என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    ஆரோக்கியமாக வாழ விரும்புபவர்கள் தினமும் பழங்கள், அல்லது பழச்சாறு குடிப்பது நல்லது. இன்று மாம்பழ - பேரீச்சம்பழம் ஸ்மூத்தி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்  :

    மாம்பழம் - 1
    பேரீச்சம் பழம் - 10
    தேன் - 1 ஸ்பூன்
    பால் - 1 கப்
    பட்டை தூள் - அரை ஸ்பூன்
    ஐஸ்கட்டிகள் - தேவைக்கு



    செய்முறை :

    * மாம்பழத்தை தோல் நீக்கி துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

    * மிக்சியில் பேரீச்சம் பழம் சிறிது பால் சேர்த்து நன்றாக அரைக்கவும்.

    * அடுத்து அதில் மாம்பழ துண்டுகள், பால், தேன், ஐஸ்கட்டிகள் சேர்த்து நன்றாக அரைக்கவும்.

    * அரைத்த ஜூஸை கண்ணாடி கப்பில் ஊற்றி அதன் மேல் பட்டை தூள் தூவி பருகவும்..

    * சத்தான சுவையான மாம்பழ - பேரீச்சம்பழம் ஸ்மூத்தி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு சூடாக ஸ்நாக்ஸ் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று காளான் பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    காளான் -  200 கிராம்
    வெங்காயம் - 1
    இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - 2
    கொத்தமல்லி தழை - சிறிதளவு
    மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன்
    பெருங்காய்தூள் - சிறிதளவு
    மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
    சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
    உப்பு - சுவைக்கேற்ப
    அரிசி மாவு - 2 டீஸ்பூன்
    கடலை மாவு - 5 டீஸ்பூன்
    தண்ணீர் - தேவையான அளவு



    செய்முறை :

    * காளானை நன்றாக கழுவி நீளமான துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

    * வெங்காயம், பூண்டு, இஞ்சி, ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் நீளமாக காளான், நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பூண்டு, இஞ்சி, கொத்தமல்லி தழை, பச்சை மிளகாய், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.

    * அடுத்து அதனுடன், அரிசி மாவு, கடலை மாவு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.

    * அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசைந்து வைத்த காளான் மாவை உதிரி உதிரியாக போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

    * சூப்பரான காளான் பக்கோடா ரெடி!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வெண்டைக்காயில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று வெண்டைக்காயை வைத்து செட்டிநாடு முறையில் சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    உதிரியாக வடித்த சாதம் - 1 1/2 கப்
    வெண்டைக்காய் - 100 கிராம்
    சின்ன வெங்காயம் - 50 கிராம்
    கெட்டியான புளிக்கரைசல் - 1 டீஸ்பூன்
    மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
    மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
    கடலை பருப்பு - 1 டீஸ்பூன்
    முந்திரி பருப்பு - 10
    கடுகு - 1 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    எண்ணெய் - 1 டீஸ்பூன்
    உப்பு - சுவைக்கேற்ப



    செய்முறை :

    * வெங்காயம், வெண்டைக்காயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    * அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயத்தை இட்டு பொன்னிறமாக வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் வெண்டைக்காய், உப்பு சேர்த்து மிதமான தீயில் 10 நிமிடங்கள் வதக்கவும்.

    * வெண்டைக்காய வெந்ததும் மஞ்சள்தூள், கறிவேப்பிலை, பட்டை பொடி, மிளகுத்தூள், உப்பு, கெட்டியான புளிக்கரைசல் சேர்த்து வெண்டைக்காயை நன்றாக கிளறி விட்டு வேக வைக்கவும்.

    * மற்றொரு கடாயை எடுத்து 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, கடலை பருப்பு, முந்திரி இட்டு பொரிந்ததும் அதில் வெண்டைக்காயை கலவையைச் சேர்க்கவும்.

    * அதனுடன், வேக வைத்த சாதத்தை சேர்த்து நன்றாக கலக்கவும்.

    * குறைவான தீயில் 5 நிமிடங்கள் கிளறி விட்டு உப்பு சரிபார்த்து அடுப்பில் இருந்து இறக்கி பரிமாறவும்.

