என் மலர்tooltip icon

    சமையல்

    வெண்டைக்காயில் உடலுக்கு தேவையான சத்துக்கள் இருப்பதோடு உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. தினமும் வெண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் கல்லீரல் நன்கு செயல்பட தொடங்கும்.
    தேவையான பொருட்கள் :

    உதிரியாக வடித்த சாதம் - 1 1/2 கப்
    வெண்டைக்காய் - 100 கிராம்
    சின்ன வெங்காயம் - 50 கிராம்
    கெட்டியான புளிக்கரைசல் - 1 டீஸ்பூன்
    மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
    மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
    கடலை பருப்பு - 1 டீஸ்பூன்
    முந்திரி பருப்பு - 10
    கடுகு - 1 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    எண்ணெய் - 1 டீஸ்பூன்
    உப்பு - சுவைக்கேற்ப

    செய்முறை :

    வெங்காயம், வெண்டைக்காயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயத்தை இட்டு பொன்னிறமாக வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் வெண்டைக்காய், உப்பு சேர்த்து மிதமான தீயில் 10 நிமிடங்கள் வதக்கவும்.

    அடுத்து அதில் மஞ்சள்தூள், கறிவேப்பிலை, பட்டை பொடி, மிளகுத்தூள், உப்பு, கெட்டியான புளிக்கரைசல் சேர்த்து வெண்டைக்காயை நன்றாக கிளறி விட்டு வேக வைக்கவும்.

    மற்றொரு கடாயை எடுத்து 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, கடலை பருப்பு, முந்திரி இட்டு பொரிந்ததும் அதில் வெண்டைக்காயை கலவையைச் சேர்க்கவும்.

    அதனுடன், வேக வைத்த சாதத்தை சேர்த்து நன்றாக கலக்கவும்.

    குறைவான தீயில் 5 நிமிடங்கள் கிளறி விட்டு உப்பு சரிபார்த்து அடுப்பில் இருந்து இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான வெண்டைக்காய் சாதம் ரெடி!
    தினமும் அல்லது வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை பச்சை பட்டாணி சாப்பிடுபவர்களுக்கு நார்ச்சத்து அதிகம் கிடைப்பதால் செரிமான கோளாறுகள் ஏதும் ஏற்படாமல் தடுக்கிறது.
    தேவையான பொருட்கள்

    பச்சை பட்டாணி - 1 கப்,
    பெரிய வெங்காயம் - 1,
    பிரிஞ்சி இலை - 1,
    பச்சைமிளகாய் - 1,
    பூண்டு - 2 பல்,
    வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,
    மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்,
    உப்பு - சிறிது,
    பால் - 1/2 கப்.

    செய்முறை

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரில் வெண்ணெய் சேர்த்து உருகியதும் பூண்டு, பிரிஞ்சி இலை சேர்த்து வதக்கிய பின்னர் பச்சைமிளகாய், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

    பின்பு பச்சைப் பட்டாணியை வதக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேகவைக்கவும்.

    பச்சை பட்டாணி வெந்ததும் ஆறவைத்து அதில் இருந்து பச்சைமிளகாய், பிரிஞ்சி இலையை எடுத்து விட்டு பட்டாணியை மிக்சியில் போட்டு அரைக்கவும்.

    இத்துடன் பால் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விட்டு உப்பு, மிளகுத்தூள் தூவி சூடாக பரிமாறவும்.

    சத்தான பச்சை பட்டாணி சூப் ரெடி.
    சுண்ட வத்தல் சாதப்பொடியை சாதம், நெய்யுடன் சேர்த்து சாப்பிடும் போது அருமையாக இருக்கும். இன்று இந்த பொடியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    சுண்ட வத்தல் - 50 கிராம்
    மணத்தக்காளி வத்தல் - 25 கிராம்
    உளுத்தம் பருப்பு - 50 கிராம்
    மோர் மிளகாய் அல்லது சிவப்பு மிளகாய் - 5
    மிளகு - 1/2 தேக்கரண்டி
    சீரகம் - ஒரு தேக்கரண்டி
    கறிவேப்பிலை - ஒரு பிடி
    பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
    உப்பு - சிறிது ஏற்கனவே வத்தலில் உப்பு சுவை இருப்பதால் குறைத்து சேர்க்கவும்.

    செய்முறை:

    வாணலியை சூடு படுத்தி இரண்டு தேக்கரண்டி எண்ணெய் விட்டு வத்தல் வகையை ஒன்றொன்றாக போட்டு வாசனை வரும் வரை வறுத்தெடுத்துக்கொள்ளவும்.

    பிறகு, அதே எண்ணெயில் மிளகாய் மிளகு, சீரகம் போட்டு வறுக்கவும்.

    இறுதியாக கறிவேப்பிலை, உப்பு, பெருங்காயத்தை போட்டு வறுத்தெடுக்கவும்.

