என் மலர்
ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்
குழந்தைகளுக்கு அதிக நேரம் டயப்பர் போடுவது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள் மருத்துவர்கள். குறிப்பாக, கோடைக்காலத்தில் கண்டிப்பாக டயப்பரை தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்கள்.
குழந்தைகளுக்கு டயப்பரை குறைவான நேரமே பயன்படுத்த வேண்டும். அதுவும் துணி டயப்பர் பயன்படுத்துவதே நல்லது. அதிகபட்சம் மூன்று முதல் நான்கு மணி நேரத்துக்குமேல் பயன்படுத்தக்கூடாது. அதிக நேரம் பயன்படுத்துவதால் சிறுநீர், மலம் ஏற்படுத்தும் ஈரப்பதத்தால் குழந்தையின் சருமத்தில் `டயப்பர் டெர்மடிடிஸ்’ (Diaper Dermatitis) எனப்படும் தோல் அலர்ஜி ஏற்படும். இதனால் குழந்தைகளின் பின்புறமும், தொடைப்பகுதிகளும் சிவந்து போகும். அரிப்பும் ஏற்படும், எனவே, குறிப்பிட்ட நேரத்துக்கு ஒருமுறை டயப்பரை மாற்ற வேண்டும்.
கோடைக்காலத்தில் அதிகநேரம் டயப்பர் பயன்படுத்தினால், அதிகப்படியான வியர்வை, சிறுநீர், மலம் காரணமாக தோல் அரிப்பு, பூஞ்சைத் தொற்றுகள் ஏற்படும். சருமம் சிவந்தோ, தடித்தோ காணப்பட்டால் உடனடியாக மருத்துவரைப் பார்த்து சிகிச்சை மேற்கொள்வது நல்லது. தொற்றுகள் ஏற்பட்டுவிட்டால், குளிர்ந்த நீரை துணியில் நனைத்து அப்பகுதிகளில் அடிக்கடி ஒத்தடம் கொடுக்க வேண்டும். ஆடைகள் அணிவிக்காமல் காற்றோட்டமாக விடவேண்டும்.
`டயப்பர் பயன்படுத்துவதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். அப்படிப் பயன்படுத்துவதாக இருந்தால், அரை மணிநேரத்துக்கு ஒருமுறை குழந்தை சிறுநீர், மலம் கழித்திருக்கிறதா? என்பதைச் சோதித்துப்பார்க்க வேண்டும். சிறுநீர் அல்லது மலம் கழித்திருந்தால், உடனடியாக டயப்பரைக் கழற்றி, அந்தப் பகுதிகளைச் சுத்தம் செய்ய வேண்டும். குழந்தைகளுக்கு அலர்ஜி ஏற்பட்டால், வேறு நிறுவன டயப்பர்களை மாற்றிப் பயன்படுத்துவது நல்லது

* குழந்தைகளுக்கு 2 வயது வரை மட்டும் டயப்பர் பயன்படுத்தலாம். கழிவறைகளைப் பயன்படுத்த 2 வயதிலிருந்தே பழக்கப்படுத்த வேண்டும்.
* வெளியூருக்குச் செல்லும்போது மட்டும் டயப்பர் பயன்படுத்துவது நல்லது.
* இரவு முழுவதும் ஒரே டயப்பரை பயன்படுத்தக்கூடாது. 4 மணி நேரத்துக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்.
* ஒருமுறை பயன்படுத்தி கழற்றிய டயப்பரை மீண்டும் பயன்படுத்தக் கூடாது.
* டயப்பரை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த வேண்டும்.
* குழந்தைகள் விளையாடும் இடங்களில் பழைய டயப்பர்களை வீசாதீர்கள்.
* இறுக்கமானதாக இல்லாமல், தளர்வான டயப்பர்களைப் பயன்படுத்த வேண்டும்.
* டயப்பர் அணியாத நேரங்களில், குழந்தையின் உடலை துடைத்து காற்றாட வைத்திருங்கள்.
கோடைக்காலத்தில் அதிகநேரம் டயப்பர் பயன்படுத்தினால், அதிகப்படியான வியர்வை, சிறுநீர், மலம் காரணமாக தோல் அரிப்பு, பூஞ்சைத் தொற்றுகள் ஏற்படும். சருமம் சிவந்தோ, தடித்தோ காணப்பட்டால் உடனடியாக மருத்துவரைப் பார்த்து சிகிச்சை மேற்கொள்வது நல்லது. தொற்றுகள் ஏற்பட்டுவிட்டால், குளிர்ந்த நீரை துணியில் நனைத்து அப்பகுதிகளில் அடிக்கடி ஒத்தடம் கொடுக்க வேண்டும். ஆடைகள் அணிவிக்காமல் காற்றோட்டமாக விடவேண்டும்.
`டயப்பர் பயன்படுத்துவதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். அப்படிப் பயன்படுத்துவதாக இருந்தால், அரை மணிநேரத்துக்கு ஒருமுறை குழந்தை சிறுநீர், மலம் கழித்திருக்கிறதா? என்பதைச் சோதித்துப்பார்க்க வேண்டும். சிறுநீர் அல்லது மலம் கழித்திருந்தால், உடனடியாக டயப்பரைக் கழற்றி, அந்தப் பகுதிகளைச் சுத்தம் செய்ய வேண்டும். குழந்தைகளுக்கு அலர்ஜி ஏற்பட்டால், வேறு நிறுவன டயப்பர்களை மாற்றிப் பயன்படுத்துவது நல்லது

* குழந்தைகளுக்கு 2 வயது வரை மட்டும் டயப்பர் பயன்படுத்தலாம். கழிவறைகளைப் பயன்படுத்த 2 வயதிலிருந்தே பழக்கப்படுத்த வேண்டும்.
* வெளியூருக்குச் செல்லும்போது மட்டும் டயப்பர் பயன்படுத்துவது நல்லது.
* இரவு முழுவதும் ஒரே டயப்பரை பயன்படுத்தக்கூடாது. 4 மணி நேரத்துக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்.
* ஒருமுறை பயன்படுத்தி கழற்றிய டயப்பரை மீண்டும் பயன்படுத்தக் கூடாது.
* டயப்பரை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த வேண்டும்.
* குழந்தைகள் விளையாடும் இடங்களில் பழைய டயப்பர்களை வீசாதீர்கள்.
* இறுக்கமானதாக இல்லாமல், தளர்வான டயப்பர்களைப் பயன்படுத்த வேண்டும்.
* டயப்பர் அணியாத நேரங்களில், குழந்தையின் உடலை துடைத்து காற்றாட வைத்திருங்கள்.
போதைப் பொருட்கள் ஆண்களைவிட பெண்களின் ரத்தத்தில் வேகமாக கலக்கிறது. அதனால் ஆண்களைவிட பெண்கள் இரு மடங்கு பாதிப்பிற்குள்ளாகிறார்கள்.
மது அருந்துவது இப்போது ‘பேஷன்’ ஆக்கப்பட்டிருக்கிறது. சமூகத்தில் தன்னை உயர்ந்தவராக காட்டிக்கொள்ள விரும்பும் பெண்கள் குடிக்கிறார்கள். குடிக்க மறுப்பவர்கள் பழமைவாதிகள் என்று கேலி செய்யப்படுகிறார்கள். குடிப்பதன் மூலம் சுதந்திரத்தை அனுபவிப்பதாகவும் சிலர் நினைக்கிறார்கள். இந்த நிலை தொடருமானால் பெண்கள் பல இழப்புகளுக்கு ஆளாவார்கள். குடிப்பதில் எந்தப் பயனுமில்லை. அதனால் பெண்களின் உடல்நிலைதான் கெடுகிறது.
குடிக்கும் ஆண்களைவிட பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். இது விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ‘ராஜீவ் காந்தி கேன்சர் இன்ஸ்ட்டிட்யூட்’ சார்பில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், டாக்டர் இந்து அகர்வால் என்பவர் ‘போதைப் பொருட்கள் ஆண்களைவிட பெண்களின் ரத்தத்தில் வேகமாக கலக்கிறது. அதனால் ஆண்களைவிட பெண்கள் இரு மடங்கு பாதிப்பிற்குள்ளாகிறார்கள்’ என்கிறார்.
மது குடிக்கும் பெண்கள் அதிகமாக பாதிக்கப்பட என்னென்ன காரணங்கள் தெரியுமா?
பெண்கள் மென்மையான உடல்வாகு கொண்டவர்கள். ஆண்களின் உடலில் தண்ணீர் அதிகம். பெண்கள் உடலில் கொழுப்பு அதிகம். தண்ணீரில் கலக்கும் மதுவின் தீவிரம் குறைகிறது. ஆனால் கொழுப்பில் கலக்கும் மதுவின் தீவிரம் வெகுநேரம் நீடிக்கிறது. மது அருந்தும் பெண்களால் சீக்கிரம் தெளிவு நிலைக்கு வர முடியாது.
பெண்களின் உடலில் இருக்கும் ‘என்சைம்’களின் அளவு குறைவு. அதனால் ஆல்ஹகால் ரத்தத்தில் அதிக அளவு கலந்து, உடல் போதையை சமன்படுத்த முடியாமல் தவிக்கும். போதையின் விளைவுகள் அதிகமாகி, மூளையையும் வெகுவாக பாதிக்கும்.

பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் ஹார்மோன் சுரப்பில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படும். அப்போது அவர்கள் மது அருந்தினால், போதையின் தாக்கம் அதிகமாக இருக்கும். அந்த நேரத்தில் அவர்களது மனநிலையில் சீரற்றநிலை உருவாகி, தன்னை மீறிய செயல்களில் ஈடுபடுவார்கள். இதனால் சமூக அந்தஸ்து குறையும். குடும்ப வாழ்க்கை பாதிக்கும். நட்பு, சுற்றம், அலுவலகத்திலும் கெட்டபெயர் ஏற்படும்.
மது அருந்தும் பெண்களுக்கு கல்லீரல் வெகுவாக பாதிக்கும். வீக்கம், வலி தோன்றும். பின்பு அவர்கள் மது அருந்துவதை விட்டுவிட்டு முறையான சிகிச்சை பெறாவிட்டால் கல்லீரல் முழு அளவு பாதிக்கப்பட்டு உயிரிழக்க நேரிடும். ஆண்களைவிட பெண்களுக்கு கல்லீரல் பாதிப்பு அதிகமாக உருவாகும்.
பெண்களில் மது அருந்துபவர்களுக்கு அளவுக்கு அதிகமான சோர்வு ஏற்படும். குடிக்காத நேரங்களிலும் அந்த சோர்வு நீடிக்கும். மது அருந்தும் பெண்களின் உடலில் வைட்டமின் பி12 சத்து மிகவும் குறைந்து போகும். அதனால் மயக்கம், தலைசுற்றல், ஞாபக மறதி போன்றவை ஏற்படும்.
மது உடலில் அதிகமான பசியை தோன்றுவிக்கும். அதனால் பெண்கள் நிறைய சாப்பிடுவார்கள். அதுவும் கலோரி அதிகம் கொண்ட ருசியான உணவுகளை கண்டபடி சாப்பிடுவார்கள். உடல் எடை அதிகரிக்கும். அப்போது பல்வேறு நோய்கள் உடலில் குடிகொள்ளத் தொடங்கிவிடும்.
மது உள்ளே போனதும் அதிக அளவு ரத்தத்தில் கலந்து, ரத்த அழுத்தத்தை உயர்த்தும். அதனால் அவர்களிடம் பதற்றமும், பரபரப்பும் தோன்றும். செயல்திறன் குறைந்துபோகும்.

