என் மலர்tooltip icon

    சமையல்

    அவல் வைத்து உப்புமா, பாயாசம், புட்டு செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    சிகப்பு அவல் - 1 கப்
    உப்பு - தேவைக்கேற்ப
    பெரிய வெங்காயம் - 1
    இஞ்சி, பூண்டு விழுது - சிறிதளவு
    கறிவேப்பிலை - சிறிதளவு
    கொத்தமல்லி - சிறிதளவு
    சோம்பு - சிறிதளவு
    மிளகாய்த்தூள் - சிறிதளவு
    எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
    பச்சை மிளகாய் - 1

    சிகப்பு அவல் பக்கோடா

    செய்முறை:

    வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.

    ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சிகப்பு அவலை சுடுநீர் ஊற்றி அலசி தண்ணீர் இல்லாமல் வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

    அது ஆறியபின் அவலை ஓரளவு பிசைந்து எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் நீளமாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, சோம்பு, உப்பு, கொத்தமல்லி இவற்றைக் கலந்து கொள்ளவும்.

    இதில் சிறிது எண்ணெயைக் காயவைத்து அதன் மேல் ஊற்றி அத்துடன் மிளகாய்த்தூள் சிறிதளவு சேர்த்து தேவைப்பட்டால் இரண்டு மூன்று ஸ்பூன் தண்ணீர் விட்டு நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

    வாணலியில் எண்ணெய் காய்ந்த பிறகு இந்த மாவை உதிரி உதிரியாகப் போட்டு சிவக்கப் பொரித்தெடுக்க வேண்டும்.

    பின்பு அதே எண்ணெயில் கறிவேப்பிலையைப் பொரித்து எடுத்து அவல் பக்கோடாவின் மேல் கலந்து கொள்ள வேண்டும்.

    இப்பொழுது மொறு மொறுப்பான கரகரப்பான, சுவையான சிகப்பு அவல் பக்கோடா ரெடி.

    காற்று புகாத டப்பாவில் இந்த பக்கோடாவைப் போட்டு வைத்தால் பத்து நாட்கள் வரை உபயோகிக்கலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    காராமணியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. சர்க்கரை நோயாளிகள் சாப்பிட உகந்த காராமணி இனிப்பு சுண்டலை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    வெள்ளை காராமணி - 1 கப்
    வெல்லம் அல்லது கருப்பட்டி - அரை கப்
    நெய் - 2 தேக்காரண்டி
    ஏலக்காய் தூள் - கால் தேக்கரண்டி
    தேங்காய் துருவல் - சிறிதளவு

    காராமணி இனிப்பு சுண்டல்

    செய்முறை :

    காராமணியை நன்றாக கழுவி 6 மணிநேரம் ஊற வைத்த பின்னர் வேக வைத்து கொள்ளவும்.

    கருப்பட்டி அல்லது வெல்லத்தை கரைத்து வடிகட்டி கெட்டிப்பாகு காய்ச்சவும்.

    வாணலியில் நெய்யை ஊற்றி சூடானதும் காராமணியை சேர்க்கவும்.

    அதனுடன் காய்ச்சிய கருப்பட்டி அல்லது வெல்லப்பாகு, ஏலக்காய் தூள் சேர்த்து கிளறவும்.

    இறக்குவதற்கு முன் தேங்காய் துருவல் தூவி இறக்கவும்.

    சுவையான சத்தான காராமணி இனிப்பு சுண்டல் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலை நேரத்தில் சூடாக சாப்பிட மூன்று வகையான பருப்புகளை வைத்து எப்படி வடை செய்வது என்று விரிவாக பார்க்கலாம்.
    தேவையான  பொருட்கள்

    உளுத்தம்பருப்பு - ஒரு கப்
    கடலைப்பருப்பு - ஒரு கப்
    துவரம்பருப்பு -  ஒரு கப்
    மிளகு, சீரகம் - சிறிதளவு
    வெங்காயம் - 1
    கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு
    இஞ்சி - சிறிய துண்டு
    பெருஞ்சீரகம் - அரை டீஸ்பூன்
    காய்ந்த மிளகாய் - 10
    நெய் - 2 தேக்கரண்டி
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    முப்பருப்பு வடை

    செய்முறை :

    பருப்பு வகைகளை நன்றாக கழுவி இரண்டு மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடிய விட்டு அதனுடன், பெருஞ்சீரகம், மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து சற்று கொரகொரவென அரைத்து கொள்ளவும்.

    வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை, இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அரைத்த மாவில் வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை, இஞ்சி, நெய் விட்டு நன்கு பிசைந்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக்கி, வடைகளாக தட்டிப் போட்டு, நன்கு வேகவிட்டு பொரித்து எடுக்கவும்.

    சூப்பரான முப்பருப்பு வடை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    டயட்டில் இருப்பவர்கள் ஓட்ஸை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று ஓட்ஸில் கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ஓட்ஸ் - 1/2 கப்,
    கடுகு - 1/4 டீஸ்பூன்,
    பச்சைமிளகாய் - 1,
    உப்பு - தேவையான அளவு,
    எண்ணெய் - 1 டீஸ்பூன்.

    ஓட்ஸ் பிடிகொழுக்கட்டை

    செய்முறை :

    ஓட்ஸை கடாயில் போட்டு 5 நிமிடங்கள் வறுத்து அடுப்பை அணைத்து விட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளித்த பின்னர் பச்சைமிளகாயை போட்டு வதக்கவும்.

    அடுத்து அதில் 1/2 கப் தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

    தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் பொடித்த ஓட்ஸை போட்டு அடுப்பை சிறிய தீயில் வைத்து கிளறவும்.

    தண்ணீர் வற்றியவுடன் அடுப்பை அணைத்து விடவும்.

    ஆறியவுடன் பிடிகொழுக்கட்டைகளாக பிடித்து ஆவியில் 7 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.

    சூடாக சட்னியுடன் பரிமாறவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வேப்பம் பூவில் துவையல், சட்னி, சாதம் செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வேப்பம் பூவில் வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கடலைப் பருப்பு - 1 கப்
    வெங்காயம் - 1
    காய்ந்த மிளகாய் - இரண்டு
    பூண்டு பற்கள் - 10
    இஞ்சி -சிறிய துண்டு
    சோம்பு - ஒரு ஸ்பூன்
    புளி - சிறிதளவு
    வெல்லம் - ஒரு துண்டு
    வேப்பம்பூ - கால் கப்
    எண்ணெய் - பொரிப்பதற்கு
    உப்பு - தேவையான அளவு
    கறிவேப்பிலை - சிறிதளவு

    வேப்பம் பூ வடை

    செய்முறை:

    கடலைப்பருப்பை நன்றாக கழுவி 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பின்னர் அதனை தண்ணீரை வடித்து விட்டு மிக்சியில் போட்டு அதனுடன் வெங்காயம், காய்ந்த மிளகாய், சோம்பு, கறிவேப்பிலை, வேப்பம்பூ, வெல்லம், புளி, உப்பு சேர்த்து வடை பதத்தில் அரைத்துக் கொள்ள வேண்டும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை வடைகளாக தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான வேப்பம்பூ வடை தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

    இந்துமதி
    சளி, இருமல் தொல்லையால் அவதிப்படுபவர்கள் ரொட்டி செய்யும் போது அதில் மிளகு, சீரகம் சேர்த்து செய்யலாம். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை மாவு - 2 கப்
    மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்
    சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு

    மிளகு சீரக ரொட்டி

    செய்முறை :

    ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, மிளகுத்தூள், சீரகத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து நன்கு மிருதுவாகப் பிசைந்து 30 நிமிடங்கள் மூடி வைக்கவும்.

    பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.

    உருண்டைகளை இரு கைகளின் நடுவில் வைத்துச் சிறிது அழுத்தம் கொடுத்து வட்டமாகச் செய்து கொள்ளவும்.

    பிறகு சிறிதளவு மாவில் புரட்டி வட்டமாகத் தேய்த்துக்கொள்ளவும்.

    சூடான தோசைக்கல்லில் ரொட்டிகளைப் போட்டு இரண்டு பக்கங்களிலும் நன்கு உப்பிக்கொண்டு வரும் வரை வேகவைத்து எடுக்கவும்.

    ருசியான மிளகு சீரக ரொட்டி தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ரவையில் சூப்பரான பாயாசம் (ஃபிர்னீயை) செய்யலாம். இன்று இந்த பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    ரவை - 200 கிராம்
    சர்க்கரை - 300 கிராம்
    பால் - 500 மிலி
    நெய் - 2 டீஸ்பூன்
    ஏலக்காய் - 4
    முந்திரி பருப்பு - 15
    பாதாம் - 10
    பிஸ்தா - 10
    வால்நட்ஸ் - 10
    உலர் திராட்சை - 10
    மில்க்மெய்ட்  - 50 மிலி

    ரவை பாயாசம்

    செய்முறை

    கடாயில்  நெய்யை ஊற்றி சூடான பின் முந்திரி, பாதாம், பிஸ்தா, வால்நட், உலர் திராட்சைகளை சேர்த்து லேசாக வறுத்து எடுத்து வைத்து கொள்ளவும்.

