில் எண்ணெய் - நெய் கலவையைச் சேர்த்து, சூடானதும் பட்டன் காளான் சேர்த்து... இஞ்சி, வெங்காயம், முந்திரி சேர்த்து வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் இதனுடன் சில்லி சாஸ், சோயா சாஸ், உப்பு, மிளகு - சீரகத்தூள் சேர்த்துக் கிளறவும்.

    * அடுத்து அதில் தக்காளிச் சாறு ஊற்றி பச்சை வாசனை போன வதக்கவும்.

    * அடுத்து தேவையான நீர் சேர்த்துக் கொதி வந்ததும் அரிசியைப் போட்டுக் கிளறி, குக்கரை `வெயிட்’ போட்டு மூடி, 2 விசில் வந்த உடன் நிறுத்தவும்.

    * ஆவி விட்டதும் குக்கரைத் திறந்து, கிளறி சூடாகப் பரிமாறவும்.

    * சூப்பரான ஸ்பைஸி மஷ்ரூம் பிரியாணி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலை நேரங்களில் பக்கோடா சாப்பிட்டால், சூப்பராக இருக்கும். அதிலும் சற்று காரமாக, மைதா மாவுடன், பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து செய்து சாப்பிட்டால், அதன் சுவைக்கு அளவே இல்லை.
    தேவையான பொருட்கள் :

    மைதா - 1 கப்
    அரிசி மாவு - 1/2 கப்
    கடலை மாவு - 1/2 கப்
    இஞ்சி - சிறிய துண்டு
    வெண்ணெய் - 2 டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - 5
    வெங்காயம் - 2
    உப்பு - தேவையான அளவு
    கறிவேப்பிலை - சிறிதளவு
    கொத்தமல்லி - அரை கட்டு
    எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :

    * வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

    * இஞ்சி, ப.மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் மைதா மாவைப் போட்டு, ஆவியில் சிறிது நேரம் வேக வைத்து, ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.

    * அடுத்து மைதா மாவுடன் அரிசி மாவு, கடலை மாவு, உப்பு, வெண்ணெய், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, இஞ்சி போட்டு சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து பக்கோடா மாவு பதத்தில் பிசைந்து கொள்ள வேண்டும்.

    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் விட்டு, காய்ந்ததும், கலந்து வைத்துள்ள மாவை சிறிது சிறிதாக பக்கோடா போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.

    * இப்போது மொறுமொறுவென சூடான மைதா பக்கோடா ரெடி!!!

    * இதனை தக்காளி சாஸ் உடன் சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பன்னீர் என்றாலே குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த பன்னீர் சிப்ஸை மாலையில் ஸ்நாக்ஸாகவும், மதிய உணவுக்கு சைடிஷாகவும் செய்து கொடுக்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பன்னீர் - 150 கிராம்
    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
    கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
    இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
    தந்தூரி பொடி - 1 டீஸ்பூன்
    எண்ணெய் - 1/2 கப்
    சோள மாவு - 1 ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    * பன்னீரை நீளமாக விரல் வடிவில் வெட்டிக் கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் பன்னீர் அதனுடன் உப்பு, மிளகாய்த்தூள், உப்பு, சோள மாவு, கரம் மசாலா தூள், இஞ்சி, பூண்டு விழுது, தந்தூரி பொடி, சிறிது எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

    * கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் ஊற வைத்த பன்னீரை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

    * சூப்பரான பன்னீர் சிப்ஸ் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு வித்தியாசமான உணவுகளை செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று முட்டையை வைத்து புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாசுமதி அரிசி - 1 கப்
    முட்டை - 3
    கிராம்பு - 3
    ஏலக்காய் - 3
    பட்டை - 3
    மஞ்சள் தூள் - ¼ ஸ்பூன்
    கரம் மசாலா தூள் - 1 ஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
    நெய் - 4 ஸ்பூன்
    தேங்காய் பால் - 1 கப்
    சின்ன வெங்காயம் - 150 கிராம்
    தக்காளி சாறு - கால் கப்
    புதினா - அரை கட்டு
    கொத்தமல்லி தலை - அரை கட்டு
    உ‌ப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    * கொத்தமல்லி, புதினா, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * பாசுமதி அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

    * குக்கரை அடுப்பில் வைத்து நெய்யை ஊற்றி சூடானதும் கிராம்பு, பட்டை, ஏலக்காய் சேர்த்து தாளித்த பின் இதனுடன் ஊறவைத்த பாசுமதி அரிசியை போட்டு அரிசியில் உள்ள நீர் சுண்டும் வரை அரிசி உடையாமல் வதக்கவும்.

