என் மலர்tooltip icon

    சமையல்

    மாலை நேரத்தில் டீ, காபியுடன் சூடாக சாப்பிட அருமையாக இருக்கும் மரவள்ளிக்கிழங்கு பருப்பு வடை. இன்று இந்த வடையை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மரவள்ளிக்கிழங்கு - 200 கிராம்
    ஊறவைத்த கடலைப்பருப்பு - 150 கிராம்
    பச்சரிசி மாவு - ஒரு கைப்பிடி அளவு
    இஞ்சி - சிறிய துண்டு
    பூண்டு - 10 பல்
    சோம்பு - ஒரு டீஸ்பூன்
    பட்டை - சிறு துண்டு
    கிராம்பு - 1
    பச்சை மிளகாய் - 5
    காய்ந்த மிளகாய் - 4
    புதினா - ஒரு கைப்பிடி அளவு
    வெங்காயம் - 100 கிராம்
    உப்பு - தேவைக்கேற்ப
    எண்ணெய் - தேவையான அளவு

    மரவள்ளிக்கிழங்கு பருப்பு வடை

    செய்முறை:


    மரவள்ளிக்கிழங்கைத் தோல் சீவி துருவிக் கொள்ளவும்.

    புதினா, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    இஞ்சியை தோல் நீக்கி வைக்கவும்.

    ஊறவைத்த பருப்புடன் இஞ்சி, பூண்டு, சோம்பு, பட்டை, கிராம்பு, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.

    பின்பு அதில் துருவிய மரவள்ளிக்கிழங்கு, நறுக்கிய வெங்காயம், புதினா, அரிசி மாவு சேர்த்துப் பிசையவும்.

    வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் மாவைச் சிறு சிறு வடைகளாகத் தட்டி போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

    மரவள்ளிக்கிழங்கு மசால் பருப்பு வடை தயார்.

    குச்சிக்கிழங்கு, குச்சிவள்ளிக்கிழங்கு, மரச்சினிக்கிழங்கு என்றும் மரவள்ளிக்கிழங்கு அழைக்கப்படுகிறது.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இதில் ஜூஸில் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் வைட்டமின் ஏ, சி,இ நிறைந்துள்ளது. இது சரும அழகுக்கும் தேவையானது. இந்த ஜூஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    ஆரஞ்சு பழம் . 3
    நறுக்கிய கீரை - 1 கப்
    முட்டை கோஸ் -   100 கிராம்
    வெள்ளரிக்காய் - 1
    ஆப்பிள் - 1

    கிரீன் வைட்டமின் ஜூஸ்

    செய்முறை

    முட்டை கோஸ், வெள்ளரிக்காய், ஆப்பிளை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    ஆரஞ்சு பழங்களை தோல் நீக்கி பிழிந்து ஜூஸாக்கி கொள்ளவும்.

    மிக்சியில் ஆரஞ்சு ஜூஸை ஊற்றி அதில் கீரை, முட்டைக்கோஸை போட்டு விழுதாக அரைத்து கொள்ளவும்.

    பின்னர் அதனுடன் ஆப்பிள், வெள்ளரிக்காயை கொட்டி மீண்டும் அரைக்கவும்.

    ஜூஸ் பதத்துக்கு வந்ததும் டம்ளரில் ஊற்றி ருசிக்கலாம்.

    இதில் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் வைட்டமின் ஏ, சி,இ நிறைந்துள்ளது. இது சரும அழகுக்கும் தேவையானது.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கருவாட்டில் தொக்கு, வறுவல், குழம்பு செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வித்தியாசமான சுவையில் கருவாடு வைத்து சுவையான பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாசுமதி அரிசி - அரை கிலோ
    வஞ்சிரம் கருவாடு - அரை கிலோ
    வெங்காயம் - அரை கிலோ
    பழுத்த தக்காளி - அரை கிலோ
    பழுத்த சிவந்த பச்சை மிளகாய் - ஆறு
    காஷ்மீரி சில்லி - இரண்டு தேக்கரண்டி
    தயிர் - ஒரு கோப்பை
    கொத்துமல்லித்தழை - ஒரு கொத்து
    இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
    புதினா - ஒரு கொத்து
    பட்டை, ஏலம், கிராம்பு - தலா இரண்டு
    பிரியாணி இலை - இரண்டு
    உப்பு தூள் - தேவையான அளவு
    எண்ணெய் - 200 மில்லி
    நெய் - 50 மில்லி
    எலுமிச்சை - அரை பழம்

    கருவாட்டு பிரியாணி

    செய்முறை :

    அரிசியை லேசாக களைந்து ஊற வைக்கவும்.