மது அருந்தும் பெண்களுக்கு மலட்டுத்தன்மை உருவாகும். கர்ப்பிணிகள் மது அருந்தினால் கருச்சிதைவு தோன்றும். கருமுட்டையையும் பாதிக்கும். ஒருவேளை அவர்கள் கர்ப்பம்தரித்து குழந்தையை பெற்றெடுத்தாலும், குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படும். கடந்த 5 வருடத்தில் 30 சதவீதம் அளவுக்கு பெண்களிடம் மலட்டுத்தன்மை அதிகரித்திருக்கிறது. அதற்கு மதுப்பழக்கமும் முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
விளையாட்டுத்தனமாக ஆரம்பிக்கும் மதுப்பழக்கம் பெண்களை அலைக்கழித்து, அவர்களை வாழ்க்கையின் எல்லைக்கே துரத்திச் சென்றுவிடும். தூக்கமின்மை அவர்களிடம் தோன்றும். வாழ்க்கையில் விரக்தியை ஏற்படுத்தி தற்கொலைக்குகூட தூண்டும்.
மது பெண்களின் மூளையையும் எளிதாக பாதிக்கும். நினைவாற்றலை குறைக்கும். மூளை நரம்புகளை செயலிழக்கச் செய்வதால் காக்காய் வலிப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது. நரம்புகள் பலவீனமாகி ரத்த ஓட்டம் குறையும். அப்போது வெயிலில் நிற்க வேண்டி வந்தால் மயக்கம் ஏற்படும்.
கர்ப்பகாலத்தில் பெண்கள் மது அருந்துவது, வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு விஷத்தைக் கொடுப்பதற்கு சமமாகிறது. தாயின் தொப்புள் கொடி வழியாக மது குழந்தைக்குள் பிரவேசிக்கும். இளம் ரத்தத்தில் கலந்து வெகுநேரம் சஞ்சரிக்கும். குழந்தையின் ஜீரண உறுப்பு வளர்ச்சியடையும் நேரத்தில் ஆல்ஹகால் உள்ளே சென்றால், அது குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கும்.
மதுப்பழக்கம் உள்ளவர்களுக்கு தலை, கழுத்து, ஜீரண உறுப்புகள், குடல், மார்பகம், கல்லீரல் போன்றவைகளில் புற்றுநோய் வர வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது.
குடிக்கும் ஆண்களைவிட பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். இது விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ‘ராஜீவ் காந்தி கேன்சர் இன்ஸ்ட்டிட்யூட்’ சார்பில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், டாக்டர் இந்து அகர்வால் என்பவர் ‘போதைப் பொருட்கள் ஆண்களைவிட பெண்களின் ரத்தத்தில் வேகமாக கலக்கிறது. அதனால் ஆண்களைவிட பெண்கள் இரு மடங்கு பாதிப்பிற்குள்ளாகிறார்கள்’ என்கிறார்.
மது குடிக்கும் பெண்கள் அதிகமாக பாதிக்கப்பட என்னென்ன காரணங்கள் தெரியுமா?
பெண்கள் மென்மையான உடல்வாகு கொண்டவர்கள். ஆண்களின் உடலில் தண்ணீர் அதிகம். பெண்கள் உடலில் கொழுப்பு அதிகம். தண்ணீரில் கலக்கும் மதுவின் தீவிரம் குறைகிறது. ஆனால் கொழுப்பில் கலக்கும் மதுவின் தீவிரம் வெகுநேரம் நீடிக்கிறது. மது அருந்தும் பெண்களால் சீக்கிரம் தெளிவு நிலைக்கு வர முடியாது.
பெண்களின் உடலில் இருக்கும் ‘என்சைம்’களின் அளவு குறைவு. அதனால் ஆல்ஹகால் ரத்தத்தில் அதிக அளவு கலந்து, உடல் போதையை சமன்படுத்த முடியாமல் தவிக்கும். போதையின் விளைவுகள் அதிகமாகி, மூளையையும் வெகுவாக பாதிக்கும்.

பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் ஹார்மோன் சுரப்பில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படும். அப்போது அவர்கள் மது அருந்தினால், போதையின் தாக்கம் அதிகமாக இருக்கும். அந்த நேரத்தில் அவர்களது மனநிலையில் சீரற்றநிலை உருவாகி, தன்னை மீறிய செயல்களில் ஈடுபடுவார்கள். இதனால் சமூக அந்தஸ்து குறையும். குடும்ப வாழ்க்கை பாதிக்கும். நட்பு, சுற்றம், அலுவலகத்திலும் கெட்டபெயர் ஏற்படும்.
மது அருந்தும் பெண்களுக்கு கல்லீரல் வெகுவாக பாதிக்கும். வீக்கம், வலி தோன்றும். பின்பு அவர்கள் மது அருந்துவதை விட்டுவிட்டு முறையான சிகிச்சை பெறாவிட்டால் கல்லீரல் முழு அளவு பாதிக்கப்பட்டு உயிரிழக்க நேரிடும். ஆண்களைவிட பெண்களுக்கு கல்லீரல் பாதிப்பு அதிகமாக உருவாகும்.
பெண்களில் மது அருந்துபவர்களுக்கு அளவுக்கு அதிகமான சோர்வு ஏற்படும். குடிக்காத நேரங்களிலும் அந்த சோர்வு நீடிக்கும். மது அருந்தும் பெண்களின் உடலில் வைட்டமின் பி12 சத்து மிகவும் குறைந்து போகும். அதனால் மயக்கம், தலைசுற்றல், ஞாபக மறதி போன்றவை ஏற்படும்.
மது உடலில் அதிகமான பசியை தோன்றுவிக்கும். அதனால் பெண்கள் நிறைய சாப்பிடுவார்கள். அதுவும் கலோரி அதிகம் கொண்ட ருசியான உணவுகளை கண்டபடி சாப்பிடுவார்கள். உடல் எடை அதிகரிக்கும். அப்போது பல்வேறு நோய்கள் உடலில் குடிகொள்ளத் தொடங்கிவிடும்.
மது உள்ளே போனதும் அதிக அளவு ரத்தத்தில் கலந்து, ரத்த அழுத்தத்தை உயர்த்தும். அதனால் அவர்களிடம் பதற்றமும், பரபரப்பும் தோன்றும். செயல்திறன் குறைந்துபோகும்.

