என் மலர்
நீங்கள் தேடியது "டயாபட்டிக் டெர்மோபதி"
- அதிக உடல் எடை உள்ளவர்களுக்கு ஏற்படும்.
- செல்கள் கிளர்வூட்டப்பட்டு தோல் கருமை ஏற்படுகிறது.
உங்கள் உடம்பு கருத்து போவதற்கு காரணம் அகாந்தோசிஸ் நைக்ரிகன்ஸ்' எனப்படும் நோயாகும். இந்நோயில், ஒரு சில நீரிழிவு நோயாளிகளுக்கு குறிப்பாக முகம், நெற்றி, கழுத்து, முழங்கை, இடுப்பு, அக்குள், உடல் மடிப்புகள், முட்டி போன்ற இடங்களில் கருமையான தடிமனான தன்மையுடையதாக தோல் மாறும். இது பெரும்பாலும் 40 வயதை கடந்த டைப் 2 நீரிழிவு நோயாளிகள் மற்றும் அதிக உடல் எடை உள்ளவர்களுக்கு ஏற்படும்.
இது ஏற்படக் காரணம் ஒரு சில நீரிழிவு நோயாளிகளிடம் காணப்படும் இன்சுலின் எதிர்மறை நிலையால், இன்சுலின் அளவு மற்றும் இன்சுலின் போன்ற வளர்ச்சி காரணிகள் அதிகரிப்பதால், கெரட்டினோசைட் மற்றும் பைபிரோபிலாஸ்ட் போன்ற செல்கள் கிளர்வூட்டப்பட்டு இது போன்ற தோல் கருமை ஏற்படுகிறது.

சர்க்கரை நோயாளிகளுக்கு உடல் கருமையாவதற்கு மற்றொரு காரணம் 'டயாபட்டிக் டெர்மோபதி ஆகும். இது பெரும்பாலும் கால்கள் மற்றும் பாதங்களில் குறைந்த குருதியோட்டத்தால் ஏற்படுகிறது. இதற்கு தீர்வாக தோல் நோய் மருத்துவரை கலந்தாலோசித்து தோலில் கருமை நிறம் ஆவதற்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்று கண்டறியப்பட வேண்டும்.
ஏனெனில் ஹைப்போதைராய்டிசம், அக்ரோமெகாலி, குஷ்ஷிங் சிண்ட்ரோம் போன்ற நோய்களாலும் தோலில் கருமை நிறம் ஏற்படலாம். ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருத்தல் மற்றும் மருத்துவரின் பரிந்துரைப்படி மருந்துகள்' மற்றும் மேல் பூச்சு களிம்பு மூலமாக இந்தக் கருமை நிறத்தை நாம் சரி செய்யலாம்.
- கண்களில் டயாபட்டிக் ரெடினோபதி என்ற பிரச்சனை ஏற்படும்.
- விழித்திரை நீரிழிவு நோயினால் பாதிப்புக்கு உள்ளாகிறது.
உடலில் ரத்த சர்க்கரையின் அளவு அதிகமாவதை நீரிழிவு நோய் என்று கூறுகிறோம். 10 முதல் 20 வருடங்களுக்கு முன்பு வரை 10% பேர் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் என்று இருந்த நிலை மாறி இன்று நூற்றுக்கு 20 முதல் 25 பேர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்படுகின்றனர்.

