என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    • கரும்புள்ளிகள், எரிச்சல், வறட்சி போன்ற சரும பாதிப்புகள் ஏற்படுகிறது.
    • குடல் ஆரோக்கியம் சரும ஆரோக்கியத்துடன் தொடர்புடையதாகும்.

    பளபளப்பான சருமத்தைப் பெற வேண்டும் என்பதில் யாருக்குத் தான் ஆசை இருக்காது? இன்று பலரும் மோசமான உணவுமுறை, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணமாக பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் சரும பிரச்சனைகளும் அடங்கும். அவ்வாறே சருமத்தில் கரும்புள்ளிகள், எரிச்சல், வறட்சி உள்ளிட்ட பல்வேறு சரும பாதிப்புகள் ஏற்படுகிறது.


    இதில் சிலர் சந்தைகளில் கிடைக்கும் பொருள்களை வாங்கி சரும ஆரோக்கியத்தை பராமரிக்கின்றனர். ஆனால் சில சமயங்களில் ரசாயனப் பொருள்களை பயன்படுத்துகின்றனர். இதனால் சரும பிரச்சனைகள் ஏற்படலாம். அதே சமயம், சருமத்தை உள்ளிருந்தே டிடாக்ஸ் செய்வது மிகவும் அவசியமாகும்.


    தண்ணீர் அருந்துவது:

    உடல் சோர்வாக உணரும்போது உடல் சில நச்சுகள் மற்றும் அதிகப்படியான கழிவுகளை உள்ளே வைத்திருப்பதற்கான வாய்ப்பு உள்ளது. இதனால் உடல் உபாதைகள் மட்டுமல்லாமல், மந்தமான தன்மை ஏற்படலாம். நாள்தோறும் குறைந்தது 2.5 லிட்டர் தண்ணீரைக் குடிப்பதன் மூலம், நச்சுகளை உடலில் இருந்து வெளியேற்றி இயற்கையான பளபளப்பைத் தருகிறது.


    ஆரோக்கியமான உணவுகள்:

    பால் பொருட்கள், இறைச்சி, பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவற்றிலிருந்து விடுபட்ட உணவைத் திட்டமிட வேண்டும். உடலை சரியாக மீட்டமைக்கவும், உள்ளே இருந்து சேதத்தை சரிசெய்யவும் அழற்சி எதிர்ப்பு உணவைப் பின்பற்றுவது அவசியமாகும்.

    பால் மற்றும் சர்க்கரை உணவுகள் போன்றவற்றை அதிகளவு உட்கொள்ளும் போது எரிச்சல், வீக்கம் மற்றும் முகப்பருவை ஏற்படுத்தலாம். எனவே தெளிவான சருமத்திற்கு 3 நாள் டிடாக்ஸ் டயட்டுடன் தொடங்கலாம். அதன் பிறகு, படிப்படியாக அதிகரிக்கலாம்.


    மூலிகை தேநீர்:

    மூலிகை தேநீர் சிறுநீரகம், நுரையீரல், குடல் மற்றும் கல்லீரல் போன்றவற்றிலிருந்து அசுத்தங்களை நீக்குவதன் மூலம் ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. ஏனெனில், இதில் நச்சுக்கள் அதிகளவு காணப்படலாம்.

    அதன் படி கிரீன் டீ, புதினா டீ, கெமோமில் டீ, ரூயிபோஸ் டீ போன்றவற்றில் சரும ஆரோக்கியத்திற்குத் தேவையான பல்வேறு பண்புகள் நிறைந்துள்ளது. இதனை அருந்துவது சருமத்தை டிடாக்ஸ் செய்ய உதவுகிறது.

    நார்ச்சத்து நிறைந்த உணவுகள்:

    குடல் ஆரோக்கியம் சரும ஆரோக்கியத்துடன் தொடர்புடையதாகும். எனவே சீரான மற்றும் ஆரோக்கியமான செரிமானப் பாதையுடன் குடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம். இதற்கு நார்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியமாகும்.


    புரோபயாடிக் உணவுகள்:

    நார்ச்சத்துக்களைப் போலவே புரோபயாடிக் நிறைந்த உணவுகளும் குடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும். ஏனெனில் இவை நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கும், வீக்கத்தை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது. இது உடலின் இயற்கையான நச்சு நீக்கும் வழிகளை ஆதரிப்பதன் மூலம் கல்லீரல் ஆரோக்கியமும் நன்கு பராமரிக்கப்படுகிறது.

    • முக்கியமான விஷயமே சர்க்கரை கட்டுப்பாடு தான்.
    • முதல் அறிவுரை உணவு கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும்.

    சர்க்கரை வியாதி இருக்கும் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் வராமல் கண்டிப்பாக தடுக்க முடியும். அதற்கான வழிமுறைகள் என்னவென்றால், முதல் முக்கியமான விஷயமே அவர்களின் சர்க்கரை கட்டுப்பாடு தான்.

    சாப்பிடுவதற்கு முன்பு ரத்த சர்க்கரை அளவு 110-க்குள் இருக்க வேண்டும். சாப்பிட்ட பிறகு 2 மணி நேரம் கழித்து 160-க்குள் இருக்க வேண்டும். 3 மாத கட்டுப்பாடு 6.5-க்குள் இருக்க வேண்டும்.


    சர்க்கரையை இதே அளவில் வைத்து அவர்கள் உணவுக் கட்டுப்பாட்டை கடைபிடித்தால் கண்டிப்பாக பாலியல் உறவு முறைகளில் பிரச்சனைகள் வராது. ஆனால் இதுவே அதிகமாகும் போது தான் தொற்றுக்கள் ஏற்படும்.

    எனவே இந்த பிரச்சினையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு முக்கியமான முதல் அறிவுரை உணவு கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும்.

    இதுதவிர சில பெண்கள், எனக்கு எல்லாமே கட்டுப்பாட்டில் இருக்கிறது ஆனாலும் பாலியல் உணர்வு குறைவாக இருக்கிறது, ஆர்வம் குறைவாக இருக்கிறது என்று சொல்வார்கள். அதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பெண்களுக்கு ரத்த அழுத்தமும் இருக்கும்.