மது அருந்தும் பெண்களுக்கு மலட்டுத்தன்மை உருவாகும். கர்ப்பிணிகள் மது அருந்தினால் கருச்சிதைவு தோன்றும். கருமுட்டையையும் பாதிக்கும். ஒருவேளை அவர்கள் கர்ப்பம்தரித்து குழந்தையை பெற்றெடுத்தாலும், குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படும். கடந்த 5 வருடத்தில் 30 சதவீதம் அளவுக்கு பெண்களிடம் மலட்டுத்தன்மை அதிகரித்திருக்கிறது. அதற்கு மதுப்பழக்கமும் முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
விளையாட்டுத்தனமாக ஆரம்பிக்கும் மதுப்பழக்கம் பெண்களை அலைக்கழித்து, அவர்களை வாழ்க்கையின் எல்லைக்கே துரத்திச் சென்றுவிடும். தூக்கமின்மை அவர்களிடம் தோன்றும். வாழ்க்கையில் விரக்தியை ஏற்படுத்தி தற்கொலைக்குகூட தூண்டும்.
மது பெண்களின் மூளையையும் எளிதாக பாதிக்கும். நினைவாற்றலை குறைக்கும். மூளை நரம்புகளை செயலிழக்கச் செய்வதால் காக்காய் வலிப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது. நரம்புகள் பலவீனமாகி ரத்த ஓட்டம் குறையும். அப்போது வெயிலில் நிற்க வேண்டி வந்தால் மயக்கம் ஏற்படும்.
கர்ப்பகாலத்தில் பெண்கள் மது அருந்துவது, வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு விஷத்தைக் கொடுப்பதற்கு சமமாகிறது. தாயின் தொப்புள் கொடி வழியாக மது குழந்தைக்குள் பிரவேசிக்கும். இளம் ரத்தத்தில் கலந்து வெகுநேரம் சஞ்சரிக்கும். குழந்தையின் ஜீரண உறுப்பு வளர்ச்சியடையும் நேரத்தில் ஆல்ஹகால் உள்ளே சென்றால், அது குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கும்.
மதுப்பழக்கம் உள்ளவர்களுக்கு தலை, கழுத்து, ஜீரண உறுப்புகள், குடல், மார்பகம், கல்லீரல் போன்றவைகளில் புற்றுநோய் வர வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது.
சிறியவர் முதல் பெரியோர் வரை தினமும் ஏதாவது ஒரு கீரை சூப் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று வெந்தயக் கீரை சூப் செய்து எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
வெந்தயக் கீரை - ஒரு கப்,
பெரிய வெங்காயம் - 2,
தக்காளி - 2,
சோள மாவு - ஒரு டீஸ்பூன்,
பூண்டு - 2 பல்,
வெண்ணெய் - சிறிதளவு,
காய்ச்சிய பால் - அரை டம்ளர்,
மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
வெந்தயக் கீரை, வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பூண்டை தட்டிக்கொள்ளவும்.
கடாயில் சிறிது வெண்ணெயை விட்டு வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும்.
தக்காளி நன்றாக வதங்கியதும் தேவையான தண்ணீர் சேர்த்து, கொதிக்கும்போது வெந்தயக் கீரை மற்றும் பூண்டினை சேர்த்து, மேலும் கொதிக்கவிடவும்.
காய்ச்சிய பாலில் சோள மாவை கரைத்து இதில் சேர்க்கவும்.
எல்லாம் ஒன்றாக சேர்ந்து கொதித்ததும் அடுப்பை அணைத்துவிடவும்.
இந்த சூப்பில் தேவையான உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து நன்றாகக் கலந்து பரிமாறவும்.
சூப்பரான வெந்தயக் கீரை சூப் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
வெந்தயக் கீரை - ஒரு கப்,
பெரிய வெங்காயம் - 2,
தக்காளி - 2,
சோள மாவு - ஒரு டீஸ்பூன்,
பூண்டு - 2 பல்,
வெண்ணெய் - சிறிதளவு,
காய்ச்சிய பால் - அரை டம்ளர்,
மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
வெந்தயக் கீரை, வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பூண்டை தட்டிக்கொள்ளவும்.
கடாயில் சிறிது வெண்ணெயை விட்டு வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும்.
தக்காளி நன்றாக வதங்கியதும் தேவையான தண்ணீர் சேர்த்து, கொதிக்கும்போது வெந்தயக் கீரை மற்றும் பூண்டினை சேர்த்து, மேலும் கொதிக்கவிடவும்.
காய்ச்சிய பாலில் சோள மாவை கரைத்து இதில் சேர்க்கவும்.
எல்லாம் ஒன்றாக சேர்ந்து கொதித்ததும் அடுப்பை அணைத்துவிடவும்.
இந்த சூப்பில் தேவையான உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து நன்றாகக் கலந்து பரிமாறவும்.
சூப்பரான வெந்தயக் கீரை சூப் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
எந்த ஒரு பயிற்சி செய்தாலும் அதை நேசித்துச் செய்வதும், உடலும் மனமும் முழு ஈடுபாட்டில் இருப்பதும் முக்கியம்.
உடற்பயிற்சி என்பது அன்றாடம் செய்ய வேண்டியது. அது ஒரு வேலை என்பதைவிட அது ஒரு வாழ்க்கைமுறை என்ற புரிதல் அவசியம். எந்தக் காரணத்துக்காகவும் உடற்பயிற்சியைத் தவிர்க்காதீர்கள். ஓரிரு நாட்கள் தவறினாலும் மறுநாள் உடற்பயிற்சிக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் தீவிரமாக இருங்கள். உடற்பயிற்சி என்பது வாழ்வில் ஒரு அங்கம் என்று மாறும்போது நம் உடல் வலுவாக இருக்கும்.
உடற்பயிற்சி செய்து முடித்த பிறகு உடலில் கொஞ்சம் வலி இருந்தால் அன்று நாம் முழுமையாக உடற்பயிற்சி செய்தோம் என்பதாக சிலர் நம்புகிறார்கள். இது உண்மையில்லை. உங்களை வருத்தும் எதுவும் உங்கள் உடலுக்கோ மனதுக்கோ உவப்பானது அல்ல. நிச்சயமாக உடற்பயிற்சி என்பது உடலை வருத்துவது அல்ல. உங்களுக்கு மகிழ்ச்சியூட்டும், ஆர்வத்தைத் தூண்டும் பயிற்சிகளை முதலில் செய்யத் தொடங்குங்கள். அதற்காக உடல் சோர்ந்துபோகும்படி வெகுநேரம் அந்தப் பயிற்சியையே செய்துகொண்டு இருப்பதும் தேவை இல்லாதது.
எந்த ஒரு பயிற்சி செய்தாலும் அதை நேசித்துச் செய்வதும், உடலும் மனமும் முழு ஈடுபாட்டில் இருப்பதும் முக்கியம். வருத்திக்கொண்டு பயிற்சி செய்வதால், உடல் விரைவில் சோர்வடையும். இது மனதின் உற்சாகத்தையும் பாதித்து உடற்பயிற்சி என்பதற்கே டாட்டா சொல்ல வைத்துவிடும். ‘வியர்ப்பது முக்கியம்; வருத்துவது தேவை இல்லை’ இதுதான் உடற்பயிற்சியின் அடிப்படை விதி. இதைத் தவறாமல் பின்பற்றுங்கள்.
உடற்பயிற்சி செய்து முடித்த பிறகு உடலில் கொஞ்சம் வலி இருந்தால் அன்று நாம் முழுமையாக உடற்பயிற்சி செய்தோம் என்பதாக சிலர் நம்புகிறார்கள். இது உண்மையில்லை. உங்களை வருத்தும் எதுவும் உங்கள் உடலுக்கோ மனதுக்கோ உவப்பானது அல்ல. நிச்சயமாக உடற்பயிற்சி என்பது உடலை வருத்துவது அல்ல. உங்களுக்கு மகிழ்ச்சியூட்டும், ஆர்வத்தைத் தூண்டும் பயிற்சிகளை முதலில் செய்யத் தொடங்குங்கள். அதற்காக உடல் சோர்ந்துபோகும்படி வெகுநேரம் அந்தப் பயிற்சியையே செய்துகொண்டு இருப்பதும் தேவை இல்லாதது.
எந்த ஒரு பயிற்சி செய்தாலும் அதை நேசித்துச் செய்வதும், உடலும் மனமும் முழு ஈடுபாட்டில் இருப்பதும் முக்கியம். வருத்திக்கொண்டு பயிற்சி செய்வதால், உடல் விரைவில் சோர்வடையும். இது மனதின் உற்சாகத்தையும் பாதித்து உடற்பயிற்சி என்பதற்கே டாட்டா சொல்ல வைத்துவிடும். ‘வியர்ப்பது முக்கியம்; வருத்துவது தேவை இல்லை’ இதுதான் உடற்பயிற்சியின் அடிப்படை விதி. இதைத் தவறாமல் பின்பற்றுங்கள்.
பெண்கள் பெரும்பாலும் 30 வயது தொடங்கியவுடன் சிலருக்கு வயதான தோற்றம் வந்துவிடும். உங்கள் சருமம் இளமையாகவே இருக்க இந்த குறிப்பு பயன்படும்.
பெண்கள் பெரும்பாலும் 30 வயதை கடந்தவுடன் பெரிதாக சதை தொய்வு இருக்காது. அதனால் அப்போது கண்டுகொள்ள மாட்டார்கள். 35 வயது தொடங்கியவுடன் சிலருக்கு வயதான தோற்றம் வந்துவிடும். அதன் பின் அடுத்த பெண்களுடன் கம்பேர் செய்ய ஆரம்பித்து விடுவோம்.
சரும தொய்வை தடுக்க இங்கே சொல்லப்பட்டுள்ள குறிப்பை பயன்படுத்தி பாருங்கள். நல்ல பலன் தரும். 40 களிலும் உங்கள் சருமம் இளமையாகவே இருக்க இந்த குறிப்பு பயன்படும்.
தேவையான பொருட்கள் :
முல்தானி மெட்டி - 1 கப்
1 ப்ளாக் டீ பேக் - 1
ஆலிவ் எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
காபித் தூள் - 4 டேபிள் ஸ்பூன்
ஹாஜல் நட் சாறு (Hazelnut juice) - 10 துளிகள்.
நீரை சுட வைத்து அதில் ப்ளாக் டீ பேக்கை போட வேண்டும். சில நிமிடங்கள் அப்படியே விட்டு அதன் பின் அந்த நிறம் மாறிய நீரை ஒரு கிண்ணத்தில் ஊற்றிக் கொள்ளுங்கள்.
இந்த நீரில் முல்தானி மெட்டியை சிறிது சிறிதாக கட்டியாகாமல் கலக்க வேண்டும். அது முழுவதும் கரையும் வரை நன்றாக கலக்குங்கள். இந்த கலவையில் காபித் தூள், ஆலிவ் எண்ணெய் மற்றும் ஹாஜல் நட் சாறு ஆகிய மூன்றையும் கலந்து க்ரீம் பதத்திற்கு கொண்டு வாருங்கள்.
மிகவும் கெட்டியாக இருந்தால் சிறிது டீ டிகாஷனையோ அல்லது ஆலிவ் எண்ணெயையோ ஊற்றிக் கொள்ளலாம். இந்த கலவையை உங்கள் முகம், வயிறு, கழுத்து மற்றும் தொங்கும் சதையுள்ள கைகளுக்கும் போட வேண்டும்.
20 நிமிடங்கள் காய வைத்த பின் வெதுவெதுப்பான நீரினால் கழுவுங்கள். பின்னர் மிருதுவான துண்டினால் துவட்டிக் கொள்ளுங்கள். உங்களுக்கு வறண்ட சருமமாக இருந்தாலும் உடனே மாய்ஸ்ரைசர் க்ரீன் போட்டுக் கொள்ளலாம். இல்லையெனில் தேங்காய் எண்ணெய் தடவிக் கொள்ளலாம்.
இவ்வாறு வாரம் அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை செய்தால் மீண்டும் உங்கள் இருபதுகளில் இருப்பது போல் மாறிவிடுவீர்கள்.
முகத்திற்கு தினமும் எண்ணெய் தடவுவது கட்டாயமாகும். அதுவும் 30 வயது ஆரம்பித்தவுடன் முகத்தில் வறட்சி ஆரம்பிக்கும். அந்த சமயத்தில் உங்கள் சருமம் மிருதுவாக இருக்க வேண்டும்.
சரும தொய்வை தடுக்க இங்கே சொல்லப்பட்டுள்ள குறிப்பை பயன்படுத்தி பாருங்கள். நல்ல பலன் தரும். 40 களிலும் உங்கள் சருமம் இளமையாகவே இருக்க இந்த குறிப்பு பயன்படும்.
தேவையான பொருட்கள் :
முல்தானி மெட்டி - 1 கப்
1 ப்ளாக் டீ பேக் - 1
ஆலிவ் எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
காபித் தூள் - 4 டேபிள் ஸ்பூன்
ஹாஜல் நட் சாறு (Hazelnut juice) - 10 துளிகள்.
நீரை சுட வைத்து அதில் ப்ளாக் டீ பேக்கை போட வேண்டும். சில நிமிடங்கள் அப்படியே விட்டு அதன் பின் அந்த நிறம் மாறிய நீரை ஒரு கிண்ணத்தில் ஊற்றிக் கொள்ளுங்கள்.