    அதே கடாயில் மீதமுள்ள நெய் ஊற்றி ரவை சேர்த்து நன்கு வறுக்கவும்.

    ரவையை நன்கு வறுத்தவுடன், பால் சேர்க்கவும்.

    ரவையை பாலில் நன்கு வேக விடவும். மிகவும் கெட்டியாக இருந்தால், கொஞ்சம் தண்ணீர் சேர்க்கவும்.

    இப்போது சர்க்கரை மற்றும் ஏலக்காய் சேர்க்கவும்.

    ரவை கட்டிகளாக ஆகாமல் தொடர்ந்து ஃபிர்னீயை கிளறி விட வேண்டும்.

    ரவை, சர்க்கரை எல்லாம் நன்றாக கலந்து கெட்டியான பின், வறுத்து வைத்துள்ள பாதாம், பிஸ்தா, முந்திரி பருப்பு, வால்நட் மற்றும் உலர் திராட்சையை சேர்த்து நன்கு கிளறவும்.

    மேலும் மில்க்மெய்ட் சேர்த்து 5 நிமிடம் நன்றாக கலக்கவும்.

    சூடாக அல்லது குளிர வைத்து ஃபிர்னீயை பரிமாறலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ராஜஸ்தானில் இந்த கோர்மா ரொட்டி மிகவும் பிரபலம். இன்று இந்த ரொட்டியை எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பாசிப்பருப்பு - 1 கப்
    கோதுமை மாவு - 2 கப்
    மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1/4 டீ ஸ்பூன்
    பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
    எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
    ஓமம் - 1/4 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    தண்ணீர் - 1 கப்
    எண்ணெய் - தேவையான அளவு

    கோர்மா ரொட்டி

    செய்முறை

    பாசி பருப்பை கொரகொரப்பாக மிக்சியில் அரைத்து கொள்ளவும்.

    பின் தண்ணீர் ஊற்றி நான்கு மணி நேரம் ஊற வைக்கவும்

    ஊறிய பாசிப்பருப்பை நன்கு வடிகட்டி, கோதுமை மாவு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், ஓமம், உப்பு, எண்ணெய் மற்றும் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பததிற்கு பிசைந்து கொள்ளவும்.

    30 நிமிடங்களுக்கு பிறகு சப்பாத்தி மாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து சப்பாத்தியாக தேய்த்து எடுக்கவும்.

    பின்னர் தோசை கல்லில் எண்ணெய் தெளித்து தேய்த்த ரொட்டியை போட்டு வேக விடவும்.

    ரொட்டியின் மேலும் சிறிது எண்ணெய் தெளித்து விட்டு இரு புறமும் சிறிது பொன்னிறம் ஆகும் வரை பொரித்து எடுக்கவும்.

    சூப்பரான சத்தான ராஜஸ்தானி கோர்மா ரொட்டி ரெடி.

    சூடாக ரொட்டிகளை ஊறுகாய் உடன் பரிமாறலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு விருப்பமான சுவையான இறால் முட்டை சாதத்தை எப்படி எளிய முறையில் செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    இறால் - 300 கிராம்
    முட்டை - 3
    வடித்த சாதம் - ஒரு கப்
    பச்சை மிளகாய் - 3
    பெரிய வெங்காயம் - 2
    கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்
    மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
    இஞ்சிபூண்டு பேஸ்ட் - ஒரு டீஸ்பூன்
    எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு
    கொத்தமல்லித்தழை - தேவையான அளவு

    இறால் முட்டை சாதம்

    செய்முறை:

    இறாலை நன்றாக கழுவி சுத்தம் செய்யவும்.

    உதிரியாக வேக வைத்த சாதத்தை ஆற வைத்து எடுத்து கொள்ளவும்.

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த இறாலை போட்டு அதனுடன் ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், சிறிது உப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

    ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை, நறுக்கிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்து, பச்சை வாசனை போக வதக்கி, பிசிறி வைத்த இறால் கலவையும் சேர்த்து வதக்கவும்.