டயாபடீஸ் மெலிட்டஸ் என்ற இந்த நீரிழிவு நோய் உடலின் முக்கிய பாகங்களான கண்கள், இதயம், ரத்தக் குழாய்கள், கல்லீரல், நுரையீரல், சிறுநீரகம் மற்றும் நரம்புகளை பாதிக்கிறது.
கட்டுப்படுத்தப்படாத சர்க்கரை நோய் இந்த பாதிப்புகளை நாளடைவில் உடலில் ஏற்படுத்துகிறது. அந்த வகையில் நீரிழிவு நோயினால் பாதிக்கப்படும் ஒன்று டயாபட்டிக் ரெடினோபதி என்ற கண்களில் ஏற்படும் பிரச்சனை ஆகும்.
நீரிழிவு பாதிப்பினால் விழித்திரை பாதிக்கப்படுவது என்பது 100-ல் 20 பேருக்கு ஏற்படலாம். நாம் ஒரு காட்சியை பார்க்க கருவிழியும் விழித்திரையும் இணைந்து செயல்படுகிறது. கருவிழி மூலம் ஊடுருவும் ஒளி விழித்திரையில் பட்டு பிரதிபலிப்பதையே நாம் காட்சியாக பார்க்கிறோம்.

இந்த விழித்திரை நீரிழிவு நோயினால் பாதிப்புக்கு உள்ளாகிறது. இந்த விழித்திரை இரண்டு விதங்களில் பாதிக்கப்படுகிறது.
ஒன்று விழித்திரை படலத்தில் ரத்த கசிவு ஏற்படுவது அதாவது ரெட்டினல் ஹெமரேஜ் என்பதாகும் மற்றொரு பிரச்சனை விழித்திரையில் நீர் கோர்வை ஏற்படுவது, அதாவது மேக்யூலர் எடிமா என்று அழைக்கப்படும் இந்தப் பிரச்சனையும் நீரிழிவினால் கண்களில் ஏற்படலாம். இந்த இரண்டு பிரச்சனைகளாலும் பார்வைத்திறன் குறையலாம்.
டயாபடிக் ரெட்டினோபதி என்பதில் நான்கு ஸ்டேஜ்கள் உள்ளன இதில் முதல் ஸ்டேஜ் என்பது பார்வை திறன் குறைவு இருக்காது. அறிகுறிகளும் இருக்காது. பொதுவாக கண் மருத்துவரிடம் பரிசோதனை செய்யும் பொழுது இதை மருத்துவர் கண்டுபிடிப்பார்.
இந்த பிரச்சனை பொதுவாக, நீரிழிவு நோய் மட்டுமல்லாமல் ரத்த உயர் ரத்த அழுத்தம், உயர் இரத்த கொழுப்பு, சிறுநீரக செயல்பாடு பாதிப்பினால் யூரியா கிரியாட்டினைன் போன்றவை அதிகரித்தல், ரத்த சோகை மற்றும் புகை பிடித்தல் போன்ற காரணிகளை நீக்கும் பொழுது அல்லது சரி செய்யும் பொழுது இந்த முதல் ஸ்டேஜ் டயாபடிக் ரெட்டினோபதி சீரமைக்கப்படுகிறது.
முதல் ஸ்டேஜ் கண்டுபிடிக்கப்படாமல் தொடர்ந்து நீடித்த நீரிழிவு மற்றும் மேல் குறிப்பிட்ட பிரச்சனைகள் தொடரும் பொழுது இரண்டாவது ஸ்டேஜ்க்கு இது செல்கிறது. இந்த நிலையில் ரெடினாவில் ரத்தக் கசிவு இருக்கும் அல்லது நீர் கோர்வை ஏற்படும்.

