search icon
என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    பாலக்கீரை உடலுக்கு வலுவூட்டும், மலச்சிக்கலைப் போக்கும். குளிர்ச்சியை தரும். குடல் நோய்களுக்கு நல்லது. இன்று பாலக்கீரையில் சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள் :

    பாலக் கீரை - 2 கட்டு
    பாசுமதி அரிசி - 1 கப்
    மிளகாய் தூள் - அரை ஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
    தனியா தூள் - 1 ஸ்பூன்
    கிராம்பு, ஏலக்காய், பட்டை - 3 நம்பர்
    சின்ன வெங்காயம் - 1 கப்
    தக்காளி  - 1
    இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
    பச்சை மிளகாய் - 4 நம்பர்
    எண்ணெய் - 2 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    வெந்தயம் - 1 ஸ்பூன்

    Palak rice

    செய்முறை

    பாலக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தக்காளி, சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாசுமதி அரிசியை நன்றாக கழுவி 1 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்பு குக்கரில் அரிசியை போட்டு தேவையான தண்ணீர் மற்றும் சிறிது உப்பு சேர்த்து 1 விசில் வரும் வரை வேகவிடவும்.

    வெந்தயத்தை வாணலியில் சிவக்க வறுத்தெடுத்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கிராம்பு, பட்டை, ஏலக்காய் சேர்த்து தாளித்த பின்னர் அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளியை சேர்த்து குழைய வதக்கவும்.
     
    அடுத்து அதில் பொடியாக நறுக்கிய பாலக்கீரையை அதில் சேர்த்து பச்சைவாசனை போகும் வரும் வரை வதக்கவும்.

    அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியாத் தூள் சிறிது உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்.

    வதக்கிய பின்பு வேகவைத்த சாதத்தை அதில் சேர்த்து நன்கு கிளறி அதனுடன் அரைத்த வெந்தயத்தையும் சேர்த்து 5 நிமிடம் குறைந்த தணலில் வேக விடவும்.

    சுவையான பாலக் கீரை சாதம் தயார்.

    இதனுடன் கேரட், வெள்ளிரிக்காய், வெங்காய தயிர் பச்சடி செய்து சாப்பிடலாம் சுவையாக இருக்கும். 

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    முதுமையை மருந்து, மாத்திரை, வைத்திய செலவுகள் இல்லாமல் செய்வது உடற்பயிற்சி மட்டுமே என்கிறார்கள் வைத்திய நிபுணர்கள்.
    முதியவர்கள் உடற்பயிற்சி செய்யலாமா? என்று கேட்டவுடன் நம்மில் பலரும் செய்யலாம் என்று சொல்வதைக் காட்டிலும். அவர்களால் செய்ய இயலுமா? என்று திருப்பிக்கேட்பர். ஆனால் முதுமையை மருந்து, மாத்திரை, வைத்திய செலவுகள் இல்லாமல் செய்வது உடற்பயிற்சி மட்டுமே என்கிறார்கள் வைத்திய நிபுணர்கள்.

    தற்போது 50 வயதை கடந்தவர்கள் முதுமையின் தொடக்க நிலையினர் என்பதை உணர்ந்து, உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு, மனதை இயல்பாக வைத்துக்கொள்வது போன்றவற்றில் ஈடுபடவேண்டும் என்று ஆலோசனை சொல்கிறார்கள் முதுமைக்கான வைத்தியம் பார்க்கும் மருத்துவ நிபுணர்கள். பெரும்பாலானவர் இந்த வயதில் ஏதேனும் ஒரு காரணத்தை கூறிவிட்டு படுக்கையில் படுத்தே கிடப்பதையோ அல்லது வீட்டிற்குள் சும்மாவேயிருப்பதையோ தேர்வு செய்கிறார்கள்.

    இவர்களுக்கு வாய்ப்பிருந்தும் பல்வேறு சமூக காரணங்களால் உடற் பயிற்சி மற்றும் நடைபயிற்சியை செய்வதில்லை. ஆனால் உடற்பயிற்சி செய்தால் அவர்களின் ஆரோக் கியம் மேம்படும். சிலர் தவிர்க்க முடியாத வைத்திய காரணங்களால் படுக்கையிலேயே காலத்தை கடத்துவர். ஆனால் அவர்களும் உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வைப் பெற்றால் அதிலிருந்து மீளலாம்.

    நடக்க இயலாத நிலையில் இருப்பவர்கள், வேறு உடலியல் சிக்கல் காரணமாக இருப்பவர்கள் தினமும் சிறிது நேரமாவது வீட்டிற்குள்ளேயே உடற்பயிற்சியை செய்யவேண்டும். இதனால் அவர்களுக்கு ஏற்படும் படுக்கை புண்ணைத் தவிர்க்கலாம். தசைகள் தளர்ச்சியடைவதை தடுக்கலாம். எலும்பின் வலிமை குறைவதை தடுக்கலாம். நெஞ்சில் சளி கட்டுவதை தடுக்கலாம். மலச்சிக்கல் மற்றும் மனச்சோர்வையும் தடுக்க இயலும். உங்களால் முடியும் என்ற மனப்பான்மையுடன் தினந்தோறும் முப்பது நிமிடமாவது உடற்பயிற்சியோ அல்லது நடைபயிற்சியோ மேற்கொண்டால் ஆயுள் முழுவதும் நலம் பயக்கும். வைத்திய செலவு குறையும், தன்னம்பிக்கை அதிகரிக்கும். உறவுகள் கொண்டாடும். முதுமை இனிமையாக இருக்கும்.
    எல்லா நிறுவனங்களும் வேகமாக மாறிவரும் சூழலில் சில புதிய தலைமைத்துவ நுணுக்கங்களை தெளிவாகத் தெரிந்துகொள்வது நல்லது.
    ஒரு சிறந்தத் தலைமைகொண்ட நிறுவனம் எல்லா நிலையிலும் புகழ்பெற்று விளங்குகின்றது. ஆனால், தலைமை நிர்வாகத்தில் சிறந்த கவனம் செலுத்தாத நிறுவனங்கள் தங்கள் அடையாளத்தை அடிக்கடி இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிடுகின்றன.

    இதனால்தான், சிறந்தத் தலைமையை அமைக்க எல்லா நிறுவனங்களும் நாள்தோறும் திட்டங்கள் தீட்டுகின்றன. மாறுகின்ற சூழலுக்கு ஏற்ப தங்கள் தலைமையிலும் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. நிர்வாகத்திலும் பல்வேறு சீரமைப்புப் பணிகளை மேற்கொள்கின்றன. மேலும், மாற்றங்களை சரியாகப் புரிந்துகொள்ள பணியாளர்களுக்கு பக்குவமாக பல பயிற்சிகளை வழங்குகின்றன. இதன்மூலம், அந்த நிறுவனங்கள் மிகச்சிறந்த செயல்திறனோடு (Performance) திகழ்கின்றன.

