என் மலர்
ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்
அதிகளவு சத்துக்கள் நிறைந்த கேழ்வரகை தினமும் சர்க்கரை நோயாளிகள் சேர்த்து கொள்வது நல்லது. இன்று கேழ்வரகில் உப்பு உருண்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கேழ்வரகு - 100 கிராம்,
உப்பு - தேவைக்கேற்ப,
சிறிது தண்ணீர்,
பெருங்காயம் - அரை டீஸ்பூன்,
கடுகு - கால் டீஸ்பூன்,
வெங்காயம் - 2,
பச்சை மிளகாய் - 2,
கறிவேப்பிலை - சிறிதளவு,
எண்ணெய் - 2 டீஸ்பூன்.

செய்முறை :
வெங்காயம் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
கடுகு, கறிவேப்பிலை, பச்சைமிளகாயை எண்ணெயில் விட்டு வதக்கி இறக்கும்போது பெருங்காயத்தூளைச் சேர்த்து செய்ய வேண்டும்.
ராகியுடன் உப்புத் தண்ணீர் கலந்து உதிரி போல் ஆக்கி ஆவிகட்டி கடாயிலிருந்து வதக்கி இறக்கிய பொருள்களோடு சேர்த்து கிளற வேண்டும்.
உருண்டை பிடிக்கும் அளவுக்கு வந்தவுடன அதை உருண்டையாக்கி இட்லி பாத்திரத்தில் வைத்து 10 நிமிடங்கள் ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
ராகி உப்பு உருண்டை தயார்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கேழ்வரகு - 100 கிராம்,
உப்பு - தேவைக்கேற்ப,
சிறிது தண்ணீர்,
பெருங்காயம் - அரை டீஸ்பூன்,
கடுகு - கால் டீஸ்பூன்,
வெங்காயம் - 2,
பச்சை மிளகாய் - 2,
கறிவேப்பிலை - சிறிதளவு,
எண்ணெய் - 2 டீஸ்பூன்.

செய்முறை :
வெங்காயம் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
கடுகு, கறிவேப்பிலை, பச்சைமிளகாயை எண்ணெயில் விட்டு வதக்கி இறக்கும்போது பெருங்காயத்தூளைச் சேர்த்து செய்ய வேண்டும்.
ராகியுடன் உப்புத் தண்ணீர் கலந்து உதிரி போல் ஆக்கி ஆவிகட்டி கடாயிலிருந்து வதக்கி இறக்கிய பொருள்களோடு சேர்த்து கிளற வேண்டும்.
உருண்டை பிடிக்கும் அளவுக்கு வந்தவுடன அதை உருண்டையாக்கி இட்லி பாத்திரத்தில் வைத்து 10 நிமிடங்கள் ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
ராகி உப்பு உருண்டை தயார்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
நமது உடலுக்கும், மனதுக்கும் நன்மை தரும் சைக்கிள் பயணத்தை தொடங்குவதற்கு தயங்குவது அறிவார்ந்த செயலாக இருக்க முடியாது. எனவே அனைவரும் சைக்கிளை பயன்படுத்துவோம்.
இன்றைக்கு மனித உடலில் ஆரோக்கியம் வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் மருத்துவ செலவு அதிகரித்து வருகிறது. எனவே ஆரோக்கியத்தை பாதுகாக்க பலரும் உடற்பயிற்சி நிலையங்களை தேடி செல்கின்றனர். இதற்காக தனியாக நேரம் ஒதுக்கி, பணத்தை செலவு செய்தும் உடல் ஆரோக்கியம் என்பது கேள்விக்குறியாக இருந்து வருகிறது. இந்த நிலையை மாற்றிட அனைத்து தரப்பினரும் குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் சைக்கிள் ஓட்டுவதை தங்களின் அன்றாட வழக்கமாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
அப்படி செய்வதன் மூலம் மாணவர்களின் உடல் ஆரோக்கியம் மேம்படும். அப்படி இல்லாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டினால் எரிபொருள் செலவு அதிகமாகும். எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்த வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவரிடமும் உள்ளது.
தற்போது பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், வயதுக்கு மீறிய உடல் பருமனுடன் காணப்படுகின்றனர். இதற்கு உடலில் கொழுப்புச்சத்து அதிகரித்தது மட்டும் காரணம் அல்ல. இதற்கு சாப்பிடும் உணவை சத்தாக மாற்றும் அளவுக்கு உடல் உழைப்பு இல்லாததே முழு முதற்காரணமாகும். இன்றைய கல்வி முறையில் பள்ளிக்கு செல்வதற்கு முன்னதாகவும், பள்ளி விட்டு வந்த பிறகும் சிறப்பு வகுப்புகளுக்கு மாணவர்கள் செல்ல வேண்டி உள்ளது. இதனால் விளையாடுவதற்கும், உடற்பயிற்சி செய்வதற்கும் போதிய நேரம் இல்லாத நிலை உள்ளது. மேலும் மாணவர்கள் உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த முடிவது இல்லை.

எனவே மாணவர்கள், பள்ளிக்கூடம், சிறப்பு வகுப்பு, நண்பர்களை சந்திக்க, கடைக்கு செல்வது மற்றும் அருகில் உள்ள இடங்களுக்கு செல்வதற்கு முடிந்த வரை சைக்கிள்களையே பயன்படுத்துவது அவர்களின் உடலுக்கும், மனதுக்கும் நன்மை செய்வதாக இருக்கும். அதோடு நிலையான அழகை தருவதாகவும் இருக்கும். சைக்கிளை பயன்படுத்துவதன் மூலம் உடற்பயிற்சிக்கு தனியாக நேரம் ஒதுக்க வேண்டியதோ, உடற்பயிற்சி மையத்துக்கு சென்று தனியாக செலவு செய்ய வேண்டிய அவசியமோ உருவாகாது.
மாணவ பருவத்தில் சைக்கிள் ஓட்ட தயங்குவது பல்வேறு உடல் உபாதைகளுக்கு காரணமாகி வயதான காலத்தில் நடைபயிற்சி செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி விடக்கூடாது. எனவே நமது உடலுக்கும், மனதுக்கும் நன்மை தரும் சைக்கிள் பயணத்தை தொடங்குவதற்கு தயங்குவது அறிவார்ந்த செயலாக இருக்க முடியாது. எனவே அனைவரும் சைக்கிளை பயன்படுத்துவோம்.
அப்படி செய்வதன் மூலம் மாணவர்களின் உடல் ஆரோக்கியம் மேம்படும். அப்படி இல்லாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டினால் எரிபொருள் செலவு அதிகமாகும். எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்த வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவரிடமும் உள்ளது.
தற்போது பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், வயதுக்கு மீறிய உடல் பருமனுடன் காணப்படுகின்றனர். இதற்கு உடலில் கொழுப்புச்சத்து அதிகரித்தது மட்டும் காரணம் அல்ல. இதற்கு சாப்பிடும் உணவை சத்தாக மாற்றும் அளவுக்கு உடல் உழைப்பு இல்லாததே முழு முதற்காரணமாகும். இன்றைய கல்வி முறையில் பள்ளிக்கு செல்வதற்கு முன்னதாகவும், பள்ளி விட்டு வந்த பிறகும் சிறப்பு வகுப்புகளுக்கு மாணவர்கள் செல்ல வேண்டி உள்ளது. இதனால் விளையாடுவதற்கும், உடற்பயிற்சி செய்வதற்கும் போதிய நேரம் இல்லாத நிலை உள்ளது. மேலும் மாணவர்கள் உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த முடிவது இல்லை.

எனவே மாணவர்கள், பள்ளிக்கூடம், சிறப்பு வகுப்பு, நண்பர்களை சந்திக்க, கடைக்கு செல்வது மற்றும் அருகில் உள்ள இடங்களுக்கு செல்வதற்கு முடிந்த வரை சைக்கிள்களையே பயன்படுத்துவது அவர்களின் உடலுக்கும், மனதுக்கும் நன்மை செய்வதாக இருக்கும். அதோடு நிலையான அழகை தருவதாகவும் இருக்கும். சைக்கிளை பயன்படுத்துவதன் மூலம் உடற்பயிற்சிக்கு தனியாக நேரம் ஒதுக்க வேண்டியதோ, உடற்பயிற்சி மையத்துக்கு சென்று தனியாக செலவு செய்ய வேண்டிய அவசியமோ உருவாகாது.
மாணவ பருவத்தில் சைக்கிள் ஓட்ட தயங்குவது பல்வேறு உடல் உபாதைகளுக்கு காரணமாகி வயதான காலத்தில் நடைபயிற்சி செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி விடக்கூடாது. எனவே நமது உடலுக்கும், மனதுக்கும் நன்மை தரும் சைக்கிள் பயணத்தை தொடங்குவதற்கு தயங்குவது அறிவார்ந்த செயலாக இருக்க முடியாது. எனவே அனைவரும் சைக்கிளை பயன்படுத்துவோம்.
பெண்களின் உடலுக்கு அத்தியாவசியமான ஊட்டச் சத்துகளில் கால்சியம் முக்கியமானது. அதனால் பெண்கள் தினமும் பால் பருகி வருவது அவசியமானது.
பெண்களின் உடலுக்கு அத்தியாவசியமான ஊட்டச்சத்துகளில் கால்சியம் முக்கியமானது. பற்கள், எலும்புகளின் வளர்ச்சிக்கு கால்சியம் அவசியமானது. இதயத்துடிப்பு, ரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்தவும், திரவ சமநிலையை சீராக பராமரிக்கவும் கால்சியம் இன்றியமையாதது. இது ஏராளமான உணவு பொருட்களில் நிறைந்திருக்கிறது. அவைகளை தேர்ந்தெடுத்து சாப்பிட்டு வருவதன் மூலம் கால்சியம் பற்றாக்குறையில் இருந்து விடுபடலாம். ஆண்களுக்கு தினமும் குறைந்தபட்சம் 1000 மில்லி கிராம் கால்சியமும், பெண்களுக்கு 1200 மில்லி கிராம் கால்சியமும் அவசியம்.
ஒரு கப் பாலில் 276-352 மில்லி கிராம் கால்சியம் இருக்கிறது. பாலாடை கட்டி போன்ற பால் வகை பொருட்களிலும் கால்சியம் அதிகம் கலந்திருக்கிறது. பாலில் வைட்டமின் ஏ, டி மற்றும் புரத சத்துக்களும் நிறைந்திருக்கின்றன. அதனால் பெண்கள் தினமும் பால் பருகி வருவது அவசியமானது.
தயிரிலும் கால்சியம் உள்ளது. தொடர்ந்து தயிர் சாப்பிடுவது உடல் நலனை மேம்படுத்தும். வளர்சிதை மாற்றத்துக்கு உதவும். நீரிழிவு நோய், இதய நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.
பாதாமும் கால்சியம் அதிக அளவு நிரம்பப்பெற்றது. தினமும் பாதாம் சாப்பிட்டு வருவது, உடல் கொழுப்பு, ரத்த அழுத்தம் மற்றும் வளர்சிதை மாற்ற நோய்க்கான பிற ஆபத்துக்களை குறைக்க உதவும்.
100 கிராம் பீன்சில் 36 மில்லி கிராம் கால்சியம் இருக்கிறது. அதனை வேகவைத்தோ, சூப்பாக தயாரித்தோ, காய்கறிகளுடன் சமைத்தோ உண்ணலாம்.

