என் மலர்
நீங்கள் தேடியது "பனிக்குட நீர்"
- குழந்தை பாதுகாப்பாகவும் இருக்கும்.
- குழந்தையின் மூளைக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்காது.
ஒரு பெண் கர்ப்பத்தின் போது, கர்ப்பப்பையில் இருக்கும் குழந்தையை சுற்றி ஒரு நீர்ப்படலம் இருக்கும். இந்த நீர்ப்படலம் தான் பனிக்குட நீர் அல்லது அம்னோடிக் திரவம் என்று அழைக்கப்படுகிறது.

பனிக்குட நீர் நிறமற்றது. இது வெள்ளையாகவோ அல்லது இளஞ்சிவப்பாகவோ இருக்கலாம். பனிக்குட நீர் அளவு சீராக இருந்தால் தான் குழந்தையின் சுவாசம் இயல்பாக இருக்கும். குழந்தை பாதுகாப்பாகவும் இருக்கும்.
ஒரு சில கர்ப்பிணிக்கு பனிக்குட நீர் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருக்கும். இது குறையும் போது குழந்தைக்கு பாதிப்புகளை உண்டாக்கும்.

பனிக்குட நீர் குறைவாக இருந்தால் என்ன ஆகும்?
* தண்ணீர் பற்றாக்குறை காரணமாக சிசுவின் நஞ்சுக்கொடியானது கர்ப்பப்பையோடு ஒட்டி கொண்டு விடும். இதனால் வயிற்றில் வளரும் குழந்தைக்கு போக வேண்டிய ரத்த ஓட்டம் சீராக இல்லாமல் போகும்.
* இதனால் குழந்தையின் மூளைக்கு தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காது. இதனால் குழந்தையின் மூளை வளர்ச்சி பாதிக்கப்படலாம்.
* நுரையீரல் வளர்ச்சியிலும் குறை உண்டாகலாம். பிரசவத்துக்கு முன்னும் பின்னும் குழந்தைக்கு மூச்சுத்திணறல் போன்ற சிக்கல்கள் ஏற்படும். சமயங்களில் குழந்தைக்கு வளைந்த நிலையில் பாதங்கள் ஏற்படலாம்.

* குழந்தை பனிக்குட நீர் குறையும் போது நஞ்சுக்கொடியின் அழுத்தத்தால் குழந்தையின் முகத்தில் மாறுதல்கள் உண்டாகலாம்.
* பனிக்குட நீர் அதிகமாக குறைந்தால் அது அப்பெண்ணுக்கு அவசரமான மருத்துவ சிகிச்சை தேவை என்று சொல்லலாம்.
இது அப்பெண்ணின் கர்ப்பகாலத்தில் எந்த மாதத்தில் உண்டாகிறது என்பதை பொறுத்து பாதிப்புகள் தீவிரமாகவோ சிகிச்சைக்குரியதாகவோ இருக்கலாம்.
- ஆரம்ப கால ஸ்கேன்களில் பனிக்குட நீர் குறைவதை எளிதாக கண்டறியலாம்.
- பெண்ணின் ஆறாம் மாதத்தில் குழந்தையின் அனாடமியை பரிசோதிப்பார்கள்.
கர்ப்பத்தின் ஆரம்ப கால ஸ்கேன்களில் பனிக்குட நீர் குறைவதை எளிதாக கண்டறியலாம். ஒருவேளை பனிக்குட நீர் குறைபாடு கண்டறியப்பட்டால் குரோமோசோமல் பரிசோதனை செய்ய வேண்டும்.

அப்போது இந்த பிரச்சனையின் தீவிரத்தையும், அதை சரிசெய்ய முடியுமா என்பதையும் மருத்துவர்கள் பரிசோதனை செய்வார்கள்.
கர்ப்பத்தின் ஆரம்ப கட்டம் என்றால் அதை பொறுத்து கர்ப்பத்தை தொடர்வதா வேண்டாமா என்று முடிவு செய்வார்கள். பெண்ணின் ஆறாம் மாதத்தில் குழந்தையின் அனாடமியை பரிசோதிப்பார்கள்.
அப்போது பனிக்குட நீரின் அளவு, நஞ்சுக்கொடி, குழந்தைக்கு போதுமான ரத்த ஓட்டம் கிடைக்கிறதா, ஆக்சிஜன் தேவையான அளவு கிடைக்கிறதா என்பதையும் பரிசோதிப்பார்கள். குறிப்பாக கர்ப்பிணியின் கடைசி மூன்றாம் மாதத்தில் பரிசோதனை செய்யப்படும்.

