search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Paneer Recipe"

    • உங்கள் செல்லக் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
    • நாக்கில் உச் கொட்டி சாப்பிடத் தொடங்கி விடுவார்கள்.

    பரோட்டா என்றாலே உங்கள் செல்லக் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும், பன்னீர் மசாலா சேர்ந்த காம்பினேஷன் என்றால் குழந்தைகளுக்கு சொல்லத் தேவையில்லை. நாக்கில் உச் கொட்டி சாப்பிடத் தொடங்கி விடுவார்கள்.

    தேவையான பொருட்கள்:

    பனீர்- 450 கிராம் (துருவியது)

    கோதுமை மாவு- ஒரு கப்

    வெங்காயம் - 1 (நறுக்கியது)

    பச்சை மிளகாய்- 1 (நறுக்கியது)

    தனியா - ஒரு ஸ்பூன்

    கொத்தமல்லி தழை- ஒரு கைப்பிடி

    சீரகத்தூள்- ஒரு ஸ்பூன்

    மிளகாய் தூள்- கால் டீஸ்பூன்

    கரம் மசாலாதூள்- கால் டீஸ்பூன்

    சாட் மசாலாதூள்- கால் டீஸ்பூன்

    உப்பு- தேவையான அளவு

    செய்முறை:

    முதலில் கோதுமை மாவினை எடுத்து அதில் உப்பு, எண்ணெய் அல்லது நெய் சேர்த்து தண்ணீர் ஊற்றி பிசைந்துகொள்ள வேண்டும். இந்த மாவு கொஞ்சம் தளர்வாக இருக்குமாறு பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதனை ஒரு துணி கொண்டு அரைமணிநேரத்திற்கு மூடி வைக்க வேண்டும்.

    அதன்பிறகு ஒரு பவுலில் துருவிய பனீர், வெங்காயம், பச்சை மிளகாய், சீரகத்தூள், மிளகாய் தூள், சாட் மசாலாதூள், தனியா விதை, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை, உப்பு சேர்த்து நன்றாக கலந்து பிசரி எடுத்துக்கொள்ள வேண்டும்.

    இப்போது சப்பாத்திமாவினை உருட்டி எடுத்து தேய்த்துக்கொள்ள வேண்டும். அதன் நடுவே நாம் ஏற்கனவே செய்து வைத்துள்ள பனீர் கலவையை எடுத்து அதன் நடுவே வைத்து அதனை மறுமபடியும் மூடி உருட்டிக்கொள்ள வேண்டும். மீண்டும் அதனை மாவில் தோய்த்து சப்பாத்திகளாக தேய்த்து எடுக்க வேண்டும். இப்போது சப்பாத்திகள் தயார்.

    இதனை ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும் நெய் அல்லது வெண்ணெய் தடவி தேய்த்து வைத்துள்ள சப்பாத்திகளை முன்னும் பின்னுமாக புட்ரட்டிப்போட்டு எடுத்தால் சுவையான னீர் ஸ்டஃப்டு பராத்தா தயார். இதனை தயிர் அல்லது குருமா வைத்து சாப்பிட இன்னும் அருமையாக இருக்கும்.

    ×