என் மலர்
ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்
வீடுகளின் வெளிப்புற தோற்றத்தை பார்வைக்கு அழகாக காட்டுவதுடன், மனதில் இனிமையான உணர்வையும் பசுமையான தோட்டங்களால் ஏற்படுத்த முடியும் என்று என்று நில வடிவமைப்பு வல்லுனர்கள் (Landcapist) குறிப்பிட்டுள்ளனர்.
நகர்ப்பகுதி மற்றும் புற நகர்ப்பகுதிகளில் தோட்டத்துடன் கூடிய பல வீடுகளை கவனித்திருப்போம். சில இடங்களில் வீட்டை விடவும் தோட்டம் அழகாக அமைந்திருக்கும். வீடுகளின் வெளிப்புற தோற்றத்தை பார்வைக்கு அழகாக காட்டுவதுடன், மனதில் இனிமையான உணர்வையும் பசுமையான தோட்டங்களால் ஏற்படுத்த முடியும் என்று என்று நில வடிவமைப்பு வல்லுனர்கள் (Landcapist) குறிப்பிட்டுள்ளனர்.
‘லேண்ட்ஸ்கேப்பிங்’
புறநகர் பகுதிகளில் மனை அல்லது இடம் வாங்கி வீடு கட்ட விரும்புபவர்கள் வீட்டை சுற்றி அமைந்துள்ள இடத்தை அழகாக மாற்றிக்கொண்டு இதமான சூழலை வீட்டுக்குள் பரவச்செய்ய இயலும். அந்த முறை ‘லேண்ட்ஸ்கேப்பிங்’ (Lanscaping) என்று குறிப்பிடப்படுகிறது. மனையின் அளவுக்கேற்ப கிடைக்கும் காலி இடத்தில் அழகான தோட்டத்தை இந்த முறைப்படி சுலபமாக வடிவமைத்துக்கொள்ளலாம். அவற்றின் அமைப்பு மற்றும் பராமரிப்பு ஆகியவற்றை செய்து தரும் நில வடிவமைப்பு வல்லுனர்கள் நகர்ப்புறங்களில் உள்ளனர்.
அழகிய நடைபாதைகள்
வீட்டின் சுற்றுப்புறத்தில் தோட்டம் அமைக்க விரும்பும் வீட்டு உரிமையாளர்கள் மேடு, பள்ளங்கள் கொண்டதாகவும், வளைவான அமைப்புகளைக் கொண்ட தோட்டங்களுக்கே முக்கியத்துவம் அளிக்கிறார்கள். குறிப்பாக, பரப்பளவு குறைவாக உள்ள வீடுகளில் சிறிய புல்வெளி அமைத்து, அங்கே சில தனிச்செடிகள், சிலைகள் ஆகியவற்றை அமைக்கின்றனர். அவற்றின் இடையில் சதுரம் அல்லது செவ்வக வடிவ கற்கள் கொண்ட நடைபாதை அமைப்பதும் அழகாக இருக்கும்.
பயன் தரும் மரங்கள்
விசாலமான தோட்டம் அமைப்பதற்கு தகுந்த இடம் மற்றும் இதர வசதிகள் கொண்ட நிலையில் செடிகளுடன் குறிப்பிட மரங்களை தேர்வு செய்து வளர்க்கும் வீட்டு உரிமையாளர்கள் பலர் உண்டு. அழகான பூக்களை தரும் மரங்களான ‘அட்ஸ்டோனியா’, ‘மில்லங்டோனியா’ போன்ற மரங்கள் மற்றும் வேம்பு, புங்கை, பலா போன்ற மரங்களையும் பலர் விருப்பத்துடன் வளர்ப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
குதூகலமான மாலை நேரம்
வீட்டு தோட்டத்தில் குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்கள் ஒன்றாக அமர்ந்து மாலை நேரத்தில் காபி அருந்தும் வகையில் காபி மேசைகள், பெஞ்சுகள் போட்டு வைக்கலாம். மேசையின் நீளம் ஐந்து அடி மற்றும் அகலம் இரண்டு அடி இருக்கலாம். பல இடங்களில் ‘கான்கிரீட்’ காப்பி மேசைகளை அமைக்கின்றனர். ‘பாலீஷ்’ செய்யப்படாத கல் இருக்கைகள், கிரானைட் இருக்கைகள், இரும்பு அல்லது மரத்தால் செய்யப்பட்ட பெஞ்சுகளை போட்டு வைக்கலாம். அவை மாலை நேரங்களை இனிமையாக மாற்றும்.
இரவு நேரங்களில் வெளிச்சமாக இருக்க ‘போகஸ்’ விளக்குகளை மரங்களின் வேர்ப்பகுதி அல்லது குறிப்பிட்ட செடிகளின் கீழ்ப்புறத்தில் அமைத்துக் கொள்ளலாம். அதன் மூலம் விளக்கின் திசைகளை வேண்டியவாறு மாற்றி அமைத்து தோட்டத்தை அழகாக காட்ட இயலும். சிவில் கான்செப்ட் அடிப்படையில் ஆங்காங்கே ‘பெர்கோலா’ அமைப்புகளையும் வடிவமைக்கலாம்.
அமைதியான அதிகாலை நேரம்
தோட்டம் அமைந்துள்ள வீடுகளை குட்டி பசங்களின் மனம் கவரும் வகையில் எளிதாக மாற்றிக்கொள்ள இயலும். மத்தியில் ஒரு ஊஞ்சல் அமைத்து விட்டால், அவர்களது நண்பர்களுடன் விடுமுறை நாட்களில் குஷியாக விளையாடிக்கொண்டிருப்பார்கள். மேலும், ஆங்காங்கே பறவைகளுக்கான கூண்டுகள் அமைக்கலாம். அனைத்திற்கும் மேலாக, சிறிய அளவில் தியான குடில்கள் அமைத்துக்கொண்டால், அமைதியான அதிகாலை நேரங்களை அதில் செலவழிக்க ஏற்றதாக அமையும்.
‘லேண்ட்ஸ்கேப்பிங்’
புறநகர் பகுதிகளில் மனை அல்லது இடம் வாங்கி வீடு கட்ட விரும்புபவர்கள் வீட்டை சுற்றி அமைந்துள்ள இடத்தை அழகாக மாற்றிக்கொண்டு இதமான சூழலை வீட்டுக்குள் பரவச்செய்ய இயலும். அந்த முறை ‘லேண்ட்ஸ்கேப்பிங்’ (Lanscaping) என்று குறிப்பிடப்படுகிறது. மனையின் அளவுக்கேற்ப கிடைக்கும் காலி இடத்தில் அழகான தோட்டத்தை இந்த முறைப்படி சுலபமாக வடிவமைத்துக்கொள்ளலாம். அவற்றின் அமைப்பு மற்றும் பராமரிப்பு ஆகியவற்றை செய்து தரும் நில வடிவமைப்பு வல்லுனர்கள் நகர்ப்புறங்களில் உள்ளனர்.
அழகிய நடைபாதைகள்
வீட்டின் சுற்றுப்புறத்தில் தோட்டம் அமைக்க விரும்பும் வீட்டு உரிமையாளர்கள் மேடு, பள்ளங்கள் கொண்டதாகவும், வளைவான அமைப்புகளைக் கொண்ட தோட்டங்களுக்கே முக்கியத்துவம் அளிக்கிறார்கள். குறிப்பாக, பரப்பளவு குறைவாக உள்ள வீடுகளில் சிறிய புல்வெளி அமைத்து, அங்கே சில தனிச்செடிகள், சிலைகள் ஆகியவற்றை அமைக்கின்றனர். அவற்றின் இடையில் சதுரம் அல்லது செவ்வக வடிவ கற்கள் கொண்ட நடைபாதை அமைப்பதும் அழகாக இருக்கும்.
பயன் தரும் மரங்கள்
விசாலமான தோட்டம் அமைப்பதற்கு தகுந்த இடம் மற்றும் இதர வசதிகள் கொண்ட நிலையில் செடிகளுடன் குறிப்பிட மரங்களை தேர்வு செய்து வளர்க்கும் வீட்டு உரிமையாளர்கள் பலர் உண்டு. அழகான பூக்களை தரும் மரங்களான ‘அட்ஸ்டோனியா’, ‘மில்லங்டோனியா’ போன்ற மரங்கள் மற்றும் வேம்பு, புங்கை, பலா போன்ற மரங்களையும் பலர் விருப்பத்துடன் வளர்ப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
குதூகலமான மாலை நேரம்
வீட்டு தோட்டத்தில் குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்கள் ஒன்றாக அமர்ந்து மாலை நேரத்தில் காபி அருந்தும் வகையில் காபி மேசைகள், பெஞ்சுகள் போட்டு வைக்கலாம். மேசையின் நீளம் ஐந்து அடி மற்றும் அகலம் இரண்டு அடி இருக்கலாம். பல இடங்களில் ‘கான்கிரீட்’ காப்பி மேசைகளை அமைக்கின்றனர். ‘பாலீஷ்’ செய்யப்படாத கல் இருக்கைகள், கிரானைட் இருக்கைகள், இரும்பு அல்லது மரத்தால் செய்யப்பட்ட பெஞ்சுகளை போட்டு வைக்கலாம். அவை மாலை நேரங்களை இனிமையாக மாற்றும்.
இரவு நேரங்களில் வெளிச்சமாக இருக்க ‘போகஸ்’ விளக்குகளை மரங்களின் வேர்ப்பகுதி அல்லது குறிப்பிட்ட செடிகளின் கீழ்ப்புறத்தில் அமைத்துக் கொள்ளலாம். அதன் மூலம் விளக்கின் திசைகளை வேண்டியவாறு மாற்றி அமைத்து தோட்டத்தை அழகாக காட்ட இயலும். சிவில் கான்செப்ட் அடிப்படையில் ஆங்காங்கே ‘பெர்கோலா’ அமைப்புகளையும் வடிவமைக்கலாம்.
அமைதியான அதிகாலை நேரம்
தோட்டம் அமைந்துள்ள வீடுகளை குட்டி பசங்களின் மனம் கவரும் வகையில் எளிதாக மாற்றிக்கொள்ள இயலும். மத்தியில் ஒரு ஊஞ்சல் அமைத்து விட்டால், அவர்களது நண்பர்களுடன் விடுமுறை நாட்களில் குஷியாக விளையாடிக்கொண்டிருப்பார்கள். மேலும், ஆங்காங்கே பறவைகளுக்கான கூண்டுகள் அமைக்கலாம். அனைத்திற்கும் மேலாக, சிறிய அளவில் தியான குடில்கள் அமைத்துக்கொண்டால், அமைதியான அதிகாலை நேரங்களை அதில் செலவழிக்க ஏற்றதாக அமையும்.
நெய்யப்பம் குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் சிறந்த சிற்றுண்டியாக இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
அரிசி மாவு - 1 கப்
கோதுமை மாவு - 3/4 கப்
வெல்லம் துருவியது - 1/2 கப்
தேங்காய் - 1/2 கப்
ஏலக்காய்த்தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - 1/4 தேக்கரண்டி
நெய் - 1/4 கப்

செய்முறை :
ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடாக்கவும். அதனுடன் துருவிய வெல்லம் சேர்த்து வெல்லம் கரையும் வரை வைக்கவும்.
மற்றொரு பாத்திரத்தில் அரிசி மாவுடன் கோதுமை மாவை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
இதனுடன் துருவிய தேங்காய், உப்பு, மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து கலக்கவும்.