    ரத்த அழுத்தத்துக்கு உட்கொள்கிற மாத்திரைகள் நரம்பு மண்டலங்களில் பாதிப்பை உண்டாக்கி அதன் மூலமாக அவர்களுடைய உறவு கொள்ளும் முறைகளையும் பாதிக்கிறது. இது ரத்த அழுத்தத்துக்கான மாத்திரைகளின் பக்க விளைவுகள் ஆகும்.

    எனவே ரத்த அழுத்தத்துக்கு மாத்திரை சாப்பிடுபவர்களுக்கு அந்த மாத்திரையின் பக்க விளைவால் இந்த பிரச்சனைகள் வரலாம்.

    எனவே உணவு பழக்க வழக்க முறைகளை மாற்றுங்கள், உடற்பயிற்சிகளை அதிகப்படுத்துங்கள், முறையாக சர்க்கரையை கட்டுப்படுத்துவதற்கான மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ளுங்கள், தேவைப்படும்போது இதற்கான சில சிகிச்சைகளையும் முறையாக எடுத்துக்கொள்ளுங்கள்.

    இதனால் ஏற்படுகிற பின் விளைவுகள், சர்க்கரை கட்டுப்பாட்டில் இல்லாததால் ஏற்படுகிற பிரச்சனைகளை புரிந்து ஒவ்வொரு காலகட்டத்திலும் அதனை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கான வழி முறைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

    மேலும் தகுதியுள்ள மருத்துவரை அணுகி முறையாக உறவு கொள்வதற்கான வழிமுறைகளை சீர் செய்து கொள்ள வேண்டும். முறையாக பார்த்துக்கொண்டால் கண்டிப்பாக பின்விளைவுகள் வராது.


    சர்க்கரை நோய் இருக்கிற பெண்களுக்கு சிறுநீர் தொற்று, பெண்ணுறுப்பில் தொற்று ஆகியவை தவிர அவர்களுக்கு அந்த இடத்தில் வேறு பல வகையிலும் தொற்றுக்கள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. இதனால் உறவு கொள்வதில் ரொம்ப பிரச்சனைகள் இருக்கும்.

    சிலருக்கு ரத்த அழுத்தம் அதிகமாகும், சில நேரங்களில் காய்ச்சல் கூட வரும். இவை எல்லாமே இந்த பிரச்சனைகளின் வெளிப்பாடுதான்.

    ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை:

    எனவே சர்க்கரை வியாதி இருக்கின்ற பெண்கள் முறையாக, முழுமையாக, ஆரம்ப நிலையிலேயே அதற்கான சிகிச்சைகளை பெற வேண்டும். அந்த சிகிச்சை முறைகள் பற்றியும் நன்றாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். சர்க்கரை நோய் இருப்பதை கண்டுபிடித்த பின்பு சர்க்கரை நோய் வந்து விட்டதே என்று கவலைப்படாதீர்கள்.

    அதை எப்படி கையாண்டு அதில் இருந்து வெளிவருவது என்பதை முறையாக சில பரிசோதனை முறைகள் மூலம் தெரிந்து கொண்டு அதை செயல்படுத்துங்கள். இதன் மூலம் சர்க்கரை வியாதி கட்டுக்குள் இருக்கும். சர்க்கரை வியாதி கட்டுக்குள் இருக்கும் பட்சத்தில், பாலியல் உறவு பிரச்சனைகளும், குழந்தையின்மை பிரச்சனைகளும் கண்டிப்பாக சரியாகும்.

    • கருவுறுதலுக்கு புரோஜெஸ்ட் டிரோன் ஹார்மோன் மிகவும் அவசியம்.
    • ஆரோக்கியமான மாதவிடாய்க்கு முக்கியமானது.

    புரோஜெஸ்ட்டிரோன் என்பது ஒரு பெண்ணின் மாதவிடாய் சுழற்சியின் இரண்டாம் பாதியில், கருமுட்டை விடுப்பின் பின்னர் கருப்பையில் உற்பத்தி செய்யப்படும் முதன்மை இனப்பெருக்க ஹார்மோன் ஆகும்.


    கருவுறுதலுக்கு இது மிகவும் அவசியம். அதனால் இதை கர்ப்பத்தின் ஹார்மோன் என்றும் அழைக்கிறார்கள். இது, ஆரோக்கியமான மாதவிடாய்க்கு முக்கியமானது.

    குறைவான புரோஜெஸ்ட்டிரோன் ஒரு பெண்ணின் இளமை பருவத்தில் அல்லது மாதவிடாய் முடிவதற்கு அதாவது மெனோபாசுக்கு முன்னர் ஏராளமான பாதிப்புகளை உண்டாக்கும்.


    அறிகுறிகள்

    சராசரி மாதவிடாய் சுழற்சி 28-30 நாட்கள் ஆகும். 25 நாட்களுக்கும் குறைவான மாதவிடாய் சுழற்சிகள், ஒரேமாதத்தில் இருமுறை வருகிற மாதவிடாய், சிறிது சிறிதாக வரும் ஸ்பாட்டிங் போன்றவை குறைந்த புரோஜெஸ்ட்டிரோன் அளவைக் குறிக்கலாம். இதனால் கருப்பையில் எண்டோமெட்ரியத்தின் வளர்ச்சியை சரிவர பராமரிக்க முடியாது. எனவே ஸ்பாட்டிங் ஏற்படலாம்.


    புரோஜெஸ்ட்டிரோன் குறைவால் முதல் மூன்று மாத கர்ப்பங்களில் கருச்சிதைவு ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. குறைந்த புரோஜெஸ்ட்டிரோன் அளவு ஈஸ்ட்ரோஜன் ஆதிக்கத்திற்கு பங்களிக்கலாம். அல்லது ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் இடையே ஏற்றத்தாழ்வு ஏற்படலாம். இதனால் கடுமையான ரத்தப்போக்கு, வலி மிகுந்த மாதவிடாய், மனநிலை மாற்றங்கள், தூக்கமின்மை ஏற்படுகிறது.