    * இதனுடன் தேங்காய் பால் 1 கப், கொஞ்சம் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரில் வேக வைத்து தனியாக எடுத்து வைக்கவும். சாதம் உதிரி உதிரியாக இருக்க வேண்டும்.

    * ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி உப்பு போட்டு லேசாக நுரை வரும்படி அடித்து வைக்கவும்.

    * ஒரு கடாயில் நெய் ஊற்றி நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    * வெங்காயம் சற்று வதங்கியதும் தக்காளி சாறு ஊற்றி நன்றாக வதக்கவும்.

    * தக்காளி நன்றாக வதங்கியதும் அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் எல்லாவற்றையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    * அடுத்து அதில் புதினா, கொத்தமல்லி இலைகளைச் சேர்க்கவும்.

    * அடுத்து அதில் முட்டை ஊற்றி இடைவிடாது கிளறிவிட்டு வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்.

    * இந்த முட்டைக் கலவையுடன் சாதத்தை சேர்த்து நன்றாக கலந்து சூடாக பரிமாறவும்.

    * சூப்பரான முட்டை புலாவ் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பிரியாணி, புலாவ், சாம்பார் சாதத்திற்கு சூப்பரான சைடிஷ் இந்த மட்டன் சாப்ஸ். இன்று இந்த மட்டன் சாப்ஸை எப்படி செய்வது என்று விரிவாக பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மட்டன் - 1 கிலோ
    தேங்காய்ப்பால் - அரை கப்(திக்கான பால்)
    எண்ணெய் - தேவையான அளவு
    மஞ்சள்பொடி - 1 ஸ்பூன்
    மிளகுத்தூள் - 1 ஸ்பூன்
    சீரகத்தூள் - 1 ஸ்பூன்
    சோம்புத்தூள் - 1 ஸ்பூன்
    இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன்
    கரம்மசாலா பொடி - 1 ஸ்பூன்
    மிளகாய்ப்பொடி - 2 ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    கொத்தமல்லி - சிறிதளவு



    செய்முறை :

    * மட்டனை கழுவி சுத்தம் செய்த பின் தண்ணீரை வடிகட்டி வைக்கவும்.

    * கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் மட்டனை போட்டு அதனுடன் தேங்காய்ப்பால், மஞ்சள்பொடி, மிளகுத்தூள், சீரகத்தூள், சோம்புத்தூள், இஞ்சி விழுது, பூண்டு விழுது, கரம் மசாலா பொடி, உப்பு மற்றும் மிளகாய்ப்பொடி போட்டு பிசறி 1/2 மணி நேரம் ஊற விடவும்.

    * ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் ஊறவைத்துள்ள மட்டனை போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து தண்ணீர் வற்றும் வரை கிளறிக்கொண்டே இருக்கவும்.

    * மட்டனில் தண்ணீர் வற்றியதும் மட்டன் நிறம் மாறும்.

    * அப்போது அரை டம்ளர் தண்ணீர் தெளித்து கிளறி விட்டு குக்கரை மூடி 8விசில் விட்டதும் இறக்கவும்.

    * குக்கரில் பிரஷர் அடங்கியதும் திறந்து அடுப்பில் வைத்து சிறிது நேரம் கிளறவும்.

    * மசாலா அனைத்து மட்டனுடன் சேர்ந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

    * சூப்பரான மட்டன் சாப்ஸ் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வெஜிடபிள் பிரியாணி அனைவருக்கும் பிடிக்கும். தேங்காய் பால், வெஜிடபிள் சேர்த்து செய்யும் இந்த பிரியாணி சூப்பராக இருக்கும். இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாசுமதி அரிசி - ஒரு கப்,
    தேங்காய்ப்பால் - 2 கப்,
    காலிஃப்ளவர் (உதிர்த்தப் பூ) - கால் கப்,
    பச்சைப் பட்டாணி (உரித்தது) - 2 டேபிள்ஸ்பூன்,
    பிரியாணி இலை - ஒன்று,
    கிராம்பு - 3,
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
    பீன்ஸ் - 10,
    பெரிய வெங்காயம் - 2 ,
    தக்காளி - 1
    பச்சை மிளகாய் - 4 ,
    பிரியாணி மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்,
    எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
    நெய், உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    * கொத்தமல்லி, தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ப. மிளகாய், பீன்ஸை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

    * அரிசியை நீரில் அலசி 15 நிமிடங்கள் ஊறவைத்து, பிறகு நீரை வடிக்கவும்.

    * வாணலியில் சிறிதளவு நெய்விட்டுச் சூடாக்கி, அரிசியை ஈரம் போகும் வரை சில நிமிடங்கள் வறுக்கவும்.

