என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    • பனீரில் கேசின் என்ற புரதம் மிக அதிகம்.
    • பனீரில் கால்சியம் சத்தும் அதிகம்

    பசும்பால் அல்லது எருமைப் பாலைக் காய்ச்சி, அதில் எலுமிச்சைப்பழச் சாறோ, வினிகரோ சேர்த்துத் திரியவைத்து பனீர் தயாரிக்கிறார்கள். இது சரியான முறைதான். இதில் எந்த பிரச்சனையும் இல்லை.


    பாலைத் திரித்து பனீராக மாறியதும் அதை எவ்வளவு நேரத்துக்கு அழுத்தி வைத்திருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து அது மிக மென்மையாகவோ, மிதமான மென்மைத்தன்மையுடனோ அல்லது கடினமாகவோ வரும்.

    பனீர் புதரச்சத்தும் கால்சியம் சத்தும் நிறைந்தது. தவிர அது எந்த மாதிரியான பாலில் இருந்து தயாரிக்கப்படுகிறது என்பதைப் பொறுத்து அதன் கொழுப்பு அளவும் வேறுபடும்.

    சைவ உணவுக்காரர்களுக்கு பாலில் இருந்து பெறப்படும் பனீரின் மூலம் போதுமான புரதச்சத்து கிடைக்கும்.

    பனீரில் கேசின் என்ற புரதம் மிக அதிகம். 100 கிராம் பனீரில் 12.4 கிராம் கார்போஹைட்ரேட் சத்து இருக்கும். பனீரில் கால்சியம் சத்தும் அதிகம் என்பதால் அதன் மூலம் பற்கள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியமும் மேம்படுகிறது. பனீரில் பாஸ்பரஸ், துத்தநாகம் மற்றும் வைட்டமின் சத்துகளும் இருக்கின்றன.


    எடைக்குறைப்பு முயற்சியில் இருப்போருக்கும் பனீர் மிகச் சிறந்த உணவு. பனீரை கிரேவி, புலாவ், டிக்கா, புர்ஜி என விதம் விதமாகச் சமைக்க முடியும் என்பதால் குழந்தைகளுக்குப் பிடித்த வகையில் செய்து தந்து அவர்களது ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும்.

    கூந்தல் மற்றும் சரும ஆரோக்கியத்துக்கும் பனீர் நல்லது. இத்தனை நல்ல குணங்களைக் கொண்டிருந்தாலும் பால் அலர்ஜி உள்ளவர்கள் மட்டும் பனீரை தவிர்ப்பது நல்லது.

    • பெண்களுக்கும் இன்று சர்க்கரை வியாதியின் பாதிப்பானது அதிகரித்து வருகிறது.
    • பாலியல் உணர்வுகள் குறைவாக இருக்கலாம்.

    சர்க்கரை வியாதி பொதுவாகவே எல்லோருக்கும் அதிகரித்து வரும் ஒரு முக்கியமான பிரச்சனை ஆகும். குறிப்பாக பெண்களுக்கும் இன்று சர்க்கரை வியாதியின் பாதிப்பானது அதிகரித்து வருகிறது.

    பெண்கள் பலருக்கு இன்று சிறு வயதிலேயே சர்க்கரை வியாதி ஏற்படுகிறது. இந்த கால கட்டத்தில் இருக்கக்கூடிய உணவு பழக்க முறைகள், உடற்பயிற்சி இல்லாத நிலை, நவீன வாழ்க்கை முறைகள், கம்ப்யூட்டரில் அமர்ந்து வேலை செய்வதால் ஏற்படும் உடல் பருமன் மற்றும் மனதளவில் ஏற்படுகிற மனஅழுத்தம், தூக்கம் இல்லாத நிலையில் இரவில் தொடர்ந்து கண் விழித்தல் ஆகியவை அனைத்துமே சர்க்கரை வியாதியை அதிகரிக்கிற மிக முக்கியமான விஷயமாகும்.


    பெண்களுக்கு சர்க்கரை வியாதியானது அதிகமாக இருக்கும் இந்த காலத்தில், அவர்களுக்கு பாலியல் உறவு சம்பந்தமான விஷயத்தில் என்னென்ன பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதை பற்றி பார்ப்போம்.

    பொதுவாக பெண்களுக்கு பெண் உறுப்பில் சர்க்கரை வியாதியால் பாதிப்பு அதிகமாக ஏற்படுகிறது. சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பாலியல் பிரச்சனைகள் எவ்வளவு வருகிறது என்று பார்த்தால், பாதிக்கப்பட்ட பெண்களில் 60 முதல் 70 சதவீதம் பேருக்கு ஏதாவது ஒரு காலகட்டத்தில் பாலியல் உறவு முறைகளில் பிரச்சனைகள் வருகிறது என்று ஆய்வுகள் நமக்கு தெரிவிக்கிறது.

    முதலில் அது உறவு முறைகளில் ஆர்வம் இல்லாத நிலையாக இருக்கலாம், விருப்பம் குறைவாக இருக்கலாம், பாலியல் உணர்வுகள் குறைவாக இருக்கலாம். இரண்டாவது, பாலியல் உணர்வுகள் நார்மலாக இருந்தால் கூட, பாலியல் உறவுக்கான எழுச்சி குறைவாக இருக்கலாம்.


    மூன்றாவதாக, இதனால் ஏற்படுகிற சில உச்ச கட்டங்களுக்கான பிரச்சனைகளை சீரான முறையில் அவர்களால் உணர முடியாமல் இருக்கலாம், நான்காவதாக, முக்கியமான விஷயமாக வலிகளும் ஏற்படலாம். அதனால் பாலியல் விஷயத்துகான இந்த 4 செயல்பாடுகளுமே சர்க்கரை வியாதி உள்ள பெண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.

    சர்க்கரை வியாதியால் பாதிக்கப்படுகிற பெண்களுக்கு அவர்களது உடலில் பலவிதமான தொற்று கிருமிகள் ஏற்படுகிறது. மேலும் இதனால் ஹார்மோன் மாற்றங்கள், செல்களில் மாற்றங்கள் ஆகியவை உருவாகிறது.

    குறிப்பாக ரத்தக்குழாய்களில் பழுது, நரம்பு மண்டலங்களில் பழுது, அதில் உள்ள தோல் பகுதிகள் மற்றும் ஜவ்வு பகுதிகளில் பழுது போன்றவையெல்லாம் சர்க்கரை வியாதி இருப்பவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிற ஒரு முக்கியமான விஷயம் ஆகும்.

    எனவே சர்க்கரை நோய் பாதிப்பு இருக்கிற பெண்களுக்கு, பாலியல் உறவு கொள்வதில் ஏன் ஆர்வம் ஏற்படாமல் இருக்கிறது என்று பார்த்தோமென்றால், இதுபற்றி வெளிவந்துள்ள பல்வேறு ஆய்வுகளிலும் சொல்லப்படுகிற ஒரு கருத்து பெண்களுக்கு உறவு கொள்வதில் ஆர்வம் குறைவு என்பதுதான்.