    * சூப்பரான செட்டிநாடு வெண்டைக்காய் சாதம் ரெடி!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பிரியாணி, புலாவ், நாண், சப்பாத்தி, பூரிக்கு தொட்டுக்கொள்ள சூப்பரான சைடிஷ் இந்த டோஃபு மஞ்சூரியன். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    டோஃபு - 1 பாக்கெட்,
    குட மிளகாய் - 1,
    வெங்காயம் - 1,
    வெங்காயத்தாள் - ஒரு கைப்பிடி,
    மைதா - 4 டீஸ்பூன்,
    இஞ்சி - பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்,
    உப்பு - தேவைக்கேற்ப,
    தக்காளி சாஸ் - 1/2 டீஸ்பூன்,
    சோயா சாஸ் - 1/2 டீஸ்பூன்,
    எண்ணெய் - தேவைக்கு.



    செய்முறை :

    * மைதாவில் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து தண்ணீருடன் பஜ்ஜி மாவு பதத்துக்குக் கரைக்கவும்.

    * வெங்காயம், குடமிளகாய், வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * டோஃபுவை சதுர துண்டங்களாக வெட்டிக் கொள்ளவும்.

    * டோஃபு துண்டங்களை கரைத்து வைத்துள்ள மைதா மாவில் தோய்த்து சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

    * ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பொடியாக அரிந்த வெங்காயம், குட மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.

    * அடுத்து அதில் சோயா சாஸ், தக்காளி சாஸ் சேர்த்து நன்கு கலந்துவிடவும்.

    * அடுத்து அதில் பொரித்த டோஃபு துண்டங்களை போட்டுக் கிளறி வெங்காயத்தாள் கொண்டு அலங்கரித்து உடனே பரிமாறவும்.

    * சூப்பரான சைடிஷ் டோஃபு மஞ்சூரியன் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பிரியாணியில் நிறைய வெரைட்டிகள் உள்ளது. இன்று டபுள் பீன்ஸ் வைத்து சூப்பரான காரசாரமான பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாஸ்மதி அரிசி - ஒரு கப்,
    டபுள் பீன்ஸ் - அரை கப்,  
    எண்ணெய், நெய், உப்பு - தேவையான அளவு,
    வெஜிடபிள் ஸ்டாக் - 2 கப்
    அன்னாசிப்பூ, உலர்வெந்தயக்கீரை - சிறிதளவு.
    கொத்தமல்லி தழை - சிறிதளவு

    அரைக்க :

    பட்டை - அரை அங்குலத் துண்டு,
    இஞ்சி - அரை அங்குலத் துண்டு,
    சின்ன வெங்காயம் - 10 (உரிக்கவும்),
    பச்சை மிளகாய் - 4,
    பூண்டுப் பல் - 2,
    க்ரீன் சில்லி சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்,



    செய்முறை :

    * அரைக்க கொடுத்துள்ளவற்றை மிக்சியில் போட்டு சிறிதளவு நீர் விட்டு மையாக அரைத்துக்கொள்ளவும்.

    * அரிசியை 10 நிமிடங்கள் நீரில் ஊறவைத்து, நீரை வடிக்கவும்.

    * வாணலியில் நெய்விட்டு சூடாக்கி, அரிசியைச் சில நிமிடங்கள் வறுத்துக் கொள்ளவும்.

    * குக்கரில் எண்ணெய்விட்டு, காய்ந்ததும் அரைத்த விழுதைச் சேர்த்து வதக்கி, டபுள் பீன்ஸ், உப்பு சேர்த்துக் கிளறவும்.

    * அடுத்து அதில் க்ரீன் சில்லி சாஸ், அன்னாசிப்பூ, உலர் வெந்தயக் கீரைச் சேர்த்துக் கிளறவும்.

    * பிறகு, வெஜிடபிள் ஸ்டாக் ஊற்றி, ஒரு கொதி வந்ததும் அரிசி சேர்த்து, குக்கரை மூடி வெயிட் போட்டு, 2 விசில் வந்ததும் இறக்கவும். ஆவி விட்டதும் குக்கரைத் திறந்து, கொத்தமல்லி தழை தூவிப் பரிமாறவும்.

    * சூப்பரான டபுள் பீன்ஸ் பிரியாணி ரெடி.

