என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மழைக்காலத்தில் நோய்த் தொற்று அபாயம் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
    • ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதற்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

    தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஓட்டல்களில் ருசிப்பதை விரும்புகிறார்கள். நொறுக்குத் தீனிகள் தொடங்கி, விதவிதமான உணவுகள் வரை, வீட்டை விட வெளியே உண்பது பலருக்கும் பிடிக்கிறது. அதனால்தான் உணவகங்கள், உணவுப் பண்ட கடைகளில் கூட்டம் முண்டியடிக்கிறது.


    ஆனால் இப்படி வெளியில் உண்பது, ஆரோக்கியமான பழக்கம் அல்ல. ருசிக்கு அடிமையாகி நாம் வழக்க மாக்கிக்கொள்ளும் இந்த விஷயம், நன்மையை விட பாதிப்பையே அதிகம் தரும்.

    அதிலும், மழைக்காலத்தில் வெளிப்புற உணவுகளை வாங்கிச் சாப்பிடுவதால் பல சிரமங்களுக்கு உள்ளாக நேரிடலாம். அது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.


    வயிற்றுத் தொற்று

    மழைக்காலத்தில் வயிற்றுத் தொற்றை தவிர்க்க வெளிப்புற உணவுகளை வாங்கி சாப்பிடுவதை குறையுங்கள். ஏனெனில் தெருவோர உணவுகளில் சுகாதாரக் கேடுகள் அதிகமாக இருக்கலாம். அத்தகைய உணவகங்களில் பயன்படுத்தும் சுகாதாரமற்ற நீர் உள்ளிட்டவற்றில் பாக்டீரியாக்கள் போன்ற தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகள் இருக்கலாம்.

    எனவே அவை, சமைக்கப்படும் உணவுகளில் தங்கிவிடும். எனவே இந்த உணவுகளை சாப்பிடும்போது நுண்ணுயிரிகள் வயிற்றுக்குள் சென்று வயிற்றுத் தொற்றை ஏற்படுத்தும்.


    குடிநீர்

    மழைக்காலத்தில் தண்ணீரால் நோய்த் தொற்று அபாயம் ஏற்படும் வாய்ப்பு அதிகம். அசுத்தமான நீரை குடிப்பதும், அசுத்தமான நீரில் சமைத்த உணவை சாப்பிடுவதும் தான் இதற்கு முக்கிய காரணம் ஆகும். எனவே வெளிப்புற கடை களில் கொடுக்கும் தண்ணீரை குடிக்க வேண்டாம். ஏனெனில் அவர்கள் தண்ணீரை சரியாக பாதுகாப்பது கிடையாது. பொதுவாக மழைக்காலத்தில், சூடான நீரை குடிப்பது நல்லது.


    கொழுப்பு-கலோரிகள்

    தெருவோர உணவுகளில் கொழுப்பு மற்றும் கலோரிகள் அதிகமாகவே இருக்கும். நீங்கள் இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிட்டால் ஒரு நாளைக்கு எவ்வளவு கொழுப்பு. கலோரிகள் சேரும் என்று உங்களுக்கு தெரியாது. இதன் விளைவாக உங்களது உடல் எடை அதிகரிக்கும். பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.


    அரைகுறையாக சமைத்த உணவு

    வெளிப்புற உணவுகள் அரைகுறையாக சமைக்கப் பட்டிருக்கலாம் என்பதால் அது ஆரோக்கியத்தில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். செரிமானப் பிரச்சனை. உணவு நஞ்சாதல் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.


    இரைப்பை, குடல் பிரச்சினை

    மழைக்காலத்தில் வெளிப்புற உணவுகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் இரைப்பை, குடல் பிரச்சனைகள் மாதிரியான அவதிகளுக்கு உள்ளாகலாம். வாந்தி, வயிற்றுவலி, காய்ச்சல், குமட்டல் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும்.

    பொதுவாக மழைக்காலம் மட்டுமல்ல, எக்காலத்திலும் முடிந்த அளவுக்கு வெளியில் வாங்கி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும், ஆசைக்காக, எப்போதாவது, அதிலும் சுகாதாரமாக காணப்படும் இடங்களில் உண்ணலாம்.


    வீட்டில் சமைத்த ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதற்கு முக்கியத்துவம் கொடுங்கள். பிடித்த உணவுகளையும், ருசித்துப் பார்க்க விரும்பும் புதிய உணவுகளையும் அதற்கான மூலப்பொருட்களை வாங்கி வீட்டிலேயே தயாரிக்கலாம்.

    இதனால் நோய்த் தொற்றுகளில் இருந்து பாதுகாப்பு பெறலாம். நமக்கு பிடித்த உணவை நாமே தயாரித்து உண்ட திருப்தியும் கிடைக்கும்.

    • முகத்தில் நிச்சயம் வித்தியாசம் தெரியும்.
    • தேவையற்ற அழுக்குகளை அகற்ற உதவுகிறது.

    பெண்கள் எப்போதும் தங்கள் முகம் அழகாக இருக்க வேண்டும் என்று விரும்புவது மிகவும் இயற்கையானது. இதற்கு பல்வேறு வகையான சோப்புகள் மற்றும் ஃபேஸ் வாஷ் கிரீம்களை சோப்புகள் முகத்தை கழுவும் பழக்கம் உள்ளது.

    இயற்கை அழகுக்கு செயற்கையான சோப்பும் கிரீம்களும் எதற்கு? நமது அழகு கெடாமல் இருக்கவும் அந்த அழகை அதிகரிக்கவும் ஒரு சில இயற்கை பொருட்கள் போதும். செயற்கை பொருட்களை தொடர்ந்து பயன்படுத்த வேண்டாம்.

    தினமும் சோப்பு போட்டு முகத்தை கழுவுவதற்கு பதிலாக இந்த இரண்டு பொருட்களை கொண்டு முகத்தை கழுவுங்கள். வித்தியாசத்தை நன்றாக பார்க்கலாம். இது எளிதான முறையும் கூட. அது என்ன முறை என்பதை குறித்து பார்க்கலாம்.


    தேவையான பொருட்கள்:

    முல்தானி மெட்டி (முல்தானி மண்)

    தக்காளி

    இரண்டு ஸ்பூன் முல்தானி மெட்டி பொடியுடன் 2 டேபிள் ஸ்பூன் தக்காளி பழ விழுது கலந்து பேஸ்ட்டை தயார் செய்யவும். இந்த தயாரிக்கப்பட்ட பேஸ்ட்டை உங்கள் முகத்தில் தடவி 5 நிமிடம் மெதுவாக மசாஜ் செய்யவும்.

    பின்னர் வட்டமாக மசாஜ் செய்வது சிறந்தது. கீழ் பக்கத்திலிருந்து மேல் பக்கமாக மசாஜ் செய்ய வேண்டும். பின் 2 நிமிடம் கழித்து சிறிது காய்ந்ததும் தண்ணீரில் முகத்தை கழுவலாம். சோப்புக்குப் பதிலாக காலையிலும் மாலையிலும் இந்த பேஸ்ட்டைப் பயன்படுத்தி முகத்தைக் கழுவவும்.


