search icon
என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    குழந்தைகளுக்கு பள்ளிக்கு கொடுத்து அனுப்ப குடைமிளகாய் புதினா புலாவ் அருமையாக இருக்கும். இன்று புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாசுமதி அரிசி - ஒரு கப்,
    குடைமிளகாய் - 2,
    வெங்காயம், தக்காளி - தலா ஒன்று,
    புதினா, கொத்தமல்லித்தழை - தலா ஒரு கைப்பிடி அளவு,  
    இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,
    பட்டை - சிறு துண்டு,
    பெருஞ்சீரகம் - கால் டீஸ்பூன்,
    எண்ணெய், நெய், உப்பு - தேவையான அளவு.

    குடைமிளகாய் புதினா புலாவ்

    செய்முறை:

    வெங்காயம், தக்காளியை நீள நீளமாக, மெல்லியதாக நறுக்கி கொள்ளவும்.

    குடைமிளகாயை சதுரமாக வெட்டிக் கொள்ளவும்.

    பாசுமதி அரிசியை நன்றாக கழுவி உதிரியாக வடித்து கொள்ளவும்.

    அடி கனமான வாணலியில் எண்ணெய், நெய் விட்டு, சூடானதும் பட்டை, பெருஞ்சீரகம் போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    இஞ்சி - பூண்டு பச்சை வாசனை போனவுடன் தக்காளி, புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்துக் கிளறவும்.

    தக்காளி குழைய வதங்கியதும இதனுடன் நறுக்கிய குடைமிளகாய், உப்பு சேர்த்து நன்றாக வதக்கி எடுக்கவும்.

    வடித்த சாதத்தில் இந்தக் கலவையை சேர்த்து நன்கு கிளறி பரிமாறவும்.

    சூப்பரான குடைமிளகாய் புதினா புலாவ் ரெடி.

    தை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பிரிட்ஜின் பிரீசரில் வைத்து காய்கறிகள், உணவுப்பொருட்களை பயன்படுத்தும் போது பொருட்களின் தரம் மாறுபடும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    பால் பொருட்களை பிரிட்ஜின் பிரீசரில் வைப்பது அதன் தரத்தை மாற்றும். இது சாப்பிட பாதுகாப்பானது என்றாலும் இந்த பாலை காலை நேர காபிக்கோ அல்லது டீக்கோ பயன்படுத்தக்கூடாது.

    உருளைக்கிழங்கில் அதிக நீர்ச்சத்து உள்ளது. பிரீசரில் உருளைக்கிழங்கை வைத்து எடுக்கும்போது அது உருளைக்கிழங்கை மென்மையானதாக மாற்றிவிடும். இந்த உருளைக்கிழங்கை சமைக்கும்போது அது உங்களின் உணவின் சுவையை மாற்றும். மேலும் அதில் உள்ள சில சத்துக்களும் வெளியேறுகிறது.

    முட்டையை பிரீசரில் வைக்கக்கூடாது. முட்டையில் உள்ள நீர்ச்சத்துக்கள் உறையும்போது அதன் பரப்பளவு அதிகரிக்கும், இதனால் முட்டையின் ஓடு உடையவோ அல்லது பாக்டீரியா தொற்று ஏற்படவோ வாய்ப்புள்ளது.

    அதிக நீர்ச்சத்துள்ள காய்கறிகள் மற்றும் பழங்கள் எதுவாக இருந்தாலும் அவற்றை ஒருபோதும் பிரீசரில் வைக்காதீர்கள். குறிப்பாக வெள்ளரிக்காய், கீரை, தர்பூசணி போன்ற பொருட்களை வைத்தால் அவற்றில் உள்ள நீர்ச்சத்துகள் ஐஸ்கட்டிகளை உருவாக்கிவிடும். பிறகு அதனை உபயோகப்படுத்தும்போது அதன் உண்மையான சுவையும், வடிவமும் காணாமல் போயிருக்கும். சில சத்துக்களையும் இழக்க நேரிடும்.

    பிரீசரில் இருந்து எடுத்து சமைத்தது போக மீதம் உள்ள இறைச்சியை ஒருபோதும் மீண்டும் பிரீசரில் வைக்காதீர்கள். ஏனெனில் அப்படிப்பட்ட இறைச்சிகள் சாதாரண இறைச்சியை விட இரு மடங்கு பாக்டீரியாக்களை ஈர்க்கும். இதற்கு ஒரேவழி தேவைப்படும்போது மட்டும் இறைச்சி வாங்குவதுதான். சாப்பாட்டை வீணாக்க கூடாது என்பதற்காக அதனை பிரீசரில் வைக்கும் பழக்கம் பலருக்கும் உள்ளது. ஆனால் இது மிகவும் தவறான ஒரு பழக்கமாகும். இதனால் ஆபத்து இல்லையென்றாலும், அந்த சாப்பாட்டில் சுவையோ, சத்துக்களோ எதுவும் இருக்காது.

    மீதமான குழம்பை என்ன செய்வது என்ற குழப்பம் பெரும்பாலும் அனைத்து சமையலறையிலும் தோன்றும் ஒரு பிரச்சினையாகும். பிடித்த குழம்பாக இருந்தால் அதனை பிரீசரில் வைத்து சாப்பிடும் பழக்கம் கிட்டத்தட்ட அனைவருக்கும் உள்ள ஒரு பழக்கமாகும். பிரீசரை விட்டு எடுத்தபின் அந்த குழம்பு மிகவும் கட்டியாக மாறிவிடும். மேலும் இது சமைத்தபோது இருந்த சுவையுடனும் இருக்காது. உணவின் சுவைக்காக சேர்க்கப்படும் பொருட்களில் முக்கியமானது பூண்டு. தேசிய உணவு பாதுகாப்பு மையத்தின் ஆலோசனைப்படி பூண்டானது பிரீசரில் வைக்கப்படும்போது கடினமானதாக மாறிவிடும், மேலும் அதன் சுவை கசப்பாக மாறிவிடும். இந்த பூண்டை உணவில் சேர்க்கும்போது அது உணவின் மொத்த சுவையையும் மாற்றக்கூடும்.