    குறிப்பு: வீட்டில் இருக்கும் காய்கறிகளை அலசி, நறுக்கி நீர்விட்டு குக்கரில் வேகவிட்டு மசித்து நீரை வடிகட்டி, பயன்படுத்தவும். இதுவே வெஜிடபிள் ஸ்டாக் ஆகும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு சாப்பிட சத்தானது இந்த வேர்க்கடலை உருண்டை. இந்த வேர்க்கடலை உருண்டையை எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வறுத்த வேர்க்கடலை - 200 கிராம்
    வெல்லம் - 200 கிராம்,
    ஏலக்காய்த்தூள் - சிறிதளவு

    செய்முறை :

    * வேர்க்கடலையைத் தோல் நீக்கிக்கொள்ளவும்.



    * வெல்லத்தை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து வடிகட்டி, உருட்டும் பதத்தில் பாகு காய்ச்சவும்.

    * ஒரு பாத்திரத்தில் வேர்க்கடலையை போட்டு அதனுடன் வெல்ல பாகு, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கெட்டியாகக் கிளறி சிறிய உருண்டைகளாக பிடிக்கவும்.

    * சத்தான ஸ்நாக்ஸ் வேர்க்கடலை உருண்டை ரெடி.

    * இந்த வேர்க்கடலை உருண்டையை காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்து ஒரு வாரம் வரை சாப்பிடலாம்.

    குறிப்பு: புரதமும், இரும்புச்சத்தும் இதில் மிக அதிகம். ரத்த சோகை வராது.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சப்பாத்தி, பரோட்டாவிற்கு தொட்டுக்கொள்ள சூப்பரான பஞ்சாபி சிக்கன் கறி மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும். பஞ்சாபி சிக்கன் கறி எப்படி சமைப்பது எனப்பார்ப்போம்.
    தேவையான பொருட்கள் :

    சிக்கன் - 1/2 கிலோ
    தயிர்  -  3/4 கப்
    இஞ்சி விழுது - 1 டீஸ்பூன்
    பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிதளவு.

    அரைப்பதற்கு :

    பெரிய வெங்காயம் -  3
    தக்காளி - 3
    கிராம்பு - 2
    மிளகு - 5
    ஏலக்காய் - 3
    மல்லித்தூள்  - 1 டீஸ்பூன்



    செய்முறை :

    * அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

    * கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * சிக்கனை நன்றாக கழுவி துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

    * ஒரு பாத்திரத்தில் சிக்கனை போட்டு அதனுடன் தயிர், இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு போட்டு பிரட்டி 1 மணிநேரம் ஊற வைக்கவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து 5 டீஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் அரைத்து வைத்துள்ள விழுதை போட்டு பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும்.

    * மசாலா நன்றாக வதங்கியதும் அதில் சிக்கனை சேர்த்து நன்றாக வதக்கவும். தேவையான அளவு தண்ணீர் விட்டு அடுப்பை மிதான தீயில் வைத்து சிக்கனை வேக விடவும்.

    * சிக்கன் நன்றாக வெந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.

    * சூப்பரான பஞ்சாபி சிக்கன் ரெடி.

    * இந்த பஞ்சாபி சிக்கன் சப்பாத்தி, பரோட்டாவிற்கு ஏற்ற பக்கா உணவாகும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நெத்திலி கருவாட்டு குழம்பு வைத்தால் வாசனை ஊரைத் தூக்கும். இந்த நெத்திலி கருவாடுடன் மொச்சையையும் பக்குவமாக சேர்த்துக் கொண்டால் குழம்பு ருசி ஊரைக் கூட்டும்.
    தேவையான பொருட்கள் :

    மொச்சைப்பயறு - 100 கிராம்
    நெத்திலி கருவாடு - 1/2 கிலோ
    எண்ணெய் - 1 குழிக்கரண்டி
    சிறிய வெங்காயம் - 1/4 கிலோ
    தக்காளி - 1/4 கிலோ
    பூண்டு - 20 பல்
    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
    மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
    தனியாத்தூள் - 3 டீஸ்பூன்
    உப்பு - தேவைக்கேற்ப
    புளி - எலுமிச்சம்பழ அளவு

    தாளிக்க :

    கடுகு, கறிவேப்பிலை - சிறிதளவு
    காய்ந்த மிளகாய் - 5 (கிள்ளியது)



    செய்முறை :

    * மொச்சைப் பயறை வறுத்து ஊற வைத்து வேக வைத்துக் கொள்ளவும்.