இந்த ஸ்டேஜில் லேசான பார்வை குறைபாடு இருக்கலாம். அந்த நேரத்திலும் மேற்குறிப்பிட்ட காரணிகளை சரி செய்ய வேண்டும்.
மேலும் மேக்யூலர் எடிமா என்ற விழித்திரையில் தேங்கி இருக்கும் நீரை ஊசி மூலம் சிகிச்சை அளித்து, ஸ்டேஜ் டூ ரெட்டினோபதி சீரமைக்கப்படுகிறது.
இதையும் தாண்டி நீரிழிவு ரத்த அழுத்தம் சிறுநீரக செயல்பாடு குறைந்து இருப்பது போன்ற காரணிகளால் நீரிழிவு கட்டுக்குள் இல்லாத பொழுது டயாபெடிக் ரெட்டினோபதி மூன்றாவது ஸ்டேஜ்க்கு செல்கிறது.
இந்த நிலையில் விழித்திரையில் அதிக ரத்த கசிவு இருக்கலாம் அல்லது நீர் தேக்கமும் அதிகமாக இருக்கலாம். இந்த நிலையில் பார்வை குறைவு ஏற்படும்.
விழித்திரையின் சேதத்தை கணிக்க பிளாரசென்ட் ஆஞ்சியோகிராம் என்ற பரிசோதனை செய்ய வேண்டும். இதன் மூலம் ரத்தக் கசிவு எங்கு ஏற்படுகிறது என்பதை கணித்து அந்த இடத்தில் லேசர் மூலம் சிகிச்சை அளிக்க வேண்டும்.
விழித்திரையில் ஏற்படும் நீர் தேக்கத்திற்கு மாதம் ஒருமுறை ஊசி மூலம் சிகிச்சை அளிக்க வேண்டி இருக்கும். இந்த சிகிச்சை கடந்த காலங்களை விட தற்பொழுது அதிகமான அளவில் பலன் அளிக்கிறது என்றாலும் கூட இதில் பார்வை குறைபாட்டை முழுவதுமாக கொண்டு வர முடியும் என்பதை உறுதியாக கூற முடியாது.
இந்த மூன்றாவது ஸ்டேஜையும் கடந்து சிகிச்சை அளிக்கப்படாமல், கவனிக்கப்படாமல் இருக்கும் டயாபட்டிக் ரெடினாபதி நான்காவது ஸ்டேஜ் அதாவது என்ட் ஸ்டேஜ் என்ற கடைசி பிரிவுக்கு தள்ளப்படுகிறது.
இந்த நிலையில் விழித்திரையில் மட்டுமின்றி கண்ணுக்குள் அதிகமான ரத்த கசிவு ஏற்படும். இது விட்ரியஸ் ஹெமரேஜ் என்று அழைக்கப்படுகிறது. கண்ணுக்குள் ரத்தக்கசிவு ஏற்படுவதால் விழித்திரை பிரிந்து விடும் நிலையும் ஏற்படுகிறது. அதாவது ரெடினல் டிடாச்மெண்ட்.
கண்ணுக்குள் ஊசி மூலம் சிகிச்சையோ லேசர் சிகிச்சையோ அளிக்க முடியாது. இதற்கு அறுவை சிகிச்சை மட்டுமே செய்ய வேண்டி இருக்கும். விட்ரெக்ட்மி என்ற இந்த அறுவை சிகிச்சையை செய்து ரத்த கசிவை அகற்றி விழித்திரையை மீண்டும் இணைக்க செய்வோம். இதெல்லாம் செய்யும்பொழுது ஓரளவிற்கு பார்வை திரும்ப வரலாம்.

இந்த நிலையில் பார்வை முழுமையாக திரும்ப கொண்டு வர முடியும் என்று உறுதி அளிக்க முடியாது. ஏனென்றால் நீரிழிவு நோயால் சிறிய ரத்த நாளங்கள் அதிக அளவில் பாதிக்கப்படும். விழித்திரையை மீண்டும் இணைத்தாலும் கூட அதற்கு போதுமான அளவிற்கு ரத்த ஓட்டம் கிடைத்து மறுபடியும் இயங்கும் என்பதை உறுதியாக கூற முடியாது.
எனவே தான் ஸ்டேஜ் ஒன்று மற்றும் இரண்டில் பிரச்சனையை சீரமைத்து விட முடியும். ஆனால் மூன்றாவது மற்றும் நான்காவது பிரிவுகளில் சிகிச்சை பலனளிக்காமலும் போகலாம்.
எனவே தான் நீரிழிவு நோய் உள்ளவர்கள் கண் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று கூறி முடித்தார்.






