என் மலர்tooltip icon

    சமையல்

    மதியம் செய்த சாதம் மீந்து விட்டால் கவலைப்படாதீங்க. அந்த சாதத்தில் சூப்பரான ஸ்நாக்ஸ் செய்யலாம். இன்று மீதமான சாதத்தில் சூப்பரான கட்லெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    அரிசி சாதம் - 1 கப்.
    உருளைக்கிழங்கு - 1
    மிக்ஸ்டு வெஜிடேபிள் (பீன்ஸ், கேரட், குடைமிளகாய்) - 1 கப் (பொடியாக நறுக்கியது).
    வெங்காயம் - 1
    இஞ்சி - 2 டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - 1
    மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்.
    கொத்தமல்லி - சிறிது.
    உப்பு - தேவையான அளவு.
    மஞ்சள் தூள் - 1 சிட்டிகை.
    சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்.
    மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்.
    சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்.
    கடலை மாவு - 3 டேபிள் ஸ்பூன்.
    எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.

    செய்முறை:

    உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.

    வெங்காயம், இஞ்சி, கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தவிர அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து, கையால் நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு தட்டில் பிசைந்து வைத்துள்ளதை கட்லெட் வடிவில் தட்டி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தட்டி வைத்துள்ள கட்லெட்டுகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், அரிசி சாத கட்லெட்ரெடி!!!
    தோசை, நாண், சப்பாத்தி, சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும் இந்த கொத்தமல்லி பருப்பு கூட்டு. இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    கொத்தமல்லி - 1 கப்,
    வெங்காயம் - 2,
    உப்பு - தேவையான அளவு,
    எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்,
    வேக வைத்த துவரம் பருப்பு - 1/4 கப்,
    கடுகு - 1 டீஸ்பூன்,
    உளுந்து - 1 டீஸ்பூன்.

    அரைக்க...

    தேங்காய்த் துருவல் - 1/4 கப்,
    சீரகம் - 1 டீஸ்பூன்,
    பச்சை மிளகாய் - 2.

    செய்முறை

    கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளித்த பின்னா வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் கொத்தமல்லி, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

    வதங்கிய பிறகு வேக வைத்த பருப்பு சேர்க்கவும்.

    அரைக்க கொடுத்த பொருட்களை நன்கு அரைத்து அதை கொத்தமல்லி கலவையில் சேர்த்து, தேவைக்கேற்ப தண்ணீர் சேர்க்கவும்.

    நன்கு கொதித்த பிறகு அடுப்பை அணைக்கவும்.

    சூடான சாதத்துடன் பறிமாறவும்.
    சேமியாவில் எப்போது உப்புமா, கிச்சடி செய்து அலுத்து விட்டதா. இன்று முட்டை, சேமியா சேர்த்து சூப்பரான பிரியாணி செய்யலாம். இந்த ரெசிபியை செய்வது மிகவும் சுலபம்.
    தேவையான பொருட்கள்:

    சேமியா - 1 கப்
    நெய் - 3 டீஸ்பூன்
    பட்டை - 2
    வெங்காயம் - 1
    தக்காளி - 1
    முட்டை - 3
    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
    எண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு
    கொத்தமல்லி - தேவையான அளவு

    செய்முறை:

    கொத்தமல்லி, வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சேமியாவை நெய் விட்டு வறுத்து கொள்ள வேண்டும்.

    அதே கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, வெங்காயம், தக்காளி போட்டு நன்கு வதக்கி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கி பின்பு முட்டையை உடைத்து ஊற்ற வேண்டும்.

    இதில் 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவேண்டும். கொதித்த பிறகு, சேமியாவை சேர்க்க வேண்டும்.

    நன்கு வெந்தபிறகு கொத்தமல்லி தூவி இறக்கவும்.