இந்த நீரில் முல்தானி மெட்டியை சிறிது சிறிதாக கட்டியாகாமல் கலக்க வேண்டும். அது முழுவதும் கரையும் வரை நன்றாக கலக்குங்கள். இந்த கலவையில் காபித் தூள், ஆலிவ் எண்ணெய் மற்றும் ஹாஜல் நட் சாறு ஆகிய மூன்றையும் கலந்து க்ரீம் பதத்திற்கு கொண்டு வாருங்கள்.
மிகவும் கெட்டியாக இருந்தால் சிறிது டீ டிகாஷனையோ அல்லது ஆலிவ் எண்ணெயையோ ஊற்றிக் கொள்ளலாம். இந்த கலவையை உங்கள் முகம், வயிறு, கழுத்து மற்றும் தொங்கும் சதையுள்ள கைகளுக்கும் போட வேண்டும்.
20 நிமிடங்கள் காய வைத்த பின் வெதுவெதுப்பான நீரினால் கழுவுங்கள். பின்னர் மிருதுவான துண்டினால் துவட்டிக் கொள்ளுங்கள். உங்களுக்கு வறண்ட சருமமாக இருந்தாலும் உடனே மாய்ஸ்ரைசர் க்ரீன் போட்டுக் கொள்ளலாம். இல்லையெனில் தேங்காய் எண்ணெய் தடவிக் கொள்ளலாம்.
இவ்வாறு வாரம் அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை செய்தால் மீண்டும் உங்கள் இருபதுகளில் இருப்பது போல் மாறிவிடுவீர்கள்.
முகத்திற்கு தினமும் எண்ணெய் தடவுவது கட்டாயமாகும். அதுவும் 30 வயது ஆரம்பித்தவுடன் முகத்தில் வறட்சி ஆரம்பிக்கும். அந்த சமயத்தில் உங்கள் சருமம் மிருதுவாக இருக்க வேண்டும்.
நமது பாரம்பரிய உணவுகளிலேயே சிறு, சிறு மாற்றங்கள் மூலம் நீரிழிவு நோய்க்குத்தக்கபடி மாற்றி அமைக்கலாம். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கலாம்; முற்றிலும் குணப்படுத்த முடியாது. நீரிழிவு நோயாளியின் வயது, உயரம், எடை, ஆண், பெண் உடலுழைப்பின் தன்மை ஆகியவற்றை கணக்கில் கொண்டே, அவரது உணவு முறையை தீர்மானிக்க வேண்டும்.
ஒருவரது உடல் எடைக்கேற்ப, 1 கிலோவுக்கு 1 கிராம் என்ற அளவில் தினமும் ஒரு வளர்ந்த மனிதனுக்கு, புரதம் தேவைப்படுகிறது. உடலில் ஏதேனும் நோய், குறைபாடு இருப்பின், இந்த அளவில் மாறுதல் தேவைப்படலாம்.
கொழுப்பு சத்தில் இருந்து பெறப்படும் கலோரி, மொத்தமாக தேவைப்படும் கலோரியில் 30 சதவீதம் தாண்டக்கூடாது. அதிலும், நெய், வெண்ணெய், தேங்காய் எண்ணெய், வனஸ்பதி ஆகியவற்றில் இருந்து 10 சதவீதம் ஆலிவ் எண்ணெய், நிலக்கடலை எண்ணெய் ஆகியவற்றில் இருந்து 10 சதவீதம் சூரியகாந்தி எண்ணெய், கார்ன் எண்ணெய், தவிட்டு எண்ணெய், கடுகு எண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவற்றில் இருந்து 10 சதவீதம் என பிரித்து எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்பர்.
மேற்கண்டது போக மீதி கலோரிகள் கார்போ ஹைட்ரேட் உணவில் இருந்து பெறலாம். எளியவகை சர்க்கரை, கரும்பு சர்க்கரை போன்றவை சுலபமாக செரிமானம் ஆகி, மோனோ சேக்கரைட்களாக மாறி, விரைவாக உறிஞ்சப்பட்டு, ரத்தத்தில் சர்க்கரை அளவை பெருமளவில் கூட்டுகின்றன. ஆகவே அவற்றை தவிர்த்து காம்ப்ளக்ஸ் கார்போ ஹைட்ரேட்டுகளை எடுத்து கொண்டால் செரிமானம் ஆவதும், ரத்தத்தில் சர்க்கரை உறிஞ்சப்படுவதும் தாமதம் ஆகும். உடல் தன்னை தயார்படுத்தி கொள்ள தேவையான நேரமும் கிடைக்கும்.
எல்லா மனிதருக்கும் போலவே, நீரிழிவு நோயாளிகளுக்கும் பிற தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியன தேவை. உணவு மூலம் கிடைப்பதில் பற்றாக்குறை நேர்ந்தால் மாத்திரை வடிவில் எடுக்கலாம்.
ஓர் உணவு எவ்வளவு வேகமாக, மெதுவாக செரிமானம் ஆகிறது. உறிஞ்சப்படுகிறது என்பதை பொறுத்து கிளைசமிக் இன்டெக்ஸ் அமைகிறது. எடுத்துக்காட்டாக முழு தானியங்கள் குறைந்த அளவு கிளைசமிக் இன்டெக்ஸ் உடையனவாக இருக்கின்றன. செரிமானம் ஆவதும், உறிஞ்சப்படுவதும் தாமதமாகும் காரணத்தால் நீரிழிவு நோயாளியின் இன்சுலின் குறைவாகவும், மெதுவாகவும் இருப்பதால் மேற்சொன்னது போன்ற உணவுகள் அவர்களுக்கு மிகவும் பொருத்தமானவை ஆகும்.
தேவையான அளவு நார்ச்சத்துள்ள உணவுகளை, நீரிழிவு நோயாளிகள் எடுத்துக் கொள்ளும்போது,
* இன்சுலின் எடுக்கும் அளவு குறையும்
* கொலஸ்ட்ரால், டிரைகிளிசரைட்ஸ் அளவு (ரத்தத்தில்) குறையும்.
* உடல் எடை குறைவது சுலபமாகும்.
* ரத்த அழுத்தம் சீராகும்.
நார்ச்சத்துக்கள் கரையக்கூடியவை, கரைய முடியாதவை என இருவகையாக உள்ளன. வெந்தயம் போன்ற கரையக்கூடிய நார்ச்சத்துக்களால் குடலில் சத்துக்கள் தக்க வைக்கப்படுகின்றன. குளுக்கோஸ் உறிஞ்சப்படுவது தடுக்கப்படுகிறது. ரத்தத்தில் கொலஸ்டிரால் அளவை குறைக்கிறது.
கரைய முடியாத நார்ச்சத்துக்களான செல்லுலோஸ், லிக்னைன் ஆகியன பழங்கள், காய்கறிகள், மற்றும் தானியங்கள், பருப்பு வகைகளில் உள்ளன. அவற்றை உண்ணும்போது, விரைவில் திருப்தியான உணர்வு தோன்றும். குடலில் உணவு தங்கும் நேரம் அதிகமாகும். மலச்சிக்கல் தடுக்கப்படும். குளுக்கோஸ் உறிஞ்சுவது தாமதம் ஆகும். தினமும் 40 கிராம் அளவுக்கு நார்ச்சத்துக்கள் நீரிழிவு நோய். உடையவர்களுக்கு தேவைப்படுகிறது.
நீரிழிவு நோய் உடையவர்களின் உடலால் அதிகப்படியான கலோரிகளை சேமிக்க இயலாது. தினசரி தேவையான அளவு கலோரிகளை குறிப்பிட்ட இடைவெளியில் சிறிய உணவுமுறையாக எடுத்துக் கொள்வது நல்லது.
விருந்து, உபவாசம் இரண்டுமே தவிர்க்கப்பட வேண்டும். ஏனெனில் இரண்டு முறையிலும் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து விடும். வெறும் திரவ உணவு எடுத்துக் கொள்வதும் கூடாது.
கொழுப்பு சத்து குறைந்த காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் மிகுந்த உணவுகளை எடுத்துக் கொள்வது நன்மை தரும். நமது பாரம்பரிய உணவுகளிலேயே சிறு, சிறு மாற்றங்கள் மூலம் நீரிழிவு நோய்க்குத்தக்கபடி மாற்றி அமைக்கலாம்.
ஒருவரது உடல் எடைக்கேற்ப, 1 கிலோவுக்கு 1 கிராம் என்ற அளவில் தினமும் ஒரு வளர்ந்த மனிதனுக்கு, புரதம் தேவைப்படுகிறது. உடலில் ஏதேனும் நோய், குறைபாடு இருப்பின், இந்த அளவில் மாறுதல் தேவைப்படலாம்.
கொழுப்பு சத்தில் இருந்து பெறப்படும் கலோரி, மொத்தமாக தேவைப்படும் கலோரியில் 30 சதவீதம் தாண்டக்கூடாது. அதிலும், நெய், வெண்ணெய், தேங்காய் எண்ணெய், வனஸ்பதி ஆகியவற்றில் இருந்து 10 சதவீதம் ஆலிவ் எண்ணெய், நிலக்கடலை எண்ணெய் ஆகியவற்றில் இருந்து 10 சதவீதம் சூரியகாந்தி எண்ணெய், கார்ன் எண்ணெய், தவிட்டு எண்ணெய், கடுகு எண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவற்றில் இருந்து 10 சதவீதம் என பிரித்து எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்பர்.
மேற்கண்டது போக மீதி கலோரிகள் கார்போ ஹைட்ரேட் உணவில் இருந்து பெறலாம். எளியவகை சர்க்கரை, கரும்பு சர்க்கரை போன்றவை சுலபமாக செரிமானம் ஆகி, மோனோ சேக்கரைட்களாக மாறி, விரைவாக உறிஞ்சப்பட்டு, ரத்தத்தில் சர்க்கரை அளவை பெருமளவில் கூட்டுகின்றன. ஆகவே அவற்றை தவிர்த்து காம்ப்ளக்ஸ் கார்போ ஹைட்ரேட்டுகளை எடுத்து கொண்டால் செரிமானம் ஆவதும், ரத்தத்தில் சர்க்கரை உறிஞ்சப்படுவதும் தாமதம் ஆகும். உடல் தன்னை தயார்படுத்தி கொள்ள தேவையான நேரமும் கிடைக்கும்.
எல்லா மனிதருக்கும் போலவே, நீரிழிவு நோயாளிகளுக்கும் பிற தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியன தேவை. உணவு மூலம் கிடைப்பதில் பற்றாக்குறை நேர்ந்தால் மாத்திரை வடிவில் எடுக்கலாம்.
ஓர் உணவு எவ்வளவு வேகமாக, மெதுவாக செரிமானம் ஆகிறது. உறிஞ்சப்படுகிறது என்பதை பொறுத்து கிளைசமிக் இன்டெக்ஸ் அமைகிறது. எடுத்துக்காட்டாக முழு தானியங்கள் குறைந்த அளவு கிளைசமிக் இன்டெக்ஸ் உடையனவாக இருக்கின்றன. செரிமானம் ஆவதும், உறிஞ்சப்படுவதும் தாமதமாகும் காரணத்தால் நீரிழிவு நோயாளியின் இன்சுலின் குறைவாகவும், மெதுவாகவும் இருப்பதால் மேற்சொன்னது போன்ற உணவுகள் அவர்களுக்கு மிகவும் பொருத்தமானவை ஆகும்.
தேவையான அளவு நார்ச்சத்துள்ள உணவுகளை, நீரிழிவு நோயாளிகள் எடுத்துக் கொள்ளும்போது,
* இன்சுலின் எடுக்கும் அளவு குறையும்
* கொலஸ்ட்ரால், டிரைகிளிசரைட்ஸ் அளவு (ரத்தத்தில்) குறையும்.
* உடல் எடை குறைவது சுலபமாகும்.
* ரத்த அழுத்தம் சீராகும்.
நார்ச்சத்துக்கள் கரையக்கூடியவை, கரைய முடியாதவை என இருவகையாக உள்ளன. வெந்தயம் போன்ற கரையக்கூடிய நார்ச்சத்துக்களால் குடலில் சத்துக்கள் தக்க வைக்கப்படுகின்றன. குளுக்கோஸ் உறிஞ்சப்படுவது தடுக்கப்படுகிறது. ரத்தத்தில் கொலஸ்டிரால் அளவை குறைக்கிறது.
கரைய முடியாத நார்ச்சத்துக்களான செல்லுலோஸ், லிக்னைன் ஆகியன பழங்கள், காய்கறிகள், மற்றும் தானியங்கள், பருப்பு வகைகளில் உள்ளன. அவற்றை உண்ணும்போது, விரைவில் திருப்தியான உணர்வு தோன்றும். குடலில் உணவு தங்கும் நேரம் அதிகமாகும். மலச்சிக்கல் தடுக்கப்படும். குளுக்கோஸ் உறிஞ்சுவது தாமதம் ஆகும். தினமும் 40 கிராம் அளவுக்கு நார்ச்சத்துக்கள் நீரிழிவு நோய். உடையவர்களுக்கு தேவைப்படுகிறது.
நீரிழிவு நோய் உடையவர்களின் உடலால் அதிகப்படியான கலோரிகளை சேமிக்க இயலாது. தினசரி தேவையான அளவு கலோரிகளை குறிப்பிட்ட இடைவெளியில் சிறிய உணவுமுறையாக எடுத்துக் கொள்வது நல்லது.
விருந்து, உபவாசம் இரண்டுமே தவிர்க்கப்பட வேண்டும். ஏனெனில் இரண்டு முறையிலும் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து விடும். வெறும் திரவ உணவு எடுத்துக் கொள்வதும் கூடாது.
கொழுப்பு சத்து குறைந்த காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் மிகுந்த உணவுகளை எடுத்துக் கொள்வது நன்மை தரும். நமது பாரம்பரிய உணவுகளிலேயே சிறு, சிறு மாற்றங்கள் மூலம் நீரிழிவு நோய்க்குத்தக்கபடி மாற்றி அமைக்கலாம்.
இந்த சீசனில் கிடைக்கும் மாம்பழத்தை வைத்து விதவிதமான உணவுகளை தயாரிக்கலாம். இன்று மாம்பழத்தை வைத்து மில்க் ஷேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மாம்பழத் துண்டுகள் - 2 கப்,
பால் - கால் லிட்டர்,
ஐஸ் கட்டிகள் - தேவையான அளவு,
சர்க்கரை - தேவையான அளவு.

