என் மலர்
கிச்சன் கில்லாடிகள்
வேலுர் மட்டன் தம் பிரியாணி மிகவும் பிரபலம். இன்று வீட்டிலேயே எளிய முறையில் வேலூர் மட்டன் ‘தம்’ பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மட்டன் - ஒரு கிலோ
வெங்காயம் - 1/4 கிலோ
தக்காளி - 200 கிராம்
இஞ்சி விழுது - 50 கிராம்
பூண்டு விழுது - 50 கிராம்
பச்சை மிளகாய் - 4
மிளகாய்த் தூள் - 4 தேக்கரண்டி
தயிர் - 200 மி.லி
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 4
ஏலக்காய் - 2
கொத்தமல்லித் தழை - சிறிதளவு
புதினா - 4 சிறிதளவு.
எலுமிச்சை - ஒரு பழத்தின் ஜூஸ்
ரீஃபைண்டு கடலை எண்ணெய் - 1/4 லிட்டர்
அரிசி (ஜீரகச் சம்பா அல்லது பாஸ்மதி) - ஒரு கிலோ
உப்பு - தேவையான அளவு

செய்முறை :
* வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* அரிசியை ஒரு முறை அலசி விட்டு, அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
* ப்ரஷர் குக்கரை அடுப்பில் வைத்து சூடாக்கி, எண்ணெய் சூடானவுடன், பட்டை, கிராம்பு, ஏலக்காய் இவற்றை சேர்த்து வெடித்தவுடன், நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை உடன் சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* தக்காளி நன்றாக வதங்கியதும் இறைச்சியை அதில் சேர்த்து, 5 நிமிடத்திற்கு நிறம் மாறும் வரை கிளறிக் கொண்டிருக்க வேண்டும்.
* இத்துடன் இஞ்சிப் பூண்டு விழுது சேர்த்து, 5 நிமிடம் மிதமான தீயில், நறுமணம் வரும்வரை தொடர்ந்து கிளற வேண்டும்.

* அடுத்து மிளகாய் தூள் சேர்த்து சிம் தீயில், 5 நிமிடம் கலக்க வேண்டும்.
* தயிர், பச்சைமிளகாய், கொத்தமல்லி, புதினா, தேவையான அளவு உப்பு இவைகளைக் கலந்து, நீர் 1/2 டம்ளர் விட்டு, குக்கரை மூடி 4 விசில் வரும் வரை, மிதமான தீயில் வேக விட வேண்டும்.
* பெரிய பாத்திரத்தில் 5 லிட்டர் நீர் விட்டு, உப்பு போட்டு கொதிக்கவைக்க வேண்டும். அதில் ஊற வைத்த அரிசியை சேர்த்து, கூடவே 1/2 தேக்கரண்டி எலுமிச்சைச் சாறு விட்டு, 80 சதவிகிதம் வேக்காடு வரும் வரை வேக விட்டு தண்ணீரை வடித்து விட வேண்டும். எலுமிச்சைச் சாறு விடுவதால் அரிசி உடையாது.
* இப்போது குக்கரைத் திறந்து, ருசி சரிபார்த்து, எலுமிச்சைச் சாறு கலந்து, மிதமான தீயில், எண்ணெய் மேலே வரும்வரை வதக்கி, நன்கு வடித்த சாதத்தை சேர்த்து, அரிசி உடையாமல் மெதுவாக கிளற வேண்டும்.
* அடுப்பில் தோசைக்கல் வைத்து, அதில் சிறிது நீர் ஊற்றி, குறைவான தீயில், மேலே கலந்த சாதம் உள்ள பாத்திரத்தின் விளிம்பில்(ஓரத்தில்) ஈரத்துணியை தலைப்பாகை போல் சுற்றி, காற்றுப் புகாமல் மூடி, மூடி மேல் ஒரு நீர் நிறைந்த பாத்திரத்தை 'வெய்ட்' போல் வைத்து சுமார் 20 நிமிடம் 'தம்' போட வேண்டும்.
தலைப்பாகை துணி இல்லாமலும் மூடி வைக்கலாம்.
* 'தம்' முடிந்த பிறகு, திறந்து பார்த்தால் 'கம கம' வேலூர் பிரியாணி சுண்டி இழுக்கும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மட்டன் - ஒரு கிலோ
வெங்காயம் - 1/4 கிலோ
தக்காளி - 200 கிராம்
இஞ்சி விழுது - 50 கிராம்
பூண்டு விழுது - 50 கிராம்
பச்சை மிளகாய் - 4
மிளகாய்த் தூள் - 4 தேக்கரண்டி
தயிர் - 200 மி.லி
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 4
ஏலக்காய் - 2
கொத்தமல்லித் தழை - சிறிதளவு
புதினா - 4 சிறிதளவு.
எலுமிச்சை - ஒரு பழத்தின் ஜூஸ்
ரீஃபைண்டு கடலை எண்ணெய் - 1/4 லிட்டர்
அரிசி (ஜீரகச் சம்பா அல்லது பாஸ்மதி) - ஒரு கிலோ
உப்பு - தேவையான அளவு

செய்முறை :
* வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* அரிசியை ஒரு முறை அலசி விட்டு, அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
* ப்ரஷர் குக்கரை அடுப்பில் வைத்து சூடாக்கி, எண்ணெய் சூடானவுடன், பட்டை, கிராம்பு, ஏலக்காய் இவற்றை சேர்த்து வெடித்தவுடன், நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை உடன் சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* தக்காளி நன்றாக வதங்கியதும் இறைச்சியை அதில் சேர்த்து, 5 நிமிடத்திற்கு நிறம் மாறும் வரை கிளறிக் கொண்டிருக்க வேண்டும்.
