என் மலர்
சமையல்
மூன்று வகையான பருப்புகளை வைத்து செய்யும் பாயாசம் மிகவும் அருமையாக இருக்கும். இன்று இந்த பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பாசிப்பருப்பு - 100 கிராம்
கடலைப்பருப்பு - 50 கிராம்
துவரம்பருப்பு - 50 கிராம்
வெல்லம் - 200 கிராம்
தேங்காய்த் துருவல் - 4 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய் - 3
முந்திரி, திராட்சை - தேவையான அளவு
நெய் - 2 டீஸ்பூன்

செய்முறை:
பச்சரிசியை அரை மணி நேரம் ஊறவைத்து ஏலக்காய் சேர்த்து நைஸாக அரைத்து, தேங்காய்த் துருவலை இறுதியாகச் சேர்த்து ஒன்றிரண்டாக அரைத்து வைக்கவும்.
பருப்பு வகைகளை அரை மணி நேரம் ஊறவைத்து தேவையான தண்ணீர்விட்டு குக்கரில் சேர்த்து வேகவைத்து எடுத்து வைக்கவும்.
வெல்லத்தைப் பொடித்துச் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைத்து வடிகட்டி வைக்கவும்.
பிறகு வேகவைத்த பருப்புக் கலவையை அடுப்பில் ஏற்றி தேங்காய் - அரிசிக் கலவை மற்றும் வெல்லக் கரைசல் சேர்த்து நன்கு கரண்டியால் கலக்கி ஐந்து நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
கடைசியாக நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து இறக்கவும்.
விருப்பப்பட்டால் சிறிதளவு பால் சேர்க்கலாம்.
பாசிப்பருப்பு - 100 கிராம்
கடலைப்பருப்பு - 50 கிராம்
துவரம்பருப்பு - 50 கிராம்
வெல்லம் - 200 கிராம்
தேங்காய்த் துருவல் - 4 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய் - 3
முந்திரி, திராட்சை - தேவையான அளவு
நெய் - 2 டீஸ்பூன்
பச்சரிசி - ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை:
பச்சரிசியை அரை மணி நேரம் ஊறவைத்து ஏலக்காய் சேர்த்து நைஸாக அரைத்து, தேங்காய்த் துருவலை இறுதியாகச் சேர்த்து ஒன்றிரண்டாக அரைத்து வைக்கவும்.
பருப்பு வகைகளை அரை மணி நேரம் ஊறவைத்து தேவையான தண்ணீர்விட்டு குக்கரில் சேர்த்து வேகவைத்து எடுத்து வைக்கவும்.
வெல்லத்தைப் பொடித்துச் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைத்து வடிகட்டி வைக்கவும்.
பிறகு வேகவைத்த பருப்புக் கலவையை அடுப்பில் ஏற்றி தேங்காய் - அரிசிக் கலவை மற்றும் வெல்லக் கரைசல் சேர்த்து நன்கு கரண்டியால் கலக்கி ஐந்து நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
கடைசியாக நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து இறக்கவும்.
விருப்பப்பட்டால் சிறிதளவு பால் சேர்க்கலாம்.
சூப்பரான முப்பருப்புப் பாயாசம் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
டயட்டில் இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு கோதுமை சிறந்த உணவாகும். இன்று கோதுமை மாவில் தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு - 2 கப்
அரிசி மாவு - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
நீர்த்த மோர் - 1 டம்ளர்

