search icon
என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    ‘இன்வெர்ட்டர்’ பராமரிப்பில் கவனம் செலுத்துவது அவசியம். அதற்கான பராமரிப்புகள் பற்றி வல்லுனர்கள் குறிப்பிடும் தகவல்களை இங்கே காணலாம்.
    மின்வெட்டு காரணமாக குடியிருப்புகளின் ஏற்படும் மின்சார தேவையை பூர்த்தி செய்வதில் இன்வெர்ட்டர்கள் பயன்படுகின்றன. அவை தாமாக இயங்குபவை என்பதால், மின்சாரம் தடைபட்டவுடன் இயங்க ஆரம்பித்துவிடும். மின்சாரம் வந்ததும் அதன் இயக்கம் தானாகவே நின்றும் விடும். இன்வெர்ட்டரில் சார்ஜ் குறைந்துவிட்டால், அளிக்கப்பட்ட மின்சார இணைப்பு வழியாக அதுவாகவே ‘சார்ஜ்’ செய்து கொள்ளும். அதனால் ‘இன்வெர்ட்டர்’ மற்றும் பேட்டரி ஆகிய இரண்டையுமே மின்சார இணைப்பில் வைத்திருக்க வேண்டும்.

    ‘இன்வெர்ட்டர்’ மூலம் வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் கணினி போன்ற சாதனங்கள் தேவையான மின்சாரத்தை பெற்றுக்கொள்கின்றன. அதுபோன்ற சமயங்களில் தகுந்த அளவு மின்சார சப்ளை இருந்தால்தான் வீட்டு உபகரணங்களில் பழுது ஏற்படாமல் பாதுகாக்கப்படும். அதன் அடிப்படையில் ‘இன்வெர்ட்டர்’ பராமரிப்பில் கவனம் செலுத்துவது அவசியம். அதற்கான பராமரிப்புகள் பற்றி வல்லுனர்கள் குறிப்பிடும் தகவல்களை இங்கே காணலாம்.

    * ‘இன்வெர்ட்டரை’ எப்போதுமே உயரமான ‘லாப்ட்’ அல்லது அலமாரி மேல் வைப்பதுதான் பாதுகாப்பானது. அப்போதுதான் குழந்தைகளுக்கு எட்டாத வகையில் இருக்கும். ‘இன்வெர்ட்டரை’ கீழே வைக்க வேன்டிய நிலையில் ஈரப்பதம் இல்லாமலும், தண்ணீர் படாத இடத்திலும் வைக்கப்படுவதுடன் குழந்தைகள் அணுகாத இடமாகவும் இருக்க வேண்டும்.

    * மின்சாரம் தட்டுப்பாடு இல்லாமல் தொடர்ச்சியாக இருக்கும் நிலையில் மாதத்தில் ஒரு நாள் முற்றிலும் ‘இன்வெர்ட்டர்’ மின்சாரத்தை பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் அதன் செயல்திறன் குறையாமல் இருக்கும்.

    * ‘இன்வெர்ட்டர்’ பேட்டரி டிஸ்டில்டு வாட்டர் (Battery distilled Water) எப்போதும் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும், ‘இன்வெர்ட்டர் சார்ஜ்’ ஆகும் நிலையில் அதன் மின் இணைப்பைத் துண்டிப்பது கூடாது. குறிப்பாக, சார்ஜ் ஆகிக்கொண்டிருக்கும் பேட்டரியை கழற்றுவதும் தவறானது.

    * இன்வெர்ட்டர் பேட்டரிகளில் உள்ள ‘டியூப்ளர்’ (Tubular battery) மற்றும் ‘பிளாட்’ (Flat Battery) ஆகிய இரு வகைகளில் ‘டியூப்ளர் பேட்டரி’ வகை பல இடங்களில் பயன்பாட்டில் இருந்து வருவதாக அறியப்பட்டுள்ளது.

    * வெப்பநிலை அதிகமாக உள்ள இடம், கியாஸ் ஸ்டவ் வைக்கப்பட்டுள்ள பகுதி, நெருப்பு பயன்படும் இடங்கள், மண்ணெண்ணெய் உள்ளிட்ட எரிபொருள்கள், மெழுகுவர்த்தி ஆகியவற்றைப் பயன்படுத்தும் இடங்களுக்கு அருகாமையில் ‘இன்வெர்ட்டர்’ வைப்பதை முற்றிலும் தவிர்ப்பது அவசியம்.

    * ‘சார்ஜ்’ செய்யும்பொழுது ‘இன்வெர்ட்டருக்கு’ அனுமதிக்கப்பட்ட வேகத்தை விடவும் ( Permissible speed) கூடுதலான வேகத்துடன் ‘சார்ஜ்’ செய்வது கூடாது. விரைவாக ‘சார்ஜ்’ செய்யப்பட வேண்டும் என்று நினைத்து வேகத்தை அதிகரிப்பதன் காரணமாக அவை விரைவில் பழுதடையும் வாய்ப்பு உண்டு.

    * தொடர்ந்து பல நாட்கள் ‘இன்வெர்ட்டரை’ பயன்படுத்தாத சூழலில், நேராக நிறுத்தி வைக்கவேண்டும். அவற்றில் தூசி, குப்பை ஆகியவை படியாமலும், காற்றோட்டமான இடத்திலும் வைக்கவேண்டும்.

    * தூசிகளிலிருந்து பாதுகாக்கும் வகையில் இயங்கிக்கொண்டிருக்கும் ‘இன்வெர்ட்டர்’ மீது துணிகள் மற்றும் ‘ஷீட்’ போன்றவற்றை போட்டு மூடி வைப்பது கூடாது. வாங்கிய புதிதில் ‘இன்வெர்ட்டரின்’ மீது தூசிகள் படியாமல் இருக்க சிலர் துணி அல்லது அட்டைப் பெட்டிகள் கொண்டு மூடிவைப்பதாக அறியப்பட்டுள்ளது. அது ஆபத்தை விளைவிக்கக்கூடிய செயலாகும்.

    * எப்போதும் ‘ Inverter UPS ’ வாங்கும்போது அதனுடன் கொடுக்கப்படும் Manual Guide விவரங்களில் உள்ள பராமரிப்பு முறைகள் பற்றி படித்து, அதன்படி பராமரிப்புகளை மேற்கொண்டால் நீண்ட நாட்களுக்கு ‘இன்வெர்ட்டர்’ உழைக்கும்.
    சாதம், தோசை, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் மட்டன் நுரையீரல் கிரேவி. இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    ஆட்டு நுரையீரல் - 250 கிராம்
    தக்காளி - 2
    வெங்காயம் - 1
    தயிர் - 2 டீஸ்பூன்
    இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
    மிளகாய்தூள் - 2 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    பச்சை மிளகாய் - 2
    உப்பு - தேவைக்கு
    எண்ணெய் - தேவைக்கு
    திக்கான தேங்காய் முதல் பால் - 1 கப்

    மட்டன் நுரையீரல் கிரேவி

    செய்முறை :

    கொத்தமல்லி, வெங்காயம், தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    நுரையீரலை நன்றாக அலசி சுத்தம் செய்து அதனுடன் 1/2 ஸ்பூன் தயிர், அரை ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, ஒரு ஸ்பூன் மிளகாய் தூள் தேவைக்கு கொஞ்சம் உப்பு சேர்த்து நன்றாக கலந்து 30 நிமிடம் ஊற வைக்கவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் நறுக்கிய தக்காளி தேவைக்கு சிறிது உப்பு மீதியிருக்கும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கவும்.