    * நெத்திலி கருவாட்டை மண் போக சுத்தம் செய்து நன்றாக கழுவி கொள்ளவும்.

    * புளியை கரைத்து கொள்ளவும்.

    * வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்த பின் நறுக்கிய வெங்காயம், பூண்டை சேர்த்து வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் தக்காளி சேர்த்து வதக்கவும்.

    * அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து வதக்கவும்.

    * அடுத்து அதில் புளிக்கரைசலை ஊற்றவும்.

    * குழம்பு கொதிக்க ஆரம்பித்தவுடன் மொச்சைப்பயிறு, நெத்திலி கருவாட்டை சேர்த்து 10 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க விட்டு இறக்கவும்.

    * இப்போது மொச்சை நெத்திலி கருவாட்டு குழம்பு ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கோதுமை மாவில் பரோட்டா செய்தால் சூப்பராக இருக்கும். இன்று மாலை நேரத்தில் சாப்பிட எளிய முறையில் முட்டை சேர்த்து பரோட்டா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை மாவு -1/2 கப்
    வெண்ணெய் - தேவையான அளவு
    மிளகு - ஒரு சிட்டிகை
    உப்பு - சுவைக்கேற்ப
    தண்ணீர் - தேவையான அளவு
    முட்டை - 2
    பச்சைமிளகாய் - 1
    மஞ்சள்தூள் - தேவையான அளவு
    கொத்தமல்லி இலை - சிறிதளவு



    செய்முறை :

    * ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, சிறிதளவு தண்ணீர், எண்ணெய் விட்டு நன்கு மாவை பிசைந்து 30 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.

    * ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் உப்பு, ப,மிளகாய், மிளகுத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

    * மாவை பூரிக்கட்டையால் சப்பாத்தி போல் அகலமாக தேய்த்துக் கொள்ள வேண்டும்.

    * தோசைக்கல்லை அடுப்பில் வைத்து கல் சூடானதும் தேய்த்து வைத்த மாவை இட்டு அதன் மேலாக முட்டை கலவையை மாவு முழுவதும் படும்படி பரப்பி ஊற்றி சுற்றி வெண்ணெய் தடவி வெந்ததும் திருப்பி போட்டு பொன்னிறமாக இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.

    * சூப்பரான மாலை நேர டிபன் முட்டை பரோட்டா ரெடி!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு வித்தியாசமான சுவையான ஸ்நாக்ஸ் செய்வது கொடுக்க விரும்பினால் இந்த பட்டாணி ஸ்டஃப்பிங் ஆலு டிக்கி செய்து கொடுக்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பெரிய உருளைக்கிழங்கு - 3
    உப்பு - தேவைக்கு
    மிளகு - கால் தேக்கரண்டி (பொடித்தது)

    ஸ்டஃப்பிங் செய்வதற்கு :

    பச்சை பட்டாணி - 2/3 கப்
    இஞ்சி - சிறிய துண்டு,
    கரம் மசாலா - கால் தேக்கரண்டி
    உப்பு - கால் தேக்கரண்டி
    மிளகாய் தூள் - கால் தேக்கரண்டி (தேவையெனில்)
    சீரகம் - ஒரு தேக்கரண்டி
    எண்ணெய் - அரை கப்



    செய்முறை :

    * உருளைக்கிழங்கை முக்கால் பதத்திற்கு வேக வைத்து எடுக்கவும். ரொம்பவும் வேக வைத்துவிட கூடாது.

    * மிளகை பொடித்து கொள்ளவும்.

    * இஞ்சியை துருவிக்கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் வேகவைத்த உருளைக்கிழங்கு உப்பு மற்றும் மிளகு சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து வைக்க வேண்டும். 10 உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

    * பச்சை பட்டாணியை வேக வைத்து மசித்து எடுத்துக் கொள்ளவும்.

    * சீரகத்தை எண்ணெய் இல்லாமல் வறுத்து கொரகொரப்பாக பொடித்து வைக்கவும்.



    * பட்டாணியுடன் இஞ்சி, கரம் மசாலா, உப்பு, மிளகாய் தூள், சீராக பொடி சேர்க்கவும்.

    * எல்லாவற்றையும் சேர்த்து நன்கு மசித்து விட்டு பிசைந்து வைக்கவும். 10 பகுதியாக பிரித்து வைக்கவும்.