    உணவுப் பழக்கவழக்கங்கள்

    புரோஜெஸ்ட்டிரோன் அளவை அதிகரிக்க உணவில் வைட்டமின் சி அதிகமுள்ள சிட்ரஸ் பழங்கள் சாப்பிட்டால் நல்ல பலனை தரும்.

    ஹார்மோன் ஆரோக்கியத்திற்கு நல்ல கொழுப்புகள் முக்கியம். ஏனெனில் அவை இனப்பெருக்க ஹார்மோன்களுக்கான கட்டுமானத்திற்கு அத்தியாவசியமானது.


    அலிசி விதை (பிளாக் சீட்), ஆளி விதை, சியா விதை, பூசணி விதை, தேங்காய், பாதாம், பிரிம்ரோஸ் எண்ணெய், நல்லெண்ணெய் போன்றவை நல்லது.

    புரோஜெஸ்ட்டிரோன் அளவை அதிகரிக்க வைட்டமின் பி6 மற்றும் துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ள உணவுகளும் உதவியாக இருக்கும்.

    மத்தி மீன், சால்மன், சூரை மீன், ஆட்டுக்கல்லீரல், கொண்டைக்கடலை, வேர்க்கடலை, பட்டாணி, பருப்பு வகைகள், அவகேடோ, பெர்ரி பழங்கள், முட்டை ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    மனஅழுத்தம் புரோலாக்டின் மற்றும் கார்டிசோல் இரண்டையும் அதிகரிக்கலாம். இது கரு முட்டை வெளிவரும் போது புரோஜெஸ்ட்டிரோன் அளவை பாதிக்கும். சீரான உடற்பயிற்சி, யோகா, இறை தியானம் நல்ல பலனைத் தரும்.

    சித்த மருத்துவம்

    1) குமரி லேகியம்: காலை, இரவு 1-2 கிராம் வீதம் உணவுக்கு பின் சாப்பிட வேண்டும்.

    2) சதாவரி லேகியம்: காலை, இரவு 1-2 கிராம் வீதம் உணவுக்கு பின் சாப்பிட வேண்டும்.

    3) கல்யாண முருங்கை இலை, விஷ்ணுகிரந்தி, அசோகப்பட்டை, கரு நொச்சி, ஆலம் விழுது, கருஞ்சீரகம், சதகுப்பை, மரமஞ்சள் போன்ற மூலிகைகளில் செய்த ஏராளமான மருந்துகள் உள்ளன. இவற்றை சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிட்டால் நல்ல பலனைப் பெறலாம்.

    • சைவ பிரியர்கள் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளில் ஒன்று.
    • அனைவரும் விரும்பி சாப்பிடுவர்.

    சைவ பிரியர்கள் பலரும் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளில் காளானும் ஒன்று. காளான் வைத்து சுவையான காளான் மசாலா, கிரேவி, காளான் 65, காளான் மஞ்சூரியன் என்று பல விதங்களில் சமைத்து சாப்பிடலாம். அந்த வகையில் இன்று நாம் சூப்பரான செட்டிநாடு ஸ்டைல் காளான் தொக்கு ரெசிபியை பார்க்கலாம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் அளவிற்கு இதன் சுவை அருமையாக இருக்கும்.

    தேவையான பொருட்கள்:

    காளான்- 100 கிராம்

    பெரிய வெங்காயம் -1

    தக்காளி- 1

    உப்பு தேவைக்கேற்ப

    வறுத்து அரைக்க:

    தனியா - 2 தேக்கரண்டி

    மிளகு -1 தேக்கரண்டி

    சீரகம் - 1 தேக்கரண்டி

    பெருஞ்சீரகம்- 1 தேக்கரண்டி

    காய்ந்த மிளகாய்-1

    பூண்டு - ஒரு பல்

    தாளிக்க:

    எண்ணெய்- 2 தேக்கரண்டி

    பட்டை - 1 (சிறியது)

    லவங்கம் -2


    செய்முறை:

    முதலில் காளானை நீளமாகவும், வெங்காயம் மற்றும் தக்காளியை பொடிப் பொடியாகவும் நறுக்கிக் கொள்ளவும். பின்னர். வறுக்க வேண்டிய பொருட்களை எண்ணெய் சேர்க்காமல் வாசம் வரும் வரை வறுத்து, சூடு ஆறியவுடன் மிக்சி ஜாரில் போட்டு கொர கொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி, பட்டை, லவங்கம் போட்டு தாளித்து, நறுக்கிய வெங்காயம், தக்காளி போட்டு நன்கு வதக்கவும். அத்துடன் நறுக்கிய காளானைப் போட்டு தண்ணீர் சேர்க்காமல் நன்கு வேக விடவும். பின்னர் வறுத்து அரைத்த கலவையைப்போட்டு 3 நிமிடங்கள் வேக விட்டு இறக்கினால் சுவையான காளான் தொக்கு ரெடி. இது சூடான சாதத்துக்கும் சப்பாத்திக்கும் ஏற்றது.



    • பழுக்காத நிலையில் இருக்கும் வாழைப்பழத்தை சாப்பிடுவது நல்லது.
    • சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.

    சர்க்கரை நோயாளிகளுக்கு வாழைப்பழம் ஒரு சுவையான, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த, மலிவான விலையில் கிடைக்ககூடிய பழமாக விளங்குகிறது.

    ஒரு வாழைப்பழத்தில் 112 கலோரிகள், 29 கிராம் கார்போஹைட்ரேட், 3 கிராம் நார்சத்து, 15 கிராம் சர்க்கரை, 422 கிராம் பொட்டாசியம் இருக்கிறது. மேலும் இதில் வைட்டமின்கள் ஏ, பி6, சி ஆகியவையும், மாங்கனீஸ், மெக்னீசியம், துத்தநாகம் போன்ற தாதுக்களும், கேட்டிசின் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்களும் உள்ளன.


    ஒரு வாழைப்பழத்தின் கிளைசெமிக் இன்டெக்ஸ் 31 முதல் 62 வரையிலும், கிளைசெமிக் லோட் 11 முதல் 22 வரையிலும் வேறுபடலாம். நன்றாக பழுத்த வாழைப் பழத்தின் கிளைசெமிக் இன்டெக்சும், கிளைசெமிக் லோடும் அதிகமாக இருக்கும்.