    உங்கள் முகத்தில் உள்ள வெள்ளை செல்கள், கருப்பு செல்கள், முகப்பரு போன்ற அனைத்து பிரச்சனைகளும் நீங்கி முகம் பொலிவுடன் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

    இந்த முல்தானி மெட்டி உங்கள் முகத்தில் உள்ள தேவையற்ற எண்ணெய் பசையை கட்டுப்படுத்தும். சருமத்தை மென்மையாக்குகிறது.

    தக்காளி விழுது உங்கள் முகத்தில் உள்ள தேவையற்ற அழுக்குகளை அகற்ற உதவுகிறது. அதுமட்டுமின்றி, இந்த தக்காளி பழ விழுது உங்கள் சரும நிறத்தை அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

    இந்த முறையை தினமும் தொடர்ந்து பயன்படுத்தினால், உங்கள் முகத்தில் நிச்சயம் வித்தியாசம் தெரியும் என்பதில் சந்தேகம் இல்லை.

    • உடலை உற்சாகமாக செயல்பட வைக்கும், மனத்தெளிவை தூண்டும்.
    • இதயநோய் மற்றும் பக்கவாதநோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கும்.

    நடைப்பயிற்சியின் முக்கியத்துவத்தை உணர்ந்து பலரும் அதனை தவறாமல் பின்பற்றுகிறார்கள். அதனை முறையாக மேற்கொள்ளவும், உடல் நலத்திற்கு பயனுள்ளதாக அமையவும் 6-6-6 நடைப்பயிற்சி விதி உதவிடும்.


    காலை 6 மணி, மாலை 6 மணி என 60 நிமிடங்கள் நடப்பதும், 6 நிமிடங்கள் வார்ம் அப் பயிற்சி செய்வதும், 6 நிமிடங்கள் உடலை குளிர்வடையச் செய்வதும்தான் இந்த விதிமுறையின் அடிப்படை. அதனை செய்யும் முறை பற்றியும், அதனால் கிடைக்கும் நன்மைகள் பற்றியும் பார்ப்போம்

    நடைப்பயிற்சி செய்வதாக இருந்தாலும் அதனை தொடங்குவதற்கு முன்பு 'வார்ம்-அப்' பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். கை, கால்களை நீட்டியும், மடக்கியும் செய்யும் இந்த பயிற்சியும், மென்மையான உடல் இயக்கமும் தசைகள் மற்றும் மூட்டு பகுதிகளை தயார் செய்வதற்கு துணைபுரியும்.

    மேலும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும், உடல் வெப்பநிலையையும் கூட்டும். இதய அமைப்புக்கும் இதமளித்து நடைப்பயிற்சியை சுமுகமாக தொடங்க வழிவகைசெய்யும்.

    நடைப்பயிற்சி செய்வதற்கு முன்பு வார்ம் அப் பயிற்சி செய்வது எவ்வளவு முக்கியமோ அதுபோல் நடைப்பயிற்சியை செய்து முடித்ததும் உடலை ஆசுவாசப்படுத்துவதும் முக்கியமானது. இதுவும் வார்ம் அப் பயிற்சி போல்தான்.

    ஆனால் கை, கால்களுக்கு அதிக அழுத்தம் கொடுக்க தேவையில்லை. அவைகளை மென்மையாக அங்கும், இங்கும் அசைத்தும், நீட்டி மடக்கியும், குனிந்து நிமிர்ந்தும் உடலை ஆசுவாசப்படுத்திக் கொள்ளலாம்.

    அப்படி 6 நிமிடங்கள் செய்து வருவது இதயம் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கும், தசைகளின் விறைப்புத்தன்மை குறைவதற்கும் வித்திடும்.

    மறுநாள் நடைப்பயிற்சி தொடங்குவதற்கு உடலை நெகிழ்வாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க உதவும். உடல் வலி ஏற்படுவதற்கான வாய்ப்பையும் குறைக்கும்.

    அதாவது 6-6-6 விதி என்பது ஒரு நாளைக்கு இரண்டு முறை ஒரு மணிநேரம் நடப்பது, பிறகு வார்ம் அப் செய்து உடலை குளிர்விக்கும் பயிற்சி முறையாகும். இதற்கு சிறப்பு உபகரணங்கள் எதுவும் தேவையில்லை. நடைப்பயிற்சி செய்பவர்களுக்கு ஏற்றது. மற்ற பயிற்சியை மேற்கொள்பவர்களும் பின்பற்றலாம்.


    காலை 6 மணி

    தினமும் சராசரியாக 30 நிமிடங்கள் நடப்பது இதய நோய் அபாயத்தை 35 சதவீதம் குறைக்கும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. காலை 6 மணிக்கு நடைப்பயிற்சி செய்வதில் குறிப்பிடத்தக்க நன்மைகள் உள்ளன.

    புதிய காற்றை சுவாசிக்கவும், வளர்சிதை மாற்றத்தை தூண்டவும் அது சிறந்த நேரமாக அமையும். அத்துடன் உடலை உற்சாகமாக செயல்பட வைக்கும், மனத்தெளிவை தூண்டும்.

    அன்றைய நாளை புத்துணர்ச்சியுடன் தொடங்குவதற்கும் வித்திடும். பிற உடற்பயிற்சிகளை செய்வதற்கு போதிய நேரம் கிடைக்காவிட்டாலும் காலையில் சுறுசுறுப்பாக இருப்பதும், நடைப்பயிற்சி செய்வதும் இதயநோய் மற்றும் பக்கவாதநோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கும் என்று ஐரோப்பிய இதயவியல் சங்கம் கூறுகிறது.


    மாலை 6 மணி

    மாலை 6 மணிக்கு நடைப்பயிற்சி செய்வது மனதை அமைதிப்படுத்த உதவிடும். அன்றைய நாளின் வேலைப்பளுவின்போது ஏற்படும் மன அழுத்தத்தில் இருந்து விடுபடவும் வழிவகை செய்யும். அத்துடன் மாலை நேர நடைப்பயிற்சி உடலை தளர்வடைய செய்து நிம்மதியான தூக்கத்திற்கு வித்திடும்.

    அன்றைய நாளில் நடந்த அனைத்தையும் சிந்தித்து பார்ப்பதற்கான நேரமாகவும் மாலை நேர நடை பயிற்சியை மாற்றிக்கொள்ளலாம். மாலையில் வேலை முடிந்து வீடு திரும்பும்போது சிறிது நேரத்தையாவது இந்த நடைப்பயிற்சியை செய்வதற்கு ஒதுக்கலாம். அது முடியாவிட்டால் அலுவலக வளாகத்திலாவது 2 நிமிடங்கள் வேகமாக நடக்கலாம்.


    60 நிமிடம்

    அறுபது நிமிடம் நடைப்பயிற்சி செய்வது உடலில் இருக்கும் கொழுப்பை எரிக்க போதுமான நேரத்தை அளிக்கும். இதய ஆரோக்கியம், நுரையீரல் செயல் திறனை மேம்படுத்தும். உடல் எடையை குறைக்கும் எண்ணத்தில் இருப்பவர்கள், நடைப்பயிற்சியை மட்டுமே தங்கள் வழக்கத்தில் சேர்த்துக் கொள்ளக்கூடியவர்கள் வாரத்தில் 5 முறையாவது குறைந்தபட்சம் 60 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்வதை உறுதி செய்ய வேண்டும்.