செய்முறை :
சிறிது மாம்பழ துண்டுகளை தனியாக எடுத்த வைக்கவும்.
மீதமுள்ள மாம்பழத் துண்டுகளுடன் சர்க்கரை, தேவையான அளவு பால் விட்டு மிக்சியில் நன்றாக நுரைக்க அடிக்கவும்.
அதனுடன் மீதமுள்ள பால், ஐஸ்கட்டிகள் சேர்த்து மீண்டும் ஒருமுறை நன்றாக நுரைக்க அடித்து கண்ணாடி கப்பில் ஊற்றி அதன் மேலே துண்டுகளாக நறுக்கி வைத்துள்ள மாம்பழ துண்டுகளை போட்டு பருகவும்.
சூப்பரான மாம்பழ மில்க் ஷேக் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மாம்பழத் துண்டுகள் - 2 கப்,
பால் - கால் லிட்டர்,
ஐஸ் கட்டிகள் - தேவையான அளவு,
சர்க்கரை - தேவையான அளவு.

செய்முறை :
சிறிது மாம்பழ துண்டுகளை தனியாக எடுத்த வைக்கவும்.
மீதமுள்ள மாம்பழத் துண்டுகளுடன் சர்க்கரை, தேவையான அளவு பால் விட்டு மிக்சியில் நன்றாக நுரைக்க அடிக்கவும்.
அதனுடன் மீதமுள்ள பால், ஐஸ்கட்டிகள் சேர்த்து மீண்டும் ஒருமுறை நன்றாக நுரைக்க அடித்து கண்ணாடி கப்பில் ஊற்றி அதன் மேலே துண்டுகளாக நறுக்கி வைத்துள்ள மாம்பழ துண்டுகளை போட்டு பருகவும்.
சூப்பரான மாம்பழ மில்க் ஷேக் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
48 மணி நேரத்துக்குமேல் உணவு உண்ணாமல் இருந்தால் உங்கள் உடம்பில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
ஒரு சிலர் உடல் எடையைக் குறைக்கிறேன் பேர்வழி என்று இரண்டு, மூன்று நாள்கள் கூட சாப்பிடாமல் இருக்கிறார்கள். அப்படி இருக்கலாமா? சாப்பிடாவிட்டால் நம் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும்..? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இரண்டு நாள்களுக்கு மேல் சாப்பிடாமல் இருந்தால், தசைகளில் உள்ள கிளைக்கோஜனையும் (Glycogen), கல்லீரலில் உள்ள குளுக்கோசையும் (Glucose) நம் உடல் எடுத்துக்கொள்ள ஆரம்பிக்கும். இவை இரண்டும் குறைந்துவிட்டால் அடுத்ததாக உடலில் உள்ள கொழுப்புகள் கரையத் தொடங்கும். இறுதியாக, செல்களில் உள்ள புரதத்தை நம் உடல் எடுத்துக்கொள்ள ஆரம்பிக்கும். இது மிகவும் அபாயகரமான நிலை. இந்தநிலைக்கு 'கெடோசிஸ்' (ketosis) என்று பெயர்.
உடல் இந்த நிலையை எட்டிவிட்டால், மிகவும் பலகீனமடைந்து விடுவோம். கடும் சோர்வு உண்டாகும். தசைகள் வலுவிழக்கும். எலும்புகள் பலமிழந்து உடையத் தொடங்கும். இதயத் தசைகள் வலுவிழப்பதால் ரத்தத்தை பம்ப் செய்யும் ஆற்றல் குறையும். அதன் காரணமாக குறைந்த ரத்த அழுத்தம் உண்டாகும். பல்ஸ் ரேட் குறையும். அல்சர் பாதிப்பு ஏற்படும். உடல் குளிர்ச்சியடையும். முடி கொட்டும்.

72 மணி நேரத்தைக் கடந்துவிட்டால் உடலில் ஏற்கெனவே சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் புரதத்தை உடல் தின்ன ஆரம்பித்துவிடும். இதற்குப் பிறகு நிகழ்பவை எல்லாம் கொஞ்சம், கொஞ்சமாக மரண வாயிலுக்கு அழைத்துச் செல்லும் நிகழ்வுகள்தான். முதலில் சிறுநீரகம், இதயம் ஆகியவையும் பாதிப்படைய ஆரம்பிக்கும். அடுத்ததாக, உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புக்களாக செயலிழக்கத் தொடங்கும்.
இது பொதுவான கருத்து, ஆனால், உணவில்லாமல் எழுபது நாள்கள் வரை உயிர் வாழ்ந்தவர்களும் இருக்கிறார்கள். எனவே உணவில்லாமல் ஒருவர் எத்தனை நாள்கள் உயிர்வாழலாம் என்பதை அவரின் உடல்நலம், உயரம், சுற்றுப்புறச்சூழல் ஆகிய மூன்றும்தான் தீர்மானிக்கிறது. பி.எம்.ஐ 12- 12.5 என்ற அளவில் இருப்பவர்கள் பட்டினியாக இருக்கவே கூடாது. அதுபோல, போதிய அளவு சாப்பிடாவிட்டாலும் இது போன்ற பிரச்சனைகள் உண்டாகும்.
இரண்டு நாள்களுக்கு மேல் சாப்பிடாமல் இருந்தால், தசைகளில் உள்ள கிளைக்கோஜனையும் (Glycogen), கல்லீரலில் உள்ள குளுக்கோசையும் (Glucose) நம் உடல் எடுத்துக்கொள்ள ஆரம்பிக்கும். இவை இரண்டும் குறைந்துவிட்டால் அடுத்ததாக உடலில் உள்ள கொழுப்புகள் கரையத் தொடங்கும். இறுதியாக, செல்களில் உள்ள புரதத்தை நம் உடல் எடுத்துக்கொள்ள ஆரம்பிக்கும். இது மிகவும் அபாயகரமான நிலை. இந்தநிலைக்கு 'கெடோசிஸ்' (ketosis) என்று பெயர்.
உடல் இந்த நிலையை எட்டிவிட்டால், மிகவும் பலகீனமடைந்து விடுவோம். கடும் சோர்வு உண்டாகும். தசைகள் வலுவிழக்கும். எலும்புகள் பலமிழந்து உடையத் தொடங்கும். இதயத் தசைகள் வலுவிழப்பதால் ரத்தத்தை பம்ப் செய்யும் ஆற்றல் குறையும். அதன் காரணமாக குறைந்த ரத்த அழுத்தம் உண்டாகும். பல்ஸ் ரேட் குறையும். அல்சர் பாதிப்பு ஏற்படும். உடல் குளிர்ச்சியடையும். முடி கொட்டும்.