பின்னர் வெல்லப்பாகை வடிகட்டி சேர்த்து நன்றாக கலந்து இட்லி மாவு பதத்திற்கு கரைக்கவும், மாவு கெட்டியாக இருந்தால் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
ஒரு பணியாரக் கல்லில் நெய் ஊற்றி மிதமான சூட்டில் காய வைக்கவும்.
பின்னர் ஒவ்வொரு குழியிலும் முக்கால் பாகத்திற்கு மாவை ஊற்றி ஒருபுறம் வெந்தவுடன் திருப்பி போட்டு மறுபுறம் வேக விட்டு எடுத்து பரிமாறவும்.
சுவையான நெய்யப்பம் தயார்.
அரிசி மாவு - 1 கப்
கோதுமை மாவு - 3/4 கப்
வெல்லம் துருவியது - 1/2 கப்
தேங்காய் - 1/2 கப்
ஏலக்காய்த்தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - 1/4 தேக்கரண்டி
நெய் - 1/4 கப்
சமையல் சோடா - சிறிதளவு

செய்முறை :
ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடாக்கவும். அதனுடன் துருவிய வெல்லம் சேர்த்து வெல்லம் கரையும் வரை வைக்கவும்.
மற்றொரு பாத்திரத்தில் அரிசி மாவுடன் கோதுமை மாவை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
இதனுடன் துருவிய தேங்காய், உப்பு, மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து கலக்கவும்.
பின்னர் வெல்லப்பாகை வடிகட்டி சேர்த்து நன்றாக கலந்து இட்லி மாவு பதத்திற்கு கரைக்கவும், மாவு கெட்டியாக இருந்தால் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
ஒரு பணியாரக் கல்லில் நெய் ஊற்றி மிதமான சூட்டில் காய வைக்கவும்.
பின்னர் ஒவ்வொரு குழியிலும் முக்கால் பாகத்திற்கு மாவை ஊற்றி ஒருபுறம் வெந்தவுடன் திருப்பி போட்டு மறுபுறம் வேக விட்டு எடுத்து பரிமாறவும்.
சுவையான நெய்யப்பம் தயார்.
இன்றைய செய்முறையில் வாழைப்பழம் சேர்க்கவில்லை, விருப்பப்பட்டால் நீங்கள் கனிந்த ஒரு வாழைப் பழத்தை மசித்து இதே செய்முறையில் சேர்த்துக்கொள்ளலாம்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
இதயத்தில் புற்றுநோய் வருமா..? என்கிற சந்தேகம் இதுவரையிலும் நம்மில் பலருக்கு தோன்றி இருக்காது. மற்ற உறுப்புகளை காட்டிலும் இதயத்தில் புற்றுநோய் உருவாகாதாம்.
புற்றுநோய் சாதாரணமானது கிடையாது. உடலில் எங்கு வேண்டுமானாலும் இது தனது ராஜ்ஜியத்தை தொடங்க வாய்ப்புள்ளது. பெரும்பாலும் கணைய புற்றுநோய், மார்பக புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், பிறப்புறுப்பு புற்றுநோய் போன்றவற்றைதான் அதிக அளவில் கேள்விப்பட்டு இருப்போம். ஆனால், இது வரை கேட்டிருக்காத ஒரு புற்றுநோயும் உண்டு.
அதாவது, இதய புற்றுநோய் தான். இதயத்தில் புற்றுநோய் வருமா..? என்கிற சந்தேகம் இதுவரையிலும் நம்மில் பலருக்கு தோன்றி இருக்காது. மற்ற உறுப்புகளை காட்டிலும் இதயத்தில் புற்றுநோய் உருவாகாதாம்.
புற்றுநோய் என்பது நமது டி.என்.ஏ. சிதைவடைந்து அதன் செல்கள் புற்றுநோய் செல்களாக உருவாகும். ஒரு செல் இரண்டாகும். இரண்டு நான்காகும். நான்கு செல் எட்டாகும். இப்படியே ஒவ்வொன்றும் பல வகையில் பிரிந்து லட்சக்கணக்கான செல்களாக பிரிந்து விடும். இது இதயத்திற்கு மட்டும் மாறுபடும்.
அதிகப்படியான சூரிய ஒளி தோல் புற்றுநோயை உண்டாக்கும். கார்சினோஜெனிக் கொண்ட பொருட்களை சாப்பிடுவதால் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படும். மார்பகத்தில் உள்ள ஈஸ்ட்ரோஜென் மார்பக புற்றுநோயை உண்டாக்கும். இப்படி மற்ற உறுப்புகளில் உருவாவது போன்ற அமைப்பு இதயத்திற்கு கிடையாது. காரணம் தெரியுமா..? இதயத்தில் உள்ள தசை செல்கள் மைகோசிட்ஸ் என்று அழைக்கப்படுகிறது. பெரும்பாலும் மற்ற உறுப்புகளில் உள்ள செல்கள் புற்றுநோய் செல்களாக மாற்றம் பெறும் தன்மை கொண்டவை. ஆனால், இதயத்தில் உள்ள இந்த தசை செல்கள் ஒன்று இரண்டாக பிரிய வாய்ப்பில்லை.
இதயத்தின் தசை செல்களை இவ்வாறு பிரிக்க முடியாததற்கு அவற்றின் இயல்பு தன்மை தான் காரணம். இதயத்தில் மாரடைப்பு, ரத்த நாளங்களில் பாதிப்பு, ரத்தம் கட்டி கொள்ளுதல் இது போன்ற பிரச்சினைகள் தான் உண்டாகும். ஆனால், இதயத்தில் பெரும்பாலும் புற்றுநோய் செல்கள் உண்டாகாது. ஆனால், இதயம் மற்ற உறுப்புகளுக்கு இந்த புற்றுநோயின் அபாயத்தை ஏற்படுத்தும் என ஆய்வுகள் சொல்கின்றன. இதயத்தின் வழியாக நுரையீரல், மார்பு, ரத்தம் போன்றவற்றுக்கு புற்றுநோய் ஆபத்து வரலாம்.
இதயத்தில் ஏற்பட கூடிய புற்றுநோய் செல்கள் மிக அரிதான வகையிலே உள்ளது. எனவே மற்ற வகை புற்றுநோயை போல இது உடலில் எளிதாக உருவாகாது என்பதே நிதர்சனம்.
அதாவது, இதய புற்றுநோய் தான். இதயத்தில் புற்றுநோய் வருமா..? என்கிற சந்தேகம் இதுவரையிலும் நம்மில் பலருக்கு தோன்றி இருக்காது. மற்ற உறுப்புகளை காட்டிலும் இதயத்தில் புற்றுநோய் உருவாகாதாம்.
புற்றுநோய் என்பது நமது டி.என்.ஏ. சிதைவடைந்து அதன் செல்கள் புற்றுநோய் செல்களாக உருவாகும். ஒரு செல் இரண்டாகும். இரண்டு நான்காகும். நான்கு செல் எட்டாகும். இப்படியே ஒவ்வொன்றும் பல வகையில் பிரிந்து லட்சக்கணக்கான செல்களாக பிரிந்து விடும். இது இதயத்திற்கு மட்டும் மாறுபடும்.
அதிகப்படியான சூரிய ஒளி தோல் புற்றுநோயை உண்டாக்கும். கார்சினோஜெனிக் கொண்ட பொருட்களை சாப்பிடுவதால் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படும். மார்பகத்தில் உள்ள ஈஸ்ட்ரோஜென் மார்பக புற்றுநோயை உண்டாக்கும். இப்படி மற்ற உறுப்புகளில் உருவாவது போன்ற அமைப்பு இதயத்திற்கு கிடையாது. காரணம் தெரியுமா..? இதயத்தில் உள்ள தசை செல்கள் மைகோசிட்ஸ் என்று அழைக்கப்படுகிறது. பெரும்பாலும் மற்ற உறுப்புகளில் உள்ள செல்கள் புற்றுநோய் செல்களாக மாற்றம் பெறும் தன்மை கொண்டவை. ஆனால், இதயத்தில் உள்ள இந்த தசை செல்கள் ஒன்று இரண்டாக பிரிய வாய்ப்பில்லை.
இதயத்தின் தசை செல்களை இவ்வாறு பிரிக்க முடியாததற்கு அவற்றின் இயல்பு தன்மை தான் காரணம். இதயத்தில் மாரடைப்பு, ரத்த நாளங்களில் பாதிப்பு, ரத்தம் கட்டி கொள்ளுதல் இது போன்ற பிரச்சினைகள் தான் உண்டாகும். ஆனால், இதயத்தில் பெரும்பாலும் புற்றுநோய் செல்கள் உண்டாகாது. ஆனால், இதயம் மற்ற உறுப்புகளுக்கு இந்த புற்றுநோயின் அபாயத்தை ஏற்படுத்தும் என ஆய்வுகள் சொல்கின்றன. இதயத்தின் வழியாக நுரையீரல், மார்பு, ரத்தம் போன்றவற்றுக்கு புற்றுநோய் ஆபத்து வரலாம்.
இதயத்தில் ஏற்பட கூடிய புற்றுநோய் செல்கள் மிக அரிதான வகையிலே உள்ளது. எனவே மற்ற வகை புற்றுநோயை போல இது உடலில் எளிதாக உருவாகாது என்பதே நிதர்சனம்.
கர்ப்பப்பை இறக்கம் என்பதே பலநேரங்களில் பெண்கள் உணராமலே உள்ளார்கள் அல்லது மருத்துவரிடம் செல்ல கூச்சப்பட்டு நோய் முற்றிய நிலையில் தான் சிகிச்சைக்கு செல்லும் அவலம் உள்ளது.
பெண்மையின் தனித்துவம், வாங்கி வந்த வரம் அனைத்தும் கர்ப்பப்பைதான். பூப்பெய்துவதில் தொடங்கி, குழந்தை பெறுவது வரை பெண்மையின் அடையாளமாகவும் கவசமாகவும் இருப்பது அதுவே.கர்ப்பப்பையில் நோய்த்தொற்று, நீர்க்கட்டி என இவை தரும் தொல்லைகள் தனி. கர்ப்பப்பை இறக்கம் என்பதே பலநேரங்களில் பெண்கள் உணராமலே உள்ளார்கள் அல்லது மருத்துவரிடம் செல்ல கூச்சப்பட்டு நோய் முற்றிய நிலையில் தான் சிகிச்சைக்கு செல்லும் அவலம் உள்ளது.
சாதாரணமாக 2 செ.மீ. அளவுள்ள கர்ப்பப்பை, பூப்படையும் போது, 5 முதல் 6 செ.மீ. வரை வளர்கிறது. பிரசவத்தின் போது 5 கிலோ எடையுடன், 30 செ.மீ. நீளத்துக்கு விரிகிறது. குழந்தைப்பேற்றைத் தவிர, கர்ப்பப்பைக்கு வேறு வேலைகள் கிடையாது. பிரசவத்துக்குப் பிறகு அது சுருங்கி, மீண்டும் பழைய அளவுக்கு வரும்.
கர்ப்பப்பை இறக்கம் ஏற்பட காரணங்கள்
அதிக உடல் எடை இதனால் ஏற்படும் வயிற்றிலுள்ள கொழுப்பின் பளு, அது தரும் அழுத்தம் முக்கியமான காரணமாகும்.
ஆஸ்துமா, தொடர் இருமல் காரணமாக, உள் வயிற்றின் அழுத்தம் அதிகமாகி, கர்ப்பப்பை வெளியே தள்ளப்படலாம்.
பிரசவத்தின் போது குழந்தையின் எடை அதிகமாகி, அதிகம் முக்கி, குழந்தையை வெளியே தள்ள முயற்சிப்பதும் கர்ப்பப்பை இறக்கத்துக்குக் காரணமாகலாம்.