    அதாவது அந்த பெண்களுக்கு உறவு கொள்ளலாம் என்கிற எண்ணங்கள் வரலாம், ஆனால் உறவு கொள்வதற்கான ஆர்வம் மிகவும் குறைவாக இருக்கிறது என்று ஆய்வுகள் கூறுகிறது. இது பலராலும் மறுக்கப்பட முடியாத உண்மை.

    இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் முதல் முக்கியமான காரணம், பெண் உறுப்புகளில் ஏற்படுகிற சில உலர்வு தன்மைகள் ஆகும்.

    குறிப்பாக உடலில் சர்க்கரை அளவு அதிகமாகும் போது, இந்த பெண்களுக்கு பல ஹார்மோன் மாற்றங்கள் ஏற்பட்டு, பல நேரங்களில் ஈஸ்ட்ரோஜன் வருவது குறைவாகி, டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகமாகி, அதனால் ஏற்படும் சில பிரச்சினைகளால் பெண்களுக்கான உலர்வுத்தன்மை அதிகரிக்கிறது.


    இதன் மூலம் பெண் உறுப்பில் ஏற்படுகிற மாற்றங்கள், தாக்கங்கள் ஆகியவை மூலம் அவர்களின் ஆர்வம் குறைவாகலாம். பல நேரங்களில் இதற்கு சில நவீன சிகிச்சை முறைகளும் தேவைப்படலாம்.

    அந்த வகையில் சர்க்கரை வியாதி இருக்கிற பெண்களுக்கு, இந்த ஹார்மோன் குறைபாடுகள் ஏற்படுவது ரொம்ப ரொம்ப பொதுவான விஷயம் ஆகும். அதனால் தான் அவர்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் அளவு மாறுபடும், ஈஸ்ட்ரோஜன் அளவுகள் மாறுபடும்.

    ஏனென்றால் சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு குறிப்பாக முதலில், நரம்பு மண்டலமும், ரத்தக்குழாய்களும் பழுதாகும். இதன் காரணமாக பெண் உறுப்புக்கு போகும் ரத்த ஓட்டம் பாதிக்கப்படும்.

    மேலும் பெண்ணுறுப்பை சீராக வைத்திருக்கிற நரம்பு மண்டலம் பழுதாகும் நிலையில், அவர்கள் பாலியல் உறவு கொள்வதில் பிரச்சனைகள் ஏற்படலாம்.

    • குழந்தை பருவத்தில் தாயுடனான பந்தம் உணர்வுப்பூர்வமாக விளங்கும்.
    • டீன் ஏஜ் பருவத்தில்தான் தாயிடம் மகள் மீதான அக்கறையும் கூடும்.

    எல்லா பெண்களும் தங்கள் முதல் ரோல் மாடலாக கருதும் நபர் தாயாகத்தான் இருப்பார். ஏனெனில் சிறு வயது முதலே ஒவ்வொரு விஷயத்தையும் தாயை பார்த்தே செய்ய தொடங்குவார்கள்.

    எந்தவொரு புது முயற்சியை மேற்கொள்வதாக இருந்தாலும் அதில் தாயின் சாயல் வெளிப்படும். அந்த அளவுக்கு அவர்களின் ஒவ்வொரு செயல்பாடுகளும் தாயின் நடவடிக்கைகளை சார்ந்தே அமையும்.


    குழந்தை பருவத்தில் தாயுடனான பந்தம் உணர்வுப்பூர்வமாக விளங்கும். ஆனால் டீன் ஏஜ் வயதை எட்டும்போது அந்த உறவு பந்தத்தில் சற்று தடுமாற்றம் ஏற்படக்கூடும்.

    தாய் சொல்லும் சில விஷயங்களை கேட்கும் மன நிலையில் மகள் இருக்க மாட்டார். அதனால் மகள் தன்னிச்சையாக செயல்படுவது போன்ற உணர்வு தாயிடம் தோன்றும்.

    மற்ற பருவத்தை விட டீன் ஏஜ் பருவத்தில்தான் தாயிடம் மகள் மீதான அக்கறையும் கூடும். அதுவே மகளுக்கு எதிர்மறை எண்ணங்களை தோற்றுவித்துவிடும்.

    தன்னுடைய எதிர்பார்ப்புக்கு ஏற்ப மகள் நடந்து கொள்ள வேண்டும் என்று தாயார் விரும்புவார். அந்த எதிர்பார்ப்புகள் நிறைவேறாவிட்டாலோ, எதிர்பார்த்தபடி நடந்து கொள்ளாவிட்டாலோ மகள் மீது கடும் கோபத்தை வெளிப்படுத்துவார்கள்.

    மகளை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு முயற்சி செய்வார்கள். அவர்களது நோக்கம் மகளை நல்வழிப்படுத்துவதாகவே இருக்கும். ஆனால் அதை மகள் புரிந்துகொள்ளாத பட்சத்தில் தேவையற்ற பிரச்சினைகள் இருவருக்கும் இடையே எட்டிப்பார்க்கும். அது தாய்-மகள் உறவில் விரிசலை ஏற்படுத்தும். அதனை தவிர்ப்பதற்கு செய்ய வேண்டிய முக்கியமான விஷயங்கள் இவை...


    * டீன் ஏஜ் பருவத்தில் அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆர்வம் எல்லா பெண்களிடமுமே மேலோங்கும். ஆடை, அணிகலன் தேர்வுக்கு ரொம்பவே நேரம் செலவளிப்பார்கள். தங்களை மெருகேற்றுவதற்கான அத்தனை முயற்சிகளையும் மேற்கொள்வார்கள். பிடித்தமான அழகு சாதனப்பொருட்களையும் அதிகம் பயன்படுத்த ஆர்வம் காட்டுவார்கள்.

    அதனை கண்டிக்கும் மனோபாவமே பெரும்பாலான தாய்மார்களிடம் இருக்கிறது. அதைவிடுத்து இந்த அழகு சாதனப் பொருட்களையெல்லாம் தன்னிச்சையாக உபயோகிக்கக்கூடாது. சரும நல நிபுணர்களிடம் ஆலோசித்து பொருத்தமானவற்றை தேர்ந்தெடுக்க வழிகாட்ட வேண்டும்.

    அழகுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பதை கண்டிக்காமல் மகள் மனம் நோகாதவாறு எடுத்துக்கூற வேண்டும். பணத்தை வீண் விரயம் செய்வதாக கடிந்து கொள்ளவும் கூடாது. எவையெல்லாம் அழகை மெருகேற்ற பொருத்தமாக இருக்கும் என்பதை பக்குவமாக எடுத்துக்கூற வேண்டும்.

    * மகளின் செயல்பாடுகளில் சில தவறுகள் இருக்கலாம். அதனை பக்குவமாக புரியவைக்க வேண்டுமே தவிர, குடும்பத்தினர், மற்றவர்கள் முன்னிலையிலோ, பொது வெளியிலோ திட்டக்கூடாது.