    * குக்கரில் எண்ணெய் - நெய்விட்டு, சூடானதும் பிரியாணி இலை, கிராம்பு தாளித்து, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    * அடுத்து அதில் பச்சைப் பட்டாணி, நறுக்கிய காலிஃப்ளவர், பீன்ஸ், உப்பு சேர்த்து வதக்கவும்.

    * காய்கறிகள் சிறிது வதங்கியதும் அதில் தேங்காய்ப்பால் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் பிரியாணி மசாலாத்தூள் சேர்த்து, வறுத்த அரிசி சேர்த்து கலக்கி, தீயைக் குறைத்து, விசில் போடவும்.

    * 10-15 நிமிடங்கள் வேகவிட்டு இறக்கவும். ஆவி போனவுடன் குக்கரைத் திறந்து, கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

    * சூப்பரான தேங்காய்ப்பால் வெஜிடபிள் பிரியாணி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாம்பழத்தை வைத்து நிறைய இனிப்புகள் மற்றும் ஜூஸ்கள் செய்யலாம். இன்று தேங்காய், மாம்பழம் வைத்து சூப்பரான லட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மாம்பழ கூழ் - 1 கப்
    சுண்டக் காய்ச்சிய பால் - 1 கப்
    தேங்காய் பவுடர் - 2 கப்
    ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்
    நட்ஸ் - 1/2 கப்



    செய்முறை :

    * நட்ஸை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * அடுப்பில் அந்தப் பாத்திரத்தை வைத்து அதில் தேங்காய் பவுடரை போட்டு பொன்னிறமாகும் வரை நன்கு வதக்க வேண்டும்.

    * பின்னர் அத்துடன் மாம்பழக் கூழை சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.

    * இந்தக் கலவையுடன் சுண்டக் காய்ச்சிய பால் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து அனைத்தும் ஒன்று சேரும்படி கலக்க வேண்டும்.

    * நல்ல பதத்தில் அதாவது சிறிது கெட்டியாக லட்டு பிடிக்க ஏதுவான நிலைக்கு வந்தவுடன் அடுப்பை அணைத்துவிட வேண்டும்.

    * இறக்கி வைத்த இந்தக் கலவை ஆறிய பின் சிறிது சிறிது உருண்டைகளாக பிடித்து வைத்துக் கொள்ளுங்கள்.

    * ஒரு தட்டில் சிறிது தேங்காய் பவுடரை தூவிக் கொள்ளுங்கள். அந்த பவுடர் மீது செய்து வைத்த உருண்டைகளை உருட்டி எடுத்தால் சுவையான மாம்பழ லட்டு ரெடி...

    * இந்த ரெசிபியை செய்ய அடி கனமாக உள்ள பாத்திரத்தை உபயோகப்படுவது சிறந்தது.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஹாட் சாக்லேட்டை வீட்டிலேயே எளிமையாக செய்யலாம். மேலும் இதை செய்வதற்கு 10 நிமிடம் போதும். இந்த ஹாட் சாக்லேட்டை எப்படி செய்வதென்று பார்ப்போம்.
    தேவையான பொருட்கள் :

    பால் - 1 1/2 கப்
    சோள மாவு - 1/2 டீஸ்பூன்
    சாக்கோ சிப்ஸ் - 3 டேபிள் ஸ்பூன்
    சர்க்கரை - 1 டீஸ்பூன்
    ஹாட் சாக்லேட் பவுடர் - 1 டீஸ்பூன்,
    கொக்கோ பவுடர் - 1 டீஸ்பூன்



    செய்முறை :

    * பாலில் சோள மாவை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

    * கலந்த பாலை வாணலியில் ஊற்றி சூடேற்றி, அத்துடன் சாக்கோ சிப்ஸ், சர்க்கரை சேர்த்து குறைவான தீயில் தொடர்ந்து கிளறி விட வேண்டும்.

    * சாக்கோ சிப்ஸ் முற்றிலும் கரைந்ததும், அதில் ஹாட் சாக்லேட் பவுடர் மற்றும் கொக்கோ பவுடர் சேர்த்து, ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து இறக்கி, டம்ளரில் ஊற்றி பரிமாறவும்.

    * ஹாட்டான ஹாட் சாக்லேட் ரெடி!!!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சின்ன வெங்காயத்தில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று சின்ன வெங்காயத்தை வைத்து ஈஸியான முறையில் சாம்பார் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சின்ன வெங்காயம் - 20 (தோல் உரிக்கவும்),
    புளி - எலுமிச்சைப் பழ அளவு,
    தக்காளி - 1
    சாம்பார் பொடி - 2 டேபிள்ஸ்பூன்,
    துவரம்பருப்பு - 100 கிராம்,
    காய்ந்த மிளகாய் - 3,
    கடுகு, வெந்தயம் - தலா அரை டீஸ்பூன்,
    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    * துவரம்பருப்பை குழைவாக வேக வைத்து நன்றாக மசித்து கொள்ளவும்.

