search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிக்கன் குழம்பு"

    சிக்கனில் மிளகு தூள், தேங்காய் சேர்த்து குழம்பு செய்தால் அருமையாக இருக்கும். இந்த குழம்பை தோசை, இட்லி, சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.
    தேவையான பொருட்கள் :

    சிக்கன் - அரை கிலோ
    சின்னவெங்காயம் - 100 கிராம்
    தக்காளி - 2
    மிளகுதூள் - 4 ஸ்பூன்
    சீரகத்தூள் - 2 ஸ்பூன்
    இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
    மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
    தயிர் - 3 ஸ்பூன்
    தேங்காய்பால் - ஒரு கப்
    உப்பு - தேவையான அளவு
    கறிவேப்பிலை கொத்தமல்லித்தழை - சிறிதளவு
    எண்ணெய் - 3 ஸ்பூன்



    செய்முறை :

    சிக்கனை துண்டுகளாக வெட்டி நன்றாக கழுவி வைக்கவும்.

    கழுவிய சிக்கனில் உப்பு, தயிர், சிறிதளவு இஞ்சி பூண்டு சேர்த்து அரைமணிநேரம் ஊறவைக்கவும்.

    கொத்தமல்லி, வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் அத்துடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் தக்காளியையும் சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் இத்துடன் ஊறவைத்த சிக்கனை சேர்த்து கிளறவும்.

    அடுத்து அதில் சீரகம், மிளகுத்தூளை சேர்த்து நன்றாக கிளறவும்.

    அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து மூடிபோட்டு வேகவிடவும்.

    சிக்கன் வெந்தவுடன் அத்துடன் தேங்காய்பால் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து குழம்பு கெட்டியாகி ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.

    சுவையான தேங்காய்பால் மிளகு சிக்கன் குழம்பு ரெடி

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நாட்டுக்கோழியை ஆந்திரா ஸ்டைலில் குழம்பு செய்து சாப்பிட்டால், ருசி அவ்வளவு அருமையாக இருக்கும். இன்று ஆந்திரா ஸ்டைல் நாட்டுக்கோழி குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போம்.
    தேவையான பொருட்கள்:

    நாட்டுக்கோழி - 1 கிலோ
    வெங்காயம் - 3,
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்,
    தக்காளி - 2
    தயிர் -2 டேபிள் ஸ்பூன்,
    பச்சை மிளகாய் - 3-4 ,
    மல்லி (தனியா)- 1 டேபிள் ஸ்பூன்,
    சீரகம் - 1/2 டேபிள் ஸ்பூன்,
    தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்,
    பூண்டு - 3 பல்
    மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்,
    மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்,
    கரம் மசாலா - 1 டீஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு,
    எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்,
    கொத்தமல்லி - சிறிது,
    தண்ணீர் - 1 கப்



    செய்முறை :

    வெங்காயம், கொத்தமல்லி, தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    நாட்டுக்கோழியை நன்றாக சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    மல்லி, சீரகம், தேங்காய், பூண்டு ஆகியவற்றை வாணலியில் போட்டு வறுத்து, குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ள வேண்டும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து, 5 நிமிடம் நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.

    அடுத்து தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் அரைத்து வைத்துள்ள பேஸ்ட், கரம் மசாலா, தயிர் மற்றும் உப்பு சேர்த்து, 5 நிமிடம் வதக்க வேண்டும்.

    பின்பு கழுவி வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து, மசாலா சிக்கனில் படுமாறு நன்கு பிரட்டி, தண்ணீர் ஊற்றி, தீயை குறைவில் வைத்து, மூடி வைத்து 20 நிமிடம் சிக்கனை வேக வைக்க வேண்டும்.

    சிக்கனானது நன்கு வெந்த பிறகு, அதனை இறக்கி, அதில் கொத்தமல்லியை தூவினால், சுவையான ஆந்திரா ஸ்டைல் நாட்டுக்கோழி குழம்பு ரெடி.

    இந்த ஆந்திர ஸ்டைல் நாட்டுக்கோழிக் குழம்பை சூடான சாதத்துடனும், இட்லி, தோசை, சப்பாத்தி என எதனுடன் வைத்து சாப்பிட்டாலும், பக்காவாக இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×