    பின்பு அதனுடன் ஊற வைத்த நுரையீரல் சேர்த்து நன்றாக பிரட்டிவிட்டு தேவைக்கு சிறிது தண்ணீர் சேர்த்து மூடி போட்டு வேக விடவும்.

    பாதி வெந்த பின்பு அதில் தேங்காய் பால் ஊற்றி வேக வைக்கவும்.

    நுரையீரல் நன்றாக வெந்து எண்ணெய் பிரிந்து வரும் பொழுது அடுப்பினை அணைத்து கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

    சுவையான மட்டன் நுரையீரல் கிரேவி தயார்

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நாம் பலருக்கு பித்தப்பையில் கற்கள் இருப்பதாக தெரிந்து, அதற்கு வைத்தியம் செய்வதை கேட்டோ, பார்த்தோ இருப்போம். அது பற்றிய ஒரு விரிவான கட்டுரை தான் இது.
    நாம் பலருக்கு பித்தப்பையில் கற்கள் இருப்பதாக தெரிந்து, அதற்கு வைத்தியம் செய்வதை கேட்டோ, பார்த்தோ இருப்போம். அது பற்றிய ஒரு விரிவான கட்டுரை.

    கற்கள் எப்படி உருவாகின்றது

    பித்தமானது நமது உணவில் உள்ள கொழுப்பு சத்தை கிரகித்துக் கொள்ள தேவைப்படுகிறது. மேலும் பித்தமானது கழிவுப் பொருட்கள், பித்த தாது உப்புக்கள், வேண்டாத கொலஸ்ட்ரால்களை வெளியேற்ற உதவுகின்றது.

    பித்தமானது கல்லீரலில் உருவாகி, பித்தப்பையில் தேக்கி வைக்கப்பட்டு, தேவைப்படும் போது பித்தக் குழாய் வழியாக சிறுகுடல் சென்று உணவு செரிமானத்திற்கு உதவுகின்றது. தினமும் ஒருவருக்கு சுமார் அரை லிட்டரிலிருந்து ஒரு லிட்டர் வரை பித்தம் சுரக்கின்றது.

    கல் உற்பத்தியாவதற்கு, பித் தத்திலுள்ள கொலஸ்ட்ரால், கால்சியம் உப்புக்கள், தாதுக்களை கரைச்சல் வடிவத்தில் வைக்க பித்தம் தோல்வியடையும் போது கல் உருவாகின்றது. நாம் பித்தக் கற்களை கொலஸ்ட்ரால் கற்கள் என்றும், நிறக்கற்கள் என்றும் வகைப்படுத்துகின்றோம்.

    70-80% கொலஸ்ட்ரால் கற்களாகவும், 20-30% நிறக்கற்களாகவும் இருக்கின்றது. கற்கள் உற்பத்தி ஆகும் முன்பு, சிறு மணல் துகள்கள் போன்று தேக்கமடையும். பித்த உற்பத்தியைவிட கொலஸ்ட்ரால் உற்பத்தி அதிகமாகும்போது, கொலஸ்ட்ரால் கற்கள் உருவாகின்றது. அப்போது கொலஸ்ட்ரால் படிகங்கள் உருவாகி, அப்படிவங்கள் ஒன்றின் மேல் ஒன்று படிந்தோ, இணைந்தோ கற்கள் உருவாகின்றது. நிறக்கற்கள், கால்சியம் உப்புடன் பித்தம், பாஸ்பேட் தாதுக்கள் சேரும்போது உருவாகின்றது. இரத்த சேதம், கல்லீரல் நோய்கள், கிருமிகள் தாக்கத்தினாலும் பித்தக்கற்கள் உருவாகின்றது.

    பித்தக்கற்களினால் வரும் பாதிப்பு:

    பலருக்கு பித்த கற்கள் எந்த தொந்தரவும் தராமல் இருக்கும். சிலருக்கு பித்தம் வரும் குழாய் அடைக்கப்பட்டு வலி உண்டாகலாம். அதனால் பித்தப்பை சுழற்சி, அழுகிப் போகுதல், நுண் கிருமிகள் தொற்றி, வலி, காய்ச்சல், மஞ்சள் காமாலை உருவாகலாம். பித்தக்கற்கள் நகர்ந்து பித்தக்குழாய் அடைப்பு, கணையம் சுழற்சி, குடல் தேக்கம், பித்தப்பை புற்று நோய்கள் உருவாகலாம்.

    எந்த தொந்தரவும் தராத கற்கள் உள்ளவர்களில் ஆண் டொன்றில் 1-2% நோயாளி களுக்கு தொந்தரவும், அதற்கான வைத்தியமும் செய்ய நேரிடலாம். அதிக காலம் கற்கள் தொந்தரவு தராமல் இருந்தால், அது தொந்தரவு தர வாய்ப்புக் குறைவு.

    நோய் கண்டறிதல்:

    1.அல்ட்ராசவுண்ட்ஸ்கேன்.

    சுமார் 98% பித்தக் கற்களை இதன் மூலம் கண்டுபிடிக்க இயலும்.

    2. எக்ஸ்ரே

    10-15% பித்தக் கற்களை மட்டுமே கண்டுபிடிக்க இயலும்.

    3. கோலிஸ்ண்டிகிராபி

    இதன் மூலம் பித்தப்பை, பித்தக்குழாய், கல்லீரல் முதலியவற்றின் செயல்பாட்டினை அறிய முடியும்.

    4. சி.டி.ஸ்கேன்

    நோய் அறிகுறிகள்

    1. வயிற்றின் மேல்பகுதியில் வலது பக்கமாக, திருகு வலியாகவும், அந்த வலி வலது தோள், முதுகு போன்ற இடத்திற்கு பரவவும் செய்யலாம்.

    2. மஞ்சள்காமாலை மற்றும் விட்டு விட்டு மஞ்சள் காமாலை.

    3. காய்ச்சல்

    4. வாந்தி

    5. வயிற்றுவலி பொதுவாக கொழுப்பு சத்து நிறைந்த உணவு எடுத்துக் கொண்டால் வரும்.

    பித்தக்கற்களினால் வரும் வலியை நோயாளிகள் நன்கு அறிவர். ஒரு வருடத்தில் எத்தனை தடவை வந்தது என்பது முதல், எவ்வளவு நாள் இருந்தது என்பதை நினைவு கூறும் அளவிற்கு அந்த வலி இருக்கும். வலியானது 1-5 மணி நேரத்திற்கும், பொதுவாக 24 மணி நேரத்திற்குள் வலி குறைந்துவிடும். அவ்வாறு குறையாவிட்டால் பித்தப்பை அழுகும் நிலையில் இருக்கிறது என்பதை அறிய முடியும்.

    6. புளித்த ஏப்பம்

    7. நெஞ்சு கரிப்பு, உப்புசம்.