செய்முறை :
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரிசி மாவு, உப்பு சேர்த்து நன்றாக கலந்த பின்னர் நீர்த்த நீர்க்க கரைத்துக்கொள்ள வேண்டும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் ஒரு கரண்டி மாவு எடுத்து லேசாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.
கோதுமை தோசை வேக கூடுதல் நேரமாகும், கவனமாக வார்க்கவும்.
கோதுமை தோசை ரெடி, தொட்டுக்கொள்ள புதினா சட்னி, தேங்காய் சட்னி, பொடித்த வெல்லம் நல்ல சுவை தரும்.
கோதுமை மாவு - 2 கப்
அரிசி மாவு - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
நீர்த்த மோர் - 1 டம்ளர்
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரிசி மாவு, உப்பு சேர்த்து நன்றாக கலந்த பின்னர் நீர்த்த நீர்க்க கரைத்துக்கொள்ள வேண்டும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் ஒரு கரண்டி மாவு எடுத்து லேசாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.
கோதுமை தோசை வேக கூடுதல் நேரமாகும், கவனமாக வார்க்கவும்.
கோதுமை தோசை ரெடி, தொட்டுக்கொள்ள புதினா சட்னி, தேங்காய் சட்னி, பொடித்த வெல்லம் நல்ல சுவை தரும்.
சுவையான கோதுமை தோசை ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகளுக்கு லட்டு என்றால் மிகவும் பிடிக்கும். இன்று பால் பவுடர், தேங்காய் சேர்த்து லட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பால் பவுடர் - 2 கப்,
பால் - 1/4 கப்,
சர்க்கரை - 1/4 கப்,
ட்ரை தேங்காய் பொடி - சிறிதளவு,
முந்திரி, ஏலக்காய் - விருப்பப்படி,

செய்முறை :
முதலில் கடாயில் நெய் ஊற்றி முந்திரியை வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
அதே வாணலியில் 1/4 கப் பால், 1/4 கப் சர்க்கரை சேர்த்து ஏலக்காய் பொடி போட்டு 2 கப் பால் பவுடர் சேர்த்து நன்கு கட்டி தட்டாமல் கிளறவும்.
வறுத்த முந்திரி மற்றும் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி கடாயில் ஒட்டாத அளவு கிளறவும்.
நன்றாக திரண்டு வரும் வரை கிளறி லேசான சூட்டில் நெய் தடவி பிசைந்து உருண்டைகளாக உருட்டவும்.
மேலும் உருண்டைகளை ட்ரை தேங்காய் பொடியில் உருட்டி எடுத்தால் மேலும் சுவையாக இருக்கும்.
பால் பவுடர் - 2 கப்,
பால் - 1/4 கப்,
சர்க்கரை - 1/4 கப்,
ட்ரை தேங்காய் பொடி - சிறிதளவு,
முந்திரி, ஏலக்காய் - விருப்பப்படி,
நெய் - 2 டீஸ்பூன்.

செய்முறை :
முதலில் கடாயில் நெய் ஊற்றி முந்திரியை வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
அதே வாணலியில் 1/4 கப் பால், 1/4 கப் சர்க்கரை சேர்த்து ஏலக்காய் பொடி போட்டு 2 கப் பால் பவுடர் சேர்த்து நன்கு கட்டி தட்டாமல் கிளறவும்.
வறுத்த முந்திரி மற்றும் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி கடாயில் ஒட்டாத அளவு கிளறவும்.
நன்றாக திரண்டு வரும் வரை கிளறி லேசான சூட்டில் நெய் தடவி பிசைந்து உருண்டைகளாக உருட்டவும்.
மேலும் உருண்டைகளை ட்ரை தேங்காய் பொடியில் உருட்டி எடுத்தால் மேலும் சுவையாக இருக்கும்.
சுவையான மில்க் பவுடர் தேங்காய் லட்டு ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
காளானில் தொக்கு, கிரேவி செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று காளான் வைத்து சுவையான முறுக்கு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
அரிசி மாவு - 1 கப்
உளுந்தம் பருப்பு - 150 கிராம்
பொடியாக நறுக்கிய மஷ்ரூம் - 1 கப்
வெண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - சிறிதளவு
மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்