    அப்படி தொடர்ந்து 60 நிமிடங்கள் நடப்பது உடலுக்கும், தசைகளுக்கும் பலம் சேர்க்கும். மனதை முழுமையாக மீட்டமைக்கும். அப்படி ஒரு மணிநேரம் நடப்பது உடல் நலனில் அக்கறை கொள்வதற்கு ஏற்ற சூழலை உருவாக்கும். தினமும் நடைப்பயிற்சி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்துவிடும்.

    • ஒரு நாளைக்கு 0.8 கிராம் புரோட்டின் உட்கொள்ள வேண்டும்.
    • தசைகளின் வளர்ச்சி மற்றும் செயல்பாடு மேம்படுகிறது.

    நம் உடலில் உள்ள அனைத்து செல்களும் நன்றாக வளர, தொற்று மற்றும் அழற்சியிலிருந்து குணமடைய, புதுப்பித்து கொள்ள புரோட்டின் மிகவும் இன்றியமையாததாகும். உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள போதுமான அளவு புரோட்டினை உட்கொள்வது அவசியம்.

    ஒரு நாளைக்கு, சராசரியாக ஒரு கிலோ எடைக்கு 0.8 கிராம் புரோட்டின் உட்கொள்ள வேண்டும். உடற்பயிற்சி செய்பவர்கள், விளையாட்டு வீரர்கள் ஆகியோருக்கு சற்று அதிகம் தேவைப்படும்.


    உணவு மூலம் சரியான அளவு புரோட்டின் உட்கொள்ள முடியாதவர்கள் புரோட்டின் பவுடர் எடுத்துக்கொள்ளலாம்.

    புரோட்டின் பவுடர்கள் பொதுவாக 3 வகைப்படும்.

    1) பால் அல்லது பால் பொருட்களில் இருந்து பெறப்படும் லாக்டோஸ்களை கொண்டுள்ள புரோட்டின் பவுடர் (கேசின், வேய்).

    2) தாவர வகைகளில் இருந்து தயாரிக்கப்படும் லாக்டோஸ் இல்லாத புரோட்டின் பவுடர் (சோயா, பட்டாணி, பழுப்பு அரிசி).

    3) முட்டையின் வெள்ளை கருவிலிருக்கும் நீர்ச்சத்து நீக்கப்பட்டு தயாரிக்கப்படும் புரோட்டின் பவுடர்.


    புரோட்டின் பவுடரை தண்ணீரிலோ அல்லது பாலிலோ கலந்து குடிக்கலாம். சர்க்கரை நோயாளிகள் புரோட்டின் பவுடர் உட்கொள்வதால் தசைகளின் வளர்ச்சி மற்றும் செயல்பாடு மேம்படுகிறது.

    மேலும் இது நோய் எதிர்ப்பு திறனை அதிகரித்தும், எலும்புகளை வலுவடையச் செய்தும், வயிறு நிறைவு உணர்வை ஏற்படுத்தி, உண்ணும் அளவை குறைத்தும், ரத்த சர்க்கரையை குறைக்கிறது.


    புரோட்டின் பவுடர் சாப்பிடுவதால் கொலஸ்ட்ரால் அளவு குறைவதாகவும், ஆன்டிஆக்ஸிடன்டஸ் பண்புகளைஅதிகரிப்பதாகவும் பல்வேறு ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளது. இதனை இடை உணவாகவோ அல்லது உடற்பயிற்சிக்கு முன்னரோ பின்னரோ எடுத்து கொள்ளலாம்.

    புரோட்டின் பவுடரை நீங்கள் தினசரி பயன்படுத்துவது தவறல்ல. ஆனால், அதன் ஊட்டச்சத்து விவர சீட்டை நன்றாக சரிப்பார்த்து, ஒரு கரண்டியில் 20 முதல் 30 கிராம் வரை புரதம் இருக்கக்கூடியதாகவும், சர்க்கரை மற்றும் கலோரிகள் குறைவாக உள்ள பவுடரையே தேர்ந்தெடுங்கள்.

    புரோட்டின் பவுடர்களில் காபீன், கிரியாட்டின் போன்ற சேர்க்கை பொருட்களோ அல்லது ஆர்சனிக், ஈயம், காட்மியம் போன்ற அடர் உலோகங்களோ இருந்தால் அவற்றை தவிர்த்தல் நல்லது.

    வேய் புரோட்டின் பவுடர் நுண்ணுயிர் எதிர்ப்பிகள், பாஸ்பனேட்ஸ், லிவோ டோபா போன்ற மருந்துகளின் செயல்பாட்டிற்கு இடைவினைகள் ஏற்படுத்துவதால் மருத்துவரின் அனுமதி பெற்றே இதனை உட்கொள்ள வேண்டும்.

    லாக்டோஸ் ஒவ்வாமை உள்ளவர்கள் மற்றும் சிறுநீரக செயலிழப்பு பாதிப்புள்ளவர்கள் புரோட்டின் பவுடரை தவிர்க்க வேண்டும்.

    • ரத்தத்தில் இரும்புச் சத்து அதிகமாக இருப்பது.
    • ரத்தத்தில் இரும்புச் சத்து அதிகமாக இருப்பது. மனம் மற்றும் உணர்ச்சி மாற்றங்கள்.

    டெஸ்டோஸ்டிரோன் குறைபாடு இரண்டு வகையாக பிரிக்கப்படும்.

    முதல் வகை: இது விதைப்பையில் உள்ள பிரச்சினைகளால் ஏற்படும் டெஸ்டோஸ்டிரோன் குறைபாடு. அவை விதைப்பைக்குள் கீழிறங்காத விதைகள், வழக்கமாக உள்ள எக்ஸ்-ஒய் குரோமோசோம்களுக்கு பதிலாக இரண்டு எக்ஸ் குரோமோசோம்கள் காணப்படும் நிலை.


    விந்தணுக்கள் உற்பத்தி செய்யும் செம்னிபெரஸ் குழல்களில் லீடிக் செல், டூபுலார் செல், செர்டோலை செல்கள் இருக்க வேண்டும். ஆனால் சிலருக்கு செர்டோலை செல்கள் மட்டுமே காணப்படும். லீடிக் செல்கள் தான் டெஸ்டோஸ்டிரோனின் சீரான உற்பத்திக்கு காரணம்.

    சிஸ்டிக் பைப்ரோசிஸ், தட்டம்மை நோயால் விதைகளில் ஏற்படும் தொற்று. விதைகளில் வரும் புற்றுநோய். ரத்தத்தில் இரும்புச் சத்து அதிகமாக இருப்பது.

    இரண்டாம் வகை: ஹைபோதாலமஸ் மற்றும் பிட்யூட்டரி சுரப்பி இவை டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தி செய்ய விதைகளுக்கு சமிக்ஞை செய்யும் மூளையின் பாகங்கள் ஆகும். ஹைபோதாலமஸ் கோனாடோட்ரோபினை வெளியிடும் ஹார்மோனை உருவாக்குகிறது.


    இது பிட்யூட்டரி சுரப்பியில் இருந்து சினைமுட்டை தூண்டுதல் ஹார்மோன் எப்.எஸ்.ஹெச் மற்றும் லுடினைசிங் ஹார்மோன் எல்.ஹெச் உருவாக்க சமிக்ஞை செய்கிறது.