    எல்லா நிறுவனங்களும் தங்கள் செயல்திறனை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால், சில முக்கிய “புதிய தலைமைத்துவ நுணுக்கங்களை” (New Leadership Techniques) நடைமுறைப்படுத்திய அமைப்புகள் மட்டுமே மாறிவரும் சூழலில் (Changing Environment) தங்கள் வளர்ச்சியை நிரந்தரமாக்கி, முன்னேற்றப் பாதையில் வெற்றி நடைப்போடுகின்றன.

    எல்லா நிறுவனங்களும் வேகமாக மாறிவரும் சூழலில் சில புதிய தலைமைத்துவ நுணுக்கங்களை தெளிவாகத் தெரிந்துகொள்வது நல்லது. அவற்றுள் சில -

    தடைகளைத் தவிர்ப்போம்


    ஒரு சிறந்தத் தலைவரை உருவாக்க உதவும் சில முக்கிய தலைமைத்துவ நுணுக்கங்களை ஆய்வுகள் மூலம் மேலாண்மை வல்லுனர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.

    ‘வெர்னே ஹர்னிஷ்’ (Verne Harnish) என்னும் மேலாண்மை அறிஞர் எழுதிய “ஸ்கேலிங் அப்” (Scaling Up) என்னும் நூல் “தலைமைத்துவம்” பற்றிய சில உண்மைகளை தெளிவாக்குகின்றது.

    நிறுவனங்கள் முக்கியமான 4 முடிவுகளில் மிக அதிகக் கவனம் செலுத்த வேண்டும். மக்கள் (People), வியூகம் (Strategy), செயல்படுத்துதல் (Execution), பணம் (Cash) ஆகியன பற்றிய சிறந்த முடிவுகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.

    “ஒரு நிறுவனத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும் சிறந்த ஊக்கம்கொண்ட பணியாளர்கள் நிறைந்த நிறுவனத்தில், தலைவர்கள் பணியாளர்களின் ‘ஊக்கப்படுத்துதல்’ (Motivation) பற்றி அதிக கவனம் செலுத்தமாட்டார்கள். ஆனால், அந்தப் பணியாளர்களின் ஊக்கத்தை குறைக்கும் விதத்தில் (Demotivating) செயல்படும் சூழலைத் தவிர்ப்பார்கள். நல்ல குழுவின் பணித்திறனை தடுக்கும் இடையூறுகளை கண்டறிந்து, அவற்றிலிருந்து தங்கள் பணியாளர்களைக் காத்துக்கொள்வதற்கான செயல்களில் ஈடுபடுவார்கள். இதுவே சிறந்தத் தலைமைக்கு அழகு” என்கிறார் வெர்னே ஹர்னிஷ்.

    துடிப்பான, உற்சாகம்கொண்ட பணியாளர்களுக்கு தலைவரின் “ஊக்கப்படுத்துதல்” (Motivation) தேவையில்லை. ஏனென்றால், அந்தப் பணியாளர்கள் எப்போதும் உற்சாகத்தோடு தொடர்ந்து பணியாற்றுவார்கள். ஆனால், அதேவேளையில் ஊக்கமில்லாத குழுவில் (Demotivated Team) சிறந்தத் தலைவரை பணி நியமனம் செய்யும்போது, தலைவரின் செயல்திறனும், சக்தியும் வீணாகிவிடுகிறது. மேலும், அந்தத் தலைவர்கள் விரக்தியோடு (Frustration) காணப்படுவார்கள்.

    ஊக்கமற்ற பணியாளர்களை (Demotivator) நிறுவனத்தைவிட்டு அகற்றுவது பணியாளர்களை ஊக்கப்படுத்தும் வழிமுறையாகும். நிறுவனத்தில் சிறந்த புத்தாக்க சூழலை (Creative Environment) உருவாக்குவதும் ஊக்கப்படுத்துதலின் அடிப்படையாகும்.

    தவிர்க்க வேண்டிய தவறுகள்

    நிறுவனத்தின் செயல்திறனை அதிகரிக்கும் விதத்தில் தலைவர்கள் பல்வேறு தகவல்களை பணியாளர்களுக்கு வழங்குகின்ற சூழல்கள் நாள்தோறும் உருவாகும். நிறுவன வளர்ச்சிக்கு உதவும் தகவல்களைத்தர அவர்கள் முயற்சி செய்யும்போது, அதற்குத் தடைபோடும் விதத்தில் தலைவர்கள் செயல்படுவது நல்லதல்ல.

    “உங்கள் கருத்து சரியானது அல்ல”.

    “நீங்கள் தவறாகப் புரிந்துகொண்டீர்கள்”.

    “நான் உங்கள் கருத்தை ஏற்கவில்லை. முரண்படுகிறேன்”.

    “நீங்கள் சொல்வது தவறு. நான் சொல்வதுதான் சரி”.

    “எல்லா விவரமும் எனக்குத் தெரியும். உன் வேலையை மட்டும் பார்த்துக்கொண்டு இரு”.

    - என முகத்தில் அடித்தாற்போல நேரடியாகவே பதில் தரும் தலைவர்கள் பல நிறுவனங்களில் இருக்கிறார்கள்.

    இப்படி தலைவர்களின் வாயிலிருந்து சில வார்த்தைகள், அடிக்கடி எதிர்மறை கருத்துக்களாக வெளிப்படும். அந்த வார்த்தைகளில் பல பணியாளர்களை காயப்படுத்தும். சில வார்த்தைகள், அவமானத்தை அவர்களுக்குள் விதைத்துவிடும்.

    சில தலைவர்கள் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைகள், ‘ஆனால்’, ‘இல்லை’, ‘இருந்தபோதும்’ என ‘மார்ஷல் கோல்ட்ஸ்மித்’ (Marshall Goldsmith) குறிப்பிடுகிறார்.

    இந்த 3 வார்த்தைகளும் அடிக்கடி பயன்படுத்தப்படும்போது, தலைவர்களை சிலவேளைகளில் இக்கட்டான சூழலில் சிக்க வைத்துவிடும். இதனால், நிர்வாக வளர்ச்சிக்கு உதவும் நல்ல கருத்துக்களை நிர்வாகத்திற்கு வழங்க பணியாளர்கள் முன்வருவதில்லை.

    “இவர்... யார் சொன்னாலும் காது கொடுத்து கேட்கமாட்டார். இவரிடம் நான் ஏன் பேச வேண்டும்?” என எண்ணி, வாய்ப்பூட்டுப்போட்டு விலகிச் சென்றுவிடுவார்கள். நிறுவனத்திற்கு, பணியாளர்களிடமிருந்து தரமான ‘பின்னூட்டம்’ (Feedback) கிடைக்காத நிலையும் உருவாகிவிடும். எனவே, இந்தத் தவறுகளை தலைவர்கள் தவிர்ப்பது நல்லது.

    பாராட்டப் பழகுவோம்

    1898-ம் ஆண்டுமுதல் “விளைவுகள் விதி” (Law of Effects) என்னும் மேலாண்மைக் கொள்கை நடைமுறையில் இருந்து வருகிறது.