    சுவையான சேமியா முட்டை பிரியாணிதயார்.
    கொத்தமல்லியில் உள்ள கால்சியம், இரும்பு உள்ளிட்ட சத்துக்கள் இணைந்து செயலாற்றும்போது, ரத்தக் குழாய்களில் உள்ள அழுத்தம் நீங்கி, ஓய்வு பெறுகிறது. இதன்மூலம், இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருப்பதுடன் மாரடைப்பு, இதய நோய்க்கான வாய்ப்பும் குறைகிறது.
    தேவையான பொருட்கள்

    இட்லி மாவு - 2 கப்,
    எண்ணெய் - சிறிது.

    அரைக்க...

    கொத்தமல்லி - 3/4 கப்,
    பச்சை மிளகாய் - 2,
    இஞ்சி - 1/2
    இஞ்ச் துண்டு, உப்பு - தேவையான அளவு.

    செய்முறை

    அரைக்க வேண்டிய பொருட்களை அரைத்து இட்லி மாவுடன் சேர்த்து நன்கு கலக்கவும்.

    இட்லி  தட்டில் எண்ணெய் தடவி, தேவையான அளவு இட்லி மாவை ஊற்றி 10 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.

    சூடாக சாம்பாருடன் பரிமாறவும்.
    ஓட்டல் சுவையில் வீட்டில் ருசியான உணவு கிடைத்தால் யாருக்குத்தான் பிடிக்காது. ஹரியாலி சிக்கன் எனப்பெயரிடப்பட்டுள்ள அந்த உணவை எப்படி சமைப்பது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    சிக்கன் - 1 கிலோ
    கொத்தமல்லி -  1 கப்
    புதினா - 1 கப்
    பச்சை மிளகாய் - 3
    வறுத்த வெங்காயம் - 4
    முழு முந்திரி - 10
    தயிர் - 200 மில்லி
    இஞ்சி, பூண்டு விழுது - 3 டீஸ்பூன்
    தனியா தூள் - 2 டீஸ்பூன்
    கரம்மசாலா - 1 டீஸ்பூன்
    சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
    மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
    எண்ணெய் - 4 தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    சுத்தம் செய்த சிக்கனை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் தயிர், இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

    கொத்தமல்லி, புதினா, ப.மிளகாய், வறுத்த வெங்காயம், முந்திரியை சேர்த்து மிக்சியில் நன்றாக அரைத்து கொள்ளவும்.

    பிறகு ஊறவைத்த சிக்கனுடன் சேர்த்து ஒரு மணிநேரம் ஊறவைக்க வேண்டும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் சிக்கனை சேர்த்து 5 நிமிடம் அதிக தீயில் வைத்து சமைக்கவும்.

    ஒரு கொதி வந்ததும் மிதமான தீயில் 10 நிமிடம் வைக்கவும்.

    பிறகு தனியா தூள், சீரகத்தூள, கரம் மசாலா, உப்பு சேர்த்து வாணலியை மூடி 15 நிமிடம் குறைந்த தீயில் வைத்து வேக விடவும். கடைசியில் மிளகுத்தூள் சேர்த்து 5 நிமிடம் குறைவான தீயில் வைத்து இறக்கினால் சுவையான ஹரியாலி சிக்கன் தயார்.

    இதை சப்பாத்தி, நாண், புலாவ் மற்றும் ஜீரா ரைஸ் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.
    தினமும் சிறிதளவு கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் அனைத்து விதமான கூந்தல் பிரச்சனைகளும் தீரும். இன்று கறிவேப்பிலையில் சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    கறிவேப்பிலை - 2 கப்
    மிளகு - 2 ஸ்பூன்
    சீரகம் - 2 ஸ்பூன்
    வெங்காயம் - 2
    தக்காளி - 2
    பூண்டு - 4 பல்
    சர்க்கரை - 1 டீஸ்பூன்
    வெண்ணெய் - 6 டீஸ்பூன்
    எண்ணெய் - 2 டீஸ்பூன்
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியில் 2 டீஸ்பூன் வெண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகு,  சீரகம், கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளித்து ஆறவிடவும்.

    நன்கு ஆறியதும் அவற்றை மிக்சியில் போட்டு நைசாக பொடித்து கொள்ளவும்.