    வைத்திய முறைகள்:-

    1. கிருமிகளை அழிக்கும் ஆண்டிபயாடிக் மருந்து, 2. படுக்கை ஓய்வு, 3. வலி நிவாரண மருந்துகள், 4. ஆப்பரேஷன்,

    a. லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை, b. திறந்த வகை அறுவை சிகிச்சை, c. எஸ்டோஸ்கோபி முறை

    a .லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சை எனப்படும் சாவி துவார துளை வழியாக பித்தப்பை அகற்றுதல்.

    நன்மைகள்:-

    1. குறைந்த இரத்த சேதம், 2. சிறு தழும்பு, 3. ஆப்பரேஷனுக்கு பின்பு பணிக்கு விரைவாக செல்லுதல், 4. வலி குறைவு, 5.குடல் இறக்கம் போன்ற தையல் விடுவதால் வரக்கூடிய தொந்தரவு குறைவு, 6. கடினமான வேலைகளை வழக்கம் போல் செய்ய முடியும்.

    தீமைகள்:-


    1. சில நேரங்களில் மிகவும் அழுகிய நிலையில் உள்ள பித்தப்பையை இந்த வகை ஆப்பரேஷன் மூலம் அகற்றுவது கடினம். 2. பித்தப்பை புற்று நோய் ஏற்பட்டிருப்பின் இந்த வகை ஆப்பரேஷன் செய்தல் கூடாது. 3. சில நேரங்களில் இரத்தக் கசிவை நிறுத்துவது கடினமாகி, திறந்த வகை ஆபரேஷனுக்கு மாற்றப்பட வேண்டியது ஆகலாம்.

    திறந்த வகை ஆப்பரேஷன் (Open Surgery)

    நன்மைகள்:-

    1. பித்தப்பை புற்று நோய்கள், 2. அதிக இரத்த சேதம் ஏற்பட நேர்தல், 3. அழுகிய நிலையில் உள்ள பித்தப்பை.

    தீமைகள்:-

    1. மிக நீளமான தழும்பு, 2. வேலைக்கு செல்வதற்கு தாமதம், 3. அதிக வலி, 4. மிக கடினமான வேலை செய்தல் சிரமம், 5. குடல் இறக்கம் போன்ற நோய்கள் வர வாய்ப்பு, 6. எண்டோஸ் கோபி மூலம் அகற்றுதல். வாய் வழியாக இந்தக் கருவியை இரப்பை சிறுகுடல், பித்தக்குழாய் வழியாக செலுத்தி பித்தக் குழாய் கற்களை அகற்றுதல்.

    Dr. P.சுப்பிரமணியன் M.S.
    சில நேரங்களில் பெரியவர்கள் அல்லது பெற்றோர்கள் செய்யும் தவறால் குழந்தைகளின் உயிர் போகும் அபாயம் ஏற்படலாம்.
    சில நேரங்களில் பெரியவர்கள் அல்லது பெற்றோர்கள் செய்யும் தவறால் குழந்தைகளின் உயிர் போகும் அபாயம் ஏற்படலாம். அதுபோன்ற தவறுகளில் ஒன்றுதான் குழந்தைகள் வாந்தி எடுக்கும் போது நாம் செய்யும் சிறு சிறு காரியங்கள்.

    குழந்தை வாந்தி எடுத்துக்கொண்டிருக்கும்போது குழந்தைகளின் தலையை நிமிர்த்தி பிடிக்க கூடாது. அவ்வாறு பிடிப்பதனால் வெளியே வரும் வாந்தி மீண்டும் உள்ளே சென்று சுவாச குழாய் அடைப்பட்டு மூச்சித் திணறல் ஏற்பட்டு மரணம் வரை சென்றுவிடும். எனவே குழந்தைகள் வாந்தி எடுத்து முடிக்கும் வரை அவர்களை தொந்தரவு செய்யாதீர்கள்.

    அடுத்து அனைவரும் செய்யும் மிக பெரிய தவறுகளில் ஓன்று வாந்தி எடுக்கும் போது வாயை பொத்துவது. குழந்தை பெட்டில் வாந்தி எடுக்க அல்லது பொது இடத்தில் வாந்தி எடுக்க முயற்சிக்கும்போது அவர்களின் வாயை பொத்தி கழிவறைக்கு இழுத்து செல்வார்கள்.

    இவ்வாறு செய்வதாலும் வாந்தி மீட்டும் உள்ளே சென்று சுவாச குழாய் அடைப்பட்டு மூச்சித் திணறல் ஏற்பட்டு மரணம் வரை சென்றுவிடும். எனவே இதுபோன்ற சமயங்களில் நாம் செய்யும் சிறு சிறு தவறுகளை திருத்திக்கொள்வது மிக முக்கியான ஓன்று.
    கூந்தல் பிரச்சனையில் இருந்து தீர்வு கிடைக்க உணவில் கவனம் செலுத்த வேண்டும். அதேபோல் சில மூலிகைகளை கூந்தல் பிரச்சனைகளை தீர்க்க உபயோகிக்கலாம்.
    உணவில் கீரை, முளைக்கட்டிய பயறு வகைகள், உலர் திராட்சை, பேரிச்சை போன்றவற்றை சேர்த்துக்கொள்ளுங்கள். இரவில் பால் குடிப்பதை மறக்க வேண்டாம்.

    கூந்தலில் அழுக்கு, சிக்கு சேராமல் பார்த்துக் கொள்ளுங்கள், எப்போதும் சுத்தமான நீரிலேயே கூந்தலை கழுவ வேண்டியது அவசியம். குளிர்ந்த அல்லது இளம் சூடான தண்ணீரையே பயன் படுத் துங்கள். டென்சனைக் குறையுங்கள். மகிழ்வோடு இருங்கள். அகத்தின் மகிழ்ச்சி முகத்தில் மட்டுமல்ல முடியிலும் தெரியும்.
    வாசனை திரவியங்கள், பாடி ஸ்பிரே போன்றவைகளைத் தவிருங்கள். அடிக்கடி தலைவலியா? மருத்துவ ஆலோசனை பெறுங்கள். தலைவலியால் முடி உதிர்வது நிச்சயம்.

    புரதமே ஆதாரம்:- முழு புரதத்தால்தான் உருவாகிறது. முடி வளர்வதற்கு அமினோ அமிலங்களும், புரதமும் அவசியம். 90 சதவீதம் முடிகள் வளரும் நிலையில் இருக்கும், 10 சதவீதம் முடிகள் உறங்கிக் கொண்டிருக்கும். ஒய்வு நிலையைக் கடந்த பிறகும், முடிகள் உதிரத் தொடங்கும். புதிதாக முடிகளும் வளரும். அதாவது 50- முதல் 100 முடிகள் வரை உதிர்ந்தால் அது இயல்பு.

    வளர்ச்சியை தரும் வைட்டமின்கள்:- வைட்டமின் (அ) பயோடின் சத்து, செல்களை உற்பத்தி செய் யும் செல்களைப் புதுப்பிக்கும். இதனால் கூந்தல் உதிர்வது தடுக்கப்படுகிறது.

    உணவுகள்:- வேக வைத்த முட்டை, சீஸ், பால், யோகர்ட்.

    வைட்டமின் சி:- முடி வளர்ச்சிக்கு உதவும். இள நரையைப் போக்கும் வறட்சியை நீக்கும்.