    “பணியாளர்களுக்கு பரிசுகளும், பாராட்டுகளும் வழங்கும் நிகழ்வுகள் அடிக்கடி நிறுவனத்தில் நிகழ வேண்டும். தண்டனைதரும் நிகழ்வுகள் மிகக் குறைவாகவே இருக்க வேண்டும்” என்பது அந்த விதியின் முக்கிய அம்சமாகத் திகழ்கிறது.

    சிறப்பான பணியாளர்களைப் பாராட்டுவதும், அவர்களுக்கு பரிசுகள் வழங்குவதும் உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டும். ஒரு மாதம் கடந்தபின்னர் வழங்கப்படும் பாராட்டும், பரிசும் பணியாளர்களை பெரிய அளவில் ஊக்கப்படுத்துவதில்லை. நல்ல பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு ஒரு மணி நேரம்கூட தாமதிக்காமல் வழங்கப்படும் பாராட்டுகளும், பரிசுகளும் அவர்கள் மனதில் நல்லெண்ணத்தை ஏற்படுத்தும்.

    தவறு செய்யும்போது பணியாளர்களின் குறைகளை கண்டிப்பாக சுட்டிக்காட்ட வேண்டும். ஆனால், அதேவேளையில், அவர்களின் சிறப்பான நடவடிக்கையையும் பாராட்டலாம். பணியில் ஏற்படும் குறைபாடுகளுக்கான காரணத்தை அலசி ஆராய்ந்து, பணியாளர்களுக்கு உதவும் விதத்தில் தலைவர்கள் தங்கள் செயல்பாடுகளை அமைத்துக்கொள்ள வேண்டும்.

    தகவல்களைத் தெளிவாக்குங்கள்

    தங்களின் தகவல்களை பணியாளர்களிடம் தெளிவாகத் தெரிவிக்கத் தலைவர்கள் பழகிக்கொள்ள வேண்டும். தெரிவிக்க வேண்டிய கருத்துக்களை சுருக்கமாகவும், தெளிவாகவும், அழகாகவும் வடிவமைத்து, சரியான ஊடகங்கள்மூலம் (Media) அனுப்பவும் தெரிந்துகொள்ள வேண்டும். ஒரு தலைவர் தனது தகவல் தொடர்புத்திறனை வளர்த்துக்கொள்வதன் மூலம் சிறந்த முடிவுகளை மேற்கொள்ளலாம்.

    ‘எஸ்.எம்.எஸ்.’மூலம் (SMS) தெரிவிக்க வேண்டிய கருத்தை, விலாவாரியாக விவரித்து கடிதம் எழுதுவது நேரத்தை வீணடிக்கும் செயல் அல்லவா? அதேபோல், விளக்கமாக தெரிவிக்க வேண்டிய கருத்துக்களை மிகச்சுருக்கமாக தெரிவித்து, பணியாளர்கள் மனதில் குழப்பத்தை உருவாக்குவதும் வீணான செயல் ஆகும்.

    எனவே, தேவைக்குஏற்ப தகவல்களை தெளிவான முறையில் பகிர்ந்தளிக்கப் பழகிக்கொள்வது நல்லது. ‘இ-மெயில்’ (Email), ‘வாட்ஸ்அப்’ (Whatsapp) போன்ற நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி விரைவாகவும், மற்றவர்கள் புரிந்துகொள்ளும் விதத்திலும் தகவல்களைக் கையாளுவது மிகவும் சிறந்தது.

    திறமைகளைப் பயன்படுத்துங்கள்

    பொதுவாக, ஒரு நிறுவனத்தில் தகுதியானவர்களையும், திறமையானவர்களையும் மட்டுமே பணிக்குத் தேர்ந்தெடுக்கிறார்கள். அவர்களது ‘தொழில்நுட்பத் திறன்’ (Technical Skill) மற்றும் ‘தனித்திறன்கள்’ நிறுவனத்தின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அமைவதற்காக தகுந்த பயிற்சியும் வழங்குகிறார்கள்.

    எனவே, இந்தப் பணியாளர்களின் தனித்திறமைகளையும், பலங்களையும் (Strengths) கண்டறிந்து, அவர்களது திறன்கள் அடிப்படையில் உதவிகள் செய்வதற்கு தலைவர்கள் முன்வர வேண்டும். தலைவர்கள் எதிர்பார்க்கும் விதத்தில் எல்லா பணியாளர்களாலும் பணியாற்ற இயலாது. இதனால், ஒவ்வொரு பணியாளர்களின் தனித்திறமைகளுக்கு ஏற்றவாறு அவர்களை உற்சாகப்படுத்தி, அந்தத் திறமைகளை நிறுவனத்தின் வளர்ச்சிக்குப் பயன்படுத்த முயற்சி செய்வது நல்ல தலைவருக்கு அழகாகும்.

    கால மாற்றத்தினால் நிறுவனங்களில் நிகழும் பல்வேறு மாற்றங்களுக்கு ஏற்றவகையில் தலைவர்கள் தங்கள் அணுகுமுறைகளை மாற்றப் பழகுவதன்மூலம் சிறந்த வெற்றிகளை நாளும் பெறலாம்.

    பெற்றோர்கள் அனைவருக்குமே தங்கள் குழந்தை உயரமாக வளர வேண்டும் என்கிற ஆசை இருக்கும். அதற்காக ஊட்டச்சத்து பானங்கள் முதல் உடற்பயிற்சி வரை கவனம் எடுத்து பிள்ளைகளுக்கு செய்கிறார்கள் பலர்.
    பெற்றோர்கள் அனைவருக்குமே தங்கள் குழந்தை உயரமாக வளர வேண்டும் என்கிற ஆசை இருக்கும். அதற்காக ஊட்டச்சத்து பானங்கள் முதல் உடற்பயிற்சி வரை கவனம் எடுத்து பிள்ளைகளுக்கு செய்கிறார்கள் பலர். ஒருவரின் வளர்ச்சி, அவர் கருவாக தன் தாயின் கர்ப்பத்தில் இருக்கும்போது ஆரம்பிப்பது. பொதுவாக கருவில் குழந்தை 17 முதல் 20 இன்ச் வரை வளரலாம்.

    மரபு தவிர, ஒருவரின் வளர்ச்சியை தீர்மானிப்பது, அவரது பிட்யூட்டரி சுரப்பியிலிருந்து சுரக்கும் வளர்ச்சி ஹார்மோன். இந்தச் சுரப்பி, மூளையின் மத்தியில் மூக்குக்கு பின்புறமாக இருக்கும். நிலக்கடலை அளவில் இருக்கும் இது, மிக முக்கியமான ஒரு சுரப்பி. உடலின் பல்வேறு சுரப்பிகளின் செயல்பாட்டை இது கட்டுப்படுத்துகிறது. இது சுரக்கும் ஹார்மோன்தான் ஒருவரை வளரச் செய்கிறது. உடலில் உள்ள திசுக்கள் மற்றும் எலும்புகளின் வளர்ச்சிக்கு காரணமாக இருக்கிறது. இந்த வளர்ச்சி ஹார்மோன் சுரப்பு குறைவதற்கும், கூடுவதற்கும் பிட்யூட்டரி சுரப்பியில் ஏற்படும் கட்டிகள், கிருமி தாக்குதல், வளர்சிதை மாற்றங்கள் ஆகியவற்றுக்கு காரணங்கள் ஆகலாம்.

