என் மலர்
பெண்கள் உலகம்
- உடலில் ஒட்டுமொத்த ரத்த ஓட்டத்தையும் மேம்படுத்தும்.
- மனஅழுத்தத்தை பெரிதும் குறைக்க உதவுகிறது.
பெண்கள் பொதுவாக மாதவிடாய் நாட்களில் வயிற்றுவலி, முதுகுவலி, இடுப்புவலி, மன அழுத்தம், சோர்வு உள்ளிட்ட பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.
மாதவிடாய் காலத்தில் ஒருசில பெண்களுக்கு வலி இருக்காது. ஆனால் சில பெண்களுக்கு, தாங்க முடியாத அளவுக்கு வலி இருக்கும். அவர்கள் அதிக வயிற்றுவலி, ரத்தப்போக்கு காரணமாக மிகவும் பலவீனமாக உணர்வார்கள். இது போன்ற நேரத்தில், பெண்கள் நடைபயிற்சி செய்யலாமா?
மாதவிடாய் நாட்களில் நடைபயிற்சி செய்வது, மேம்பட்ட சுழற்சி, மனநிலை மேம்பாடு, மனஅழுத்த குறைவு, எடை கட்டுப்பாடு, ஒட்டுமொத்த நலவாழ்வு உள்ளிட்ட பல நன்மைகளை அளிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. பெண்கள் மாதவிடாய் நாட்களில் நடை பயிற்சி தவிர சில உடற்பயிற்சிகளும் செய்யலாம் என்று மகளிர்நல மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே, கவனமாக நடைபயிற்சி மேற்கொள்ளலாம்.

மாதவிடாய் நாட்களில் நடைபயிற்சி செய்வதன் நன்மைகள்
மேம்படுத்தப்பட்ட ரத்தஓட்டம்
மாதவிடாய் நாட்களில் நடைபயிற்சி செய்வது, உடலில் ஒட்டுமொத்த ரத்த ஓட்டத்தையும் மேம்படுத்தும். அதன் மூலம் மாதவிடாய் பிடிப்பு கட்டுப் படுத்தப்படும்.
இதுதவிர, மாதவிடாய் நாட்களில் நடைபயிற்சி செய்வது. ரத்தப்போக்கை திறம்பட நீக்குகிறது, உடலில் வலி, வீக்கம் ஏற்படுவதை தடுக்கிறது.
மனநிலை மேம்படும்
மாதவிடாய் நாட்களில் நடைபயிற்சி போன்ற உடல் செயல்பாடுகள் எண்டோர்பின்களை வெளியிடுகின்றன. அக இயற்கையாகவே மனநிலையை மேம்படுத்த இது உதவுகிறது.
பொதுவாக மாதவிடாய் நாட்களில் ஹார்மோன் மாற்றங்கள் மனநிலை மாறுபாடு அல்லது எரிச்சலை ஏற்படுத்தும். எனவே அதை தவிர்க்க, இந்த நாட்களில் நடைபயிற்சி செய்வது நல்லது.

மனஅழுத்தத்தை குறைக்கும்
மாதவிடாய் நாட்களில் பூங்கா, வயல்வெளி போன்ற இயற்கையான இடங்களில் அல்லது வீட்டுக்குள் ளேயே நடைபயிற்சி செய்யலாம். இது மனஅழுத் தத்தை பெரிதும் குறைக்க உதவுகிறது. ஏனெனில், மாதவிடாய் நாட்களில் சாதாரணமாகவே மன அழுத்தம் அதிகரிக்கும். எடை கட்டுப்பாடு
சீரான உடற்பயிற்சி திட்டத்தின் ஒரு பகுதியாக வழக்கமான நடைபயிற்சி, எடைக் கட்டுப்பாட்டுக்கு பெரிதும் உதவும். ஆரோக்கியமான எடையை பராமரிக்க மாதவிடாய் நாட்களில் நடைபயிற்சி செய்யலாம். சில மாதவிடாய் கால அசவுகரியங்களைத் தணிக்க வும் இது உதவுகிறது.

நலவாழ்வை மேம்படுத்தும்
மாதவிடாய் நாட்களில் நடைபயிற்சி போன்ற உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவது, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். தசைகளை வலுப்படுத்தும், உடலின் ஆற்றல் அளவை அதிகரிக்கும். இப்படி ஒட்டுமொத்த உடல் நலத்தையும் மேம்படுத் தும்.
சரி, மாதவிடாய் நாட்களில் நடைபயிற்சி செய்வதால் பாதிப்பே இல்லையா? அது குறித்தும் பார்க்கலாம்...
ரத்தப்போக்கு Surveillance மாதவிடாய் நாட்களில் நடைபயிற்ச உள்ளிட்ட உடற்பயிற்சி செய்யும்போது சில பெண்களுக்கு ரத்தப்போக்கு அதிகரிக்கலாம். இது தற்காலிக அதிகரிப்பு தான். ஆரோக்கியத்துக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாது.

தசைச்சோர்வு
மாதவிடாய் நாட்களில் தீவிரமான அல்லது நீடித்த நடைபயிற்சி, தசைச்சோர்வை ஏற்படுத்தும். குறிப்பாக கால்களில் அதிகப்படியான உடல் உழைப்பு, சோர்வு. பிடிப்புகள் போன்ற பிரச்சினைகளை உண்டாக்கலாம்.
சுகாதாரம்
மாதவிடாய் நாட்களில் பெண்கள் உடல் செயல்பாடுகளில் ஈடுபடும்போது தமது சுகாதாரத்திலும் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம்.
- மனச்சோர்வை நீக்கி தன்னம்பிக்கையை தூண்டும்.
- தாம்பத்தியத்தின் போது எண்டோர்பின்கள் இயற்கையாக வெளியிடப்படுகிறது.
எண்டோர்பின்கள் மூளையில் உள்ள பிட்யூட்டரி சுரப்பி மற்றும் ஹைபோதாலமஸால் வெளியிடப்படும் நரம்பியக்க கடத்திகள் ஆகும். இது இயற்கை ஹார்மோன்களாக செயல்பட்டு வலி, மன அழுத்தத்தைக் குறைக்கவும், மனநிலையை மேம்படுத்தி, மகிழ்ச்சியை அதிகரிக்கவும் செய்கிறது.