    லுடினைசிங் ஹார்மோன் பின்னர் லீடிக் செல்கள் மூலம் டெஸ்டோஸ்டிரோனை உற்பத்தி செய்ய விதைகளுக்கு சமிக்ஞை செய்கிறது.

    இரண்டாம் வகையில் பிட்யூட்டரி சுரக்கும் ஆண் இனப்பெருக்க ஹார்மோன்கள் குறைபாடு டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைவாக இருப்பதற்கு காரணமாகிறது.


    அறிகுறிகள்:

    தாம்பத்திய உறவில் ஆர்வமில்லாமை, விந்தணு குறைபாடு, முகம் மற்றும் உடலில் முடி வளர்ச்சி குறைவாக இருப்பது, மார்பக திசுக்களின் வளர்ச்சி, எலும்பு நிறை இழப்பு (ஆஸ்டியோபோரோசிஸ்), மனம் மற்றும் உணர்ச்சி மாற்றங்கள்.


    உணவுப் பழக்கவழக்கங்கள்:

    டெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கும் அசைவ உணவுகளில், நாட்டுக்கோழி முட்டை, இறைச்சி வகைகள், ஒமேகா-3 கொழுப்பு நிறைந்த கடல் சிப்பிகள், சூரை மீன், மத்திச்சாளை மீன்கள்.

    பருப்பு வகைகளில் பாதாம், பிஸ்தா, அக்ரூட் பருப்புகள், பூசணி விதைகள். பழங்களில், செவ்வாழை, நேந்திரம், பேரீச்சம் பழம், திராட்சை பழம், பெர்ரி வகைகள், அவகோடா, பலாப்பழம், மாம்பழம், துரியன் பழம், அத்திப்பழம், நாட்டு மாதுளம்பழம்.

    காய்கறிகளில் சின்ன வெங்காயம், பூண்டு, பசலைக்கீரை, தூதுவளை, நறுந்தாளி, முருங்கை, அறுகீரை, தக்காளி, புடலங்காய், அவரை பிஞ்சு, முருங்கை பிஞ்சு, முருங்கை காய், பீன்ஸ், பட்டர் பீன்ஸ், கேரட், சர்க்கரை வள்ளிக் கிழங்கு, உருளைக்கிழங்கு, பனங்கிழங்கு போன்றவை நல்ல பலன் தரும்.

    சித்த மருத்துவம்:

    சாலாமிசிரி லேகியம் 1-2 கிராம் வீதம் காலை, இரவு உணவிற்கு பின்.

    மதன காமேஸ்வர லேகியம் 1-2 கிராம் வீதம் காலை, மாலை இரவு உணவிற்கு பின்.

    நெருஞ்சில் விதை, பூனைக்காலி விதை, நீர்முள்ளி விதை, சாரப்பருப்பு, சாதிக்காய், நிலப்பனைக்கிழங்கு, பூமி சர்க்கரை கிழங்கு, அமுக்கரா கிழங்கு, சதாவரி கிழங்கு இவை சேர்ந்த மருந்துகளை சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்தால் நல்ல பலன் கிடைக்கும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஐஸ்கிரீம் கலோரிகள் நிறைந்தவை. இவை குளிர்காலத்தில் உடலில் ஆற்றல் அளவை பராமரிக்க உதவும்.
    • பால் உள்ளிட்டவை, உடலுக்கு தேவையான தினசரி நீர்ச்சத்தை பூர்த்தி செய்கின்றன.

    குளிர்காலத்தில் ஐஸ்கிரீம் சாப்பிடலாமா? வேண்டாமா? என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழும். ஆனால் குளிர்காலத்தில் ஐஸ்கிரீம் சாப்பிடுவதால் சில நன்மைகளும் உண்டாகின்றன. அது பற்றி தெரிந்து கொள்வோம்.

    1. குளிர் காலத்தில் ஐஸ்கிரீம் சாப்பிடுவது உடலுக்கு இதமாக இருக்கும். குறிப்பாக குளிர் காலநிலையில் மிகவும் வசதியாக உணர வைக்கும்.

    2. ஐஸ்கிரீமின் இனிப்பு சுவை செரோடொனின் போன்ற மகிழ்ச்சி ஹார்மோன்களின் வெளியீட்டை அதிகரித்து, மனநிலையை மேம்படுத்துகிறது.

    3. ஐஸ்கிரீம் கலோரிகள் நிறைந்தவை. இவை குளிர்காலத்தில் உடலில் ஆற்றல் அளவை பராமரிக்க உதவும்.

    4. ஐஸ்கிரீமில் வைட்டமின்கள் ஏ, டி மற்றும் பி12 உள்ளன. இவை குளிர்காலத்தில் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

    5. இதிலுள்ள பால் உள்ளிட்டவை, உடலுக்கு தேவையான தினசரி நீர்ச்சத்தை பூர்த்தி செய்கின்றன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஃபேஸ் மாஸ்க் ஒவ்வொரு முக சருமத்திற்கு ஏற்ப மாறுபடும்.
    • சார்க்கோல் பயன்பாடு சருமத்திற்கு பல்வேறு நன்மைகளை தருகிறது.

    பல வகையான ஃபேஸ் மாஸ்க் ஒவ்வொரு முக சருமத்திற்கு ஏற்ப மாறுபடும். ஆனால் நம்முடைய சருமத்திற்கு எந்த ஃபேஸ் மாஸ்க் நல்ல பலன் அளிக்கும் என்பதை அறிந்து அதனை பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

    நாம் முகத்துக்கு பயன்படுத்தப்படும் சார்க்கோல் என்பது ஆக்டிவேட்டடு சார்க்கோல் ஆகும். ஆக்டிவேட்டடு சார்க்கோல் என்பது கார்பனின் பதப்படுத்தப்பட்ட வடிவம் ஆகும்.

    இது அழகு சாதனப்பொருட்களில் பரவலாக பயன்படுத்தப்படுவதோடு மற்ற துறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. சார்க்கோல் பயன்பாடு சருமத்திற்கு பல்வேறு நன்மைகளை தருகிறது.


    சருமத்தின் துளைகளில் இருக்கும் துகள்களை ஆழமாக சுத்தம் செய்ய இந்த சார்கோல் ஃபேஸ் மாஸ்க், மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    சருமத்தில் இருக்கும் துகள்களால் சருமம் எளிதில் வெடிப்பு, எண்ணெய் பசை போன்றவற்றை உண்டாக்கும். இதை எளிதில் சரிசெய்வதற்கு சார்கோல் ஃபேஸ் மாஸ்க் உதவுகிறது.

    சார்கோல், அடைப்பை சரி செய்து சருமத்தை சுத்தமாக்க உதவுகிறது. இதனால் சருமத்தில் தொற்று முகப்பரு போன்றவை குறைகிறது.

    அதிகப்படியான வியர்வை, திறந்த காயம், அழுக்குப்படிவது மற்றும் முகச்சீர்ப்படுத்தும் கருவிகளை பலரும் பயன்படுத்துவது போன்ற காரணங்களால் சருமத்தில் அழுக்குகள் தேங்கும். அப்போது சார்கோல் பயன்படுத்தினால், நல்ல பலனைத் தரும்.