    மற்றொரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் வெங்காயம், தக்காளி, பூண்டை போட்டு வதக்கி ஆறியதும் மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

    அரைத்த விழுது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் விட்டு அதனுடன் பொடித்த பொடி, சர்க்கரை, மீதமுள்ள வெண்ணெய் ஆகியவற்றை சேர்த்து கொதித்ததும் இறக்கி வடிகட்டி கொத்தமல்லித்தழை தூவி பரிமாறினால் சுவையான கறிவேப்பிலை சூப் ரெடி.
    குழந்தைகளுக்கு குக்கீஸ் என்றால் மிகவும் பிடிக்கும். கடைகளில் வாங்கும் குக்கீஸ்களை வீட்டிலேயே எளிய முறையில் செய்ய முடியும். இன்று சாக்கோ சிப்ஸ் குக்கீஸ் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    மைதா மாவு - 65 கிராம்
    ஐசிங் சுகர் - 30 கிராம்
    பட்டர் ஜி.எஸ்.எம் -  30 கிராம்
    உப்பில்லாத வெண்ணெய் - 20 கிராம்
    பால் பவுடர் - 5 கிராம்
    வெனிலா எசென்ஸ் - 5 மில்லி
    சாக்கோ சிப்ஸ் - 10 கிராம்
    கோகோ பவுடர் - 2.5 கிராம் (அ) அரை டீஸ்பூன்
    பேக்கிங் பவுடர் - 2 கிராம்

    அலங்கரிக்க:

    சாக்கோ சிப்ஸ் - சிறிதளவு

    செய்முறை:

    அவனை 150 டிகிரி செல்ஷியஸுக்கு ப்ரீஹீட் செய்யவும்.

    மைதா மாவைச் சலிக்கவும்.

    ஜி.எஸ்.எம்மை நன்கு அடிக்கவும்.

    அதனுடன் வெண்ணெய் சேர்த்துப் பஞ்சு போல் மென்மையாக வரும் வரை அடிக்கவும்.

    பிறகு ஐசிங் சுகர் சேர்த்துக் கலக்கவும்.

    அதனுடன் மைதா மாவு, பால் பவுடர் சேர்த்து மென்மையான, பிசுபிசுப்பான கலவையாக ஆக்கவும்.

    இதில் வெனிலா எசென்ஸ், கோகோ பவுடர், சாக்கோ சிப்ஸ் சேர்த்துக் கலக்கவும்.

    மாவுக் கலவையை 5 - 7 கிராம் எடையுள்ள சிறிய உருண்டைகளாக்கி வெண்ணெய் தடவிய பேக்கிங் ட்ரேயில் அடுக்கி மேலே சிறிதளவு சாக்கோ சிப்ஸ் தூவவும்.

    இந்த ட்ரேயை ப்ரீஹீட் செய்த அவனுள் வைத்து 15 நிமிடங்கள் வரை `பேக்’ செய்து எடுக்கவும்.

    ஆறிய பிறகு நன்கு மொறுமொறுப்பாக இருக்கும்.
    கறிவேப்பிலையை உணவில் அடிக்கடி சேர்த்து உண்பவர்களுக்கு இதய தசைகள் நன்கு வலுப்பெற்று, இதயம் சம்பந்தமான நோய்கள் உண்டாகாமல் காக்கிறது.
    சிறிதளவு அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு உடலின் உள்ளுறுப்புகளில் எத்தகைய புற்று நோய்களும் ஏற்படாமல் தடுக்கிறது. கறிவேப்பிலை இலை பொடியை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு வெகு விரைவிலேயே நீரிழிவு கட்டுப்படும். தினமும் கறிவேப்பிலைகளை பச்சையாகவோ அல்லது பக்குவம் செய்தோ சாப்பிடுவதால் கல்லீரல் சம்பந்தமான பிரச்சனைகளை போக்கலாம்.