உடற்பயிற்சி, தாம்பத்தியம் போன்ற செயல்களைச் செய்யும்போது உடல் எண்டோர்பின்களை வெளியிடுகிறது. மனித உடல் 20 வகையான எண்டோர்பின்களை உற்பத்தி செய்கிறது.
ஒவ்வொன்றும் குறிப்பிட்ட செயல்பாடுகளுடன் தொடர்புடையது. இவற்றில் பீட்டா எண்டோர்பின்கள் வலிமையான மன அழுத்த நீக்கியாகவும், வலி நிவாரணிகளாகவும் தனித்து செயல்படுகின்றன. இவை இயற்கையாகவே வலியைத் தாங்குவதற்கும், மகிழ்ச்சியான உணர்வு ஏற்படவும் உதவுகிறது.

எண்டோர்பின் தரும் நன்மைகள்
மனச்சோர்வை நீக்கி தன்னம்பிக்கையை தூண்டும், அன்பை மேம்படுத்தும். பிரசவத்தின் போது ஏற்படுகின்ற வலியை கட்டுப்படுத்த உதவுகிறது.
ஆரோக்கியமான எடையை பராமரிக்க, பசியை கட்டுப்படுத்த உதவுகிறது. இயற்கையாக நாம் வலியை தவிர்ப்பதற்கும், நம்மை நன்றாக உணர வைப்பதற்கும் மூளையில் நரம்பு சமிக்ஞைகள் மூலமாக உதவுகிறது.

எண்டோர்பின்களை அதிகரிப்பது எப்படி?
உடற்பயிற்சி, நடத்தல், ஓடுதல், நீச்சல், நடனம், சைக்கிளிங், தியானம், ஆழ்ந்த சுவாசம் ஆகியவை எண்டோர்பின் உற்பத்தியை அதிகரிக்கிறது.
நன்றாக சிரிப்பது, இசை கேட்பது போன்றவை எண்டோர்பின்களை வெளியிடுவதோடு செரட்டோனின் மற்றும் டோப்போமின் சுரக்கும் அளவையும் அதிகரிக்கிறது.
காரமான உணவுகளில் உள்ள கேப்சின் மூளையை தூண்டி எண்டோர்பின்களை வெளியிட உதவுகிறது.
நறுமண எண்ணெய்களான லாவண்டர், ரோஸ்மேரி, சிட்ரஸ், ரோஸ், இவைகளின் வாசனை எண்டோர்பின் வெளியீட்டை தூண்டும்.
சூரியக்கதிரில் உள்ள புற ஊதா ஒளி தோலில் பீட்டா எண்டோர்பின் வெளியீட்டை தூண்டும். தாம்பத்தியத்தின் போது எண்டோர்பின்கள் இயற்கையாக வெளியிடப்படுகிறது.

உணவு மற்றும் சித்த மருத்துவம்
டார்க் சாக்லெட், வால்நட், காபி, சிட்ரஸ் பழங்கள், பால் பொருட்கள் போன்றவை எண்டோர்பின் சுரப்பை அதிகரிக்கிறது.
இந்தியன் ஜின்செங் என்று அழைக்கப்படும் அமுக்கிரா கிழங்கு பொடியை பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் எண்டோர்பின் சுரப்பது அதிகரிக்கும்.
சதாவரிக் கிழங்கு பொடி, மதன காமப் பூ பொடி, நிலப்பனைக்கிழங்கு பொடி ஆகியவற்றை சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிட்டு வந்தால் பலன் பெறலாம்.
உடலில் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்யும் போது இயல்பாகவே எண்டோர்பின் உற்பத்தி அதிகரிக்கும்.
- சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
- சர்க்கரை நோயாளிகளுக்கு தோல் மருக்கள் ஏற்பட வழிவகுக்கும்.
உங்கள் கழுத்தில் இருக்கும் தோல் மருக்கள் அக்ரோகார்டன் (ஸ்கின் டேக்) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. பொதுவாக கழுத்து, அக்குள், தொடை, கண், இமை, மார்பு, இடுப்பு, முதுகு போன்ற இடங்களில் இவை ஏற்படக்கூடும்.

தீங்கற்ற சதை வளர்ச்சியான இது, தோலின் மேற்பரப்புடன் ஒரு சிறிய தண்டு மூலம் இணைக்கப்பட்டிருக்கும். தோல் மருக்களுக்குள் நரம்பு செல்கள், கொழுப்பு செல்கள், நார்ச்சத்து, கொலோஜன், சிறிய ரத்த நாளங்கள் ஆகியவை இருக்கும். இதன் அளவு ஒன்று முதல் 20 மில்லி மீட்டர் வரை வேறுபடலாம். இது 'வார்ட்' எனப்படும் மரு வகைகளிலிருந்து வேறுபட்டது.
தோல் மருக்கள் உள்ளவர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு தோல் மருக்கள் அதிகம் இருப்பது, ரத்தத்தில் கொழுப்பின் அளவு கூடுதலாக இருப்பதன் ஒரு அறிகுறியாக இருக்கலாம் என்றும் ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளது.
உடல் பருமன், ரத்தத்தில் அதிக கொலஸ்ட்ரால் அளவு, இன்சுலின் எதிர்மறை நிலை, மரபணு கோளாறு ஆகியவை சர்க்கரை நோயாளிகளுக்கு தோல் மருக்கள் ஏற்பட வழிவகுக்கும் முக்கிய காரணங்களாகும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் தோல் சார்ந்த பிரச்சனைகளின் பட்டியலில் தொற்றுக்களுக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் மருக்கள் உள்ளது. இதற்கு பொதுவாக சிகிச்சை அவசியம் இல்லை. இது இயற்கையாகவே மறைந்து விடும்.
சில சமயம் தோல் மடிப்பு போன்ற இடங்களில் உள்ள மருக்கள், உராய்வு ஏற்படுவதன் மூலம் பெரிதாக வளரக்கூடும். இதற்கு தீர்வாக மருத்துவரை கலந்து ஆலோசித்து இதனை அறுவை சிகிச்சை, கிரையோதெரபி அல்லது மின் அறுவை சிகிச்சை மூலமாக அகற்றலாம்.
- உடலிலேயே பெரிய செல் பெண்களின் கருமுட்டை.
- மனித உடலின் வளர்ச்சி 21 வயதோடு நின்றுவிடுகிறது.

