search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிக்கன் வறுவல்"

    சப்பாத்தி, புலாவ், சாதம், நாண், தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த நெல்லூர் சிக்கன் வறுவல். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சிக்கன் லெக் பீஸ் - 5 துண்டுகள்
    மிளகாய்த்தூள் - 10 கிராம்
    சீரகத்தூள் - 5 கிராம்
    மிளகுத்தூள் - 5 கிராம்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    எலுமிச்சைப்பழம் - அரை பழம்
    இஞ்சி-பூண்டு பேஸ்ட் - 10 கிராம்
    இஞ்சி-பூண்டு பொடியாக நறுக்கவும் - 10 கிராம்
    கடலைமாவு - 10 கிராம்
    அரிசிமாவு - 5 கிராம்
    கார்ன்ஃப்ளார் - 10 கிராம்
    வெள்ளை எள் - 5 கிராம்
    பெரிய வெங்காயம் - 50 கிராம்
    பச்சை மிளகாய் - 5 கிராம்
    குடைமிளகாய் - 50 கிராம்
    வெங்காயத்தாள் - சிறிதளவு
    காய்ந்தமிளகாய் பேஸ்ட் - 2 டீஸ்பூன்
    சோயா சாஸ் - 3 டீஸ்பூன்
    தக்காளி சாஸ் - 2 டீஸ்பூன்
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :

    கறிவேப்பிலை, வெங்காயம், ப.மிளகாய், குடை மிளகாய், வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி வைக்கவும்.

    எலுமிச்சை பழத்தில் இருந்து சாறு எடுத்து வைக்கவும்.

    சிக்கனை நன்றாக கழுவி வைக்கவும்.

    சிக்கன் துண்டுகளை நன்றாகக் கழுவி அவற்றுடன் இஞ்சி-பூண்டு பேஸ்ட், எலுமிச்சைச்சாறு, கறிவேப்பிலை, மிளகாய்த்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், உப்பு, கடலைமாவு, அரிசிமாவு, கார்ன்ஃப்ளார் சேர்த்துப் பிசைந்து 10 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

    கடாயில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானம் ஊற வைத்த சிக்கனை போட்டு பொரித்தெடுக்கவும் (மிதமான சூட்டில் பொரித்தெடுத்தால் போதுமானது).

    மற்றொரு வாணலியில் சிறிது எண்ணெய்விட்டு வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் குடைமிளகாய், வெங்காயத்தாளைச் சேர்த்து நன்கு வதக்கவும்.

    இதில் சிறிது தண்ணீர்விட்டு தக்காளி சாஸ், சோயா சாஸ், காய்ந்த மிளகாய் பேஸ்ட், மிளகுத்தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும்.

    இத்துடன் பொரித்த சிக்கன் துண்டுகளையும் சேர்த்து மிதமான சூட்டில் நன்றாகக் கிளறவும்.

    அனைத்து மசாலாக்களும் ஒன்றாகச் சேர்ந்து வரும் போது எள் தூவி இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான நெல்லூர் சிக்கன் வறுவல் ரெடி.
    ஃபிங்கர் சிக்கனை ஹோட்டலில் சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வீட்டிலேயே ஃபிங்கர் சிக்கனை எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சிக்கன் (1 இஞ்ச் நீளமான எலும்பில்லாத கறி) - 1/2 கிலோ
    முட்டை - 1
    தயிர்  - 1 கப்
    இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
    மைதா - 1 கப்
    பிரட் தூள் - 1 கப்
    உப்பு - 1 டீஸ்பூன்
    மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
    பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்
    கேசரி கலர் - சிறிதளவு
    எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :

    சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ளவும்.

    பின் அதில் தயிர், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், உப்பு போட்டு கலக்கிக் கொள்ளவும்.

    சிக்கனை நன்கு கழுவி அந்த கலவையில் போட்டு பிரட்டி வைத்து, 3 மணிநேரம் ஃப்ரிட்ஜில் வைத்து ஊற வைக்கவும்.

    ஒரு சிறு பாத்திரத்தில் மைதா, உப்பு மற்றும் பேக்கிங் பௌடரை நீரில் கரைத்து வைத்துக் கொள்ளவும்.

    ஃப்ரிட்ஜில் இருந்து சிக்கனை எடுத்து, அதில் உள்ள தயிர் கலவையை முற்றிலும் வடித்து விடவும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடேற்றவும்.

    வடிகட்டிய சிக்கன் துண்டுகளை மைதா கலவையில் நனைத்து, பிரட் தூளில் பிரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

    பொரித்த சிக்கனை ஒரு தட்டில் வைத்து அதன் மேல் மிளகுத்தூளைத் தூவி பரிமாறவும். வேண்டுமென்றால் அதன் மேல் எலுமிச்சைபழச்சாற்றை பிளிந்தும் சாப்பிடலாம்.