    ஆறியதும் மிக்சியில் சேர்த்து மென்மையான பொடியாக அரைத்துக்கொள்ளவும்.

    சூடான சாதத்தோடு நெய் சேர்த்து கலந்து சாப்பிடவும்.
    கேரட்டை தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்தக் கொழுப்பு குறையும். கேரட்டை மென்று சாப்பிட்டு வந்தால், வாயில் இருக்கும் கிருமிகள் போகும். பற்களுக்கு பலம் கிடைக்கிறது.
    தேவையான பொருட்கள்

    கேரட் துருவல் - 1 கப்,
    கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்,
    உளுத்தம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்,
    காய்ந்தமிளகாய் - 4, புளி - பாக்கு அளவு,
    பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை,
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு,
    நறுக்கிய இஞ்சி - சிறிது.

    செய்முறை

    கடாயில் எண்ணெயை காயவைத்து கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்தமிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து வறுத்து கேரட் துருவல், இஞ்சி, புளி சேர்த்து வதக்கி இறக்கவும்.

    ஆறியதும் உப்பு சேர்த்து அரைத்து இட்லி, தோசை, சப்பாத்தி, சாதத்துடன் கலந்து பரிமாறவும்.

    சத்தான கேரட் துவையல் ரெடி.
    ஆட்டு மூளையில் கொழுப்பு ரொம்ப ரொம்ப குறைவு. அதில் உள்ள பாஸ்பரஸ் கிட்னியில் உள்ள கசடுகளை சுத்தம் பண்ணுவதால் உடலுக்கு இது மிகவும் நல்லது.
    தேவையான பொருள்கள்:

    ஆட்டு மூளை - 2
    மிளகாய்தூள் - 1-1/2 ஸ்பூன்
    மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன்
    வெங்காயம் - 1/2 கப்
    சோம்பு - 1/2 ஸ்பூன்
    எண்ணய் - 3 ஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கி வைக்கவும்.

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஆட்டு மூளை மேல் பகுதியை தண்ணீரில் மெதுவாக கழுவி ஒரு கப் தண்ணீர் விட்டு மூடி வேகவிடவும். அடிக்கடி மூளையைப் புரட்டி போடவேண்டும். இல்லாவிட்டால் அடியில் பிடித்து விடும். மூளை நன்றாக வெந்தபின் இறக்கி ஆறவைத்து துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு அதோடு மிளகாய்தூள், மஞ்சள்தூள், உப்பை கலந்து மெதுவாக குலுக்கி வைக்கவும்.

    வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் விட்டு சூடானதும் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் மசாலா கலந்த மூளையை சேர்த்து மிகவும் மெதுவாக கிளறவேண்டும்.

    நன்றாக சிவந்தவுடன் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பறிமாறலாம்.

    சூப்பரான ஆட்டு மூளை மசாலா ரெடி.
    பேரீச்சம்பழத்தில் நீரில் கரையும் மற்றும் கரையாத இருவகை நார்ச்சத்துக்கள் உள்ளன. இவை மலச்சிக்கலை எளிதாக போக்கி, உடலில் உள்ள கெட்ட கொழுப்பையும் வெளியேற்றும்.
    தேவையான பொருட்கள்:

    பேரிச்சம்பழம் - ஒன்றரை கப்
    பாதாம் - அரை கப்
    முந்திரி - அரை கப்
    தேங்காய் துருவல் - அரை கப்
    கசகசா - 2 டேபிள் ஸ்பூன்
    நெய் - 2 டேபிள் ஸ்பூன்

    செய்முறை:


    ஒரு ஜாரில், கொட்டை எடுத்த பேரிச்சம் பழம் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

    பாதாம், முந்திரியை சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    ஒரு வாணலியில், தேங்காய்த் துருவல் போட்டு ஈரப்பதம் போகும் வரை வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.

    அதே வாணலியில், கசகசா போட்டு மிதமான சூட்டில் வறுத்து பேரிச்சம்பழத்துடன் சேர்க்கவும்.

    பிறகு, வாணலியில் நெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய முந்திரி, பாதாம் சேர்த்து நன்றாக வறுத்துக் கொள்ளவும்.

    இறுதியாக, பேரிச்சம் பழத்துடன், தேங்காய்த் துருவல், வறுத்த முந்திரி, பாதாம் சேர்த்து நன்றாக பிசைந்து லட்டு போன்று பிடித்துக் கொள்ளவும்.