* இத்துடன் இஞ்சிப் பூண்டு விழுது சேர்த்து, 5 நிமிடம் மிதமான தீயில், நறுமணம் வரும்வரை தொடர்ந்து கிளற வேண்டும்.

* அடுத்து மிளகாய் தூள் சேர்த்து சிம் தீயில், 5 நிமிடம் கலக்க வேண்டும்.
* தயிர், பச்சைமிளகாய், கொத்தமல்லி, புதினா, தேவையான அளவு உப்பு இவைகளைக் கலந்து, நீர் 1/2 டம்ளர் விட்டு, குக்கரை மூடி 4 விசில் வரும் வரை, மிதமான தீயில் வேக விட வேண்டும்.
* பெரிய பாத்திரத்தில் 5 லிட்டர் நீர் விட்டு, உப்பு போட்டு கொதிக்கவைக்க வேண்டும். அதில் ஊற வைத்த அரிசியை சேர்த்து, கூடவே 1/2 தேக்கரண்டி எலுமிச்சைச் சாறு விட்டு, 80 சதவிகிதம் வேக்காடு வரும் வரை வேக விட்டு தண்ணீரை வடித்து விட வேண்டும். எலுமிச்சைச் சாறு விடுவதால் அரிசி உடையாது.
* இப்போது குக்கரைத் திறந்து, ருசி சரிபார்த்து, எலுமிச்சைச் சாறு கலந்து, மிதமான தீயில், எண்ணெய் மேலே வரும்வரை வதக்கி, நன்கு வடித்த சாதத்தை சேர்த்து, அரிசி உடையாமல் மெதுவாக கிளற வேண்டும்.
* அடுப்பில் தோசைக்கல் வைத்து, அதில் சிறிது நீர் ஊற்றி, குறைவான தீயில், மேலே கலந்த சாதம் உள்ள பாத்திரத்தின் விளிம்பில்(ஓரத்தில்) ஈரத்துணியை தலைப்பாகை போல் சுற்றி, காற்றுப் புகாமல் மூடி, மூடி மேல் ஒரு நீர் நிறைந்த பாத்திரத்தை 'வெய்ட்' போல் வைத்து சுமார் 20 நிமிடம் 'தம்' போட வேண்டும்.
தலைப்பாகை துணி இல்லாமலும் மூடி வைக்கலாம்.
* 'தம்' முடிந்த பிறகு, திறந்து பார்த்தால் 'கம கம' வேலூர் பிரியாணி சுண்டி இழுக்கும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
புலாவ், சாதம், சப்பாத்தி, தோசைக்கு தொட்டு கொள்ள இந்த லெமன் சிக்கன் சூப்பராக இருக்கும். இன்று இந்த லெமன் சிக்கனை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
எலும்பு நீக்கிய சிக்கன் - அரை கிலோ
இஞ்சி - ஒரு சின்ன துண்டு
பூண்டு - 10 பல்
சின்ன வெங்காயம் - 100 கிராம்
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
மல்லித்தூள் - 3 டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - ஒன்றரை டீஸ்பூன்
புளிக்காத தயிர் - 100 மில்லி
எலுமிச்சை சாறு - 2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லித்தழை - அரை டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - 30 மிலி
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
* கொத்தமல்லி, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* தயிரை கட்டியில்லாமல் நன்கு அடித்துவைக்கவும்.
* சிக்கனை மீடியம் சைஸ் துண்டுகளாக நறுக்கி, சுத்தம் செய்து கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் சிக்கனை போட்டு அதனுடன் சிறிது மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கலந்து 30 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
* இஞ்சி, பூண்டை தட்டிக் கொள்ளவும்.
* அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
* வெங்காயம் சிறிது வதங்கியவுடன் ஊறவைத்திருக்கும் சிக்கன் துண்டுகளைச் சேர்த்து வதக்கவும்.
* சிக்கன், வெங்காயம் இரண்டும் சேர்த்து சிறிதளவு பொன்நிறமாக வந்தவுடன் தட்டிய இஞ்சி, பூண்டு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கிய பின், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து பச்சை வாசனை நீங்கும்வரை நன்றாக வதக்கி அடுப்பை அணைக்கவும்.
* எலுமிச்சை சாறு, கட்டியில்லாமல் நன்கு அடித்து வைத்த தயிர், கரம் மசாலாத்தூள் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சிக்கன் கலவையுடன் சேர்த்து நன்கு கலக்கவும்.
* பிறகு மீண்டும் சிக்கனை அடுப்பில் வைத்து, மிதமான தீயில் கலவையை 5 நிமிடங்கள் வரை வைத்து கலக்கிவிட்டு, குழம்பு கொதிக்க ஆரம்பித்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கவும்.
* கடைசியாக பொடியாக நறுக்கிய கொத்துமல்லித்தழை தூவி இறக்கி சூடாகப் பரிமாறவும்.
* சூப்பரான லெமன் சிக்கன் ரெடி.
* லெமன் சிக்கனை, சாதம் அல்லது சப்பாத்தி வகைகளுடன் சாப்பிடலாம்.