செய்முறை:
உளுந்தம்பருப்பை நன்றாக கழுவி ஒரு மணி நேரம் ஊற வைத்த பின்னர் தண்ணீரை வடித்து விட்டு மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, அரைத்த உளுந்த மாவு, வெண்ணெய், மிளகுத்தூள், பொடியாக நறுக்கிய மஷ்ரூம், தேவைக்கேற்ப உப்பு அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து நீர் விட்டு முறுக்கு மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
அரிசி மாவு - 1 கப்
உளுந்தம் பருப்பு - 150 கிராம்
பொடியாக நறுக்கிய மஷ்ரூம் - 1 கப்
வெண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - சிறிதளவு
மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:
உளுந்தம்பருப்பை நன்றாக கழுவி ஒரு மணி நேரம் ஊற வைத்த பின்னர் தண்ணீரை வடித்து விட்டு மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, அரைத்த உளுந்த மாவு, வெண்ணெய், மிளகுத்தூள், பொடியாக நறுக்கிய மஷ்ரூம், தேவைக்கேற்ப உப்பு அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து நீர் விட்டு முறுக்கு மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
கடாவை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசைந்த மாவை முறுக்கு அச்சில் போட்டு எண்ணெயில் முறுக்காக பொரித்து எடுத்தால் சுவையான சூடான மஷ்ரூம் முறுக்கு தயார்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
இந்துமதி
பப்பாளியில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்களுக்கு நல்ல நிவாரணத்தை வழங்கும். இன்று பப்பாளி இஞ்சி ஜூஸ் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருள்கள் :
பப்பாளி பழம் - 1
எலுமிச்சை பழம் - 1
இஞ்சி - சிறிய துண்டு
ஐஸ் கட்டிகள் - தேவையான அளவு

செய்முறை :
பப்பாளி பழத்தின் தோலை நீக்கி விட்டு, கொட்டையை எடுத்து விட்டு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
எலுமிச்சை பழத்திலிருந்து சாறு எடுத்து கொள்ளவும்.
இஞ்சியை தோல் நீக்கி வைக்கவும்.
மிக்சியில் நறுக்கி பப்பாளி பழம், இஞ்சி, எலுமிச்சை சாறு, தேன், ஐஸ் கட்டிகள் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
பப்பாளி பழம் - 1
எலுமிச்சை பழம் - 1
இஞ்சி - சிறிய துண்டு
ஐஸ் கட்டிகள் - தேவையான அளவு
தேன் - தேவையான அளவு

செய்முறை :
பப்பாளி பழத்தின் தோலை நீக்கி விட்டு, கொட்டையை எடுத்து விட்டு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
எலுமிச்சை பழத்திலிருந்து சாறு எடுத்து கொள்ளவும்.
இஞ்சியை தோல் நீக்கி வைக்கவும்.
மிக்சியில் நறுக்கி பப்பாளி பழம், இஞ்சி, எலுமிச்சை சாறு, தேன், ஐஸ் கட்டிகள் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
சுவையான பப்பாளி இஞ்சி ஜூஸ் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகளுக்கு பேரீச்சம் பழம் மிகவும் உகந்தது. இன்று பேரீச்சம் பழத்தை வைத்து சத்தான சுவையான பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
கொட்டை நீக்கிய பேரீச்சம் பழம் - 20
பால் - 2½ கப்
முந்திரி மற்றும் பாதாம் - 10

செய்முறை :
பேரீச்சம் பழத்தை கழுவி ½ கப் பாலில் ஊற வைக்கவும்.
அரை மணி நேரத்திற்கு பிறகு பழத்தை ஊற வைத்த, பாலை விட்டு மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.
இதே நேரத்தில் 2 கப் பாலை அடிகனமான பாத்திரத்தில் ஊற்றி பாதியாக சுண்டும் அளவிற்கு காய்ச்சிக் கொள்ளவும்.
அரைத்த பேரிச்சை கலவையை காய்ச்சி பாலில் ஊற்றி லேசாக சிறிது நேரம் கொதிக்க விடவும்.
இதே நேரத்தில் 1 தேக்கரண்டி நெய் விட்டு முந்திரி, பாதாம் அல்லது தேங்காய் சீவல்களை சிவக்க வறுத்து பாலில் சேர்க்கவும்.
தேவைப்படுபவர்கள் ஏலக்காய் அல்லது குங்குமப்பூவையும் கூட சிறிது சேர்த்துக் கொள்ளலாம்.
இந்த பாயசத்திற்கு சர்க்கரையோ வெல்லமோ சேர்க்க வேண்டிய அவசியமில்லை.
கொட்டை நீக்கிய பேரீச்சம் பழம் - 20
பால் - 2½ கப்
முந்திரி மற்றும் பாதாம் - 10
நெய் - 1 தேக்கரண்டி