    கறிவேப்பிலை:- இதில் மயிர்க்கால்களை வலிமைபடுத்தும் ஏராளமான நுண் ஊட்டச்சத்துக்கள் உள்ளது. மேலும் இது மயிர்கால்கள் நன்கு சுவாசிக்க உதவும். கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் ‘பி’ முடியின் நிறத்தைத் தக்க வைக்க உதவும்.

    மிளகு:- மிளகில் கேப்சைசின் என்னும் முடியின் வளர்ச்சியைத் தூண்டும் சேர்மம் உள்ளது. முக்கிய மாக மிளகு தலைச்சருமத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து, மயிர்கால்களுக்கு தேவையான சத்துக்கள் பெற வழிவகுக்கும்.

    கற்றாழை:- புரோடியோலிடிக் என்னும் நொதி உள்ளது. இது ஸ்கால்ப்பில் உள்ள இறந்த செல்களை புதுப்பிக்கும். மேலும் இது சிறந்த கண்டிஷனர் போன்றும் செயல்படும். அது மட்டுமின்றி கற்றாழை முடியின் வளர்ச்சியை தூண்ட பொடுகைக் குறைக்க, உச்சந்தலை அரிப்பை தடுக்கவும் செய்யும்.

    செம்பருத்தி:- இதில் முழுவதும் ஆன்டி ஆக்ஸிடன்ட் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளது. மண்டை ஓடு மற்றும் மயிர்கால்களின் நலனை காக்கிறது. பொடுகு தொல்லைக்கும் நல்ல முடி வளர்ச்சிக்கும் இது உறுதுணையாக இருக்கிறது.

    ரோஜா இதழ்கள்:- கொதிக்கும் நீரில் ரோஜா இதழ்களை இட்டு கொதிக்க வைத்து ஆர வைத்து அந்த தண்ணீரை தலை அலசுவதற்கு பயன்படுத்தலாம். இது முடி வளர்ச்சியை தூண்டுகிறது முடியை கண்டிஷன் செய்கிறது. முடிக்கு பளபளப்பை தருகிறது. தலையில் ஏதாவது தொற்று, அரிப்பு இருந்தாலும் அது குணமாகும்.

    சூரிய ஜின்சென்ங் வேர்:- இது ஒரு சீன மூலிகையாகும். முக்கியமாக தலை வழுக்கைக்கு உதவுகிறது. முடி உதிர்வை தடுக்கிறது. முடி வளர்ச்சியை தூண்டுகிறது. முடிக்கு தேவையான ஊட்டச்சத்தை தருகிறது. முடிக்கு தயாரிக்கப்படும் டானிக்குகள், எண்ணைகளில் இது பெரும்பாலும் சேர்க்கப்படுகிறது. ஷாம்பூக்களிலும் உண்டு.

    பச்சை தேயிலை:- அதிக ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது. முடி உதிர்வை தடுக்கிறது. இதில் பான்தனால் முடிக்கு வலுவூட்டுகிறது. தலை வழுக் கைக்கு, பலவீனமான கூந்தலுக்கு நல்ல தீர்வாக அமைகிறது.

    குப்பைமேனி:- முடி உதிர்வுக்கும், மயிர்கால்களின் உறுதிக்கும், ரத்த ஓட்டத்திற்கும் முடி உடையாமல் பாதுகாப்பதற்கும் இது ஒரு நல்ல மூலிகையாகும். இதை மாத்திரை வடிவில் எடுத்துக் கொள்ளலாம், அரைத்த பசையினை ஆலிவ் எண்ணையில் இட்டு தலைக்கு பயன்படுத்தலாம்.

    ரோசுமேரி:- 100 வருடங்களுக்கு மேலாக இது முடி உதிர்வதை தடுக்க ஒரு மருந்தாக பயன் படுகிறது. முடி அடர்த்தி குறைதல், வழுக்கை போன்ற பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு. ஆலிவ் எண்ணையில் கலந்து உபயோகித்தால் நல்ல தீர்வு கிடைக்கும். மயிற்கால்களில் படும்படியாக தேய்க்க வேண்டும். இளநரையை போக்கும் சக்தி உண்டு. மேலும் மயிற்கால்களுக்கு நல்ல ஊட்டத்தை தந்து முடி வளர உதவுகிறது.

    புதினா:- இதன் எண்ணெய் பழங்காலத்தி லிருந்து முடி உதிரும் பிரச்சினைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வந்தது என்று சான்றுகள் உள்ளது. முடி வளர்ச்சியை சீர்படுத்துவதுடன் அதன் வளர்ச்சியை தடுக்கும் அத்துனை பிரச்சினைகளையும் தீர்க்கிறது. வேர்கால்களுக்கு அதிகமான ஊட்டத்தை தருகிறது.

    முருங்கை:- முருங்கையில் தையோசயனேட் இருப்பதால் முடிக்கு நல்ல ஊட்டத்தை தருகிறது. முடி வளர்ச்சியை தூண்டுகிறது. இதை எண்ணையாக மயிர்கால்களில் படும்படியாக தடவலாம். அல்லது, தேயிலையாக கொதிக்க வைத்து தலை அலசுவதற்கு பயன்படுத்தலாம்.

    நெல்லிக்காய்:- நெல்லிக்காய் தலைமுடியை உதிராமல் வளரவும், நரை முடி தோன்றுவதை தடுக்கவும் செய்கிறது. இளநரை ஏற்படுவதை முற்றிலுமாக தடுக்கிறது. மேலும் முடியின் வளர்ச்சியை துரிதப்படுத்துகிறது. இது ஒரு நல்ல கண்டிஷ்னராகவும் பயன்படுத்தப்படுகிறது. நெல்லிக்காய் பசையை தலைக்கு ஒரு மாஸ்க் போலவும் பயன்படுத்தலாம்.

    சீயக்காய்-மருதாணி:- இந்த மரத்தின் பட்டை, வேர், இலை கள் முடி வளர்ச்சிக்கானது, உதிர்வை தடுக்கவல்லது, முடிக்கு ஊட்டம் தருவது, பொடுகை தடுக்கவல்லது. உச்சந் தலையை சுத்தப்படுத்துகிறது. இதன் பொடியை தேங்காய் எண்ணெயில் கலந்து உபயோகப்படுத்தலாம். தலைக்கு ஒரு கவசம் போல பயன்படுத்தலாம். முக்கிய மூலிகையாக முடி வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படுகிறது.

    மருதாணி முடிக்கு நல்ல நிறத்தை தருகிறது, முடியின் ஆரோக்கியத்தை காக்கிறது. கிருமி நாசினி, எதிர்பாக்டீரியாவாக செயல்படுகிறது. தலையில் உள்ள அதிக எண்ணையை நீக்குகிறது, இலைகளை பொடி செய்து, இதன் பொடியை தண்ணீரில் கலந்து பசை போன்று தலைமுடிக்கு தடவினால் அது நல்ல குளிர்ச்சியை தருகிறது, முடி வளர உதவுகிறது. முடியை நன்றாக கண்டிஷன் செய்கிறது.
    பேபி கான், காளானில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று இது இரண்டையும் சேர்த்து சத்தான சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    காளான் - 20,
    காய்கறி வேக வைத்த தண்ணீர்  - 2 கப்,
    மெலிதாக நறுக்கிய பேபி கார்ன் - 1 கப், 
    வெங்காயம் - 1,
    பூண்டு -  6 பல்,
    பொடியாக நறுக்கிய செலரி -  கால் கப்,
    உப்பு - தேவைக்கு,
    மிளகுத்தூள் - சிறிது,
    சில்லி சாஸ் - கால் டீஸ்பூன்,
    சோயா சாஸ் - 4 துளிகள்,
    கறிவேப்பிலை - சிறிது,
    எண்ணெய் -  தேவைக்கேற்ப.