72 மணி நேரத்தைக் கடந்துவிட்டால் உடலில் ஏற்கெனவே சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் புரதத்தை உடல் தின்ன ஆரம்பித்துவிடும். இதற்குப் பிறகு நிகழ்பவை எல்லாம் கொஞ்சம், கொஞ்சமாக மரண வாயிலுக்கு அழைத்துச் செல்லும் நிகழ்வுகள்தான். முதலில் சிறுநீரகம், இதயம் ஆகியவையும் பாதிப்படைய ஆரம்பிக்கும். அடுத்ததாக, உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புக்களாக செயலிழக்கத் தொடங்கும்.
இது பொதுவான கருத்து, ஆனால், உணவில்லாமல் எழுபது நாள்கள் வரை உயிர் வாழ்ந்தவர்களும் இருக்கிறார்கள். எனவே உணவில்லாமல் ஒருவர் எத்தனை நாள்கள் உயிர்வாழலாம் என்பதை அவரின் உடல்நலம், உயரம், சுற்றுப்புறச்சூழல் ஆகிய மூன்றும்தான் தீர்மானிக்கிறது. பி.எம்.ஐ 12- 12.5 என்ற அளவில் இருப்பவர்கள் பட்டினியாக இருக்கவே கூடாது. அதுபோல, போதிய அளவு சாப்பிடாவிட்டாலும் இது போன்ற பிரச்சனைகள் உண்டாகும்.
ஜிம்முக்குச் செல்பவர்கள் முறையான சில விதிமுறைகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
ஜிம்முக்குச் செல்ல வேண்டும், உடற்பயிற்சி செய்து உடலை முறுக்கேற்ற வேண்டும் என பலருக்கும் ஆசை இருந்தாலும், ஜிம்மில் முறையான சில விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல், உடல் வலி ஏற்பட்டு ஓரிரு நாட்களுக்குப் பின்னர் ஜிம்முக்குச் செல்வதையே நிறுத்திவிடுபவர்கள்தான் அதிகம். ஜிம்முக்குச் செல்பவர்கள் இந்த ஏழு விஷயங்களைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும்.
1. ஜிம்முக்குச் செல்லும்போது டிஷர்ட், டிராக் பேன்ட், ஸ்போர்ட்ஸ் ஷூ அணிந்து செல்வது அவசியம். உடைகள் இறுக்கமாக இல்லாமல் தளர்வானதாக இருப்பது அவசியம்.
2. முதன்முதலில் ஜிம்முக்குச் செல்லும்போது, ஃபிட்னெஸ் டெஸ்ட் எடுக்க வேண்டும். உடலின் நெகிழ்வுத்தன்மை, உடல் வலிமை, கார்டியோ உடற்பயிற்சிகளைச் செய்யும் திறன், உடலின் சமநிலைத்தன்மை, பி.எம்.ஐ மதிப்பு போன்றவற்றைப் பரிசோதித்து, அதன் பிறகே உடற்பயிற்சிகளைத் தொடங்க வேண்டும்.
3. உடற்பயிற்சி தொடங்குவதற்கு முன்பு, ஐந்து நிமிடங்கள் வார்ம்அப் பயிற்சிகள் அவசியம். வார்ம்அப் பயிற்சிகளுக்குப் பிறகு, ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளைச் செய்ய வேண்டும். அப்போதுதான், உடற்பயிற்சி செய்வதற்கு உடலில் உள்ள தசைகள் ஒத்துழைக்கும். தசைப்பிடிப்பு உள்ளிட்ட தசையில் ஏற்படும் கோளாறுகளும் தவிர்க்கப்படும்.
4. உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் அதிகமாக கார்டியோ பயிற்சிகளைச் செய்வதால் உடல் எடை குறையும். ஆனால், உடல் ஃபிட் ஆக இருக்காது. அடிக்கடி சோர்வு ஏற்படும். எனவே, ஒரு மணி நேர உடற்பயிற்சியில் 40 நிமிடங்கள் கார்டியோ பயிற்சிகளையும், 20 நிமிடங்கள் வலுவூட்டும் பயிற்சிகளையும் செய்ய வேண்டும். உடல் எடையை அதிகரிக்க விரும்புபவர்கள், 70 சதவிகிதம் வலுவூட்டும் பயிற்சிகளையும், 30 சதவிகிதம் கார்டியோ பயிற்சிகளையும் செய்ய வேண்டும்.
5. வாரத்துக்கு ஒரு நாள் உடற்பயிற்சிக்கும் ஓய்வு கொடுக்க வேண்டும். தசைகளுக்கு ஓய்வு கொடுத்தால் மட்டுமே, அடுத்த வாரம் முறையாக உடற்பயிற்சி செய்ய இயலும். எனவே, ஆர்வக்கோளாறில் ஜிம்மில் சேர்ந்ததும் ஏழு நாட்களும் பயிற்சி செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
7. உடற்பயிற்சிகள் அனைத்தையும் முடித்தவுடன் தசைகளின் இறுக்கத்தை தளர்த்தும் வண்ணம் சில ஸ்டிரெட்ச்சிங் பயிற்சிகளை செய்ய வேண்டும். 3 முதல் 5 நிமிடங்கள் வரை செய்யும் இந்தப் பயிற்சியை, உடற்பயிற்சியாளர் கண்காணிப்பில் செய்ய வேண்டியது அவசியம்.
1. ஜிம்முக்குச் செல்லும்போது டிஷர்ட், டிராக் பேன்ட், ஸ்போர்ட்ஸ் ஷூ அணிந்து செல்வது அவசியம். உடைகள் இறுக்கமாக இல்லாமல் தளர்வானதாக இருப்பது அவசியம்.
2. முதன்முதலில் ஜிம்முக்குச் செல்லும்போது, ஃபிட்னெஸ் டெஸ்ட் எடுக்க வேண்டும். உடலின் நெகிழ்வுத்தன்மை, உடல் வலிமை, கார்டியோ உடற்பயிற்சிகளைச் செய்யும் திறன், உடலின் சமநிலைத்தன்மை, பி.எம்.ஐ மதிப்பு போன்றவற்றைப் பரிசோதித்து, அதன் பிறகே உடற்பயிற்சிகளைத் தொடங்க வேண்டும்.
3. உடற்பயிற்சி தொடங்குவதற்கு முன்பு, ஐந்து நிமிடங்கள் வார்ம்அப் பயிற்சிகள் அவசியம். வார்ம்அப் பயிற்சிகளுக்குப் பிறகு, ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளைச் செய்ய வேண்டும். அப்போதுதான், உடற்பயிற்சி செய்வதற்கு உடலில் உள்ள தசைகள் ஒத்துழைக்கும். தசைப்பிடிப்பு உள்ளிட்ட தசையில் ஏற்படும் கோளாறுகளும் தவிர்க்கப்படும்.
4. உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் அதிகமாக கார்டியோ பயிற்சிகளைச் செய்வதால் உடல் எடை குறையும். ஆனால், உடல் ஃபிட் ஆக இருக்காது. அடிக்கடி சோர்வு ஏற்படும். எனவே, ஒரு மணி நேர உடற்பயிற்சியில் 40 நிமிடங்கள் கார்டியோ பயிற்சிகளையும், 20 நிமிடங்கள் வலுவூட்டும் பயிற்சிகளையும் செய்ய வேண்டும். உடல் எடையை அதிகரிக்க விரும்புபவர்கள், 70 சதவிகிதம் வலுவூட்டும் பயிற்சிகளையும், 30 சதவிகிதம் கார்டியோ பயிற்சிகளையும் செய்ய வேண்டும்.
5. வாரத்துக்கு ஒரு நாள் உடற்பயிற்சிக்கும் ஓய்வு கொடுக்க வேண்டும். தசைகளுக்கு ஓய்வு கொடுத்தால் மட்டுமே, அடுத்த வாரம் முறையாக உடற்பயிற்சி செய்ய இயலும். எனவே, ஆர்வக்கோளாறில் ஜிம்மில் சேர்ந்ததும் ஏழு நாட்களும் பயிற்சி செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
7. உடற்பயிற்சிகள் அனைத்தையும் முடித்தவுடன் தசைகளின் இறுக்கத்தை தளர்த்தும் வண்ணம் சில ஸ்டிரெட்ச்சிங் பயிற்சிகளை செய்ய வேண்டும். 3 முதல் 5 நிமிடங்கள் வரை செய்யும் இந்தப் பயிற்சியை, உடற்பயிற்சியாளர் கண்காணிப்பில் செய்ய வேண்டியது அவசியம்.
காய்கறிகள், வேர்க்கடலை பொடி தூவி ஊத்தப்பம் செய்தால் சூப்பராக இருக்கும். இன்று இந்த ஊத்தப்பத்தை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
தோசை மாவு - 1 கப்,
வேர்க்கடலைப் பொடி - தேவையான அளவு,
வெங்காயம், தக்காளி - தலா 1,
கொத்தமல்லி - சிறிது,
தோல் சீவிய இஞ்சித்துருவல் - 1 டீஸ்பூன்,
கேரட் துருவல் - 5 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு.

செய்முறை :
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
தோசை மாவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி, கேரட் துருவல், உப்பு, கொத்தமல்லியை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
தோசைக் கல்லை அடுப்பில் வைத்து மாவை சிறிய ஊத்தப்பங்களாக ஊற்றி, அதன் மீது தேவையான அளவு வேர்க்கடலைப் பொடியை தூவவும்.
பிறகு சுற்றிலும் எண்ணெய் விட்டு மூடி போட்டு வேகவிட்டு எடுத்து சூடாக பரிமாறவும்.
சூப்பரான வேர்க்கடலைப் பொடி மசாலா ஊத்தப்பம் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
தோசை மாவு - 1 கப்,
வேர்க்கடலைப் பொடி - தேவையான அளவு,
வெங்காயம், தக்காளி - தலா 1,
கொத்தமல்லி - சிறிது,
தோல் சீவிய இஞ்சித்துருவல் - 1 டீஸ்பூன்,
கேரட் துருவல் - 5 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு.

செய்முறை :
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
தோசை மாவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி, கேரட் துருவல், உப்பு, கொத்தமல்லியை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
தோசைக் கல்லை அடுப்பில் வைத்து மாவை சிறிய ஊத்தப்பங்களாக ஊற்றி, அதன் மீது தேவையான அளவு வேர்க்கடலைப் பொடியை தூவவும்.
பிறகு சுற்றிலும் எண்ணெய் விட்டு மூடி போட்டு வேகவிட்டு எடுத்து சூடாக பரிமாறவும்.
சூப்பரான வேர்க்கடலைப் பொடி மசாலா ஊத்தப்பம் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
50 வயதுக்கு மேற்பட்டப் பெண்களுக்கு அதிக அளவில் இதய நோய் வர முக்கியமான காரணங்கள் என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.
பெண்களுக்கு மாதவிடாயின்போது சுரக்கும் ஹார்மோன்கள் இதய நோய் வராமல் தடுக்கிறது. மாதவிடாய் நின்றுவிட்டால் பெண்கள் கூடுதல் கவனத்துடன் இருக்கவேண்டும். பொதுவாக பெண்களுக்கு 50 வயதுக்குள்ளே மாதவிடாய் நின்றுபோய்விடுகிறது. அப்போது பெண்கள் உணவு உட்கொள்வதில் கவனமின்றி இருக்ககூடாது.
முக்கியமாக இறைச்சி உணவைத் தவிர்த்து அதிகம் காய்கறிகளைச் சேர்த்துக்கொள்ளவேண்டும். இறைச்சியில் அதிகம் கொழுப்புச் சத்து இருக்கிறது. ருசிக்காக அதிக அளவில் எண்ணெய், காரம் சேர்த்து சமைப்பதால் கலோரியின் அளவையும் அதிகரிக்கச் செய்துவிடுகிறது. உதாரணத்துக்கு, ஒரு கப் சாதத்தோடு சமைத்த இறைச்சி சேர்த்துக்கொண்டால் மூன்று கப் அளவிற்கு மாறிவிடுகிறது. இதனால் கொலஸ்ட்ரால் அதிகரித்து இதயத்தைப் பாதிக்கச் செய்யும்.
கொழுப்புச் சத்து அதிகம் உடலில் சேர்வதற்குக் காரணம் இறைச்சி மட்டும் அல்ல. எண்ணெய்க்கும் முக்கியப் பங்கு உண்டு. ஒரு நபர் நாள் ஒன்றுக்கு 15மி.லி ((3 டீ-ஸ்பூன்) எண்ணெய் மட்டும் உணவில் சேர்த்துக் கொண்டாலே போதும். ஹோட்டலில் சாப்பிடுவதாலும் கொழுப்புச் சத்து அதிகரிக்கிறது. வெளியே சமைக்கும் உணவில் எவ்வளவு எண்ணெய் பயன்படுத்துகிறார்கள் என்று நமக்குத் தெரியாது. அதனால் உணவகங்ளில் சாப்பிடுவதை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது.
கொலஸ்ட்ரால் இல்லாமல் உடல் ஆரோக்கியமாக இருக்கவேண்டும் எனில், காய்கறிகளை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. அந்தந்த சீசன்களில் கிடைக்கும் பழங்களைச் சாப்பிடலாம்.