பனிக்குட நீர் குறைவதற்கு காரணம்:
ஒரு பெண்ணின் கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் பனிக்குட நீர் பற்றாக்குறையால் உண்டாகும் பல பிரச்சனைகள் சரி செய்யகூடியவை தான். குரோமோசோம் குறைபாடு காரணமாக சில குழந்தைகளுக்கு இப்பிரச்சனை உண்டாகலாம்.
நஞ்சுக்கொடி வழியாக குழந்தைக்கு ரத்த ஓட்டம் குறையும் போதும், குழந்தைக்கு சிறுநீரக வளர்ச்சி குறைபாடு இருந்தாலும் பனிக்குட நீர் குறையலாம்.
நஞ்சுக்கொடி சரியான நிலையில் இல்லாமல் கர்ப்பப்பை ஒட்டி இருந்தாலும் பனிக்குட நீர் அளவு மாறுபடலாம். பெண்ணுக்கு கர்ப்பப்பை காலம் தாண்டி பிரசவக்காலம் நெருங்கும் போது பிரசவ தேதி கடந்தால் அப்போது பனிக்குட நீர் குறையத் தொடங்கும்.
குழந்தையை தாண்டி தாய்க்கு ஏதேனும் கர்ப்பப்பையில் ஏற்படும் நோய்த்தொற்று ஒரு முக்கிய காரணம் ஆகும்.
கர்ப்பிணிக்கு கர்ப்பத்துக்கு முன்னரே அல்லது கர்ப்பகாலத்தில் ரத்த அழுத்தம், சிறுநீரக பிரச்சனைகள் போன்றவையும் காரணமாக இருக்கலாம்.
தாயால் குழந்தைக்கு பனிக்குட நீர் பிரச்சனை ஏற்பட்டால் அடுத்து கருத்தரிக்கும் போதும் இந்த பிரச்சனை உண்டாகலாம்.

பனிக்குட நீர் குறைவதை கர்ப்பிணிகளால் கண்டறிய முடியுமா?
கர்ப்பிணிக்கு குறிப்பிட்ட மாதத்தில் குழந்தையின் அசைவு நன்றாக உணர முடியும். பனிக்குட நீர் குறைவதற்கான அறிகுறிகள் என்றால் அதில் முக்கியமானது குழந்தையின் அசைவு தெரியாமல் உணர்வதுதான்.
குழந்தையின் அசைவை உணர்ந்த பெண்கள் திடீரென்று குழந்தையின் அசைவை உணர முடியவில்லை என்று டாக்டரிடம் செல்வார்கள். நீரின் அளவு குறையும் போது பனிக்குட நீரில் மிதக்கும் குழந்தை கர்ப்பப்பையை சுற்றி வராமல் ஒரே இடத்தில் நின்று விடும்.
இந்நிலை கர்ப்பத்தின் இறுதி வாரங்களில் இருந்தால் குழந்தை தலைக்கீழாக அல்லது சில நேரங்களில் குறுக்கு நெடுக்காகவும் நின்றுவிடும். அப்போது தான் சிசேரியன் அவசியமாகிவிடுகிறது.
- பனிக்குட நீரானது, குழந்தையை தொற்றுகளிலிருந்து காப்பாற்றுகிறது.
- குழந்தையின் சுதந்திரமான அசைவுக்கும் உதவுகிறது.
கருவிலுள்ள குழந்தையை சுற்றியுள்ள நீரையே நாம் பனிக்குட நீர் என்கிறோம். இந்த நீர் வற்றிப்போகும் நிலையை `ஆலிகோஹைட்ராமினியாஸ்' (Oligohydramnios) என்கிறோம்.