    மஷ்ரூம் பேபி கான் சூப்

    செய்முறை :

    காளானை மெல்லிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், பூண்டை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் காளான், பேபி கார்ன் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் காய்கறி வேக வைத்த தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும்.

    நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் சோயா சாஸ், சில்லி சாஸ், கறிவேப்பிலை சேர்க்கவும்.

    அடுத்து அதில் உப்பு, மிளகுத்தூள் சேர்க்கவும்.

    கடைசியாக செலரி இலையை தூவிப் பரிமாறவும்.

    சத்தான மஷ்ரூம் பேபி கான் சூப் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கூடிய எடையைக் குறைப்பதற்காக நீங்கள் உடற்பயிற்சி செய்ய விரும்பினால் பிரசவத்திற்குப் பின் ஒரு 6 வார காலம் கழித்து ஆரம்பியுங்கள்.
    பிரசவத்திற்குப் பின் உங்கள் உடல் மறுசீரமைப்பிற்கு சில காலம் எடுத்துக்கொள்கிறது. பொதுவாக பெண்களைப் பொறுத்த வரை பிரசவதிற்குப் பின் 6 முதல் 20 கிலோ வரை உடல் எடை கூடுகிறது. கூடிய எடையைக் குறைப்பதற்காக நீங்கள் உடற்பயிற்சி செய்ய விரும்பினால் பிரசவத்திற்குப் பின் ஒரு 6 வார காலம் கழித்து ஆரம்பியுங்கள். நீங்கள் பாலூட்டும் தாயானால் ஒரு மருத்துவரின் ஆலோசனையின் படி இரண்டு மாதம் கழித்துத் துவங்குங்கள். தாய்ப்பால் ஊட்டும் சமயம் அதிக கலோரி உடலுக்குத்தேவைப்படுவதால் அப்போது உணவு கட்டுப்பாடு என்பது கூடாது. பழைய நிலமைக்கு உங்கள் உடல் எடையைக் கொண்டுவர விரும்பினால் நிதானமாகவும்,சீரகவும் செயல்படுங்கள்.

    எடை குறைப்பு:

    சிறிய மற்றும் எளிய உடற்பயிற்சிகள் தினமும் உடற்பயிற்சி செய்வது உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. அவசரப்பட்டு அளவுக்கதிகமாக உடற்பயிற்சி செய்து அசெளகரியப்படாதீர்கள். உங்களுக்கு பிரசவம் எளிதாக நடக்கவேண்டும் என்பதற்காக நமது உடலில் ரிலாக்சின் எங்கின்ற ஒரு ஹார்மோன் சுரக்கிறது. இது எதற்கு தெரியுமா? இந்த சுரப்பு ஹார்மோன் உங்கள் உடலில் உள்ள தசைநார்களையும்,தசைகளையும் மிருதுவாக்கி விடுகிறது. வயிற்றுத்தசைகள் பிரசவத்தின் போது சற்று வலுவிழந்து காணப்படும் அவை வலுப்பெறும் வரை ஒரு வருடம் வரை உங்கள் உடற்பயிற்சி செய்கையில் சிறிது கடினமாக இருப்பதாக உணரலாம்.

    கீழ்க்கண்ட எளிதான உடற்பயிற்சிகளைத் தொடங்கலாம்:

    1.இடுப்பை வலுப்படுத்தும் பயிற்சி – pelvic floor exercises

    2.வயிற்றை வலுவாக்கும் பயிற்சி – gentle stomach clenching exercises

    3.குழந்தையை நடைவண்டியில் வைத்துக்கொண்டு நடத்தல் பயிற்சி

    பிரசவத்திற்குப் பின் உடல் வலுப்பெற்ற பிறகு, கலோரிகளை எரிப்பதற்கு சில உடற்பயிற்சிகளைச் செய்யவேண்டும். அதற்கு ஒரு வாரத்தில்மூன்று முறை உங்கள் இதயத் துடிப்பு அதிகரிக்கும் விதமாக 20 – 30 நிமிடம் உடற்பயிற்சி செய்யவேண்டும்.

    1.விறுவிறு நடைப்பயிற்சி

    2. pilates,

    3.யோகா

    4.நீச்சல் பயிற்சி

    5.(சைக்கிள்) மிதிவண்டி ஓட்டுதல்

    6.உடற்பயிற்சி கூடங்களுக்கு சென்று பயிற்சி செய்தல்.

    உணவு முறைகள்:

    பிரசவத்திற்குப் பிறகு உடனடியாக உணவுக் கட்டுப்பாடு என்பது அவ்வளவு உசிதமானது அல்ல. ஏனெனில் பெண்கள் தங்கள் உடம்பைப் பேணுவதற்கு ஒரு நாளைக்கு 1200 கலோரி தேவை. உடலில் சக்த்தியைப் பேணுவதற்கு 1500 - 2200 கலோரி தேவை. அதிலும் பாலூட்டும் தாய் என்றால் 1800 கலோரிகள் அவசியம் தேவை.

    தடாலடியான உடல் எடை குறைப்பு உங்கள் பால் சுரப்பைக் குறைப்பதுடன், உடல் கொழுப்புகளில் உள்ள நச்சுத்தன்மையை குருதியிலும்,தாய்ப்பாலிலும் கலந்து விடக்கூடும். ஆரோக்கியமான எடை குறைப்பு என்பது ஒரு வாரத்திற்கு 0.450 கிராம் முதல் 0.680 கிராம் வரை இருத்தல் நலம். இதற்கு இணையாக 500 கலோரி உணவுகளை குறைத்தோ அல்லது அந்த அளவு கலோரிகளை எரித்தோ செயல்படவேண்டும். முதல் முறையாக தாயாகி இருக்கும் பெண்கள் ஒரு நாளைக்கு மூன்று முறை உணவு உண்ணுவதை மாற்றி சிறுசிறு பகுதியாகப் பிரித்து 6 முறையாக உண்ணுதல் நலம்.

    சிறுசிறு உணவுகள் என்பது கேரட் துருவல்,சாண்ட்விச்,பழங்கள் மற்றும் பால் சத்து நிறைந்த பானங்கள். காலை உணவினை எக்காரணத்தை கொண்டும் கைவிடாதீர்கள். பிரசவத்திற்குப் பின் கொழுப்பு குறைந்தபால்,மற்றும் பால் பொருட்கள், கோதுமை ரொட்டிகள்,தானியங்கள், குறைந்த கொழுப்பும் அதிக நார்ச்சத்து கொண்ட காய்கறிகள்,பழங்கள்,வெள்ளை இறைச்சி,மீன் போன்றவைகள் உடல் எடையைக் குறைப்பதாக உணவுத் துறை வல்லுனர்கள் ஆய்வுகள் வலியுறுத்துகின்றன.