குறிப்பு: எலுமிச்சை சாறு, தயிர் சேர்க்கும்போது அடுப்பை எறிய விட்டால், திரிந்து போக வாய்ப்புள்ளது. எனவேதான், அடுப்பை அணைத்து வைத்து எலுமிச்சை சாறு, தயிர் சேர்த்து கலக்கிவிட்டு பின்னர் அடுப்பில் வைத்து சிறிது நேரம் வேகவிடலாம். லெமன் சிக்கன் செய்யும்போது, இந்த விஷயத்தை நினைவில் வைத்துக்கொள்ளவது பயன்தரும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
எலும்பு நீக்கிய சிக்கன் - அரை கிலோ
இஞ்சி - ஒரு சின்ன துண்டு
பூண்டு - 10 பல்
சின்ன வெங்காயம் - 100 கிராம்
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
மல்லித்தூள் - 3 டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - ஒன்றரை டீஸ்பூன்
புளிக்காத தயிர் - 100 மில்லி
எலுமிச்சை சாறு - 2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லித்தழை - அரை டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - 30 மிலி
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
* கொத்தமல்லி, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* தயிரை கட்டியில்லாமல் நன்கு அடித்துவைக்கவும்.
* சிக்கனை மீடியம் சைஸ் துண்டுகளாக நறுக்கி, சுத்தம் செய்து கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் சிக்கனை போட்டு அதனுடன் சிறிது மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கலந்து 30 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
* இஞ்சி, பூண்டை தட்டிக் கொள்ளவும்.
* அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
* வெங்காயம் சிறிது வதங்கியவுடன் ஊறவைத்திருக்கும் சிக்கன் துண்டுகளைச் சேர்த்து வதக்கவும்.
* சிக்கன், வெங்காயம் இரண்டும் சேர்த்து சிறிதளவு பொன்நிறமாக வந்தவுடன் தட்டிய இஞ்சி, பூண்டு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கிய பின், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து பச்சை வாசனை நீங்கும்வரை நன்றாக வதக்கி அடுப்பை அணைக்கவும்.
* எலுமிச்சை சாறு, கட்டியில்லாமல் நன்கு அடித்து வைத்த தயிர், கரம் மசாலாத்தூள் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சிக்கன் கலவையுடன் சேர்த்து நன்கு கலக்கவும்.
* பிறகு மீண்டும் சிக்கனை அடுப்பில் வைத்து, மிதமான தீயில் கலவையை 5 நிமிடங்கள் வரை வைத்து கலக்கிவிட்டு, குழம்பு கொதிக்க ஆரம்பித்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கவும்.
* கடைசியாக பொடியாக நறுக்கிய கொத்துமல்லித்தழை தூவி இறக்கி சூடாகப் பரிமாறவும்.
* சூப்பரான லெமன் சிக்கன் ரெடி.
* லெமன் சிக்கனை, சாதம் அல்லது சப்பாத்தி வகைகளுடன் சாப்பிடலாம்.
குறிப்பு: எலுமிச்சை சாறு, தயிர் சேர்க்கும்போது அடுப்பை எறிய விட்டால், திரிந்து போக வாய்ப்புள்ளது. எனவேதான், அடுப்பை அணைத்து வைத்து எலுமிச்சை சாறு, தயிர் சேர்த்து கலக்கிவிட்டு பின்னர் அடுப்பில் வைத்து சிறிது நேரம் வேகவிடலாம். லெமன் சிக்கன் செய்யும்போது, இந்த விஷயத்தை நினைவில் வைத்துக்கொள்ளவது பயன்தரும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
காரைக்குடி நண்டு மசாலா மற்ற நண்டு மசாலாக்களை விட சுவையுடையது. இந்த நண்டு மசாலாவை இட்லி, தோசை, சாதம் என எல்லாவகை உணவுகளுடனும் சேர்த்து சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள் :
நண்டு - 1 கிலோ
புளிக்கரைசல் - 1 கப்
பட்டை - 2
பிரியாணி இலை -2
சோம்பு - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1 1/2 டீஸ்பூன்
வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
மசாலாவிற்கு :
துருவிய தேங்காய் - அரை கப்
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
கசகசா - 1 டேபிள் ஸ்பூன்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
முந்திரி - 3
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை :
* நண்டை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* மசாலாவிற்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.
* கடாயை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு, மிளகு, சீரகம், கசகசா, துருவிய தேங்காய் சேர்த்து நன்கு வதக்கி இறக்கி மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சோம்பு, பட்டை, பிரியாணி இலை சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதனுடன் தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும்.
* தக்காளி நன்றாக வதங்கியதும் அடுத்து நண்டு சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின் மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து நண்டுடன் பிரட்டி, 1 கப் தண்ணீர் ஊற்றி, சில நிமிடங்கள் மூடி போட்டு வேக விடவும்.
* நண்டு ஓரளவு வெந்த பின்பு அதில் புளிக் கரைசல் ஊற்றி, தேவையான அளவு உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து மசாலாவின் பச்சை வாசனை போகும் வரை கொதிக்க வைத்து இறக்கவும்.
* இப்போது சுவையான காரைக்குடி நண்டு மசாலா ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
நண்டு - 1 கிலோ
புளிக்கரைசல் - 1 கப்
பட்டை - 2
பிரியாணி இலை -2
சோம்பு - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1 1/2 டீஸ்பூன்
வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
மசாலாவிற்கு :
துருவிய தேங்காய் - அரை கப்
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
கசகசா - 1 டேபிள் ஸ்பூன்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
முந்திரி - 3
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை :
* நண்டை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* மசாலாவிற்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.
* கடாயை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு, மிளகு, சீரகம், கசகசா, துருவிய தேங்காய் சேர்த்து நன்கு வதக்கி இறக்கி மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சோம்பு, பட்டை, பிரியாணி இலை சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதனுடன் தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும்.
* தக்காளி நன்றாக வதங்கியதும் அடுத்து நண்டு சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின் மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து நண்டுடன் பிரட்டி, 1 கப் தண்ணீர் ஊற்றி, சில நிமிடங்கள் மூடி போட்டு வேக விடவும்.