    பிரீசரில் வைப்பதால் உணவின் சுவையை மாற்றுவது பூண்டு மட்டுமல்ல, வெங்காயம், மிளகாய் போன்ற பொருட்களின் சுவையும் கூட மாறக்கூடும். இவை மட்டுமின்றி மிளகு, பச்சை மிளகாய், கிராம்பு போன்ற பொருட்களும் கூட பிரீசரில் வைக்கும்போது தன் சுவையை இழக்கும். 
    திருவிழாக்கள் போன்றவற்றில் கலந்துகொள்வதற்காக, மாதவிடாயை சில நாட்கள் சீக்கிரமாகவோ அல்லது தாமதமாகவோ வரவைக்க பெண்கள் நினைப்பார்கள். அதனை இயற்கை உணவு முறை மூலமாக செய்யலாம்.
    ஒவ்வொரு பெண்ணும் ஏதாவது ஒரு சமயத்தில் தனது மாதவிடாயை சில நாட்கள் சீக்கிரமாக அல்லது தாமதமாக வரவைக்க விரும்புவார்கள். அதற்கு காரணம் பூஜை அல்லது பண்டிகைள், திருமணங்கள் போன்ற விசேஷங்கள் தான் காரணம்.

    பூஜை என்று வரும் போது மாதவிடாய் பெண்கள் அதற்கு தடை செய்யப்பட்டவர்கள் என கருதுகிறார்கள். அதுபோல திருமணங்கள், இல்ல விழாக்கள், கோவில் திருவிழாக்கள் போன்றவற்றில் கலந்துகொள்வதற்காக, மாதவிடாயை சில நாட்கள் சீக்கிரமாகவோ அல்லது தாமதமாகவோ வரவைக்க பெண்கள் நினைப்பார்கள். அதனை இயற்கை உணவு முறை மூலமாக செய்யலாம்.

    அந்தவகையில், உடலில் உஷ்ணத்தை உருவாக்கும் உணவை உட்கொண்டால் உங்கள் மாதவிடாய் சுழற்சியை விரைவில் வரவழைக்க காரணமாக இருக்கும். 

    விரைவில் மாதவிடாய் வரவழைக்க சாப்பிடவேண்டிய உணவுகள்:

    * பப்பாளி: இது உடலில் அதிக வெப்பம் உருவாக்கி மாதவிடாயை விரைவில் வரவழைக்க மிகவும் பயனுள்ள எளிய முறையாகும். அதுமட்டுமின்றி பப்பாளியில் அதிக அளவில் சத்துக்கள் உள்ளது இதனால் மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஆரோக்கியத்தை தரும்.

    * ஓம விதைகள்: ஓம விதைகளை தண்ணீரில் ஊறவைத்து மூன்று நாட்களுக்கு ஒரு டம்ளர் குடிப்பது உங்கள் மாதவிடாயை சில நாட்கள் முன்னால் வரவழைக்க உதவும்.

    * எள்: எள் விதையை வெல்லத்துடன் சேர்த்து, மாதவிடாய் தேதிக்கு 15 நாடகளுக்கு முன் சாப்பிட்டால் விரைவில் மாதவிடாய் வரவழைக்க உதவும்.

    * அன்னாசி: இது உடலில் அதிக அளவு உஷ்ணத்தை தூண்டக் கூடிய ஒரு சிறந்த உணவுகளில் ஒன்றாகும். அது விரைவில் மாதவிடாய் வரவழைக்க உதவும்.

    மாதவிடாய் தாமதமாக வரவழைக்க சாப்பிடவேண்டிய உணவுகள்:

    * வெந்தயம்: மாதாந்திர விலக்கு வர வாய்ப்புள்ள ஐந்து நாட்களுக்கு முன்னால் இருந்தே, சிறிது வெந்தயத்தை எடுத்து, வாயில் இட்டு தண்ணீர் பருகி வர, விலக்கு தள்ளிப் போகும்.

    * வெள்ளரி: மாதாந்திர விலக்கு வர வாய்ப்புள்ள ஐந்து நாட்களுக்கு முன்னால் இருந்தே வெள்ளரிப் பிஞ்சுகளை உட் கொண்டு வரலாம், இதன் மூலம், உடல் சூடு குறைந்து, விலக்கு தள்ளிப் போகும்.

    * பொட்டுக்கடலை: பொட்டுக் கடலையை, காலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில், நன்கு மென்று தின்று, தண்ணீர் பருகி வந்தால் மாதவிடாயை தள்ளிபோடலம்.
    எண்ணெய் வழியும் முகத்தால் சில நேரங்களில் முகத்தின் அழகே கெட்டு விடுகிறது. இதனை எப்படி சரி செய்வது? என்று வாங்க பாக்கலாம்.
    நம்மில் பலருக்கு இருக்கும் அழகு சார்ந்த பிரச்சனைகளில் ஓன்று எண்ணெய் வழியும் முகம். எண்ணெய் வழியும் முகத்தால் சில நேரங்களில் முகத்தின் அழகே கெட்டு விடுகிறது. இதனை எப்படி சரி செய்வது? என்று வாங்க பாக்கலாம்.

    முகத்தில் அதிகம் எண்ணெய் வடிந்தால் முதலில் முகத்தை அடிக்கடி கழுவ வேண்டும். இதனால் முகத்தில் எண்ணெய் பசை குறைந்து முகம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். மேலும், முகத்தில் சோப்பு போட்டு கழுவுவதற்கு பதில் கடலை மாவு போட்டு கழுவினால் முகம் எண்ணெய் பசை விலகி பளபளப்பாக இருக்கும்.