    முதற்கட்ட வளர்ச்சி, குழந்தை பிறந்ததில் இருந்து 12 வயது வரை நிகழும். இந்தப் பருவத்தில் பல் விழுந்து முளைப்பது, எலும்புகள் கூடுவது என சீரான வளர்ச்சி நடைபெறும். இரண்டாம் கட்ட வளர்ச்சி, ஆணுக்கும் பெண்ணுக்கும் 13 வயதில் ஆரம்பித்து 18 வயதுவரை இருக்கும் (சிலருக்கு அதிகபட்சமாக 23 வயது வரை வளர்ச்சி இருக்கலாம்).

    இந்தக் காலகட்டத்தில் வளர்ச்சி ஹார்மோன்கள் அபரிமிதமாக இருக்கும். இந்த இளம் வயதில்தான் உறுப்புகளின் வளர்ச்சியும் அதிகமாக இருக்கும். இந்தக் காலகட்டத்தில் வளர்ச்சியை ஊக்குவிக்க புரதம் அதிகமுள்ள முட்டை, சோயா, பருப்புகள், பயறு உள்ளிட்ட உணவுகளை அதிகமாக கொடுக்கலாம்.

    ஊட்டச்சத்து பானங்கள் ஒருவரின் உயர நிர்ணயத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. உயரத்தை இது போன்ற புறக்காரணிகளால் கூட்டவோ, குறைக்கவோ முடியாது. மரபும், 12 வயதிலிருந்து 18 வயதுவரை கொடுக்கக்கூடிய புரதம் அதிகம் உள்ள உணவுகளுமே குழந்தைகளின் வளர்ச்சிக்குக் காரணமாக அமையும். வளர்ச்சி ஹார்மோன்களில் எந்த பாதிப்பும் இல்லாதபட்சத்தில், அவர்களின் வளர்ச்சி முழுமையடையும்.

    சில குழந்தைகளுக்கு பிட்யூட்டரி சுரப்பியில் ஏற்படும் பிரச்சினையால் ட்வார்பிசம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ட்வார்பிசம் என்பது குள்ளமாக இருப்பது. 3 அடிக்கு மேல் அந்த குழந்தையால் வளர முடியாது; அதை குணப்படுத்தவும் முடியாது என்பதே உண்மை. அரசு, ட்வார்பிசத்தால் பாதிக்கப்பட்டவர்களை மாற்றுத்திறனாளிகளாக அறிவித்து, சலுகைகள் வழங்கிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    உயரம் குறைந்த குழந்தைகளுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படலாம். அவர்களுக்கு பெற்றோரின் அரவணைப்பும் நம்பிக்கை தரும் வார்த்தைகளும் அவசியம். தேவைப்படும் சூழலில் அவர்களை கவுன்சலிங் அழைத்துச் செல்லலாம்.

    உயரத்தால் சமூக வாழ்க்கையில் எந்த மாற்றமும் ஏற்படாது என்பதை பெற்றோர்கள், குழந்தைகளிடம் சொல்லி புரிய வைக்க வேண்டும். உயரம் குறித்து கவலைப்படாமல் சாதித்த தன்னம்பிக்கை மனிதர்களின் கதைகளைச் சொல்லி அவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டலாம். குழந்தைகளிடம், அவர்கள் தங்களை பிறரோடு ஒப்பீடு செய்து பார்ப்பதை தவிர்க்கச் சொல்லி தம்மை தாமே உயர்வாக நினைக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். 
    உடலின் உள் உறுப்புகளைத் தாக்கி உயிருக்கே உலை வைக்கும் சில கட்டிகள் நமது உடலின் இரும்பு என்று அழைக்கப்படும் எலும்புகளைக் கூட விட்டு வைப்பதில்லை.

    கட்டிகள் என்பது உடலின் எந்த பகுதியையும் தாக்கலாம். உடலின் உள் உறுப்புகளைத் தாக்கி உயிருக்கே உலை வைக்கும் சில கட்டிகள் நமது உடலின் இரும்பு என்று அழைக்கப்படும் எலும்புகளைக் கூட விட்டு வைப்பதில்லை. நமது உடலிலுள்ள செல்கள் எல்லாம் வளர்சிதை மாற்றத்தில் தான் இயங்கிக் கொண்டு வருகின்றன.இந்த செல்களின் கட்டமைப்பில் அளவுக்கு அதிகமான, அசுர வேகத்தில் பல்கி பெருகும் செல்கள் தான் கட்டிகள் எனப்படும். இது உடலின் ஒரு பகுதியில் தோன்றி மற்ற பகுதிக்கு பரவும் தன்மை புற்று நோய் கட்டிகளுக்குஉண்டு. புற்றுநோயை முதலிலேயே கண்டறிந்து விட்டால் கட்டுப்படுத்த கூடியது என்பது ஆறுதலான விசயம். எலும்புக் கட்டிகளில் உள்ள இருவகைகளைப் பார்ப்போம்.

    1) பரவும் தன்மை கொண்டது.
    2) பரவாத தன்மை கொண்டது

    என 2 வகைகள் உள்ளன. பரவும் கட்டியை மாலிக்னட் ட்யூமர் என்றும் பரவாத புற்று நோயை பினையின் ட்யூமர் என்றும் அழைப்பர். பரவாத கட்டியைப் பொறுத்த வரையில் மிகப் பெரிய ஆபத்து ஒன்றும் இல்லை.இதற்காகசெய்யப்படும் சிகிச்சைக்கு பலன் உண்டு. ஆனால் பரவும் தன்மை உடைய கட்டிக்கு சிகிச்சை எடுத்தாலும் ஆபத்து உண்டு.இந்த எலும்புப்புற்று நோயை சாதாரணமான பரிசோதனையிலேயே 60 சதவிகிதம் உறுதிப்படுத்தி விடலாம். எனினும் எக்ஸ்ரே, போன் ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மூலம் மிக மிகத் துல்லியமாக பரவியுள்ள அளவையும் கண்டறிய முடியும். மேலும் என்ன வகையான புற்றுநோய் அதற்கு என்ன சிகிச்சை தேவைப்படும் என்பதை திசுப் பரிசோதனை செய்து 100% உறுதியாகக் கூறிவிடலாம்.