அசைவம் சாப்பிட விரும்பினால் மாதத்தில் ஒரு முறை ஆட்டு இறைச்சி சாப்பிடலாம். அதுவும் 75 கிராம் முதல் 100 கிராம் அளவுக்குள் இருக்கவேண்டும். இதை பகல் நேரத்தில் மட்டுமே சாப்பிடவேண்டும். ஆட்டு இறைச்சியை விரும்பாதவர்கள், வாரத்தில் ஒருமுறை நாட்டுக் கோழி (பிராய்லர் கோழி சாப்பிடக்கூடாது) அல்லது மீன் சாப்பிடலாம். இதுவும் 75 முதல் 100 கிராம் அளவுக்குள் இருக்கவேண்டும். இவற்றை வறுத்து சாப்பிடக் கூடாது. குறிப்பாக மதிய உணவின்போது மட்டுமே அசைவ உணவுகளைச் சாப்பிட வேண்டும். அசைவ உணவு செரிமாணமாக அதிக நேரமாகும் என்பதால் இரவில் சாப்பிடுவதை தவிர்க்கவும்.
பிட்சா, பர்கர், ஃப்ரென்ச் ஃப்ரை, பப்ஸ், கேக் போன்ற பேக்கரி உணவுப்பொருட்கள் மற்றும் சமோசா, பரோட்டா போன்றவற்றையும் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். அதேபோல் இனிப்பு வகைகளையும் தவிர்க்கலாம். இதில் எல்லாமே வனஸ்பதி (டால்டா) சேர்க்கப்படுவதால் கொலஸ்ட்ரால் அதிகரித்து உடல் பருமன் மற்றும் இதய நோய் வர காரணமாகிறது.
எல்லாப் பெண்களுக்கும் 40 வயது தாண்டியதும் உடல் ரீதியான பிரச்சனைகள் வர ஆரம்பிக்கும் என்பதால் உணவு விஷயத்தில் மட்டுமல்ல உடற்பயிற்சி செய்வதிலும் கவனம் செலுத்தவேண்டும். தினமும் 45 நிமிடங்கள் நடைப் பயிற்சி மேற்கொண்டாலே போதும். உணவு விஷயத்திலும், உடற்பயற்சியிலும் தவறாமல் கவனம் செலுத்தி வந்தாலே இதய நோய் கண்டு அஞ்ச வேண்டியதில்லை.
முக்கியமாக இறைச்சி உணவைத் தவிர்த்து அதிகம் காய்கறிகளைச் சேர்த்துக்கொள்ளவேண்டும். இறைச்சியில் அதிகம் கொழுப்புச் சத்து இருக்கிறது. ருசிக்காக அதிக அளவில் எண்ணெய், காரம் சேர்த்து சமைப்பதால் கலோரியின் அளவையும் அதிகரிக்கச் செய்துவிடுகிறது. உதாரணத்துக்கு, ஒரு கப் சாதத்தோடு சமைத்த இறைச்சி சேர்த்துக்கொண்டால் மூன்று கப் அளவிற்கு மாறிவிடுகிறது. இதனால் கொலஸ்ட்ரால் அதிகரித்து இதயத்தைப் பாதிக்கச் செய்யும்.
கொழுப்புச் சத்து அதிகம் உடலில் சேர்வதற்குக் காரணம் இறைச்சி மட்டும் அல்ல. எண்ணெய்க்கும் முக்கியப் பங்கு உண்டு. ஒரு நபர் நாள் ஒன்றுக்கு 15மி.லி ((3 டீ-ஸ்பூன்) எண்ணெய் மட்டும் உணவில் சேர்த்துக் கொண்டாலே போதும். ஹோட்டலில் சாப்பிடுவதாலும் கொழுப்புச் சத்து அதிகரிக்கிறது. வெளியே சமைக்கும் உணவில் எவ்வளவு எண்ணெய் பயன்படுத்துகிறார்கள் என்று நமக்குத் தெரியாது. அதனால் உணவகங்ளில் சாப்பிடுவதை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது.
கொலஸ்ட்ரால் இல்லாமல் உடல் ஆரோக்கியமாக இருக்கவேண்டும் எனில், காய்கறிகளை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. அந்தந்த சீசன்களில் கிடைக்கும் பழங்களைச் சாப்பிடலாம்.

அசைவம் சாப்பிட விரும்பினால் மாதத்தில் ஒரு முறை ஆட்டு இறைச்சி சாப்பிடலாம். அதுவும் 75 கிராம் முதல் 100 கிராம் அளவுக்குள் இருக்கவேண்டும். இதை பகல் நேரத்தில் மட்டுமே சாப்பிடவேண்டும். ஆட்டு இறைச்சியை விரும்பாதவர்கள், வாரத்தில் ஒருமுறை நாட்டுக் கோழி (பிராய்லர் கோழி சாப்பிடக்கூடாது) அல்லது மீன் சாப்பிடலாம். இதுவும் 75 முதல் 100 கிராம் அளவுக்குள் இருக்கவேண்டும். இவற்றை வறுத்து சாப்பிடக் கூடாது. குறிப்பாக மதிய உணவின்போது மட்டுமே அசைவ உணவுகளைச் சாப்பிட வேண்டும். அசைவ உணவு செரிமாணமாக அதிக நேரமாகும் என்பதால் இரவில் சாப்பிடுவதை தவிர்க்கவும்.
பிட்சா, பர்கர், ஃப்ரென்ச் ஃப்ரை, பப்ஸ், கேக் போன்ற பேக்கரி உணவுப்பொருட்கள் மற்றும் சமோசா, பரோட்டா போன்றவற்றையும் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். அதேபோல் இனிப்பு வகைகளையும் தவிர்க்கலாம். இதில் எல்லாமே வனஸ்பதி (டால்டா) சேர்க்கப்படுவதால் கொலஸ்ட்ரால் அதிகரித்து உடல் பருமன் மற்றும் இதய நோய் வர காரணமாகிறது.
எல்லாப் பெண்களுக்கும் 40 வயது தாண்டியதும் உடல் ரீதியான பிரச்சனைகள் வர ஆரம்பிக்கும் என்பதால் உணவு விஷயத்தில் மட்டுமல்ல உடற்பயிற்சி செய்வதிலும் கவனம் செலுத்தவேண்டும். தினமும் 45 நிமிடங்கள் நடைப் பயிற்சி மேற்கொண்டாலே போதும். உணவு விஷயத்திலும், உடற்பயற்சியிலும் தவறாமல் கவனம் செலுத்தி வந்தாலே இதய நோய் கண்டு அஞ்ச வேண்டியதில்லை.
குடும்பம் என்பது அனைவரும் ஒருவரையொருவர் சார்ந்து தங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுத்தலும், அன்பு, பாசம், சோகம், துயரம் இவற்றை பங்குப்போட்டுக் கொள்ளுதலும், இணக்கமாக வாழுதலும் தான்.
சமீபத்தில் ஒரு துணுக்கு படித்தேன். நீங்கள் கூட்டுக் குடும்பமா? அல்லது தனி குடித்தனமா? என்ற கேள்விக்கு ஒரு கணவர் கூறும் பதில் ‘கூட்டு குடும்பம்தான்! நான், எனது மனைவி மற்றும் என் குழந்தையுடன் கூட்டாக வசிக்கிறோம்’ என்று வேடிக்கையாக சொல்கிறார்.
இது சிரிப்புக்காக என்றாலும் நாம் கூட்டுக் குடும்பமாக வாழ்வதையே மறந்து விட்டோம் என்பதை நினைக்கும்போது நெஞ்சம் சற்று கனக்கத்தான் செய்கிறது.
சமீபகாலங்களில் மணவிலக்குகள் அதிகரித்துள்ளன. குடும்பநல நீதிமன்றங்களில் வழக்குகள் குவிகின்றன. மனம் பொருந்தாதவர்கள் நித்தம் நித்தம் சித்ரவதை அடைவதைவிட பிரிந்துச் செல்வது சிறந்தது. அது அவர்களது உரிமை. ஆனால், 90 சதவீதத்தினர் மிக அற்பக் காரியங்களுக்காக பிரிய முயல்வது வருத்தத்தை அளிக்கிறது.
தனது பெற்றோர் வீட்டுக்கு போவதா அல்லது சினிமாவுக்கு செல்வதா என்கிற பிரச்சினையின் தொடர்ச்சி சண்டையில் முடிந்து கணவனும் மனைவியும் விலக்குக் கேட்க நீதிமன்றத்தை அணுகியுள்ளதாக வழக்கறிஞர் நண்பர் ஒருவர் கூறினார்.
இந்த கூட்டுக் குடும்ப வாழ்வினைத் துறந்ததால் நாம் தொலைத்தது அன்பு, பாசம், அரவணைப்பு, அறிவுரைகள், வழிக்காட்டுதல் இன்னும் ஏராளம் உண்டு. இதில் பெருநஷ்டம் அடைந்தது குழந்தைகள்.
நண்பர் ஒருவரின் மகன், மகள் இருவரும் 90-களில் அமெரிக்கா சென்றவர்கள். நண்பரும் அவரது மனைவியும் சென்னையில் வாழ்கின்றனர். மக்களுக்கு திருமணமாகி பேரக் குழந்தைகள் என்று குடும்பம் பெருகினாலும், இங்கு சென்னையில் தாத்தாவும் பாட்டியும் தனிமையில் வாழ்கின்றனர்.
சில காலங்கள் முன்புவரை இவர்கள் ஒரு ஆண்டு செல்வார்கள், பிறகு அவர்கள் வருவார்கள். காலம் செல்லசெல்ல அவர்கள் வருவதும் குறைந்தது. இவர்கள் செல்வதற்கும் உடல் ஒத்துழைக்கவில்லை. பேரக் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆகிவிட்டனர். தாத்தா பாட்டி அன்பு என்றால் என்னவென்று தெரியாமல் வளர்ந்துவிட்டார்கள்.
இவர்களுக்கு எல்லாம் இருந்தும் ஒன்றுமே இல்லாத மனநிலை. ஒருவேளை அன்றைக்கு தம்மக்களை அமெரிக்கா செல்லவேண்டும் என்று கட்டாயப்படுத்தி தங்கள் விருப்பத்தை அவர்கள் மீது திணித்தது தவறோ என்று அவர்களை நினைக்க வைத்தது.