    மாவுச்சத்திலும், புரத்த்திலும் இருப்பதை விட அத்க அளவு கலோரிகள் கொழுப்பில் உள்ளது. எனவே கொழுப்பினை உணவில் குறைத்துக் கொள்வது உடல் எடை குறைப்பிற்கு நல்ல வழி. ஆனால் உடலுக்கு சிறிய அளவிலான கொழுப்புச் சத்து தேவை என்பதால் அதனை அடியோடு ஒதுக்கிவிடாதீர்கள். நல்ல கொழுப்புகளை (monounsaturated and polyunsaturated fats) சேர்த்துக்கொண்டு கெட்ட கொழுப்புகளை (saturated and trans fats) விலக்குங்கள். இனிப்புச் சுவையூட்டப்பட்ட குளிர்பானங்கள்,மது வகைகள்,காஃபி இவற்றில் கலோரிச் சத்துக்கள் மறைந்து இருக்கும் ஆகவே அவற்றைத் தவிர்த்து நிறைய தண்ணீர் பருகுங்கள்.
    இரு சக்கர வாகனங்களில் அதிக நேரம் பயணம் செய்கிறவர்களும், அதிகநேரம் உட்கார்ந்தே வேலை செய்பவர்களும் கழுத்து வலியினால் அவதிப்படுகிறார்கள். இவைகளெல்லாம் வராமல் தடுக்க கழுத்துத் தசைகளுக்குரிய பயிற்சிகள் செய்ய வேண்டும்.
    இரு சக்கர வாகனங்களிலும் மூன்று சக்கர வாகனங்களிலும் மேடு பள்ளமாக உள்ள சாலை வழியாக ஒட்டிச் செல்கிறவர்களும், பயணம் செய்கிறவர்களும் கழுத்து வலியினால் அவதிப்படுகிறார்கள். கழுத்துக்குக் காலர் போட்டுக் கொள்கிறார்கள். சிலருக்குக் கழுத்தின் பின்புறத்திலுள்ள Cervical vertebrae Bone-ல் தேய்வு ஏற்படுகிறது. சிலருக்கு Disc லேசாக விலகுகிறது. இதனால் கைகளில் மதமதப்பு ஏற்படலாம், தலைவலி, தலைச்சுற்று ஏற்படலாம். இவைகளெல்லாம் வராமல் தடுக்க கழுத்துத் தசைகளுக்குரிய பயிற்சிகள் செய்ய வேண்டும்.

    Barbell Shrugs:

    இது Trapezius தசைகளுக்கு நல்ல பயிற்சி இந்தத் தசைகள் முதுகின் மேற்புறம் கழுத்தின் இருபுறத்திலும் உள்ள தசைகள். இந்தத் தசைகள் வலுவடைந்தால் கழுத்தும் பலமாக இருக்கும்.ஒரு பார் பெல்லில் தேவையான அளவு எடை வைத்துத் தரையிலிருந்து தூக்கி நிமிர்ந்து நின்றுகொண்டு, இரண்டு தோள்களையும் துரக்கிக் காதைத் தொடமுயற்சி செய்தாற் போல் செய்ய வேண்டும். பின்னர் எடையைத் தொங்கவிட வேண்டும். இதே போல் திருப்பித் திருப்பிச் செய்ய வேண்டும். இதுதான் Barbell Shrugs பயிற்சி பத்து ரெப்படிஷன்களாக 5 செட்டுகள் செய்யலாம்.

    லையிங்ஹெட் ரெய்சஸ் (Lying Head Raises)

    கழுத்தும் தலையும் வெளியில் நீட்டிக் கொண்டிருக்குமாறு போல் ஒரு பெஞ்சில் மல்லாக்காகப் படுத்துக்கொள்ளவும் ஒரு சிறிய எடைப் பிளேட்டை நெற்றியில் வைத்துக் கைகளினால் பிடித்துக் கொள்ளவும். பின்னர்த் தலையை மேலும் கீழும் உயர்த்திப் பயிற்சி செய்யவும்.

    சர்க்குலர் ஹெட்ஸ்ட்ராப் (Circular Head Strap)

    சிறிய பார்பெல் பிளேட் பொருத்தப்பட்ட ஹெட்ஸ்ட் ராப்பைத் தலையில், பிளேட் முன்னே தொங்கும்படி தொங்க விட்டுத் தலையை, முன்னேயும் பின்னோக்கியும், பக்கவாட்டிலும் மெதுவாக அசைத்துப் பயிற்சி செய்ய வேண்டும். இது ஸ்டேர்னோ மாஸ்டாய்ட் (sternomasloid) தசைகளுக்கு நல்ல பயிற்சி.

    உடற்பயிற்சி

    Wrestlers Bridge:

    இந்தப் பயிற்சி மிகவும் கவனமாகச் செய்ய வேண்டும். தேறின எடைப் பயிற்சியாளர்களே இதைச் செய்ய வேண்டும். பாதங்களும், தலையும் தலையிலே ஊன்றியபடி ஒரு பாலம் மாதிரி நின்று ஒருசிறிய பார்பெல் எடையை வைத்துப் பெஞ்ச்பிரஸ் செய்ய வேண்டும் பக்கத்தில் உதவிக்கு ஆள் இல்லாமல் செய்யக்கூடாது.

    இதே பயிற்சி எ டையில்லாமல் தோள்களைப் பாலம் வடிவத்தில் தலையையும், பாகங்களையும் ஊன்றிக் கீழே இறக்கியும் ஏற்றியும் செய்யலாம்.

    Forward Bridge:

    பாதங்களை ஊன்றி, முன்னோக்கி வளைந்து, தலையைத் தரையிலே ஊன்றிச் சற்றுத் தலையைச் சற்றுபின்னுக்குப் போய்த் திரும்ப ஆரம்பநிலைக்கு வரவும். இவைகளெல்லாம் மல்யுத்த வீரர்கள் விரும்பிச் செய்யக் கூடிய பயிற்சி.

    Hand Pressure

    (கை அழுத்தப் பயிற்சி) இரண்டு கைகளினால் நெற்றியில் அமுக்கிப் பிடித்துத் தலையைப் பின்னோக்கியும் முன்னோக்கியும் தள்ள வேண்டும்.

    Towel Pressure

    ஒரு டவலைத் தலையைச் சுற்றி ஒரு நண்பர். ஒரு பக்கத்தில் நின்று பிடித்துக் கொள்ள வேண்டும். தலையை மறுபக்கமாக அசைக்க வேண்டும். பின்னர் நண்பர் மறுபக்கத்தில் இருந்து இழுத்துப் பிடிக்க இவர் எதிர்ப்பக்கத்திற்குத் தலையை அசைக்க வேண்டும். இந்தப் பயிற்சியைக் கவனமாகச் செய்ய வேண்டும். வேகமாகவும் கவனக் குறைவாகவும் இருக்கக் கூடாது.  
    நீங்கள் தனிநபர் கடன் பெறுவது என்று முடிவெடுத்தால் எந்தெந்த அடிப்படையான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்
    தனிநபர் கடன் என்ற ‘பெர்சனல் லோன்’ வேண்டுமா? என்று கேட்டு உங்களுக்கு இதுவரை செல்போன் அழைப்பு வரவில்லை என்றால்தான் அதிசயம். அந்த மாதிரி அழைப்பின்போது, அதெல்லாம் வேண்டாம்‘ என்று நீங்கள் பட்டென்று செல்போனை அணைத்திருந்தாலும், சம்மதித்திருக்கலாமோ என்ற லேசான எண்ணமும் உள்ளுக்குள் ஓடியிருக்கலாம். பணத்தேவை இல்லாதவர் யார்? ‘பாதுகாப்பற்ற கடன்’ என்பதால், தனிநபர் கடனுக்கான வட்டி விகிதம் மிகவும் அதிகம்.