பிரசவத்துக்குப் பிறகு கர்ப்பப்பை சுருங்குவதற்கு முன்பே, அடுத்த கர்ப்பம் தரிப்பது அதாவது இடைவெளி இல்லாமல் பிரசவம்.
மலச்சிக்கல் பிரச்சனையால் வரலாம்.
இயற்கையாக கர்ப்பப் பையைச் சுற்றியுள்ள தசை நார்கள் பலவீனமாக இருப்பதால் கூட கர்ப்பப்பை இறக்கம் வரலாம்.
நிறைய குழந்தைகள் பெற்ற பெண்கள் ( அந்த காலத்தில்).
பிரசவத்தின் போது, ஆயுதம் போட்டுக் குழந்தையை எடுப்பது.
அதிக சிரமப்பட்டுக் குழந்தையை வெளியே தள்ள முயற்சிப்பது.
கர்ப்பப்பை இறக்கத்திற்க்கான அறிகுறிகள் :
கர்ப்பப்பை இறக்கத்தால் நடப்பது சிரமமாகும்.
கர்ப்பப்பை தொடைகளுக்கிடையே உரசி, புண் உண்டாகும்.
கர்ப்பப்பை இறங்கும் போது, முன் பாகத்திலுள்ள சிறுநீர் பையும், பின் பக்கத்திலுள்ள மலக்குடலும் சேர்ந்து இழுக்கப் படலாம். அதனால் பின்வரும் அறிகுறிகள் தென்படும்.
இடுப்பு வலி, பின்புறம் இடுப்பில் கை வைத்து நின்றால் சற்று எளிதாக இருப்பது.
ஏதோ சதைப் போன்று கீழ்ப்பாகத்தில் இடிப்பது.
எப்போதும் வெள்ளைப் போக்கு அதிகமாக இருப்பது.
பெண்ணுறுப்பில் உலர்ந்த தன்மை.
அடிக்கடி ஏற்படும் அரிப்பு, அதனால் ஏற்படும் புண்.
சிலருக்கு இருமினால், தும்மினால், முக்கினால் கருப்பை இறங்குவது போன்ற உணர்வு.
அடிக்கடி சீறுநீர் வெளியேற்றம்.
சிறுநீரை அடக்க முடியாத நிலை.
சிரித்தால் கூட சிறுநீர் வெளியேறும் நிலை.
மலச்சிக்கல் போன்ற உணர்வு. அடிக்கடி மலம் கழிக்கத் தோன்றுவது போன்றவை கருப்பை இறக்கத்தின் அறிகுறிகளாக இருக்கலாம்.
சாதாரணமாக 2 செ.மீ. அளவுள்ள கர்ப்பப்பை, பூப்படையும் போது, 5 முதல் 6 செ.மீ. வரை வளர்கிறது. பிரசவத்தின் போது 5 கிலோ எடையுடன், 30 செ.மீ. நீளத்துக்கு விரிகிறது. குழந்தைப்பேற்றைத் தவிர, கர்ப்பப்பைக்கு வேறு வேலைகள் கிடையாது. பிரசவத்துக்குப் பிறகு அது சுருங்கி, மீண்டும் பழைய அளவுக்கு வரும்.
கர்ப்பப்பை இறக்கம் ஏற்பட காரணங்கள்
அதிக உடல் எடை இதனால் ஏற்படும் வயிற்றிலுள்ள கொழுப்பின் பளு, அது தரும் அழுத்தம் முக்கியமான காரணமாகும்.
ஆஸ்துமா, தொடர் இருமல் காரணமாக, உள் வயிற்றின் அழுத்தம் அதிகமாகி, கர்ப்பப்பை வெளியே தள்ளப்படலாம்.
பிரசவத்தின் போது குழந்தையின் எடை அதிகமாகி, அதிகம் முக்கி, குழந்தையை வெளியே தள்ள முயற்சிப்பதும் கர்ப்பப்பை இறக்கத்துக்குக் காரணமாகலாம்.
பிரசவத்துக்குப் பிறகு கர்ப்பப்பை சுருங்குவதற்கு முன்பே, அடுத்த கர்ப்பம் தரிப்பது அதாவது இடைவெளி இல்லாமல் பிரசவம்.
மலச்சிக்கல் பிரச்சனையால் வரலாம்.
இயற்கையாக கர்ப்பப் பையைச் சுற்றியுள்ள தசை நார்கள் பலவீனமாக இருப்பதால் கூட கர்ப்பப்பை இறக்கம் வரலாம்.
நிறைய குழந்தைகள் பெற்ற பெண்கள் ( அந்த காலத்தில்).
பிரசவத்தின் போது, ஆயுதம் போட்டுக் குழந்தையை எடுப்பது.
அதிக சிரமப்பட்டுக் குழந்தையை வெளியே தள்ள முயற்சிப்பது.
கர்ப்பப்பை இறக்கத்திற்க்கான அறிகுறிகள் :
கர்ப்பப்பை இறக்கத்தால் நடப்பது சிரமமாகும்.
கர்ப்பப்பை தொடைகளுக்கிடையே உரசி, புண் உண்டாகும்.
கர்ப்பப்பை இறங்கும் போது, முன் பாகத்திலுள்ள சிறுநீர் பையும், பின் பக்கத்திலுள்ள மலக்குடலும் சேர்ந்து இழுக்கப் படலாம். அதனால் பின்வரும் அறிகுறிகள் தென்படும்.
இடுப்பு வலி, பின்புறம் இடுப்பில் கை வைத்து நின்றால் சற்று எளிதாக இருப்பது.
ஏதோ சதைப் போன்று கீழ்ப்பாகத்தில் இடிப்பது.
எப்போதும் வெள்ளைப் போக்கு அதிகமாக இருப்பது.
பெண்ணுறுப்பில் உலர்ந்த தன்மை.
அடிக்கடி ஏற்படும் அரிப்பு, அதனால் ஏற்படும் புண்.
சிலருக்கு இருமினால், தும்மினால், முக்கினால் கருப்பை இறங்குவது போன்ற உணர்வு.
அடிக்கடி சீறுநீர் வெளியேற்றம்.
சிறுநீரை அடக்க முடியாத நிலை.
சிரித்தால் கூட சிறுநீர் வெளியேறும் நிலை.
மலச்சிக்கல் போன்ற உணர்வு. அடிக்கடி மலம் கழிக்கத் தோன்றுவது போன்றவை கருப்பை இறக்கத்தின் அறிகுறிகளாக இருக்கலாம்.
குழந்தைகளுக்கு வரும் வலிப்பு நோய் உண்மையில் பெற்றவர்களை பதற வைக்கும். குழந்தைகளுக்கு வலிப்பு நோய் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.
வலிப்பு நோய் என்பது மூளையில் நிகழும் அசாதரணமான மின்னுற்பத்தி தான். மூளையில் உள்ள நியுரான் எனும் நரம்பு செல்கள் மின் உற்பத்தி மூலமே சமிக்ஞைகளை கடத்தும். சில நேரங்களில் ஏற்படும் அதிக அளவிலான மின் உற்பத்தி மூலம் கை கால்கள் வலிப்பு ஏற்படுகிறது. கால், கை வலிப்பு என்பதைத் தான் காக்காவலிப்பு என பேச்சு வழக்கில் மருவி விட்டது. வலிப்பு நோய் வயது வித்தியாசம் இன்றி அனைவருக்கும் வரும். குழந்தைகளுக்கு வரும் வலிப்பு நோய் உண்மையில் பெற்றவர்களை பதற வைக்கும். குழந்தைகளுக்கு வலிப்பு நோய் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.
கர்ப்பத்துக்கு முன்பும் பின்பும் கர்ப்பிணிகளை முறைப்படி உணவு, மற்றும் மருத்துவ பராமரிப்பு அளிப்பது.
மருத்துவமனையில் தேர்ச்சிபெற்ற மருத்துவரிடம் பிரசவம் மேற்கொள்வது. ஆகியவற்றின் மூலம் குழந்தைகளுக்குப் பிறவியிலேயே வலிப்பு வருவதைத் தடுக்கலாம்.
குழந்தைக்குக் காய்ச்சல் அதிகமாகும் போது வலிப்பு வரும்.
காய்ச்சல் வந்தால் உடனடியாகக் காய்ச்சலைக் குறைக்கும் மருந்துகளைக் கொடுத்து விடவேண்டும்.
காய்ச்சல் கண்ட குழந்தையின் உடலில் ஈரத் துணி கொண்டு ஒத்தடம் கொடுப்பதன் மூலம் உடல் சூடு குறையும்.
காய்ச்சல் உள்ள குழந்தையைக் குளிரூட்டப்பட்ட அறையில் படுக்கவைப்பது போன்ற முதலுதவிகளை உடனே செய்வது மூலம் வலிப்பு வராமல் தடுக்க முடியும்.
வலிப்பு மருந்துகளைத் தொடர்ந்து கொடுப்பதன் மூலம் குழந்தைக்கு மீண்டும் வலிப்பு வருவதைத் தவிர்க்கலாம்.
வலிப்புக்கான காரணம் அறிந்து, அளிக்கப்படும் தொடர் சிகிச்சையின் மூலம் வலிப்பு நோய் குணமாகும்.
கர்ப்பத்துக்கு முன்பும் பின்பும் கர்ப்பிணிகளை முறைப்படி உணவு, மற்றும் மருத்துவ பராமரிப்பு அளிப்பது.
மருத்துவமனையில் தேர்ச்சிபெற்ற மருத்துவரிடம் பிரசவம் மேற்கொள்வது. ஆகியவற்றின் மூலம் குழந்தைகளுக்குப் பிறவியிலேயே வலிப்பு வருவதைத் தடுக்கலாம்.
குழந்தைக்குக் காய்ச்சல் அதிகமாகும் போது வலிப்பு வரும்.
காய்ச்சல் வந்தால் உடனடியாகக் காய்ச்சலைக் குறைக்கும் மருந்துகளைக் கொடுத்து விடவேண்டும்.
காய்ச்சல் கண்ட குழந்தையின் உடலில் ஈரத் துணி கொண்டு ஒத்தடம் கொடுப்பதன் மூலம் உடல் சூடு குறையும்.
காய்ச்சல் உள்ள குழந்தையைக் குளிரூட்டப்பட்ட அறையில் படுக்கவைப்பது போன்ற முதலுதவிகளை உடனே செய்வது மூலம் வலிப்பு வராமல் தடுக்க முடியும்.
வலிப்பு மருந்துகளைத் தொடர்ந்து கொடுப்பதன் மூலம் குழந்தைக்கு மீண்டும் வலிப்பு வருவதைத் தவிர்க்கலாம்.
வலிப்புக்கான காரணம் அறிந்து, அளிக்கப்படும் தொடர் சிகிச்சையின் மூலம் வலிப்பு நோய் குணமாகும்.
வழக்கமான முட்டைகோஸ் பொரியல் உடன் கேரட் மற்றும் பட்டாணி சேர்க்கும் பொழுது மேலும் சுவை மற்றும் ஆரோக்கியத்துடன் இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
முட்டைகோஸ் - 100 கிராம்
கேரட் - 1
பச்சை பட்டாணி - 1 கைப்பிடி
வெங்காயம் -1
மஞ்சள் தூள் - சிறிதளவு
பெருங்காயத்தூள் - சிறிதளவு
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு - ½ தேக்கரண்டி
கடலை பருப்பு - தேக்கரண்டி
துருவிய தேங்காய் - 2 தேக்கரண்டி
பச்சைமிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை
முட்டைகோஸ், கேரட்டை நன்றாக கழுவிய பின்னர் துருவிக்கொள்ளவும்.
வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கறிவேப்பிலை, உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்த பின்னர் பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து மிதமான சூட்டில் வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் துருவிய முட்டைகோஸ், கேரட், பச்சை பட்டாணி சேர்த்து வதக்கவும்.
அதனுடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து மென்மையாக கிளறி விடவும்.
காய்கறிகள் வேக சிறிது தண்ணீர் தெளித்து மூடி வைத்து 5 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.
காய்கறிகள் நன்றாக வெந்ததும் துருவிய தேங்காய் சேர்த்து கிளறி அடுப்பை அணைத்து விடவும்.
சுவையான முட்டைகோஸ் கேரட் பட்டாணி பொரியல் தயார்
முட்டைகோஸ் - 100 கிராம்
கேரட் - 1
பச்சை பட்டாணி - 1 கைப்பிடி
வெங்காயம் -1
மஞ்சள் தூள் - சிறிதளவு
பெருங்காயத்தூள் - சிறிதளவு
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு - ½ தேக்கரண்டி
கடலை பருப்பு - தேக்கரண்டி
துருவிய தேங்காய் - 2 தேக்கரண்டி
பச்சைமிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு தேவையான அளவு

செய்முறை
முட்டைகோஸ், கேரட்டை நன்றாக கழுவிய பின்னர் துருவிக்கொள்ளவும்.
வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கறிவேப்பிலை, உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்த பின்னர் பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து மிதமான சூட்டில் வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் துருவிய முட்டைகோஸ், கேரட், பச்சை பட்டாணி சேர்த்து வதக்கவும்.
அதனுடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து மென்மையாக கிளறி விடவும்.
காய்கறிகள் வேக சிறிது தண்ணீர் தெளித்து மூடி வைத்து 5 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.
காய்கறிகள் நன்றாக வெந்ததும் துருவிய தேங்காய் சேர்த்து கிளறி அடுப்பை அணைத்து விடவும்.
சுவையான முட்டைகோஸ் கேரட் பட்டாணி பொரியல் தயார்
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கணுக்கால் வலி, பாத வலி, மூட்டு வலி, இடுப்பு வலி போன்றவைகளை பெரும்பாலானவர்கள் அனுபவிக்கிறார்கள். ஒருசில பயிற்சிகளை செய்து வருவதன் மூலம் வலிகளில் இருந்து நிவாரணம் பெறலாம்.
கணுக்கால் வலி, பாத வலி, மூட்டு வலி, இடுப்பு வலி போன்றவைகளை பெரும்பாலானவர்கள் அனுபவிக்கிறார்கள். உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்தியாவில் ஆறில் ஒருவர் நாள்பட்ட வலியால் அவதிப்படுகிறார்கள். ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 18 சதவீதம் பேர் மூட்டுவலி, பாத வலி போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கிறது. அதற்கு வாழ்க்கைமுறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள்தான் காரணம். நிறைய பேர் வலியை குறைக்க வலி நிவாரணிகளை நாடுகிறார்கள். அதனை சார்ந்திருப்பதைவிட ஒருசில பயிற்சிகளை செய்து வருவதன் மூலம் வலிகளில் இருந்து நிவாரணம் பெறலாம்.
குதிகால் பயிற்சி:
நாற்காலியின் பின்பகுதியில் கால்களை ஊன்றி நிற்க வேண்டும். கைகளை நாற்காலியின் மீது வைத்து ஒரு காலை மேலே தூக்கி கால்விரல்களின் துணையுடன் நிற்க வேண்டும். சில விநாடிகளில் காலின் பின்பகுதியை மீண்டும் தரையில் வைக்க வேண்டும். ஒவ்வொரு காலையும் கொண்டு இந்த பயிற்சியை 10-15 முறை செய்ய வேண்டும். இந்த பயிற்சி முழங்கால்களைச் சுற்றியுள்ள கணுக்கால் மற்றும் தசைகளை வலுப்படுத்த உதவும்.
விரல்களால் நடப்பது:
எப்போது வேண்டுமானாலும் செய்யக்கூடிய எளிய பயிற்சி இது. கால் விரல்களை மட்டும் தரையில் அழுத்தி மெதுவாக நடக்க வேண்டும். பின்னர் வேகத்தை சற்று அதிகரிக்க வேண்டும். ஆரம்பத்தில் 5 நிமிடங்கள் இந்த நடை பயிற்சியை மேற்கொள்ளலாம். பின்னர் படிப்படியாக நேரத்தை அதிகப்படுத்தலாம். இது கணுக்கால்களுக்கு அழுத்தம் கொடுத்து அதனை வலுப்படுத்த உதவும்.

நடை பயிற்சி:
கால் விரல்களை நன்றாக மடக்கிக்கொள்ள வேண்டும். பின்னர் விரல்களுக்கு இடையில் ஏதாவது பொருளை செருகி வைத்து அது கீழே விழாத அளவுக்கு சிறிது நேரம் நடக்க வேண்டும். இந்த பயிற்சிக்கு கால்விரல்களையும், பாதங்களையும் பயன்படுத்த வேண்டும்.
பந்து மூலம் பயிற்சி:
கால்களின் கீழ் டென்னிஸ் பந்தை வைத்து இந்த பயிற்சியை மேற்கொள்ளலாம். பந்தின் மீது கால் பாதத்தை வைத்து முன்னும், பின்னுமாக மெதுவாக நகர்த்தி மசாஜ் செய்ய வேண்டும்.
பாத மசாஜ்:
ஒரு கால் விரல்களுக்கு இடையே மறு காலின் கட்டை விரலை வைத்து மென்மையாக அழுத்தி மசாஜ் கொடுங்கள். 10 முதல் 15 நிமிடங்கள் இந்த மசாஜை மேற்கொள்ளலாம்.
கால் விரல் பயிற்சி:
நாற்காலியில் அமர்ந்து கொண்டு கால் விரல்களை வட்ட வடிவத்தில் மெதுவாக சுழற்ற வேண்டும். முன்னும் பின்னுமாக கால்விரல்களை 10 தடவை சுழற்றி பயிற்சி மேற்கொள்ள வேண்டும். கணுக்கால்கள் பலவீனமாக இருப்பவர்கள் இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் நிவாரணம் கிடைக்கும்.
குதிகால் பயிற்சி:
நாற்காலியின் பின்பகுதியில் கால்களை ஊன்றி நிற்க வேண்டும். கைகளை நாற்காலியின் மீது வைத்து ஒரு காலை மேலே தூக்கி கால்விரல்களின் துணையுடன் நிற்க வேண்டும். சில விநாடிகளில் காலின் பின்பகுதியை மீண்டும் தரையில் வைக்க வேண்டும். ஒவ்வொரு காலையும் கொண்டு இந்த பயிற்சியை 10-15 முறை செய்ய வேண்டும். இந்த பயிற்சி முழங்கால்களைச் சுற்றியுள்ள கணுக்கால் மற்றும் தசைகளை வலுப்படுத்த உதவும்.
விரல்களால் நடப்பது:
எப்போது வேண்டுமானாலும் செய்யக்கூடிய எளிய பயிற்சி இது. கால் விரல்களை மட்டும் தரையில் அழுத்தி மெதுவாக நடக்க வேண்டும். பின்னர் வேகத்தை சற்று அதிகரிக்க வேண்டும். ஆரம்பத்தில் 5 நிமிடங்கள் இந்த நடை பயிற்சியை மேற்கொள்ளலாம். பின்னர் படிப்படியாக நேரத்தை அதிகப்படுத்தலாம். இது கணுக்கால்களுக்கு அழுத்தம் கொடுத்து அதனை வலுப்படுத்த உதவும்.

நடை பயிற்சி:
கால் விரல்களை நன்றாக மடக்கிக்கொள்ள வேண்டும். பின்னர் விரல்களுக்கு இடையில் ஏதாவது பொருளை செருகி வைத்து அது கீழே விழாத அளவுக்கு சிறிது நேரம் நடக்க வேண்டும். இந்த பயிற்சிக்கு கால்விரல்களையும், பாதங்களையும் பயன்படுத்த வேண்டும்.
பந்து மூலம் பயிற்சி:
கால்களின் கீழ் டென்னிஸ் பந்தை வைத்து இந்த பயிற்சியை மேற்கொள்ளலாம். பந்தின் மீது கால் பாதத்தை வைத்து முன்னும், பின்னுமாக மெதுவாக நகர்த்தி மசாஜ் செய்ய வேண்டும்.
பாத மசாஜ்:
ஒரு கால் விரல்களுக்கு இடையே மறு காலின் கட்டை விரலை வைத்து மென்மையாக அழுத்தி மசாஜ் கொடுங்கள். 10 முதல் 15 நிமிடங்கள் இந்த மசாஜை மேற்கொள்ளலாம்.
கால் விரல் பயிற்சி:
நாற்காலியில் அமர்ந்து கொண்டு கால் விரல்களை வட்ட வடிவத்தில் மெதுவாக சுழற்ற வேண்டும். முன்னும் பின்னுமாக கால்விரல்களை 10 தடவை சுழற்றி பயிற்சி மேற்கொள்ள வேண்டும். கணுக்கால்கள் பலவீனமாக இருப்பவர்கள் இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் நிவாரணம் கிடைக்கும்.
ஷாம்பு, சோப்பு வகைகளுக்கு ‘டாட்டா’ சொல்லுங்கள். அதற்குப் பதில் சிகைக்காய், அரப்பு, பாசிப்பருப்பு மாவு போன்ற இயற்கையானவற்றைத் தேர்ந்தெடுங்கள்.
முடி, அல்லது சிகை என்பது அடித்தோலில் காணப்படும் மயிர்க்கால்களிலிருந்து வளரும் இழை வடிவமுடைய புரத இழைகளாலான உயரியப் பொருளாகும், முடி வளர்வது பாலூட்டிகளின் ஒரு குறிப்பிடத்தக்கப் பண்பாக உள்ளது.
பல்வேறு வகையான முடிகளைக் (முடி நீக்குதல், முடி ஒப்பனைகள்) குறித்த மனப்பாங்கு பல்வேறு காலகட்டங்களில், கலாச்சாரங்களில் பரவலாக வேறுபட்டுக் காணப்பட்டாலும் முடியானது தனி மனிதனின் நம்பிக்கைகள் அல்லது சமூக நிலையை சுட்டுவதாக அமைந்துள்ளது.
முடி கொட்டாமல் இருக்க- இயற்கை தீர்வுகள்:- சந்தையில் கிடைக்கும் முடி கொட்டுதலைத் தடுக்கும் பொருட்களை பயன்படுத்துவதால் பக்க விளைவுகள் ஏதேனும் உள்ளதா என்ற கேள்வி கள் எப்போதும் இருக்கும். இதை மனதில் வைத்துக்கொண்டு எதையும் பயன்படுத்தாமல் அப்படியே விட்டு விட்டாலும் வேகமாக முடி கழிந்து கொண்டிருப்பவர்களுக்கு அபாயம் நிற்கப் போவ தில்லை. வழுக்கை விழுவதை தடுக்க சிறந்த ஒரே வழி இயற்கையான பாட்டி வைத்தியத்தை மேற் கொள்வதே சிறந்தது.
முடியை அலச வேண்டும்:- எப்போதும் தலை முடியை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். முடி கொட்டுதலுக்கு முக்கிய காரணமான பொடுகு மற்றும் அரிப்பிலிருந்து இது தடுக்கும். முடிக்கு ஷாம்பு போடுவதை தடுக்க வேண்டும். ரசாயனப் பொருட்கள் முடிக்கு கேடு விளைவிக்கும். முடியை வலுவிழக்கச் செய்யும்.