    தேவையான பொருட்கள்:
     
    கறிவேப்பிலை - 1 கப்
    எண்ணெய் - 1 தேக்கரண்டி
    கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
    உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
    வர மிளகாய் - 5
    பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி
    புளி - சிறிய துண்டு
    உப்பு - தேவையான அளவு

    தாளிக்க :
     
    எண்ணெய் - 1 தேக்கரண்டி
    கடுகு - 1/2 தேக்கரண்டி
    உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
     
    செய்முறை:
     
    வாணலியில் 1 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் கடலைப்பருப்பை சேர்த்து பொன்நிறமாக வறுக்கவும்.

    பின்னர் உளுத்தம் பருப்பு சேர்த்து லேசாக வறுக்கவும்.

    அதனுடன் காய்ந்த மிளகாய் சேர்த்து சில நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் வறுக்கவும்.
     
    பின்னர் நன்கு கழுவிய கறிவேப்பிலையை சேர்த்து வறுக்கவும்.

    அதனுடன் பெருங்காயத்தூள் சேர்த்து கலக்கவும்.

    சிறிய துண்டு புளி கலந்து  அடுப்பை அணைத்து விடவும்.
     
    ஆறவைத்த கலவையை உப்பு சேர்த்து  மிக்ஸியில் மைய அரைக்கவும், மிகவும் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.

    ஒரு வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு தாளித்து துவையலுடன் கலந்து இட்லி, தோசை, அல்லது சாதத்துடன்  பரிமாறலாம்.
    வேர்க்கடலையில் புரதமும், இரும்புச்சத்தும் மிக அதிகம். இரத்த சோகை வராது. வேர்க்கடலையில் இன்று சூப்பரான ஸ்நாக்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வறுத்த வேர்க்கடலை - 200 கிராம்
    வெல்லம் -  200 கிராம்
    ஏலக்காய்த்தூள் - சிறிதளவு

    செய்முறை:

    வேர்க்கடலையை நன்றாக வறுத்து தோல் நீக்கி இரண்டாக உடைத்து கொள்ளவும்.

    வெல்லத்தை சிறிது நீர் சேர்த்து கரைத்து வடிகட்டி, உருட்டும் பதத்தில் பாகு காய்ச்சவும்.

    வேர்க்கடலையுடன் பாகு, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கெட்டியாகக் கிளறி உருண்டை பிடிக்கவும்.

    சுவையான சத்தான வேர்க்கடலை உருண்டை ரெடி
    சர்க்கரை வள்ளிக்கிழங்கை விதவிதமாக சமைத்து பரிமாறலாம். அன்று சர்க்கரை வள்ளிக்கிழங்கில் சத்தான சுவையான கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    அரிசி மாவு - அரை கப்
    சர்க்கரை வள்ளிக்கிழங்கு -1
    பச்சை மிளகாய் - 1 (நறுக்கவும்)
    இஞ்சி - 1 துண்டு (நறுக்கவும்)
    மஞ்சள் தூள் - சிறிதளவு
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு
    கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை - சிறிதளவு
    கடுகு, உளுந்தம் பருப்பு - சிறிதளவு
    சோம்பு - 1 டீஸ்பூன்

    செய்முறை:

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி நறுக்கிக்கொள்ளவும்.

    அரிசி மாவுடன் சிறிதளவு உப்பு சேர்த்து நீர் ஊற்றி கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு, சோம்பு ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும்.

    பின்னர் மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து வதக்கவும்.

    அதைத்தொடர்ந்து சர்க்கரைவள்ளிக்கிழங்கு, மஞ்சள் தூள், கொத்தமல்லி தழை ஆகியவற்றை சேர்த்து கிளறி இறக்கவும்.

    இதனை சூரணமாக வைத்துக்கொள்ளவும்.