    நீங்கள் தனிநபர் கடன் பெறுவது என்று முடிவெடுத்தால் எந்தெந்த அடிப்படையான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்று தெரியுமா?

    முதலாவது, எந்த நிலையில் தனிநபர் கடனுக்குப் போவது? நீங்கள் உங்களுக்குச் சொந்தமான ஒரு வீட்டை, வீட்டுக் கடனுக்கான பிணையாக கொடுத்திருந்தால், மறுபடி அதை வைத்துக்கடன் பெற முடியாது. மாதாந்திரத் தவணையை தவறாது செலுத்த முடியும் என்றால் மட்டுமே தனிநபர் கடனுக்கு முயற்சியுங்கள். இல்லாவிட்டால் நீங்கள் கடன் சுழலுக்குள் சிக்கிக்கொள்வீர்கள்.

    ஓர் அவசரநிலை, அதற்காக உடனடியாக பணம் தேவைப்படுகிறது என்கிறபோது. அந்த மாதிரியான வேலைகளில் நீங்கள் தனிநபர் கடன் குறித்து யோசிக்கலாம். காரணம், இக்கடனுக்கு குறைவான ஆவணங்களை சமர்ப்பித்தால் போதும். ‘பிராசசிங்’ நேரமும் குறைவு. உடனடியாக முடிக்க வேண்டிய அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் தனிநபர் கடனை நாடுவது என்பதில் உறுதியாக இருங்கள். உங்களின் கடைசி வழியாக மட்டுமே இது இருக்க வேண்டும். ஆனால் ‘கிரெடிட் கார்டு’ மூலம் பணம் எடுப்பதற்கு முன்னால் தனிநபர் கடனைப் பற்றி யோசிக்கலாம். சூதாடுவது, சுற்றுலா செல்வது, கார் வாங்குவது போன்றவற்றுக்கு தனிநபர் கடன் பெறுவது உங்களை சிக்கலில் ஆழ்த்திவிடும்.

    தனிநபர் கடன் என்றதும் எல்லோருக்கும் இயல்பாகவே அதிக வட்டி ஞாபகம் வரும். ஆனால் தனிநபர் கடனில் மேலும் பல கட்டணங்களும் மறைந்திருக்கின்றன. அவையும் சேர்ந்ததுதான் தனிநபர் கடன். எனவே, பிற கட்டணங்கள், மறைமுகக் கட்டணங்களை சம்பந்தப்பட்ட வங்கியில் நன்றாக விசாரித்துத் தெரிந்துகொள்ளுங்கள். அதை விடுத்து பின்னர், இவை பற்றியெல்லாம் முன்பே ஏன் தெரிவிக்கவில்லை? என்று வங்கி ஊழியருடன் மல்லுக்கு நிற்காதீர்கள்.

    சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும் கோவக்காய் புளிக்குழம்பு. இன்று இந்த குழம்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோவக்காய்கால் - கால் கிலோ
    வெங்காயம் - 2
    தக்காளி - 1
    புளி - எலுமிச்சையளவு

    வறுத்து அரைக்க:

    காய்ந்த மிளகாய் - 2
    தனியா - 1 டேபிள் ஸ்பூன்
    அரிசி - ஒரு டீஸ்பூன்
    கடலைப்பருப்பு - அரை டேபிள் ஸ்பூன்
    சீரகம் - 1 டீஸ்பூன்
    மிளகு - அரை டீஸ்பூன்
    தேங்காய் துருவல் - 1 கப்
    பொட்டுக்கடலை - அரை டேபிள் ஸ்பூன்

    தாளிக்க:

    எண்ணெய் - தேவைக்கேற்ப
    காய்ந்த மிளகாய் - 2
    பச்சை மிளகாய் - 2
    பூண்டு பல் - 2
    கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி

    கோவக்காய் புளிக்குழம்பு

    செய்முறை :

    கொத்தமல்லி, வெங்காயம், தக்காளி, கோவக்காயை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

    புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வறுத்து அரைக்க வேண்டிய பொருட்கள் எல்லாவற்றையும் வறுத்து ஆறியதும் மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து எடுத்து கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகாய், பூண்டு போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி குழைய வதங்கியதும் அதில் கோவக்காயை சேர்த்து நன்றாக வதக்கவும்.

    கோவக்காய் வதங்கியதும் அதனுடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி காயை வேகவைக்கவும்.

    கோவக்காய் பாதி அளவு வெந்தததும் வறுத்து அரைத்த விழுதை சேர்த்து நன்கு கொதிக்கவிட்ட பிறகு கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீரை வடிகட்டி ஊற்றவும். தேவைக்கு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.

    நன்றாக கொதித்து குழம்பு பதத்திற்கு கெட்டியாகும் போது கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தூக்கத்தில் நடப்பது ஏன் நிகழ்கிறது?, அப்போது அவர்கள் தங்கள் கனவுலகத்தில் நிகழ்வதை நடத்துகிறார்களா அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று அறிந்து கொள்ளலாம்.
    தூங்கும் போது, தூக்கத்தில் புரண்டு படுத்து போர்வையை இழுத்துப் போர்த்திக்கொள்வது சகஜம். ஆனால் சிலர் இதைத் தவிர மேலும் சில செய்கைகள் செய்வர். அதில் ஒன்று தூக்கத்தில் நடப்பது.

    இவ்வாறு தூக்கத்தில் நடப்பவர்களில் சிலர், படுக்கையில் இருந்து எழுந்து படுக்கை அறையை அல்லது வீட்டில் உள்ள அறைகளின் கதவுகளைத் திறந்து வீட்டை வலம் வருவதும் உண்டு. இவர்களை சாதாரண தூக்கத்தில் நடப்பவர்கள் என்று கூறலாம். இதிலும் சில மோசமானவர்கள் உண்டு. இவர்கள் படுக்கையிலிருந்து எழுவது மட்டுமன்றி, உடைகளை சீராக உடுத்தி கார் அல்லது வாகனத்தை இயக்கி சில மைல்கள் தூரம் சென்று திரும்புவார்கள்.

    உண்மையில் சொல்லப்போனால் சில இடங்களில் இம்மாதிரி தூக்கத்தில் நடப்பவர்களால் பல குற்றங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. இந்த குற்றப்பட்டியலில் சாதாரண திருட்டு முதல் கொலை வரை நடந்துள்ளன.

    தூக்கத்தில் நடப்பது ஏன் நிகழ்கிறது?, அப்போது அவர்கள் தங்கள் கனவுலகத்தில் நிகழ்வதை நடத்துகிறார்களா அல்லது வேறு ஏதாவது காரணமா?