    புற்றுநோயிலுள்ள 2 வகைகள்:

    1. முதல் நிலை எலும்புப் புற்று:

    20 வயதுக்கு கீழ் அல்லது 50, 60 வயதுகளில் தாக்குகிறது.இந்த முதல் நிலை எலும்புப் புற்று நோயில் எலும்பில் புற்று நோய் தோன்றி மற்ற இடங்களுக்கு பரவும்.முதல் நிலை எலும்புப் புற்றுநோய் தோள் பட்டை, கை மணிக்கட்டு, கால் முட்டி போன்ற இடங்களில் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

    2. இரண்டாம் நிலை எலும்பு புற்று:

    60 வயதுக்கு மேல் உள்ள மனிதர்களையே தாக்குகிறது. இது உடலின் வேறு பாகத்தில் தோன்றிபுற்றுநோயாகப் படிப்படியாக பரவி எலும்பினை பாதிக்கும் புற்று நோய் இரண்டாம் நிலையாகும். இந்த எலும்புப் புற்றுநோய் அறிகுறிகள் நோயாளிகளைப் பொறுத்து மாறுபடுகிறது. மேலும் ஏற்படும் இடங்களைப் பொறுத்தே புற்றுநோய் அறிகுறிகளை அறிய முடியும். வீக்கம், வலி, அசைக்க முடியாத நிலை, எலும்பு முறிவு இது போன்ற பொதுவான அறிகுறிகள் ஏற்பட்ட உடன் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்வது அவசியமான ஒன்றாகும்.

    சிலபேருக்கு சாதாரணமான மூட்டு வலி ஏற்படலாம். மாத்திரைகள் எடுத்த பின்பு இது சரியாகி விடும். ஆனால் மாத்திரைகளுக்கும் பலனளிக்காமல் வலியும், வீக்கமும் தொடர்ந்து இருந்தால் புற்று நோயாக இருக்குமோ என்ற சந்தேகம் உங்களுக்கு ஏற்பட்டுவிட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறலாம்.

    சிகிச்சை முறைகள் :

    1. கீமோ தெரபி
    2. ரேடியோ தெரபி
    3. அறுவைச் சிகிச்சை

    ஹீமோ தெரபியில் புற்று நோய் செல்கள் வளர்ச்சியைக் குறைக்கும், கட்டுப்படுத்தும் மருந்துகளை உண்ண வேண்டும். ரேடியோ தெரபியில் கதிரியக்க அலைகள் மூலம் கேன்சர் செல்கள் அழிக்கப்படும். அறுவை சிகிச்சையில் பாதிக்கப்பட்ட பகுதியை முற்றிலுமாக அறுவை சிகிச்சை செய்து அகற்றி விடுவது. எலும்புப் புற்றுநோய் அறுவை சிகிச்சையில் பாதிக்கப்பட்ட எலும்பை அகற்றி விட்டு மற்றொரு இடத்தில் இருந்து எலும்பை எடுத்து, மாற்றி வைப்பது அல்லது Stainless Steel ல் செய்த எலும்பை போன்ற அமைப்பு கொண்ட கம்பியை பொருத்துவது அல்லது இறந்தவர்களிடமிருந்து எடுக்கப்பட்ட மாற்று எலும்புகளைப் பொருத்தி ஊனமாகும் சூழ்நிலையைத் தவிர்க்லாம். இதனால் தரமான வாழ்க்கை வாழ வழி செய்யலாம்.
    மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு ஆலு லாலி பாப் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    உருளை கிழங்கு - 3
    உப்பு - தேவைக்கு
    எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
    சாட் மசாலா - 1/2 தேக்கரண்டி
    மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
    பூண்டு பொடி - 1 தேக்கரண்டி
    ரெட் கலர் - பின்ச்
    பட்டை தூள் - 1/4 தேக்கரண்டி
    சீரக தூள் - 1 தேக்கரண்டி
    சோள மாவு- 1 தேக்கரண்டி (தண்ணீரில் கரைத்து கொள்ளுங்கள்)
    பிரட் தூள்
    பிரட் ஸ்டிக் ( ஒன்றை பாதியாக உடைத்து உபயோகிக்கலாம்)

    ஆலு லாலி பாப்

    செய்முறை :

    உருளைக்கிழங்கை குக்கரில் வேக வைத்து ஆறியதும் தோல் நீக்கி நன்கு மசித்து கொள்ளுங்கள்.

    மசித்த உருளைக்கிழங்குடன் கலர், உப்பு, மிளகாய் தூள், சாட் மசாலா, பூண்டு பொடி, பட்டை தூள், சீரக தூள் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

    பிசைந்த கிழங்கை சிக்கனை போல் பிரட் ஸ்டிக்கில் வடிவமைத்து கொள்ளுங்கள்.

    வடிவமைத்த உருளைக்கிழங்கை சோள கலவையில் முக்கி பிரட் தூளில் பிரட்டி எடுக்கவும்.

    கடாயில் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிரட்டிய கிழங்கை மிதமான நெருப்பில் பொரித்து எடுக்கவும்.

    சுவையான உருளைக்கிழங்கு லாலி பாப்பை சாஸ் உடன் சூடாக பரிமாறவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வெண்புள்ளி நோயை பொறுத்தவரை உடலோடு கலந்திருக்கும் நுண்ணிய நச்சு ஆற்றலை மருந்துகள் மூலம் உடலில் நுண் ஆற்றலை உருவாக்கினால் மட்டுமே குணமாகும்.
    பிரபல பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சன் மறைந்த தினத்தை உலக வெண்புள்ளி தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மைக்கேல் ஜாக்சன் வெண்புள்ளி நோயால் பாதிக்கப்பட்டு பல்வேறு சிகிச்சை முறைகளை மேற்கொண்டு பலனளிக்கவில்லை.

    வெண்புள்ளி நோயால் பாதிக்கப்பட்டவுடன் நோயாளிகள் முதலில் நாடுவது ஆங்கிலம் மருத்துவம்தான் பின்னர் ஆயுர்வேதம். சித்தா, யுனானி, ஓமியோபதி என்று சிறிது காலம் சிகிச்சை பெறுவார்கள். அதிலும் காலதாமதம் ஆனால் எனக்கு சிகிச்சையே வேண்டாம் என்று விரக்கியுடன் நிறுத்திவிடுவார்கள்.

    வெண்புள்ளி நோய் தீராத வியாதியா? என்ற கேள்வியை அனைவர் மனதிலும் வித்திட்டு விடை காண முடியாமல் தவிப்பதை உணரமுடியும். என் மகன், மகளின் திருமணம் பாதிக்கப்படுமோ என்று வெதும்பும் தாயின் குமுறல் மருத்துவர்களால் உணர முடிகிறது. எனக்கு சரியான வாழ்க்கை துணையில்லை என்று மனைவியுடன் சண்டையிடுவது அன்றாட நிகழ்வுகளில் உண்டு. நாள்தோறும் நண்பர்ளோடும், உறவினர்களோடும் பழகமுடியாமல் மன விரக்தியில் கண்ணீர் விடுவதும் உண்டு. உண்மையிலேயே இந்த வெண்புள்ளி நோய் நிறமாற்றமே! இது ஒரு கிருமிகளால் ஏற்படுவது அல்ல! எனவே ஒருவருக்கொருவர் நிச்சயம் பரவாது. உடல் இயக்கத்தை பாதிக்கும்; நோயும் அல்ல!.