    ஆக்டிவேட்டட் கரித்தூளில் உள்ள துகள்கள் சருமத்தில் இறந்த சரும செல்களை துடைக்க உதவுகிறது. மேலும் பளிச்சென்ற சருமத்தை அளிக்க உதவுகிறது.


    ஆக்டிவேட்டட் சார்கோல் எண்ணெய் சருமத்துக்கு சிறந்த துணையாக இருக்கும். சருமத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெயை நீக்குவதால் சருமம் வறண்டிருந்தாலும் கூட, சருமத்தின் ஈரப்பதத்தை சமநிலையில் பராமரிக்கவும் இது உதவுகிறது.

    மேலும் இதை ஆலோவேரா உடன் கலந்து பயன்படுத்தலாம். இது சருமத்தில் இருக்கும் நச்சுக்களை நீக்கவும் செய்கிறது. சருமத்தை சுத்தப்படுத்துவது மட்டுமல்லாமல் நீண்ட காலத்துக்கு சீரான பிரகாசத்தையும் கொடுக்க உதவுகிறது. 

    • புரதம் நம் உடலுக்கு மிகவும் முக்கியமானது.
    • புரதம் என்பது அமினோ அமிலங்கள் எனப்படும் சிறிய மூலக்கூறுகளால் ஆனது.

    புரதம் நம் உடலுக்கு மிகவும் முக்கியமானது. தசைகள், தோல், முடி, நகங்கள் போன்ற உடல் பாகங்களின் வளர்ச்சிக்கு இது மிகவும் அவசியம். ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு போதுமான அளவு புரதத்தை உட்கொள்வது முக்கியமானது.

    புரதம் என்பது அமினோ அமிலங்கள் எனப்படும் சிறிய மூலக்கூறுகளால் ஆனது. இந்த அமினோ அமிலங்கள் வெவ்வேறு வரிசைகளில் இணைந்து பல்வேறு வகையான புரதங்களை உருவாக்குகின்றன.


    நம் உடலால் தானாக உற்பத்தி செய்ய முடியாத அமினோ அமிலங்களை அத்தியாவசிய அமினோ அமிலங்கள் என்று அழைக்கிறோம். இந்த அத்தியாவசிய அமினோ அமிலங்களை நாம் உணவின் மூலமாகவே பெற வேண்டும்.

    புரதம் பொதுவாக அனைத்து வகையான உணவுகளிலும் காணப்படுகிறது. ஆனால் சில உணவுகளில் அதிகமாகவும் சில உணவுகளில் மிகவும் குறைந்த அளவிலும் காணப்படுகிறது.

    மேலும் அசைவ உணவுகளில் காணப்படும் புரதம் நிறைவுற்ற புரதம் எனவும் சைவ உணவுகளில் காணப்படும் புரதம் முழுமையற்ற புரதம் இரு வகையாக உள்ளது. இப்போது, நாம் எவ்வளவு புரதத்தை உட்கொள்ள வேண்டும் என்பதை பார்ப்போம்.

    புரதம் உட்கொள்வது நமது உடல் எடை மற்றும் பாலினத்தைப் பொறுத்தது. ஆய்வுகளின்படி, சராசரி வயது வந்தவருக்கு ஒரு உடல் எடையில் புரதம் 0.83 கிராம்/கிலோ ஆகும்.

    இதன் மூலம், 70 கிலோ எடையுள்ள ஒருவர் தினமும் 58 கிராம் புரதத்தை உட்கொள்ள வேண்டும். இது 200 கிராம் கோழியை உட்கொள்வதற்கு சமம்.

    உங்கள் உணவில் தரமான புரதத்தின் அளவை அதிகரிக்க, இறைச்சி, முட்டை, பால் பொருட்கள், மீன், பருப்புகள், விதைகள், பருப்பு வகைகள் மற்றும் கோதுமை, அரிசி அல்லது சோளம் போன்ற தானியங்கள் போன்ற சில முக்கிய உணவு ஆதாரங்களைச் சேர்க்கலாம்.


    உங்கள் உணவில் புரதம் ஏன் முக்கியமானது?

    கலோரி, சர்க்கரை மற்றும் உப்பு நுகர்வு ஆகியவற்றைக் கண்காணிக்கும் போது, போதுமான புரத நுகர்வு உறுதிப்படுத்துவதும் முக்கியம். நமது உடலில் உள்ள ஒவ்வொரு செல்லின் உருவாக்கம் மற்றும் பராமரிப்பிற்கு புரதம் அவசியம், இது செல்லுலார் செயல்பாட்டிற்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது.

    உங்கள் ஒட்டுமொத்த நல்வாழ்வு வழக்கத்தின் ஒரு பகுதியாக செல் ஆரோக்கியத்தை பராமரிக்க தினசரி புரத உட்கொள்ளலை உறுதி செய்வது அவசியம். புரதங்கள் அமினோ அமிலங்களைக் கொண்டிருக்கின்றன, அவை பெரும்பாலும் கட்டுமானத் தொகுதிகள் என குறிப்பிடப்படுகின்றன. ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை ஆதரிக்க கணிசமான அளவு புரதத்தை உட்கொள்வது அவசியம்.

    புரதம், தசை செல்களின் வளர்ச்சி மற்றும் பழுது பார்ப்புக்கு அவசியம். குறிப்பாக, உடற்பயிற்சி செய்பவர்களுக்கு தசை வளர்ச்சியை அதிகரிக்க போதுமான அளவு புரதம் தேவைப்படுகிறது. இது எலும்புகளை வலுப்படுத்தவும், எலும்பு முறிவிலிருந்து பாதுகாக்கவும் உதவும்.

    நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவாக புரதம் மிகவும் முக்கியம். உடலில் உள்ள பல ஹார்மோன்கள் புரதத்தால் ஆனவை. குறிப்பாக, இன்சுலின் போன்ற ஹார்மோன்களின் உற்பத்திக்கு புரதம் அவசியம்.

    • வெதுவெதுப்பான நீர் அருந்துவது ஏராளமான நன்மைகளை உடலுக்கு அளிக்கும்.
    • சளி கட்டிகளால் ஏற்படும் தொண்டை புண்ணை ஆற்றவும் உதவும்.

    மழைக்காலம் தொடங்கியதும் குழந்தைகள் சாதாரண குடிநீருக்கு விடை கொடுத்துவிட்டு வெந்நீர் குடிப்பது நல்லது. ஏனெனில் வெந்நீர் மழைக்கால நோய்களான சளி, இருமல் பிரச்சனை வராமல் தடுக்கும். இயல்பாகவே வெதுவெதுப்பான நீர் அருந்துவது ஏராளமான நன்மைகளை உடலுக்கு அளிக்கும். அவற்றுள் 7 பலன்கள் பற்றி பார்ப்போம்.


    1. தொண்டைக்கு இதமளிக்கும்

    ஒரு கப் சூடான நீரை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலிருந்து வெளிப்படும் நீராவியை மூக்கு துவாரங்கள் வழியாக ஆழமாக உள்ளிழுக்க வேண்டும். பின்பு அந்த நீரை பருக வேண்டும். அப்படி சூடான நீரை உள்ளிழுப்பதும், பருகுவதும் சைனஸ் மற்றும் தொண்டை பகுதிகளை சூழ்ந்திருக்கும் சளி சவ்வுகளுக்கு இதமளிக்கும். அந்த பகுதியை சூடேற்றுவதோடு சளி கட்டிகளால் ஏற்படும் தொண்டை புண்ணை ஆற்றவும் உதவும்.