* நண்டு ஓரளவு வெந்த பின்பு அதில் புளிக் கரைசல் ஊற்றி, தேவையான அளவு உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து மசாலாவின் பச்சை வாசனை போகும் வரை கொதிக்க வைத்து இறக்கவும்.
* இப்போது சுவையான காரைக்குடி நண்டு மசாலா ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பீட்ரூட் பிடிக்காத குழந்தைகளுக்கு பூரியில் பீட்ரூட் சேர்த்து செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இந்த பீட்ரூட் மினி பூரி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கோதுமை மாவு - ஒரு கப்,
சீரகம் - ஒரு டீஸ்பூன்,
மிளகுத்தூள், ஓமம் - தலா அரை டீஸ்பூன்,
பீட்ரூட் துருவல் - 2
கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன்,
இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,
ஃப்ரெஷ் பச்சைப் பட்டாணி - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை :
* கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* பீட்ரூட்டை துருவிக்கொள்ளவும்.
* பச்சை பட்டாணியை மிக்ஸியில் ஒன்று இரண்டாக அரைக்கவும்.
* ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, சீரகம், மிளகுத்தூள், ஓமம், பீட்ரூட் துருவல், கொத்தமல்லி, இஞ்சி - பூண்டு விழுது, பச்சை பட்டாணி, உப்பு சேர்த்து நன்றாக கலந்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.
* பிசைந்த மாவை சின்ன பூரிகளாக தேய்த்து, சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்துப் பரிமாறவும்.
* சூப்பரான சத்தான பீட்ரூட் மினி பூரி ரெடி.
* பச்சைப் பட்டாணி, கொத்தமல்லித்தழை, பீட்ரூட் சேர்வதால் பார்ப்பதற்கு கலர்ஃபுல்லாக இருக்கும். பீட்ரூட் பிடிக்காத குழந்தைகள்கூட விரும்பி சாப்பிடும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கோதுமை மாவு - ஒரு கப்,
சீரகம் - ஒரு டீஸ்பூன்,
மிளகுத்தூள், ஓமம் - தலா அரை டீஸ்பூன்,
பீட்ரூட் துருவல் - 2
கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன்,
இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,
ஃப்ரெஷ் பச்சைப் பட்டாணி - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை :
* கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* பீட்ரூட்டை துருவிக்கொள்ளவும்.
* பச்சை பட்டாணியை மிக்ஸியில் ஒன்று இரண்டாக அரைக்கவும்.
* ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, சீரகம், மிளகுத்தூள், ஓமம், பீட்ரூட் துருவல், கொத்தமல்லி, இஞ்சி - பூண்டு விழுது, பச்சை பட்டாணி, உப்பு சேர்த்து நன்றாக கலந்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.
* பிசைந்த மாவை சின்ன பூரிகளாக தேய்த்து, சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்துப் பரிமாறவும்.
* சூப்பரான சத்தான பீட்ரூட் மினி பூரி ரெடி.
* பச்சைப் பட்டாணி, கொத்தமல்லித்தழை, பீட்ரூட் சேர்வதால் பார்ப்பதற்கு கலர்ஃபுல்லாக இருக்கும். பீட்ரூட் பிடிக்காத குழந்தைகள்கூட விரும்பி சாப்பிடும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
இட்லி, தோசை, ஆப்பமுடன் சேர்த்து சாப்பிட சூப்பரான சைடிஷ் தேங்காய்ப்பால் சிக்கன் குழம்பு. இன்று இந்த குழம்பை எப்படி எளிய முறையில் செய்வதென்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சிக்கன் - அரை கிலோ
சமையல் எண்ணெய் - தேவையான அளவு.
சின்ன வெங்காயம் - 150 கிராம்
தக்காளி - இரண்டு (பெரியது)
பச்சை மிளகாய் - மூன்று
வர மிளகாய் - இரண்டு
கறிவேப்பிலை - ஒரு கொத்து
சிக்கன் மசாலா தூள் - மூன்று தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கடுகு - அரை தேக்கரண்டி
தேங்காய் - ஒரு மூடி(தேங்காய் பால்)
கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை :
* தக்காளி, கொத்தமல்லி, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, பச்சை மிளகாய், வர மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் சின்ன வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
* தக்காளி நன்றாக வதங்கியதும் சிக்கன் சேர்த்து மேலும் வதக்கவும்.
* அடுத்து அதில் சிக்கன் மசாலா தூள் சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து நன்கு கிளறி மூடி வேக வைக்கவும்.
* பாதியாக சிக்கன் வெந்ததும், தேங்காய் பாலை ஊற்றி, நன்கு கலக்கி மூடி வைக்கவும்.
* தேங்காய்ப் பால் வற்றி, திக்கான குழம்பு நிலைக்கு வரும் வரை வைத்திருக்கவும்.
* கடைசியாக கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
* தேங்காய்ப்பால் சிக்கன் குழம்பு ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சிக்கன் - அரை கிலோ
சமையல் எண்ணெய் - தேவையான அளவு.
சின்ன வெங்காயம் - 150 கிராம்
தக்காளி - இரண்டு (பெரியது)
பச்சை மிளகாய் - மூன்று
வர மிளகாய் - இரண்டு
கறிவேப்பிலை - ஒரு கொத்து
சிக்கன் மசாலா தூள் - மூன்று தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கடுகு - அரை தேக்கரண்டி
தேங்காய் - ஒரு மூடி(தேங்காய் பால்)
கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை :
* தக்காளி, கொத்தமல்லி, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, பச்சை மிளகாய், வர மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் சின்ன வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
* தக்காளி நன்றாக வதங்கியதும் சிக்கன் சேர்த்து மேலும் வதக்கவும்.