    தக்காளியை நன்றாக சாறு பிழிந்து அதை முகத்தில் தடவி சிறிது நேரம் ஊறவைத்து முகத்தை கழுவினால் எண்ணெய் பசை நீங்கி முகம் பளிச்சென மாறும். முகத்தில் மோரை பூசி சிறிது நேரத்திற்குப்பின் கழுவி வந்தால் எண்ணெய் தன்மை   குறையும்.

    காலை எழுந்ததும் வெள்ளரி காயை சிறிது சிறிதாக வெட்டி முகத்தில் தேய்த்து வர எண்ணெய் பசை விலகி முகம் பொலிவு பெரும். இந்த எளிய தீர்வுகளை செய்வதன் மூலம் முகத்தில் இருக்கும் எண்ணெய் பசையை சரித்து செய்து பொலிவான முகத்தை பெறமுடியும்.
    முளைகட்டிய நவதானியங்களில் நார்ச்சத்து, புரதம் அதிகளவில் உள்ளது. இன்று முளைகட்டிய நவதானியங்களை வைத்து சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முளைகட்டிய பயறுகள் - ஒரு கப்,
    வெங்காயம் - ஒன்று,
    பூண்டு - 2 பல்,
    சீரகம் - ஒரு டீஸ்பூன்,
    தனியா - ஒரு டேபிள்ஸ்பூன்,
    மிளகு - காரத்துக்கேற்ப,
    கொத்தமல்லி தழை - தேவையான அளவு,
    எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்,
    தேங்காய்ப் பால் - ஒரு கப்,
    புளிக்காத கெட்டி தயிர் - அரை கப்,
    உப்பு - தேவையான அளவு.

    மிக்ஸ்டு முளைகட்டிய நவதானிய சூப்

    செய்முறை :

    முளைகட்டிய பயறுகளை வேகவைத்துக் கொள்ளவும்.

    மிக்ஸியில் வெங்காயம், பூண்டு, தனியா, சீரகம், மிளகு, கொத்தமல்லி தழை, வேக வைத்த பயறு கொஞ்சம் எடுத்து போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.

    காடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அரைத்த விழுதைப் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கி, அதனுடன் மீதமுள்ள வேக வைத்த பயறை சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கி, தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

    தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

    அடுப்பை சிறு தீயில் வைத்து, தேங்காய்ப் பால் சேர்த்து, கொதி வரும் போது அடுப்பை அணைத்துவிடவும்.

    பரிமாறுவதற்கு முன் எலுமிச்சை சாறு, நன்கு அடித்த கெட்டித் தயிரை சேர்த்து கப்பில் ஊற்றி, நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

    சூப்பரான முளைகட்டிய நவதானிய சூப் ரெடி.

    தை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உடற்பயிற்சி எமது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளவும் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.
    உடற்பயிற்சி செய்யாதிருப்பதிலும் பார்க்க ஏதாவதொரு உடற்பயிற்சியில் ஈடுபடல் சிறந்தது. இந்நாள் வரை நீங்கள் உடற்பயிற்சி செய்யாவிட்டால் இது உங்களுக்கான சரியான நேரம் ஆரம்பிப்பதற்கு. ஆரம்பத்தில் இலகுவான பயிற்சிகளில் ஆரம்பித்து படிப்படியாக சொல்லப்பட்ட அளவுக்கு அதிகரிக்கலாம். நீங்கள் உங்கள் நாளாந்த நடவடிக்கைகளில் ஏற்படுத்தும் சிறிய மாற்றங்கள் மூலம் உடற்பயிற்சியின் அளவை அதிகரிக்கலாம். அதாவது காரில், பேரூந்து, புகையிரதம் போன்றவற்றை பயனிக்க பயன்படுத்துவதற்கு பதிலாக நடக்கலாம்.

    நடத்தல் (walking)

    இலகுவான அடிப்படையான ஒரு உடற்பயிற்சி. அனைத்து வயதினரும் செய்யக்கூடியது.

    ஓடுதல் (running)

    இப்பயிற்சி கால்கள் மூட்டுக்களை வலிமையாக்கும் மற்றும் முழங்கால் இடுப்பு பகுதிகளை ஆரோக்கியமாக்கும். இருதயத்தின் ஆரோக்கியத்தை கூட்டும், அத்துடன் கலோரிகளை எரிக்கும்.

    நீந்துதல் (Swimming)

    இது ஒரு சிறந்த தொழிற்பாடாகும். நீரின் மிதக்கும்தன்மை எமது உடலுக்கு ஆதாரமாக அமைவதுடன் மூட்டுக்களில் உள்ள வலிகளை இலகுவாக நீக்க உதவும். நீச்சல் கீழ்வாதம் (arthritis) உள்ளவர்களுக்கு சிறந்து ஏனெனில் less weight bearing மேலதிகமாக நீச்சல் எமது மனநிலையை சிறந்த தரத்தில் பேண உதவும்.