100 கிராம் கோழி இறைச்சியில் 13 மில்லி கிராம் கால்சியம் உள்ளது. ஆனால் வேகவைத்த கோழி முட்டை ஒன்றில் 50 மில்லி கிராம் கால்சியம் உள்ளது. ஆதலால் தினமும் உணவில் ஒரு முட்டையை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
100 கிராம் பேரீச்சம்பழத்தில் 64 மில்லி கிராம் கால்சியம் இருக்கிறது.
கால் கப் சோயா பாலில் 100 மில்லி கிராம் கால்சியம் நிறைந்திருக்கிறது. இதில் புரதம் மற்றும் ஒமேகா 3 அமிலமும் சேர்ந்திருக்கிறது. இதனை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இதய நோய்க்கான அபாயத்தை குறைக்கலாம். உடலுக்கு தேவையான ஆற்றலையும் பெறலாம்.
வேக வைத்த கால் கப் கீரையை சாப்பிட்டால் அதன் மூலம் 120 மில்லி கிராம் கால்சியம் பெறலாம். கீரைவகைகளுடன் பாஸ்தா போன்ற உணவு களை கலந்து சாப்பிட்டு கால்சியத்தின் அளவை அதிகப்படுத்தலாம்.
ஆரஞ்சு பழத்தை சாறு எடுத்தோ, பிற பழவகைகளுடன் கலந்து சாலட்டாகவோ தயார் செய்து சாப்பிடலாம். அரை கப் ஆரஞ்சுபழம் சுமார் 50 மில்லிகிராம் கால்சியத்தை வழங்கும்.
அன்னாசி பழத்தையும் அடிக்கடி சாப்பிட்டு வரலாம். அதிலும் நிறைய கால்சியம் உள்ளது.
கடல் உணவுகள், பழங்கள், பருப்பு வகைகள் உள்ளிட்டவைகளிலும் கால்சியம் அதிக அளவு இருக்கிறது.
ஒரு கப் பாலில் 276-352 மில்லி கிராம் கால்சியம் இருக்கிறது. பாலாடை கட்டி போன்ற பால் வகை பொருட்களிலும் கால்சியம் அதிகம் கலந்திருக்கிறது. பாலில் வைட்டமின் ஏ, டி மற்றும் புரத சத்துக்களும் நிறைந்திருக்கின்றன. அதனால் பெண்கள் தினமும் பால் பருகி வருவது அவசியமானது.
தயிரிலும் கால்சியம் உள்ளது. தொடர்ந்து தயிர் சாப்பிடுவது உடல் நலனை மேம்படுத்தும். வளர்சிதை மாற்றத்துக்கு உதவும். நீரிழிவு நோய், இதய நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.
பாதாமும் கால்சியம் அதிக அளவு நிரம்பப்பெற்றது. தினமும் பாதாம் சாப்பிட்டு வருவது, உடல் கொழுப்பு, ரத்த அழுத்தம் மற்றும் வளர்சிதை மாற்ற நோய்க்கான பிற ஆபத்துக்களை குறைக்க உதவும்.
100 கிராம் பீன்சில் 36 மில்லி கிராம் கால்சியம் இருக்கிறது. அதனை வேகவைத்தோ, சூப்பாக தயாரித்தோ, காய்கறிகளுடன் சமைத்தோ உண்ணலாம்.

100 கிராம் கோழி இறைச்சியில் 13 மில்லி கிராம் கால்சியம் உள்ளது. ஆனால் வேகவைத்த கோழி முட்டை ஒன்றில் 50 மில்லி கிராம் கால்சியம் உள்ளது. ஆதலால் தினமும் உணவில் ஒரு முட்டையை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
100 கிராம் பேரீச்சம்பழத்தில் 64 மில்லி கிராம் கால்சியம் இருக்கிறது.
கால் கப் சோயா பாலில் 100 மில்லி கிராம் கால்சியம் நிறைந்திருக்கிறது. இதில் புரதம் மற்றும் ஒமேகா 3 அமிலமும் சேர்ந்திருக்கிறது. இதனை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இதய நோய்க்கான அபாயத்தை குறைக்கலாம். உடலுக்கு தேவையான ஆற்றலையும் பெறலாம்.
வேக வைத்த கால் கப் கீரையை சாப்பிட்டால் அதன் மூலம் 120 மில்லி கிராம் கால்சியம் பெறலாம். கீரைவகைகளுடன் பாஸ்தா போன்ற உணவு களை கலந்து சாப்பிட்டு கால்சியத்தின் அளவை அதிகப்படுத்தலாம்.
ஆரஞ்சு பழத்தை சாறு எடுத்தோ, பிற பழவகைகளுடன் கலந்து சாலட்டாகவோ தயார் செய்து சாப்பிடலாம். அரை கப் ஆரஞ்சுபழம் சுமார் 50 மில்லிகிராம் கால்சியத்தை வழங்கும்.
அன்னாசி பழத்தையும் அடிக்கடி சாப்பிட்டு வரலாம். அதிலும் நிறைய கால்சியம் உள்ளது.
கடல் உணவுகள், பழங்கள், பருப்பு வகைகள் உள்ளிட்டவைகளிலும் கால்சியம் அதிக அளவு இருக்கிறது.
வெயில் காலத்தில் எண்ணெய் ஸ்நானம் உடல் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியம். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
தீபாவளி மட்டுமல்ல. எல்லா நாளுமே எண்ணெய் தேய்த்து குளிக்க விசேஷமான நாள்தான். அதனால் எல்லா நாட்களுமே தலைக்கு குளித்தால் சிறப்பாக இருக்கும். ஏனெனில், இவ்வுடலில் தலைமிக முக்கியமான ஒரு பாகம். தலையை சுத்தமாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியமாக இருக்கிறது. தினசரி குளியலில் எப்படி தலையை மட்டும் புறக்கணிக்க ஆரம்பித்தனர் என்பதே பெரிய ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.
நம் கலாச்சாரத்தில் குளியல் என்றாலே முதல் சொம்பு தண்ணீரை தலையில் ஊற்றிக்கொள்ள வேண்டும், உடல் மேல் ஊற்றிக் கொள்ளமாட்டார்கள். ஏனெனில் நம் உடல் ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் உள்ளது. அப்படி இருக்கையில் உடல்மீது முதலில் தண்ணீரை ஊற்றினால் உடலுடைய வெப்பம் தலையை தாக்கும் வாய்ப்பு சற்று அதிகம். அதனால் முதல் சொம்பு நீர் தலையில்தான் ஊற்ற வேண்டும் என்று வகுத்து வைத்திருந்தார்கள். இந்த வழக்கம் நம் கலாச்சாரத்தில் பலகாலமாக நிலவி வந்திருக்கின்றது.
ஆனால் இப்போது மக்களுக்கு சோம்பேறித்தனம் அதிகமாகி விட்டது. அதனால் தலைக்கு குளிப்பதை ஒரு சடங்காகமாற்றி வருடத்திற்கு ஒருமுறை என்றாக்கி விட்டார்கள். சிலர் மாதத்திற்கு ஒருமுறை என்று வைத்திருக்கின்றனர். ஸ்நானம் என்றாலே அது தலை முதல் கால்விரல் வரைஎன்றுதான் இருக்க வேண்டும்.