* உடலிலேயே பெரிய செல் பெண்களின் கருமுட்டை. சிறிய செல் ஆண்களின் விந்தணு.
* ஒருவர் வயிறு நிறைய சாப்பிட்ட பின், அவரது கேட்கும் திறன் சற்று குறையும். வேண்டுமானால் முயற்சித்துப் பாருங்களேன்.
* மாலை வேளையை விட, காலையில் அனைவரும் ஒரு செ.மீ உயரமாக இருப்போம்.
* பிறக்கும் போது ஆரம்பத்தில் அனைத்துமே கருப்பு மற்றும் வெள்ளையாகத் தான் தெரியும்.
* அனைவருக்குமே ஒரு கண் வலிமையாகவும், ஒரு கண் பலவீனமாகவும் இருக்கும்.
* ஒவ்வொருவருக்கும் விரல் ரேகைகள், நாக்கில் உள்ள ரேகைகள் மற்றும் வாசனை மாறுபடும்.
* இரவில் படுக்கும் போது, படுக்கை அறையானது மிகவும் குளிர்ச்சியாக இருந்தால், கெட்ட கனவுகள் வரக்கூடும்.
* மனித உடலின் வளர்ச்சி 21 வயதோடு நின்றுவிடுகிறது. கடைசிவரை வளர்வது காது மட்டுமே.
ஆயிரம் வருடம் வரை உயிர் வாழ்ந்தால் நமது காது ஒரு குட்டி யானையின் காது அளவிற்கு வளர்ந்திருக்கும்.
* உடலின் வலுவான விஷயம், பல்லின் மீது இருக்கும் எனாமல் தான். இது யானை தந்தத்தை விட வலுவானது என்று கண்டுப்பிடித்திருக்கிறார்கள்.
* மனிதனின் மூளையானது பகல் நேரத்தை விட, இரவில் தான் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். இதற்கான காரணம் இதுவரை சரியாக யாராலும் சொல்ல முடியவில்லை.
* உடலில் மற்ற இடங்களை விட, முகத்தில் வரும் முடியின் வளர்ச்சி மிகவும் அதிகமாக இருக்கும்.
* ஆண்களின் இதயத்துடிப்பை விட பெண்களின் இதயம் வேகமாக துடிக்கும்.
* ஆண்களை விட பெண்கள் இரு மடங்கு வேகமாக கண்ககளை சிமிட்டுவார்கள்.
* பெண்களை விட ஆண்களுக்கு தான் விக்கல் அடிக்கடி வரும்.

* கால் விரலில் வளரும் நகங்களை விட, 4 மடங்கு அதிகமாக கைவிரலில் நகங்களானது வேகமாக வளரும்.
* குழந்தைகள் பிறக்கும் போது, கண்கள் நீல நிறத்தில் இருக்கும். பின் உடலில் மெலனின் உற்பத்தி அதிகரிக்க அதிகரிக்க கருவிழியானது உண்மையான நிறத்தைப் பெறும்.
* குழந்தைகள் பிறக்கும் போது நுரையீரல் பிங்க் நிறத்தில் இருக்கும். சுவாசிக்க, சுவாசிக்க, காற்றில் இருந்து கலந்து வரும் மாசு காரணமாக தான் நுரையீரல் நிறம் கருமையாக மாறிவிடுகிறது.
* சராசரியாக ஒரு பெண் அறுபது வயதை எட்டும் போது, 450 குழந்தைகளை பெற்றெடுக்க தேவையான முட்டைகளை வெளியிட்டிருப்பாள்.
- இரைப்பை மற்றும் குடல் சார்ந்த நோய்களாலும் ஏற்படுகிறது.
- புகை பழக்கம் இருந்தாலும் வாய்ப்புண் ஏற்படும்.
வாய்ப்புண் வருவது மிகவும் சாதாரண விஷயமாக இருந்தாலும், அதைக் கவனிக்காமல் விட்டாலோ, அடிக்கடி வந்தாலோ பிரச்சனை பெரிதாகிவிடும். தொடக்கத்தில் உதடு, கன்னம், நாக்கு, அண்ணம் ஆகிய பகுதிகளில் கடுகளவு தோன்றும் கொப்புளங்கள், சில நாட்களில் உடைந்து குழிப்புண்களாக மாறி வலியை ஏற்படுத்தும்.

மன அழுத்தம், பாக்டீரியா, பூஞ்சை தொற்று, வைரஸ் இவற்றாலும் உண்டாகிறது. வைட்டமின் 'பி' சத்துக் குறைவாலும், இரைப்பை மற்றும் குடல் சார்ந்த நோய்களாலும் ஏற்படுகிறது. புகை பழக்கம் இருந்தாலும் வாய்ப்புண் ஏற்படும்.
வீட்டு வைத்திய முறைகள்:
1. கோவைக்காயில் சாம்பார், கூட்டு செய்து சாப்பிட வயிற்றுப்புண், வாய்ப்புண், உதடுவெடிப்பு குணமாகும்
2. சீரகத்தை சம அளவு நாட்டுசர்க்கரையுடன் பொடித்து காலை-மாலை 1 தேக்கரண்டி சாப்பிட உதடுவெடிப்பு, உதட்டுப்புண் குணமாகும்
3. திருநீற்றுப்பச்சை 4 இலைகளை மென்று சாறை விழுங்க வாய்ப்புண் குணமாகும்
4. ஒரு பிடி நெல்லி இலைகளை நன்கு கொதிக்கவைத்து இளம் சூட்டில் வாய் கொப்புளிக்க வாய்ப்புண் குணமாகும்
5. மணத்தக்காளி இலைகளை நெய்யில் வதக்கி துவையல் செய்து சாப்பிட வாய்ப்புண் குணமாகும்
6. மணத்தக்காளி இலைகளை மென்று சாறை 1 நாளைக்கு 6 முறை விழுங்கி வர வாய்ப்புண் குணமாகும்
7. மருதாணி இலைகளை 1 மணிநேரம் ஊறவைத்து காய்ச்சிய கஷாயத்தால் வாய்கொப்புளிக்க வாய்ப்புண், தொண்டைப்புண் ஆறும்.