    ஆனால் அதே சமயம் குறைவாக பழுத்த வாழைப்பழத்தின் கிளைசெமிக் இன்டெக்சும், கிளைசெமிக் லோடும் குறைவாக இருக்கும். சர்க்கரை நோயாளிகள் பொதுவாக பச்சை நிறத்தில் உள்ள சற்று பழுக்காத நிலையில் இருக்கும் வாழைப்பழத்தை சாப்பிடுவது நல்லது.

    ஏனெனில் குறைவாக பழுத்த வாழைப் பழத்தில் இருக்கும் ரெசிஸ்டன்ட் ஸ்டார்ச் இன்சுலின் எதிர்மறை நிலையை குறைத்து ரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது. மேலும் இது குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

    வாழைப்பழம் பழுக்கும் போது இதில் உள்ள ஸ்டார்ச் (மாவு சத்து) சர்க்கரையாக மாறுகிறது. வாழைப்பழத்தில் உள்ள அதிகமான அளவு பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் ரத்த நாளங்களை தளர்த்தி ரத்த அழுத்தத்தை குறைத்து இதய ஆரோக்கியத்திற்கு துணை புரிவதாக ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளது.

    மேலும் இதில் உள்ள அதிகமான அளவு நார்ச்சத்து, உணவு சாப்பிட்ட உடனே ஏற்படும் குளுக்கோஸ் ஸ்பைக்ஸ் வராமல் தாமதப்படுத்துகிறது.


    வாழைப் பழம் பழுக்கும் போது அதனை திடமாக வைத்திருக்கும் பெக்டின் அளவு குறைந்து அதனை மிருதுவாக மாற்றுகிறது. வாழைப்பழத்தில் இருக்கும் பெக்டின், குளுக்கோஸ் மற்றும் கொலஸ்ட்ரால் குடலில் உறிஞ்சப்படுவதை தடுக்கும் ஆற்றல் உடையது என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

    பொதுவாக சர்க்கரை நோயாளிகள் குளுக்கோஸ் அளவு அதிகம் உள்ள பூவன்பழம், ரஸ்தாளி போன்ற பழங்களை தவிர்ப்பது நல்லது. அதிக நார்ச்சத்து உள்ள குறைவாக பழுத்த பச்சை வாழைப்பழம், செவ்வாழை, நேந்திரம்பழம் போன்றவற்றை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம்.

    சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் வாழைப் பழத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளதால் அதனை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். நீங்கள் மலச்சிக்கலுக்காக தினமும் வாழைப்பழம் சாப்பிடுவது தவறல்ல. ஆனால் சிறிய அளவிலான, குறைவாக பழுத்த வாழைப்பழத்தை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும்.

    • சாப்பிட்ட உடனே நடக்க வேண்டாம்.
    • இரவு உணவுக்குப் பிறகு பழங்களை சாப்பிட்டால் எளிதில் ஜீரணமாகாது.



    நடப்பது

    இரவு உணவு சாப்பிட்ட உடனேயே சிறிது நேரம் நடக்க வேண்டும் என்று கூறப்படு கிறது. இவ்வாறு செய்வது உடல் நலத்துக்கு நல்லது என்று சொல்வார்கள். ஆனால் அது முற்றிலும் உண்மை இல்லை. ஏனெனில் சாப்பிட்ட உடனே நடைப்பயிற்சி செய் வதால் கை, கால்களுக்கு ரத் தம் செல்லும். இது செரிமானத் தில் குறுக்கிடுகிறது. எனவே சாப்பிட்ட உடனே நடக்க வேண்டாம். ஒரு மணி நேரம் அல்லது ஒன்றரை மணி நேரம் கழித்து நடக்கலாம்.


    தண்ணீர் பருகுவது

    நம் உடலுக்கு தண்ணீர் தேவை. ஆனால் அதை சரியான நேரத்தில் குடிக்க வேண்டும். குறிப்பாக இரவு உணவுக்குப் பிறகு தண்ணீர் பருக வேண்டாம். குறைந்தது 30 முதல் 60 நிமிடங்கள் காத்திருக்கவும்.


    பழங்கள் சாப்பிடுவது

    இரவு உணவு உண்ட உடனேயே பழங்கள் சாப்பிடு வதை பலர் வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால் அதை செய்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இரவு உணவுக்குப் பிறகு பழங்களைச் சாப்பிட்டால் எளிதில் ஜீரணமாகாது. பல் துலக்குவது.


    பல் துலக்குவது

    இரவு உணவு உண்ட உடனேயே பல் துலக்கும் பழக்கமும் பலருக்கும் உண்டு. ஆனால் அது. பல்லின் எனாமல் அடுக்கை பாதிக்கும். அதனால் பற்கள் இயற்கையான பொலிவை இழக்கும். எனவே இரவு உணவு உண்ட உடனே பல் துலக்க வேண்டாம். குறைந்தது 30 நிமிடங்களாவது காத்திருந்து பல் துலக்கலாம்.


    டீ, காபி குடிப்பது

    பலர் இரவு உணவுக்குப் பிறகு உடனடியாக டீ அல்லது காபி குடிப்பார்கள். இரவுப் பணியில் இருப்பவர்கள் அதிகமாக காபி, டீ அருந்துவார்கள். உண்மை யில் இரவு உணவுக்குப் பிறகு உடனடியாக டீ அல்லது காபி குடித்தால்,செரிமானம் பாதிக்கப்படும். வாயு மற்றும் அமிலத்தன்மை பிரச்சினைகள் ஏற்படும். உண்ணும் உணவில் உள்ள சத்துகள் உடலுக்கு கிடைக்காது. முக்கியமாக இரும்புச்சத்து உடலால் உறிஞ்சப்படாது. எனவே சாப்பிட்ட உடனேயே காபி, டீ குடிக்க வேண்டாம்.


    குளிப்பது

    சாப்பிட்ட உடனேயே குளித்தாலும், உடலின் மற்ற பாகங்களுக்குச் செல்லும் ரத்தம் செரிமான மண்டலத்துக்குச் சரியாகப் போவதில்லை. இதனால் செரிமானம் சீராக நடைபெறாது.