    வெண்புள்ளி தோன்ற காரணம் நமது தோலுக்கு நிறத்தை அளிக்க கூடிய “மெலானோசைட்“ எனப்படும் செல் அணுக்கள் செயல்பாடு குன்றுவதால் தான் இதன் நிறமி அணுக்கள் தோலுக்கு அடிப்பகுதியில் இருக்கிறது. நாம் சாப்பிடும் உணவில் சத்தை எடுத்துக்கொண்டு நிறமி சத்தாக மாறி ஒரே சீராக அனுப்புகின்றன. நிறமி அணுக்களின் எண்ணிக்கையை பொறுத்து சிவப்பாகவும், கருப்பாகவும் தோற்றமளிக்கிறோம்.

    மருத்துவ ஆராய்ச்சியில் நிறமி செல் அணுக்களின் செயல்பாட்டை தடுக்க பல்வேறு காரணங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் முதன்மையான காரணமாக கருதப்படுவது சுயநோய் எதிர்ப்பு திறன் குறைவால் உருவாகும் என்பது அனைத்து மருத்துவமுறைகளும் ஒத்துக்கொண்டுள்ளன. மேலும் நாம் பல்வேறு நோய்களுக்கு ஆளாகும் போது நமது உடலில் ஏற்படும் எதிர்ப்பு சத்து உருவாகி நிறமி அணுக்களை தவறுதலாக தாக்குவதும் முக்கியமான காரணம். மெலானோசைட் நிறமி செல் அணுக்களை உடலுக்கு கெடுதல் விளைவிக்கும் செல் அணுக்கள் என்று நோய் எதிர்ப்பு திறன் செல்கள் தவறாக அழிந்துவிடும். எனவே வெண்புள்ளிகள் தோன்றிவிடும்.

    மேலும் பூச்சிக்கடிகள் மூலம் உடலில் செலுத்தப்படும் நச்சு தன்மையாலும் நிறமி அணுக்கள் செயல்பாடுகள் குறைவதை பார்க்க முடியும். இதற்கு உதாரணமாக தேனீ பூச்சி கடித்தால் ஏற்படும் நச்சுத்தன்மை நாளடைவில் வெண்புள்ளி நோய் தோன்றி இருக்கிறது. இது சரியான ஓமியோபதி மருந்துகளால் குணப்படுத்தப்பட்டுள்ளது. குடலில் உள்ள பூச்சி புழுக்களின் கழிவுகள் கூட நிறமி அணுக்களை தாக்கலாம்.

    இன்றைய துரித வாழ்க்கையில் இயந்திரமாக, இயற்கைக்கு எதிராக வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். ரசாயன பொருள்கள் இல்லாத உணவு வகைகள் இல்லை. அழகு சாதனங்கள், மருந்துகள், டின்களில் அடைக்கப்பட்ட உணவுகள். குளிர்பானங்கள் என பட்டியல் நீண்டுகொண்டே செல்லும். ரசாயன பொருட்களும் நிறமி அணுக்களை தாக்கக்கூடிய சாத்திய கூறுகள் உண்டு. இது நோய் எதிர்ப்பு திறனுக்கும் சவாலாக உள்ளது என்றால் மிகையாகாது.

    உடல் இயக்க நோய்களான தைராய்டு கோளாறுகள், உடல் கோளாறுகள் வெண்புள்ளிகளை உருவாக்கி உள்ளது. நீரிழிவு நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கும் வெண்புள்ளிகள் தோன்றியதுண்டு. பரம்பரை தன்மையும் இதற்கு ஒரு காரணம். இப்படி இதற்கு பல காரணங்கள் கண்டறியப்பட்டுள்ளது. அடிப்படையான காரணமாக கருதப்படுவது நோய் எதிர்ப்பு திறன் குறைவதால் தான் ஏற்படுகிறது.

    ஒவ்வொரு பாதிக்கப்பட்ட வெண்புள்ளி நோயாளிக்கும் நச்சுதன்மை ஏற்பட்டு ஒவ்வாமை தன்மையாக மாறி, நிறமி அணுக்களை பாதிக்கிறது. அதுவும் அணுசக்தியின் ஆற்றல் போல உடலில் புகுந்து தன் வேலைகளை காண்பிக்க ஆரம்பித்து வருகிறது. எனவே தான் சரியான சிகிச்சை பெறாமல் உடம்பில் பரவிக்கொண்டே இருக்கும். குணம் பெறுவது கடினமாக உள்ளது. வெண்புள்ளி குணமாக மூலப்பொருட்களை மருந்தாக கொடுத்து குணமாக்க முடியாது. வெளிபூச்சு மருந்துகள் பலன் அளிக்காது. சூரிய ஒளியில் நின்றதால் தோன்றிய கரும்புள்ளிகள் மறைந்துவிடும். அறுவை சிகிச்சை முறைகளும் பொருத்தமாக இருக்காது!.

    வெண்புள்ளி நோயை பொறுத்தவரை உடலோடு கலந்திருக்கும் நுண்ணிய நச்சு ஆற்றலை மருந்துகள் மூலம் உடலில் நுண் ஆற்றலை உருவாக்கினால் மட்டுமே குணமாகும். இது கிட்டத்தட்ட “முள்ளை, முள்ளால் எடுப்பது” போலதான். எனவே தான் ஓமியோபதி மருத்துவத்திற்கென்று ஒரு தனி சிறப்பு உள்ளது. ஓமியோபதி மருந்துகள் மூலம் மூலப்பொருட்களுக்காக அளிக்கப்படுவதில்லை.

    வீரியப்படுத்தப்பட்டு நுண்ணாற்றலாகத்தான் அளிக்கப்படுகிறது. பக்க விளைவுகள் இருப்பதில்லை. உலக வெண்புள்ளி நோய் தினமாக இன்று நாம் தெரிந்துகொள்ள வேண்டிய தவறான கருத்துகள் பல உள்ளன. அவைகளில் முதல் கருத்து தொற்று வியாதியல்ல, ஒரு அழகு குறைபாடு மட்டுமே! அனைவரும் சகலமாக பழகலாம், விளையாடலாம். வெண்புள்ளி நோய் குணமாக சரியான சிகிச்சை முறையை தேர்தெடுத்து பலன் பெறுங்கள்.

    டாக்டர் ஆர். ஞானசம்பந்தம் தலைவர், தமிழ்நாடு ஓமியோபதி மருத்துவ கவுன்சில்.
    பெற்றோர்கள் குழந்தைகளின் மனதில் தன்னம்பிக்கையை வளர்க்க எளிய தினசரி பாடங்களின் மூலம் மேம்படுத்த முடியும். குழந்தைகளின் மனதில் எப்படி தன்னம்பிக்கையை வளர்ப்பது என்று பார்க்கலாம்.
    சரியான தன்னம்பிக்கை இல்லாமல் இருக்கும் குழந்தைகளால் எந்த ஒரு செயலையும் சரியாக செய்ய முடியாத நிலையில் இருக்கின்றனர். ஆகவே பெற்றோர்கள் குழந்தைகளின் மனதில் தன்னம்பிக்கையை வளர்க்க எளிய தினசரி பாடங்களின் மூலம் மேம்படுத்த முடியும். குழந்தைகளின் மனதில் எப்படி தன்னம்பிக்கையை வளர்ப்பது என்று பார்க்கலாம்.