நம் உடலில் அடிப்படையாக வாதம், பித்தம், கபம் என மூன்று விதமான குணங்கள் இருக்கின்றன. பெரும்பாலும் தென்னிந்தியாவில் வெப்பநிலை சற்று அதிகமாக இருக்கும்.இதனை சமனிலைப்படுத்துவதற்கு எண்ணெய் ஸ்நானம் மிக அவசியம். குறிப்பாக வெயிலில் சுற்றுபவர்களுக்கு உஷ்ணம் சம்பந்தமான பிரச்சனை கொஞ்சம் அதிகமாகவே இருக்கலாம். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த எண்ணெய் ஸ்நானம் ஒரு வரம்.
சூடு பிரச்சனை அதிகமாக இருக்கும் போது தொப்புள் பகுதியில் எண்ணெய் பூசினால் சூடு குறையும். நீங்கள் கவனித்திருக்கலாம், பிறந்த குழந்தைக்கு தலை உச்சியில் ஒரு மென்மையான இடம் இருக்கும். குழந்தையை குளிப்பாட்டும் போது அவ்விடத்தில் லேசாக எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டு வதையும் நீங்கள் பார்த்திருக்க முடியும். ஏனெனில், இவ்விடத்தில் கொஞ்சம் எண்ணெய் வைத்தாலே உடல் உஷ்ணம் குறைவதை நீங்கள் உணரலாம். இதையே தொண்டைக் குழியிலோ அல்லது தொப்புள் பகுதியிலோகூட வைக்கலாம்.
அதனால் அவரவர் வசதிக்கு ஏற்பமாதம் ஒருமுறையோ அல்லது வாரம் ஒருமுறையோ தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கும் வழக்கத்தை உருவாக்கினார்கள். மனிதனுடைய உடல் ஆரோக்கியத்தை மனதில் வைத்துதான் இவ்வழக்கங்கள் உருவாக்கப்பட்டன. குறிப்பாக இந்த வெயில் காலத்தில் எண்ணெய் ஸ்நானம் உடல் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியம். மற்ற நேரங்களில் சாதாரணமாக குளிக்கும்போதும் தலை முதல் கால் வரை குளிப்பது மிக அவசியம்.
நம் கலாச்சாரத்தில் குளியல் என்றாலே முதல் சொம்பு தண்ணீரை தலையில் ஊற்றிக்கொள்ள வேண்டும், உடல் மேல் ஊற்றிக் கொள்ளமாட்டார்கள். ஏனெனில் நம் உடல் ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் உள்ளது. அப்படி இருக்கையில் உடல்மீது முதலில் தண்ணீரை ஊற்றினால் உடலுடைய வெப்பம் தலையை தாக்கும் வாய்ப்பு சற்று அதிகம். அதனால் முதல் சொம்பு நீர் தலையில்தான் ஊற்ற வேண்டும் என்று வகுத்து வைத்திருந்தார்கள். இந்த வழக்கம் நம் கலாச்சாரத்தில் பலகாலமாக நிலவி வந்திருக்கின்றது.
ஆனால் இப்போது மக்களுக்கு சோம்பேறித்தனம் அதிகமாகி விட்டது. அதனால் தலைக்கு குளிப்பதை ஒரு சடங்காகமாற்றி வருடத்திற்கு ஒருமுறை என்றாக்கி விட்டார்கள். சிலர் மாதத்திற்கு ஒருமுறை என்று வைத்திருக்கின்றனர். ஸ்நானம் என்றாலே அது தலை முதல் கால்விரல் வரைஎன்றுதான் இருக்க வேண்டும்.

நம் உடலில் அடிப்படையாக வாதம், பித்தம், கபம் என மூன்று விதமான குணங்கள் இருக்கின்றன. பெரும்பாலும் தென்னிந்தியாவில் வெப்பநிலை சற்று அதிகமாக இருக்கும்.இதனை சமனிலைப்படுத்துவதற்கு எண்ணெய் ஸ்நானம் மிக அவசியம். குறிப்பாக வெயிலில் சுற்றுபவர்களுக்கு உஷ்ணம் சம்பந்தமான பிரச்சனை கொஞ்சம் அதிகமாகவே இருக்கலாம். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த எண்ணெய் ஸ்நானம் ஒரு வரம்.
சூடு பிரச்சனை அதிகமாக இருக்கும் போது தொப்புள் பகுதியில் எண்ணெய் பூசினால் சூடு குறையும். நீங்கள் கவனித்திருக்கலாம், பிறந்த குழந்தைக்கு தலை உச்சியில் ஒரு மென்மையான இடம் இருக்கும். குழந்தையை குளிப்பாட்டும் போது அவ்விடத்தில் லேசாக எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டு வதையும் நீங்கள் பார்த்திருக்க முடியும். ஏனெனில், இவ்விடத்தில் கொஞ்சம் எண்ணெய் வைத்தாலே உடல் உஷ்ணம் குறைவதை நீங்கள் உணரலாம். இதையே தொண்டைக் குழியிலோ அல்லது தொப்புள் பகுதியிலோகூட வைக்கலாம்.
அதனால் அவரவர் வசதிக்கு ஏற்பமாதம் ஒருமுறையோ அல்லது வாரம் ஒருமுறையோ தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கும் வழக்கத்தை உருவாக்கினார்கள். மனிதனுடைய உடல் ஆரோக்கியத்தை மனதில் வைத்துதான் இவ்வழக்கங்கள் உருவாக்கப்பட்டன. குறிப்பாக இந்த வெயில் காலத்தில் எண்ணெய் ஸ்நானம் உடல் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியம். மற்ற நேரங்களில் சாதாரணமாக குளிக்கும்போதும் தலை முதல் கால் வரை குளிப்பது மிக அவசியம்.
கிவி பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்தக்கொழுப்பை குறைப்பதோடு இதய நோய் மற்றும் சில வகை புற்றுநோய்கள் வருவதையும் தடுக்கும்.
கிவி பழத்தில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இதனை ஒரு நாளைக்கு ஒன்று சாப்பிட்டு வந்தால் மூச்சுக்கோளாறான ஆஸ்துமா நீங்கும். கிவி மாதிரி வாழைப்பழங்களில் பொட்டாசியம் அதிகம் இருக்கிறது. ஆனால் வாழைப்பழங்களை ஒப்பிடுகையில் கிவி பழத்தில் கலோரியின் அளவு குறைவு. கலோரியின் அளவு குறைவாக இருப்பதால் சோடியத்தின் அளவு குறைகிறது. இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் சோடியத்தின் அளவு குறைவதால் இதய நோய் வராமல் தடுக்கிறது.
வைட்டமின் ஈ அதிகமாக இருக்கும் உணவில் கொழுப்பும் அதிகமாக இருக்கும். ஆனால் கிவி பழத்தில் வைட்டமின் ஈ அதிகமாகவும், கொழுப்பு குறைவாகவும் உள்ளது. இதனால் ‘ஆன்டிஆக்ஸிடன்ட்’ அதிகமாவதால் ஆரோக்கியமான இதயத்தையும் தருகிறது.
போலிக் அமிலம் கிவி பழத்தில் அதிகமாக, இருப்பதால் கர்பிணிகளுக்கு மிகவும் சிறந்தது. ஏனென்றால் குழந்தைகளுக்குச் செல்லும் நரம்புக்குழலில் ஏற்படும் பிரச்சனைகளை தடுப்பதோடு, கர்ப்பிணிகளுக்குத் தேவையான வைட்டமின்களையும் தருகிறது.
மேலும் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு சிறந்ததோடு மட்டுமல்லாமல் இதய நோய் வராமலும் தடுக்கிறது. உணவுக்கட்டுப்பாட்டை மேற்கொள்வதற்கு சிறந்ததாகவும் உள்ளது. ஏனென்றால் இதில் இரும்புச்சத்து இருப்பதால் பசியையும், செரிமானத் தன்மையையும் அதிகரிக்கச் செய்கிறது.
மேலும் இரும்புச்சத்து இரத்தக்கொழுப்பை குறைப்பதோடு இதய நோய் மற்றும் சில வகை புற்றுநோய்களையும் தடுக்கிறது. இது உடல் எடையைக் குறைப்பதோடு உடலுக்கு சிறந்த பழமாகும்.
மாலை மங்கும் நேரத்தில், நல்ல சூடான, டீ அல்லது காபியுடன் மொறுமொறுவென்றும் ஏதாவது சாப்பிட தோன்றினால் பேபிகார்ன் பஜ்ஜி செய்து சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்:
பேபிகார்ன் - 10
சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
கடலை மாவு - 2 கப்
அரிசி மாவு - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சோடா உப்பு - 1 சிட்டிகை
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :
பேபிகார்னை நீளமாக இரண்டு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
ஒரு பௌலில் கடலை மாவு, அரிசி மாவு மற்றும் சோள மாவு மூன்றையும் ஒன்றாகப் போட்டுக் கொள்ள வேண்டும். பின் அதில் உப்பு, மிளகாய் தூள், சோடா உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து, பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
அதில் நறுக்கி வைத்துள்ள பேபிகார்னை போட்டு பிரட்டி, அரை மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஊற வைத்துள்ள பேபிகார்னை ஒவ்வொன்றாக போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
இப்போது சுவையான பேபிகார்ன் பஜ்ஜி ரெடி!!!
இதனை கொத்தமல்லி சட்னி அல்லது தக்காளி சாஸ் உடன் சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பேபிகார்ன் - 10
சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
கடலை மாவு - 2 கப்
அரிசி மாவு - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சோடா உப்பு - 1 சிட்டிகை
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :
பேபிகார்னை நீளமாக இரண்டு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
ஒரு பௌலில் கடலை மாவு, அரிசி மாவு மற்றும் சோள மாவு மூன்றையும் ஒன்றாகப் போட்டுக் கொள்ள வேண்டும். பின் அதில் உப்பு, மிளகாய் தூள், சோடா உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து, பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
அதில் நறுக்கி வைத்துள்ள பேபிகார்னை போட்டு பிரட்டி, அரை மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஊற வைத்துள்ள பேபிகார்னை ஒவ்வொன்றாக போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
இப்போது சுவையான பேபிகார்ன் பஜ்ஜி ரெடி!!!
இதனை கொத்தமல்லி சட்னி அல்லது தக்காளி சாஸ் உடன் சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கோபம், வருத்தம், ஏமாற்றம், எதிர்பார்ப்பு... என எந்தச் சூழல் உங்களை நகம் கடிக்க அதிகம் தூண்டுகிறது என கவனியுங்கள். அந்தச் சமயத்தில் அதிக எச்சரிக்கையோடு செயல்படுங்கள்.
நகம் கடிக்கும்போது, அதிலுள்ள அழுக்குகள் வாய் வழியாக உடலுக்குள் சென்று நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும். முக்கியமாக குடல்புழுப் பிரச்சனை ஏற்படும் வாய்ப்பு உண்டு. சிலர் நகத்தோடு சேர்த்து அதன் சதைப் பகுதியையும் கடித்துவிடுவார்கள். அப்போது அந்தப் பகுதியில் ரத்தம் வந்தால், தொற்று அபாயம் அதிகம் இருக்கும் என எடுத்துக்கொள்ளலாம். குழந்தைகளுக்கு இந்தப் பழக்கம் இருந்தால் அதிக கவனத்தோடு பார்த்துக்கொள்ளவேண்டியது அவசியம்.
இந்தப் பழக்கமுள்ளவர்களின் நகங்கள், சரியான வளர்ச்சியின்றி ஷேப்லெஸ்ஸாக இருக்கும். காரணம், தொடர்ந்து நகத்தை கடித்துக்கொண்டே இருந்தால், அதைச் சுற்றியுள்ள நகம் வளருவதற்கு உதவும் திசுக்கள் அழிந்துவிடும்.
இந்தப் பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கான சில எளிய வழிகள்...
* ஒரு செயலில் ஈடுபடும்போது அதை அதிக கவனத்தோடு செய்யவேண்டியது அவசியம். அதே நேரத்தில், தன்னிலை மறக்கும் அளவுக்கு எந்தச் செயலிலும் ஈடுபட வேண்டாம்.
* நகங்களை அவ்வப்போது வெட்டி, கடிக்க முடியாத அளவுக்கு சிறியதாக, அழுக்கு சேராமல் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்.
* வேப்பெண்ணையைப் போன்ற கசப்பான சுவையுள்ள ஏதாவதொன்றை நகத்தில் தேய்த்துக்கொள்ளளுங்கள். இதனால், நகம் கடிக்கும்போதெல்லாம் கசப்புணர்ச்சி உண்டாகி, நகத்தின் மீதான உங்கள் கவனத்தை அதிகப்படுத்தும்; அந்தப் பிரச்சனையிலிருந்து வெளிவர உதவும்.