    அப்படி பிறர் முன்பு திட்டுவது மகளுக்கு அவமானத்தையும், தாழ்வு மனப்பான்மையும் உண்டாகிவிடும். தாய்-மகள் உறவில் விரிசல் ஏற்படவும் காரணமாகிவிடும்.

    * மகளின் படிப்பு விஷயத்திலும் கடுமை கொள்ளக்கூடாது. மற்றவர்களுடன் ஒப்பிடுவதோ, மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதோ கூடாது. 'உன் மகளுடன் ஒப்பிடும்போது என் மகள் படிப்பில் சுமார்தான்' என்ற ரீதியில் பேசக்கூடாது.

    மகளின் குறைகளை அவரிடமே நேரில் சுட்டிக்காட்டி திருத்துவதற்கு முயற்சி செய்ய வேண்டுமே தவிர கடுமையாக நடந்து கொள்ளக்கூடாது.

    * அன்பு, தியாகம், பணிவு, இரக்கம், உதவும் மனப்பான்மை உள்ளிட்ட அனைத்து குணாதிசயங்களையும் கொண்டவராக மகளை வளர்த்தெடுக்கும் பொறுப்பு தாய்க்கு உண்டு.

    அதேவேளையில் சூழ்நிலைக்கு ஏற்ப குணாதிசயங்களை வெளிப்படுத்தும் பக்குவம் கொண்டவராகவும் மகளை வளர்த்தெடுக்க வேண்டும்.


    * மகளின் திருமணம் விமரிசையாக நடைபெற வேண்டும் என்ற விருப்பம் ஒவ்வொரு தாய்மார்களிடமும் இருக்கும். அதே எதிர்பார்ப்பும், ஆர்வமும் மகளிடமும் வெளிப்படும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். மகளின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கு முயற்சிக்க வேண்டுமே தவிர முட்டுக்கட்டை போடக்கூடாது.

    நடைமுறைக்கு சாத்தியமில்லாத விஷயங்களை பக்குவமாக விளக்கி புரிய வைக்க வேண்டும். ஒருவேளை மகளுக்கு திருமணத்தில் நாட்டம் இல்லை என்றால், அதற்கான சூழல் உருவாகும் வரை அமைதி காக்க வேண்டும்.

    • பனிக்குட நீரானது, குழந்தையை தொற்றுகளிலிருந்து காப்பாற்றுகிறது.
    • குழந்தையின் சுதந்திரமான அசைவுக்கும் உதவுகிறது.

    கருவிலுள்ள குழந்தையை சுற்றியுள்ள நீரையே நாம் பனிக்குட நீர் என்கிறோம். இந்த நீர் வற்றிப்போகும் நிலையை `ஆலிகோஹைட்ராமினியாஸ்' (Oligohydramnios) என்கிறோம்.


    குழந்தையின் சிறுநீரகங்கள், 16 வாரங்களுக்குப் பிறகு, சிறுநீரை உற்பத்தி செய்யத் தொடங்கும். இந்த பனிக்குட நீரானது தாயின் ரத்தம் மற்றும் கருவிலுள்ள சிசுவின் சிறுநீர் இரண்டும் சேர்ந்து உருவாவது.

    பனிக்குட நீரானது, குழந்தையை தொற்றுகளிலிருந்து காப்பாற்றுகிறது. வெளிப்புற அதிர்ச்சி உள்ளிட்டவற்றிலிருந்தும் கருவிலுள்ள குழந்தையைப் பாதுகாக்கிறது. குழந்தையின் சுதந்திரமான அசைவுக்கும் உதவுகிறது.

    கர்ப்ப காலத்தில் ஒரு பெண் பனிக்குட நீரை சரியான அளவில் வைத்திருந்து பிரசவக்காலம் நெருங்கும் போது நீரின் அளவு குறைந்தால் அதுவும் சிக்கலே.

    அப்போது கர்ப்பபைக்கு செயற்கையாக நீரை ஏற்றி சுகப்பிரசவத்துக்கு முயற்சி செய்வார்கள். அரிதாக சில குழந்தைகள் மலம் கழித்துவிடக்கூடும்.

    எனினும் குழந்தை மலத்தை விழுங்காமல் இருக்க இந்த அம்னியா இன்ஃப்யூஷன் செய்வதன் மூலம் தடுக்கலாம். இந்நிலையிலும் சிக்கல் தொடர்ந்தால் பாதுகாப்பான தாய் சேய் ஆரோக்கியத்துக்கு சிசேரியன் செய்வதற்கு மருத்துவர்கள் ஆலோசனை வழங்குவார்கள்.

    ஏனெனில் இது குழந்தைக்கு மூச்சுத்திணறலை உண்டாக்கும். சில பெண்கள் பனிக்குட நீர் வெளியேறுதலை சிறுநீர் கழிவதாக நினைத்து முழு நீரும் வெளியேறிய பிறகு வருவார்கள்.


    இவர்களுக்கு உடனடி சிசேரியன் அவசியமாகிறது. இந்த பனிக்குட நீர் குறைவாக பெற்றுள்ள குழந்தைகள் பிறந்த பிறகு அவர்களது நுரையீரல் வளர்ச்சி, சிறுநீரகம், மலம் போன்ற இயற்கை உபாதைகள் சீராக இருக்கிறதா என்ற பரிசோதனையும் செய்யப்படும்

    பனிக்குட நீர் குறைந்தால் என்ன செய்ய வேண்டும்?

    பனிக்குட நீர் குறைந்தால் மருத்துவர் சில வழிமுறைகளை பரிந்துரைப்பார்.

    பெண்கள் தண்ணீர் குடிப்பதை அதிகரிக்க செய்ய வேண்டும். கர்ப்பகாலத்தில் பனிக்குட நீர் குறைவாக கொண்டிருந்த பெண்கள் சிகிச்சையில் தண்ணீர் அதிகமாக குடித்த பெண்களை ஆய்வு செய்ததில் அவர்களது அம்னோடிக் திரவம் அதிகரித்தது கண்டறியப்பட்டது. இவர்கள் அதிக உடல் உழைப்பில்லாமல் சில காலம் ஓய்வில் இருக்க வேண்டும்.


    பனிக்குட நீர் அதிகரிக்கும் வரை உடல் செயல்பாடுகலை குறைக்க மருத்துவர் அறிவுறுத்துவர். அம்னியோஇன்ஃப்யூஷன் எனப்படும் செயல்முறையுடன் குறைந்த அளவு அம்னோடிக் திரவத்துக்கு சிகிச்சையளிக்கலாம்.

    இந்த சிகிச்சைக்கு திரவ அளவை அதிகரிக்க மருத்துவர் கருப்பை வாய் வழியாக அம்னோடிக் சாக்கில் உப்பு கரைசலை அறிமுகப்படுத்துவார்.

    கர்ப்பத்தின் இறுதி கட்டங்களில் அம்னோடிக் திரவம் மிக குறைவாக இருந்தால் மருத்துவர்கள் பிரசவத்தை பரிந்துரைக்கலாம். இதனால் பிரசவத்தின் போது ஏற்படக்கூடிய சிக்கல்களை தடுக்க உதவும்.