    உறங்குவது

    சிலர், சாப்பிட்ட உடனே படுக்கையில் சாய்ந்துவிடு வார்கள். அவ்வாறு உடனே உறங்க வேண்டாம். இவ்வாறு செய்வதால் செரிமான பாதிப்பு ஏற்படும். வாயு. அமிலத்தன்மை அதிகரித்து, உண்ணும் உணவு கொழுப்பாக மாறும். எனவே உடல் எடை கூடும். அதனால் படுக்கைக்குச் செல்வதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பே சாப்பிட்டுவிடுங்கள்.

    • டீ உடலுக்குள் சென்றால் என்னென்ன நிகழும் தெரியுமா?
    • தினமும் 2 அல்லது 3 கப் டீ பருகலாம். அதற்கு மேல் பருகக்கூடாது.

    பால், தேயிலை, சர்க்கரை கொண்டு தயாரிக்கப்படும் டீ உலகெங்கும் பரவலாக பகிரப்படும் பானமாக விளங்குகிறது. டீ பருகிவிட்டுத்தான் அன்றைய நாளை தொடங்கும் வழக்கத்தை பலரும் பின்பற்றுகிறார்கள். அப்படி ருசிக்கப்படும் டீ உடலுக்குள் சென்றால் என்னென்ன நிகழும் தெரியுமா?


    ''பாலில் இருக்கும் கால்சியம் எலும்புகளை கொஞ்சம் வலுவடைய செய்யும். வயதாகும்போது ஏற்படும் ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்பு அடர்த்தி குறைபாட்டை தடுக்க இது உதவும். வளர்சிதை மாற்றம் சீராக இயங்க உதவும்.

    மேலும் தேநீரில் இருக்கும் காபின் அதிக விழிப்புடனும், கவனத்துடனும் இருக்கச் செய்யும். அத்துடன் தேநீரில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்டுகள் செல்களை சேதத்தில் இருந்து பாதுகாக்கும் சிறு கவசங்கள் போன்று செயல்படும்.

    டீ பருகும் விஷயத்தில் கவனமாக இருக்காவிட்டால் அதில் இருக்கும் தேயிலை உடலில் இரும்பை உறிஞ்சும் திறனை குழப்பிவிடும்'' என்கிறார், பெங்களூருவை சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் இப்சிதா சக்கரவர்த்தி.

    இதனை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

    * தினமும் 2 அல்லது 3 கப் டீ பருகலாம். அதற்கு மேல் கண்டிப்பாக பருகக்கூடாது.

    * டீயில் கூடுமானவரை இனிப்பு சேர்ப்பதை தவிர்த்திடுங்கள். அது முடியாதபட்சத்தில் சிறிதளவு இனிப்பு சேர்த்துக்கொள்ளலாம்.

    * விரும்பிய நேரமெல்லாம் டீ பருகுவதை தவிர்க்க வேண்டும். தாகமாக இருக்கும்போதும் பருகக்கூடாது. நிறைய தண்ணீர் பருகுவதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

    * செரிமான கோளாறு போன்ற வயிறு சார்ந்த பிரச்சினைகளை சந்தித்தால் டீயை தவிர்த்து விடுவது நல்லது. மாற்று பானத்தை தேர்ந்தெடுப்பது சிறப்பானது.


    காபினால் பிரச்சினை ஏற்படுமா?

    பால் டீயை தினமும் பருகும்போது உடலுக்கு விரைவான ஆற்றலை வழங்கும். சோர்வை போக்கி செய்யும் வேலையில் கவனம் செலுத்த உதவும். ஆனால் டீயில் அதிகப்படியான காபின் இருந்தால் கவலை, அமைதியின்மை, தூக்கமின்மை போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

    நீரிழிவு நோயை உண்டாக்குமா?

    டீயில் அதிக சர்க்கரை சேர்ப்பது ரத்தத்தில் சர்க்கரை அளவை சீர்குலைத்துவிடும். காலப்போக்கில் டைப்-2 நீரிழிவு அபாயத்தையும் அதிகரிக்க செய்துவிடும். அத்துடன் டீயில் இருக்கும் சர்க்கரை மற்றும் கொழுப்பு கலவையானது வயிற்றை சுற்றி கொழுப்பு சேர்வதற்கு காரணமாகிவிடக்கூடும்.


    பாதிப்பை ஏற்படுத்துமா?

    சிலருக்கு பாலும், தேநீரும் ஒத்துக்கொள்ளாது. வயிற்று உப்புசம், வாயுத்தொல்லை மற்றும் அஜீரணத்துக்கு வழிவகுக்கும். பால் கலந்த டீக்களில் சர்க்கரை மற்றும் கலோரிகள் நிரம்பியிருக்கும். அதிலிருக்கும் அதிகப்படியான இனிப்பு உடல் எடை அதி கரிப்புக்கு வழிவகுக்கும். டீ மட்டுமே பருகிவிட்டு போதுமான அளவு தண்ணீர் உட்கொள்ளாவிட்டால் நீரிழப்புக்கும் வழிவகுக்கும்.

    • பற்களுக்கு அடியில் நரம்பு இழைகள்தான் உணர்ச்சிகளை மூளைக்கு எடுத்துச்செல்கிறது.
    • நரம்பு இழைகள் ஒவ்வொரு பல்லையும் நேரடியாக மூளையோடு இணைக்கிறது.

    பற்களை பொறுத்தவரை மேலே உள்ள தலை பகுதியை சுத்தமாக வைத்து கொண்டால் மட்டும் போதும் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், அது பல் கட்டுமானத்தில் சிறு பகுதி மட்டுமே.

    அதை தாண்டி பற்கள் மூன்று பகுதிகளாக உள்ளன. முதல் பாகம் நாம் வெளியே பார்க்கக்கூடிய க்ரோன் என்று அழைக்கப்படுகிறது. இரண்டாவது பகுதி எனாமல், மூன்றாவது ஈறுகளுக்கு கீழே இருக்கும் வேர்ப்பகுதி ஆகியவைதான். இந்த மூன்றும் இணைந்தது தான் ஒரு முழு பல்லின் கட்டுமானம்.