    1. குழந்தை முன், உங்களை தாழ்த்திப் பேசுவதை தவிர்க்க வேண்டும். முக்கியமாக பிரச்சனைகளில் இருந்து விலகி செல்வதற்கு மாறாக, அவற்றை ஒரு மரியாதையான முறையில் தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டு தன்முனைப்பை உங்களிடம் இருந்து அவர்கள் கற்று கொள்ள வேண்டும்.

    2. குழந்தையின் பல்வேறு நடவடிக்கைகளில் திருப்தியை வெளிப்படுத்துங்கள். அதிலும் குழந்தையின் திறமை அல்லது திறனை புகழ்வதற்கு பதிலாக, அவர்களது நடவடிக்கைகள் நினைத்து பெருமை அடைந்திருப்பதை வெளிப்படுத்துங்கள். "நீ மிகவும் புத்திசாலி" என்று சொல்வதை விட "நீ பள்ளியில் கடினமாக வேலை செய்வதில் மிகவும் பெருமைப்படுகிறேன்." என்று சொல்லலாம்.

    3. பெற்றோர்கள் திறந்த மனதுடன் குழந்தையின் கவலைகளை கேட்க வேண்டும். குழந்தைகள் சிறிய கவலைகளினால் தன்னை ஒரு வேடிக்கையாக உணர்வதை தவிர்க்கவும். சில நேரங்களில் அவர்கள் கவலையடைவதை நியாயப்படுத்த திறந்த மனதோடு பேசுமாறு உற்சாகப்படுத்தவும்.

    4. மூளையை குழப்பும் யோசனைகள் நிறைந்த வேலைகளை குழந்தையுடன் சேர்ந்து செய்யுங்கள். அது சூழ்நிலைகளை மாற்றுவதோடு, அவர்களை கவலையில் இருந்து விடுதலை அளிக்கும். அவர்கள் போர் அல்லது பஞ்சம் போன்ற உலகளாவிய பிரச்சினைகள் பற்றி கவலைப்பட்டால், இந்த பிரச்சினைகள் தனிப்பட்ட முறையில் அவர்களை எப்படி பாதிக்கும் என்று அவர்களோடு கலந்துறையாடி அதில் அவர்கள் எவ்வாறு தன்னை ஈடுபடுத்தி கொள்ளலாம் என்பதை அவர்களுக்கு உணர்த்தலாம்.

    6. பெற்றோர்கள் பயம் மற்றும் சந்தேகம் அடைவதை, குழந்தைகள் முன்பு தணிக்கை செய்யுங்கள். வேறு என்னவெல்லாம் செய்யலாம் என்று உங்களுக்கு தோன்றுகிறதோ, அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
    கொத்தமல்லி சருமத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு தரும். அந்த வகையில் முகப்பருவை போக்க கொத்தமல்லியை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
    கொத்தமல்லி சாற்றுடன் 2 தேக்கரண்டி பால் இதேயளவு வெள்ளரி சாறு 4 தேக்கரண்டி ஓட்ஸ் எடுத்து நன்றாக கலந்து முகத்தில் பூசி சுமார் 15 நிமிடங்கள் அளவில் வைத்து முகத்தினை குளிர்ந்த நீரால் கழுவினால் மென்மையான சருமத்தினை பெறலாம்.

    ஒரு200 மில்லிலீற்றர் நீரில் கொத்தமல்லி, செவ்வந்தி இதழ் அல்லது எண்ணெய் மற்றும் சிறிது லெமன்கிராஸ் சேர்த்து கொதிக்க வைத்து எடுத்து வடிகட்டி தண்ணீரை குளிர வைத்தல் வேண்டும். பின் அவிந்துள்ள பொருட்களை அரைத்து அதை முக்தில் பூசி சிறிது நேரம் ஊற வைத்து குளிர்ந்த தண்ணீரில் கழுவினால், முகப்பருவினை விரைவில் போக்கலாம்.

    மூக்கைச் சுற்றி கரும்புள்ளிகள் வந்தால் அதனை போக்குவதற்று 1 தேக்கரண்டி கொத்தமல்லி சாற்றுடன் தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை கலந்து, கரும்புள்ளிகள் உள்ள பகுதியில் பூசி அரை மணிநேரம் ஊற வைத்து, குளிர்ந்த தண்ணீரில் கழுவ, கரும்புள்ளிகள் நீங்கும்.

    2 தேக்கரண்டி கொத்தமல்லி சாறு, 2 தேக்கரண்டி தக்காளி சாறு மற்றும் சிறிது ரோஸ்வோட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் உற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவுங்கள் முகத்தில் வரும் சிவத்த பருக்கள் இருந்த இடமே தெரியாது போகும்.

    கொத்தமல்லியில் உள்ள விட்டமின்கள் மற்றும் புரோட்டீன்கள், முடியின் வளர்ச்சியைத் தூண்டும். எனவே கொத்தமல்லி சாற்றினை எடுத்து, தலையில் நன்கு படும்படி பூசி, 1 மணிநேரம் ஊற வைத்து, பின் தலையை வெதுவெதுப்பான நீரில் அலசினால் முடி உதிர்வது குறைந்து, முடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.

    உதடு கருப்பாக இருபவர்கள் இரவில் படுக்கும் முன், கொத்தமல்லி இலை சாற்றினை உதட்டில் தடவிக் கொள்ளுங்கள். நாளடைவில் சிறந்த மாற்றம் தெரியும். அதனுடன் சிறிது எலுமிச்சை சாற்றையும் கலந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

    சிறிது கொத்தமல்லி இலைகள், தயிர் மற்றும் கற்றாழை சாறு ஆகியவற்றை சரிசமமாக எடுத்துக் கொண்டு நன்றாக அரைத்து, அதில் 1 தேக்கரண்டி அரிசி மாவு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ, சருமம் மென்மையாகவும், பொலிவுடனும் இருக்கும். இது நல்ல ஸ்க்கரப் ஆகவும் தொழிற்படும்.
    குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு என்றால் மிகவும் பிடிக்கும். இன்று கேழ்வரகுடன் உருளைக்கிழங்கு சேர்த்து தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    அரிசி மாவு, ராகி மாவு - தலா 100 கிராம்,
    உருளைக்கிழங்கு - 2,
    பெரிய வெங்காயம் - 1,
    பச்சை மிளகாய் - ஒன்று,
    கரம் மசாலாத்தூள் - - சிறிதளவு,
    பொடியாக நறுக்கிய இஞ்சி - சிறிதளவு,
    கடுகு - கால் ஸ்பூன்,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    ராகி உருளைக்கிழங்கு ஸ்டப்ஃடு தோசை

    செய்முறை:

    வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.