    குந்துதல் (squats)

    ஆரம்பத்தில் இந்த பயிற்சியில் உங்கள் கால்கள் புதிதாக பிறந்த மான் குட்டியை போல தடுமாற்றம் காணும். எனினும் தொடர்ச்சியான பயிற்சி மூலம் உங்கள் உறுதி நிலையை மேம்படுத்தலாம். இப்பயிற்சி பின்முதுகு, இடுப்பு, முழங்கால், கனுக்கால் போன்றவற்றை பாதுகாக்க உதவும்.
    குழந்தைகளிடம் தவறுகளுக்காக அடி வயிற்றில் இருந்து காட்டு கத்தலாக கத்துவது முறையற்ற வார்த்தைகளை பேசுவது போன்றவை அக்குழந்தைகள் மனதினை கொல்வதற்குச் சமம்.
    * குழந்தைகளிடம் பெற்றோர்கள் எப்பொழுதும் அதிகாரம் செய்வதையும், மிரட்டுவதையும் விட்டு அவர்கள் சொல்வதையும் காது கொடுத்து கேட்க வேண்டும். அப்போதே அவர்களால் நல்ல பழக்கங்களை கற்க முடியும். சமுதாயத்தோடு ஒத்து வாழ முடியும். மிக தவறான பழக்கங்கள் இருந்தால் மட்டுமே அவர்களிடம் சற்று தீவிரமான கண்டிப்பினை காட்ட வேண்டும்.

    * குழந்தைகளை பாதுகாத்து வளர்க்க வேண்டிய காலத்தில் பெற்றோர்கள் தங்களுக்கு பிடித்தமான பொழுது போக்குகளில் காலத்தினை செலவிடும் பொழுது பல குழந்தைகள் மது, சிகரெட், போதை பொருட்களுக்கு எளிதில் அடிமையாகி விடுகின்றன. அதுவும் குடும்ப நபர்களுக்கிடையே ஒற்றுமை இன்றி காணப்படும் பொழுது குழந்தைகள் அதிக பாதிப்பிற்கு ஆளாகின்றனர் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    * குழந்தைகள் ஒவ்வொருவரும் வித்தியாசமானவர்களே. அவர்களுக்கென்று தனி ஆசைகள், விருப்பங்கள் தேவைகள் உள்ளது. அவர்களது தேவைகளை வெளிப்படுத்தும் விதமும் வித்தியாசமானது.

    * அதுபோல் பெற்றோருக்கு ஒரு குழந்தையினை விட மற்றொரு குழந்தை மீது ஆசை என்பது எங்கோ காணும் அரிதான ஒன்றே. இதில் உண்மை என்னவென்றால் ஒரு குழந்தை மற்றொரு குழந்தையினைவிட கையாள எளிதாக இருக்கலாம். ஆகவே பிரச்சினையுடைய குழந்தைகளும் அதிக நேரம் அன்பாக பேசுவதும், தவறுகளை மென்மையாய் புரிய வைத்து திருத்துவதுமே தீர்வாக அமையும்.

    * அது போன்று குழந்தைகளிடம் தவறுகளுக்காக அடி வயிற்றில் இருந்து காட்டு கத்தலாக கத்துவது முறையற்ற வார்த்தைகளை பேசுவது போன்றவை அக்குழந்தைகள் மனதினை கொல்வதற்குச் சமம். ஆகவே உடனே உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்.

    * குழந்தைகளை இது தவறு, அது தவறு என்று கத்துவதைக் காட்டிலும் எது சரியென சொல்லி தருவதும் நாம் அதுபோல் சரியாக வாழ்வதுமே சிறந்தது.

    * நல்ல நீதிநெறி கதைகளை அவர்களுக்குச் சொல்வது சிறந்தது.

    * அதிகமாக எதனையும் அவர்கள் மீது திணிக்காதீர்கள். அவர்களின் இயல்பான முறைக்கும் முக்கியத்துவம் கொடுப்பது சிறந்தது.

    * மிகவும் படபடப்புடன் இருக்கும் குழந்தைகளுக்கு தேவையான உதவிகள் கிடைப்பதில்லை.
    பணிபுரியும் இடங்களில் பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்படும் சம்பவங்கள் நிறைய உள்ளன. இதைப்போக்க பெண்கள் அதிகமாகப் பணிபுரியும் இடங்களில் அவர்களைக் கொண்டே விசாகா குழு அமைக்கப்பட வேண்டும் என்பது சட்டம்.
    பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறைந்தபாடில்லை, தொடர்ந்து நடைபெறுவதற்கான காரணங்கள் என்ன? ஏன் குழந்தைகள் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்படுகிறார்கள்? இதைப்பற்றி ஆராய்ந்தால்தான் பல்வேறு காரணங்கள் தெரியவரும், தீர்வும் கிட்டும், நம்முடைய சமூகத்தில் பெண்களுக்கு எப்பொழுதும் இரண்டாம் இடமே கொடுத்து வந்திருக்கிறார்கள். ஆணாதிக்க வர்க்கத்தில் பெண்களின் அறிவு, திறமை, ஆளுமை மற்றும் ஆற்றலை போற்றுதல் செய்வதை விட்டுவிட்டு சமூகம் அவர்களின் புறத்தோற்றத்தைத்தான் பெரிதாகப் போற்றுகிறது. பெண் ஓர் போகப் பொருள், வீட்டைப் பராமரிக்கவும், குழந்தைகளை கவனிக்கவும், கணவனே கண்கண்ட தெய்வம், கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்று கணவனுக்குப் பணிவிடை செய்யவுமே இருக்கிறாள் என்ற மனநிலைதான் காலங்காலமாக இருந்து கொண்டிருக்கிறது. வேகமாக வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களும், சமூக ஊடகங்களின் தாக்கமும் பெண்களின் சமூக நிலையை முற்றிலும் மாற்றியுள்ளது. ஆணுக்கு நிகர் பெண் என்ற சமத்துவ நிலைதான் தற்போது நிலவுகிறது.

