search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பசலைக்கீரை சூப்
    X
    பசலைக்கீரை சூப்

    உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் சூப்

    பசலைக்கீரை ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள் மற்றும் ஹீமோகுளோபின் ஆகியவற்றின் உற்பத்தியை அதிகரிக்கிறது. பசலைகீரை வாய்ப்புண்ணுக்கு மிக சிறந்த மருந்தாகும்.
    தேவையான பொருள்கள்

    பசலைக் கீரை - ஒரு கட்டு
    உளுந்து (வறுத்தது) - ஒரு ஸ்பூன்
    தக்காளி - 2
    வெங்காயம் - ஒன்று
    பூண்டு - 10 பல்
    இஞ்சி - ஒரு துண்டு
    கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
    புதினா - ஒரு கைப்பிடி
    மிளகு - அரை ஸ்பூன்
    சீரசும் - அரை ஸ்பூன்
    உப்பு, மஞ்சள், எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    பசலைக்கீரை, தக்காளி, கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பூண்டு, இஞ்சி, கொத்தமல்லி, புதினா, மிளகு, சீரகம், மஞ்சள், உளுந்து ஆகியவற்றை மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய்விட்டு நறுக்கிய தக்காளி, வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.

    அரைத்த கலவையை தக்காளியுடன் சேர்த்து வதக்கவும்.

    கடைசியாக, கீரையையும் போட்டு வதக்கி, ஆறு டம்ளர் நீர் சேர்த்து பாதியாகச் சுண்டச் செய்து, தேவையான அளவு உப்புச் சேர்த்து இறக்கி பரிமாறவும்.

    சத்தான சுவையான பசலைக்கீரைசூப் ரெடி.
    Next Story
    ×