    இதில் முதல் பாகத்தில்தான் நமது உடலின் உறுதியான பகுதி இருக்கிறது. அதை நாம் எனாமல் என்று அழைக்கிறோம். கடினமானதையும் கடித்து உண்ண உதவும் பகுதிதான் இது.

    அடுத்து இருக்கும் லேயர் டென்டின் என்று அழைக்கப்படுகிறது. இந்த பகுதியில் மிகச்சிறியதாக லேயர்கள் உள்ளது.


    உங்களின் எனாமல் தேய தேய நீங்கள் சாப்பிடும் சூடான அல்லது குளிர்ந்த பொருட்கள் இந்த டென்டின் மீது பட்டு உங்கள் பற்களை அதிக உணர்திறன் கொண்டதாக மாற்றி விடும்.

    அதனால் தான் பல்கூச்சம் ஏற்படுகிறது. அதற்கும் உள்ளே ரத்தக்குழாய்களால் சூழப்பட்ட பல்ப் சேம்பர் என்ற பகுதி இருக்கும். இது முழுக்க ரத்தக்குழாய்களால் ஆனது. அதற்கு கீழ் பிரவுன் நிறத்தில் சிமெண்ட் போன்று இருக்கும்.

    ஈறுகளுக்கு கீழே பற்களுக்கு வெளியே தாடை எலும்புகளையும், பற்களின் வேர்பகுதிகளையும் இணைக்கும் இடம்தான் சிமண்டம் என்று சொல்லக் கூடிய பகுதி இருக்கிறது. இதுதான் உங்கள் பற்களை உறுதியாக பிடித்து வைத்து கொள்கிறது.

    இதற்கும் கீழே ரத்த குழாய்களால் நிறைந்த ரூட் கேனல் இருக்கிறது. அதேபோல் மஞ்சள் நிறத்தில் இருக்க கூடிய நரம்பு இழைகள் ஒவ்வொரு பல்லையும் நேரடியாக மூளையோடு இணைக்கிறது.

    இதைத்தாண்டி வெளியே இருக்கும் தாடை எலும்புகளில்தான் ஒவ்வொரு பல்லும் இணைக்கப்பட்டுள்ளது. இதை இணைக்கும் மேல்பகுதிதான் பெரிடோன்டல் லிகமென்ட் என்ற பகுதி.

    அதற்கும் மேல் உங்கள் கண்களுக்கு பிங்க் நிறத்தில் தெரிவதுதான் ஈறுகள். இதுதான் பற்களின் அழகான கட்டமைப்பு.


    பல்வலி ஏற்பட காரணம்?

    பற்கள் தான் உணவை மெல்லுவதற்கும், பேசுவதற்கும் முக்கியமாக உதவுகிறது. இந்நிலையில் பற்களில் ஏற்படும் வலி, பல் கூச்சம், இதர அசௌகரியமான உணர்வுகளுக்கு நிறைய காரணம் உள்ளது.

    முதலில் நாம் அதிகம் கேள்விப்பட்ட கேவிட்டிஸ் சிறு குழந்தைகளில் துவங்கி பெரியவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் வரும். இதை மருத்துவ துறையில் கேரீஸ் என்று அழைக்கப்படுகிறது.

    உங்கள் பற்களுக்கு அடியில் இருக்கும் மூளைக்கு போகும் நரம்பு இழைகள்தான் பல் உணரும் உணர்ச்சிகளை மூளைக்கு எடுத்துச் சென்று உடனடியாக பிரதிபலிக்கும்.

    ஆரோக்கியமற்ற முறையில் பற்களை பராமரிக்காமல், அதிகமாக சர்க்கரை தன்மையுள்ள உணவுகளை நீங்கள் தொடர்ந்து சாப்பிட்டு கொண்டே இருந்தால் உங்கள் பற்களின் நிறம் மாறும்.

    பெரும்பாலும் அதிகமாக இனிப்புத் தன்மையுள்ள உணவை தின்று விட்டு சரியாக ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது பல் தேய்க்காமல், பற்களை பராமரிக்காமல் இருந்தால் இதன் பாதிப்பு பெரிதாகி வேர்ப்பகுதி வரை சென்றுவிடும்.

    அதற்கு பிறகும் அதை கண்டுகொள்ளாமல் இருந்தால் அது பாக்டீரியாக்கள் மற்றும் கெமிக்கல்களோடு கலந்து சொத்தைப்பல்லை உருவாக்கிவிடும். இதுவும் சிறிதாக துவங்கி பெரியதாக மாறிவிடும்.

    அப்படியே ஒரு பல்லோடு நிற்காமல் அடுத்தடுத்த பற்களுக்கும் பரவி கொண்டே இருக்கும். இதே நேரத்தில் ஈறுகளும் தொற்றுக்கு உள்ளாகி ஈறுகளில் தொற்று அல்லது ஈறுவீக்கம் போன்றவற்றை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளது.

    அதே போல், பற்களை இணைக்கும் பகுதிகளும் தொற்றுக்கு உள்ளாகலாம். அதை நாம் பெரியோடோன்டிடிஸ் என்று அழைக்கிறோம்.

    இப்படி பிரச்சனைகள் ஆகும்போது தான் நமது பற்களுக்கு கீழ் இருக்கும் நரம்பு இழைகள் அந்த வலியை உடனடியாக மூளைக்கு தெரிவித்து நமது பற்களில் பிரதிபலிக்கும். அது நமக்கு தாங்க முடியாத வலியை தருகிறது.

    • ஒரு தடவை செஞ்சு பாருங்க ருசியா இருக்கும்.
    • சுட சுட சாதத்துல போட்டு பிசைந்து சாப்பிடலாம்.

    வெண்டைக்காய் துவையல் அப்படின்னு சொன்ன உடனே அது எப்படி இருக்கும்? நல்லாருக்குமா அப்படின்னு ஒரே யோசனையா இருக்கும். ஆனா ஒரே ஒரு தடவை செஞ்சு பாருங்க ருசியா இருக்கும்.