    இப்போது சுவையான ஃபிங்கர் சிக்கன்  ரெடி!!!

    இந்த ஃபிங்கர் சிக்கனை சாஸோடு தொட்டு சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஓட்டலில் தந்தூரி சிக்கன் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வீட்டிலேயே எளிய முறையில் தந்தூரி சிக்கன் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சிக்கன் - அரை கிலோ
    தயிர் - 175 மில்லி (ஒரு தம்ளர்)
    தந்தூரி மசாலா - சிறிதளவு
    தந்தூரி கலர் பொடி - ஒரு சிட்டிகை
    எலுமிச்சம்பழம் - ஒன்று
    வறுத்து அரைத்த தனியா, சீரகம், மற்றும் அரைத்த இஞ்சி மற்றும் பூண்டு போன்றவை - தலா ஒரு சிறிய தேக்கரண்டி.
    மிளகாய்த்தூள், மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    கோழி இறைச்சியில் தோலுரித்து நான்கு துண்டுகளாக்க வேண்டும்.

    கூரிய கத்தியை கொண்டு ஒவ்வொரு துண்டிலும் 2, 3 இடங்களில் கீறி விடலாம்.

    வறுத்து அரைத்த தனியா, சீரகம் மற்றும் அரைத்த இஞ்சி, பூண்டு, மிளகாய் தூள், மிளகு தூள், உப்பு ஆகியவற்றை இறைச்சியில் பூசி தந்தூரி கலர் பொடி, தந்தூரி மசாலா கலந்து தயிருடன் இரவு முழுவதும் ஊற வைக்கவும்.

    மறுநாள் தந்தூரி ஓவன் அல்லது கம்பி வலை அடுப்பு மீது வைத்து தணலில் 15 முதல் 20 நிமிடங்களுக்கு வாட்டி எடுக்கவும்.

    பின்னர் எலுமிச்சம் பழத்தை வாட்டப்பட்ட இறைச்சி மீது பிழிந்துவிட்டு சூடான தந்தூரி சிக்கனை பரிமாறவும்.

    தந்தூரி சிக்கன் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    புலாவ், சப்பாத்தி, நாண், சாத்திற்கு தொட்டுக்கொள்ள இந்த கேரளா ஸ்டைல் சிக்கன் வறுவல் சூப்பராக இருக்கும். இன்று இந்த வறுவலை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள்

    சிக்கன் - அரை கிலோ
    சோம்பு - 1 ஸ்பூன்
    காய்ந்த மிளகாய் - 7
    பூண்டு - 10 பல்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு
    தேங்காய் எண்ணெய் - 5 ஸ்பூன்



    செய்முறை

    சிக்கனை சிறிய துண்டுகளாக நறுக்கி நன்கு கழுவி வைத்து கொள்ளவும்.

    மிக்ஸியில் காய்ந்த மிளகாய், சோம்பு, பூண்டு, உப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.

    கழுவி வைத்துள்ள சிக்கனுடன் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து பிரட்டி, 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

    கடாயை அடுப்பில் வைத்து, தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்கு பிரட்டி 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு அடுப்பை மிதமான தீயில் மூடிவைத்து வேக விடவும்.

    தண்ணீர் முற்றிலும் வற்றி சிக்கன் நன்கு வெந்தவுடன் இறக்கவும்.

    கேரளா ஸ்டைல் சிக்கன் வறுவல் ரெடி

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று சிக்கனை வைத்து மொறுமொறு சிக்கன் பிரை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    எலும்பில்லாத சிக்கன் - 500 கிராம்
    ரொட்டி தூள் - 150 கிராம்
    எண்ணெய் - தேவையான அளவு
    பூண்டு, இஞ்சி அரைப்பு, மக்காச்சோள மாவு, உப்பு போன்றவை தேவையான அளவு
    வினிகர், சோயா சாஸ் - 1 சிறிய தேக்கரண்டி
    மிளகாய் தூள் - தேவையான அளவு
    தயிர் - 3 தேக்கரண்டி



    செய்முறை :

    சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    இஞ்சி, பூண்டுக்கலவையில் துண்டாக்கப்பட்ட இறைச்சியை போட்டு மிளகாய்த்தூள், தயிர், வினிகர், சோயா சாஸ், மக்காச்சோள மாவு மற்றும் உப்பு சேர்த்து 4 முதல் 5 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

    பின்னர் இறைச்சி துண்டுகளை அதில் இருந்து எடுத்து ரொட்டி தூள் மீது பரப்பவும். அப்படியே இறைச்சி துண்டுகளை கொதிக்கும் எண்ணெயில் வறுத்தெடுத்து, சூடாக பரிமாறலாம்.

    இது மொறு மொறுப்பாகவும் வாசனையுடனும் இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×