    ராகி மாவுடன் உப்பு, அரிசி மாவு சேர்த்து நன்றாக கலந்து தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் கடுகு, இஞ்சி, பச்சை மிளகாய் போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் மசித்த உருளைக்கிழங்குடன் சேர்க்கவும்.

    அதனுடன் கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து கிளறி இறக்கி வைக்கவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசையாக ஊற்றி இருபுறமும் எண்ணெய் விட்டு, தோசையின் நடுவில் உருளைக்கிழங்கு மசாலா வைத்து இரண்டாக மடித்து பரிமாறவும்.

    அருமையான ராகி உருளைக்கிழங்கு ஸ்டப்ஃடு தோசை ரெடி.

    குறிப்பு: இதை ரோல் மாதிரியும் சாப்பிடலாம். கேரட் துருவல் சேர்க்கலாம். இதற்கு சைட் டிஷ் தேவை இல்லை.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மன நிம்மதி ஏற்படவும், பல்வேறு விதமான நோய்கள் ஏற்படாமல் தவிர்க்கவும் தினந்தோறும் தியானம் செய்தால் சிறந்த பலன் கிடைக்கும்.
    நாகரீக யுகத்தில் நகரங்களில் வாழும் பெரும்பாலானவர்களுக்கு வேலைப்பளு, அலைச்சல் போன்ற பல்வேறு சிக்கல்கள் காரணமாக மன உளைச்சல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், மன நிம்மதி இழப்பதோடு, பல்வேறு நோய்களிலும் சிக்கி அவதிப்படும் சூழ்நிலை நிலவி வருகிறது. இதுபோன்ற பிரச்சனைகளை சரிசெய்ய தியானம் செய்வது ஒரு சிறந்த தீர்வாக கருதப்படுகிறது. தினமும் தியானத்தை கடைபிடிப்பது கடினமான செயல் என கருதுபவர்களுக்கு சில எளிதான ஐடியாக்கள்...

    1) நீண்டநேரம் தியானம் செய்தால்தான் சிறந்த பலன் கிடைக்கும் என்பது ஒரு தவறான கணிப்பாகும். அதாவது தொடர்ந்து 20 முதல் 30 நிமிடம் வரை தியானம் மேற்கொள்ள வேண்டும் என நினைக்க வேண்டாம். சில நிமிடங்கள் மட்டுமேகூட தியானம் மேற்கொண்டால் கூட சிறந்த பலன் கிடைக்கும். ஆனால், அதனை வழக்கமாக கடைபிடிக்க வேண்டும்.

    2) தியானம் மேற்கொள்ளத் தொடங்கும்போது முடிந்தவரை ஒரு குறிப்பிட்ட நேரத்தை கடைபிடிப்பது நல்லது. அதேபோல், தொடர்ந்து 11 நாட்கள் தியானம் செய்ய வேண்டும். அவ்வாறு தொடர்ந்து 11 நாட்கள் தியானம் செய்து முடித்தவர்களில் பெரும்பாலானவர்கள் அதனை வழக்கமாக்கிக் கொள்வர்.

    3) தியானம் மேற்கொள்ளும்போது சில நேரங்களில் தடங்கல்கள் ஏற்படலாம். அதனைத் தவிர்ப்பதற்காக குறைந்த அளவிலான நேரத்தை எடுத்துக்கொண்டு, இடைவேளை விட்டுவிட்டு தியானம் செய்ய முயற்சி செய்யலாம்.

    4) தியானம் மேற்கொள்ள ஏன் தொடங்கினோம் என அடிக்கடி நினைத்து பார்த்துக் கொண்டு, நம்மை நாமே ஊக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். தியானம் மேற்கொள்ளவதால், நமக்கு ஏற்படும் பயன்கள் என்ன என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதால், தொடர்ந்து தியானம் மேற்கொள்வதை வழக்கமாகக் கடைபிடிக்க முடியும்.

    5) தியானம் மேற்கொள்வதை மகிழ்ச்சியான பணியாக எடுத்துக் கொள்ள வேண்டும். மகிழ்ச்சியுடன் ஒரு பணியை மேற்கொண்டால், அந்த பணியை தொடர்ந்து எளிதாக செய்ய முடியும்.
    அன்னையின் கருவில் நடனம் ஆடுவது சாத்தியமோ இல்லையோ, அறுவை சிகிச்சை சாத்தியம் என்று நிரூபித்துள்ளனர் இங்கிலாந்து மருத்துவர்கள்.
    அன்னையின் கருவினில் புரண்டதும் நடனம் தொடங்கி விட்டேன்- இது பிரபுதேவா நடித்த படத்தின் புகழ் பெற்ற பாடல் வரி. கருவில் நடனம் ஆடுவது சாத்தியமோ இல்லையோ, அறுவை சிகிச்சை சாத்தியம் என்று நிரூபித்துள்ளனர் இங்கிலாந்து மருத்துவர்கள். லண்டன் பல்கலைக்கழக கல்லூரி மருத்துவமனையில் கருவில் இருந்த 2 குழந்தைகளுக்கு முதுகு தண்டுவடத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

    கருவில் இருக்கும் குழந்தையின் முதுகு தண்டுவட எலும்புகள் சரியாக உருவாகாமல், தண்டுவடத்தில் ஒரு வெற்றிடம் ஏற்படுவது ‘ஸ்பைனா பிபிடா‘ என்ற குறைபாடாகும். தண்டுவடம் சரியாக உருவாகாத காரணத்தினால், அதன் உள்ளே இருக்கும் திரவம் கசியத் தொடங்கும்.

    இது கருவில் உள்ள குழந்தையின் மூளை வளர்ச்சியை பாதிப்பதோடு, பிறந்த பிறகு குழந்தை நடப்பதில் சிக்கல் ஏற்படுத்தி, பல்வேறு நீண்ட கால உடல் பாதிப்புகளுக்கும் வழிவகுக்கும்.

    இந்தப் பிரச்சினைக்கு மருத்துவர்கள் குழந்தையின் தாயின் வயிற்றில் சிறு துளைகளின் மூலம் கருவிகளை உள்ளே செலுத்தி குழந்தையின் முதுகு தண்டுவடத்தில் 90 நிமிடங்கள் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். 30 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் இந்த சிகிச்சையை வெற்றிகரமாக்கியுள்ளனர்.

    எலும்புகள் உருவாகாமல் வெற்றிடம் காணப்பட்ட பகுதியில் தையல் போட்டு, அதிலிருக்கும் திரவம் கசிவது தடுக்கப்பட்டுள்ளது. பொதுவாக குழந்தை பிறந்த பிறகு செய்யப்படும் இந்த சிகிச்சை, தாயின் கருவில் இருக்கும்போதே வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. சிகிச்சைக்கு பின்னர் 2 குழந்தைகளும் ஆரோக்கியமான உடல்நிலையுடன் இந்த உலகை காண வந்துவிட்டன. வெற்றிக் களிப்பில் மருத்துவர்கள் உள்ளனர்.
    ×