* அடுத்து அதில் சிக்கன் மசாலா தூள் சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து நன்கு கிளறி மூடி வேக வைக்கவும்.
* பாதியாக சிக்கன் வெந்ததும், தேங்காய் பாலை ஊற்றி, நன்கு கலக்கி மூடி வைக்கவும்.
* தேங்காய்ப் பால் வற்றி, திக்கான குழம்பு நிலைக்கு வரும் வரை வைத்திருக்கவும்.
* கடைசியாக கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
* தேங்காய்ப்பால் சிக்கன் குழம்பு ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகளுக்கு சத்தான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்பினால் ராசி மசாலா ரிப்பன் செய்து கொடுக்கலாம். இன்று இந்த ரிப்பன் முறுக்கு செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கேழ்வரகு மாவு - 2 கப்,
அரிசிமாவு - கால் கப்
பொட்டுக்கடலை மாவு - அரை கப்,
மிளகாய்த்தூள், பூண்டு விழுது - தலா ஒரு டீஸ்பூன்,
பெருங்காயத்தூள், சோம்புத்தூள் - தலா கால் டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை :
* ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, பொட்டுக்கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், பூண்டு விழுது, பெருங்காயத்தூள், சோம்புத்தூள், உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, முறுக்கு மாவு பதத்தில் கலந்துகொள்ளவும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் நெருப்பை சிம்மில் வைத்துக்கொள்ளவும்.
* முறுக்குக் குழாயில் ரிப்பன் அச்சுப் போட்டு மாவை முறுக்கு அச்சில் வைத்து காய்ந்த எண்ணெயில் ரிப்பன்களாகப் பிழியவும். சிவந்தது வெந்ததும் எடுக்கவும்.
* ராகி மசாலா ரிப்பன் பக்கோடா தயார்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கேழ்வரகு மாவு - 2 கப்,
அரிசிமாவு - கால் கப்
பொட்டுக்கடலை மாவு - அரை கப்,
மிளகாய்த்தூள், பூண்டு விழுது - தலா ஒரு டீஸ்பூன்,
பெருங்காயத்தூள், சோம்புத்தூள் - தலா கால் டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை :
* ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, பொட்டுக்கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், பூண்டு விழுது, பெருங்காயத்தூள், சோம்புத்தூள், உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, முறுக்கு மாவு பதத்தில் கலந்துகொள்ளவும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் நெருப்பை சிம்மில் வைத்துக்கொள்ளவும்.
* முறுக்குக் குழாயில் ரிப்பன் அச்சுப் போட்டு மாவை முறுக்கு அச்சில் வைத்து காய்ந்த எண்ணெயில் ரிப்பன்களாகப் பிழியவும். சிவந்தது வெந்ததும் எடுக்கவும்.
* ராகி மசாலா ரிப்பன் பக்கோடா தயார்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
தக்காளி, சாதம், தயிர் சாதம், பிரியாணிக்கு தொட்டுக்கொள்ள கத்திரிக்காய் தக்காளித் தொக்கு சூப்பராக இருக்கும். இன்று இந்த தொக்கை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சிறு கத்திரிக்காய் - 10
பெரிய தக்காளி - 2
மீடியம் சைஸ் பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 5 பல்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்தம்பருப்பு - அரை டீஸ்பூன்
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
அரைக்க :
மல்லி (தனியா) - 1 டீஸ்பூன்
புளி - பெரிய எலுமிச்சை அளவு
சீரகம் - அரை டீஸ்பூன்
மிளகு - அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
உப்பு - தேவையான அளவு

செய்முறை :
* வெங்காயம், தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கத்திரிக்காயைக் கழுவி அடிப்பாகம் வரை நான்காக கீறி விட்டுக் கொள்ளவும்.
* தண்ணீரில் சிறிதளவு உப்பு சேர்த்து கத்திரிக்காயை 10 நிமிடம் ஊற வைக்கவும்.
* அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்டாக அரைத்து கொள்ளவும்.
* அரைத்த விழுதை கத்திரிக்காயின் உள்ளே வைத்து 20 நிமிடம் தனியாக ஊற வைக்கவும்.
* வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம்பருப்பு போட்டு தாளித்த பின் வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் இதில் தக்காளியைச் சேர்த்து கரைய வதக்கவும்.
* தக்காளி நன்றாக வதங்கியதும் அதில் ஊற வைத்துள்ள கத்திரிக்காயைச் சேர்த்து மெதுவாக புரட்டி விடவும்.
* தீயை சிம்மில் வைத்து சிறிது தண்ணீர் தெளித்து, மீதம் இருக்கும் அரைத்த பேஸ்ட், தேவையான அளவு உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் மூடி போட்டு வேக விடவும்.
* கத்திரிக்காய் உடையாமல் புரட்டி ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது எடுத்துப் பரிமாறவும்.
* கத்திரிக்காய் தக்காளி தொக்கு ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சிறு கத்திரிக்காய் - 10
பெரிய தக்காளி - 2
மீடியம் சைஸ் பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 5 பல்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்தம்பருப்பு - அரை டீஸ்பூன்
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
அரைக்க :
மல்லி (தனியா) - 1 டீஸ்பூன்
புளி - பெரிய எலுமிச்சை அளவு
சீரகம் - அரை டீஸ்பூன்
மிளகு - அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
உப்பு - தேவையான அளவு

செய்முறை :
* வெங்காயம், தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கத்திரிக்காயைக் கழுவி அடிப்பாகம் வரை நான்காக கீறி விட்டுக் கொள்ளவும்.
* தண்ணீரில் சிறிதளவு உப்பு சேர்த்து கத்திரிக்காயை 10 நிமிடம் ஊற வைக்கவும்.
* அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்டாக அரைத்து கொள்ளவும்.
* அரைத்த விழுதை கத்திரிக்காயின் உள்ளே வைத்து 20 நிமிடம் தனியாக ஊற வைக்கவும்.
* வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம்பருப்பு போட்டு தாளித்த பின் வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் இதில் தக்காளியைச் சேர்த்து கரைய வதக்கவும்.
* தக்காளி நன்றாக வதங்கியதும் அதில் ஊற வைத்துள்ள கத்திரிக்காயைச் சேர்த்து மெதுவாக புரட்டி விடவும்.
* தீயை சிம்மில் வைத்து சிறிது தண்ணீர் தெளித்து, மீதம் இருக்கும் அரைத்த பேஸ்ட், தேவையான அளவு உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் மூடி போட்டு வேக விடவும்.
* கத்திரிக்காய் உடையாமல் புரட்டி ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது எடுத்துப் பரிமாறவும்.
* கத்திரிக்காய் தக்காளி தொக்கு ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
இதுவரை எத்தனையோ ஸ்டைலில் சிக்கன் குழம்பு செய்து சுவைத்திருப்பீர்கள். இன்று மதுரை முனியாண்டி விலாஸ் ஸ்டைலில் சிக்கன் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சிக்கன் - 1/2 கிலோ
வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
தேங்காய் பேஸ்ட் - 3 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 3 டீஸ்பூன்
வறுத்து அரைப்பதற்கு...
வரமிளகாய் - 6
மல்லி - 1 டீஸ்பூன்
பச்சரிசி - 1 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
கசகசா - 1 டீஸ்பூன்
பொட்டுக்கடலை - 1 டீஸ்பூன்
பட்டை - 1 இன்ச்
கிராம்பு - 3
தாளிப்பதற்கு...
கடுகு - 1/2 டீஸ்பூன்
பிரியாணி இலை - 1
சோம்பு - 1/2 டீஸ்பூன்
வரமிளகாய் - 2

செய்முறை :
* கொத்தமல்லி, தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* சிக்கனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
* வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்கி, குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்த பின் அதில் கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
* அடுத்து அதில் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் சிக்கன் துண்டுகளை சேர்த்து மஞ்சள் தூள் தூவி, சிக்கனின் நிறம் மாறும் வரை நன்கு வதக்கவும்.
* அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து நன்கு பிரட்டி, 2 கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
* அடுத்து அதில் தேங்காய் பேஸ்ட் சேர்த்து 10 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும். குழம்பில் இருந்து எண்ணெய் தனியாக பிரியும் வரை கொதிக்க விட்டு, கொத்தமல்லியைத் தூவி மூடி வைத்து இறக்கினால், மதுரை முனியாண்டி விலாஸ் சிக்கன் குழம்பு ரெடி!!!
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சிக்கன் - 1/2 கிலோ
வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
தேங்காய் பேஸ்ட் - 3 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 3 டீஸ்பூன்
வறுத்து அரைப்பதற்கு...
வரமிளகாய் - 6
மல்லி - 1 டீஸ்பூன்
பச்சரிசி - 1 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
கசகசா - 1 டீஸ்பூன்
பொட்டுக்கடலை - 1 டீஸ்பூன்
பட்டை - 1 இன்ச்
கிராம்பு - 3
தாளிப்பதற்கு...
கடுகு - 1/2 டீஸ்பூன்
பிரியாணி இலை - 1
சோம்பு - 1/2 டீஸ்பூன்
வரமிளகாய் - 2

செய்முறை :
* கொத்தமல்லி, தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* சிக்கனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
* வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்கி, குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்த பின் அதில் கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
* அடுத்து அதில் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் சிக்கன் துண்டுகளை சேர்த்து மஞ்சள் தூள் தூவி, சிக்கனின் நிறம் மாறும் வரை நன்கு வதக்கவும்.
* அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து நன்கு பிரட்டி, 2 கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
* அடுத்து அதில் தேங்காய் பேஸ்ட் சேர்த்து 10 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும். குழம்பில் இருந்து எண்ணெய் தனியாக பிரியும் வரை கொதிக்க விட்டு, கொத்தமல்லியைத் தூவி மூடி வைத்து இறக்கினால், மதுரை முனியாண்டி விலாஸ் சிக்கன் குழம்பு ரெடி!!!
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகளுக்கு மாலையில் சத்தான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்பினால் இந்த கார்ன் - பன்னீர் கபாப் செய்து கொடுக்கலாம். இந்த கார்ன் - பன்னீர் கபாப் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சோளம் - 2
உருளைக்கிழங்கு - 200 கிராம்
பன்னீர் - 100 கிராம்
முட்டைக்கோஸ் - 100 கிராம்
இஞ்சி - சிறிய துண்டு
கொத்தமல்லி - தேவைகேற்ப
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
தனியா தூள் - 1/2 ஸ்பூன்
சீரக தூள் - 1/2 ஸ்பூன்
சோள மாவு - 2 ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவைகேற்ப

செய்முறை :
* உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.
* பன்னீரை துருவிக்கொள்ளவும்.
* இஞ்சி, கொத்தமல்லி, முட்டை கோஸை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* சோளத்தை வேகவைத்து மசித்துகொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் வேகவைத்த உருளைக்கிழங்கு, துருவிய பன்னீர், சோள மாவு, மசித்த சோளம் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.