    ஒரு பெண் முதல்முறை கருத்தரிக்கும் போது கர்ப்பகால உடல் மாற்றம், உடலில் உண்டாகும் அறிகுறிகள், கவனமாக இருக்க வேண்டிய அறிகுறிகள் என அனைத்தையும் குறித்து மருத்துவர்களிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.

    குறிப்பிட்ட மாதங்களுக்கு மேல் குழந்தையின் அசைவு உணர்வீர்கள். குழந்தையின் அசைவு குறித்தும் விழிப்புணர்வு வேண்டும்.

    ஏனெனில் ஸ்கேன் பரிசோதனை தவிர்த்து குழந்தையின் அசைவை கொண்டு தான் பனிக்குட நீர் குறைவதை கண்டறியமுடியும் என்பதால் ஒவ்வொரு விஷயங்களிலும் கர்ப்பிணி எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

    • மேக்கப்பை விரும்பாத பெண்கள் இருக்கமாட்டார்கள்.
    • வறண்ட சருமத்தில் மேக்கப் செய்வது தவறான பழக்கமாகும்.

    மேக்கப்பை விரும்பாத பெண்கள் இருக்கமாட்டார்கள். சருமத்தை பொலிவாக்குவதற்காக விதவிதமான அழகு சாதனப்பொருட்களை கையாளுவார்கள். அவற்றை முறையாக உபயோகிக்க வேண்டும். தவறாக பயன்படுத்தி மேக்கப் செய்தாலோ, சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் பழக்க வழக்கங்களை தொடர்ந்தாலோ வயதாகும் செயல்முறையை துரிதப்படுத்தலாம்.

    சருமம் சோர்வாகவும், மந்தமாகவும் மாறலாம். சருமத்தை விரைவாக வயதானதாக மாற்றும் ஒப்பனை தவறுகள் பற்றியும், அவற்றை தவிர்ப்பது எப்படி என்பது பற்றியும் பார்ப்போம்.


    சன்ஸ்கிரீனை தவிர்க்காதீர்கள்

    முன்கூட்டியே முதுமை எட்டிப்பார்ப்பதற்கு சூரிய ஒளியே முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. இளமை பருவத்தை கடப்பதற்கு முன்பே சருமத்தில் சுருக்கங்கள், கோடுகள் ஏற்படுவதற்கு வழிவகுக்கிறது. சன்ஸ்கிரீனை பயன்படுத்துவது முக்கியமல்ல. அது எஸ்.பி.எப் 30 அல்லது அதற்கு மேற்பட்டதாக இருக்க வேண்டும்.

    இல்லாவிட்டால் சன்ஸ்கிரீனை பயன்படுத்தினாலும் கூட அது சருமத்திற்கு போதுமான பாதுகாப்பை வழங்காது. அத்துடன் எஸ்.பி.எப் 30-க்கு அதிகமான சன்ஸ்கிரீனை மழை, வெயில் என எதையும் பொருட்படுத்தாமல் தினமும் பயன்படுத்தும் வழக்கத்தை பின்பற்ற வேண்டும்.

    வறண்ட சருமம்

    ஈரப்பதமில்லாத, வறண்ட சருமத்தில் மேக்கப் செய்வது தவறான பழக்கமாகும். அது வயதை அதிகரிக்கச் செய்துவிடும். அந்த ஒப்பனை நீரேற்றம் இல்லாத பகுதிகளில் படர்வதால் கோடுகள், சுருக்கங்கள் அதிகமாக தெரியும்.

    அதனை தவிர்க்க மேக்கப் செய்வதற்கு முன்பு சருமத்தை நன்கு சுத்தப்படுத்த வேண்டும், அதில் ஈரப்பதத்தை தக்க வைக்க வேண்டும். அதற்கேற்ற அழகு சாதனப்பொருட்களை பயன்படுத்தினால், சருமத்தில் மென்மைத்தன்மையை உண்டாக்கும். மேக்கப் உலர்ந்த பகுதிகளில் ஒட்டிக்கொள்வது தவிர்க்கப்படும்.


    பவுண்டேஷன் பயன்பாடு

    சருமத்திற்கு கூடுதல் அழகு சேர்ப்பதற்கு பலரும் பவுண்டேஷன் பயன்படுத்துவார்கள். அதனை தேர்வு செய்வதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் அடர் பவுண்டேஷன்களை பயன்படுத்துவது சிலருக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

    காலப்போக்கில் சருமத்தில் கோடுகள், சுருக்கங்கள் தோன்றலாம். தடிமனான அடுக்கு கொண்ட பவுண்டேஷன்கள் சருமத்துளைகளை அடைத்து, உலர்வடைய செய்துவிடும். சரும எரிச்சலுக்கும் வழிவகுக்கும். அதனால் நீரேற்றத்தன்மை கொண்ட மென்மைத்தன்மையுள்ள பவுண்டேஷனை தேர்வு செய்ய வேண்டும். அவை சருமத்திற்கு அழகுடன் பாதுகாப்பையும் அளிக்கும்.


    கண் பகுதியை புறக்கணித்தல்

    கண்களை சுற்றியுள்ள தோல் மிகவும் மென்மையானது. அதனை முறையாக பராமரிக்காவிட்டால் விரைவில் முதுமை தோற்றம் எட்டிப்பார்க்க காரணமாகிவிடும். ஒப்பனை செய்யும்போது பலரும் கண் பகுதியை கவனிப்பதில்லை.

    கனமான கன்சீலர்கள் மற்றும் கண்களுக்கு ஒவ்வாமை ஏற்படுத்தும் பொருட்களை பயன்படுத்தும்போது கண் பகுதியில் கோடுகள், சுருக்கங்கள் தோன்றக்கூடும். கண்களின் அடிப்பகுதியில் பயன்படுத்துவதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கண் கிரீம்கள் மற்றும் கன்சீலர்களைப் பயன்படுத்துவது நல்லது.


    ஒப்பனையை அப்புறப்படுத்துதல்

    எவ்வளவு சோர்வாக வீடு திரும்பினாலும் தூங்குவதற்கு முன்பு மேக்கப்பை அப்புறப்படுத்திவிட வேண்டும். இல்லாவிட்டால் மேக்கப் சருமத் துளைகளை அடைத்து, சருமத்தில் காற்றும், ஈரப்பதமும் படர்வதை தடுத்துவிடும். விரைவாக வயதான தோற்றத்திற்கும் வழிவகுத்துவிடும்.

    மேக்கப்பை அகற்றுவதை புறக்கணிப்பது காலப்போக்கில் சருமத்திற்கு நீண்டகால சேதத்தை ஏற்படுத்தும். அதை தவிர்க்க தூங்க செல்வதற்கு முன்பு முகத்தை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். அது சருமம் புதுப்பித்தல் செயல்முறையை தொடங்குவதற்கு வித்திடும்.

    காலாவதி பொருட்களை பயன்படுத்துதல்

    காலாவதியான அழகுசாதனப் பொருட்களை பயன்படுத்துவது சருமத்தில் எரிச்சல், வீக்கத்தை ஏற்படுத்தும். தோல் பிரச்சனைகளை உண்டாக்கி விரைவாகவே வயதான தோற்றத்திற்கு வழிவகுத்துவிடும்.