    * கையில் சிறிதளவு எண்ணெய் தேய்த்துக் கொண்டு உருளை உருண்டையை தட்டி நடுவில் பட்டாணி கலவையை வைத்து மூடி (கொழுக்கட்டை போல் மூடி) வேண்டிய வடிவத்தில் தட்டி வைக்கவும். இதைப் போல் எல்லா உருளைக்கிழங்கு உருண்டையிலும் கலவையை வைத்து வட்டமாக தட்டி வைக்கவும்.

    * தோசை கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் உருளைக்கிழங்கு டிக்கியை அடுக்கவும்.

    * ஒரு பக்கம் பொன்னிறமாக வெந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி பொன்னிறமானதும் எடுக்கவும்.

    * கிரீன் சட்னியுடன் பரிமாறவும்.

    * சூப்பரான ஸ்நாக்ஸ் ஆலு டிக்கி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வீட்டிற்கு விருந்தினர்கள் திடீரென வந்து விட்டால் அவர்களுக்கு இந்த சேமியா சர்க்கரை பொங்கலை செய்து கொடுத்து அசத்தலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சேமியா - 1 கப்,
    பாசிப்பருப்பு - அரை கப்,
    வெல்லம் - ஒன்றரை கப்,
    நெய் - அரை கப்,
    முந்திரிப்பருப்பு - 20,
    திராட்சை - 20,
    ஏலக்காய்தூள் - 1 டீஸ்பூன்.



    செய்முறை :

    * பாசிப்பருப்பை மலர வேக வைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

    * வெல்லத்தை பொடித்து கொள்ளவும்.

    * ஒரு கடாயில் 1 ஸ்பூன் நெய் ஊற்றி சேமியாவை போட்டு நன்றாக வாசனை வரும் வரை வறுக்கவும்.

    * ஒரு கடாயில் பாதியளவு நெய் ஊற்றி அதில் முந்திரி, திராட்சை சேர்த்து ஒரு நிமிடம் வறுத்த பின் அதில் 2 கப் தண்ணீர் சேருங்கள். தண்ணீர் கொதித்ததும் வறுத்த சேமியாவை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்கு வேகவிடுங்கள்.

    * ஒரு பாத்திரத்தில் பொடித்த வெல்லத்தை போட்டு அதில் அரை கப் தண்ணீர் சேர்த்து கரையவிட்டு வடிகட்டி வெந்த சேமியாவில் சேருங்கள்.

    * அத்துடன் வேக வைத்த பாசிப்பருப்பையும் போட்டு, நன்கு சேர்ந்து வரும் வரை கிளறுங்கள்.

    * கடைசியில் ஏலக்காய்தூள், மீதமுள்ள நெய் சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள்.

    * தித்திப்பான சேமியா சர்க்கரை பொங்கல் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு பன்னீர் மிகவும் பிடிக்கும். மாலையில் குழந்தைகளுக்கு சத்தான டிபன் கொடுக்க நினைத்தால் இந்த பன்னீர் ஊத்தப்பம் செய்து கொடுக்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    உளுந்து - கால் கப்
    வெந்தயம் - சிறிதளவு
    பச்சரிசி - அரை கப்
    புழுங்கல் அரிசி - கால் கப்
    பன்னீர் - 200 கிராம்
    வெங்காயம் - ஒன்று
    தக்காளி - ஒன்று
    ப.மிளகாய் - இரண்டு
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு



    செய்முறை :

    * தக்காளி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * பன்னீரை துருவிக்கொள்ளவும்.

    * உளுந்து, வெந்தயம், பச்சரிசி, புழுங்கலரிசி ஆகியவைகளை நன்றாக கழுவி நான்கு மணிநேரம் ஊறவையுங்கள். உளுந்தையும், அரிசியையும் தனித்தனியாக அரைத்து, தேவைக்கு உப்பும் சேர்த்து ஒன்றாக கலக்கி ஐந்து மணிநேரம் புளிக்க விடவும்.

    * ஒரு பாத்திரத்தில் நறுக்கிய தக்காளி, வெங்காயம், ப.மிளகாய், துருவிய பன்னீர், உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

    * தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் மாவை கெட்டியாக ஊற்றி அதன் மாவின் மேல் பிசறி வைத்த பன்னீர் கலவையை தூவ வேண்டும். சுற்றி எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

    * சூப்பரான பன்னீர் ஊத்தப்பம் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×