    கருவாட்டை நன்றாக கழுவி எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து வைத்து கொள்ளவும்.

    தக்காளி, வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

    வாயகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஈரம் போக காய வைத்து கருவாடு பொரித்த எண்ணெய், நெய் ஊற்றி அதில் பட்டை, ஏலம், கிராம்பு, பிரியாணி இலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.

    வெங்காயம் வதக்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கி மிளகாய் தூள், பழுத்த பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

    அடுத்து அதில் புதினா, கொத்தமல்லி, தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கிய பின் தயிர் சேர்க்கவும்.

    அடுத்து உப்பு, வறுத்த கருவாட்டை போட்டு வேக விடவும்.

    அடுத்து அதில் ஒரு டம்ளர் அரிசிக்கு ஒன்னேகால் வீதம் தண்ணீர் அளந்து ஊற்றவும்.

    தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் அரிசியை களைந்து போட்டு கொதிக்கவிட்டு கடைசியாக சிறிது நெய், கொத்தமல்லி, லெமன் பிழிந்து, பாதி அளவு வற்றும் போது அடுப்பின் மேல் தம் போடும் கருவியை வைத்து சாப்பாடு சட்டியின் மேல் கனமான பாத்திரத்தை வைத்து 20 நிமிடம் தம்மில் விடவும்.

    பிறகு லேசாக மேலிருந்து கீழாக சாதம் குழையாமல் கிளறி விடவும்.

    சுவையான கருவாட்டு பிரியாணி ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.  
    பாலக்கீரை சுவையும் ஆரோக்கியமும் நிறைந்தது. இதில் பொதுவான பருப்புக்கூட்டு மசியல் என செய்வோம். ஆனால் பாலக் கீரையில் சுவையான சாம்பாரும் செய்ய முடியும்.
    தேவையான பொருட்கள் :

    பாலக் கீரை -  1 கட்டு
    வேகவைத்த துவரம் பருப்பு -  1 கப்
    சின்ன வெங்காயம் -  1 டேபிள்ஸ்பூன்
    தக்காளி -  1
    சாம்பார் பொடி -  1 டேபிள்ஸ்பூன்
    மஞ்சள் தூள் -  1 டீஸ்பூன்
    புளி -  1 எலுமிச்சை அளவு
    கடுகு -  1 டீஸ்பூன்
    உளுந்து -  1 டீஸ்பூன்
    சீரகம் -  1 டீஸ்பூன்
    வெந்தயம் -  1 டீஸ்பூன்
    பெருங்காயத்தூள் -  1/2 டீஸ்பூன்
    கொத்துமல்லித்தழை -  சிறிது

    பாலக்கீரை சாம்பார்

    செய்முறை. :

    கீரையை நன்றாக சுத்தம் செய்து வைத்து கொள்ளவும்.

    தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சிறிது ஊற்றி கீரையை வேகவைத்து கொள்ளவும்.

    நன்றாக கீரை வெந்ததும் அதை மத்தால் மசித்து அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து நன்றாக வேகவைத்து கொள்ளவும்.

    பிறகு மஞ்சள் தூள் மற்றும் சாம்பார் தூள் சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.

    புளியை கரைத்து வடிகட்டி ஊற்றவும்.

    வேகவைத்த துவரம் பருப்பை சேர்த்து நன்றாக கலக்கவும்.

    உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து ஐந்து நிமிடம் குறைந்த தீயில் மூடி வைத்து விடவும்.