    பிறகு கரம் மசாலாத்தூள், மீதமுள்ள மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கி, 10 நிமிடம் தீயைக் குறைத்து இறாலை வேக விடவும்.

    இறால் வெந்ததும் முட்டையை உடைத்து ஊற்றி, முட்டைக்குத் தேவையான உப்பு மட்டும் சேர்த்து முட்டையை இறாலுடன் சேர்த்து நன்கு கலக்கிவிட்டு வேகவிடவும்.

    கடைசியாக அதனுடன் ஆற வைத்த சாதம், கொத்தமல்லி தழை சேர்த்து நன்றாக கலந்து பரிமாறலாம்.

    சுவையான இறால் முட்டை சாதம் தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தினமும் சிறுதானியங்களை சேர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று கம்பு, பப்பாளி துருவல் சேர்த்து அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    பப்பாளிக்காய் துருவல் - அரை கப்,
    தேங்காய் துருவல் - கால் கப்,
    வெங்காயம் - 2,
    கம்பு மாவு - 2 கப்,
    அரிசிமாவு - கால் கப்,
    பச்சை மிளகாய் - 2,
    உப்பு - தேவையான அளவு,
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
    நல்லெண்ணெய் - தேவையான அளவு.

    அரைப்பதற்கு:


    துவரம் பருப்பு - ஒரு கைப்பிடி,
    முளைகட்டிய சுண்டல் - ஒரு கைப்பிடி,
    இஞ்சி - சிறுதுண்டு,
    பட்டை, கிராம்பு - 2,
    சோம்பு - ஒரு டீஸ்பூன்,
    மிளகு - ஒரு டீஸ்பூன்.

    கம்பு பப்பாளி அடை

    செய்முறை:

    வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஊறவைத்த துவரம் பருப்பு, முளைவிட்ட சுண்டல் இவற்றுடன் அரைக்கக் கொடுத்துள்ளவற்றைச் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் பப்பாளி துருவல், தேங்காய் துருவல், கம்பு மாவு, அரிசி மாவு, ப.மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி, உப்பு சேர்த்து தேவையான தண்ணீர்விட்டு அடை மாவுப் பதத்தில் கரைத்து கொள்ளவும்.

    தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை அடைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

    சுவையான கம்பு - பப்பாளி அடை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    முட்டை ஆம்லெட் செய்யும் போது அதனுடன் புதினா சேர்த்து செய்தால் சூப்பராக இருக்கும். இன்று இந்த ரெசிபி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    முட்டை -  4
    மஞ்சள் தூள் -  1 சிட்டிகை
    புதினா - தேவையான அளவு
    கரம் மசாலா -  2  டீஸ்பூன்
    எண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு

    புதினா ஆம்லெட்

    செய்முறை:

    புதினாவை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் முட்டையை  ஊற்றி அதில், உப்பு, மஞ்சள் தூள், கரம் மசாலா ஆகியவற்றைப் போட்டு நன்றாக அடித்துக் கொள்ள வேண்டும்.

    ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் அடித்த முட்டையை ஊற்றி, அதன் மேல் புதினா இலைகளைத் தூவி, ஆம்லெட்டை சுற்றி எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு எடுத்தால் சுவையான புதினா ஆம்லெட் ரெடி!!!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தனியா கெட்ட கொலஸ்ட்ரால் சத்துக்களை உடலில் சேராமல் தடுக்கிறது. இன்று தனியா சேர்த்து சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான  பொருட்கள் :

    தனியா - 1/2 கப்
    காய்ந்த மிளகாய் - 10
    பூண்டு - 2 பல்
    புளி - சிறிதளவு
    கடுகு - 1/4 ஸ்பூன்
    உளுத்தம்பருப்பு - 1/4 டீஸ்பூன்
    தேங்காய் துருவல் - 1/4 கப்
    எண்ணெய் - தேவைக்கேற்ப
    உப்பு - தேவைக்கேற்ப
    கறிவேப்பிலை -   தேவையான அளவு

    தனியா சட்னி

    செய்முறை :

    கடாயை அடுப்பில் வைத்து சூடானதும தனியாவை போட்டு வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்.

    பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்த மிளகாய், பூண்டு, புளி, கறிவேப்பிலை, தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி ஆறவிடவும்.

    அனைத்தும் நன்றாக ஆறியதும் தனியா, உப்பு சேர்த்து மிக்சியில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்த விழுதில் கொட்டினால் தனியா சட்னி தயார்.

    அருமையான தனியா சட்னி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×