குழந்தையின் சிறுநீரகங்கள், 16 வாரங்களுக்குப் பிறகு, சிறுநீரை உற்பத்தி செய்யத் தொடங்கும். இந்த பனிக்குட நீரானது தாயின் ரத்தம் மற்றும் கருவிலுள்ள சிசுவின் சிறுநீர் இரண்டும் சேர்ந்து உருவாவது.
பனிக்குட நீரானது, குழந்தையை தொற்றுகளிலிருந்து காப்பாற்றுகிறது. வெளிப்புற அதிர்ச்சி உள்ளிட்டவற்றிலிருந்தும் கருவிலுள்ள குழந்தையைப் பாதுகாக்கிறது. குழந்தையின் சுதந்திரமான அசைவுக்கும் உதவுகிறது.
கர்ப்ப காலத்தில் ஒரு பெண் பனிக்குட நீரை சரியான அளவில் வைத்திருந்து பிரசவக்காலம் நெருங்கும் போது நீரின் அளவு குறைந்தால் அதுவும் சிக்கலே.
அப்போது கர்ப்பபைக்கு செயற்கையாக நீரை ஏற்றி சுகப்பிரசவத்துக்கு முயற்சி செய்வார்கள். அரிதாக சில குழந்தைகள் மலம் கழித்துவிடக்கூடும்.
எனினும் குழந்தை மலத்தை விழுங்காமல் இருக்க இந்த அம்னியா இன்ஃப்யூஷன் செய்வதன் மூலம் தடுக்கலாம். இந்நிலையிலும் சிக்கல் தொடர்ந்தால் பாதுகாப்பான தாய் சேய் ஆரோக்கியத்துக்கு சிசேரியன் செய்வதற்கு மருத்துவர்கள் ஆலோசனை வழங்குவார்கள்.
ஏனெனில் இது குழந்தைக்கு மூச்சுத்திணறலை உண்டாக்கும். சில பெண்கள் பனிக்குட நீர் வெளியேறுதலை சிறுநீர் கழிவதாக நினைத்து முழு நீரும் வெளியேறிய பிறகு வருவார்கள்.

இவர்களுக்கு உடனடி சிசேரியன் அவசியமாகிறது. இந்த பனிக்குட நீர் குறைவாக பெற்றுள்ள குழந்தைகள் பிறந்த பிறகு அவர்களது நுரையீரல் வளர்ச்சி, சிறுநீரகம், மலம் போன்ற இயற்கை உபாதைகள் சீராக இருக்கிறதா என்ற பரிசோதனையும் செய்யப்படும்
பனிக்குட நீர் குறைந்தால் என்ன செய்ய வேண்டும்?
பனிக்குட நீர் குறைந்தால் மருத்துவர் சில வழிமுறைகளை பரிந்துரைப்பார்.
பெண்கள் தண்ணீர் குடிப்பதை அதிகரிக்க செய்ய வேண்டும். கர்ப்பகாலத்தில் பனிக்குட நீர் குறைவாக கொண்டிருந்த பெண்கள் சிகிச்சையில் தண்ணீர் அதிகமாக குடித்த பெண்களை ஆய்வு செய்ததில் அவர்களது அம்னோடிக் திரவம் அதிகரித்தது கண்டறியப்பட்டது. இவர்கள் அதிக உடல் உழைப்பில்லாமல் சில காலம் ஓய்வில் இருக்க வேண்டும்.

பனிக்குட நீர் அதிகரிக்கும் வரை உடல் செயல்பாடுகலை குறைக்க மருத்துவர் அறிவுறுத்துவர். அம்னியோஇன்ஃப்யூஷன் எனப்படும் செயல்முறையுடன் குறைந்த அளவு அம்னோடிக் திரவத்துக்கு சிகிச்சையளிக்கலாம்.
இந்த சிகிச்சைக்கு திரவ அளவை அதிகரிக்க மருத்துவர் கருப்பை வாய் வழியாக அம்னோடிக் சாக்கில் உப்பு கரைசலை அறிமுகப்படுத்துவார்.
கர்ப்பத்தின் இறுதி கட்டங்களில் அம்னோடிக் திரவம் மிக குறைவாக இருந்தால் மருத்துவர்கள் பிரசவத்தை பரிந்துரைக்கலாம். இதனால் பிரசவத்தின் போது ஏற்படக்கூடிய சிக்கல்களை தடுக்க உதவும்.
ஒரு பெண் முதல்முறை கருத்தரிக்கும் போது கர்ப்பகால உடல் மாற்றம், உடலில் உண்டாகும் அறிகுறிகள், கவனமாக இருக்க வேண்டிய அறிகுறிகள் என அனைத்தையும் குறித்து மருத்துவர்களிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.
குறிப்பிட்ட மாதங்களுக்கு மேல் குழந்தையின் அசைவு உணர்வீர்கள். குழந்தையின் அசைவு குறித்தும் விழிப்புணர்வு வேண்டும்.
ஏனெனில் ஸ்கேன் பரிசோதனை தவிர்த்து குழந்தையின் அசைவை கொண்டு தான் பனிக்குட நீர் குறைவதை கண்டறியமுடியும் என்பதால் ஒவ்வொரு விஷயங்களிலும் கர்ப்பிணி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.