* பதற்றமான சூழலில் சிலரால் நகத்தை கடிக்காமல் இருக்கவே முடியாது. அதுபோன்ற நேரத்தில் வேறொரு நல்ல பழக்கத்தை பழக்கப்படுத்திக்கொள்ளலாம். உதாரணமாக, ஸ்ட்ரெஸ் பால் உபயோகிப்பது, கை கழுவுவது, வாய் கொப்பளிப்பது, சாப்பிடுவது போன்றவை. கை மற்றும் வாய் தொடர்பான பயிற்சிகளாக இவை இருக்க வேண்டும்.
* கோபம், வருத்தம், ஏமாற்றம், எதிர்பார்ப்பு... என எந்தச் சூழல் உங்களை நகம் கடிக்க அதிகம் தூண்டுகிறது என கவனியுங்கள். அந்தச் சமயத்தில் அதிக எச்சரிக்கையோடு செயல்படுங்கள்.
* பலருக்கும் நகம் கடிக்கும் பழக்கம் சிறு வயதிலிருந்தே இருக்கும். ஒரே நாளில் இந்தப் பழக்கத்தை முற்றிலுமாக விட முயற்சிப்பது வீண். நகம் கடிப்பதை ஒவ்வொரு விரலாக குறைத்துக்கொண்டு வரவும். முதலில், கட்டைவிரல் நகத்தை கடிக்காமல் இருங்கள். அதைத் தொடர்ந்து சுண்டு விரல், அடுத்து மோதிர விரல்... இப்படி முயற்சி செய்வது நல்ல பலனைத் தரும்.
* மன அழுத்தத்தையும், இறுக்கமான சூழலையும் உணரும் குழந்தைகள் இந்தப் பிரச்சனைக்கு ஆளாகக்கூடும். பெற்றோர் அவர்களோடு அதிக நேரம் செலவிட்டு, நல்ல பழக்கங்களையும், நகம் கடிப்பதால் ஏற்படும் தீமைகளையும் சொல்லிக் கொடுக்கலாம். நகத்தைக் கடிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றினால், அதற்கு மாற்றாக வேறென்னவெல்லாம் செய்யலாம் என்பதையும் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கலாம்.
* உடலும் மனதும் சேர்ந்து செயல்படுவது மாதிரியான வேலைகளைச் செய்யவும். மன அழுத்தத்தைக் குறைக்க முயற்சிக்கவும். எண்ணம் மற்றும் உளவியல் பிரச்னைகளைச் சரிசெய்ய இது உதவும்.
ஒருவரின் நகத்தைவைத்தே அவருக்கு உடலில் என்ன பிரச்சனை இருக்கிறது என்று சொல்லிவிடலாம். அப்படிப்பட்ட நகத்தைச் சரியாகப் பராமரிக்க வேண்டியது அவசியம்! என்ன செய்தும் நகம் கடிக்கும் பழக்கத்திலிருந்து விடுபட முடியவில்லை என்பவர்கள், தயங்காமல் சரும மருத்துவரையும், மனநல மருத்துவரையும் அணுகி ஆலோசனை பெறலாம்.
இந்தப் பழக்கமுள்ளவர்களின் நகங்கள், சரியான வளர்ச்சியின்றி ஷேப்லெஸ்ஸாக இருக்கும். காரணம், தொடர்ந்து நகத்தை கடித்துக்கொண்டே இருந்தால், அதைச் சுற்றியுள்ள நகம் வளருவதற்கு உதவும் திசுக்கள் அழிந்துவிடும்.
இந்தப் பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கான சில எளிய வழிகள்...
* ஒரு செயலில் ஈடுபடும்போது அதை அதிக கவனத்தோடு செய்யவேண்டியது அவசியம். அதே நேரத்தில், தன்னிலை மறக்கும் அளவுக்கு எந்தச் செயலிலும் ஈடுபட வேண்டாம்.
* நகங்களை அவ்வப்போது வெட்டி, கடிக்க முடியாத அளவுக்கு சிறியதாக, அழுக்கு சேராமல் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்.
* வேப்பெண்ணையைப் போன்ற கசப்பான சுவையுள்ள ஏதாவதொன்றை நகத்தில் தேய்த்துக்கொள்ளளுங்கள். இதனால், நகம் கடிக்கும்போதெல்லாம் கசப்புணர்ச்சி உண்டாகி, நகத்தின் மீதான உங்கள் கவனத்தை அதிகப்படுத்தும்; அந்தப் பிரச்சனையிலிருந்து வெளிவர உதவும்.

* பதற்றமான சூழலில் சிலரால் நகத்தை கடிக்காமல் இருக்கவே முடியாது. அதுபோன்ற நேரத்தில் வேறொரு நல்ல பழக்கத்தை பழக்கப்படுத்திக்கொள்ளலாம். உதாரணமாக, ஸ்ட்ரெஸ் பால் உபயோகிப்பது, கை கழுவுவது, வாய் கொப்பளிப்பது, சாப்பிடுவது போன்றவை. கை மற்றும் வாய் தொடர்பான பயிற்சிகளாக இவை இருக்க வேண்டும்.
* கோபம், வருத்தம், ஏமாற்றம், எதிர்பார்ப்பு... என எந்தச் சூழல் உங்களை நகம் கடிக்க அதிகம் தூண்டுகிறது என கவனியுங்கள். அந்தச் சமயத்தில் அதிக எச்சரிக்கையோடு செயல்படுங்கள்.
* பலருக்கும் நகம் கடிக்கும் பழக்கம் சிறு வயதிலிருந்தே இருக்கும். ஒரே நாளில் இந்தப் பழக்கத்தை முற்றிலுமாக விட முயற்சிப்பது வீண். நகம் கடிப்பதை ஒவ்வொரு விரலாக குறைத்துக்கொண்டு வரவும். முதலில், கட்டைவிரல் நகத்தை கடிக்காமல் இருங்கள். அதைத் தொடர்ந்து சுண்டு விரல், அடுத்து மோதிர விரல்... இப்படி முயற்சி செய்வது நல்ல பலனைத் தரும்.
* மன அழுத்தத்தையும், இறுக்கமான சூழலையும் உணரும் குழந்தைகள் இந்தப் பிரச்சனைக்கு ஆளாகக்கூடும். பெற்றோர் அவர்களோடு அதிக நேரம் செலவிட்டு, நல்ல பழக்கங்களையும், நகம் கடிப்பதால் ஏற்படும் தீமைகளையும் சொல்லிக் கொடுக்கலாம். நகத்தைக் கடிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றினால், அதற்கு மாற்றாக வேறென்னவெல்லாம் செய்யலாம் என்பதையும் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கலாம்.
* உடலும் மனதும் சேர்ந்து செயல்படுவது மாதிரியான வேலைகளைச் செய்யவும். மன அழுத்தத்தைக் குறைக்க முயற்சிக்கவும். எண்ணம் மற்றும் உளவியல் பிரச்னைகளைச் சரிசெய்ய இது உதவும்.
ஒருவரின் நகத்தைவைத்தே அவருக்கு உடலில் என்ன பிரச்சனை இருக்கிறது என்று சொல்லிவிடலாம். அப்படிப்பட்ட நகத்தைச் சரியாகப் பராமரிக்க வேண்டியது அவசியம்! என்ன செய்தும் நகம் கடிக்கும் பழக்கத்திலிருந்து விடுபட முடியவில்லை என்பவர்கள், தயங்காமல் சரும மருத்துவரையும், மனநல மருத்துவரையும் அணுகி ஆலோசனை பெறலாம்.
வெயில் காலத்தில் ஏற்படும் தோலின் நிறமாற்றத்தை போக்க இயற்கை முறையில் கிடைக்கும் ஸ்கின்டேன் பராமரிப்பு முறைகளை பார்க்கலாம்.
வெயில் காலம் வந்துவிட்டாலே, சிலருக்குத் தோலில் நிறமாற்றம் ஆரம்பித்துவிடும். 'இதுக்காக, பார்லர் போக நேரம் இல்லையே' என்கிற பெண்களுக்காக, எளிமையான ஸ்கின்டேன் பராமரிப்பு முறைகளை பார்க்கலாம்.
வெயில் காலத்தில் நம் சருமத்தை புறஊதாக் கதிர்களிடமிருந்து காக்க, உடலில் மெலனின் அதிகமாகச் சுரக்கிறது. இதுதான் நிறமாற்றத்துக்கான முக்கிய காரணம். சரியான நேரத்தில் பாரமரிப்பு எடுத்துக்கொண்டால், இது எளிதில் சரிசெய்துவிடும் விஷயமே. எளிமையான பொருள்களைப் பயன்படுத்தியே சன் டேனிங்கை சரிசெய்துகொள்ளலாம்.
சோற்றுக்கற்றாழையை இரண்டாகக் கீறி, உள்ளே இருக்கும் நுங்கு போன்ற பொருளைத் தனியே எடுத்து, சுத்தமான தண்ணீரில் கழுவவும். பிறகு, மிக்ஸியில் போட்டு, பேஸ்ட் போன்று அரைக்கவும். முகம், கை, கால்கள், கழுத்து என நிறமாற்றம் ஏற்பட்டுள்ள இடங்களில் தடவி, 20 நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த தண்ணீரில் கழுவிவிடவும். சன் டேன் காணாமல் போகும்.