செய்முறை :
பேரீச்சம் பழத்தை கழுவி ½ கப் பாலில் ஊற வைக்கவும்.
அரை மணி நேரத்திற்கு பிறகு பழத்தை ஊற வைத்த, பாலை விட்டு மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.
இதே நேரத்தில் 2 கப் பாலை அடிகனமான பாத்திரத்தில் ஊற்றி பாதியாக சுண்டும் அளவிற்கு காய்ச்சிக் கொள்ளவும்.
அரைத்த பேரிச்சை கலவையை காய்ச்சி பாலில் ஊற்றி லேசாக சிறிது நேரம் கொதிக்க விடவும்.
இதே நேரத்தில் 1 தேக்கரண்டி நெய் விட்டு முந்திரி, பாதாம் அல்லது தேங்காய் சீவல்களை சிவக்க வறுத்து பாலில் சேர்க்கவும்.
தேவைப்படுபவர்கள் ஏலக்காய் அல்லது குங்குமப்பூவையும் கூட சிறிது சேர்த்துக் கொள்ளலாம்.
இந்த பாயசத்திற்கு சர்க்கரையோ வெல்லமோ சேர்க்க வேண்டிய அவசியமில்லை.
சூப்பரான பேரீச்சம்பழ பாயாசம் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது வெந்தயம். இன்று வெந்தயத்தை வைத்து சத்தான சுவையான சுண்டல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
முளைகட்டிய வெந்தயம் - 1 கப்
காய்ந்த மிளகாய் - 3
பொடித்த வெல்லம் - 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய் துருவல் - ஒரு கைப்பிடி அளவு
எண்ணெய், உப்பு - தேவைக்கு
கடுகு, உளுத்தம்பருப்பு - சிறிதளவு

செய்முறை:
முளைகட்டிய வெந்தயத்தை இட்லி தட்டில் வேக வைத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும்.
அதனுடன் வெந்தயம், உப்பு சேர்த்து கிளறவும்.
பின்னர் வெல்லம், தேங்காய் துருவல் தூவி லேசாக கிளறி இறக்கி ருசிக்கவும்.
சத்தான வெந்தய இனிப்பு சுண்டல் ரெடி.
முளைகட்டிய வெந்தயம் - 1 கப்
காய்ந்த மிளகாய் - 3
பொடித்த வெல்லம் - 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய் துருவல் - ஒரு கைப்பிடி அளவு
எண்ணெய், உப்பு - தேவைக்கு
கடுகு, உளுத்தம்பருப்பு - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை:
முளைகட்டிய வெந்தயத்தை இட்லி தட்டில் வேக வைத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும்.
அதனுடன் வெந்தயம், உப்பு சேர்த்து கிளறவும்.
பின்னர் வெல்லம், தேங்காய் துருவல் தூவி லேசாக கிளறி இறக்கி ருசிக்கவும்.
சத்தான வெந்தய இனிப்பு சுண்டல் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
ராஜஸ்தான், குஜராத்தில் மோஹன்தால் ஸ்வீட் மிகவும் பிரபலம். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கடலை மாவு - 2 கப்,
சர்க்கரை - 1 கப்,
நெய் - 1 கப்,
பால் - 1/4 கப்,

செய்முறை
கடலை மாவில் 1/4 கப் நெய் சேர்த்து சிறிது சிறிதாக பால் சேர்த்து அழுத்திப் பிசையவும்.
அதனைச் சல்லடையில் கட்டி இல்லாத அளவிற்கு நன்கு பொடியாக சலிக்கவும். அல்லது மிக்ஸியில் ஒரு ஓட்டு ஓட்டினால் நன்கு பொடியாகி விடும். இனி வாணலியில் மாவைக் கொட்டி சிறிது நெய் சேர்த்து சிறு தீயில் வைத்து கூழ் பதத்திற்கு கிளறி இறக்கி விடவும்.
சர்க்கரையில் 3/4 கப் தண்ணீர் சேர்த்து குங்குமப்பூ போட்டு 2 கம்பி பதம் வந்ததும் ஏலக்காய் சேர்த்து அதனை கடலை மாவு கரைசலில் போட்டு மேலும் நெய் சேர்த்து நன்கு ஒட்டாமல் திரண்டு வந்ததும் நெய் தடவிய சிறிது சதுரமான ட்ரேயில் கொஞ்சம் உயரமாகக் கொட்டவும்.
நன்கு ஆறியதும் வில்லைகளாகப் போடவும்.
டிரேயில் கொட்டும்போதே சீவிய பருப்புகளை (முந்திரி, பாதாம், பிஸ்தா) அலங்கரிக்கவும்.
சூப்பரான மோஹன்தால் ரெடி.
கடலை மாவு - 2 கப்,
சர்க்கரை - 1 கப்,
நெய் - 1 கப்,
பால் - 1/4 கப்,
முந்திரி, பாதாம், பிஸ்தா - சிறிதளவு (அலங்கரிக்க).