    அழகு சாதனப்பொருட்களின் காலாவதி தேதிகளைத் தவறாமல் சரிபார்ப்பதோடு, அழகு சாதன நிபுணர்கள் பரிந்துரைக்கும் பொருட்களை பயன்படுத்துவது நல்லது.

    • குழந்தைகள், முதியவர்களுக்கு பிரச்சினை ஏற்படுவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
    • முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டால் தடுக்கலாம்.

    சென்னை:

    சென்னையில் பருவநிலை மாற்றம் காரணமாக 'மெட்ராஸ் ஐ' எனப்படும் கண் தொற்று நோய் பரவி வருகிறது. மழைக்காலத்தில் 'மெட்ராஸ் ஐ' கண் நோய் பரவுவது வழக்கம்.

    தற்போது குழந்தைகள், முதியவர்களுக்கு அதிக அளவில் கண் நோய் பிரச்சினை ஏற்படுவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து டாக்டர்கள் கூறியதாவது:-


    நமது கண்களில் விழியையும் இமையையும் இணைக்கும் ஜவ்வு படலத்தில் வைரஸ் தொற்று ஏற்படுவதால் 'மெட்ராஸ் ஐ' ஏற்படுகிறது. இந்த கண் நோய் பாதிப்புகள் காற்று மூலமாகவும், மாசுக்கள் வாயிலாகவும் பரவக்கூடும்.

    மேலும், 'மெட்ராஸ் ஐ' பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய பொருட்களை உபயோகித்தாலும் மற்றவர்களுக்கு அந்த நோய்த்தொற்று பரவும்.

    'மெட்ராஸ் ஐ' கண் நோயானது எளிதில் குணப்படுத்தக்கூடிய மிக சாதாரணமான தொற்று நோய் தான். ஆனால், அதை முதலிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். ஆனால் சிகிச்சை பெறுவதில் தாமதம் செய்து அலட்சியம் காட்டினால் பார்வையில் தெளிவற்ற நிலை ஏற்பட்டுவிடும்.


    கண் எரிச்சல், விழிப்பகுதி சிவந்து காணப்படுதல், நீர் சுரந்து கொண்டே இருத்தல், இமைப்பகுதி ஒட்டிக் கொள்ளுதல் உள்ளிட்டவை 'மெட்ராஸ் ஐ' நோய் தொற்றின் முக்கிய அறிகுறிகளாகும்.

    பொதுவாக ஒரு கண்ணில் 'மெட்ராஸ் ஐ' பிரச்சனை ஏற்பட்டால், மற்றொரு கண்ணிலும் அந்த பாதிப்பு வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. எனவே, அத்தகைய பாதிப்பு ஏற்பட்டவர்கள், மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும்.

    சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் மழைக்காலத்தில் 'மெட்ராஸ் ஐ' பாதிப்பு அதிகரித்து வருவதை காண முடிகிறது. விழிப்புணர்வாக இருந்து முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டால் அதை தடுக்கலாம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • ஆரம்ப கால ஸ்கேன்களில் பனிக்குட நீர் குறைவதை எளிதாக கண்டறியலாம்.
    • பெண்ணின் ஆறாம் மாதத்தில் குழந்தையின் அனாடமியை பரிசோதிப்பார்கள்.

    கர்ப்பத்தின் ஆரம்ப கால ஸ்கேன்களில் பனிக்குட நீர் குறைவதை எளிதாக கண்டறியலாம். ஒருவேளை பனிக்குட நீர் குறைபாடு கண்டறியப்பட்டால் குரோமோசோமல் பரிசோதனை செய்ய வேண்டும்.


    அப்போது இந்த பிரச்சனையின் தீவிரத்தையும், அதை சரிசெய்ய முடியுமா என்பதையும் மருத்துவர்கள் பரிசோதனை செய்வார்கள்.

    கர்ப்பத்தின் ஆரம்ப கட்டம் என்றால் அதை பொறுத்து கர்ப்பத்தை தொடர்வதா வேண்டாமா என்று முடிவு செய்வார்கள். பெண்ணின் ஆறாம் மாதத்தில் குழந்தையின் அனாடமியை பரிசோதிப்பார்கள்.

    அப்போது பனிக்குட நீரின் அளவு, நஞ்சுக்கொடி, குழந்தைக்கு போதுமான ரத்த ஓட்டம் கிடைக்கிறதா, ஆக்சிஜன் தேவையான அளவு கிடைக்கிறதா என்பதையும் பரிசோதிப்பார்கள். குறிப்பாக கர்ப்பிணியின் கடைசி மூன்றாம் மாதத்தில் பரிசோதனை செய்யப்படும்.


    பனிக்குட நீர் குறைவதற்கு காரணம்:

    ஒரு பெண்ணின் கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் பனிக்குட நீர் பற்றாக்குறையால் உண்டாகும் பல பிரச்சனைகள் சரி செய்யகூடியவை தான். குரோமோசோம் குறைபாடு காரணமாக சில குழந்தைகளுக்கு இப்பிரச்சனை உண்டாகலாம்.

    நஞ்சுக்கொடி வழியாக குழந்தைக்கு ரத்த ஓட்டம் குறையும் போதும், குழந்தைக்கு சிறுநீரக வளர்ச்சி குறைபாடு இருந்தாலும் பனிக்குட நீர் குறையலாம்.

    நஞ்சுக்கொடி சரியான நிலையில் இல்லாமல் கர்ப்பப்பை ஒட்டி இருந்தாலும் பனிக்குட நீர் அளவு மாறுபடலாம். பெண்ணுக்கு கர்ப்பப்பை காலம் தாண்டி பிரசவக்காலம் நெருங்கும் போது பிரசவ தேதி கடந்தால் அப்போது பனிக்குட நீர் குறையத் தொடங்கும்.

    குழந்தையை தாண்டி தாய்க்கு ஏதேனும் கர்ப்பப்பையில் ஏற்படும் நோய்த்தொற்று ஒரு முக்கிய காரணம் ஆகும்.

    கர்ப்பிணிக்கு கர்ப்பத்துக்கு முன்னரே அல்லது கர்ப்பகாலத்தில் ரத்த அழுத்தம், சிறுநீரக பிரச்சனைகள் போன்றவையும் காரணமாக இருக்கலாம்.

    தாயால் குழந்தைக்கு பனிக்குட நீர் பிரச்சனை ஏற்பட்டால் அடுத்து கருத்தரிக்கும் போதும் இந்த பிரச்சனை உண்டாகலாம்.


    பனிக்குட நீர் குறைவதை கர்ப்பிணிகளால் கண்டறிய முடியுமா?

    கர்ப்பிணிக்கு குறிப்பிட்ட மாதத்தில் குழந்தையின் அசைவு நன்றாக உணர முடியும். பனிக்குட நீர் குறைவதற்கான அறிகுறிகள் என்றால் அதில் முக்கியமானது குழந்தையின் அசைவு தெரியாமல் உணர்வதுதான்.