இங்கு இந்தியாவிலேயே வாழ்பவர்கள் நிலை மட்டும் போற்றத்தக்க வகையில் உள்ளதா? என்றால், அதுவும் இல்லை.
பெரியப்பா பிள்ளைகள், சித்தப்பா பிள்ளைகள், அத்தை மகள், மாமன் மகன் என்று உற்றார், உறவினரோடு விளையாடி மகிழ்ந்த காலம் போய், இன்று பெற்றவர்கள் முகத்தை மட்டும், அதுவும் அரிதாக, பார்த்து வளரும் குழந்தைகளை தான் அதிகம் பார்க்கின்றோம். இதில் பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்லும் சூழ்நிலை அமைந்தால், குழந்தைகள் ‘திரைக்கடலில்’ மூழ்கி விடுகிறார்கள். அது தொலைக்காட்சி திரையாகவும் இருக்கலாம் அல்லது கைபேசிகளின் திரையாகவும் இருக்கலாம்.
சமீபத்தில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஒரு ஆராய்ச்சி முடிவுப்படி புத்தகங்கள் படிப்பதின் மூலமாகவும், கதைகள் கேட்டு வளர்வதின் மூலமாகவும் ஒரு குழந்தைக்கு கிடைக்கும் அறிவுத்திறன் தொலைக்காட்சி, வலைக்காட்சி இவைகளைப் பார்ப்பதின் மூலம் கிடைப்பதில்லை என்பதே.
பாட்டி வடை சுட்ட கதை, தொப்பிக்காரன் குரங்குகளிடம் தொப்பி தொலைத்தக் கதை, ராஜா-ராணி கதைகள், தெனாலிராமன் கதைகள் என்று நாம் நமது தாத்தா பாட்டிகளிடம் கற்ற கதைகளை நமது அடுத்த தலைமுறைக்கு சொல்லத் தவறிவிட்டோமா? என்கிற தவிப்பு உள்ளது.
கதை மூலம் கற்பிப்பது குழந்தைகளின் மனதில் ஆழமாக பதியும். அவர்களது கற்பனைத் திறனை விரிவடையச் செய்யும். மூளைக்கு சிறந்த பயிற்சியாக அமையும். அது மட்டுமின்றி கதைகள் வாயிலாக நன்னெறியையும், தன்னம்பிக்கையும் ஊட்ட முடியும். இன்று பாடங்களில் முதல் மதிப்பெண் வாங்குபவர்கள் கூட ஒரு சிறு தோல்வி வந்தால் துவண்டு விடுகிறார்கள். மனமுடைந்து தற்கொலை வரை செல்வதற்கு காரணம் தன்னம்பிக்கை குறைவதும், எதிர்மறையான எண்ணங்கள் எழுவதும்தான். தத்தம் உணர்வுகளை பகிர்ந்துக்கொள்ள உறவுகள் அருகாமையில் இல்லாமால் போவதும் முக்கியக்காரணம்.
தாத்தா பாட்டிகள் கதை மட்டும் சொல்பவர்கள் அல்ல. நமது பண்பாடு, நாகரிகம், அடையாளம் மற்றும் உயர்ந்த எண்ணங்கள் என்று எல்லாவற்றையும் கற்றுத் தருபவர்கள். அதுவும் உணர்வுடன் கற்றுத்தருபவர்கள். தங்கள் பேரன், பேத்திகளுக்கு கதைகள் சொல்வதின் மூலமாக பெரும் மகிழ்ச்சியும், சாதனை உணர்வும் தாத்தா பாட்டிகளுக்கு கிடைக்கும்.
குடும்பம் என்பது கணவன், மனைவி குழுந்தைகள் கொண்ட வெறும் தொகுப்பு அல்ல. அனைவரும் ஒருவரையொருவர் சார்ந்து தங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுத்தலும், அன்பு, பாசம், சோகம், துயரம் இவற்றை பங்குப்போட்டுக் கொள்ளுதலும், இணக்கமாக வாழுதலும் தான்.
இன்றைய பொருள் தேடும் உலகில் பெற்றோருக்கும் நேரமின்மை; அதிக மதிப்பெண்கள் தேடி குழந்தைகளும் ஓட்டத்துக்கு இடையில் குடும்ப உறவை பலப்படுத்த ஒரே வழி இருக்கிறது. ஒவ்வொரு நாளும், அரைமணி நேரம் ஒதுக்கி, அன்றைக்கு நடந்த செய்திகளையும் உணர்வுகளையும் பகிர்ந்துக் கொள்ள வேண்டும். ஒரு வேளையாவது அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடவேண்டும்.
ஒவ்வொருவரும் தங்கள் நேரத்தை தொழில், குடும்பம், சமூகம், தனக்கு என்று பகுத்து திட்டமிட்டு பயன்படுத்தினால் குடும்பம் ஏற்றம் பெறும், நாடு செழிக்கும், மனிதகுலம் தழைக்கும். நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகமா கட்டும்.
இன்று (மே 15-ந்தேதி) உலக குடும்ப தினம்.
கமலேஷ் சுப்பிரமணியன், எழுத்தாளர்
இது சிரிப்புக்காக என்றாலும் நாம் கூட்டுக் குடும்பமாக வாழ்வதையே மறந்து விட்டோம் என்பதை நினைக்கும்போது நெஞ்சம் சற்று கனக்கத்தான் செய்கிறது.
சமீபகாலங்களில் மணவிலக்குகள் அதிகரித்துள்ளன. குடும்பநல நீதிமன்றங்களில் வழக்குகள் குவிகின்றன. மனம் பொருந்தாதவர்கள் நித்தம் நித்தம் சித்ரவதை அடைவதைவிட பிரிந்துச் செல்வது சிறந்தது. அது அவர்களது உரிமை. ஆனால், 90 சதவீதத்தினர் மிக அற்பக் காரியங்களுக்காக பிரிய முயல்வது வருத்தத்தை அளிக்கிறது.
தனது பெற்றோர் வீட்டுக்கு போவதா அல்லது சினிமாவுக்கு செல்வதா என்கிற பிரச்சினையின் தொடர்ச்சி சண்டையில் முடிந்து கணவனும் மனைவியும் விலக்குக் கேட்க நீதிமன்றத்தை அணுகியுள்ளதாக வழக்கறிஞர் நண்பர் ஒருவர் கூறினார்.
இந்த கூட்டுக் குடும்ப வாழ்வினைத் துறந்ததால் நாம் தொலைத்தது அன்பு, பாசம், அரவணைப்பு, அறிவுரைகள், வழிக்காட்டுதல் இன்னும் ஏராளம் உண்டு. இதில் பெருநஷ்டம் அடைந்தது குழந்தைகள்.
நண்பர் ஒருவரின் மகன், மகள் இருவரும் 90-களில் அமெரிக்கா சென்றவர்கள். நண்பரும் அவரது மனைவியும் சென்னையில் வாழ்கின்றனர். மக்களுக்கு திருமணமாகி பேரக் குழந்தைகள் என்று குடும்பம் பெருகினாலும், இங்கு சென்னையில் தாத்தாவும் பாட்டியும் தனிமையில் வாழ்கின்றனர்.
சில காலங்கள் முன்புவரை இவர்கள் ஒரு ஆண்டு செல்வார்கள், பிறகு அவர்கள் வருவார்கள். காலம் செல்லசெல்ல அவர்கள் வருவதும் குறைந்தது. இவர்கள் செல்வதற்கும் உடல் ஒத்துழைக்கவில்லை. பேரக் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆகிவிட்டனர். தாத்தா பாட்டி அன்பு என்றால் என்னவென்று தெரியாமல் வளர்ந்துவிட்டார்கள்.
இவர்களுக்கு எல்லாம் இருந்தும் ஒன்றுமே இல்லாத மனநிலை. ஒருவேளை அன்றைக்கு தம்மக்களை அமெரிக்கா செல்லவேண்டும் என்று கட்டாயப்படுத்தி தங்கள் விருப்பத்தை அவர்கள் மீது திணித்தது தவறோ என்று அவர்களை நினைக்க வைத்தது.

இங்கு இந்தியாவிலேயே வாழ்பவர்கள் நிலை மட்டும் போற்றத்தக்க வகையில் உள்ளதா? என்றால், அதுவும் இல்லை.
பெரியப்பா பிள்ளைகள், சித்தப்பா பிள்ளைகள், அத்தை மகள், மாமன் மகன் என்று உற்றார், உறவினரோடு விளையாடி மகிழ்ந்த காலம் போய், இன்று பெற்றவர்கள் முகத்தை மட்டும், அதுவும் அரிதாக, பார்த்து வளரும் குழந்தைகளை தான் அதிகம் பார்க்கின்றோம். இதில் பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்லும் சூழ்நிலை அமைந்தால், குழந்தைகள் ‘திரைக்கடலில்’ மூழ்கி விடுகிறார்கள். அது தொலைக்காட்சி திரையாகவும் இருக்கலாம் அல்லது கைபேசிகளின் திரையாகவும் இருக்கலாம்.
சமீபத்தில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஒரு ஆராய்ச்சி முடிவுப்படி புத்தகங்கள் படிப்பதின் மூலமாகவும், கதைகள் கேட்டு வளர்வதின் மூலமாகவும் ஒரு குழந்தைக்கு கிடைக்கும் அறிவுத்திறன் தொலைக்காட்சி, வலைக்காட்சி இவைகளைப் பார்ப்பதின் மூலம் கிடைப்பதில்லை என்பதே.
பாட்டி வடை சுட்ட கதை, தொப்பிக்காரன் குரங்குகளிடம் தொப்பி தொலைத்தக் கதை, ராஜா-ராணி கதைகள், தெனாலிராமன் கதைகள் என்று நாம் நமது தாத்தா பாட்டிகளிடம் கற்ற கதைகளை நமது அடுத்த தலைமுறைக்கு சொல்லத் தவறிவிட்டோமா? என்கிற தவிப்பு உள்ளது.
கதை மூலம் கற்பிப்பது குழந்தைகளின் மனதில் ஆழமாக பதியும். அவர்களது கற்பனைத் திறனை விரிவடையச் செய்யும். மூளைக்கு சிறந்த பயிற்சியாக அமையும். அது மட்டுமின்றி கதைகள் வாயிலாக நன்னெறியையும், தன்னம்பிக்கையும் ஊட்ட முடியும். இன்று பாடங்களில் முதல் மதிப்பெண் வாங்குபவர்கள் கூட ஒரு சிறு தோல்வி வந்தால் துவண்டு விடுகிறார்கள். மனமுடைந்து தற்கொலை வரை செல்வதற்கு காரணம் தன்னம்பிக்கை குறைவதும், எதிர்மறையான எண்ணங்கள் எழுவதும்தான். தத்தம் உணர்வுகளை பகிர்ந்துக்கொள்ள உறவுகள் அருகாமையில் இல்லாமால் போவதும் முக்கியக்காரணம்.
தாத்தா பாட்டிகள் கதை மட்டும் சொல்பவர்கள் அல்ல. நமது பண்பாடு, நாகரிகம், அடையாளம் மற்றும் உயர்ந்த எண்ணங்கள் என்று எல்லாவற்றையும் கற்றுத் தருபவர்கள். அதுவும் உணர்வுடன் கற்றுத்தருபவர்கள். தங்கள் பேரன், பேத்திகளுக்கு கதைகள் சொல்வதின் மூலமாக பெரும் மகிழ்ச்சியும், சாதனை உணர்வும் தாத்தா பாட்டிகளுக்கு கிடைக்கும்.
குடும்பம் என்பது கணவன், மனைவி குழுந்தைகள் கொண்ட வெறும் தொகுப்பு அல்ல. அனைவரும் ஒருவரையொருவர் சார்ந்து தங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுத்தலும், அன்பு, பாசம், சோகம், துயரம் இவற்றை பங்குப்போட்டுக் கொள்ளுதலும், இணக்கமாக வாழுதலும் தான்.
இன்றைய பொருள் தேடும் உலகில் பெற்றோருக்கும் நேரமின்மை; அதிக மதிப்பெண்கள் தேடி குழந்தைகளும் ஓட்டத்துக்கு இடையில் குடும்ப உறவை பலப்படுத்த ஒரே வழி இருக்கிறது. ஒவ்வொரு நாளும், அரைமணி நேரம் ஒதுக்கி, அன்றைக்கு நடந்த செய்திகளையும் உணர்வுகளையும் பகிர்ந்துக் கொள்ள வேண்டும். ஒரு வேளையாவது அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடவேண்டும்.
ஒவ்வொருவரும் தங்கள் நேரத்தை தொழில், குடும்பம், சமூகம், தனக்கு என்று பகுத்து திட்டமிட்டு பயன்படுத்தினால் குடும்பம் ஏற்றம் பெறும், நாடு செழிக்கும், மனிதகுலம் தழைக்கும். நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகமா கட்டும்.
இன்று (மே 15-ந்தேதி) உலக குடும்ப தினம்.
கமலேஷ் சுப்பிரமணியன், எழுத்தாளர்