சிறிதளவு காய்ச்சாத பால், பாதாம் நான்கு, கசகசா 10 கிராம் எடுத்துக்கொள்ளவும். பாதாமை, தண்ணீரில் ஊறவைத்து, தோல் உரித்துக்கொள்ளவும். அதனுடன் கசகசா, பால் சேர்த்து பேஸ்ட் போன்று அரைத்து, டேனிங் ஏற்பட்டுள்ள இடங்களில் தேய்த்து, அரை மணி நேரம் கழித்து கழுவிவிடவும். இப்படி தினமுமோ, வாரம் ஒரு முறையோ செய்தால் சன் டேனுக்கு டாட்டா சொல்லலாம்.
முல்தானிமெட்டி மற்றும் கேரட் ஜீஸை சமஅளவில் எடுத்து, 10 சொட்டு எலுமிச்சைசாறு கலந்து, டேனிங்கான இடத்தில் பூசவும். 15 நிமிடங்கள் கழித்து கழுவிவிட்டால், சருமம் பழைய நிறத்தை அடைந்து பளபளப்பாக இருக்கும்.
வெயில் காலத்தில் கிடைக்கும் நுங்குடன், சிறிது இளநீர் சேர்த்து கலந்து, நிறமாற்றம் ஏற்பட்டுள்ள இடங்களில் தேய்க்கவும். அரை மணி நேரம் கழித்து, குளிர்ந்த நீரால் கழுவ, டேனிங் பிரச்னையை எளிதில் நீக்கலாம்.
வெயில் காலத்தில் நம் சருமத்தை புறஊதாக் கதிர்களிடமிருந்து காக்க, உடலில் மெலனின் அதிகமாகச் சுரக்கிறது. இதுதான் நிறமாற்றத்துக்கான முக்கிய காரணம். சரியான நேரத்தில் பாரமரிப்பு எடுத்துக்கொண்டால், இது எளிதில் சரிசெய்துவிடும் விஷயமே. எளிமையான பொருள்களைப் பயன்படுத்தியே சன் டேனிங்கை சரிசெய்துகொள்ளலாம்.
சோற்றுக்கற்றாழையை இரண்டாகக் கீறி, உள்ளே இருக்கும் நுங்கு போன்ற பொருளைத் தனியே எடுத்து, சுத்தமான தண்ணீரில் கழுவவும். பிறகு, மிக்ஸியில் போட்டு, பேஸ்ட் போன்று அரைக்கவும். முகம், கை, கால்கள், கழுத்து என நிறமாற்றம் ஏற்பட்டுள்ள இடங்களில் தடவி, 20 நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த தண்ணீரில் கழுவிவிடவும். சன் டேன் காணாமல் போகும்.

சிறிதளவு காய்ச்சாத பால், பாதாம் நான்கு, கசகசா 10 கிராம் எடுத்துக்கொள்ளவும். பாதாமை, தண்ணீரில் ஊறவைத்து, தோல் உரித்துக்கொள்ளவும். அதனுடன் கசகசா, பால் சேர்த்து பேஸ்ட் போன்று அரைத்து, டேனிங் ஏற்பட்டுள்ள இடங்களில் தேய்த்து, அரை மணி நேரம் கழித்து கழுவிவிடவும். இப்படி தினமுமோ, வாரம் ஒரு முறையோ செய்தால் சன் டேனுக்கு டாட்டா சொல்லலாம்.
முல்தானிமெட்டி மற்றும் கேரட் ஜீஸை சமஅளவில் எடுத்து, 10 சொட்டு எலுமிச்சைசாறு கலந்து, டேனிங்கான இடத்தில் பூசவும். 15 நிமிடங்கள் கழித்து கழுவிவிட்டால், சருமம் பழைய நிறத்தை அடைந்து பளபளப்பாக இருக்கும்.
வெயில் காலத்தில் கிடைக்கும் நுங்குடன், சிறிது இளநீர் சேர்த்து கலந்து, நிறமாற்றம் ஏற்பட்டுள்ள இடங்களில் தேய்க்கவும். அரை மணி நேரம் கழித்து, குளிர்ந்த நீரால் கழுவ, டேனிங் பிரச்னையை எளிதில் நீக்கலாம்.
பீன்ஸ், உருளைக்கிழங்கு சேர்த்து சப்ஜி செய்து சாதம், சப்பாத்தி, பூரியுடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும். இன்று உருளைக்கிழங்கு பீன்ஸ் சப்ஜி செய்முறை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
உருளைக்கிழங்கு - 4
பீன்ஸ் - 10
வெங்காயம் - 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
சாட் மசாலா - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை :
உருளைக்கிழங்கை வேக வைத்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
பீன்ஸை துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெந்தயத்தை சேர்த்து தாளித்த பின்னர் அதில் வெங்காயத்தைப் போட்டு வதக்க வேண்டும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சாட் மசாலா, சீரகப் பொடி சேர்த்து 2-3 நிமிடம் கிளறி விட வேண்டும்.
அடுத்து அதில் வேக வைத்துள்ள உருளைக்கிழங்கு மற்றும் பீன்ஸ் சேர்த்து 5 நிமிடம் வதக்க வேண்டும்.
இறுதியில் அதில் உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், உருளைக்கிழங்கு பீன்ஸ் சப்ஜி ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
உருளைக்கிழங்கு - 4
பீன்ஸ் - 10
வெங்காயம் - 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
சாட் மசாலா - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை :
உருளைக்கிழங்கை வேக வைத்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
பீன்ஸை துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெந்தயத்தை சேர்த்து தாளித்த பின்னர் அதில் வெங்காயத்தைப் போட்டு வதக்க வேண்டும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சாட் மசாலா, சீரகப் பொடி சேர்த்து 2-3 நிமிடம் கிளறி விட வேண்டும்.
அடுத்து அதில் வேக வைத்துள்ள உருளைக்கிழங்கு மற்றும் பீன்ஸ் சேர்த்து 5 நிமிடம் வதக்க வேண்டும்.
இறுதியில் அதில் உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், உருளைக்கிழங்கு பீன்ஸ் சப்ஜி ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கடந்த சில ஆண்டுகளாக பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கின்றன. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைக்கான அதிகரிப்பதற்கான காரணங்களை பார்க்கலாம்.
கடந்த சில ஆண்டுகளாக பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கின்றன. மனைவியாக இருந்தாலும் அவரது அனுமதியின்றி உறவு கொள்ள முயல்வது குற்றம் என்கிற அளவு Marital Rape பற்றி விவாதம் வந்துகொண்டிருக்கும் ஒரு நாகரிகமடைந்த சமூகத்தில், தினந்தோறும் தொடர்ந்து நடக்கும் பாலியல் வன்முறைகள் பெரும் கவலையையும், பதற்றத்தையும் உண்டாக்கிக் கொண்டிருக்கிறது.
‘‘பொதுவாக இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் சிறு வயதில் தாங்களும் உடல் மற்றும் உணர்வு சார்ந்த துன்புறுத்தல்களுக்கு ஆளாகி இருப்பர். பெற்றோரின் அன்பும், பாதுகாப்பும் இல்லாமல் வளர்ந்திருக்கலாம். மேலும் பெண்களை மதிக்காத சமூகத்தில் வளர்க்கப்பட்டிருக்கலாம்.
பெண்களை இவ்வகையில் அடக்கி / அவமானப்படுத்துவதன் மூலம் அவர்களை இழிவுபடுத்தி ஒடுக்கி விட்டதாகவும், தங்களை சக்திமிக்கவர்களாகவும் இவர்கள் உணர்கிறார்கள். அப்படி தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும்/ ஒழுங்குபடுத்துவதாகவும், ஆணாதிக்க சிந்தனையிலிருந்தும் பெண் தனக்கு கீழே என்கிற சிந்தனை மேலோங்கி இருப்பதாலும் இப்படி செய்வதுண்டு.