8. ஆவாரைபட்டையை பொடித்து கசாயமிட்டு வாய்கொப்புளிக்க வாய்ப்புண், வாய் துர்நாற்றம் நீங்கும்
9. சிவனார்வேம்பு வேரால் பல்துலக்கிவர பல்வலி, ஈறுவீக்கம், வாய்ப்புண் குணமாகும்
10. கொய்யா இலைகளை மென்று பல்தேய்க்க பல்வலி,வாய்ப்புண் குணமாகும்.
- உணவு செரிமானத்தில் பித்தப்பையின் பங்கு முக்கியமானது.
- ஹார்மோன் அதிகமாக சுரப்பவர்களுக்கு இந்த நோய் வரும்.
பித்தப்பை கல் என்றால் என்ன?
இன்று மக்கள் அதிகமாக சந்தித்து வரும் நோய்களில் பித்தப்பை கல் நோயும் ஓன்று. இதை ஆங்கிலத்தில் (Gallstones) என்பார்கள். இந்த பித்தப்பை கல் ஏன் வருகிறது என்றால், உணவு முறை தான் முதல் காரணம்.

இந்த பித்தப்பை ஒரு சிறு உறுப்பு தான் இது மனிதனின் ஈரலுக்கு கீழ் அமைந்து இருக்கும். இதனுடைய செயல்பாடுகள் என்னவென்றல், உணவு செரிமானத்தில் பித்தப்பையின் பங்கு முக்கியமானது.
அதுபோல் இது மனிதனின் பித்த நீரை சேமித்து வைத்துக் கொள்ளும் ஒரு தனி அறை. நாம் உண்ணும் உணவானது செரிப்பதற்கு தேவையான அமிலத்தை நம்முடைய ஈரல் சுரக்கிறது. இந்த அமிலம் பலவகையான பொருட்களால் ஆனது. அவை கொழுப்பு, பித்தச்செம்பசை, பித்த உப்பு. இது சுரந்து அதை குடல் வழியாக நம் உணவோடு சேர்த்துவிடும்.

பித்தப்பையில் கல் உருவாக காரணம்?
இந்த நோயானது நம் குடும்பத்தில் யாருக்காவது இருந்தது என்றால். குடும்பத்தில் உள்ள மற்ற நபர்களுக்கும் வரும் வாய்ப்பு உள்ளது.
உடல் பருமன் இதில் முக்கிய பங்கு ஆற்றுகிறது. உடல் பருமனானவர்களுக்கு கொழுப்பு அதிகமாக உண்டாகிறது. அந்த கொழுப்பானது பித்தபையை காலியாக இருக்கவிடாது.
கொழுப்பை அதிகமாக உடலில் உண்டு பண்ணும் மேலும் இது பித்தபையை அசைய விடாமல் அதன் செயல் பாடுகளை குறைக்கும். கர்ப்பமாக உள்ளவர்கள், கருத்தடை மாத்திரை எடுத்து கொண்டவர்கள், ஹார்மோன் அதிகமாக சுரப்பவர்களுக்கு இந்த நோய் வரும் வாய்புகள் அதிகம்.
பாலினம் மற்றும் வயதும் ஒரு முக்கிய காரணம். இந்த நோய் வயதான பெண்களை அதிகமாக தாக்கும்.
போதையான கொழுப்பு பொருள் பித்தத்தில் கொழுப்பை அதிகப்படுத்தும். இது போன்று நிகழும் போது கொழுப்பு கற்கள் உருவாகும்.
இந்த நோயால் பாதிப்படைந்தவர்கள் முதலில் உடல் பருமனை குறைக்க வேண்டும்.
அறிகுறிகள்:
மேற்புற வாயிற்று பகுதியில் மற்றும் முதுகு புரத்தின் மேற்புறத்தில் வலி உண்டாகும்.
குமட்டல்.
வாந்தி.
உணவு பாதையில் பிரச்னை, வாயு தொல்லை, அஜீரணம்.
வீட்டு வைத்திய முறை:
புற்றுநோய்க்கு அடிகோலும் பித்தப்பை கற்களை, நாமே இயற்கை வழியில் அகற்றலாம். மேலும் இந்த வழிமுறை, வலுவிழந்த நமது கல்லீரலை, புத்துணர்வு பெறவும் உதவுகிறது.
ஐந்து நாட்களுக்கு, தொடர்ந்து 4 கிளாஸ் ஆப்பிள் ஜூசையோ அல்லது தினமும் 4 அல்லது 5 ஆப்பிள்களை உண்டுவரவும். பித்தப்பையில் உள்ள கற்களை மிருதுவாக்க, ஆப்பிள் ஜூஸ் உதவும்.
ஆறாம் நாளில், மாலை 6 மணி மற்றும் இரவு 8 மணிக்கு சுடுநீரில் எப்சம் உப்பை (மெக்னீசியம் சல்பேட்) கலந்து குடிக்கவும். எப்சம் உப்பு, பித்தப்பை குழாய் திறப்பை எளிதாக்கும்.
இரவு 10 மணிக்கு, அரை கோப்பை ஆலிவ் எண்ணெய் அல்லது எள்ளு எண்ணெயை, அதே சம அளவுள்ள எலுமிச்சை சாறுடன் நன்கு கலக்கி குடிக்கவும். இது பித்தப்பை குழாய் வழியே, கற்கள் வெளியேற வழிவகுக்கும்.
அன்றைய தினத்தில், இரவு நேர உணவை தவிர்க்க வேண்டும்.
மறுநாள் காலை, இயற்கை உபாதையில், பச்சை நிற பித்தப்பை கற்கள் வெளியேறி இருப்பதை காணலாம்.
- ஒரு வருடத்தில் 21 லட்சம் பேருக்கு மார்பக புற்றுநோய் வருகிறது.
- புரோஜெஸ்ட்ரோன் ஹார்மோன் அதிகமானால் புற்றுநோய் ஆபத்து.
புற்றுநோய் என்பது இப்போது பரவலாகவே அதிகரித்து வருகிறது. புற்றுநோயை பொருத்தவரை என்றைக்குமே வருமுன் காப்பது என்பது தான் நல்லது. வந்த பிறகு தீர்ப்பது என்பது கவலை தரக்கூடிய விஷயமாகி விடும்.
புற்றுநோயை வருமுன் காப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுகிறது. புற்றுநோய் என்ன காரணத்தினால் வரும் என்பது தெரிந்தால் தான் நாம் அதை தவிர்க்க முடியும்.

பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பவாய் புற்றுநோயை தடுப்பதற்கு தடுப்பூசி வந்து விட்டது. அதேபோல் இன்னும் சிலவகையான புற்றுநோயை தடுப்பதற்கும் தடுப்பூசி உள்ளது. ஆனால் பெண்களை அதிகமாக பாதிக்கின்ற ஒரு புற்றுநோய் மார்பக புற்றுநோய் தான்.
இந்த மார்பக புற்றுநோயை தடுப்பதற்கான வழிமுறைகளை அறிய இன்று பலரும் இதை ஒரு ஆய்வாக எடுத்து செய்துகொண்டிருக்கிறார்கள்.
உலக அளவில் பெண்களை அதிகம் பாதிக்கின்ற புற்றுநோயில் மார்பக புற்றுநோய் முதலிடத்தில் உள்ளது. உலக அளவில் கொடுக்கப்பட்டுள்ள தரவுகளின் படி ஒரு வருட காலத்தில் 21 லட்சம் பேருக்கு மார்பக புற்றுநோய் வருகிறது. இவற்றில் கிட்டத்தட்ட 6 லட்சம் பேர் புற்றுநோயால் இறப்பது தான் எல்லோருக்கும் அதிர்ச்சி தரக்கூடிய தகவல்.
நமது நாட்டில் மட்டுமே கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் புதிய புற்றுநோயாளிகளாக உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். இதில் 60 சதவீதம் பேருக்கு கடைசி நேரத்தில் தான் புற்றுநோய் கண்டுபிடிக்கப்படுகிறது என்பது வருந்தத்தக்க விஷயம்.
இந்த மார்பக புற்றுநோயின் முக்கியமான விஷயமே ஆரம்ப நிலையில் கண்டுபிடித்தால் அதை முழுமையாக சரிப்படுத்த முடியும். வாழ்நாள் முழுவதும் நல்ல முறையில் வாழவும் முடியும்.

மார்பக புற்றுநோய் வருவதற்கான காரணங்கள் என்ன?
பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கு பல காரணங்களை சொல்லி இருக்கிறார்கள். அந்த காரணங்களை தெரிந்து கொள்ளும் நிலையில் மார்பக புற்று நோய் வராமல் தடுக்கும் முறைகளை கடைபிடிக்க முடியும்.
மரபுவழியாக:
முக்கியமாக உங்கள் குடும்பங்களில் அம்மா, பாட்டி, சித்தி, அத்தை உள்ளிட்ட நெருங்கிய ரத்த சொந்தங்கள் யாருக்காவது ஏதாவது ஒரு வகை புற்றுநோய் வந்திருந்தாலோ அல்லது மார்பக புற்றுநோயோ, கர்ப்பவாய் புற்றுநோயோ வந்திருந்தால் கண்டிப்பாக அது உங்களுக்கும் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
எனவே மரபு ரீதியாக மார்பக புற்றுநோய் மரபணு 1 (ப்ராக்கா 1), மார்பக புற்றுநோய் மரபணு 2 (ப்ராக்கா 2) இருக்கிறவர்களுக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
எனவே உங்கள் குடும்பங்களில் யாருக்காவது புற்றுநோய் வந்திருந்தால் கண்டிப்பாக நீங்கள் ஒரு மரபுவழி பரிசோதனை செய்து புற்றுநோய் மரபணு இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள். அது பாசிட்டிவா அல்லது நெகட்டிவா என்று பார்த்தால் உங்களுடைய ஆபத்து காரணிகள் தெரியும்.
குடும்ப மரபுவழி, ஹார்மோன் சார்ந்திருத்தல், உடல் ரீதியான வாழ்க்கை முறை காரணிகள் ஆகிய மூன்றும் தான் புற்றுநோய் வருவதற்கான முக்கியமான காரணங்கள் ஆகும்.

ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகமாக இருக்கும் பெண்கள்:
பொதுவாக மார்பக புற்றுநோய் வருவதற்கான காரணமே ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாக இருப்பது தான். மார்பகத்தில் ஈஸ்ட்ரோஜன் ஏற்பிகள் மற்றும் புரோஜெஸ்ட்ரோன் ஏற்பிகள் ஆகியவை இருக்கிறது.
ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகமாகும் போது இந்த ஏற்பிகளின் செயல்பாடுகள் அதிகரித்து செல்களின் வளர்ச்சி தூண்டப்படும். அதன் காரணமாக மார்பகத்தில் பால் சுரக்கும் பகுதியில் இருக்கிற எபிடெலியல் செல்கள் தூண்டப்பட்டு அது வளரத் தொடங்கி கூடுதலாக வளர்ச்சி அடைந்து புற்றுநோயாக மாறுகிறது.
இந்த வகையில் ஈஸ்ட்ரோஜன் அதிகமாக இருக்கும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது.
பொதுவாக ஈஸ்ட்ரோஜன் அதிகமாக யாருக்கு இருக்கும் என்று பார்த்தால் ரொம்ப காலம் மார்பகத்தில் ஈஸ்ட்ரோஜன் உருவாகும் பெண்களுக்கு தான் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாக இருக்கும்.
குறிப்பாக பல பெண்கள் 11 வயதுக்கு முன்பே பருவமடைகிறார்கள். பருவமடைதல் என்பது பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகமாக இருப்பதை குறிக்கிறது. அதாவது அவர்களுக்கு ஈஸ்ட்ரோஜன் வரத்தொடங்கி விட்டது என்று அர்த்தம். இது குறிப்பிட்ட வயதுக்கு முன்பே பருவமடைதல் ஆகும்.

இரண்டாவது தாமதமான மெனோபாஸ், அதாவது 50 வயதுக்கு மேலும் மாதவிலக்கு நிற்காத பெண்கள் ஆவர். இந்த 2 வகையான பெண்களுக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாக உள்ளது. மார்பக திசுக்களில் ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகமாக இருப்பதால் பல நேரங்களில் இது ஒரு ஆபத்து காரணியாக கருதப்படுகிறது.
ஹார்மோன்கள் இயற்கையாக வருவது அதிகமாக இருக்கும் கால கட்டங்களில் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருகிறது. அதனால் தான் சிறு வயதிலேயே பருவமடைந்த பெண்களுக்கு கண்டிப்பாக மார்பகப் புற்று நோய்க்கான பரிசோதனையை ஆரம்ப நிலையிலேயே செய்ய வேண்டும்.
மேலும் 50 வயதை கடந்த பெண்களுக்கு மாதவிலக்கு நிற்காமல் வந்துகொண்டே இருந்தால் கண்டிப்பாக அவர்களும் மார்பகப் புற்றுநோய் பரிசோதனை செய்ய வேண்டும்.