    * சின்ன வெங்காயத்தை தோல் உரித்து வைக்கவும்.

    * தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * புளியை கரைத்து கொள்ளவும்.

    * வாணலியில் எண்ணெய் விட்டு சின்ன வெங்காயத்தை போட்டு சிறிது வதக்கிய பின்னர், தக்காளியை போட்டு வதக்கவும்.

    * அடுத்து அதில் கொஞ்சம் தண்ணீர் விட்டு, கொதித்ததும் கரைத்த புளியை ஊற்றவும்.

    * அடுத்து அதில் உப்பு, சாம்பார் பொடி சேர்த்து கொதிக்கவிடவும்.

    * இதனுடன் வேகவைத்து மசித்த பருப்பை சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்கவிடவும்.  

    * கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து சாம்பாரில் சேர்க்கவும்.

    * கடைசியாக கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கி பரிமாறவும்.

    * சூப்பரான ஈஸியான சின்ன வெங்காய சாம்பார் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பிரியாணி, புலாவ், சாம்பார் சாதத்திற்கு தொட்டு கொள்ள சூப்பரான சைடிஷ் இந்த சிக்கன் சுக்கா வறுவல். இன்று இந்த சிக்கன் சுக்கா வறுவலை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    எலும்பில்லாத சிக்கன் - ½ கிலோ
    வெங்காயம் - 1
    பட்டை - 1 துண்டு
    மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
    மிளகு - 2 ஸ்பூன்
    சீரகம் - 1 ஸ்பூன்
    சோம்பு - 1 ஸ்பூன்
    இஞ்சி - 1 துண்டு
    பூண்டு - 10 பல்
    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
    எண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    * வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * சிக்கனை நன்றாக கழுவி வைக்கவும்.

    * மிக்ஸியில் பட்டை, சீரகம், மிளகு, சோம்பு, இஞ்சி, பூண்டு போட்டு நன்றாக அரைக்கவும்.

    * ஒரு பாத்திரத்தில் சிக்கனை போட்டு அதனுடன் மஞ்சள் தூள், அரைத்த மசாலா, தேவையான உப்பு சேர்த்து பிசறி 30 நிமிடம் ஊற வைக்கவும்.

    * ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் ஊற வைத்த சிக்கனை போட்டு வேக வைக்கவும். அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். அடிக்கடி கிளறி விடவும்.

    * இதற்கு சிக்கனில் உள்ள தண்ணீரே போதுமானது. தண்ணீர் சேர்க்கக்கூடாது. சிக்கனில் தண்ணீர் வற்றிய பிறகு சிறு தீயில் வைத்துக் கிளறினால் உப்பு, காரம் சிக்கனில் சேர்ந்து இருக்கும்.

    * எண்ணெய் பிரிந்து வரும் போது சிக்கனை கொத்தமல்லி தூவி இறக்கவும்.

    * சூப்பரான சைடிஷ் சிக்கன் சுக்கா வறுவல் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகள் மீன் என்றால் விரும்பி சாப்பிடுவார்கள். மீனில் குழம்பு, வறுவல் செய்து இருப்பீங்க. ஆனால் கிரீன் மசாலா வைத்து செய்யும் இந்த மீன் பிரை சூப்பராக இருக்கும்.
    தேவையான பொருட்கள் :

    துண்டு மீன் - ½ கிலோ
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
    மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
    எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்

    அரைக்க :

    பூண்டு - 6 பல்
    பச்சைமிளகாய் - 5
    மிளகு - 1 தேக்கரண்டி
    சீரகம் - ½ தேக்கரண்டி
    சோம்பு - ¼ தேக்கரண்டி
    கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
    கறிவேப்பிலை - சிறிதளவு
    புதினா - ஒரு கைப்பிடி



    செய்முறை :

    * முதலில் மீனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    * மிக்ஸியில் அரைக்க வேண்டிய பொருட்களை நன்றாக அரைத்து கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் மீனை போட்டு அதனுடன் அரைத்த மசாலா, உப்பு, மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக மீனில் தடவி பிரிட்ஜில் ஒரு மணிநேரம் ஊற வைக்கவும்.

    * ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மீனை போட்டு பொரித்தெடுக்கவும்.

    * சுவையான கிரீன் மசாலா மீன் பிரை தயார்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×