ஊடகங்கள் பெண்களை கவர்ச்சிப் பொருளாகக் காட்டி பாலின ஈர்ப்பை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். இதுவே, பெண்கள் மேல் மரியாதை
இல்லாமல், அவர்கள் ஆண்களின் தேவைக்கென படைக்கப்படும் பொருட்கள் எனும் எண்ணத்தை ஆண்கள் மத்தியில் அதிகப்படுத்தி இருக்கிறது.
நிறைவேறாத பாலியல் தேவைகள் காரணமாகவும் பலாத்காரங்கள் நடக்கிறது. இனப்பெருக்கத்துக்கு தயாரான ஆண்கள் தங்களுடைய உடல் தேவை தீராத பட்சத்தில் இது அடக்கி வைக்கப்பட்டு எதிர்பாலினத்தினரின் சம்மதம் இல்லாமல் பாலியல் பலாத்காரம் செய்பவர்களாகவும் இருக்கிறார்கள்.
செக்ஸ் பற்றிய சரியான புரிதல் இல்லாமல் இருப்பதாலும், மது உள்ளிட்ட போதைக்கு உள்ளாகும்போதும் இதுபோன்ற பலாத்காரங்கள் நிகழ்வதற்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது.
பெண்களின் உடை பலாத்காரத்துக்கு காரணமல்ல. இது, ஒரு ஆண் செய்த தவறை அர்த்தம் கற்பிக்கக் கொடுக்கும் ஒரு காரணமே தவிர இதில் உண்மையில்லை. இதைத் தடுக்க எடுக்கும் முக்கிய வழிஇல்லையெனில், தவறு இழைத்தவரை விட்டு பாதிக்கப்பட்டோரையே குற்றம் சொல்ல பழகிவிடுவோம்’’.
‘‘பொதுவாக இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் சிறு வயதில் தாங்களும் உடல் மற்றும் உணர்வு சார்ந்த துன்புறுத்தல்களுக்கு ஆளாகி இருப்பர். பெற்றோரின் அன்பும், பாதுகாப்பும் இல்லாமல் வளர்ந்திருக்கலாம். மேலும் பெண்களை மதிக்காத சமூகத்தில் வளர்க்கப்பட்டிருக்கலாம்.
பெண்களை இவ்வகையில் அடக்கி / அவமானப்படுத்துவதன் மூலம் அவர்களை இழிவுபடுத்தி ஒடுக்கி விட்டதாகவும், தங்களை சக்திமிக்கவர்களாகவும் இவர்கள் உணர்கிறார்கள். அப்படி தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும்/ ஒழுங்குபடுத்துவதாகவும், ஆணாதிக்க சிந்தனையிலிருந்தும் பெண் தனக்கு கீழே என்கிற சிந்தனை மேலோங்கி இருப்பதாலும் இப்படி செய்வதுண்டு.

ஊடகங்கள் பெண்களை கவர்ச்சிப் பொருளாகக் காட்டி பாலின ஈர்ப்பை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். இதுவே, பெண்கள் மேல் மரியாதை
இல்லாமல், அவர்கள் ஆண்களின் தேவைக்கென படைக்கப்படும் பொருட்கள் எனும் எண்ணத்தை ஆண்கள் மத்தியில் அதிகப்படுத்தி இருக்கிறது.
நிறைவேறாத பாலியல் தேவைகள் காரணமாகவும் பலாத்காரங்கள் நடக்கிறது. இனப்பெருக்கத்துக்கு தயாரான ஆண்கள் தங்களுடைய உடல் தேவை தீராத பட்சத்தில் இது அடக்கி வைக்கப்பட்டு எதிர்பாலினத்தினரின் சம்மதம் இல்லாமல் பாலியல் பலாத்காரம் செய்பவர்களாகவும் இருக்கிறார்கள்.
செக்ஸ் பற்றிய சரியான புரிதல் இல்லாமல் இருப்பதாலும், மது உள்ளிட்ட போதைக்கு உள்ளாகும்போதும் இதுபோன்ற பலாத்காரங்கள் நிகழ்வதற்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது.
பெண்களின் உடை பலாத்காரத்துக்கு காரணமல்ல. இது, ஒரு ஆண் செய்த தவறை அர்த்தம் கற்பிக்கக் கொடுக்கும் ஒரு காரணமே தவிர இதில் உண்மையில்லை. இதைத் தடுக்க எடுக்கும் முக்கிய வழிஇல்லையெனில், தவறு இழைத்தவரை விட்டு பாதிக்கப்பட்டோரையே குற்றம் சொல்ல பழகிவிடுவோம்’’.
டிஜிட்டல் விளையாட்டுகளில் சிக்கிக் கிடக்கும் குழந்தைகளை குறிவைத்து தகவல் திருட்டுகள் நடக்கின்றன என்பது தான் இப்போதைய அதிர்ச்சித் தகவல்.
பிளே கிரவுண்ட் தெரியாது ! ஆனால் பிளே ஸ்டோர் தெரியும் !! -இது தான் இன்றைய குழந்தைகளின் நிலை. இப்படி டிஜிட்டல் விளையாட்டுகளில் சிக்கிக் கிடக்கும் குழந்தைகளை குறிவைத்து தகவல் திருட்டுகள் நடக்கின்றன என்பது தான் இப்போதைய அதிர்ச்சித் தகவல்.
இன்றைய தொழில்நுட்ப உலகில் ஸ்மார்ட்போன் செலுத்தும் ஆதிக்கத்தைப் போல வேறெதுவும் செலுத்தவில்லை என்பது தான் உண்மை. பெரும்பாலான மக்களின் பொழுதுகள் குட்டிக்குட்டி வெளிச்சத் திரைகளில் அடங்கிவிடுகின்றன. அதிலும் சுட்டிக்குழந்தைகளின் நிலைமை படுமோசம். ஏனெனில் அவர்கள் வளர்க்கப்படுவதே, அப்ளி கேஷன்களின் உதவியுடன்தான். நிலாவை காண்பித்து சோறு ஊட்டிய காலம் மலையேறி, யூ-டியூப் வீடியோக்களை காட்டி சோறு ஊட்டும் நிலை உருவாகிவிட்டது. அதனால் குழந்தைகள் ஸ்மார்ட்போன்களிலும், அதிலிருக்கும் அப்ளிகேஷன்களிலும் ஸ்மார்டாக செயல்படுகிறார்கள். ஆனால் அதுவே அவர்களுக்கு ஆபத்தாகவும் மாறிக்கொண்டிருக்கிறது.
ஆம்..! குழந்தைகள் பயன்படுத்தும் அப்ளிகேஷன்கள், யாருக்கும் தெரியாமல் அவர்களை கண் காணிக்கிறதாம். இந்த கண்காணிப்பு குழந்தை கடத்தல் வரை நீளலாம் என எச்சரிக்கிறார்கள், ஆய்வாளர்கள். இந்த அதிர்ச்சி தகவல்களுக்கு பிள்ளையார் சுழிப்போட்டவர்கள், அமெரிக்காவின் கலிபோர்னியாவிலுள்ள இன்டர்நேஷனல் கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஸ்டிடியூட் ஆய்வாளர்கள். இவர்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் குழந்தைகளின் தகவல்கள் திருடப்படுகிறது என்பதை நிரூபித்ததுடன், அதற்கு காரணம் பெற்றோர்கள்தான் என கூறி அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளனர்.
அமெரிக்காவில் ‘கோப்பா’ US Children’s Online Privacy Protection Act (Coppa) என்ற குழந்தைகள் தகவல் பாதுகாப்பு சட்டம் நடைமுறையில் இருக்கிறது. இதன் முக்கிய நோக்கம், குழந்தைகளின் தகவல்களை பாதுகாப்பது தான். ஆனால் கோப்பா சட்டத்தை கண்டுகொள்ளாத பல அப்ளிகேஷன் நிறுவனங்கள், குழந்தைகளின் தகவல்களை திருடும் வகையில் பல ஆயிரம் அப்ளிகேஷன்களை உருவாக்கியிருக்கிறார்களாம். இதை கலிபோர்னியா ஆய்வாளர்கள் நிரூபித்ததுடன், ஒருசில கருத்துக்கணிப்புகளையும், ஆய்வு களையும் நடத்தியிருக்கிறார்கள். அவை அனைத்துமே குழந்தைகள் மற்றும் பெற்றோர்களை திடுக்கிட வைக்கிறது. அது என்ன தெரியுமா...? பெற்றோர்கள்தான் குழந்தைகளை இப்படிப்பட்ட சிக்கல்களில் சிக்கவைக்கிறார்கள் என்பதை ஊர்ஜிதப்படுத்தி இருக்கிறது.