    இறுதியில் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், வெந்தயம் சேர்த்து தாளித்து கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

    சூடான சாதத்தில் சிறிது நெய் சேர்த்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு வெரைட்டி சாதம் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று மீல்மேக்கர் சேர்த்து பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்
     
    பாஸ்மதி அரிசி - 1 கப்
    மீல்மேக்கர் - 1 கப்
    உப்பு - தேவைக்கு
    வெங்காயம் - 1
    தக்காளி - 1
    பச்சை மிளகாய் - 2
    மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்
    சீரகத்தூள் - 1/4 டீஸ்பூன்
    இஞ்சி-பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்
    பட்டை தூள் கிராம்புத் தூள் சோம்பு தூள் - தலா 1/4 டீஸ்பூன்
    பிரிஞ்சி இலை - சிறிது
    புதினா கொத்தமல்லித்தழை - 1 கைப்பிடி
    நெய் + எண்ணெய் - 2 டேபிஸ்பூன்.

    மீல்மேக்கர் பிரியாணி

    செய்முறை

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
     
    பாஸ்மதி அரிசியை நன்றாக கழுவி ஊறவைக்கவும்.

    கொதிக்கும் தண்ணீரில் மீல்மேக்கர் உப்பு சேர்த்து சிறிது நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் வெறும் தண்ணீரில் போட்டு பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.

    குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் + நெய் ஊற்றி சூடானது பட்டை தூள் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    அடுத்து தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் புதினா கொத்தமல்லித்தழை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

    நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் உப்பு மீல்மேக்கர் அரிசியையும் சேர்த்து கொதித்தவுடன் குக்கரை மூடி 1 விசில் அல்லது 3 நிமிடத்தில் நிறுத்தவும். விசில் அடங்கியதும் குக்கர் மூடியை திறந்து கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

    சூப்பரான மீல்மேக்கர் பிரியாணி ரெடி.

    வெங்காய தயிர் பச்சடியுடன் பரிமாறவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

    நோய் எதிர்ப்பு தன்மையை அதிகப்படுத்தும் பழச்சாறு வகைகளை வீட்டில் தயாரித்து பருகிவரலாம். அந்த வகையில் இன்று இஞ்சி- மஞ்சள் ஜூஸ் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    இஞ்சி  - 100 கிராம்
    மஞ்சள் - தேவைக்கு
    எலுமிச்சை பழம் - 2
    மிளகு தூள் - கால் டீஸ்பூன்

    இஞ்சி- மஞ்சள் ஜூஸ் தேவையான பொருட்கள்

    செய்முறை

    இஞ்சி மற்றும் மஞ்சளை நன்றாக கழுவிக்கொள்ளவும்.

    பின்னர் இரண்டையும் தனித்தனியாக மிக்சியில்  போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.

    எலுமிச்சை பழத்தையும் சாறு பிழிந்து கொள்ளவும்.

    பின்னர் இஞ்சி, மஞ்சள் விழுதை எலுமிச்சை பழ சாறுடன் கலக்கவும்.

    அதனுடன் மிளகு தூளை சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.

    காலையில் வெறும் வயிற்றில் 60 முதல் 80 மில்லி லிட்டர் பருகலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

    இந்த கம்பு லட்டை சிறியவர் முதல் பெரியோர் வரை அனைவரும் சாப்பிடலாம். இன்று இந்த லட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    கம்பு மாவு - 2 கப்
    வெல்லம் - 2 கப்
    பாதாம் - 10
    ஏலக்காய் - 10
    பிஸ்தா - 10
    முந்திரி - 10
    திராட்சை - 10
    எண்ணெய் - தேவையான அளவு
    தண்ணீர்- தேவையான அளவு

    கம்பு லட்டு

    செய்முறை :

    ஒரு பாத்திரத்தில் கம்பு மாவு போட்டு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

    கொழுக்கட்டை வடிவில் அந்த மாவை பிடித்துக் கொள்ள வேண்டும்.

    பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி இந்த கொழுக்கட்டையை பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

    அது ஆறியவுடன் மிக்ஸியில் மாவாக பொடித்துக் கொள்ள வேண்டும்.

    மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி முந்திரி, திராட்சை, பாதாம், பிஸ்தா அனைத்தையும் வறுத்து தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

    மிக்ஸியில் பாதாம், பிஸ்தா, முந்திரி, ஏலக்காய் அனைத்தையும் பொடித்துக் கொள்ள வேண்டும்.