    நீங்க எதிர்பார்த்திருக்கவே மாட்டீங்க. நம்ம கொள்ளு பருப்புல துவையல், துவரம் பருப்புல துவையல், தேங்காய் துவையல், மல்லி துவையல், புதினா துவையல், அப்படின்னு நிறைய துவையல் செஞ்சிருப்போம். ஆனா இந்த மாதிரி ஒரு தடவை துவையல் செஞ்சு பாருங்க கண்டிப்பா உங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்.

    இது வெண்டைக்காய் துவையல் அப்படின்னே தெரியாது. ரொம்ப ரொம்ப ருசியா இருக்க கூடிய இந்த வெண்டைக்காய் துவையல சுட சுட சாதத்துல போட்டு பிசைந்து சாப்பிடலாம்.

    தேவையான பொருட்கள்:

    வெண்டைக்காய்- 1/4 கி

    கடலை பருப்பு- 1 டீஸ்பூன்

    உளுந்தம் பருப்பு- 1 டீஸ்பூன்

    வர மிளகாய்- 2

    பெரிய வெங்காயம்-1

    பூண்டு- 3 பல்

    புளி- நெல்லிக்காய் அளவு

    கடுகு- 1 டீஸ்பூன்

    பூண்டு-5

    புளி- சிறிதளவு

    கறிவேப்பிலை- ஒரு கொத்து

    உப்பு- தேவையான அளவு

    எண்ணெய்- தேவையான அளவு


    செய்முறை

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெண்டைக்காயை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். வெண்டைக்காயை வதக்குவதிலேயே முக்கால் பதம் வெந்துவிட வேண்டும் அந்த அளவிற்கு வதக்க வேண்டும்.

    பிறகு அதனை தனியாக எடுத்து வைத்து விட்டு அதே கடாயில் கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், பூண்டு, புளி அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.

    நன்றாக ஆறியதும் மிக்சி ஜாரில் சேர்த்து வெண்டைக்காயையும் சேர்த்து உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு கருவேப்பிலை போட்டு தாளித்தால் சுவையான வெண்டைக்காய் துவையல் தயார்.

    • கிரீன் டீ ஸ்கிரப் மிகவும் உதவியாக இருக்கும்.
    • காபி தூள் இறந்த செல்களை அகற்றி முகத்துக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது.

    நாம் எப்பொழுதும் நம்முடைய முகம் அடுத்தவர்கள் விரும்பும்படி அழகாக இருக்க வேண்டும் என்று முகத்தை அழகாக வைத்துக் கொள்வதற்கு பல முயற்சிகளை எடுத்துக் கொண்டு இருக்கிறோம்.

    சிலருக்கு என்னதான் முகம் வெள்ளையாகவும், அழகாகவும் இருந்தாலும் அவர்களுக்கு முகம் எப்பொழுதும் வறட்சியாக காணப்படும். மேலும் வெயிலினால் அவர்களுக்கு வியர்வை வடியும் பொழுதும் முகம் பார்ப்பதற்கு சோர்வாகவும், பொலிவில்லாமலும் தோற்றமளிக்கும்.

    இதனால் முகங்களில் கரும்புள்ளிகள், முகப்பருக்கள் போன்றவை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதை போக்குவதற்கு சிலர் அழகு சாதன கிரீம்களை பயன்படுத்துவார்கள்.

    ஆனால் நாம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எளிதில் இதனை சரி செய்து விடலாம். முகம் வறட்சியாக இருந்தால் அதை எப்படி சரி செய்வது என்பதை பற்றி பார்க்கலாம்.


    பாதம்

    பாதாம் வைத்து உங்கள் முகத்தை நீங்க ஸ்கிரப் செய்து வந்தால் உங்கள் முகம் எப்போதும் ஈரப்பதமாக இருக்கும்.

    முதலில் ஒரு கப் பாதாம் பவுடரில், அரை கப் ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்று கலந்து பின் ஒரு டீஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் அப்ளை செய்து கொள்ளுங்கள்.

    இந்த பேஸ்ட் நன்றாக உலர்ந்து காய்ந்தவுடன் குளிர்ந்த நீரால் முகத்தை நன்றாக கழுவி எடுத்தால் முகம் ஈரப்பதத்துடன் மென்மையாக காட்சியளிக்கும்.


    கீரின் டீ

    வறட்சியான சருமத்திற்கு கிரீன் டீ ஸ்கிரப் மிகவும் உதவியாக இருக்கும். ஒரு பவுளில் கிரீன் டீ சேர்த்து அதனுடன் ஒரு டீஸ்பூன் சர்க்கரையும் சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும். இதனுடன் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக பேஸ்ட் போல் தயார் செய்து கொள்ளவும்.

    பின்னர் இந்த கிரீன் டீ பேஸ்ட்டை நம் முகத்தில் நன்றாக தேய்த்து சிறிது நேரத்திற்கு பிறகு பேஸ்ட் உலர்ந்த பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். கிரீன் டீ ஃபேஸ் பேக் முகத்தில் உள்ள கிருமிகளை அழித்து பல நன்மைகளை உண்டாக்கும்.


    தேங்காய் எண்ணெய்

    தேங்காய் எண்ணெயை முகத்தில் அப்ளை செய்து வந்தால் முகத்தில் உள்ள வறட்சி நீங்கி மென்மையான மற்றும் பொலிவான சருமத்தை நமக்கு தருகிறது.

    இதை செய்வதற்கு அரை கப் தேங்காய் எண்ணெய் எடுத்து இரண்டு டீஸ்பூன் அளவு சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளவும், பின் இதில் ஒரு டீஸ்பூன் எலும்பிச்சை பழச்சாறையும் சேர்த்து கலந்து முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து ஸ்கிரப் உலர்ந்தவுடன் தண்ணீரால் முகத்தை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள்.


    காபி பவுடர்

    காபி பவுடர் வைத்து முகத்தை ஸ்கிரப் செய்யும் போது முகத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி முகத்துக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. ஒரு டீஸ்பூன் அளவு காபி பவுடரை ஒரு டீஸ்பூன் அளவு தண்ணீரில் சேர்த்து நன்றாக கரைத்துக் கொள்ளவும்.