எட்டு வயதுக்கும், பதிமூன்று வயதுக்கும் உட்பட்ட ஆறாயிரம் குழந்தைகளை வைத்து ஒரு ஆய்வு சமீபத்தில் நடத்தப்பட்டது. அதில் 54 சதவீதம் குழந்தைகள், ‘பெற்றோர் தங்களைக் கவனிப்பதை விட அதிக நேரம் செல்போனே கதியென கிடப்பதாக’ கவலை தெரிவித்திருக்கிறார்கள். அதனால்தான் தாங்களும் செல்போனிற்கு அடிமையாகி இருப்பதாகவும் கூறியிருக்கிறார்கள். இது ஒருபுறமிருக்க... இருபத்து ஐந்து சதவீத பெற்றோர், தங்கள் குழந்தைகள் ஸ்மார்ட்போனுக்கு அடிமையாய் இருப்பதாகவும், எப்படியாவது அவர்களை வெளியே கொண்டு வரவேண்டும் என்றும் விரும்புகின்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை.
எல்லாவற்றையும் விட கவலைக்குரிய விஷயம் இது தான். “ஸ்மார்ட் போனைத் தான் எங்கள் பெற்றோர் எங்களை விட அதிகமாக நேசிக்கிறார்கள்” என முப்பத்து இரண்டு சதவீத குழந்தைகள் கவலையுடன் தெரிவித்திருக்கின்றனர். இப்படி பெற்றோரும், குழந்தைகளும் ஒருவருக்கொருவர் குற்றச்சாட்டு வைப்பதற்கு ஒரே காரணம் ஸ்மார்ட்போன்களும், அப்ளி கேஷன்களும்தான்.
சமூகவலைதளம், நவீன அப்ளிகேஷன்களால் குடும்ப உறவுகளை மறந்து, குழந்தைகளையும் ‘தகவல் திருட்டு’ என்னும் சிக்கலில் சிக்கவைத்துக்கொண்டிருக்கிறோம். நம்முடைய குழந்தைகளை நாம் கவனிக்காவிட்டால் அவர்களை வேறு யாரோ கவனிப்பார்கள். அது அவர்களுடைய வாழ்க்கைக்கு மிகப்பெரிய பாதிப்பாகவும், அச்சுறுத்தலாகவும் மாறிவிடும்.
அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று, ‘பத்து வயது குழந்தைக்கு சாதாரணமாக ஒரு ஸ்மார்ட் போன் சொந்தமாகிவிடுகிறது’ என்கிறது. இந்தியாவில் அந்த அளவுக்கு இல்லைஎனினும், பெற்றோரின் ஸ்மார்ட்போன்களை சகட்டு மேனிக்கு பயன்படுத்தும் குழந்தைகளின் எண்ணிக்கை மிக அதிகம்! ஒன்பது வயதுக்குட்பட்ட குழந்தைகள் சராசரியாக தினமும் சுமார் இரண்டரை மணி நேரம் போனில் விளையாடுகிறார்கள் என்றால் நம்புவீர்களா..? இந்த கருத்தை புள்ளிவிவரங்கள் நம்பவைக்கின்றன.
இந்த சூழலில் தான் கூகுள் பிளே ஸ்டோரின் பாதுகாப்பு விதி மீறல் அச்ச உணர்வை அதிகரித்திருக்கிறது. கூகுள் ஆப் ஸ்டோரில் உள்ள குழந்தைகளுக்கான அப்ளிகேஷன்களை ஆய்வு செய்ததில் 57 சதவீதம் அப்ளிகேஷன்கள் பாதுகாப்பு விதிகளை மீறியிருக்கின்றன. அதாவது குழந்தைகளை மறைமுகமாக கண் காணிக்கின்றன.

குழந்தைகள் ஆன்லைனில் என்ன செய்கிறார்கள்?, எதை தேடுகிறார்கள்?, அவர்களுக்கு எது பிடிக்கிறது?, எங்கு இருக்கிறார்கள்? என்பதைக் கண்ணும் கருத்துமாக கவனிக்கின்றன. உதாரணத்திற்கு... ஒரு குழந்தை ரிமோட்டில் இயங்கும் மோட்டார் சைக்கிளை தேடினால், அதை கண்காணிப்பவர்கள், அதுசம்பந்தமான விளம்பரங்களையும், இணையதளங்களையுமே குழந்தைகளின் கண்களில் தென்படும்படி உலாவ விடுவார்கள். இது மோட்டார் சைக்கிளுடன் நின்றுவிட்டால் பரவாயில்லை. கொஞ்சம் வயதுக்கு மீறிய விஷயங்களையும், ஆபாசமான தகவல்களையும் உலாவ விட்டால் என்ன ஆவது...?.
ஒருசில அப்ளிகேஷன்கள் விளம்பரங்களுக்காக தகவல்களை திருடுகின்றன. ஒருசில ஆப்ஸ்கள் காண்டாக்ட் தகவல்களையும், குழந்தைகளின் விவரங்களையும் திருடுகின்றன. சில ஆப்ஸ் தனிநபர் தகவல்களை திருடி வேறு இடங்களுக்கு அனுப்பு கின்றன. இப்படியே தகவல் திருட்டு பட்டியல் நீள்கிறது. பெரியவர்களிடம் செய்யமுடியாத தகவல் திருட்டை, குழந்தைகளின் மூலம் செய்வதுதான் ஒருசில அப்ளிகேஷன் நிறுவனங்களின் நோக்கம். அதற்கு நாமும் துணைபோகிறோம் என்பதுதான் மறுக்கமுடியாத உண்மை. இத்தனைக்கும் பிரபலமான, சுமார் ஏழரை லட்சம் முறைகளுக்கு மேல் தரவிறக்கம் செய்யப்பட்ட ஆப்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இவையெல்லாம் குழந்தைகளுக்கான அப்ளிகேஷன்கள் என்பது தான் கவனிக்கவேண்டிய விஷயம்.
குழந்தைகளுக்கு கல்வி, பொழுதுபோக்கு, சிந்தனை திறன் வளர்த்தல் என வசீகரிக்கும் ஆப்களின் நிலை தான் இது என்பது கவலையளிக்கிறது. ஏற்கனவே கூகுள் நிறுவனமும், பேஸ்புக் நிறுவனமும் தனிநபர் தகவல்களை மிகப் பெரிய அளவில் சேகரிக்கிறது எனும் சர்வதேச சர்ச்சை அடிக்கடி உயிர்ப்புடன் துடிப்பது உண்டு. அந்தசமயங்களில் மட்டும் வாய்திறக்கும் கூகுள், அந்த சர்ச்சையை மூடி மறைக்க ஒருசில அப்ளிகேஷன்களை தடைசெய்வதும் உண்டு.
மேலும் பாதுகாப்பு விதி முறைகளை மீறும் ஆப்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூகுள் நிறுவனம் உறுதியளிப்பதும் வாடிக்கையாகிவிட்டது. இப்போதும் உறுதியளித்திருக்கிறது. குழந்தைகள், குடும்பங்கள் இவற்றின் பாதுகாப்பின் மீது எந்தவிதமான தளர்வுக்கும் இடமில்லை என அது தெரிவித்திருக்கிறது. இருந்தாலும் இது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. என்ன நடக்கிறது என்று பொருத்திருந்து பார்ப்போம்...!
கட்டுரையாளர்: சேவியர்
இன்றைய தொழில்நுட்ப உலகில் ஸ்மார்ட்போன் செலுத்தும் ஆதிக்கத்தைப் போல வேறெதுவும் செலுத்தவில்லை என்பது தான் உண்மை. பெரும்பாலான மக்களின் பொழுதுகள் குட்டிக்குட்டி வெளிச்சத் திரைகளில் அடங்கிவிடுகின்றன. அதிலும் சுட்டிக்குழந்தைகளின் நிலைமை படுமோசம். ஏனெனில் அவர்கள் வளர்க்கப்படுவதே, அப்ளி கேஷன்களின் உதவியுடன்தான். நிலாவை காண்பித்து சோறு ஊட்டிய காலம் மலையேறி, யூ-டியூப் வீடியோக்களை காட்டி சோறு ஊட்டும் நிலை உருவாகிவிட்டது. அதனால் குழந்தைகள் ஸ்மார்ட்போன்களிலும், அதிலிருக்கும் அப்ளிகேஷன்களிலும் ஸ்மார்டாக செயல்படுகிறார்கள். ஆனால் அதுவே அவர்களுக்கு ஆபத்தாகவும் மாறிக்கொண்டிருக்கிறது.
ஆம்..! குழந்தைகள் பயன்படுத்தும் அப்ளிகேஷன்கள், யாருக்கும் தெரியாமல் அவர்களை கண் காணிக்கிறதாம். இந்த கண்காணிப்பு குழந்தை கடத்தல் வரை நீளலாம் என எச்சரிக்கிறார்கள், ஆய்வாளர்கள். இந்த அதிர்ச்சி தகவல்களுக்கு பிள்ளையார் சுழிப்போட்டவர்கள், அமெரிக்காவின் கலிபோர்னியாவிலுள்ள இன்டர்நேஷனல் கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஸ்டிடியூட் ஆய்வாளர்கள். இவர்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் குழந்தைகளின் தகவல்கள் திருடப்படுகிறது என்பதை நிரூபித்ததுடன், அதற்கு காரணம் பெற்றோர்கள்தான் என கூறி அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளனர்.
அமெரிக்காவில் ‘கோப்பா’ US Children’s Online Privacy Protection Act (Coppa) என்ற குழந்தைகள் தகவல் பாதுகாப்பு சட்டம் நடைமுறையில் இருக்கிறது. இதன் முக்கிய நோக்கம், குழந்தைகளின் தகவல்களை பாதுகாப்பது தான். ஆனால் கோப்பா சட்டத்தை கண்டுகொள்ளாத பல அப்ளிகேஷன் நிறுவனங்கள், குழந்தைகளின் தகவல்களை திருடும் வகையில் பல ஆயிரம் அப்ளிகேஷன்களை உருவாக்கியிருக்கிறார்களாம். இதை கலிபோர்னியா ஆய்வாளர்கள் நிரூபித்ததுடன், ஒருசில கருத்துக்கணிப்புகளையும், ஆய்வு களையும் நடத்தியிருக்கிறார்கள். அவை அனைத்துமே குழந்தைகள் மற்றும் பெற்றோர்களை திடுக்கிட வைக்கிறது. அது என்ன தெரியுமா...? பெற்றோர்கள்தான் குழந்தைகளை இப்படிப்பட்ட சிக்கல்களில் சிக்கவைக்கிறார்கள் என்பதை ஊர்ஜிதப்படுத்தி இருக்கிறது.