    அதே கடாயில் வெல்லம் சேர்த்து பாகு எடுத்து அரைத்த மாவு, பொடித்த பாதாம், பிஸ்தா, முந்திரி, திராட்சை, ஏலக்காய் அனைத்தையும் சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.

    கெட்டி பதத்திற்கு வந்தவுடன் கையில் சூடு பொறுக்கும் வரை லட்டுகளாக பிடித்து எடுத்தால் சூடான சுவையான கம்பு லட்டு தயார்.

    B. இந்துமதி 

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சிவப்பரிசி, தேங்காய் பால், பூண்டு, சுக்கு சேர்த்து செய்யும் இந்த கஞ்சி வயிற்றுப்புண்ணை ஆற்றும். இன்று இந்த கஞ்சி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சிவப்பு அரிசி - ஒரு கப்
    முதல் தேங்காய்ப் பால் - அரை கப்
    இரண்டாம் மூன்றாம் தேங்காய்ப் பால் - தலா ஒரு கப்
    பூண்டு - 15 பல்
    சீரகம் வெந்தயம் - தலா அரை டீஸ்பூன்
    சுக்கு - சிறிய துண்டு
    உப்பு - தேவையான அளவு.

     சிவப்பரிசி தேங்காய்ப் பால் பூண்டு கஞ்சி

    செய்முறை:

    சிவப்பரிசியை 2 மணி நேரம் ஊற வைக்கவும்.

    பிறகு குக்கரில் சிவப்பு அரிசியுடன் இரண்டாம் மூன்றாம் தேங்காய்ப் பால் ஒரு டம்ளர், தண்ணீர், பூண்டு, சீரகம், வெந்தயம், சுக்கு, உப்பு சேர்த்து நன்கு வேகவிட்டு இறக்கவும்.

    பிறகு அதில் முதல் தேங்காய்ப்பால் சேர்த்துப் பரிமாறவும்.

    வாய்ப்புண் வயிற்றுப்புண் ஆற்றும் சத்தான கஞ்சி இது.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சூடான சாதம், தோசை, இடியாப்பத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த திருநெல்வேலி சொதி. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாசிப்பருப்பு - 100 கிராம்
    நறுக்கிய பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு - 1 கப்
    முருங்கைக்காய் - 1
    சாம்பார் வெங்காயம் - 100 கிராம்
    தேங்காய் துருவல் - 1 கப்
    மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
    இஞ்சி - 1 துண்டு
    பூண்டு - 6 பல்
    பச்சை மிளகாய் - 5
    சீரகம் - 1 டீஸ்பூன்
    கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை - சிறிதளவு
    எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன்
    நெய், எண்ணெய், உப்பு - தேவைக்கு

    திருநெல்வேலி சொதி

    செய்முறை:

    தேங்காய் துருவலை மிக்சியில் அரைத்து இரண்டு தடவையாக பால் எடுத்துக்கொள்ளவும்.

    வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி, பூண்டு, காய்கறிகள், முருங்கைக்காய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாசிப்பருப்புடன் மஞ்சள் தூள் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி வேகவைத்துக்கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை கொட்டி வதக்கவும்.

    அதனுடன் இரண்டாவதாக எடுத்த தேங்காய் பாலை ஊற்றவும்.

    அடுத்து அதில் பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு, முருங்கைக்காய் போன்ற காய்கறிகளையும் சேர்த்து வேகவைக்கவும்.

    நன்கு வெந்ததும் பாசிப்பருப்பை கொட்டி கொதிக்கவிடவும்.

    கொதித்து வந்ததும் முதலில் எடுத்த தேங்காய் பாலை சேர்த்து கொதிக்கவிடவும்.

    நன்கு கொதித்து நுரை பொங்கி வந்ததும் இறக்கியதும் எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து கலக்கவும்.

    பின்னர் தனியாக வாணலியில் நெய் ஊற்றி அது உருகியதும் சீரகம், கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து பரிமாறவும்.