தாய்ப்பால் கொடுக்காத பெண்கள்:
இன்றும் பெண்களுக்கிடையே அதிகரித்து வருகிற ஒரு முக்கியமான பிரச்சனை கருத்தரிப்பதை தள்ளிப்போடுவது ஆகும்.
30 வயதை கடந்த பெண்கள் குழந்தை பேறு பெறுவதற்கான பல்வேறு சிகிச்சை முறைகளை எடுத்துக்கொள்வது அதிகரித்து வரும் இந்த காலகட்டங்களில் மிகவும் தாமதமாக கருத்தரிப்பது ஒரு ஆபத்து காரணியாக கருதப்படுகிறது.
அதேபோல் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்காத பெண்களுக்கும் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஏனென்றால் கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு புரோஜெஸ்ட்ரோன் என்கிற ஹார்மோன் அதிகமாகும். ஈஸ்ட்ரோஜனுக்கு எதிராக இருக்கிற இன்னொரு ஹார்மோன் தான் புரோஜெஸ்ட்ரோன்.

பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் தான் இந்த புரோஜெஸ்ட்ரோன் ஹார்மோன் உருவாகுதல் அதிகமாக இருக்கிறது. எனவே கருத்தரித்தல் தாமதமாகும் போது அதிக காலம் ஈஸ்ட்ரோஜன் உருவாகிறது.
அதேபோல் கர்ப்பம் தரிக்காத பெண்களுக்கு இந்த புரோஜெஸ்ட்ரோன் ஹார்மோனே இல்லாமல் ஈஸ்ட்ரோஜன் ஆதிக்கமே அதிகமாக இருகிறது. இதனால்தான் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது புரோஜெஸ்டிரோன், ஆக்சிடோசின் உள்ளிட்ட எல்லா ஏற்பிகளும் ஈஸ்ட்ரோஜன் ஏற்பிகளின் உணர்திறனை குறைக்கும். இவை அனைத்தும் பால் சுரப்பதற்கு முக்கியமான ஒன்றாகும்.
எனவே தாய்ப்பால் சரியாக கொடுக்காத பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் தாக்கம் அதிகமாகி அதனால் மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
- இஞ்சி செரிமானத்தை மேம்படுத்துகிறது.
- குடல் சார்ந்த பாதிப்புகளில் குணம் கிடைக்கும்.
காலை இஞ்சி, கடும் பகல் சுக்கு, மாலை கடுக்காய் என்கிறது, சித்த மருத்துவம்.
இஞ்சியை உணவில் சரியான அளவில் தினமும் உண்டு வந்தால் மூட்டு வலி முதல் புற்றுநோய் வரை எதுவும் வராது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இஞ்சி செரிமானத்தை மேம்படுத்துகிறது. அஜீரணம், புண்கள், மலச்சிக்கல் நீங்கும். குடல் சார்ந்த பாதிப்புகளில் குணம் கிடைக்கும்..

இஞ்சியில் காணப்படும் மருத்துவ குணங்களால், உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் வலிமை பெறுகிறது. மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. இஞ்சி ஒரு இயற்கை வலி நிவாரணி. அழற்சி எதிர்ப்பு மற்றும் வலியை விளைவிக்கும் உடலில் உள்ள கழிவுகளை அகற்ற உதவுகிறது.
ரத்தம் கெட்டியாகி உறைவதை தடுக்கும் இயல்பையும் இஞ்சி கொண்டுள்ளது. தொடர்ந்து இஞ்சி உட்கொள்ள ரத்தம் கெட்டியாவது தடுக்கப்பட்டு மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.
சில ஆய்வுகள் இஞ்சியை உட்கொள்வது உடல் எடையை குறைக்க உதவுகிறது என்று காட்டுகின்றன. இஞ்சி இன்சுலின் அளவை கட்டுப்படுத்துகிறது. வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. இதனால், உடல் எடை சீராக இருக்க உதவுகிறது.

இஞ்சியில் உள்ள சில வேதிப்பொருட்கள் உடல்தோலின் பொலிவை மேம்படுத்துகிறது. இதனால், தோலில் சுருக்கம் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. இளமை நீடிக்கிறது. மூட்டு தேய்மானம் தடுக்கப்பட்டு மூட்டு எந்த வயதிலும் வலிமையாக இருக்க உதவுகிறது என்று அந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
- மார்பக புற்றுநோயாளிகளில் 20 சதவீதம் மட்டுமே குடும்பவழி பாதிக்கப்பட்டவர்கள்.
- கட்டிகள் மேமோகிராமால் கூட கண்டுபிடிக்கப்படாமல் போகலாம்.
நீண்ட காலமாக பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகின்றனர். பலரும் ஆரம்ப கட்டத்திலேயே அதை கண்டறியாமல் விடுவதால் அதன் தீவிரமும் அதிகமாகி விடுகிறது. அதற்கு காரணம் மார்பக புற்றுநோய் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாமையே.

பரம்பரை நோய் அல்ல:
கண்டிப்பாக. எல்லோருக்கும் மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் யாருக்காவது இருந்தால் தான் மார்பக புற்றுநோய் வரும் என்றெல்லாம் எந்த அவசியமும் இல்லை.
புள்ளி விவரங்களின் படி ஒட்டுமொத்தமாக 100 சதவீத மார்பக புற்றுநோயாளிகளில் 20 சதவீதம் மட்டுமே குடும்பவழி பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர். பிற 80 சதவீதம் நோயாளிகளுக்கு பல்வேறு காரணங்களால் மார்பக புற்றுநோய் பாதித்துள்ளது.

புகைப்பழக்கம் மற்றும் மதுப்பழக்கம்:
மார்பக புற்றுநோய் மட்டுமின்றி அனைத்து விதமான புற்றுநோய்களுமே வராமல் இருக்க ஆரோக்கியமான வாழ்க்கைமுறை மிக அவசியம். சரியான உயரம், எடை, பிஎம்ஐ நிர்வகித்தல் மற்றும் புகைப்பழக்கம், குடிப்பழக்கத்தை தவிர்த்தல் அவசியமானது. ஆனால் இதனால் மட்டுமே உங்களுக்கு புற்றுநோய் வராது என்று உறுதி கொடுக்க முடியாது.
ஒருவருக்கு புற்றுநோய் ஏற்பட பல்வேறு விதமான காரணங்கள் இருக்கின்றன. எனவே, குறிப்பிட்ட ஒரு விஷயத்தை மட்டும் புற்றுநோய் காரணமாக கருத முடியாது. அதே சமயம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவதால் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்க முடியும்.