செய்முறை
கடலை மாவில் 1/4 கப் நெய் சேர்த்து சிறிது சிறிதாக பால் சேர்த்து அழுத்திப் பிசையவும்.
அதனைச் சல்லடையில் கட்டி இல்லாத அளவிற்கு நன்கு பொடியாக சலிக்கவும். அல்லது மிக்ஸியில் ஒரு ஓட்டு ஓட்டினால் நன்கு பொடியாகி விடும். இனி வாணலியில் மாவைக் கொட்டி சிறிது நெய் சேர்த்து சிறு தீயில் வைத்து கூழ் பதத்திற்கு கிளறி இறக்கி விடவும்.
சர்க்கரையில் 3/4 கப் தண்ணீர் சேர்த்து குங்குமப்பூ போட்டு 2 கம்பி பதம் வந்ததும் ஏலக்காய் சேர்த்து அதனை கடலை மாவு கரைசலில் போட்டு மேலும் நெய் சேர்த்து நன்கு ஒட்டாமல் திரண்டு வந்ததும் நெய் தடவிய சிறிது சதுரமான ட்ரேயில் கொஞ்சம் உயரமாகக் கொட்டவும்.
நன்கு ஆறியதும் வில்லைகளாகப் போடவும்.
டிரேயில் கொட்டும்போதே சீவிய பருப்புகளை (முந்திரி, பாதாம், பிஸ்தா) அலங்கரிக்கவும்.
சூப்பரான மோஹன்தால் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பார்லி, கம்பில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று இந்த இரண்டையும் வைத்து சுவையான சத்தான சுண்டல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பார்லி - ஒரு கப்
கம்பு - கால் கப்
உப்பு - சிறிதளவு
எண்ணெய் - சிறிதளவு
கடுகு - கால் ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன்
தேங்காய் துருவல் - கால் கப்
நெய் - சிறிதளவு
நெய்யில் வறுத்து பொடித்த பாதாம் பொடி - ஒரு டீஸ்பூன்
முந்திரி - ஒரு டீஸ்பூன்
வறுத்துப் பொடிக்க :
தனியா - ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2

செய்முறை :
வெறும் கடாயில் தனியா, காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பை, போட்டு வறுத்து ஆறியதும் மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.
பார்லியை தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற வைத்து வேக வைத்து தண்ணீரை வடித்துக் கொள்ளவும்.
கம்பை வேக வைத்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு போட்டு தாளித்த பின்னர் வெந்த பார்லி, கம்பு, உப்பு, பொடித்த மசாலா பொடி, பாதாம் பொடி, முந்திரி சேர்த்து கிளறி தேங்காய் துருவல் தூவி பரிமாறலாம்.
பார்லி - ஒரு கப்
கம்பு - கால் கப்
உப்பு - சிறிதளவு
எண்ணெய் - சிறிதளவு
கடுகு - கால் ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன்
தேங்காய் துருவல் - கால் கப்
நெய் - சிறிதளவு
நெய்யில் வறுத்து பொடித்த பாதாம் பொடி - ஒரு டீஸ்பூன்
முந்திரி - ஒரு டீஸ்பூன்
வறுத்துப் பொடிக்க :
தனியா - ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
கடலை பருப்பு - 1 டீஸ்பூன்