    இதனை புதிதாக திருமணமான மாப்பிள்ளைக்கு விருந்துடன் சேர்த்து பரிமாறுவார்கள். சாதத்தில் கலந்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    முருங்கை இலையினுடைய இலையை உலர்த்தி, பொடி செய்து அதை கிரீன் டீ போல, டீ போட்டுக் குடித்துக் கொள்ளலாம். இந்த டீயை தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
    முருங்கை இலையினுடைய இலையை உலர்த்தி, பொடி செய்து அதை கிரீன் டீ போல, டீ போட்டுக் குடித்துக் கொள்ளலாம். ஆனால் இந்த பவுடரை ஒரு நாளைக்கு அரை அல்லது ஒரு ஸ்பூன் அளவுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

    தேவையான பொருட்கள்


    முருங்கைக்கீரை பொடி - ஒரு தேக்கரண்டி ,
    கிரீன் டீ பொடி - ஒரு தேக்கரண்டி ,
    புதினா இலைகள் - 4,
    எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி,
    வெல்லம் - 1  தேக்கரண்டி.

    முருங்கை டீ

    செய்முறை

    ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

    நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் முருங்கைக்கீரை பொடி, கிரீன் டீ பொடி, புதினா இலை, வெல்லம் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.

    பின்னர் இந்த டீயை வடிகட்டி எலுமிச்சை சாறு கலந்து பருகவும்.

    சூப்பரான முருங்கை டீ ரெடி.

    குறிப்பு: டயட்டில் இருப்பவர்கள், மருத்துவரின் ஆலோசனைப்படி குடிக்கலாம். கர்ப்பிணிகள் இதனை குடிப்பதை தவிர்க்க வேண்டும். நீரிழிவு, இரத்த அழுத்தம், தைராய்டு போன்ற உடல் உபாதைகளுக்கு மருந்துகளை சாப்பிட்டு வந்தால் மருத்துவரின் ஆலோசனைப்படி குடித்து வரலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நொறுக்குத்தீனிக்கு மாற்றாக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த புட்டை வீட்டில் தயாரித்து சுவைக்கலாம். இன்று சிவப்பரிசியில் புட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சிவப்பு புட்டரிசி மாவு - 1 கப்
    சர்க்கரை - தேவையான அளவு
    தேங்காய் துருவல் - கால் கப்
    ஏலக்காய்தூள் - அரை டீஸ்பூன்
    நெய் - சிறிதளவு

    சிவப்பரிசி இனிப்பு புட்டு

    செய்முறை:

    சிவப்பு புட்டரிசி மாவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து அதனுடன் ஏலக்காய் தூளையும் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

    பின்னர் அதனுடன் நெய் சேர்த்து கிளறவும்.

    புட்டு குழாயில் மாவு கலவை, சிறிதளவு சர்க்கரை, தேங்காய் துருவல் ஆகிய மூன்றையும் வரிசையாக போட்டு வேக வைத்து இறக்கவும்.

    சுவையான சிவப்பரிசி இனிப்பு புட்டு தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    அத்திக்காய் பருப்பு கூட்டு சாதம், தோசை, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    அத்திக்காய் - 1 கப்
    பயத்தம் பருப்பு - 1/4 கப்
    தக்காளி - 2
    முழு பூண்டு - 1
    வெங்காயம் - 2
    பச்சைமிளகாய் - 4
    உப்பு எண்ணெய் - தேவையான அளவு.

    அத்திக்காய் பருப்பு கூட்டு

    செய்முறை

    அத்திக்காயை இடித்து விதைகளை நீக்கி கழுவி நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

    வெங்காயம், ப.மிளகாய், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரில் எண்ணெயை காயவைத்து நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் இடித்த பூண்டு, நறுக்கிய பச்சைமிளகாய், உப்பு சேர்த்து வதக்கவும்

    பின்பு அதில் பயத்தம்பருப்பு, அத்திக்காய் சேர்த்து வதக்கி 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 2 விசில் வரும்வரை வேக விட்டு இறக்கவும்.

    விசில் அடங்கியதும் அத்திக்காய் பொரியலை சாதத்துடன் பரிமாறவும்.

    சூப்பரான அத்திக்காய் பருப்பு கூட்டு ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×