உள்ளாடை:
இந்த சந்தேகம் பலருக்கும் நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது. இது வீணாக பரவும் பொய் வதந்தி மட்டுமே. எந்த விதமான உள்ளாடைகளையும் பயன்படுத்துவதால் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு கிடையாது என்பதே உண்மை.
சர்க்கரை அளவு அதிகரித்தல்:
எந்த ஒரு தனித்த உணவும் புற்றுநோயை உண்டாக்கும் என்று நிரூபிக்கப்பட்டதில்லை. ஆனால், நீண்ட நாட்களாகவே நீங்கள் அதிகமான அளவு சர்க்கரையை எடுத்து கொண்டு வரும்போது அதன் சங்கிலி தொடராக அதிகமான ஜங்க் உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் உண்ண வேண்டியிருக்கும். இதனால் உங்கள் எடை அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம்.
இதுவே உங்களுக்கு புற்றுநோயை உருவாக்கும் காரணமாக அமையலாம். மேலும், பொதுவாகவே அதிகமான சர்க்கரையை எடுத்து கொள்வது நல்லது அல்ல.

வருடம் ஒருமுறை மேமோகிராம்:
பலரும் வருடத்திற்கு ஒருமுறை மேமோகிராம் எடுப்பதால் மட்டுமே எந்தவிதமான புற்றுநோய் கட்டிகளையும் கண்டறிந்து விட முடியும் என்று நம்புகிறார்கள். ஆனால், சில நேரங்களில் சிறிய கட்டிகள் மேமோகிராமால் கூட கண்டுபிடிக்கப்படாமல் போகலாம்.
கிட்டத்தட்ட 20 சதவீத தவறுகள் இப்படியும் நடக்கிறது. அதற்காகத்தான் சுய பரிசோதனை முறையை பயன்படுத்த வேண்டும். அதே சமயம் வருடம் ஒருமுறை மேமோகிராம் செய்வது நல்லது.
வாசனை திரவியங்கள்:
இதுவரை விஞ்ஞானப்பூர்வமாக எந்தவிதமான சான்றுகளும் வாசனை திரவியங்கள் பயன்படுத்துவதால் புற்றுநோய் ஏற்படுவதாக கண்டறியவில்லை. எனவே, அதற்கும் மார்பக புற்றுநோய்க்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

புற்றுநோய் கட்டி வலியற்றதாக இருக்குமா?
மார்பக புற்றுநோய் கட்டிகளிலேயே இரண்டு வகை உள்ளது. இது நார்மல் கட்டிகள் மற்றும் புற்றுநோய் கட்டிகள் என்று உள்ளது. அது வலியற்றதாகவும் அல்லது வலி கொடுப்பதாகவும் இருக்கலாம்.
ஆனால், வலி கொடுக்கவில்லை என்பதற்காக அது நார்மல் என்றும் சொல்லிவிட முடியாது. எனவே நீங்கள் முதலில் சுய பரிசோதனை மூலமாக தெரிந்து கொள்ளுதல். மேமோகிராம் மற்றும் இதர தேவையான பரிசோதனைகளை செய்து உறுதி செய்து கொள்ளுதல் அவசியம்.
வயதான மற்றும் நடுத்தர வயது பெண்களுக்கு மட்டும்தான் வருமா?
இல்லை இதுவும் நீண்ட நாட்களாக நம்பப்பட்டு வரும் உண்மையற்ற விஷயம். மார்பக புற்றுநோய் இளம் வயதினிருக்கும் ஏற்படும். 20-30 சதவீதத்திற்கும் மேல் 20-லிருந்து 40 வயது வரை உள்ள பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவது இயல்பான ஒன்றாக உள்ளது.
பலருக்கும் 20 , 25 வயதிலேயே மார்பக புற்றுநோய் வந்து விடுகிறது. இதை முன்னரே அறிந்து சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது. அதனால் சுய பரிசோதனையும் அதை தொடர்ந்து மருத்துவரிடம் ஆலோசனை செய்வதும் அதை தடுக்கவும் முன்கூட்டியே சிகிச்சை அளிக்கவும் முடியும்.
பெண்களுக்கு மட்டும்தான் வருமா?
இதுவும் பல நாட்களாக நம்பபடும் ஒன்று. மார்பக புற்றுநோய் பெண்களுக்கு மட்டும் அல்ல ஆண்களுக்கும் ஏற்படும். ஆனால், பெண்களோடு ஒப்பிடுகையில் ஆண்களுக்கு மிக மிக அரிதாகவே மார்பக பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதனால், ஆண்களுக்கும் அரிதாக மார்பக புற்றுநோய் ஏற்படும் என்பதே உண்மை.
மார்பகத்தில் ஏதும் காயங்கள்:
மார்பகத்தில் காயங்கள் ஏற்படுவதால் மார்பக புற்றுநோய் வராது. அந்த சமயத்தில் நீங்கள் எடுக்கும் பரிசோதனைகள் மூலம் ஏற்கனவே இருக்கும் புற்றுநோய் கட்டிகளை கண்டுபிடிக்க வாய்ப்புகள் இருக்கின்றதே தவிர காயம் ஏற்பட்டதால் உங்களுக்கு மார்பக புற்றுநோய் வர வாய்ப்பு இல்லை.
- மன அழுத்தம் தலை வலியினை ஏற்படுத்தலாம்.
- சரியான முடிவுகளை எடுக்கத் தெரியாதவர்களுக்கு இடுப்பு வலி ஏற்படுகின்றதாம்.
அடிக்கடி உடம்பு வலி அல்லது உடம்பில் ஏதோ ஒரு இடத்தில் வலி என்று நாம் கூறுகின்றோம். இந்த வலிகளுக்கு காரணம் பல இருக்கின்றன. இதற்கு உடல், மனம் உளைச்சல், வேதனை உணர்ச்சிகள் ஆகியவை காரணமாக இருக்கலாம்.