    தேநீர், வெந்நீர் போன்ற சூடான பானம் மூக்கு ஒழுகுதல், இருமல், தொண்டை வலி, சோர்வு போன்றவற்றுக்கு நிவாரணம் அளிக்கும் என்பதை ஆய்வு முடிவுகளும் உறுதிபடுத்தியுள்ளன.

    2. செரிமானத்திற்கு உதவும்

    வெந்நீர் குடிப்பது செரிமான மண்டல செயல்பாடுகளை ஊக்குவிக்க உதவும். வயிறு மற்றும் குடல் வழியாக வெந்நீர் செல்லும்போது, உடல் கழிவுகளை அகற்றுவதற்கும் துணை புரியும். குறிப்பாக செரிமானமாவதில் சிக்கல் இருந்தால் சூடாக நீர் பருகுவது பலனளிக்கும்.

    அப்படி வெந்நீர் பருகுவது செரிமானத்திற்கு உதவுவதாக உணர்ந்தால் அதனை தொடர்வது எந்த தீங்கும் விளைவிக்காது என்பது ஆய்வுகளின் மூலம் உறுதியும் செய்யப்பட்டிருக்கிறது.


    3. நரம்பு மண்டல செயல்பாட்டை மேம்படுத்தும்

    போதுமான அளவு தண்ணீரோ, வெந்நீரோ, குளிர்ந்த நீரோ பருகாவிட்டால் நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். இறுதியில் மன நிலை மற்றும் மூளை செயல்பாட்டில் பாதிப்பை உண்டாக்கலாம்.

    போதுமான அளவு தண்ணீரோ, வெந்நீரோ பருகுவது நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டையும், மனநிலையையும் மேம்படுத்தும் என்பது ஆய்வுகளிலும் கண்டறியப்பட்டுள்ளது.

    4. மலச்சிக்கலை போக்கும்

    மலச்சிக்கல் ஏற்படுவதற்கு நீரிழப்பும் முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. அதனால் மலச்சிக்கலை போக்குவதற்கு தண்ணீர் சிறந்த வழிமுறையாக இருக்கிறது. உடலில் நீரேற்றத்தை தக்கவைப்பது மலத்தை மென்மையாக்கும்.

    தொடர்ந்து வெந்நீர் பருகுவது குடல் இயக்கங்களை சீராக வைத்துக்கொள்ள உதவும். மலச்சிக்கல் பிரச்சனைக்கு நிவாரணம் தரும்.


    5. நீரேற்றமாக வைத்திருக்கும்

    வெந்நீரோ, தண்ணீரோ அதனை எந்த வெப்பநிலையில் பருகினாலும் உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும். பெண்கள் குறைந்தபட்சம் 2.3 லிட்டர் தண்ணீரும், ஆண்கள் குறைந்தபட்சம் 3.3 லிட்டர் தண்ணீரும் பருக வேண்டும் என்று இன்ஸ்டிடியூட் ஆப் மெடிசின் அமைப்பு பரிந்துரைக்கிறது.

    எல்லா நேரமும் அருந்த முடியாவிட்டாலும் தினமும் காலை பொழுதில் வெந்நீர் அருந்தும் பழக்கத்தை தொடரலாம். உடலின் அனைத்து அத்தியாவசிய செயல்பாடுகளுக்கும் தண்ணீர் மிகவும் தேவை என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

    6. குளிரில் நடுக்கம் குறையும்

    குளிர்ச்சியான சூழலின் போது சூடான திரவங்களை பருகுவது உடல் நடுக்கத்தை குறைக்க உதவும். அந்த சமயத்தில் சூடான நீரை பருகுவது உடல் வெப்பநிலையை பராமரிப்பதற்கும் உதவிடும்.

    குளிர்ச்சியான சூழலில் வேலை செய்பவர்கள், உடற்பயிற்சி செய்பவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என்று ஆய்வு முடிவுகளும் கூறுகின்றன.

    7. ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்

    வெதுவெதுப்பான நீரில் குளியல் போடுவது தமனிகள், நரம்புகளை விரிவடைய செய்து ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். ரத்த அழுத்தம், இதய நோய் அபாயம் ஏற்படுவதை தடுக்கும். வெந்நீர் குடிப்பதும் இதேபோன்ற விளைவை ஏற்படுத்தும்.

    அதிலும் இரவில் சுடு நீரில் குளியல் போடுவதும், வெந்நீர் அருந்துவதும் உடலை ஆசுவாசப்படுத்தி நிம்மதியான உறக்கத்திற்கு தயார்படுத்த உதவும்.


    எப்படி பருகுவது?

    மிகவும் சூடாக இருக்கும் நீரை குடிப்பது உணவுக்குழாயில் உள்ள திசுக்களை சேதப்படுத்தலாம். நாக்கின் சுவை மொட்டுகளையும் பாதிக்கும். அதனால் மிதமான சூட்டில் இருக்க வேண்டும்.

    வெந்நீர் மற்றும் சூடான பானங்களை அருந்தும்போது, 130 முதல் 160 டிகிரி பாரன்ஹீட் வரையே வெப்பநிலை இருக்க வேண்டும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாதவிலக்கு முடியும் நாளில் காப்பர் டி பொருத்தி கொள்ள வேண்டும்.
    • 10 ஆண்டுகள் வரை பயன்படுத்த முடியும்.

    கருத்தடை சாதனங்களில் பல வகைகள் இருந்தாலும் பெண்களுக்கு காப்பர்-டி பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுகிறது.


    இந்த காப்பர்-டி கருப்பையில் வைக்கும் போது இதில் இருக்கும் தாமிர அயனியானது கர்ப்பப்பை வாய் மற்றும் உட்புறம் இருக்கும் திரவத்துடன் கலந்துவிடுகிறது.

    இந்த திரவம் தான் விந்தணுக்களை கருமுட்டையுடன் சேராமல் தடுக்கிறது. இந்த காப்பர் டி சாதனத்தில் இருக்கும் செம்பு விந்தணுக்களை அழிக்கும் திறனை கொண்டிருப்பதால் இவை கருத்தரித்தலை தடுத்துவிடுகிறது.


    மேலும் காப்பர் டி பொருத்திய பிறகு குறிப்பிட்ட இடைவேளைக்கு பிறகு பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

    குழந்தை பிறந்தவுடன் காப்பர் டி பயன்படுத்தினால் பிரசவத்துக்கு பிறகு சுமார் 8 வாரங்கள் காத்திருக்கவும். மாதவிலக்கு முடியும் நாளில் காப்பர் டி பொருத்தி கொள்ள வேண்டும்.

    காப்பர் – டி நன்மைகள்

    காப்பர் – டி காப்பரால் செய்யப்பட்டது. இது நீண்ட காலம் நீடிக்கும். காப்பர் டி ஹார்மோன் அல்லாத பிறப்புக்கட்டுப்பாடு என்பதால் இது உடலில் எத்தகைய மாற்றத்தையும் ஏற்படுத்தாது.