    குழந்தையின் அசைவை உணர்ந்த பெண்கள் திடீரென்று குழந்தையின் அசைவை உணர முடியவில்லை என்று டாக்டரிடம் செல்வார்கள். நீரின் அளவு குறையும் போது பனிக்குட நீரில் மிதக்கும் குழந்தை கர்ப்பப்பையை சுற்றி வராமல் ஒரே இடத்தில் நின்று விடும்.

    இந்நிலை கர்ப்பத்தின் இறுதி வாரங்களில் இருந்தால் குழந்தை தலைக்கீழாக அல்லது சில நேரங்களில் குறுக்கு நெடுக்காகவும் நின்றுவிடும். அப்போது தான் சிசேரியன் அவசியமாகிவிடுகிறது.

    • ஐடி நிறுவனங்கள் தான் Work from Home நடைமுறையை கொண்டு வந்தன.
    • அமெரிக்காவைச் சேர்ந்த Sapien Labs ஆராய்ச்சி நிறுவனம் தகவல்.

    கொரோனா காலத்தில் உலகம் முழுவதும் உள்ள மக்கள் வெளியே செல்லாமல் வீட்டிலிருந்தே வேலை செய்தனர். அந்த காலகட்டத்தில், வீட்டில் இருந்து வேலை செய்யும் பழக்கம் நடைமுறைக்கு வந்தது.

    அமேசான் மற்றும் இன்ஃபோசிஸ் மற்றும் ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை செய்யும் வசதிகளை வழங்கின.


    கொரோனா தொற்று கட்டுக்குள் வரத்தொடங்கிய பிறகும் சில ஆண்டுகளாக இன்றும் பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் விருப்பத்தை வழங்குகின்றன.

    ஆனால் நீண்ட நேரம் வீட்டில் இருந்து வேலை செய்வது மக்களின் மன ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக தெரியவந்துள்ளது.

    சமீபத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனமான Sapien Labs உலக அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியாவில் அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களின் மனநலம், வீட்டிலிருந்து வேலை செய்பவர்களை விட சிறப்பாக இருப்பதாக கூறியுள்ளது.

    அலுவலகத்தில் மற்றவர்களுடன் ஒத்துழைப்பதும், அலுவலகத்தில் உள்ள சூழலும் மன நலனில் பெரும் பங்கு வகிப்பதாகவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

    65 நாடுகளைச் சேர்ந்த 54,000 பேர் இந்த ஆய்வில் பங்கேற்றனர். மனநலத்தை மேம்படுத்துவதில் சக ஊழியர்களுடனான உறவு முக்கியப் பங்கு வகிக்கின்றன என்பதை ஆய்வு தெரிவிக்கிறது.


    இந்தியாவில், வீட்டில் இருந்து வேலை செய்பவர்களை விட அலுவலகத்தில் இருந்து பணிபுரிபவர்களின் மனநலம் சிறப்பாக இருப்பதாகவும், மேலும் ஊழியர்களின் சிரமத்திற்கு பணிச்சுமையே முக்கிய காரணம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் வேலை மற்றும் வாழ்க்கையில் சமநிலை போன்ற காரணங்கள் அடிக்கடி வலியுறுத்தப்படும் அதே வேளையில், வேலை செய்யும் இடத்தில் நல்ல உறவுகள் மற்றும் வேலையில் பெருமைப்படுதல் ஆகியவை மன ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானவை என்று அறிக்கை காட்டுகிறது.


    அதேசமயம் இந்தியாவில், அலுவலகத்திலிருந்து பணிபுரியும் பணியாளர்கள் சிறந்த மனநலத்துடன் இருப்பது கண்டறியப்பட்டது. மற்ற நாடுகளை விட இந்திய ஊழியர்களிடையே குழுப்பணியின் காரணமாக மனநலம் மேம்படுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.


    முழுக்க முழுக்க வீட்டிலிருந்து வேலை செய்பவர்கள் சோகமாகவும், தனிமைப்படுத்தப்பட்டதாகவும் உணர வாய்ப்புள்ளது. முற்றிலும் வீட்டிலிருந்து வேலை செய்வது குழப்பம், தேவையற்ற எதிர்மறை எண்ணங்கள் போன்ற உணர்வுகளுக்கு வழிவகுக்கும் என்பதை ஆய்வு உறுதிப்படுத்துகிறது.

    • அந்த கால பெண்களுக்கு வயிற்று பருமன் உபாதைகள் குறைவாக இருந்தது.
    • கட்டுப்பாடான உணவு பழக்கம், உடற்பயிற்சி இதற்கு தீர்வாக அமையும்.

    பெண்கள் அந்த காலத்தில் வீட்டு வேலைகளை அவர்களே செய்து வந்தனர். குறிப்பாக அம்மியில் மசாலா அரைப்பது, மாவு அரைப்பது, துணி துவைப்பது என பல்வேறு வேலைகளை செய்து வந்ததால் அவர்களுக்கு உடல் உழைப்பு அதிகமாக இருந்தது. இதனால் அந்த கால பெண்களுக்கு வயிற்று பருமன் போன்ற உபாதைகள் குறைவாக இருந்தது.


    தற்போது வீட்டு சமையல் அறையை எந்திரங்கள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளன. அனைத்து வேலைகளையும் எந்திரங்கள் மூலமாக பெண்கள் செய்கின்றனர். இதனால் உடல் உழைப்பு குறைந்து பலர் வயிற்று பருமன் உள்ளிட்ட பாதிப்புகளால் அவதி அடைந்து வருகின்றனர்.

    இது பற்றி சமீபத்தில் தனியார் நிறுவனம் ஒன்று ஆய்வு நடத்தியது. அதில் இந்தியாவில் அனைத்து தென் மாநிலங்களில் உள்ள பெண்களில் 35 சதவீதத்துக்கு மேல் வயிற்றுப் பருமன் பாதிப்பு அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது.

    தென்னிந்தியா முழுவதும் பெண்களிடையே வயிற்றுப் பருமனின் பரவல் 35 சதவீதத்திலிருந்து 50 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.


    அதிக வருமானம் கொண்ட பெண்கள் 32 சதவீத ஆற்றல் கொழுப்பில் இருந்து பெறப்பட்ட உணவை உட்கொள்கின்றனர், அதே சமயம் குறைந்த வருமானம் கொண்ட பெண்கள் 17 சதவீத ஆற்றல் மட்டுமே கொழுப்பு உணவுகள் சாப்பிடும் வழக்கத்தை கொண்டுள்ளனர்.

    தென்னிந்திய மக்களிடையே (72 சதவீதம்) உடல் உழைப்பின்மை மிக அதிகமாக உள்ளது, இதனால் தென்னிந்திய பெண்கள் உடல் பருமனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

    அதைத் தொடர்ந்து நாள்பட்ட நோய்களுக்கு ஆளாகக்கூடியதாகவும் உள்ளது. கிராமப் புறங்களிலும் பெண்களின் உடல் செயல்பாடு குறைவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.