எட்டு வயதுக்கும், பதிமூன்று வயதுக்கும் உட்பட்ட ஆறாயிரம் குழந்தைகளை வைத்து ஒரு ஆய்வு சமீபத்தில் நடத்தப்பட்டது. அதில் 54 சதவீதம் குழந்தைகள், ‘பெற்றோர் தங்களைக் கவனிப்பதை விட அதிக நேரம் செல்போனே கதியென கிடப்பதாக’ கவலை தெரிவித்திருக்கிறார்கள். அதனால்தான் தாங்களும் செல்போனிற்கு அடிமையாகி இருப்பதாகவும் கூறியிருக்கிறார்கள். இது ஒருபுறமிருக்க... இருபத்து ஐந்து சதவீத பெற்றோர், தங்கள் குழந்தைகள் ஸ்மார்ட்போனுக்கு அடிமையாய் இருப்பதாகவும், எப்படியாவது அவர்களை வெளியே கொண்டு வரவேண்டும் என்றும் விரும்புகின்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை.
எல்லாவற்றையும் விட கவலைக்குரிய விஷயம் இது தான். “ஸ்மார்ட் போனைத் தான் எங்கள் பெற்றோர் எங்களை விட அதிகமாக நேசிக்கிறார்கள்” என முப்பத்து இரண்டு சதவீத குழந்தைகள் கவலையுடன் தெரிவித்திருக்கின்றனர். இப்படி பெற்றோரும், குழந்தைகளும் ஒருவருக்கொருவர் குற்றச்சாட்டு வைப்பதற்கு ஒரே காரணம் ஸ்மார்ட்போன்களும், அப்ளி கேஷன்களும்தான்.
சமூகவலைதளம், நவீன அப்ளிகேஷன்களால் குடும்ப உறவுகளை மறந்து, குழந்தைகளையும் ‘தகவல் திருட்டு’ என்னும் சிக்கலில் சிக்கவைத்துக்கொண்டிருக்கிறோம். நம்முடைய குழந்தைகளை நாம் கவனிக்காவிட்டால் அவர்களை வேறு யாரோ கவனிப்பார்கள். அது அவர்களுடைய வாழ்க்கைக்கு மிகப்பெரிய பாதிப்பாகவும், அச்சுறுத்தலாகவும் மாறிவிடும்.
அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று, ‘பத்து வயது குழந்தைக்கு சாதாரணமாக ஒரு ஸ்மார்ட் போன் சொந்தமாகிவிடுகிறது’ என்கிறது. இந்தியாவில் அந்த அளவுக்கு இல்லைஎனினும், பெற்றோரின் ஸ்மார்ட்போன்களை சகட்டு மேனிக்கு பயன்படுத்தும் குழந்தைகளின் எண்ணிக்கை மிக அதிகம்! ஒன்பது வயதுக்குட்பட்ட குழந்தைகள் சராசரியாக தினமும் சுமார் இரண்டரை மணி நேரம் போனில் விளையாடுகிறார்கள் என்றால் நம்புவீர்களா..? இந்த கருத்தை புள்ளிவிவரங்கள் நம்பவைக்கின்றன.
இந்த சூழலில் தான் கூகுள் பிளே ஸ்டோரின் பாதுகாப்பு விதி மீறல் அச்ச உணர்வை அதிகரித்திருக்கிறது. கூகுள் ஆப் ஸ்டோரில் உள்ள குழந்தைகளுக்கான அப்ளிகேஷன்களை ஆய்வு செய்ததில் 57 சதவீதம் அப்ளிகேஷன்கள் பாதுகாப்பு விதிகளை மீறியிருக்கின்றன. அதாவது குழந்தைகளை மறைமுகமாக கண் காணிக்கின்றன.

குழந்தைகள் ஆன்லைனில் என்ன செய்கிறார்கள்?, எதை தேடுகிறார்கள்?, அவர்களுக்கு எது பிடிக்கிறது?, எங்கு இருக்கிறார்கள்? என்பதைக் கண்ணும் கருத்துமாக கவனிக்கின்றன. உதாரணத்திற்கு... ஒரு குழந்தை ரிமோட்டில் இயங்கும் மோட்டார் சைக்கிளை தேடினால், அதை கண்காணிப்பவர்கள், அதுசம்பந்தமான விளம்பரங்களையும், இணையதளங்களையுமே குழந்தைகளின் கண்களில் தென்படும்படி உலாவ விடுவார்கள். இது மோட்டார் சைக்கிளுடன் நின்றுவிட்டால் பரவாயில்லை. கொஞ்சம் வயதுக்கு மீறிய விஷயங்களையும், ஆபாசமான தகவல்களையும் உலாவ விட்டால் என்ன ஆவது...?.
ஒருசில அப்ளிகேஷன்கள் விளம்பரங்களுக்காக தகவல்களை திருடுகின்றன. ஒருசில ஆப்ஸ்கள் காண்டாக்ட் தகவல்களையும், குழந்தைகளின் விவரங்களையும் திருடுகின்றன. சில ஆப்ஸ் தனிநபர் தகவல்களை திருடி வேறு இடங்களுக்கு அனுப்பு கின்றன. இப்படியே தகவல் திருட்டு பட்டியல் நீள்கிறது. பெரியவர்களிடம் செய்யமுடியாத தகவல் திருட்டை, குழந்தைகளின் மூலம் செய்வதுதான் ஒருசில அப்ளிகேஷன் நிறுவனங்களின் நோக்கம். அதற்கு நாமும் துணைபோகிறோம் என்பதுதான் மறுக்கமுடியாத உண்மை. இத்தனைக்கும் பிரபலமான, சுமார் ஏழரை லட்சம் முறைகளுக்கு மேல் தரவிறக்கம் செய்யப்பட்ட ஆப்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இவையெல்லாம் குழந்தைகளுக்கான அப்ளிகேஷன்கள் என்பது தான் கவனிக்கவேண்டிய விஷயம்.
குழந்தைகளுக்கு கல்வி, பொழுதுபோக்கு, சிந்தனை திறன் வளர்த்தல் என வசீகரிக்கும் ஆப்களின் நிலை தான் இது என்பது கவலையளிக்கிறது. ஏற்கனவே கூகுள் நிறுவனமும், பேஸ்புக் நிறுவனமும் தனிநபர் தகவல்களை மிகப் பெரிய அளவில் சேகரிக்கிறது எனும் சர்வதேச சர்ச்சை அடிக்கடி உயிர்ப்புடன் துடிப்பது உண்டு. அந்தசமயங்களில் மட்டும் வாய்திறக்கும் கூகுள், அந்த சர்ச்சையை மூடி மறைக்க ஒருசில அப்ளிகேஷன்களை தடைசெய்வதும் உண்டு.
மேலும் பாதுகாப்பு விதி முறைகளை மீறும் ஆப்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூகுள் நிறுவனம் உறுதியளிப்பதும் வாடிக்கையாகிவிட்டது. இப்போதும் உறுதியளித்திருக்கிறது. குழந்தைகள், குடும்பங்கள் இவற்றின் பாதுகாப்பின் மீது எந்தவிதமான தளர்வுக்கும் இடமில்லை என அது தெரிவித்திருக்கிறது. இருந்தாலும் இது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. என்ன நடக்கிறது என்று பொருத்திருந்து பார்ப்போம்...!
கட்டுரையாளர்: சேவியர்
தினமும் ஏதாவது ஒரு சூப் குடிப்பது உடலுக்கு புத்துணர்ச்சியையும், சக்தியையும் தரும். இன்று தக்காளி, துளசி சேர்த்து சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கேரட் - 1,
வெங்காயம் - 1,
பூண்டு விழுது - அரை டீஸ்பூன்,
பழுத்த தக்காளி - 300 கிராம்,
சர்க்கரை, மிளகுத்தூள் - தலா அரை டீஸ்பூன்,
துளசி - ஒரு கைப்பிடி,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை :
கேரட்டை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து இரண்டு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய கேரட், வெங்காயம், பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். மூடிபோட்டு 10 நிமிடங்கள் வேகவிடவும்.
அடுத்து அதில் நறுக்கிய தக்காளி, சர்க்கரை, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து, நன்றாகக் குழைய வதக்கவும்.
அடுத்து அதில் ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து, பத்து நிமிடங்கள் கொதிக்கவிடவும். ஒன்று சேர்ந்து வெந்ததும் இறக்கி, துளசி சேர்த்துப் பரிமாறவும்.
சூப்பரான தக்காளி - துளசி சூப் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கேரட் - 1,
வெங்காயம் - 1,
பூண்டு விழுது - அரை டீஸ்பூன்,
பழுத்த தக்காளி - 300 கிராம்,
சர்க்கரை, மிளகுத்தூள் - தலா அரை டீஸ்பூன்,
துளசி - ஒரு கைப்பிடி,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை :
கேரட்டை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து இரண்டு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய கேரட், வெங்காயம், பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். மூடிபோட்டு 10 நிமிடங்கள் வேகவிடவும்.
அடுத்து அதில் நறுக்கிய தக்காளி, சர்க்கரை, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து, நன்றாகக் குழைய வதக்கவும்.
அடுத்து அதில் ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து, பத்து நிமிடங்கள் கொதிக்கவிடவும். ஒன்று சேர்ந்து வெந்ததும் இறக்கி, துளசி சேர்த்துப் பரிமாறவும்.
சூப்பரான தக்காளி - துளசி சூப் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.