* இந்தக் கலவையுடன், பொடியாக நறுக்கிய முட்டைகோஸ், இஞ்சி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியா தூள், சீராக தூள், கொத்தமல்லி, உப்பு சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் நன்றாக பிசைந்து கொள்ளவும். கலவை கெட்டியாக இருக்க வேண்டும். கட்லெட் தட்டுவதற்கு ஏற்ற பதத்தில் இல்லையென்றால் மட்டும் சிறிது தண்ணீர் தெளித்துக்கொள்ளலாம்.
* இந்த கலவையை கபாப்களாக தட்டி வைக்கவும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உருட்டி வைத்துள்ள கபாப்களை போட்டு பொரித்து எடுக்கவும். தோசைக்கல்லிலும் பொரித்து எடுக்கலாம்.
* கார்ன் கபாப் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சோளம் - 2
உருளைக்கிழங்கு - 200 கிராம்
பன்னீர் - 100 கிராம்
முட்டைக்கோஸ் - 100 கிராம்
இஞ்சி - சிறிய துண்டு
கொத்தமல்லி - தேவைகேற்ப
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
தனியா தூள் - 1/2 ஸ்பூன்
சீரக தூள் - 1/2 ஸ்பூன்
சோள மாவு - 2 ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவைகேற்ப

செய்முறை :
* உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.
* பன்னீரை துருவிக்கொள்ளவும்.
* இஞ்சி, கொத்தமல்லி, முட்டை கோஸை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* சோளத்தை வேகவைத்து மசித்துகொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் வேகவைத்த உருளைக்கிழங்கு, துருவிய பன்னீர், சோள மாவு, மசித்த சோளம் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.
* இந்தக் கலவையுடன், பொடியாக நறுக்கிய முட்டைகோஸ், இஞ்சி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியா தூள், சீராக தூள், கொத்தமல்லி, உப்பு சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் நன்றாக பிசைந்து கொள்ளவும். கலவை கெட்டியாக இருக்க வேண்டும். கட்லெட் தட்டுவதற்கு ஏற்ற பதத்தில் இல்லையென்றால் மட்டும் சிறிது தண்ணீர் தெளித்துக்கொள்ளலாம்.
* இந்த கலவையை கபாப்களாக தட்டி வைக்கவும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உருட்டி வைத்துள்ள கபாப்களை போட்டு பொரித்து எடுக்கவும். தோசைக்கல்லிலும் பொரித்து எடுக்கலாம்.
* கார்ன் கபாப் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பச்சை மொச்சையில் அதிகளவும் சத்துக்கள் உள்ளது. கிராமங்களில் பச்சை மொச்சை குழம்பு மிகவும் பிரபலம். இன்று பச்சை மொச்சை குழம்பு செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பச்சை மொச்சை - 1/2 கிலோ
சின்ன வெங்காயம் - 200 கிராம்
பச்சை மிளகாய் - 3
தக்காளி - 3
கறிவேப்பிலை - ஒரு கொத்து
தேங்காய் துருவல் - அரை கப்
குழம்பு மிளகாய் தூள் - இரண்டு டீஸ்பூன்
கடுகு, உளுந்து - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 3 டீ ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை :
* வெங்காயம், தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* பச்சை மொச்சையை சிறிதளவு உப்பு, பச்சை மிளகாயுடன் சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும்.
* வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் சிறிது சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் குழம்பு மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.
* அடுத்து அதில் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி ஆற வைத்து மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.
* வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து குழையும் வரை வதக்கவும்.
* தக்காளி நன்றாக குழைந்ததும் அதில் அரைத்த கலவையை போட்டு வதக்கவும்.
* அடுத்து அதில் வேகவைத்த மொச்சையை சேர்த்து தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். உப்பு சரிபார்த்து கொள்ளவும்.
* குழம்பு கொதிக்கும் போது 1 ஸ்பூன் நல்லெண்ணைய் ஊற்றி அடுப்பை மிதமாக எரிய விடவும்.
* குழம்பு ஓரங்களில் எண்ணெய் பிரிந்து கிரேவி பதத்திற்கு வந்த உடன் இறக்கவிடவும்.
* சுவையான பச்சை மொச்சை குழம்பு ரெடி.
* சூடான சாதத்திற்கோ, இட்லிக்கோ ஊற்றி சாப்பிட சூப்பராக இருக்கும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பச்சை மொச்சை - 1/2 கிலோ
சின்ன வெங்காயம் - 200 கிராம்
பச்சை மிளகாய் - 3
தக்காளி - 3
கறிவேப்பிலை - ஒரு கொத்து
தேங்காய் துருவல் - அரை கப்
குழம்பு மிளகாய் தூள் - இரண்டு டீஸ்பூன்
கடுகு, உளுந்து - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 3 டீ ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை :
* வெங்காயம், தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* பச்சை மொச்சையை சிறிதளவு உப்பு, பச்சை மிளகாயுடன் சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும்.
* வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் சிறிது சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் குழம்பு மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.
* அடுத்து அதில் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி ஆற வைத்து மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.
* வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து குழையும் வரை வதக்கவும்.
* தக்காளி நன்றாக குழைந்ததும் அதில் அரைத்த கலவையை போட்டு வதக்கவும்.
* அடுத்து அதில் வேகவைத்த மொச்சையை சேர்த்து தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். உப்பு சரிபார்த்து கொள்ளவும்.
* குழம்பு கொதிக்கும் போது 1 ஸ்பூன் நல்லெண்ணைய் ஊற்றி அடுப்பை மிதமாக எரிய விடவும்.
* குழம்பு ஓரங்களில் எண்ணெய் பிரிந்து கிரேவி பதத்திற்கு வந்த உடன் இறக்கவிடவும்.
* சுவையான பச்சை மொச்சை குழம்பு ரெடி.