    தமிழ்நாட்டில் கடந்த 2018-ல் 2,045 வழக்குகள் போக்சோ சட்டத்தின்கீழ் (பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைக் காக்கும் சட்டம்) பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 1,464 வழக்குகள் கற்பழிப்பு வழக்குகள். தமிழ்நாடு போன்ற வளர்ந்த, முதிர்ந்த மாநிலம், சங்ககாலச் சிறப்பையும், முவேந்தர்களின் செங்கோல் தவறாத ஆட்சியின் பெருமையையும், கண்ணகியின் கற்பைப் போற்றிய மாண்பையும், இலக்கிய, இலக்கண செழிப்பையும், தொன்மையான மொழியையும் கொண்ட சமூகத்தில் இவ்வகையான குற்றங்கள் நடைபெறக் கூடாது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பெரும்பாலும் தெரிந்தவர்களாலேயே நிகழ்த்தப்படுகின்றன.

    பணிபுரியும் இடங்களில் பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்படும் சம்பவங்கள் நிறைய உள்ளன. இதைப்போக்க பெண்கள் அதிகமாகப் பணிபுரியும் இடங்களில் அவர்களைக் கொண்டே விசாகா குழு அமைக்கப்பட வேண்டும் என்பது சட்டம். பணி முடித்து இரவில் தங்கும் இடத்திற்கு திரும்பும் போது வாகன ஓட்டிகள் மூலம் ஏற்படும் பாலியல் தொல்லைகளும் உண்டு. இதற்கு வாடகை வாகன நிறுவனங்கள் ஓட்டுனர்களின் பின்புலத்தை விசாரித்து குற்றப்பின்னணியை கண்டறிய வேண்டும். தமிழக காவல்துறை “காவலன் என்ற செயலியையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

    இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சமூக இணையதளங்கள், ஊடகங்கள், இவைகளின் ஆதிக்கம் காரணமாக சிட்டிசன்ஸ் எல்லாம் நெட்டிசன்ஸ்ஆக மாறிவிட்டார்கள். இணையதளம், சேட்ரூம் மற்றும் முகநூல், இன்ஸ்டாகிராம், டெலிகிராம், வாட்ஸ்-அப் போன்ற செயலிகள் மூலமாக இவர்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கவும், பரிமாறிக்கொள்ளவும், புதிய நட்புகளை ஏற்படுத்திக் கொள்ளவும் செய்கிறார்கள். குறிப்பிடும்படியாக பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்களது சொந்த விஷயங்களை பகிர்ந்து கொள்ளும் போது, தவறான நோக்கத்துடன் புரிந்துகொள்ளப்பட்டு தவறான எண்ணம் கொண்டவர்களால் குற்றங்கள் அரங்கேற்றப்படுகின்றன. இதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாலியல் சம்பந்தப்பட்ட வன்முறைகளுக்குள்ளாகிறார்கள்.

    இணைய வலைதளங்களின் அடிப்படை இயல்பு மறைமுகத்தன்மை தான், இதனால் சொந்த விஷயங்கள், குடும்பத்தினரிடம் கூட பகிர முடியாத தகவல்கள் பகிரப்படுகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்களில் ஈடுபடுகிறார்கள். முகநூல் மூலம் தனிப்பட்ட விவரங்கள், அவர்களுடைய நிகழ்கால விவரங்கள் இவற்றைப் பகிர்ந்துகொள்வதன் காரணமாக வீட்டை உடைத்து களவாடிச் சென்ற சம்பவங்கள் பல உண்டு. அது மட்டுமல்ல பயமுறுத்தி பணம் பறித்தல் மற்றும் பாலியல் உறவுக்கு நிர்ப்பந்தம் செய்தல் போன்ற குற்றங்களும் நடந்துள்ளன. பல்வேறு சைபர் குற்றங்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடத்தப்படுகின்றன. சைபர் ஸ்டாக்கிங் சைபர் புல்லிங் அதாவது இணையதளத்தில் பின் தொடர்ந்து துன்புறுத்துவது, மிரட்டுவது, பெண்களின் படத்தையும், செல்போன் எண்ணையும் வலைதளத்தில் போடுவது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

    குழந்தைகளுக்கு எதிராக சைபர் பொரனோ கிராபி குழந்தை பாலியல் படங்கள் மற்றும் குழந்தைகள் கடத்தல் குற்றங்கள் இணையதளம் மூலமாக நடத்தப்படுகிறது. அமெரிக்காவில் 2017-ல் எடுக்கப்பட்ட புள்ளி விவரங்களில் கிட்டத்தட்ட 30 லட்சம் பெண்கள் வன்முறைக்குள்ளாயிருக்கிறார்கள் எனத் தெரிகிறது. அமெரிக்காவில் குற்றம் இழைத்தால் உடனடியாகப் புகார் தெரிவிக்கிறார்கள். ஆனால் நமது நாட்டில் பெண்கள், பெற்றோர்கள் இன்னும் தானே முன்வந்து புகார் கொடுக்கத் தயங்குகிறார்கள், இந்நிலை மாற வேண்டும்.

    ஜெப்ரி எப்ஸ்டெயின் ஓர் பிரபலமான அமெரிக்கன். இவருக்கு பல கோடி சொத்துகள், சொந்த விமானங்கள், தீவுகள் உள்ளன. குழந்தைகளின் மீது பாலியல் வன்முறை மற்றும் குழந்தை கடத்தல் குற்றங்களுக்காக கடந்த மாதம் கைது செய்யப்பட்டு நியூயார்க் சிறையில் அடைக்கப்பட்டிருந்தான். இந்நிலையில் கடந்த வாரம் சிறையில் தற்கொலை செய்துகொண்டான். எனவே குழந்தைகளும், பெண்களும், தெரிந்தவர்களிடம் மற்றும் தெரியாதவர்களிடம் கவனமாகவும், முன் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். சமீபத்தில் தமிழக காவல்துறை பல்வேறு பள்ளிகளுக்கு சென்று இயல்பான அல்லது பாதுகாப்பான தொடல் மற்றும் உள்நோக்கம் மற்றும் தேவையில்லாத தொடல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