    ஆண்களுக்கு குறைவு

    மிகவும் ஆச்சரியப்படும் விதமாக, பெண்களுடன் ஒப்பிடும் போது, ஆண்களிடையே வயிற்றுப் பருமன் பாதிப்பு மிகவும் குறைவாக உள்ளது. மொத்தத்தில், நாட்டில் வயிற்றுப் பருமன் பாதிப்பு பெண்களில் 40 சதவீதமாகவும், ஆண்களில் வெறும் 12 சதவீதமாகவும் உள்ளனர்.

    வயிற்றுப் பருமன் அதிகமாக இருப்பதால், வட இந்தியாவில் உள்ள பெண்களை விட, தென் மாநிலத்தில் உள்ள பெண்கள் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதயம், சிறுநீரகம் மற்றும் பக்கவாதம் போன்ற நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.

    தெலுங்கானா மாநிலத்தில் பெண்களிடையே வயிற்றுப் பருமன் பாதிப்பு 35 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை உள்ளது. கட்டுப்பாடான உணவு பழக்கம் உடற்பயிற்சி இதற்கு தீர்வாக அமையும் என தெரிவித்துள்ளனர்.

    • தினமும் சீரான உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.
    • தினமும் போதுமான நேரம் தூங்க வேண்டும்.

    மன அழுத்தம் என்பது நமக்கு பிடிக்காத ஒரு சூழ்நிலையை எதிர்கொள்வதால் ஏற்படும் கவலை அல்லது உணர்ச்சிகள் என வரையறுக்கப்படுகிறது. இது ஒரு இயற்கையான மனித எதிர் வினையாகும்.


    நம் வாழ்வில் ஏற்படும் சவால்கள், அச்சுறுத்தல்கள் மற்றும் கவலைகளை எதிர்கொள்ள நம்மைத்தூண்டுகிறது. ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் மன அழுத்தத்தை அனுபவிக்கிறார்கள்.

    ஆனால் மன அழுத்தத்திற்கு ஒவ்வொருவரும் பதிலளிக்கும் விதம் தான் ஒட்டுமொத்த வாழ்க்கையில் ஒரு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது.

    மன அழுத்தத்தால் உணரப்பட்ட அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் போது, மூளையின் அடிப்பகுதியில் உள்ள ஹைபோதாலமஸ், உடலில் ஒரு எச்சரிக்கை அமைப்பை உருவாக்குகிறது.

    நரம்பு மற்றும் ஹார்மோன்களின் சமிக்ஞைகள் மூலம், இந்த அமைப்பு சிறுநீரகத்தின் மேல் காணப்படும் அட்ரீனல் சுரப்பிகளை மற்றும் கார்டிசோல் போன்ற ஹார்மோன்களின் எழுச்சியை வெளியிட தூண்டுகிறது.

    அட்ரினலின் இதயத்தை வேகமாகத் துடிக்கச்செய்து, ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச்செய்து, அதிக ஆற்றலைத் தருகிறது.

    கார்டிசோல், மன அழுத்தத்தை தூண்டும் முதன்மை ஹார்மோன். இது ரத்த ஓட்டத்தில் குளுக்கோஸ் என்றும் அழைக்கப்படும் சர்க்கரையை அதிகரிக்கிறது, மூளையின் குளுக்கோஸின் பயன்பாட்டை அதிகரிக்கிறது.

    மன அழுத்தத்தால் ஏற்படும் எதிர்வினையால் கார்டிசோல், அட்ரீனலின் இவைகளின் அதிகப்படியான வெளிப்பாடு உடலின் அனைத்து செயல்முறைகளையும் சீர்குலைக்கும். இது பல உடல்நலப் பிரச்சனைகளுக்கு காரணமாக உள்ளது.

    குறிப்பாக-கவலை, மனச்சோர்வு, செரிமான பிரச்சனைகள், தலைவலி, தசை மற்றும் உடல் வலி, நீரிழிவு, இதய நோய், மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் பக்கவாதம், தூக்க பிரச்சினைகள், எடை அதிகரிப்பு, ஞாபக மறதி, கவனக்குறைவு, முடிவெடுபப்பதில் திணறல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.


    மன அழுத்தத்தை தவிர்ப்பது எப்படி?

    தினமும் சீரான உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும். இறை பிரார்த்தனை, ஆழ்ந்த சுவாசம், தியானம், யோகா செய்வது நல்ல பலன் தரும்.


    நகைச்சுவை உணர்வுடன் இருப்பது மற்றும் நகைச்சுவைகளை ரசிப்பது, நல்ல நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவது, பொழுதுபோக்குகளுக்கு நேரம் ஒதுக்குவது, புத்தகம் படிப்பது, இசை கேட்பது நல்லது.


    தினமும் போதுமான நேரம் தூங்க வேண்டும். ஆரோக்கியமான உணவுகள் உண்ண வேண்டும். புகையிலை, மது அருந்துதல் மற்றும் சட்டவிரோத பொருட்களை பயன்படுத்துதல் ஆகியவற்றிலிருந்து விலகி இருக்க வேண்டும்.

    சித்த மருத்துவம்

    சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி பிரம்மி மாத்திரை 1-2 வீதம் காலை, இரவு மற்றும் சடாமாஞ்சில் சூரணம் ஒரு டீஸ்பூன் இரவு வேளையில் சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்.

    • அடைக்கு அரைக்கும்போது பருப்பு, அரிசியுடன் கொஞ்சம் புளியும் சேர்த்து அரைத்தால் அதன் ருசியே தனி.
    • டீ தயாரிக்கும் பொழுது டீ தூளுடன் ஐந்து புதினாஇலைகளைப் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் பித்தம் நீங்கும்.

    * ஜவ்வரிசியை வறுத்து பொடி செய்து வைத்துக்கொண்டு அடை, வடை, தோசை செய்யும்போது சிறிது ஜவ்வரிசி மாவு சேர்த்து செய்தால் மொறுமொறு வென்றிருக்கும்.

    * ஜாங்கிரி செய்யும்போது, பத்து ஜாங்கிரியை தனியாக ஒரு பாத்திரத்தில் போட்டு, மேலே தயிர் ஊற்றி, கொஞ்சம் உப்பு போட்டு ஊறவைத்துச் சாப்பிட்டுப் பாருங்களேன். சூப்பர் ருசி!

    * தக்காளி சட்னி செய்யும்போது அதில் சிறிது எள்ளை வறுத்து பொடி செய்து போட்டால் ருசி அதிகமாக இருக்கும்.

    * மாதுளம்பூவை பாலில் போட்டு கொதிக்க வைத்து பூ வெந்ததும் எடுத்துவிட்டு ஆறியதும் பாலில் சிறிது தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் அருந்தவும். இதுபோல தொடர்ந்து எட்டு நாட்களுக்கு அருந்தினால் வயிறு தொடர்பான நோய்கள் குணமாகும்.