    காப்பர் – டி பயன்படுத்துவதால் உடலில் உள்ள எந்த ஹார்மோன்களையும் பாதிக்காது. கருத்தடை மாத்திரைகளால் உடலில் ஹார்மோன் பிரச்சனை வரும் என்று நினைப்பவர்கள் காப்பர்– டி பயன்படுத்தலாம்.

    விந்து வருவதற்குள் விந்து வரும் இடத்துக்கு வெள்ளை அணுக்கள் முந்திவந்து விந்தணுக்களை செயலிழக்க செய்கிறது.


    இந்த காப்பர் – டி பயன்பாடு உடலில் வெள்ளை அணுக்களை அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது.

    கருத்தடைக்காக உடலுறவில் குறுக்கிடாது. மேலும் இது 10 ஆண்டுகள் வரை பயன்படுத்த முடியும். பலனளிக்கும் என்பதால் நிம்மதியாக பாதுகாப்பாக உணரலாம்.

    பெண்கள் பிரசவத்துக்கு பிறகு தாய்ப்பால் கொடுக்கும் போது இதை பயன்படுத்தலாம். ஹார்மோன் பிறப்பு கட்டுப்பாட்டு முறைகள் தொடர்பான ரத்த உறைவு போன்ற பக்கவிளைவுகளின் அபாயத்தை கொண்டிருக்கவில்லை.


    தீமைகள்

    காப்பர் – டியின் பொதுவான பக்க விளைவுகள் என்றால் ஒழுங்கற்ற மற்றும் அதிக ரத்தப்போக்கு.

    மற்றொரு பக்க விளைவு மாதவிடாய் வலி அதிகரிக்கலாம்.

    குறிப்பாக பிரசவிக்காத பெண்களை விட பிரசவித்த பெண்கள் குறைவான பக்கவிளைவுகளை கொண்டிருக்கிறார்கள்.

    காப்பர் – டி பொருத்தும் போது வலி, செருகிய சில நாட்களுக்கு தசைப்பிடிப்பு மற்றும் முதுகுவலி பெரும்பாலான மக்களுக்கு இந்த பக்கவிளைவுகள் பொதுவாக 3-6 மாதங்களுக்குள் மறைந்துவிடும்.

    • சிறந்த வாழ்க்கை முறையைக் கடைபிடிப்பது மிகவும் அவசியம்.
    • மாத்திரை அல்லது இன்சுலினை தவறாமல் எடுத்தல் நல்லது.

    இக்காலகட்டத்தில் வயதானவர்கள் மட்டுமல்லாது நடுத்தர வயதினரும், இளைஞர்களும் கூட நீரிழிவு நோயால் அதிகம் பாதிப்பு அடைகின்றனர். நீரிழிவு நோயால் புதிதாக கண்டறியப்பட்டவர்களுக்கும் பொதுவாக நடுத்தர வயதினருக்கும் நீரிழிவு நோயை நிர்வகிப்பது ஒரு பெரிய சவாலாக உள்ளது.

    சில சந்தர்ப்பங்களில் ரத்தச் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதால் இன்சுலின் ஊசி பயன்பாடு அவசியமாகிறது. இதனால் அவர்களின் சிகிச்சைக்கான செலவும் அதிகரிக்கின்றது.


    நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைக்காவிடில் தலை முதல் கால் வரை அனைத்து உறுப்புகளும் பாதிப்புக்குள்ளாகும். குறிப்பாக இதயம், கண், நரம்புகள், சிறுநீரகம் மற்றும் கால் பாதிப்பைத் தவிர்ப்பது அவசியம்.

    இந்த ஆண்டு நீரிழிவு தினத்தையொட்டி, உலகளாவிய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் "நீரிழிவு மற்றும் நல்வாழ்வு" என்னும் தலைப்பில் கொண்டாடப்படுகிறது.

    சில எளிய வழிமுறைகளால் நீரிழிவு நோயை சிறப்பாக கட்டுக்குள் வைக்கலாம். அவை அதிக உடல் எடை மற்றும் தொப்பை தவிர்ப்பது , உணவுக்கட்டுப்பாடு அதாவது சர்க்கரை மற்றும் இனிப்பு பண்டங்களைத் தவிர்த்தல், எண்ணெய் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவைத் தவிர்த்தல், மது மற்றும் புகைப்பிடிப்பதைத் தவிர்ப்பது மிகுந்த நன்மைகளை விளைவிக்கும்.

    சிறந்த வாழ்க்கை முறையைக் கடைபிடிப்பது மிகவும் அவசியம், நடைபயிற்சி, எளிய உடற்பயிற்சி, சத்தான உணவுமுறை, மன அழுத்தத்தைத் தவிர்ப்பது, தன்னம்பிக்கை, மன உறுதி, நல்ல உறக்கம் ஆகிய பழக்கவழக்கங்களால் நீழிவு நோயை சிறப்பாக கட்டுக்குள் வைக்கலாம்.


    மேலும், மருத்துவர் கூறும் ஆலோசனைகளை பின்பற்றி மாத்திரை அல்லது இன்சுலினை தவறாமல் எடுத்தல் நல்லது. அதனோடு குடும்பத்தினர் கூறும் அறிவுரைகளையும் கேட்டு நடப்பது அவசியம்.

    குடும்பத்தார், நீரிழிவுக்குறைபாடு உள்ளவர்களின் நலன் கருதி அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

    ஆதலால், நீரிழிவு நோயைக் கண்டு மன வருத்தம் அடைவதை விட வாழ்க்கை முறையை மேம்படுத்தி நீரிழிவு நோயை வென்று ஆரோக்கியமாக நீண்ட ஆயுளோடு வாழ முடியும்.

    • கண்களில் டயாபட்டிக் ரெடினோபதி என்ற பிரச்சனை ஏற்படும்.
    • விழித்திரை நீரிழிவு நோயினால் பாதிப்புக்கு உள்ளாகிறது.

    உடலில் ரத்த சர்க்கரையின் அளவு அதிகமாவதை நீரிழிவு நோய் என்று கூறுகிறோம். 10 முதல் 20 வருடங்களுக்கு முன்பு வரை 10% பேர் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் என்று இருந்த நிலை மாறி இன்று நூற்றுக்கு 20 முதல் 25 பேர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்படுகின்றனர்.


    டயாபடீஸ் மெலிட்டஸ் என்ற இந்த நீரிழிவு நோய் உடலின் முக்கிய பாகங்களான கண்கள், இதயம், ரத்தக் குழாய்கள், கல்லீரல், நுரையீரல், சிறுநீரகம் மற்றும் நரம்புகளை பாதிக்கிறது.

    கட்டுப்படுத்தப்படாத சர்க்கரை நோய் இந்த பாதிப்புகளை நாளடைவில் உடலில் ஏற்படுத்துகிறது. அந்த வகையில் நீரிழிவு நோயினால் பாதிக்கப்படும் ஒன்று டயாபட்டிக் ரெடினோபதி என்ற கண்களில் ஏற்படும் பிரச்சனை ஆகும்.

    நீரிழிவு பாதிப்பினால் விழித்திரை பாதிக்கப்படுவது என்பது 100-ல் 20 பேருக்கு ஏற்படலாம். நாம் ஒரு காட்சியை பார்க்க கருவிழியும் விழித்திரையும் இணைந்து செயல்படுகிறது. கருவிழி மூலம் ஊடுருவும் ஒளி விழித்திரையில் பட்டு பிரதிபலிப்பதையே நாம் காட்சியாக பார்க்கிறோம்.