    பொதுவாக இப்படி ஒரு காரணம் சொல்வார்கள் பெண்கள் கவர்ச்சிகரமாக உடையணிவதால் தான் ஆண்களை குற்றம் செய்யத் தூண்டுகிறது என்று. இது முற்றிலும் தவறு. உடை அவர்களது தனிப்பட்ட விஷயம், உடையை பார்த்து எடைபோடுவது பார்ப்பவரின் மனக்கோணல் மற்றும் மாசுப்படிந்த மனம் தான் காரணம். சமீபத்தில் வெளிவந்த “நேர்கொண்ட பார்வை” என்ற படத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை நிகழ்த்தப்பட்டு குற்றச்செயலில் ஈடுபட்டவர்களே புகார் கொடுத்து, அப்பெண்களை தொடர்ந்து துன்புறுத்துகிறார்கள்.

    பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படும் சமயத்தில் தற்காப்பிற்காக அவர்களைக் கொல்லவும் சட்டத்தில் இடமுண்டு. இணையதளத்தின் மூலமாகவே பெண்கள் புகார் உடனடியாகத்தரலாம். காவல்நிலையம் அலையத் தேவையில்லை. மேலும் குற்றம் சுமத்தப்பட்டவர்களை இப்படத்தில் காண்பித்தது போல அவர்களின் வழக்கறிஞரே குறுக்கு விசாரணை செய்ய மாட்டார். எனவே நிழல் வேறு நிஜம் வேறு, காவல்துறை பாதிக்கப்பட்ட பெண்கள் பக்கமே துணை நிற்பார்கள். என்னதான் விழிப்புணர்வு இருந்தாலும் கடுமையான சட்டங்கள் இல்லை, விசாரணை விரைந்து முடிக்கப்படுவதில்லை, கடுமையான தண்டனைகள் இல்லை என்ற குமுறல்கள் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் இன்றைய நிலை முற்றிலும் மாறிவிட்டது. ‘போக்சோ’ சட்டம் மிகவும் கடுமையான சட்டம். அதிகப்பட்ச தண்டனை தூக்குத்தண்டனையாகும்.

    கோவையில் சிறுவர்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி கொலை செய்த வழக்கில் இருவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 376-ன் உட்பிரிவுகள் மாற்றம் செய்யப்பட்டு ‘போக்சோ’ வழக்குகளில் 60 நாட்களுக்குள் விசாரணையை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்ற அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. ஒரு மாவட்டத்தில் 100 வழக்குகளுக்கு மேல் ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தால் தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டு ஓராண்டிற்குள் வழக்கு விசாரணை முடிக்கப்பட வேண்டும்.

    இது உச்சநீதிமன்றத்தின் கட்டளை. மேலும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் காரணமாக இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் இயக்குனர் தலைமையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே வழக்குகள் துரிதமாக விசாரணை செய்யப்பட்டு குறிப்பிட்ட காலத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து கடுமையான தண்டனை வாங்கித்தரப்படும். எனவே குற்றம் செய்ய நினைப்பவர்களுக்கு இது மிகப்பெரிய எச்சரிக்கையையும், பயத்தையும் ஏற்படுத்தும். தண்டனை உறுதி என்ற நிலை குற்றம் செய்ய நினைப்பவர்களை அச்சத்தில் ஆழ்த்தும் என்பார்கள்.

    முனைவர் மு.ரவி, ஐ.பி.எஸ்.,
    கூடுதல் காவல்துறை இயக்குனர்
    (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு), சென்னை
    குழந்தைகளுக்கு வடை என்றால் மிகவும் பிடிக்கும். இன்று கல்கண்டு சேர்த்து வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    உளுந்து - 1 கப்
    சீனி கல்கண்டு - அரை கப் (தூளாக்கவும்)
    பச்சரிசி - 1 டேபிள்ஸ்பூன்
    எண்ணெய் - தேவையான அளவு

    கல்கண்டு வடை

    செய்முறை:

    பச்சரிசி, உளுந்து இரண்டையும் தண்ணீரில் அரைமணி நேரம் ஊற வைத்து அரைக்கவும். ஓரளவு கெட்டி பதத்துக்கு வரும்போது கல்கண்டை சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

    வடை தயார் செய்வதற்கு ஏற்ப மாவு கலவை கெட்டியாக இருக்க வேண்டும். அதிக வழுவழுப்பாக இருந்தால் சிறிதளவு அரிசி மாவு சேர்த்துக்கொள்ளவும். பிறகு மாவை வடைகளாக தட்டி வைத்துக்கொள்ளவும்.

    வாணலியை சிறு தீயில் வைத்து எண்ணெய் ஊற்றி அது சூடானதும் அதில் போட்டு வடைகளாக பொரித்தெடுக்கவும்.

    சூப்பரான கல்கண்டு வடை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இக்கட்டான சூழ்நிலைகளிலும் மனிதனை சமயோகிதமாக சிந்திக்க வைக்கும் மூளையை பற்றிய சில தகவல்களை இங்கு பார்ப்போம்
    மனிதனை மற்ற உயிரினங்களிடமிருந்து வேறுபடுத்துவது சிந்தனையே. அந்த சிந்தனையால் மனிதனை சிறப்பாக செயல்பட வைப்பது நமது மூளையே. இக்கட்டான சூழ்நிலைகளிலும் மனிதனை சமயோகிதமாக சிந்திக்க வைக்கும் மூளையை பற்றிய சில தகவல்களை இங்கு பார்ப்போம்..!