* சூடான சாதத்திற்கோ, இட்லிக்கோ ஊற்றி சாப்பிட சூப்பராக இருக்கும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
தக்காளி குழம்பு செய்வது மிகவும் எளிமையானது. சுவையும் சூப்பராக இருக்கும். இன்று தக்காளி குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருள்கள் :
நாட்டுத் தக்காளி, பெங்களூர் தக்காளி - தலா 2,
பச்சை மிளகாய் - 1,
பூண்டு - 2 பல்,
சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன்,
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
தனியாத்தூள் - 2 டீஸ்பூன்,
கடுகு, உளுந்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன்,
பெரிய வெங்காயம் - 1,
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை :
* தக்காளியை மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும். அல்லது பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* ப.மிளகாயை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.
* வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள் போட்டு வதக்கவும்.
* அடுத்து அதில் நறுக்கிய தக்காளிகளைப் போட்டு, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
* பச்சை வாசனை போனதும், சீரகத்தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கி, தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
* எண்ணெய் பிரிந்து வந்ததும், கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.
* தக்காளி குழம்பு ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
நாட்டுத் தக்காளி, பெங்களூர் தக்காளி - தலா 2,
பச்சை மிளகாய் - 1,
பூண்டு - 2 பல்,
சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன்,
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
தனியாத்தூள் - 2 டீஸ்பூன்,
கடுகு, உளுந்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன்,
பெரிய வெங்காயம் - 1,
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை :
* தக்காளியை மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும். அல்லது பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* ப.மிளகாயை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.
* வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள் போட்டு வதக்கவும்.
* அடுத்து அதில் நறுக்கிய தக்காளிகளைப் போட்டு, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
* பச்சை வாசனை போனதும், சீரகத்தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கி, தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
* எண்ணெய் பிரிந்து வந்ததும், கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.
* தக்காளி குழம்பு ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகளுக்கு இறால் மிகவும் பிடிக்கும். இன்று இறாலை வைத்து சூப்பரான கேரளா ஸ்டைல் இறால் தீயல் செய்வது எப்படி என்று பாக்கலாம்.
தேவையான பொருட்கள் :
இறால் - 1 கப்
வெங்காயம் - 200 கிராம்
புளிக்கரைசல் - கால் கப் ( கெட்டியாக)
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
வெந்தயப் பொடி- 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்,
தனியாதூள் - 1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 5
பூண்டு - 10 பல்
உப்பு - சுவைக்கேற்ப
தேங்காய் துருவல் - 1 கப்
தேங்காய் எண்ணெய் - 3 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 1/4 கப்
மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி தூள் - 2 டீஸ்பூன்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை :
* இறாலை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
* வெங்காயம், கொத்தமல்லி, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு, மிளகு, சின்ன வெங்காயம், தேங்காய், மிளகாய் சேர்த்து நன்றாக பொன்னிறமாக வறுத்து ஆற வைத்து அதனுடன், மிளகாய்த்தூள், தனியாதூள் சேர்த்து மிக்ஸியில் மைய அரைத்துக் கொள்ளவும்.
* அடுப்பில் கடாயை வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெந்தயம், பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், உப்பு, பூண்டு சேர்த்து வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் மஞ்சள் தூள், இறால் சேர்த்து வதக்கவும்.
* அடுத்து அதில் புளிக்கரைசல் சேர்த்து கொதிக்க விடவும்.
* அரைத்த மசாலாவை இறால் குழம்பில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி 5 நிமிடங்கள் கடாயை மூடி வேக வைக்கவும்.
* குழம்பு ஓரங்களில் எண்ணெய் பிரிந்து திக்கான பதம் வந்தவுடன் கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.
* கேரளா ஸ்டைல் இறால் தீயல் குழம்பு ரெடி!
* சூடான இறால் தீயல் குழம்பை சாதம், அப்பளம், தோசை உடன் சாப்பிடலாம்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
இறால் - 1 கப்
வெங்காயம் - 200 கிராம்
புளிக்கரைசல் - கால் கப் ( கெட்டியாக)
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
வெந்தயப் பொடி- 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்,
தனியாதூள் - 1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 5
பூண்டு - 10 பல்
உப்பு - சுவைக்கேற்ப
தேங்காய் துருவல் - 1 கப்
தேங்காய் எண்ணெய் - 3 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 1/4 கப்
மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி தூள் - 2 டீஸ்பூன்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை :
* இறாலை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
* வெங்காயம், கொத்தமல்லி, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு, மிளகு, சின்ன வெங்காயம், தேங்காய், மிளகாய் சேர்த்து நன்றாக பொன்னிறமாக வறுத்து ஆற வைத்து அதனுடன், மிளகாய்த்தூள், தனியாதூள் சேர்த்து மிக்ஸியில் மைய அரைத்துக் கொள்ளவும்.
* அடுப்பில் கடாயை வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெந்தயம், பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், உப்பு, பூண்டு சேர்த்து வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் மஞ்சள் தூள், இறால் சேர்த்து வதக்கவும்.
* அடுத்து அதில் புளிக்கரைசல் சேர்த்து கொதிக்க விடவும்.
* அரைத்த மசாலாவை இறால் குழம்பில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி 5 நிமிடங்கள் கடாயை மூடி வேக வைக்கவும்.
* குழம்பு ஓரங்களில் எண்ணெய் பிரிந்து திக்கான பதம் வந்தவுடன் கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.
* கேரளா ஸ்டைல் இறால் தீயல் குழம்பு ரெடி!
* சூடான இறால் தீயல் குழம்பை சாதம், அப்பளம், தோசை உடன் சாப்பிடலாம்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.