செய்முறை :
வெறும் கடாயில் தனியா, காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பை, போட்டு வறுத்து ஆறியதும் மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.
பார்லியை தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற வைத்து வேக வைத்து தண்ணீரை வடித்துக் கொள்ளவும்.
கம்பை வேக வைத்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு போட்டு தாளித்த பின்னர் வெந்த பார்லி, கம்பு, உப்பு, பொடித்த மசாலா பொடி, பாதாம் பொடி, முந்திரி சேர்த்து கிளறி தேங்காய் துருவல் தூவி பரிமாறலாம்.
சத்தான சுவையான பார்லி கம்பு சுண்டல் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
தக்காளியில் வைட்டமின் கே, கால்சியம் சத்துக்கள் அதிகமாக உள்ளன. இன்று தக்காளி, கொத்தமல்லி சேர்த்து சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
தக்காளி - 1
வெங்காயம் சிறியது - 1
மிளகு தூள் - ஒரு சிட்டிகை
கொத்தமல்லி தழை - சிறிதளவு

செய்முறை :
தக்காளியில் உள்ள விதையை எடுத்து விட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் நறுக்கிய தக்காளி, வெங்காயம் போட்டு நன்றாக கலக்கவும்.
கடைசியாக உப்பு, மிளகு தூள், கொத்தமல்லி தழை சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.
தக்காளி - 1
வெங்காயம் சிறியது - 1
மிளகு தூள் - ஒரு சிட்டிகை
கொத்தமல்லி தழை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை :
தக்காளியில் உள்ள விதையை எடுத்து விட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் நறுக்கிய தக்காளி, வெங்காயம் போட்டு நன்றாக கலக்கவும்.
கடைசியாக உப்பு, மிளகு தூள், கொத்தமல்லி தழை சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.
சுவையான சத்தான சாலட் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
அவலில் பர்ஃபி செய்தால் அருமையாக இருக்கும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கெட்டி வெள்ளை அவல் - 1 கப்
நெய் - 4 ஸ்பூன்
நாட்டுச் சர்க்கரை - ½ கப்
உப்பு - 1 சிட்டிகை
தேங்காய் (துருவியது) - ½ கப்
ஏலக்காய் தூள் - சிறிதளவு

செய்முறை:
கெட்டி அவலை தண்ணீரில் நான்கு முறை அலசி வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
தண்ணீர் நன்கு வடிந்தபின் வாணலியில் நான்கு ஸ்பூன் நெய் விட்டு அவலைப் போட்டு நிறம் மாறாமல் வறுக்க வேண்டும். ஓரளவு வறுத்த பிறகு அத்துடன் நாட்டுச் சர்க்கரை, ஒரு சிட்டிகை உப்பு மற்றும் தேங்காயத் துருவல், ஏலக்காய் பொடியையும் சேர்த்து வதக்க வேண்டும்.
இந்தக் கலவை நன்றாக ஒன்றுடன் ஒன்று கலந்து வாணலியில் ஒட்டாமல் நெய் பிரிந்து சுருண்டு வரும்பொழுது அடுப்பை அணைத்து விட வேண்டும்.
ஒரு ட்ரேயில் நெய் தடவி அதன் மேல் இந்த அவல் கலவையைக் கொட்டி சமன்படுத்தி ஆறவைக்க வேண்டும்.
முந்திரி அல்லது பாதாமை இடைவெளி விட்டு அந்த பர்ஃபி கலவையின் மேல் செருகி வைக்க வேண்டும்.
கெட்டி வெள்ளை அவல் - 1 கப்
நெய் - 4 ஸ்பூன்
நாட்டுச் சர்க்கரை - ½ கப்
உப்பு - 1 சிட்டிகை
தேங்காய் (துருவியது) - ½ கப்
ஏலக்காய் தூள் - சிறிதளவு
முந்திரி அல்லது பாதாம் - சிறிதளவு