    பொதுவாக மூளையின் அமைப்பு முன்மூளை, நடு மூளை, பின் மூளை என்ற 3 பகுதிகளாக பிரிக்கப்படுகின்றது. உடலில் மூளை தான் அதிக அளவில் ஆற்றலை பயன்படுத்துகிறது. ஏனெனில் மூளை சுறுசுறுப்புடன் இயங்குவதற்கு அதிக அளவில் ஆற்றல் தேவைப்படுகிறது. பிறக்கும் குழந்தையின் மூளை எடை சுமார் 340 கிராம் இருக்கும். மழலை பருவத்தில் இருந்து இளமை பருவத்திற்குள்ளாக மூளையின் எடை 3 மடங்காக அதிகரிக்கும்.

    ஒவ்வொருவருக்கும் மூளையின் அளவு வேறுபட்டிருக்கும். மூளை அளவு அதிகமாக இருப்பவர்கள் கூடுதல் திறனுடன் செயல்படுவார்கள் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மூளை சுமார் 1.5 கிலோ எடை கொண்டது. மூளையின் வெளிப்பரப்பு அடர்த்தியான சாம்பல் நிறத்திலும், உள்ளே மஞ்சள், வெள்ளை நிறத்திலும் காணப்படுகிறது.

    மனித மூளையில் சுமார் 100 பில்லியன் நியூரான் செல்கள் உள்ளன. நரம்பு மண்டலத்தில் உள்ள நியூரான்கள் உடலின் உணரும் செய்தியை மூளைக்கு வேதிசமிக்ஞைகளாக கொண்டு செல்கின்றன. இதன் மூலம் மூளை அடுத்தபடியான செயல்பாட்டினை உடலுக்கு கட்டளையிடுகிறது. நினைவில் வைத்திருக்க வேண்டிய தகவல்கள், அன்றாட செயல்கள் போன்றவற்றை மூளையில் இருக்கும் செல்கள் சேமித்து வைத்து கொள்கின்றன.

    மூச்சு விடுதல், செரிமானம், இதயத்துடிப்பு, கொட்டாவி போன்ற இயல்பான செயல்களையும், சிந்தித்தல், புரிந்து கொள்ளுதல் போன்ற சிக்கலான உயர்நிலை செயல்களையும் மூளை கட்டுப்படுத்துகிறது. மற்ற உயிரினங்களை விடவும் இத்தகைய சிக்கலான உயர்நிலை இயக்கங்களை மனித மூளையே சிறப்பாக செய்கிறது.

    மனித மூளையில் திரவ பொருட்கள் 80 சதவீத அளவிற்கு இருப்பதால் மூளை மிகவும் மென்மையானதாக அமைந்துள்ளது. மேலும் பகல் நேரத்தை விட இரவு நேரங்களில் தான் மூளை அதிக சுறுசுறுப்பாகவும், கூடுதல் சிந்தனை திறன் உடையதாகவும் செயல்படுகிறது. உடலில் உள்ள மொத்த ரத்தத்தில் 20 சதவீதம் மூளைக்கு மட்டும் பயன்படுகிறது. மனிதன் சுவாசிக்கும் ஆக்சிஜனில் 20 சதவீதத்தை மூளை தனது செயல்பாட்டிற்காக பயன்படுத்திக் கொள்கிறது. மூளையை சுற்றி தடிப்பாக மண்டை ஓடு எலும்புகள் உள்ளன. இவை ஆபத்துகாலத்தில் மூளையை சேதத்தில் இருந்து பாதுகாக்கின்றன. மேலும் தலை பகுதியில் ஏற்படும் அதிர்வுகளை முதுகு தண்டு நீர்மம் என்னும் நீர்ம பொருள் ஈர்த்து கொள்கின்றன. இதனால் மனித மூளை பாதுகாப்பாக செயல்படுகிறது.
    ‘காலை எழுந்ததும் படுக்கையைவிட்டு, தரையில் காலை வைக்கவே முடியலை, குதிகால்வலி உயிர் போகுது’ என்று நிறைய பெண்கள் சொல்ல கேள்விப்பட்டிருப்போம். இதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
    ‘காலை எழுந்ததும் படுக்கையைவிட்டு, தரையில் காலை வைக்கவே முடியலை, குதிகால்வலி உயிர் போகுது’ என்று நிறைய பெண்கள் சொல்ல கேள்விப்பட்டிருப்போம். சரியாக நடக்க ஒரு அரை மணி நேரமாவது ஆகிவிடும். இது பொதுவாக பெண்கள் மட்டுமே சொல்லும் புகார். அது ஏன் பெண்களுக்கு மட்டும் இந்த குதிகால் வலி வருகிறது?

    ‘‘குதிகாலில் வரும் இந்த வலியை Plantar fasciitis என்று சொல்வோம். அதாவது, பாதத்தின் அடிப்பகுதியில் குதிகால் எலும்பையும், கால்விரல்களையும் இணைக்கும் Plantar fascia எனப்படும் தடிமனான திசுநார்ப்பகுதி வீக்கமடைவதால் இந்த வலி உண்டாகிறது.

    பெண்களைப் பொருத்தவரையில், கர்ப்ப காலத்தில் உடல் எடை கூடுதல், உடல்பருமன் நோய் காரணமாக தீடீரென்று உடல் எடை அதிகரிப்பது, குறிப்பாக வீட்டை பராமரிக்கும் பெண்மணிகள் நீண்ட நேரம் நின்று கொண்டிருப்பது, உடல்பருமன், தைராய்டு நோய்களின் காரணமாக உடல் எடை கூடுவது போன்ற காரணங்களாலும் Plantar fasciitis இவர்களை அதிகம் பாதிக்கிறது.