கடுகு எண்ணைய்:- ஒரு கப் கடுகு எண்ணெயை எடுத்து நான்கு டீஸ்பூன் மருதாணி இலைகளுடன் கலக்கவும். இந்த கலவையை நன்கு கொதிக்க வைத்து, பின்னர் வடிகட்டி ஒரு குப்பியில் நிரப்பி வைத்துக் கொள்ளவும். இந்த எண்ணெயை வைத்துத்தலையை நன்கு மசாஜ் செய்து கொண்டால் முடி ஆரோக்கியத்தை பெறும்.
வெந்தயம்:- சில டீஸ்பூன் வெந்தயத்தை நன்கு அரைத்து அதை ஒரு கப் தண்ணீரில் கலந்து கொள்ளவும், இந்த கரைசலை தலைமுடியில் நன்கு தடவி 40 நிமிடங்களுக்கு ஊற வைத்து பின் தண்ணீரில் முடியை அலசி விட வேண்டும். இதை தொடர்ந்து ஒரு மாத காலம் செய்து வந்தால் முடி கழிதல் குறையும்.
மசாஜ்:- முடியை குளிர்ந்த நீரில் அலசி, தலை முடியையும், ஸ்கால்ப்பையும் கைகளால் நன்கு கோதி விட்டு மசாஜ் செய்ய வேண்டும். இது தலையில் ரத்த ஓட்டத்தை தூண்டி முடி கொட்டு வதை தடுக்கும்.
வெங்காயம்:- தலையில் வழுக்கை விழ ஆரம்பித்து விட்டதா? கவலையை விடுங்கள். பச்சை வெங் காயம் ஒன்றை எடுத்துக்கொண்டு, வழுக்கை விழும் இடத்தில், தோல் சிவக்கும் வரை தேய்த்து பின்னர் அங்கே தேனை தட வினால், முடி வளர்ச்சிக்கு இந்த முறை ஒரு தூண்டுதலாக இருக்கும்.
முட்டை:- முட்டையின் மஞ்சள் கரு மற்றும் தேனை ஒன்றாக கலந்து, அந்த கலவையை தலையில் தடவி மசாஜ் செய்தாலும் கழிதல் குறையும். இந்த கலவை தலையில் நன்கு உட்காரும் வரை சுமார் அரை மணி நேரத்துக்கு ஊற வைத்து, பின் தண்ணீரில் அலசி விடவும்.
இயற்கை ஷாம்பு:- 5 டீஸ்பூன் தயிர், 1 டீஸ்பூன் எலு மிச்சை சாறு மற்றும் 2 டீஸ்பூன் பாசிப்பயறு மாவை ஒன்றாக கலந்து, அதனை தலைக்கு தேய்த்து, ஊற வைத்து, நீரில் அலசினால், முடி கழிதல் நின்று நன்கு ஆரோக் கியமாக வளரும்.
தேங்காய் எண்ணெய்:- ஒரு கப் தேங்காய் எண்ணெயைசூடேற்றி, காய வைத்த நெல்லிக் கனியை அதில் போட்டு, கொதிக்க விட்டு வடிகட்டி அதனை ஒரு பாட்டிலில் ஊற்றி, தினமும் தலையிலும், தலை முடியிலும் நன்கு மசாஜ் செய்தால் முடி கொட்டு தலின் அளவு கண்டிப்பாக குறையும்.
நெல்லிக்காய் மற்றும் எலுமிச்சை சாறு:- நெல்லிக்காய் மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒன்றாக கலந்து முடிக்கு தேய்த்து மசாஜ் செய்து குளித்தால், முடி உதிர்வை குறைக்கலாம். இது முடி வளர்வதற்கும் ஒரு சிறந்த தூண்டுகோலாக இருக்கும்.
பசலைக்கீரை:- தினமும் ஒரு கப் பசலைக்கீரை சாற்றை பருகினால் முடிகொட்டுவதை தவிர்க்கலாம்.
கொத்தமல்லி:- பச்சை கொத்தமல்லியை வாங்கி, அதை நன்றாக அரைத்து - 1 கப் அளவு சாறு எடுத்து, முடியை நன்கு அலசுங்கள், அது வும் ஒரு தீர்வே.
தேங்காய்ப் பால்:- தலையை தேங்காய் பாலால் அலசுவதும் கூட முடி கழிதலுக்கு உடனடி நிவாரணி.
கறுகறு கூந்தலுக்கு:- சுத்தமான தேங்காய் எண்ணெயில் கறிவேப்பிலைத் துளிர் சேர்த்து கொதிக்க வைத்து கூந்தலில் தடவிக் கொள்ளுங்கள்.
ஒவ்வொரு முறை எண்ணெய் தடவும் போதும் மண்டை ஓட்டுப் பகுதித்தோலை விரல் நுனியால் மசாஜ் செய்யத் தவறாதீர்கள். ஷாம்பு, சோப்பு வகைகளுக்கு ‘டாட்டா’ சொல்லுங்கள். அதற்குப் பதில் சிகைக்காய், அரப்பு, பாசிப்பருப்பு மாவு போன்ற இயற்கையானவற்றைத் தேர்ந்தெடுங்கள்.
பல்வேறு வகையான முடிகளைக் (முடி நீக்குதல், முடி ஒப்பனைகள்) குறித்த மனப்பாங்கு பல்வேறு காலகட்டங்களில், கலாச்சாரங்களில் பரவலாக வேறுபட்டுக் காணப்பட்டாலும் முடியானது தனி மனிதனின் நம்பிக்கைகள் அல்லது சமூக நிலையை சுட்டுவதாக அமைந்துள்ளது.
முடி கொட்டாமல் இருக்க- இயற்கை தீர்வுகள்:- சந்தையில் கிடைக்கும் முடி கொட்டுதலைத் தடுக்கும் பொருட்களை பயன்படுத்துவதால் பக்க விளைவுகள் ஏதேனும் உள்ளதா என்ற கேள்வி கள் எப்போதும் இருக்கும். இதை மனதில் வைத்துக்கொண்டு எதையும் பயன்படுத்தாமல் அப்படியே விட்டு விட்டாலும் வேகமாக முடி கழிந்து கொண்டிருப்பவர்களுக்கு அபாயம் நிற்கப் போவ தில்லை. வழுக்கை விழுவதை தடுக்க சிறந்த ஒரே வழி இயற்கையான பாட்டி வைத்தியத்தை மேற் கொள்வதே சிறந்தது.
முடியை அலச வேண்டும்:- எப்போதும் தலை முடியை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். முடி கொட்டுதலுக்கு முக்கிய காரணமான பொடுகு மற்றும் அரிப்பிலிருந்து இது தடுக்கும். முடிக்கு ஷாம்பு போடுவதை தடுக்க வேண்டும். ரசாயனப் பொருட்கள் முடிக்கு கேடு விளைவிக்கும். முடியை வலுவிழக்கச் செய்யும்.
கடுகு எண்ணைய்:- ஒரு கப் கடுகு எண்ணெயை எடுத்து நான்கு டீஸ்பூன் மருதாணி இலைகளுடன் கலக்கவும். இந்த கலவையை நன்கு கொதிக்க வைத்து, பின்னர் வடிகட்டி ஒரு குப்பியில் நிரப்பி வைத்துக் கொள்ளவும். இந்த எண்ணெயை வைத்துத்தலையை நன்கு மசாஜ் செய்து கொண்டால் முடி ஆரோக்கியத்தை பெறும்.
வெந்தயம்:- சில டீஸ்பூன் வெந்தயத்தை நன்கு அரைத்து அதை ஒரு கப் தண்ணீரில் கலந்து கொள்ளவும், இந்த கரைசலை தலைமுடியில் நன்கு தடவி 40 நிமிடங்களுக்கு ஊற வைத்து பின் தண்ணீரில் முடியை அலசி விட வேண்டும். இதை தொடர்ந்து ஒரு மாத காலம் செய்து வந்தால் முடி கழிதல் குறையும்.
மசாஜ்:- முடியை குளிர்ந்த நீரில் அலசி, தலை முடியையும், ஸ்கால்ப்பையும் கைகளால் நன்கு கோதி விட்டு மசாஜ் செய்ய வேண்டும். இது தலையில் ரத்த ஓட்டத்தை தூண்டி முடி கொட்டு வதை தடுக்கும்.
வெங்காயம்:- தலையில் வழுக்கை விழ ஆரம்பித்து விட்டதா? கவலையை விடுங்கள். பச்சை வெங் காயம் ஒன்றை எடுத்துக்கொண்டு, வழுக்கை விழும் இடத்தில், தோல் சிவக்கும் வரை தேய்த்து பின்னர் அங்கே தேனை தட வினால், முடி வளர்ச்சிக்கு இந்த முறை ஒரு தூண்டுதலாக இருக்கும்.
முட்டை:- முட்டையின் மஞ்சள் கரு மற்றும் தேனை ஒன்றாக கலந்து, அந்த கலவையை தலையில் தடவி மசாஜ் செய்தாலும் கழிதல் குறையும். இந்த கலவை தலையில் நன்கு உட்காரும் வரை சுமார் அரை மணி நேரத்துக்கு ஊற வைத்து, பின் தண்ணீரில் அலசி விடவும்.
இயற்கை ஷாம்பு:- 5 டீஸ்பூன் தயிர், 1 டீஸ்பூன் எலு மிச்சை சாறு மற்றும் 2 டீஸ்பூன் பாசிப்பயறு மாவை ஒன்றாக கலந்து, அதனை தலைக்கு தேய்த்து, ஊற வைத்து, நீரில் அலசினால், முடி கழிதல் நின்று நன்கு ஆரோக் கியமாக வளரும்.
தேங்காய் எண்ணெய்:- ஒரு கப் தேங்காய் எண்ணெயைசூடேற்றி, காய வைத்த நெல்லிக் கனியை அதில் போட்டு, கொதிக்க விட்டு வடிகட்டி அதனை ஒரு பாட்டிலில் ஊற்றி, தினமும் தலையிலும், தலை முடியிலும் நன்கு மசாஜ் செய்தால் முடி கொட்டு தலின் அளவு கண்டிப்பாக குறையும்.
நெல்லிக்காய் மற்றும் எலுமிச்சை சாறு:- நெல்லிக்காய் மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒன்றாக கலந்து முடிக்கு தேய்த்து மசாஜ் செய்து குளித்தால், முடி உதிர்வை குறைக்கலாம். இது முடி வளர்வதற்கும் ஒரு சிறந்த தூண்டுகோலாக இருக்கும்.
பசலைக்கீரை:- தினமும் ஒரு கப் பசலைக்கீரை சாற்றை பருகினால் முடிகொட்டுவதை தவிர்க்கலாம்.
கொத்தமல்லி:- பச்சை கொத்தமல்லியை வாங்கி, அதை நன்றாக அரைத்து - 1 கப் அளவு சாறு எடுத்து, முடியை நன்கு அலசுங்கள், அது வும் ஒரு தீர்வே.
தேங்காய்ப் பால்:- தலையை தேங்காய் பாலால் அலசுவதும் கூட முடி கழிதலுக்கு உடனடி நிவாரணி.
கறுகறு கூந்தலுக்கு:- சுத்தமான தேங்காய் எண்ணெயில் கறிவேப்பிலைத் துளிர் சேர்த்து கொதிக்க வைத்து கூந்தலில் தடவிக் கொள்ளுங்கள்.