செய்முறை:
கெட்டி அவலை தண்ணீரில் நான்கு முறை அலசி வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
தண்ணீர் நன்கு வடிந்தபின் வாணலியில் நான்கு ஸ்பூன் நெய் விட்டு அவலைப் போட்டு நிறம் மாறாமல் வறுக்க வேண்டும். ஓரளவு வறுத்த பிறகு அத்துடன் நாட்டுச் சர்க்கரை, ஒரு சிட்டிகை உப்பு மற்றும் தேங்காயத் துருவல், ஏலக்காய் பொடியையும் சேர்த்து வதக்க வேண்டும்.
இந்தக் கலவை நன்றாக ஒன்றுடன் ஒன்று கலந்து வாணலியில் ஒட்டாமல் நெய் பிரிந்து சுருண்டு வரும்பொழுது அடுப்பை அணைத்து விட வேண்டும்.
ஒரு ட்ரேயில் நெய் தடவி அதன் மேல் இந்த அவல் கலவையைக் கொட்டி சமன்படுத்தி ஆறவைக்க வேண்டும்.
முந்திரி அல்லது பாதாமை இடைவெளி விட்டு அந்த பர்ஃபி கலவையின் மேல் செருகி வைக்க வேண்டும்.
கலவை வெது வெதுப்பாக இருக்கும் பொழுது டைமண்ட் அல்லது சதுர வடிவில் அறுத்து எடுத்தால் சுவையான நாட்டுச் சர்க்கரை அவல் பர்ஃபி தயார்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
ஓட்ஸ் உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகிறது. இந்த ஓட்ஸ் சூப்பானது மாலையில் மட்டுமின்றி, காலையிலும் குடிக்கலாம். இப்போது அந்த ஓட்ஸ் சூப்பை எப்படி செய்வதென்று பார்ப்போம்....
தேவையான பொருட்கள்:
ஓட்ஸ் - 1/4 கப்
தண்ணீர் - 1/2 கப்
பால் - 2 கப்
ஆலிவ் ஆயில் - 1 டீஸ்பூன்
கேரட் - சிறியது 1
பீன்ஸ் - 1,
கோஸ் - சிறிய துண்டு
குடை மிளகாய் - பாதி
பூண்டு - 2 டீஸ்பூன்
வெங்காயம் - சிறியது 1
உலர்ந்த கற்பூரவள்ளி இலை - 1/2 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1 சிட்டிகை
கொத்தமல்லி - சிறிது

செய்முறை:
வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஆலிவ் ஆயில் ஊற்றி காய்ந்ததும், பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் வெங்காயத்தைப் போட்டு சிறிது நேரம் வதக்க வேண்டும்.
பின்னர் அதில் பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், கோஸ், குடைமிளகாய் சேர்த்து, பச்சை வாசனை போக நன்கு வதக்கி, பின் ஓட்ஸ் சேர்த்து 3 நிமிடம் வதக்க வேண்டும்.
பின்பு அதில் தண்ணீர் ஊற்றி, ஓட்ஸ் நன்கு வேகும் வரை அடுப்பில் வைத்து மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.
அப்போது ஓட்ஸில் உள்ள நீரானது முற்றிலும் வற்றியதும், அதில் பால் சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும்.
ஓட்ஸ் - 1/4 கப்
தண்ணீர் - 1/2 கப்
பால் - 2 கப்
ஆலிவ் ஆயில் - 1 டீஸ்பூன்
கேரட் - சிறியது 1
பீன்ஸ் - 1,
கோஸ் - சிறிய துண்டு
குடை மிளகாய் - பாதி
பூண்டு - 2 டீஸ்பூன்
வெங்காயம் - சிறியது 1
உலர்ந்த கற்பூரவள்ளி இலை - 1/2 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1 சிட்டிகை
கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஆலிவ் ஆயில் ஊற்றி காய்ந்ததும், பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் வெங்காயத்தைப் போட்டு சிறிது நேரம் வதக்க வேண்டும்.
பின்னர் அதில் பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், கோஸ், குடைமிளகாய் சேர்த்து, பச்சை வாசனை போக நன்கு வதக்கி, பின் ஓட்ஸ் சேர்த்து 3 நிமிடம் வதக்க வேண்டும்.
பின்பு அதில் தண்ணீர் ஊற்றி, ஓட்ஸ் நன்கு வேகும் வரை அடுப்பில் வைத்து மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.
அப்போது ஓட்ஸில் உள்ள நீரானது முற்றிலும் வற்றியதும், அதில் பால் சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும்.
கடைசியாக தேவையான அளவு உப்பு, உலர்ந்த கற்பூரவள்ளி இலை, மிளகுத் தூள் மற்றும் கொத்தமல்லி தூவி ஒருமுறை கிளறி இறக்கினால், ஓட்ஸ் சூப் ரெடி!!!
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.