    பின்னர் இதனுடன் ஒரு டீஸ்பூன் அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து நம் முகத்தில் ஃபேஸ் மாஸ்க் போல் அப்ளை செய்து 10 நிமிடம் கழித்து முகத்தை கழுவி எடுத்துக் கொள்ளலாம்.

    • தமனிகளில் அழுத்தம் அதிகமாக இருந்தால், உயர் ரத்த அழுத்தம் உள்ளது.
    • கர்ப்ப கால சிக்கல்களைத் தடுக்க மருத்துவரை அணுகவும்.

    பொதுவாக ரத்த அழுத்தம் என்பது உங்கள் தமனிகளின் சுவர்களுக்கு எதிராகத் தள்ளும் ரத்தத்தின் சக்தியாகும். தமனிகள் இதயத்திலிருந்து உடலின் மற்ற பகுதிகளுக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்த நாளங்கள்.

    ஒவ்வொரு முறையும் இதயம் துடிக்கும்போது, அது தமனிகளுக்கு ரத்தத்தை செலுத்துகிறது. தமனிகளில் அழுத்தம் அதிகமாக இருந்தால், உயர் ரத்த அழுத்தம் உள்ளது.


    உயர் ரத்த அழுத்தம் உங்கள் உறுப்புகளுக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும். இது மாரடைப்பு, இதய செயலிழப்பு, பக்கவாதம் மற்றும் சிறுநீரக செயலிழப்புக்கு வழிவகுக்கும்.

    சில பெண்களுக்கு கர்ப்பம் தரிக்கும் முன் உயர் ரத்த அழுத்தம் இருக்கும். மற்றவர்களுக்கு கர்ப்ப காலத்தில் முதல் முறையாக உயர் ரத்த அழுத்தம் ஏற்படும்.

    கர்ப்ப காலத்தில் ரத்த அழுத்த அளவு எவ்வளவு இருக்க வேண்டும், அதிகமாக இருந்தால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன என்பதை பார்க்கலாம்.

    கர்ப்ப காலத்தில் உயர் ரத்த அழுத்தம் பொதுவாக 140/90 mm Hg அல்லது அதற்கும் அதிகமாக வரையறுக்கப்படுகிறது.

    குறைந்த ரத்த அழுத்தம் பொதுவாக 90/60 mm Hg அல்லது அதற்கும் குறைவாக வரையறுக்கப்படுகிறது.


    அறிகுறிகள்:

    சிவந்த தோல், கைகள் அல்லது கால்களின் வீக்கம், தலைவலி, மூச்சு திணறல், வயிற்று வலி, குமட்டல், வாந்தி, பார்வை மாற்றங்கள்

    உங்களுக்கு உயர் ரத்த அழுத்தம் அல்லது உயர் ரத்த அழுத்தம் அறிகுறிகள் இருப்பதாக நீங்கள் சந்தேகித்தால், கர்ப்ப கால சிக்கல்களைத் தடுக்க உடனடியாக உங்கள் மருத்துவரை அணுகவும்.

    • இன்புளூயன்சா காய்ச்சல் தற்போது பரவி வருகிறது.
    • அறிகுறிகள் ஏற்பட்டால் அவற்றை அலட்சியப்படுத்த வேண்டாம்.

    சென்னை:

    பொது சுகாதாரத்துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-

    சமீப காலமாக காய்ச்சல், சளி, தொண்டையில் ஏற்படும் கிருமித் தொற்று உள்ளிட்ட பாதிப்புகளுடன் மருத்துவமனைகளை நாடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. புளூ வைரஸ்களால் பரவும் இன்புளூயன்ஸா காய்ச்சல் தற்போது பரவி வருகிறது.

    இதைத்தவிர, நுரையீரல் தொற்றும் அதிகரித்துள்ளது. இருமல், தொண்டை அலா்ஜி, காய்ச்சல், உடல் சோா்வு, உடல் வலி, தலைவலி, சளி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டால் அவற்றை அலட்சியப்படுத்த வேண்டாம். அரசு மருத்துவமனைகளிலோ அல்லது தனியாா் மருத்துவமனைகளிலோ பரிசோதனை செய்ய வேண்டும்.

    மற்றொருபுறம், டாக்டர்கள் நோயின் தீவிரத்தைப் பொருத்து சிகிச்சைகளை வழங்குதல் அவசியம். மிதமான பாதிப்புகள் இருந்தால், ஆன்ட்டி வைரல் மருந்துகளோ அல்லது மருத்துவப் பரிசோதனைகளோ தேவையில்லை.


    ஒரு சில நாள்களுக்கு சம்பந்தப்பட்ட நோயாளிகள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அதேவேளையில், தீவிர பாதிப்பு உள்ள 65 வயதுக்கு மேற்பட்டவா்கள், 5 வயதுக்கு குறைவான குழந்தைகள், சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்தம், இதய பாதிப்பு, சிறுநீரகம், கல்லீரல் பாதிப்புகள், நாள்பட்ட நுரையீரல் மற்றும் நரம்பு சாா்ந்த பிரச்சனைகளை எதிா்கொள்பவா்கள், கா்ப்பிணிகள், புற்றுநோயாளிகள், உடல் பருமன் உள்ளவா்களுக்கு ஓசல்டாமிவிா் எனப்படும் ஆன்ட்டி வைரல் மருந்துகளை வழங்க வேண்டும்.

    தீவிர பாதிப்புக்குள்ளானவா்களை அதீத கவனத்துடன் கையாள வேண்டும். மூச்சுத் திணறல், ரத்த அழுத்தம் குறைதல், சீரற்ற இதயத்துடிப்பு, வலிப்பு, சிறுநீா் அளவு குறைதல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு உள்ளானோரை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.

    ஓசல்டாமிவிா் உள்ளிட்ட மருந்துகளுடன் மருத்துவமனையில் அனுமதித்து அவா்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். தேவைப்படுவோருக்கு தடுப்பூசிகள் வழங்கலாம்.

    மருத்துவத் துறையினா், சுகாதார களப் பணியாளா்கள் முகக்கவசம் அணிதல் கட்டாயம். பொது இடங்களுக்குச் செல்லும் மக்கள் மூன்று அடுக்கு முகக் கவசங்களை அணியலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×