ஒவ்வொரு முறை எண்ணெய் தடவும் போதும் மண்டை ஓட்டுப் பகுதித்தோலை விரல் நுனியால் மசாஜ் செய்யத் தவறாதீர்கள். ஷாம்பு, சோப்பு வகைகளுக்கு ‘டாட்டா’ சொல்லுங்கள். அதற்குப் பதில் சிகைக்காய், அரப்பு, பாசிப்பருப்பு மாவு போன்ற இயற்கையானவற்றைத் தேர்ந்தெடுங்கள்.
பெற்றோர் தம் இறுதிக் காலத்தை எவ்வளவு மகிழ்ச்சியோடு கழிக்கிறார்களோ, அவ்வளவு நல்ல மகிழ்ச்சியை நீங்களும் உங்கள் பிள்ளைகளும் எதிர்காலத்தில் அடைய முடியும் என்பதைக் கனவிலும் நினைவிலும் மறந்துவிடாதீர்கள் என்பார் எமர்சன்.
என் தாயார், நேரடியாக நம் நாட்டுச் சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டதில்லை. ஆனால், பள்ளியில் படிக்கும்போது, வழிபாட்டுக் கூட்டங்களில், வகுப்பறைகளில், போட்டி மேடைகளில்... சுதந்திரம் நமது நாட்டுக்கு எவ்வளவு அவசியம் எனத் தொடர்ந்து அவர் பேசியிருக்கிறார். பெண்ணுக்குப் பொருளாதாரச் சுதந்திரம் மட்டும் போதாது. பெண்ணின் விருப்பங்களையும், லட்சியங்களையும் மதித்து ஏற்றுக்கொண்டு அவள் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்கும் குடும்ப அமைப்பு நமக்குத் தேவை என்றும் அம்மா கூட்டங்களில் பேசியிருக்கிறார்.
இதெல்லாம் அவளின் இளமைப்பருவத்தில் நேர்ந்த பசுமையான நிகழ்வுகள். 1931-ல் பிறந்தவள் என் அம்மா. விடுதலைக்கு முந்தைய நமது சமூகத்தில் அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு என்ற நிலைதான் இருந்தது. ஆனால், என் அம்மா, ஒரு மிகப்பெரிய கூட்டுக்குடும்பத்தின் (16 குழந்தைகளுக்கு) முதல் மகளாகப் பிறந்திருந்தபோதிலும், தன் வீட்டுச் சூழலை மீறியும் கல்வியில் அவள் பேரார்வம் காட்டினாள். கணிதமும், ஆங்கிலமும் அவளுக்கு இரண்டு கண்களாக இருந்தன.
மிகப்பெரிய வருவாய் இல்லாத நிலையிலும், தன் குழந்தைகள் அனைவரையும் என் தாயார், மிக உயர்ந்த படிப்புகள் படிக்க வைத்தாள். தம்பி, வெளிநாட்டில் ஆடிட்டராக இருக்கிறான். இன்னொரு சகோதரன், நம் நாட்டிலேயே மதிப்பு வாய்ந்த ஒரு பதிப்புப் பணியில் உள்ளான். இவ்வளவும் அம்மாவால்தான் சாத்தியமானது. ஒரு மெழுகுவர்த்தியாய் தன்னை எரித்துக்கொண்டு எங்களை அவள் வாழவைத்தாள். அம்மா நிறை வாழ்வு வாழ்ந்து, தன் 88-ம் வயதில், இந்த வருடம் ஜூன் 30-ந் தேதி மறைந்துபோனாள்.
“88 வயது வாழ்ந்தாளே, இது போதாதா உங்களுக்கு?” எனச் சிலர் கேட்கக்கூடும். 88 வயது இல்லை, ஆயிரம் வருடம் வாழ்ந்து என் தாயார் இறந்தாலும், அப்போதும் இன்னும் ஓர் ஆயிரம் வருடம் என் தாயார் வாழ்ந்திருக்கக்கூடாதா என்றுதான் நான் நினைப்பேன். அம்மா என் குருதியில் கலந்திருக்கிறாள், என் நாடி நரம்புகளில் அவள் ஓடுகிறாள். சங்கரரும், பட்டினத்தடிகளும் இன்னும் பலப்பல ஞானிகளுமே தாயன்பை மறக்கமுடியாமல் திணறினர் என்றால், என்னைப் போன்றவர்கள், எப்படி எம் தாயாரை மறக்க முடியும்?
இந்த உலகம் எனக்கு அவள் காட்டியது. இந்த வாழ்க்கை எனக்கு அவள் தந்தது. இந்த உருவம் அவள் கொடுத்த கொடை. என் அம்மா என்பதற்காக, இதை நான் சொல்லவில்லை. அம்மா என்ற ஓர் ஆல மரத்தின் கீழ் நான் இளைப்பாறி இருக்கிறேன். அம்மா என்றோர் உயர் ஆலயத்தில் நான் மெய்மறந்து சிரம் தாழ்ந்து நின்றிருக்கிறேன். என் ஒவ்வொரு செயலிலும், இதைப்பற்றி அம்மா என்ன நினைப்பாள் என்ற ஒரு நினைவு, என்னை அறியாமலேயே கலந்திருக்கிறது.
ஐயோ, அம்மா போய்விட்டாளே எல்லாம் பொய்யாய்ப், பழங்கதையாய்ப், பழங்கனவாய்ப், பாழ்நினைவாய் மெல்லப் போய்விடக்கூடாதே. தாயின் நினைவுகளுக்கும் அவள் வாழ்ந்து காட்டிய அந்த நெறிமுறைகளுக்கும், உண்மையோடும் பொறுப்போடும் நான் நடந்துகொள்வேன் என்று எனக்கு நானே உறுதி அளித்துக்கொள்கிறேன். வான்மேலிருந்து அம்மா என்னைக் கவனித்துக்கொண்டிருக்கிறாள். அவள் மனம் குளிரும்படி, என் எஞ்சிய வாழ்நாளை நான் அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் என் ஒரே ஆசை.
என் தந்தையார் ஒரு முன்னோடித் தொழிற்சங்கவாதி. இரண்டாம் உலகப்போர் முடிந்த சில தினங்களில், 1946-ல், ‘இந்தியன் ஒயிட் காலர் வொர்க்கர்ஸ்’ எனப்படும் அலுவலகப் பணியாளர்களுக்காகப் பாடுபடும் ‘கமர்சியல் எம்ப்ளாய்ஸ் அசோசியேஷன்’ என்ற தொழிற்சங்க அமைப்பை, என் தந்தையார் தொடங்கினார்.
இது போல், ஒரு முன்மாதிரித் தொழிற்சங்கத்தைத் தொடங்கி, அதன் தலைவராகப் பணியாற்றும்போது, வீட்டுப் பொறுப்புகளைக் கவனிப்பது மிகச் சிரமமான காரியமாகும். ஆனால், என் தந்தைக்கு அந்தச் சிரமம் வராமல், குடும்பத்தின் முழுப்பொறுப்பையும் என் தாயார் எடுத்துக்கொண்டார். குடும்பத்திற்காக என் தாய், தன்னை உருக்கிக் கொண்டமையால்தான், வெளி உலகில் என் தந்தையார் சிறந்த தொழிற்சங்கவாதியாக திகழ முடிந்தது. அச்சங்கம் சார்பாக நடைபெற்ற வேலை நிறுத்தத்திற்கு தலைமை ஏற்றதால்தான், என் தந்தையார், தன் பணியிலிருந்தே நீக்கப்பட்டார். அதற்காக அவர் சோர்ந்து போகவில்லை.
ஏழை, எளிய மக்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று என் தந்தை போலவே என் தாயும் விரும்பினாள். அதற்காகவே என் தாய், என்னை வக்கீலுக்குப் படிக்கச் சொன்னாள். அன்னையின் அந்த லட்சியத்தின் பலனாகத்தான், இன்று நான் நீதிபதியாகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். இப்படிப்பட்ட தாயும், தந்தையும் எல்லோருக்கும் அமைவதில்லை. “அரிதினும் அரிதான உயர்ந்த பெற்றோர், உனக்குக் கிடைத்திருக்கிறார்கள்” என, என் நண்பர்கள் கூறுவர். அவர்களிடத்தில், நான் இதைத்தான் சொல்வேன். “கடவுளின் அருளால் இந்தப் பெற்றோர் எனக்குக் கிடைத்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் நான் காரணம் இல்லை. ஏதோ நல்லூழ்தான், இதை என் வாழ்வில் சாத்தியப்படுத்தியிருக்கிறது” என்பேன்.
என் தெய்வம் என் தாய்தான். இன்றைக்கு முதியோர் இல்லங்கள் நாட்டில் பெருகிவிட்டன. அவற்றைப் பார்க்கும்போதெல்லாம் என் அம்மா துயரப்படுவார். எனக்கும் மனம் சங்கடப்படும். ‘பாரம்பரியப் பெருமையுள்ள நமது பாரத நாட்டில், இவ்வாறு வயது முதிர்ந்த பெற்றோர் தனிமைப்படுவது என்பது, நமது வாழ்வுக்குச் சிறிதும் நல்லது இல்லை’ என்பதுதான் என் எண்ணம்.
என் தந்தையும், தாயும் கடைசிவரை என்னோடு இருந்தார்கள் என்கிற அந்த மகிழ்ச்சி, என் வாழ்வில் பணத்தாலும், பதவியாலும் புகழாலும் நான் பெறமுடியாத அரிய ஓர் மகிழ்ச்சி என்பதை நான் நன்கு அறிவேன். இந்த மகிழ்ச்சி எனக்கு மட்டுமில்லை, நம் அனைவருக்கும் கடவுள் அருளால் கிடைக்கவேண்டும் என்பதே என் பிரார்த்தனை. ஆகவே இளைஞர்களே... உதாசீனப்படுத்தாது உங்கள் பெற்றோரைக் கடைசிவரை பராமரியுங்கள்.
உங்கள் பெற்றோர் உங்களை மனம் கனிந்து வாழ்த்தினால், இந்த உலகில் நீங்கள் விரும்பும் எதுவும் தானாக உங்களைத் தேடிவரும். அதற்கு நாம், நம்மைத் தகுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை, என் மகனுக்கும் நான் சொல்லிவைத்திருக்கிறேன். இது நாம் அனைவரும் நம் வாழ்வில் தவறாமல் பின்பற்றவேண்டிய உயர்ந்ததோர் ஒழுக்கமாகும்.
வயதான நமது பெற்றோரைப் பராமரிக்காமல் கைவிடுவதுதான், ‘பாவங்களிலேயே பெரும்பாவம்’. இந்தப் பாவத்தை நான் செய்யவில்லை. இதற்கு என் சகோதரியும், மனைவியுமே காரணமாவர். அவர்களின் நல்ல ஒத்துழைப்பு இல்லாமல், என் 88 வயது தாயாரைக் கடந்த 20 வருடங்களாக நான் பராமரித்திருக்க முடியாது. முதியோர் இல்லங்கள் என்பவை, முதியோருக்கு இளையோர் உருவாக்கிய சிறைச்சாலைகள் என்பது என் கருத்து.
இந்த உலகில் உள்ள எல்லாச் சிறைச்சாலைகளும் என்றைக்கு மூடப்படுகின்றனவோ, அன்றைக்குத்தான் நாகரிகச் சமூகம் உருவாகும் என்று எத்தனையோ மேதைகள் சொல்லியிருக்கிறார்கள். குறைந்தபட்சம், இந்த முதியோர் சிறைச்சாலைகளையாவது மூட நாம் பாடுபட வேண்டும். இந்த உலகில் பிறந்தவர் அனைவரும் வேறு என்ன சாதித்திருக்கிறோமோ இல்லையோ, பெற்றோரை அவர்தம் கடைசிகாலத்தில் நிம்மதியாகவும், மனநிறைவோடும் வாழச் செய்வோம் என்றால், அதைக்காட்டிலும் பெரிய ஒரு சாதனை நம் வாழ்வில் வேறு இருக்க முடியாது என, மனப்பூர்வமாக நான் நம்புகிறேன்.