    அவ்ளோதாங்க.. சத்தான பேரிச்சம் பழம் லட்டு ரெடி..!.
    உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல. உடல் அழகைப் பராமரிக்கவும் கேரட் உதவும். தினமும் கேரட் ஜூஸ் குடித்து வந்தால் முகம் பளபளப்பாகும்.
    தேவையானப் பொருள்கள்:

    கேரட் - 1
    சின்ன வெங்காயம் - 5
    பச்சை மிளகாய் - 1
    மஞ்சள் தூள் - சிறிது
    முட்டை - 2
    உப்பு - தேவைக்கு

    தாளிக்க:

    எண்ணெய்
    கடுகு
    உளுந்து
    சீரகம்
    கடலை பருப்பு
    கறிவேப்பிலை

    செய்முறை :

    வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும்.

    கேரட்டை துருவி கொள்ளவும்.

    ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் சூடானதும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன் பின் ஒன்றாகத் போட்டு தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    பிறகு கேரட், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

    கேரட் வதங்கியதும் அதில் முட்டையை உடைத்து ஊற்றிக் கிளறிவிடவும்.

    இரண்டும் நன்றாக வெந்து பூப்போல் உதிரியாக வந்ததும் இறக்கவும்.

    இப்போது சுவையான கேரட் - முட்டை பொரியல் ரெடி.

    இது எல்லா வகையான சாதத்திற்கும் நன்றாக இருக்கும்.
    சிலருக்கு அடிக்கடி சிறுநீர்க்கடுப்பு ஏற்பட்டு சிறுநீர் கழிக்கவே சிரமமாகிவிடும். அதனை தடுத்து சிறுநீர் மென்மையாக வெளியேற்றுவதற்கு இந்த மூக்கிரட்டை பயன்படுகிறது.
    சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்க மூக்கிரட்டை கீரை மற்றும் அதன் தண்டுகளையும் அடிக்கடி சாப்பிட்டு வருவது நல்லது. சிறுநீரக செயல் இழப்பை தடுக்க உதவுகின்றது. ரத்தத்தில் அதிகரிக்கும் யூரியா மற்றும் கிரியேட்டினின் அளவை குறைக்க உதவுகின்றது. சிறுநீரகங்களில் கற்கள் உருவாவது, சிறுநீரக தொற்று நோய்கள் போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணமாக விளங்குகிறது. மற்றும் சிலருக்கு அடிக்கடி சிறுநீர்க்கடுப்பு ஏற்பட்டு சிறுநீர் கழிக்கவே சிரமமாகிவிடும். அதனை தடுத்து சிறுநீர் மென்மையாக வெளியேற்றுவதற்கு இந்த மூக்கிரட்டை பயன்படுகிறது.

    தேவையான பொருட்கள்:

    மூக்கிரட்டை கீரை - 2 கையளவு
    பூண்டு - 2 பல்
    மஞ்சள் தூள் - சிறிதளவு
    மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
    சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    மூக்கிரட்டை கீரையை நன்றாக சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு 2 டம்ளர் நீரை அடுப்பில் வைத்து கொதிக்க ஆரம்பிக்கும் போது, கீரையை போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

    கீரை நன்கு வெந்ததும், அதில் சீரகப் பொடி, தட்டிய பூண்டு, மஞ்சள் தூள், மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். நன்றாக கொதித்த பிறகு அதனை இறக்கி வடிகட்டி பருக வேண்டும்.

    ஆரோக்கியம் நிறைந்த மூக்கிரட்டை கீரை சூப் ரெடி.
    பொதுவாக முட்டை குழம்பு என்றால், மசாலா அரைத்து கொதிக்க வைத்து அதில் வேக வைத்த முட்டையை போட்டு கொதிக்க வைத்து இறங்குவார்கள். ஆனால் இன்று நாம் செய்யப்போகும் குழம்பு சற்று வித்தியாசமானது.
    தேவையான பொருட்கள் :

    நாட்டுக்கோழி முட்டை - 6
    பெரிய வெங்காயம் - 2
    தக்காளி - 3
    பச்சை மிளகாய் - 2
    மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
    மல்லித்தூள் - 3 ஸ்பூன்
    மஞ்சள் தூள் - ½ ஸ்பூன்
    எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு
    கறிவேப்பிலை - சிறிதளவு
    கடுகு - தாளிக்க

    அரைக்க

    தேங்காய் - அரை மூடி
    பொட்டுக்கடலை - 2 ஸ்பூன்

    செய்முறை

    முதலில், தேங்காயைத் துருவி பொட்டுக்கடலையுடன் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

    வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாய் அகலமான பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி எண்ணெய் ஊற்றி, சூடானதும் அதில் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம். ப.மிளகாயை போட்டு எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்குங்கள்.

    அதன் பின் தக்காளியும் சிறிது உப்பும் சேர்த்து தக்காளி குழையும் வரை வதக்கி மிளகாய்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்குங்கள்.

    மசாலா பச்சை வாசனை போனவுடன் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் கரைசலை ஊற்றி சிறிது நீர் சேர்த்து உப்பை சரிபாருங்கள்.