    சிறிதளவு பிசைந்து வைத்த அரிசி மாவை எடுத்து கிண்ணம் போல் செய்து நடுவில் சூரணத்தை வைத்து விரும்பிய வடிவில் கொழுக்கட்டையாக்கி, வேகவைத்து சாப்பிடவும்.
    மாலையில் குழந்தைகள் சாப்பிட ஏதாவது ஸ்நாக்ஸ் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று காளான் சேர்த்து சூப்பரான கட்லெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    காளான் - 1/2 கிலோ
    உருளைக்கிழங்கு - 3 சிறியது
    வெங்காயம் - 2
    பச்சைப் பட்டாணி - ¼ கப்
    பச்சை மிளகாய் - 3
    இஞ்சி - 1 துண்டு
    பூண்டு - 5 பல்லு
    கறிவேப்பிலை - சிறிதளவு
    கொத்துமல்லி - தேவையான அளவு
    மஞ்சள் தூள் - ¼ தேக்கரண்டி
    மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
    கரம் மசாலா - ½ தேக்கரண்டி
    பிரெட் தூள் - 1 1/2 கப்
    முட்டை - 2
    சமையல் எண்ணெய் - 4 தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை :

    காளானை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்துகொள்ளவும்.

    பட்டாணியை வேக வைத்து கொள்ளவும்.

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, இஞ்சி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாத்திரத்தில் எண்ணெயை விட்டு நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன் நிறமாக வரும் வரை வதக்கவும்.

    அதனுடன் நறுக்கிய பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சியைச் சேர்த்து வதக்கவும்.

    உப்பு தேவையான அளவு போட்டு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா தூளை சேர்த்து சிறிது நேரம் வரை நன்றாகக் கலக்கவும்.

    நறுக்கிய காளான்கள், பச்சை பட்டாணி, கறிவேப்பிலையை சேர்க்கவும்.

    ஒரு பாத்திரத்தை எடுத்து மசித்த உருளைக் கிழங்கைப் போடவும்.

    செய்து வைத்த மசாலாவை இந்தப் பாத்திரத்தில் போட்டு நன்றாகக் கலக்கவும்.

    பின் நறுக்கிய கொத்தமல்லி இலையைச் சேர்க்கவும்.

    முட்டையை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக அடிக்கவும்.

    பிரெட் தூள் தட்டில் போட்டு வைத்துக் கொள்ளவும்.

    மசாலாவை சிறிய பந்துகள் போல் பிடித்து, தட்டி, அதை முட்டையில் முக்கி எடுத்து பிரெட் தூளில் பிரட்டி பின் தடாவில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் அதில் போட்டு இருபுறமும் சிவக்கும்வரை பொறுத்திருந்து எடுக்கவும்.

    சுவையான காளான் கட்லெட் தயார்.
    கோடை காலத்தில் கிடைக்கும் மாம்பழத்தில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம். அந்த வகையில் இன்று மாம்பழத்தில் சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    மாம்பழம் - 2
    கடுகு - தாளிக்க
    வர மிளகாய்-2
    வறுத்த சீரகப் பொடி- 1 ஸ்பூன்
    மஞ்சள் தூள் - சிறிதளவு
    வெல்லம்- தேவையான அளவு
    நல்லெண்ணெய் - சிறிது
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை :

    முதலில் மாம்பழத்தை தோல் நீக்கி சிறிய தூண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள்.

    அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெயை சிறிது ஊற்றவும். கடுகு தாளித்து, வரமிளகாயை அதில் சேர்க்கவும்.

    பின் மாம்பழத்துண்டுகளை அவ்ற்றில் சேர்த்து வதக்கி மூடி வைத்திருங்கள். 5 நிமிடம் கழித்து மாம்பழம் வெந்து கனிந்திருந்தால் அதனை நன்றாக மசித்து அதில் சீரகப் பொடி, உப்பு மற்றும் வெல்லத்தை சேருங்கள்.

    அவற்றுடன் தேவையான அளவு நீர் சேர்த்து கொஞ்சம் சுண்ட வையுங்கள். பின் இறக்கி தேவைப்பட்டால் முந்தி திராட்சையுடன் அலங்கரிக்கலாம்.

    இப்போது சுவையான மாம்பழ சட்னி ரெடி.

    இதனை வடை போண்டா அல்லது தோசைகளுடன் தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும்.

    ×