நம் வாசகர்களிடம், நான் வேண்டிக்கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். இளைஞர்களே, உங்கள் பெற்றோரை ஒருபோதும் நீங்கள் சுமையாக நினைக்காதீர்கள். அவர்களே உங்கள் தெய்வங்கள். அவர்கள் தம் இறுதிக் காலத்தை எவ்வளவு மகிழ்ச்சியோடு கழிக்கிறார்களோ, அவ்வளவு நல்ல மகிழ்ச்சியை நீங்களும் உங்கள் பிள்ளைகளும் எதிர்காலத்தில் அடைய முடியும் என்பதைக் கனவிலும் நினைவிலும் மறந்துவிடாதீர்கள் என்பார் எமர்சன். தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் காணப்படும் என்பார் வள்ளுவர். இந்த இரு பெரும் அறிஞர்களின் நிறைமொழிகளை நன்றியுடன் நினைத்துக்கொள்கிறேன். இளைஞர்களே. நான் உங்களுக்கு விடுக்கும் செய்தி இதுதான். ஒவ்வொருவரும் அவரவர் பெற்றோரைக் காப்பாற்றுங்கள். ஒருபோதும் உங்கள் பெற்றோரைக் கைவிட்டுவிடாதீர்கள்.
நீதிபதி எஸ்.வைத்தியநாதன்
இதெல்லாம் அவளின் இளமைப்பருவத்தில் நேர்ந்த பசுமையான நிகழ்வுகள். 1931-ல் பிறந்தவள் என் அம்மா. விடுதலைக்கு முந்தைய நமது சமூகத்தில் அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு என்ற நிலைதான் இருந்தது. ஆனால், என் அம்மா, ஒரு மிகப்பெரிய கூட்டுக்குடும்பத்தின் (16 குழந்தைகளுக்கு) முதல் மகளாகப் பிறந்திருந்தபோதிலும், தன் வீட்டுச் சூழலை மீறியும் கல்வியில் அவள் பேரார்வம் காட்டினாள். கணிதமும், ஆங்கிலமும் அவளுக்கு இரண்டு கண்களாக இருந்தன.
மிகப்பெரிய வருவாய் இல்லாத நிலையிலும், தன் குழந்தைகள் அனைவரையும் என் தாயார், மிக உயர்ந்த படிப்புகள் படிக்க வைத்தாள். தம்பி, வெளிநாட்டில் ஆடிட்டராக இருக்கிறான். இன்னொரு சகோதரன், நம் நாட்டிலேயே மதிப்பு வாய்ந்த ஒரு பதிப்புப் பணியில் உள்ளான். இவ்வளவும் அம்மாவால்தான் சாத்தியமானது. ஒரு மெழுகுவர்த்தியாய் தன்னை எரித்துக்கொண்டு எங்களை அவள் வாழவைத்தாள். அம்மா நிறை வாழ்வு வாழ்ந்து, தன் 88-ம் வயதில், இந்த வருடம் ஜூன் 30-ந் தேதி மறைந்துபோனாள்.
“88 வயது வாழ்ந்தாளே, இது போதாதா உங்களுக்கு?” எனச் சிலர் கேட்கக்கூடும். 88 வயது இல்லை, ஆயிரம் வருடம் வாழ்ந்து என் தாயார் இறந்தாலும், அப்போதும் இன்னும் ஓர் ஆயிரம் வருடம் என் தாயார் வாழ்ந்திருக்கக்கூடாதா என்றுதான் நான் நினைப்பேன். அம்மா என் குருதியில் கலந்திருக்கிறாள், என் நாடி நரம்புகளில் அவள் ஓடுகிறாள். சங்கரரும், பட்டினத்தடிகளும் இன்னும் பலப்பல ஞானிகளுமே தாயன்பை மறக்கமுடியாமல் திணறினர் என்றால், என்னைப் போன்றவர்கள், எப்படி எம் தாயாரை மறக்க முடியும்?
இந்த உலகம் எனக்கு அவள் காட்டியது. இந்த வாழ்க்கை எனக்கு அவள் தந்தது. இந்த உருவம் அவள் கொடுத்த கொடை. என் அம்மா என்பதற்காக, இதை நான் சொல்லவில்லை. அம்மா என்ற ஓர் ஆல மரத்தின் கீழ் நான் இளைப்பாறி இருக்கிறேன். அம்மா என்றோர் உயர் ஆலயத்தில் நான் மெய்மறந்து சிரம் தாழ்ந்து நின்றிருக்கிறேன். என் ஒவ்வொரு செயலிலும், இதைப்பற்றி அம்மா என்ன நினைப்பாள் என்ற ஒரு நினைவு, என்னை அறியாமலேயே கலந்திருக்கிறது.
ஐயோ, அம்மா போய்விட்டாளே எல்லாம் பொய்யாய்ப், பழங்கதையாய்ப், பழங்கனவாய்ப், பாழ்நினைவாய் மெல்லப் போய்விடக்கூடாதே. தாயின் நினைவுகளுக்கும் அவள் வாழ்ந்து காட்டிய அந்த நெறிமுறைகளுக்கும், உண்மையோடும் பொறுப்போடும் நான் நடந்துகொள்வேன் என்று எனக்கு நானே உறுதி அளித்துக்கொள்கிறேன். வான்மேலிருந்து அம்மா என்னைக் கவனித்துக்கொண்டிருக்கிறாள். அவள் மனம் குளிரும்படி, என் எஞ்சிய வாழ்நாளை நான் அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் என் ஒரே ஆசை.
என் தந்தையார் ஒரு முன்னோடித் தொழிற்சங்கவாதி. இரண்டாம் உலகப்போர் முடிந்த சில தினங்களில், 1946-ல், ‘இந்தியன் ஒயிட் காலர் வொர்க்கர்ஸ்’ எனப்படும் அலுவலகப் பணியாளர்களுக்காகப் பாடுபடும் ‘கமர்சியல் எம்ப்ளாய்ஸ் அசோசியேஷன்’ என்ற தொழிற்சங்க அமைப்பை, என் தந்தையார் தொடங்கினார்.
இது போல், ஒரு முன்மாதிரித் தொழிற்சங்கத்தைத் தொடங்கி, அதன் தலைவராகப் பணியாற்றும்போது, வீட்டுப் பொறுப்புகளைக் கவனிப்பது மிகச் சிரமமான காரியமாகும். ஆனால், என் தந்தைக்கு அந்தச் சிரமம் வராமல், குடும்பத்தின் முழுப்பொறுப்பையும் என் தாயார் எடுத்துக்கொண்டார். குடும்பத்திற்காக என் தாய், தன்னை உருக்கிக் கொண்டமையால்தான், வெளி உலகில் என் தந்தையார் சிறந்த தொழிற்சங்கவாதியாக திகழ முடிந்தது. அச்சங்கம் சார்பாக நடைபெற்ற வேலை நிறுத்தத்திற்கு தலைமை ஏற்றதால்தான், என் தந்தையார், தன் பணியிலிருந்தே நீக்கப்பட்டார். அதற்காக அவர் சோர்ந்து போகவில்லை.
ஏழை, எளிய மக்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று என் தந்தை போலவே என் தாயும் விரும்பினாள். அதற்காகவே என் தாய், என்னை வக்கீலுக்குப் படிக்கச் சொன்னாள். அன்னையின் அந்த லட்சியத்தின் பலனாகத்தான், இன்று நான் நீதிபதியாகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். இப்படிப்பட்ட தாயும், தந்தையும் எல்லோருக்கும் அமைவதில்லை. “அரிதினும் அரிதான உயர்ந்த பெற்றோர், உனக்குக் கிடைத்திருக்கிறார்கள்” என, என் நண்பர்கள் கூறுவர். அவர்களிடத்தில், நான் இதைத்தான் சொல்வேன். “கடவுளின் அருளால் இந்தப் பெற்றோர் எனக்குக் கிடைத்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் நான் காரணம் இல்லை. ஏதோ நல்லூழ்தான், இதை என் வாழ்வில் சாத்தியப்படுத்தியிருக்கிறது” என்பேன்.
என் தெய்வம் என் தாய்தான். இன்றைக்கு முதியோர் இல்லங்கள் நாட்டில் பெருகிவிட்டன. அவற்றைப் பார்க்கும்போதெல்லாம் என் அம்மா துயரப்படுவார். எனக்கும் மனம் சங்கடப்படும். ‘பாரம்பரியப் பெருமையுள்ள நமது பாரத நாட்டில், இவ்வாறு வயது முதிர்ந்த பெற்றோர் தனிமைப்படுவது என்பது, நமது வாழ்வுக்குச் சிறிதும் நல்லது இல்லை’ என்பதுதான் என் எண்ணம்.
என் தந்தையும், தாயும் கடைசிவரை என்னோடு இருந்தார்கள் என்கிற அந்த மகிழ்ச்சி, என் வாழ்வில் பணத்தாலும், பதவியாலும் புகழாலும் நான் பெறமுடியாத அரிய ஓர் மகிழ்ச்சி என்பதை நான் நன்கு அறிவேன். இந்த மகிழ்ச்சி எனக்கு மட்டுமில்லை, நம் அனைவருக்கும் கடவுள் அருளால் கிடைக்கவேண்டும் என்பதே என் பிரார்த்தனை. ஆகவே இளைஞர்களே... உதாசீனப்படுத்தாது உங்கள் பெற்றோரைக் கடைசிவரை பராமரியுங்கள்.
உங்கள் பெற்றோர் உங்களை மனம் கனிந்து வாழ்த்தினால், இந்த உலகில் நீங்கள் விரும்பும் எதுவும் தானாக உங்களைத் தேடிவரும். அதற்கு நாம், நம்மைத் தகுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை, என் மகனுக்கும் நான் சொல்லிவைத்திருக்கிறேன். இது நாம் அனைவரும் நம் வாழ்வில் தவறாமல் பின்பற்றவேண்டிய உயர்ந்ததோர் ஒழுக்கமாகும்.
வயதான நமது பெற்றோரைப் பராமரிக்காமல் கைவிடுவதுதான், ‘பாவங்களிலேயே பெரும்பாவம்’. இந்தப் பாவத்தை நான் செய்யவில்லை. இதற்கு என் சகோதரியும், மனைவியுமே காரணமாவர். அவர்களின் நல்ல ஒத்துழைப்பு இல்லாமல், என் 88 வயது தாயாரைக் கடந்த 20 வருடங்களாக நான் பராமரித்திருக்க முடியாது. முதியோர் இல்லங்கள் என்பவை, முதியோருக்கு இளையோர் உருவாக்கிய சிறைச்சாலைகள் என்பது என் கருத்து.
இந்த உலகில் உள்ள எல்லாச் சிறைச்சாலைகளும் என்றைக்கு மூடப்படுகின்றனவோ, அன்றைக்குத்தான் நாகரிகச் சமூகம் உருவாகும் என்று எத்தனையோ மேதைகள் சொல்லியிருக்கிறார்கள். குறைந்தபட்சம், இந்த முதியோர் சிறைச்சாலைகளையாவது மூட நாம் பாடுபட வேண்டும். இந்த உலகில் பிறந்தவர் அனைவரும் வேறு என்ன சாதித்திருக்கிறோமோ இல்லையோ, பெற்றோரை அவர்தம் கடைசிகாலத்தில் நிம்மதியாகவும், மனநிறைவோடும் வாழச் செய்வோம் என்றால், அதைக்காட்டிலும் பெரிய ஒரு சாதனை நம் வாழ்வில் வேறு இருக்க முடியாது என, மனப்பூர்வமாக நான் நம்புகிறேன்.