    இந்த விழித்திரை நீரிழிவு நோயினால் பாதிப்புக்கு உள்ளாகிறது. இந்த விழித்திரை இரண்டு விதங்களில் பாதிக்கப்படுகிறது.

    ஒன்று விழித்திரை படலத்தில் ரத்த கசிவு ஏற்படுவது அதாவது ரெட்டினல் ஹெமரேஜ் என்பதாகும் மற்றொரு பிரச்சனை விழித்திரையில் நீர் கோர்வை ஏற்படுவது, அதாவது மேக்யூலர் எடிமா என்று அழைக்கப்படும் இந்தப் பிரச்சனையும் நீரிழிவினால் கண்களில் ஏற்படலாம். இந்த இரண்டு பிரச்சனைகளாலும் பார்வைத்திறன் குறையலாம்.

    டயாபடிக் ரெட்டினோபதி என்பதில் நான்கு ஸ்டேஜ்கள் உள்ளன இதில் முதல் ஸ்டேஜ் என்பது பார்வை திறன் குறைவு இருக்காது. அறிகுறிகளும் இருக்காது. பொதுவாக கண் மருத்துவரிடம் பரிசோதனை செய்யும் பொழுது இதை மருத்துவர் கண்டுபிடிப்பார்.

    இந்த பிரச்சனை பொதுவாக, நீரிழிவு நோய் மட்டுமல்லாமல் ரத்த உயர் ரத்த அழுத்தம், உயர் இரத்த கொழுப்பு, சிறுநீரக செயல்பாடு பாதிப்பினால் யூரியா கிரியாட்டினைன் போன்றவை அதிகரித்தல், ரத்த சோகை மற்றும் புகை பிடித்தல் போன்ற காரணிகளை நீக்கும் பொழுது அல்லது சரி செய்யும் பொழுது இந்த முதல் ஸ்டேஜ் டயாபடிக் ரெட்டினோபதி சீரமைக்கப்படுகிறது.

    முதல் ஸ்டேஜ் கண்டுபிடிக்கப்படாமல் தொடர்ந்து நீடித்த நீரிழிவு மற்றும் மேல் குறிப்பிட்ட பிரச்சனைகள் தொடரும் பொழுது இரண்டாவது ஸ்டேஜ்க்கு இது செல்கிறது. இந்த நிலையில் ரெடினாவில் ரத்தக் கசிவு இருக்கும் அல்லது நீர் கோர்வை ஏற்படும்.


    இந்த ஸ்டேஜில் லேசான பார்வை குறைபாடு இருக்கலாம். அந்த நேரத்திலும் மேற்குறிப்பிட்ட காரணிகளை சரி செய்ய வேண்டும்.

    மேலும் மேக்யூலர் எடிமா என்ற விழித்திரையில் தேங்கி இருக்கும் நீரை ஊசி மூலம் சிகிச்சை அளித்து, ஸ்டேஜ் டூ ரெட்டினோபதி சீரமைக்கப்படுகிறது.

    இதையும் தாண்டி நீரிழிவு ரத்த அழுத்தம் சிறுநீரக செயல்பாடு குறைந்து இருப்பது போன்ற காரணிகளால் நீரிழிவு கட்டுக்குள் இல்லாத பொழுது டயாபெடிக் ரெட்டினோபதி மூன்றாவது ஸ்டேஜ்க்கு செல்கிறது.

    இந்த நிலையில் விழித்திரையில் அதிக ரத்த கசிவு இருக்கலாம் அல்லது நீர் தேக்கமும் அதிகமாக இருக்கலாம். இந்த நிலையில் பார்வை குறைவு ஏற்படும்.

    விழித்திரையின் சேதத்தை கணிக்க பிளாரசென்ட் ஆஞ்சியோகிராம் என்ற பரிசோதனை செய்ய வேண்டும். இதன் மூலம் ரத்தக் கசிவு எங்கு ஏற்படுகிறது என்பதை கணித்து அந்த இடத்தில் லேசர் மூலம் சிகிச்சை அளிக்க வேண்டும்.

    விழித்திரையில் ஏற்படும் நீர் தேக்கத்திற்கு மாதம் ஒருமுறை ஊசி மூலம் சிகிச்சை அளிக்க வேண்டி இருக்கும். இந்த சிகிச்சை கடந்த காலங்களை விட தற்பொழுது அதிகமான அளவில் பலன் அளிக்கிறது என்றாலும் கூட இதில் பார்வை குறைபாட்டை முழுவதுமாக கொண்டு வர முடியும் என்பதை உறுதியாக கூற முடியாது.

    இந்த மூன்றாவது ஸ்டேஜையும் கடந்து சிகிச்சை அளிக்கப்படாமல், கவனிக்கப்படாமல் இருக்கும் டயாபட்டிக் ரெடினாபதி நான்காவது ஸ்டேஜ் அதாவது என்ட் ஸ்டேஜ் என்ற கடைசி பிரிவுக்கு தள்ளப்படுகிறது.

    இந்த நிலையில் விழித்திரையில் மட்டுமின்றி கண்ணுக்குள் அதிகமான ரத்த கசிவு ஏற்படும். இது விட்ரியஸ் ஹெமரேஜ் என்று அழைக்கப்படுகிறது. கண்ணுக்குள் ரத்தக்கசிவு ஏற்படுவதால் விழித்திரை பிரிந்து விடும் நிலையும் ஏற்படுகிறது. அதாவது ரெடினல் டிடாச்மெண்ட்.

    கண்ணுக்குள் ஊசி மூலம் சிகிச்சையோ லேசர் சிகிச்சையோ அளிக்க முடியாது. இதற்கு அறுவை சிகிச்சை மட்டுமே செய்ய வேண்டி இருக்கும். விட்ரெக்ட்மி என்ற இந்த அறுவை சிகிச்சையை செய்து ரத்த கசிவை அகற்றி விழித்திரையை மீண்டும் இணைக்க செய்வோம். இதெல்லாம் செய்யும்பொழுது ஓரளவிற்கு பார்வை திரும்ப வரலாம்.


    இந்த நிலையில் பார்வை முழுமையாக திரும்ப கொண்டு வர முடியும் என்று உறுதி அளிக்க முடியாது. ஏனென்றால் நீரிழிவு நோயால் சிறிய ரத்த நாளங்கள் அதிக அளவில் பாதிக்கப்படும். விழித்திரையை மீண்டும் இணைத்தாலும் கூட அதற்கு போதுமான அளவிற்கு ரத்த ஓட்டம் கிடைத்து மறுபடியும் இயங்கும் என்பதை உறுதியாக கூற முடியாது.

    எனவே தான் ஸ்டேஜ் ஒன்று மற்றும் இரண்டில் பிரச்சனையை சீரமைத்து விட முடியும். ஆனால் மூன்றாவது மற்றும் நான்காவது பிரிவுகளில் சிகிச்சை பலனளிக்காமலும் போகலாம்.

    எனவே தான் நீரிழிவு நோய் உள்ளவர்கள் கண் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று கூறி முடித்தார்.

    ×