    குழம்பு பச்சை வாசனை போனவுடன் முட்டைகளை ஒவ்வொன்றாக உடைத்து, அவை மோதிக்கொள்ளாமல் இடைவெளி விட்டு குழம்பில் ஊற்றுங்கள். ஐந்து நிமிடத்தில் முட்டைகள் வெந்து மேலே வரும்போது அடுப்பை அனைத்துவிட்டால் முட்டைகுழம்பு தயார்.
    பசலைக்கீரை ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள் மற்றும் ஹீமோகுளோபின் ஆகியவற்றின் உற்பத்தியை அதிகரிக்கிறது. பசலைகீரை வாய்ப்புண்ணுக்கு மிக சிறந்த மருந்தாகும்.
    தேவையான பொருள்கள்

    பசலைக் கீரை - ஒரு கட்டு
    உளுந்து (வறுத்தது) - ஒரு ஸ்பூன்
    தக்காளி - 2
    வெங்காயம் - ஒன்று
    பூண்டு - 10 பல்
    இஞ்சி - ஒரு துண்டு
    கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
    புதினா - ஒரு கைப்பிடி
    மிளகு - அரை ஸ்பூன்
    சீரசும் - அரை ஸ்பூன்
    உப்பு, மஞ்சள், எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    பசலைக்கீரை, தக்காளி, கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பூண்டு, இஞ்சி, கொத்தமல்லி, புதினா, மிளகு, சீரகம், மஞ்சள், உளுந்து ஆகியவற்றை மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய்விட்டு நறுக்கிய தக்காளி, வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.

    அரைத்த கலவையை தக்காளியுடன் சேர்த்து வதக்கவும்.

    கடைசியாக, கீரையையும் போட்டு வதக்கி, ஆறு டம்ளர் நீர் சேர்த்து பாதியாகச் சுண்டச் செய்து, தேவையான அளவு உப்புச் சேர்த்து இறக்கி பரிமாறவும்.

    சத்தான சுவையான பசலைக்கீரைசூப் ரெடி.
    காளானில் மிக அதிகமான புரதச்சத்து உள்ளதால் இது குழந்தைகளுக்கு உகந்த உணவு. சுவையிலும் இந்த வடை வித்தியாசமாக இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    பட்டன் காளான் - 250 கிராம்
    சோம்பு - 1 டீஸ்பூன்
    தேங்காய் துருவியது - 5 ஸ்பூன்
    பொட்டுக்கடலை மாவு - 100 கிராம்
    கடலை மாவு - 50 கிராம்
    பிரட் - 2 ஸ்லைஸ் (பிரட்டை உதிர்த்துக் கொள்ளவும்)
    கொத்தமல்லி - சிறிதளவு
    மிளகாய் தூள் - சுவைக்கேற்ப
    உப்பு - சுவைக்கேற்ப
    எண்ணெய்- பொரிக்க தேவையான அளவு

    செய்முறை:

    காளானை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய காளானை போட்டு அதனுடன் சோம்பு, தேங்காய் துருவல், பொட்டுக்கடலை மாவு, கடலை மாவு, கொத்தமல்லி மிளகாய் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு வடை மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.

    தேவைப்பட்டால் கடலை மாவு சேர்த்து கொள்ளவும்.

    கடைசியாக பிரட் தூள் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை வடைகளாக தட்டி போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.

    சூப்பரான காளான் வடை ரெடி.

    நீண்ட நாட்கள் நோயினால் பாதிக்கப்பட்டு உடல் சோர்வு அடைந்தவர்கள் தினமும் நார்த்தம் பழச்சாற்றை பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்து பருகி வந்தால் உடல் வலிமை அடையும்.
    தேவையான பொருட்கள்

    நார்த்தங்காய் சாறு - 2 டீஸ்பூன்
    இஞ்சி - 1 சிறிய துண்டு
    பச்சை மிளகாய் - 1
    மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
    பெருங்காயம் - 1 டீஸ்பூன்
    மிளகு - 1 டீஸ்பூன்
    சீரகப்பொடி - 1 டீஸ்பூன்
    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு
    துவரம் பருப்பு வேக வைத்த தண்ணீர் - 1 கப்
    கடுகு, வெந்தயம் - தாளிப்பதற்கு

    செய்முறை


    ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

    இஞ்சி, கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, வெந்தயம் போட்டு தாளித்து இஞ்சி, ப.மிளகாய், பெருங்காயம் சேர்த்து வதக்கவும்.

    பின்பு மஞ்சள் பொடி, பொடித்த மிளகு, சீரகப்பொடி, பருப்பு வேக வைத்த தண்ணீர் சேர்க்கவும்.

    கலவை கொதித்து வரும் போது கொத்தமல்லி தழை, நார்த்தங்காய் சாறு, உப்பு சேர்த்து இறக்கவும்.

    சுவையான நார்த்தங்காய் ரசம் தயார்.
    ×