    அறிகுறிகள்

    முதலில் குதிகால் வலி என்றுதான் வருவார்கள். அதற்குப்பின்னால் உடலில் இருக்கும் பிற பிரச்னைகள் தெரிய வரும். பெரும்பாலும் காலையில் எடுத்து வைக்கும் முதல் அடியில் இந்த குத்தல் வலி ஏற்படும். நடக்க, நடக்க வலி குறைந்து போனாலும், நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தாலோ, நீண்ட நேரம் உட்கார்ந்துவிட்டு எழுந்து நின்றாலோ திரும்பவும் வலிக்க ஆரம்பித்துவிடும். அவர்களுக்கே தெரியாமல் இடது பக்கமாக சாய்ந்து நடக்க ஆரம்பிப்பார்கள். போகப்போக இரண்டு பக்கமுமே பாதிப்படையும். பாதத்தில் வலி இருப்பதால், நடப்பதை தவிர்ப்பார்கள். இதனால், எடைகூடி வலி அதிகரிக்கும்.

    சிகிச்சை

    Plantar fasciitis பிரச்னைக்கு சிகிச்சை காலுக்கு பயிற்சி கொடுப்பதுதான். படுக்கையைவிட்டு எழுந்திருக்கும் முன்னால் பாதங்களை நன்றாக மசாஜ் செய்யலாம். ஒரு கப் தண்ணீரில் உப்பு சேர்த்து காலை அதில் ஊற வைக்கலாம். 2 கப்புகள் எடுத்துக் கொண்டு, ஒன்றில் வெந்நீரும் மற்றொன்றில் குளிர்ந்த நீரும் நிரப்பிக் கொள்ள வேண்டும். முதலில் சுடுநீரில் 1 நிமிடம் வரை வைத்திருந்து, காலை வெளியே எடுத்து நன்கு துடைத்துவிட்டு, பின்னர் குளிர்ந்த நீரில் காலை 1 நிமிடம் வைக்க வேண்டும். இப்படி 5 அல்லது 6 தடவைகள் வரை செய்யலாம். அதிகவலி இருப்பவர்கள், அதிகபட்சமாக 3 நிமிடம் வரையிலும் இரண்டு தண்ணீரிலும் மாற்றி ஊறவைக்கலாம். காலுக்கு ஐஸ் கட்டி ஒத்தடம் கொடுக்கலாம்.

    முன்பெல்லாம் வலியைக் குறைக்க பாதத்தில் ஊசி மூலம் மருந்து செலுத்துவார்கள். அதனால் பக்கவிளைவுகள் அதிகம் என்பதால் இப்போது பயன்படுத்துவதில்லை. அதிக வலி உள்ளவர்கள் மாடிப்படி ஏறுவது மற்றும் நடப்பதை குறைத்துக் கொள்வது, எடை குறைப்பு நடவடிக்கை, நீரிழிவு கட்டுப்பாடு போன்று சின்னச்சின்ன வாழ்வியல் மாற்றங்கள் செய்வதன் மூலம் வலியிலிருந்து விடுபடலாம்.

    இதைத்தவிர, காலணிகளில் மாற்றங்களும் செய்யலாம். கால்விரல்களை பிரிக்கும் ஸ்பிலின்டுகள் (Night Splints) உள்ளன. இரவில் படுக்கும்போது இதை அணிந்து கொள்வதால் தசைநார்களின் இறுக்கத்தை குறைக்கும். மேலும் கால்வலிக்கென்றே Arch வைத்த பிரத்யேகமான காலணிகள் உள்ளன.
    Plantar Fasciitis பிரச்னையைப் பொருத்தவரை மூன்று முக்கிய அம்சங்களை கடைபிடிக்க வேண்டும்.

    செயல்முறை நடவடிக்கைகள், வாழ்வியல் மாற்றங்கள், மற்றும் பிஸியோதெரபி பயிற்சிகள் மூலம் இந்தப் பிரச்னையிலிருந்து விடுபடலாம். இவற்றை 6 மாதங்கள் வரை பின்பற்றி வந்தால் வலி பூரண குணமாகிவிடும். 6 மாதங்களுக்குப்பின்னும் வலி தொடரும் பட்சத்தில் மட்டுமே அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள்
    வாழைப்பழத்தையும், பாலையும் பயன்படுத்தி முகப்பொலிவை தக்கவைத்துக்கொள்ளலாம். வாழைப்பழத்துடன் பால் கலந்து பேஷியல் கிரீம் தயாரிப்பது பற்றி பார்ப்போம்.
    பருவ கால மாற்றங்கள் சருமத்திற்கு தொந்தரவு தரும். சரும வறட்சி, சரும உதிர்வு ஏற்பட்டு அழகு குறையும். அதிலிருந்து நிவாரணம் பெற பெரும்பாலானோர் கிரீம் வகைகளை நாடுவார்கள். வாழைப்பழத்தையும், பாலையும் பயன்படுத்தி முகப்பொலிவை தக்கவைத்துக்கொள்ளலாம். இவை இரண்டுமே சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை அப்புறப்படுத்தி புதுப்பொலிவு ஏற்படுத்தி கொடுக்கும் தன்மை கொண்டவை. வாழைப்பழத்துடன் பால் கலந்து பேஷியல் கிரீம் தயாரிப்பது பற்றி பார்ப்போம்.

    வாழைப்பழத்தை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவேண்டும். அதனை ஒரு கிண்ணத்தில் போட்டு நன்றாக பிசைய வேண்டும். பின்னர் ஒரு டேபிள்ஸ்பூன் பாலை ஊற்றி நன்றாக பிசைய வேண்டும். அதனை கையில் எடுத்து முகம், கழுத்துப் பகுதியில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். பிறகு அவை உலரும் வரை வைத்திருக்க வேண்டும். அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும்.

    இதனை வாரத்திற்கு இரண்டு முறை முகத்தில் தடவி வரலாம். தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால் சருமம் பளிச்சென்று மின்னும்.
    ×