என் மலர்
பெண்கள் உலகம்

மாலை நேர ஸ்நாக்ஸ் காளான் பக்கோடா
பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு சூடாக ஸ்நாக்ஸ் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று காளான் பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
காளான் - 200 கிராம்
வெங்காயம் - 1
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி தழை - சிறிதளவு
மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன்
பெருங்காய்தூள் - சிறிதளவு
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
அரிசி மாவு - 2 டீஸ்பூன்
கடலை மாவு - 5 டீஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை :
* காளானை நன்றாக கழுவி நீளமான துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
* வெங்காயம், பூண்டு, இஞ்சி, ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் நீளமாக காளான், நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பூண்டு, இஞ்சி, கொத்தமல்லி தழை, பச்சை மிளகாய், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.
* அடுத்து அதனுடன், அரிசி மாவு, கடலை மாவு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
* அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசைந்து வைத்த காளான் மாவை உதிரி உதிரியாக போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
* சூப்பரான காளான் பக்கோடா ரெடி!
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
காளான் - 200 கிராம்
வெங்காயம் - 1
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி தழை - சிறிதளவு
மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன்
பெருங்காய்தூள் - சிறிதளவு
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
அரிசி மாவு - 2 டீஸ்பூன்
கடலை மாவு - 5 டீஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை :
* காளானை நன்றாக கழுவி நீளமான துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
* வெங்காயம், பூண்டு, இஞ்சி, ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் நீளமாக காளான், நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பூண்டு, இஞ்சி, கொத்தமல்லி தழை, பச்சை மிளகாய், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.
* அடுத்து அதனுடன், அரிசி மாவு, கடலை மாவு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
* அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசைந்து வைத்த காளான் மாவை உதிரி உதிரியாக போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
* சூப்பரான காளான் பக்கோடா ரெடி!
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story