நம் வாசகர்களிடம், நான் வேண்டிக்கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். இளைஞர்களே, உங்கள் பெற்றோரை ஒருபோதும் நீங்கள் சுமையாக நினைக்காதீர்கள். அவர்களே உங்கள் தெய்வங்கள். அவர்கள் தம் இறுதிக் காலத்தை எவ்வளவு மகிழ்ச்சியோடு கழிக்கிறார்களோ, அவ்வளவு நல்ல மகிழ்ச்சியை நீங்களும் உங்கள் பிள்ளைகளும் எதிர்காலத்தில் அடைய முடியும் என்பதைக் கனவிலும் நினைவிலும் மறந்துவிடாதீர்கள் என்பார் எமர்சன். தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் காணப்படும் என்பார் வள்ளுவர். இந்த இரு பெரும் அறிஞர்களின் நிறைமொழிகளை நன்றியுடன் நினைத்துக்கொள்கிறேன். இளைஞர்களே. நான் உங்களுக்கு விடுக்கும் செய்தி இதுதான். ஒவ்வொருவரும் அவரவர் பெற்றோரைக் காப்பாற்றுங்கள். ஒருபோதும் உங்கள் பெற்றோரைக் கைவிட்டுவிடாதீர்கள்.
நீதிபதி எஸ்.வைத்தியநாதன்
இளநீரை எந்த நேரத்தில் குடிப்பதால் அதிக பலன்கள் கிடைக்கும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
காலையில் வெறும் வயிற்றில் இளநீரை முதலில் குடிப்பது பல வழிகளில் உதவும். இளநீரில் லாரிக் அமிலம் உள்ளது, இது உங்களின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, மேலும் உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், எடை குறைப்பிற்கும் உதவுகிறது. கர்ப்பிணி பெண்கள் உடலில் நீர்ச்சத்தை தக்கவைக்கவும், மலச்சிக்கலை குணப்படுத்தவும் உதவும். மேலும் கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு காலை நேரத்தில் ஏற்படும் நெஞ்செரிச்சலை குணப்படுத்த உதவுகிறது.

உடற்பயிற்சிக்கு முன்னர் இளநீர் குடிப்பது உடலில் நீரேற்றத்தை அதிகரிக்கவும், ஆற்றலை அதிகரிக்கவும் பயன்படுகிறது. உடற்பயிற்சிக்கு பின்னர் இளநீர் குடிப்பது தீவிர உடற்பயிற்சியால் இழந்த எலெக்ட்ரோலைட்டுகளின் இழப்பை சமன் செய்கிறது. இளநீர் குடிப்பது சோர்வை எதிர்த்துப் போராட உதவுகிறது மற்றும் சிறந்த ஆற்றல் அதிகரிக்கும் பானங்களில் ஒன்றாகும்.
உணவுக்கு முன் புத்துணர்ச்சியூட்டும் இளநீரைக் குடிப்பது, உங்கள் உணவை முழுமையாக்குகிறது, இதனால் அதிகப்படியான உணவு சாப்பிடுவதைத் தடுக்கிறது. இது கலோரிகளில் குறைவாக இருப்பதால் செரிமானத்தை எளிதாக்குகிறது. உணவுக்கு பின் இதனைக் குடிப்பது வயிற்றில் வீக்கத்தை ஏற்படுவதைத் தடுக்கிறது. தொடர்ச்சியாக இளநீரைக் குடிப்பது உடலில் எலெக்ட்ரோலைட்டுகள் அளவை சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது.
தூங்க செல்வதற்கு முன் சிறிது இளநீர் குடிப்பது மனஅழுத்தத்தை குறைக்கவும், மன அமைதியை ஏற்படுத்தவும் உதவுகிறது. தூங்கும் முன்னர் இளநீர் குடிப்பது உடலில் இருக்கும் அனைத்து நச்சுகளையும் வெளியேற்றவும், உங்கள் சிறுநீர் பாதையை சுத்தப்படுத்தவும் உதவும். இது உங்களை நோய்த்தொற்றில் இருந்து பாதுகாக்கவும், சிறுநீரக பிரச்சினைகளில் இருந்தும் உங்களை பாதுகாக்கிறது.
திடீரென எடை கூடுவதற்கு சில காரணங்களும் உள்ளன. அவை என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.
திடீரென எடை கூடுவதற்கு சில காரணங்களும் உள்ளன. அவை என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.
* தைராய்டு குறைபாடு, தைராய்டு குறைவாக இருப்பின் எடை கூடும்.
* அதிகம் உண்பவர்களுக்கு எடை கூடிய படியே இருக்கும்.
* பலர் தாகம் எடுப்பதனை பசி என்று எண்ணி தண்ணீருக்குப் பதிலாக உணவு எடுத்துக் கொள்வர். இதனால் இவர்கள் அதிக எடை கூடி விடுவர். ஆக போதிய அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பதும் எடை கூடுவதற்கு ஒரு காரணம் ஆகும்.
* என்னதான் அளவாக முறையாக சாப்பிட்டாலும் அதிக மனஉளைச்சல், மனச்சோர்வு, உடல் சோர்வு இவை இருந்தால் நாம் உணராமலேயே அதிக உணவினை அல்லது ஏதாவது நொறுக்குத் தீனியினை நாம் எடுத்துக் கொள்வோம். எனவே மன உளைச்சல், மனச்சோர்வு, உடல் சோர்வு இல்லாது நம்மை நாம் காத்துக் கொள்ள வேண்டும்.
* சிலருக்கு உணவில் உப்பு சற்று தூக்கலாக இருக்க வேண்டும். ஊறுகாய், அப்பளம், சிப்ஸ், இல்லாமல் சிலருக்கு உயிர் வாழவே முடிவதில்லை. உப்பு உடலில் நீர் தேக்கத்தினை ஏற்படுத்தி உடல் எடையினைக் கூட்டும்.
* கருத்தடை மாத்திரைகள் உடல் எடையினைக் கூட்டும் வாய்ப்புகள் அதிகம். மருத்துவ ஆலோசனைப்படியே கருத்தடை மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* நன்கு உடற்பயிற்சி செய்து விட்டு சர்க்கரை, அதிக கொழுப்பு உணவுகளை உட்கொள்வது தவறு, புரத உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* அவசியமான சத்துகள் உணவில் இல்லாவிடில் எடை கூடும்.
* மிக அதிக உடற்பயிற்சியும் தவறே.
* தேவையான அளவு ஆழ்ந்த தூக்கம் இல்லாவிடில் எடை கூடும்.
* புரதம் குறைந்த உணவு எடையினைக் கூட்டும்.
* சிலர் உட்கார்ந்த இடத்தில் காலை முதல் மாலை வரை அசையாது உட்கார்ந்திருப்பர். இவர்களுக்கு எடை கூடிக் கொண்டே போகும்.
* வயது கூடும் பொழுது சற்று எடை கூடும். ஆக சில சாதாரண தவறுகளை சிறு முயற்சி எடுத்து திருத்திக் கொண்டாலே நாம் அளவான எடையோடு இருக்கலாம்.
* வெளிப்போக்கில் ரத்தம் இருக்கின்றதா?
* ரத்த சோகை ஏற்பட்டுள்ளதா?
* நடந்தால் அதிக மூச்சு வாங்குகின்றதா?
* வயிறு உப்பிசம், இறுக பிடித்த உணர்வு உள்ளதா?
* கடுமையான மலச் சிக்கல் உள்ளதா?
* வெளிபோக்கு சற்று வித்தியாசமாய் உள்ளதா? உடனடியாக உங்கள் குடல் பற்றி மருத்துவ பரிசோதனையை மருத்துவர் மூலம் பெற வேண்டும்.
குழந்தைகளுக்கு பிரைடு ரைஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வீட்டிலேயே எளிய முறையில் பன்னீர் சேர்த்து பிரைடு ரைஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பன்னீர் - ஒரு கப்
பாஸ்மதி அரிசி - ஒரு கப்
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 2 பல்
கேரட் - 1
பீன்ஸ் - 7
வெங்காயத்தாள் வெள்ளைப் பகுதி - கால் கப்
வெங்காயத்தாள் பச்சைப் பகுதி - அரை கப்
உப்பு, மிளகு - தேவையான அளவு

செய்முறை :
ப.மிளகாய், பூண்டு, கேரட், பீன்1, வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வெந்நீரில் பன்னீரைப் போட்டு 5 நிமிடம் கழித்து தண்ணீரை வடித்து மிக பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள்.
பாஸ்மதி அரிசியைக் கழுவி உதிரியாக வேக வைத்து கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் பூண்டு, பச்சைமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கிய பின்னர் வெங்காயத்தாளின் வெள்ளைப்பகுதி, கேரட், பீன்ஸ் மற்றும் துளி உப்பு சேர்த்துக் கிளறி வேக வையுங்கள்.
இத்துடன் நறுக்கிய பன்னீரைச் சேர்த்து காய்கறிகளோடு பன்னீர் சேரும் வரை வதக்குங்கள்.
இதில் வேக வைத்த பாஸ்மதி அரிசியைச் சேர்த்து மெதுவாகக் கிளறுங்கள். இல்லையென்றால் அரிசி உடைந்துவிடும்.
இறுதியாக உப்பு, மிளகுத்தூள், வெங்காயத்தாள் பச்சைப் பகுதியைச் சேர்த்து தூவி கிளறி அடுப்பை அணைத்து காரமான கிரேவியோடு பரிமாறுங்கள்.
பன்னீர் - ஒரு கப்
பாஸ்மதி அரிசி - ஒரு கப்
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 2 பல்
கேரட் - 1
பீன்ஸ் - 7
வெங்காயத்தாள் வெள்ளைப் பகுதி - கால் கப்
வெங்காயத்தாள் பச்சைப் பகுதி - அரை கப்
உப்பு, மிளகு - தேவையான அளவு
எண்ணெய் - ஒன்றரை டேபிள்ஸ்பூன்

செய்முறை :
ப.மிளகாய், பூண்டு, கேரட், பீன்1, வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வெந்நீரில் பன்னீரைப் போட்டு 5 நிமிடம் கழித்து தண்ணீரை வடித்து மிக பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள்.
பாஸ்மதி அரிசியைக் கழுவி உதிரியாக வேக வைத்து கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் பூண்டு, பச்சைமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கிய பின்னர் வெங்காயத்தாளின் வெள்ளைப்பகுதி, கேரட், பீன்ஸ் மற்றும் துளி உப்பு சேர்த்துக் கிளறி வேக வையுங்கள்.
இத்துடன் நறுக்கிய பன்னீரைச் சேர்த்து காய்கறிகளோடு பன்னீர் சேரும் வரை வதக்குங்கள்.
இதில் வேக வைத்த பாஸ்மதி அரிசியைச் சேர்த்து மெதுவாகக் கிளறுங்கள். இல்லையென்றால் அரிசி உடைந்துவிடும்.
இறுதியாக உப்பு, மிளகுத்தூள், வெங்காயத்தாள் பச்சைப் பகுதியைச் சேர்த்து தூவி கிளறி அடுப்பை அணைத்து காரமான கிரேவியோடு பரிமாறுங்கள்.
சூப்பரான பன்னீர் பிரைடு ரைஸ் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.