    * பருப்பு ரசம் நுரையுடன் பொங்கிவரும் போது கொத்தமல்லித்தழையை உடனே போடாமல் அடுப்பிலிருந்து கீழே இறக்கி, ஐந்து நிமிடம் தாமதித்து ரசத்தில் கிள்ளிப்போட்டால் மல்லி அதன் பசுமை மாறாமல் ரசம் கமகமவென்று வாசனையுடன் இருக்கும்.

    * சமையலுக்கு உபயோகிக்கும் பெருங்காயத்தை முதல் நாள் இரவே தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் அந்த பெருங்காய நீரை உபயோகித்தால் மணம் சீராக அமையும். பெருங்காயமும் குறைவாக செலவாகும்.

    * அடைக்கு அரைக்கும்போது பருப்பு, அரிசியுடன் கொஞ்சம் புளியும் சேர்த்து அரைத்தால் அதன் ருசியே தனி.

    * டீ தயாரிக்கும் பொழுது டீ தூளுடன் ஐந்து புதினாஇலைகளைப் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் பித்தம் நீங்கும்.

    * ஒரு கப் நல்லெண்ணெய்யை சூடாக்கி, அதில் ஒரு டேபிள்ஸ்பூன் ஓமம், இரண்டு வெற்றிலை, சிறிய வில்லை அளவு கற்பூரத்தை பொடித்து சேர்த்து, மறுபடியும் சூடு செய்து வைக்கவும். மறுநாள் இந்த எண்ணெய்யை தலைக்குதேய்த்து 20 நிமிடங்கள் ஊறவிட்டு குளித்தால் ஜலதோஷம் பிடிக்காது, புத்துணர்வும் கிடைக்கும்.

    * வெண்ணெய் பாக்கெட்டை இரவு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் போட்டு வைத்தால், வெண்ணெய் கையிலோ, பேப்பரிலோ ஒட்டாமல் வரும். மேலும் வெண்ணெய் காய்ச்சி இறக்கியதும் அதில் சிறிது வெந்தயத்தைப் போட்டு வைத்தால், நெய் வாசனையாக இருக்கும்.

    * இட்லிக்கு அரிசி ஊற வைக்கும்போது அரிசியோடு ஐந்தோ, ஆறோ சோயா பீன்ஸை ஊற வைத்து அரைத்தால் இட்லி மல்லிப்பூப் போல் மிருதுவாக இருக்கும்.

    * காய்கறி, பருப்பு, ரசம் இவற்றிற்கு அளவாக நீரைச்சேர்த்து கொதிக்கவிடவும். வெந்தபிறகு நீரை வடித்தால் அதில் உள்ள சத்துக்கள் வீணாகி விடும். அப்படி நீரை வடித்தால் அந்த வடிநீரை குழம்பு, கூட்டு இவற்றில் சேர்த்து விடவும்.

    * பால் லேசாகத்திரிந்து விட்டால், அதில் சிறிது சமையல்சோடா சேர்த்து கலந்து உறை ஊற்றவும். கெட்டித்தயிராகி விடும்.

    * குளிர்காலத்தில் தயிர் எளிதில் உறையாது. பாலை ஒரு ஹாட்பாக்ஸில் ஊற்றி, உறை ஊற்றி மூடி வைத்து விட்டால் மூன்று மணி நேரத்தில் உறைந்து விடும்.

    * பொரித்தெடுத்த ஜாமூனை சூடான சர்க்கரைப்பாகில் போட்டு ஊறவைக்காமல் நன்கு ஆறிய சர்க்கரைப்பாகில் சேர்த்தால் ஜாமூன் விரியாமல், கரையாமல், உடையாமல் சுவையாக இருக்கும்.

    * தேன்குழல், சீடை ஆகியவற்றைச்செய்யும் போது மாவை வெந்நீர் ஊற்றிப்பிசைந்தால் எத்தனை நாளானாலும் நமத்துப் போகாது.

    * வெள்ளரிக்காய் சூப் தயாரிக்கும்போது வெள்ளரிக்காயை நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்துச்சேர்த்தால் நன்றாக இருக்கும்.

    * வாழைப்பழம், ஆப்பிள் போன்ற பழங்களில் மில்க் ஷேக் செய்யும்போது கொஞ்சம் வெண்ணெய் போட்டு செய்தால் மில்க் ஷேக் நன்றாக நுரைத்துக் கொண்டு வரும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குழந்தை பாதுகாப்பாகவும் இருக்கும்.
    • குழந்தையின் மூளைக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்காது.

    ஒரு பெண் கர்ப்பத்தின் போது, கர்ப்பப்பையில் இருக்கும் குழந்தையை சுற்றி ஒரு நீர்ப்படலம் இருக்கும். இந்த நீர்ப்படலம் தான் பனிக்குட நீர் அல்லது அம்னோடிக் திரவம் என்று அழைக்கப்படுகிறது.


    பனிக்குட நீர் நிறமற்றது. இது வெள்ளையாகவோ அல்லது இளஞ்சிவப்பாகவோ இருக்கலாம். பனிக்குட நீர் அளவு சீராக இருந்தால் தான் குழந்தையின் சுவாசம் இயல்பாக இருக்கும். குழந்தை பாதுகாப்பாகவும் இருக்கும்.

    ஒரு சில கர்ப்பிணிக்கு பனிக்குட நீர் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருக்கும். இது குறையும் போது குழந்தைக்கு பாதிப்புகளை உண்டாக்கும்.


    பனிக்குட நீர் குறைவாக இருந்தால் என்ன ஆகும்?

    * தண்ணீர் பற்றாக்குறை காரணமாக சிசுவின் நஞ்சுக்கொடியானது கர்ப்பப்பையோடு ஒட்டி கொண்டு விடும். இதனால் வயிற்றில் வளரும் குழந்தைக்கு போக வேண்டிய ரத்த ஓட்டம் சீராக இல்லாமல் போகும்.

    * இதனால் குழந்தையின் மூளைக்கு தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காது. இதனால் குழந்தையின் மூளை வளர்ச்சி பாதிக்கப்படலாம்.

    * நுரையீரல் வளர்ச்சியிலும் குறை உண்டாகலாம். பிரசவத்துக்கு முன்னும் பின்னும் குழந்தைக்கு மூச்சுத்திணறல் போன்ற சிக்கல்கள் ஏற்படும். சமயங்களில் குழந்தைக்கு வளைந்த நிலையில் பாதங்கள் ஏற்படலாம்.


    * குழந்தை பனிக்குட நீர் குறையும் போது நஞ்சுக்கொடியின் அழுத்தத்தால் குழந்தையின் முகத்தில் மாறுதல்கள் உண்டாகலாம்.

    * பனிக்குட நீர் அதிகமாக குறைந்தால் அது அப்பெண்ணுக்கு அவசரமான மருத்துவ சிகிச்சை தேவை என்று சொல்லலாம்.

    இது அப்பெண்ணின் கர்ப்பகாலத்தில் எந்த மாதத்தில் உண்டாகிறது என்பதை பொறுத்து பாதிப்புகள் தீவிரமாகவோ சிகிச்சைக்குரியதாகவோ இருக்கலாம்.

    ×