    தூக்கத்தில் நடப்பது என்பது, ஒரு மனிதன் ஆழ் தூக்கத்தில் இருக்கும் நிலையில் நிகழ்கிறது. இந்த தூக்கத்தை ஆங்கிலத்தில் NREM Sleep என்பர். அப்போது, நமது மூளையின் அலைகள் மிகவும் மெதுவாக நகர்கின்றன. மேலும், மூளையின் ‘கிரே மேட்டர்’ (Grey matter) பகுதி அமைதியாகவும், செயல்பாடு இன்றியும் காணப்படும்.

    ஒரு நாளின் பகல் பொழுதில் நம் மூளையின் செயல்பாடு ஒரு தேன் கூட்டில் இருக்கும் நிகழ்வு போன்றது. ஆனால் அந்த NREM தூக்க நிலையில் அதே தேனீக்கள் இசைக்கும் வெறும் ரீங்காரமாக, இன்னும் அமைதி நிலையை எட்டாமல் காணப்படும்.

    எனவே, அந்த தூக்க நிலையில் நமது உடல் நகரும் நிலையில் இருக்கும். அப்போது அது தூங்கும் மூளையுடன் ஜோடி சேரும். NREM தூக்க நிலையில் மூளை அமைதியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும். ஆனால் நமக்கு கனவு காணும் நிலைக்கு அழைத்துச்செல்லாது. எனவே தூக்கத்தில் நடப்பவர்கள் கனவுகளால் நடத்தப்படுபவர்கள் என்று எண்ணுவது தவறு.

    இவ்வாறு தூக்கத்தில் நடப்பது, ஆழ்ந்த தூக்கத்தில் ஏற்படும் தூண்டுதல் கோளாறு என்றே விஞ்ஞானிகள் குறிப்பிடுகிறார்கள். தூக்கத்தில் நடப்பது எவ்வாறு நடைபெறுகிறது என்பது விஞ்ஞானிகளுக்கும் புதிராகவே உள்ளது.

    இருப்பினும் ‘காபா’ (GABA- Gamma Amino Butyric Acid) என்னும் ரசாயன செயல்பாட்டினால் இது நடக்கிறது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    ‘காபா’ மூளையின் செயல்பாட்டை இயக்கும் இயந்திர அமைப்பைத் தடுக்கிறது. இது சரியாக செயல்படும் போது ஒருவருக்கு தூக்கம் இயல்பாக நிகழ்கிறது. மேலும், தூக்கத்தில் தசைகளின் இயக்கத்தை அது கட்டுப்படுத்துகிறது.

    குழந்தைகளாக இருக்கும்போது ‘காபா’ வை வெளியேற்றும் நியூரான்கள் வளர்ந்துகொண்டே இருக்கும். ஆனால் முழுவதும் வளர்ந்து மூளையின் செயல்பாட்டை முழுவதும் இயக்கும். ஆனால் அந்த இயந்திர அமைப்பை கட்டுப்படுத்தும் அளவுக்கு வளர்ச்சி பெற்றிருக்காது.

    எனவே குறைவான அளவு உள்ள ‘காபா’ வினால் குழந்தைகள் தூக்க நடைக்கு உள்ளாவது இயல்பு எனக்கூறலாம். ஏனெனில் அந்த இயந்திர அமைப்பு உடம்பை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, தூக்கத்திலும் இயங்க வைக்கும்.

    சில வளர்ந்த நபர்களில் கூட ‘காபா’ சுரத்தல் முழுவதும் இல்லாமல் இருக்கும். இது சில சுற்றுப்புற சூழ் நிலைகளால் கூட நிகழலாம். இதனால்தான் வயோதிகம் ஆனபோதும் தூக்கத்தில் நடப்பது நிறுத்தப்படாமல் நடந்து கொண்டே இருக்கும்.

    ஒருவர் தூக்கத்தில் நடப்பவர் என்றால் அந்த பழக்கம் அவரது மூத்த குடும்ப உறுப்பினர்களால் அவருக்கு அளிக்கப்பட்டதாக இருக்கும். சில ஆய்வு களின் படி பெற்றோர்களில் ஒருவருக்கு தூக்கத்தில் நடக்கும் பழக்கம் இருந்தால், அவரது குழந்தைக்கு அந்த பாதிப்பு ஏற்பட 45 சதவீதம் வாய்ப்பு உள்ளது. தாய்-தந்தை இருவருக்குமே இந்த பாதிப்பு இருந்தால் அவர்களின் குழந்தைக்கு இந்த பாதிப்பு வர 60 சதவீதம் வாய்ப்பு உண்டு.
    பனிக்காலம் வந்தாலே சருமத்திற்கு என்று சிறிது நேரம் ஒதுக்கி பராமரிக்க வேண்டும். வறண்ட சருமத்திற்கு கிளிசரினை எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.
    பனிக்காலம் வந்தாலே குளிர்காற்றால் சருமத்தில் உள்ள ஈரம் போய் வறண்டு சருமம் பொலிவிழந்து வெடித்து விகாராமாக காணப்படும். பனிக்காலம் வந்தாலே சருமத்திற்கு என்று சிறிது நேரம் ஒதுக்கி பராமரிக்க வேண்டும். பனி வெடிப்பு தீர பண்டைய காலம் தொட்டே கிளிசரின் பயன்படுத்தி உள்ளார்கள்.

    கிளிசரின் இன்று நேற்றல்ல பண்டைய காலத்தில் இருந்து பெண்களின் அழகு மேம்படுத்த பயன்படுத்தப்பட்டுள்ளது. கிளிசரினை கிளைக்கால் என்றும் அழைக்கப்படுகிறது. கிளிசரின் தாவர மற்றும் விலங்குகளின் கொழுப்பில் இருந்து தயாரிக்கப்படுகிறது. வாசனையில்லாத, இனிப்பு சுவை கொண்ட, பிசுபிசுப்பான நிறமற்ற திரவம் தான் கிளிசரின். ஷாம்பு, க்ரீம்கள், லிப் பாம் போன்ற அனைத்து விதமான அழகுசாதனப் பொருட்களில் கிளிசரின் உள்ளது. கிளிசரினை எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.

    ரோஸ் வாட்டர் எனும் பன்னீர் உடன் கிளிசரினை கலந்து முகம், கை, கால்களில் தடவி வரவும். பனி வெடிப்பு மாறி சருமம் பளபளப்பாக மற்றும் மென்மையாக மாறும்.

    கிளிசரின் சருமத்தின் ph பயன்படுத்துகிறது மேலும் குளிர் காற்று, UV கதிர்களால் சருமத்தில் உள்ள ஈரம் ஆவியாகாமல் பாதுகாக்கிறது. ஆகவே தினசரி கிளிசரின் சருமத்தின் மீது பூசுவது நல்லது தான்.

    சோரியாஸிஸ் மற்றும் எக்ஸிமா போன்ற தோல் வியாதிகள் நீங்க கிளிசரினை தடவி வந்தால் தோல் நோய்களால் பாதிக்கப்பட்ட சருமம் குணமாகிறது.

    சருமத்தில் உள்ள இறந்த செல்கள் கிளிசரின் தடவுவதால் நீங்கும்.
    ×