மன அழுத்தம் தலைவலியினை ஏற்படுத்தலாம். தொடர்ந்து வேலை செய்யாமல் தினமும் சிறிது நேரம் ஓய்வு எடுக்க வேண்டும்.
தோள் பட்டை வலி
மிக அதிக கவலை உணர்ச்சிகளை சுமப்பது, அதிக பொறுப்பு சுமை இவை தோள்பட்டை வலியினை ஏற்படுத்தலாம்.

கழுத்து வலி
பிறரை மன்னிக்க முடியாத கோப உணர்ச்சி, தன்னையே மன்னித்துக் கொள்ள முடியாத கோப உணர்ச்சி, ஆக்கப்பூர்வமான சிந்தனைகளில் கவனம் செலுத்த முடியாமை போன்றவை கழுத்து வலிக்கு காரணமாக இருக்கும் என்கின்றனர்.
மேல் முதுகு வலி
யாரும் தன் மீது அன்பு செலுத்தவில்லை என்ற உணர்வு, யாருக்கும் தன்னை பிடிக்கவில்லை என்ற உணர்வு மேல் முதுகு வலியினை ஏற்படுத்துமாம்.
கீழ் முதுகு வலி
பணத்தைப் பற்றி அதிகம் கவலைப்படுபவர்களுக்கு கீழ் முதுகு வலி ஏற்படுகின்றதாம்.
முழங்கை வலி
சில மாறுதல்களை ஏற்க முடியாமல் அவதிப்படுபவர்களுக்கு முழங்கை வலி ஏற்பட வாய்ப்புகள் உண்டு என்கின்றனர்.
கை வலி- தனிமை இதற்கு ஒரு காரணம்.

இடுப்பு வலி
வாழ்க்கையின் பாதையில் சரியான முடிவுகளை எடுக்கத் தெரியாதவர்களுக்கு இடுப்பு வலி ஏற்படுகின்றதாம்.
முட்டி வலி
எதனையும் தானே செய்து கொள்ள வேண்டும். யாரையும் எதற்கும் எதிர்பாராத வாழ்க்கை வேண்டும் என்ற ஒரு அடமும் இதற்கு ஒரு காரணமாம். எளிமை, பிறருக்கு உதவுதல் போன்றவை நன்மை பயக்கும் என்கின்றனர்.
தசை வலி
மனக் கசப்புகளை மறக்காது மனதில் வைத்திருப்பவர்களுக்கு தசை வலி ஏற்படலாம். மனதில் நன்றியுணர்வு, ஆக்கப் பூர்வமான எண்ணங்கள் இவை நலன் அளிக்கும் என்கின்றனர்.
பாத வலி
அதிக மனச்சோர்வு, அழிவுப் பூர்வமான எண்ணங்கள் உடையவர்களுக்கு ஏற்படுகின்றதாம். ஆக்கப் பூர்வமான எண்ணங்கள் உடையவர்களுடன் இருப்பது நல்லது என்று அறிவுறுத்தப்படுகின்றது.

கணுக்கால் வலி
தன் மீதே ஒருவர் மிகக் கடுமையாக இருப்பவர்களுக்கு கணுக்கால் வலி ஏற்படலாம். ஒருவர் தன்னை நேசிக்கவும் பழக வேண்டும்.
சரி, இதையெல்லாம் யார் சொன்னார்கள்? பொதுவில் மன நலமின்மை உடல் நலத்தினை பாதிக்கும் என்பது மருத்துவ ரீதியான கூற்றுதான்.
அதற்காக தானே செயல்படாமல் எந்த ஒரு அறிகுறியினையும் மருத்துவ பரிசோதனை செய்து மருத்துவரின் ஆலோசனை, மருந்து, சிகிச்சை இவற்றினை முறையாய் கடை பிடிக்க வேண்டும் என்பதே என்றென்றும் சரியான ஒன்று.
மனநல ஆலோசகர்களும், யோகா பயிற்சியாளர்களும் நம் உடல், மனம், ஆன்மா ஒன்றுக்கொன்று தொடர்பு உடையது என்பதனை அறிவுறுத்துவர்.
- கருப்பை வாய் பகுதியில் செல்கள் மாறும் போது கருப்பை வாய் புற்றுநோய் உண்டாகிறது.
- தடுப்பூசி மூலம் தடுக்கப்படுகிறது.
பெண்கள் கவனிக்க வேண்டிய அறிகுறிகளில் முக்கியமானது கருப்பை வாய் புற்றுநோய். ஏன் இந்த நோய்க்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் இதன் அறிகுறிகள் பரிசோதனை முறைகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து தெரிந்துகொள்வோம்.

கருப்பை இணைக்கும் பெண்களின் கருப்பைவாய் பகுதியில் செல்கள் மாறும் போது கருப்பை வாய் புற்றுநோய் உண்டாகிறது. இந்த புற்றுநோயானது அவர்களின் ஆழமான திசுக்களை பாதிக்கலாம்.
மேலும் உடலின் மற்ற பகுதிகளுக்கு பெரும்பாலும் நுரையீரல், கல்லீரல், சிறுநீர்ப்பை, யோனி மற்றும் மலக்குடல் ஆகியவற்றுக்கும் பரவக்கூடும்.

கருப்பை வாய் புற்றுநோயின் பெரும்பாலான நிகழ்வுகள் மனித பாப்பிலோமா வைரஸ் தொற்று காரணமாக உண்டாகின்றன. இது தடுப்பூசி மூலம் தடுக்கப்படுகிறது. கருப்பை வாய் புற்றுநோய் மெதுவாக வளர்ச்சியடையும், இது கடுமையான பிரச்சனைகளை உண்டாக்கும் முன்பு கண்டறிந்து சிகிச்சை அளிப்பது முக்கியம். ஏனெனில் ஒவ்வொரு ஆண்டும் தீவிர பாதிப்பு கொண்டுள்ள பெண்களை கொல்லவே செய்கிறது.
35 வயது முதல் 44 வயதுடைய பெண்கள் இதை அதிகம் எதிர்கொள்கிறார்கள். 15 சதவீதத்துக்கும் அதிகமான வழக்குகளில் 65 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் உள்ளனர்.

அறிகுறிகள்
கருப்பை வாய் புற்றுநோயின் அறிகுறிகளை நீங்கள் சரிவர கவனிக்காமல் இருக்கலாம். ஏனெனில் இவை ஆரம்ப கட்ட அறிகுறிகளை உண்டாக்காது.
* உடலுறவு கொள்ளும் போது வலி
* உடலுறவுக்கு பிறகு வலி
* மாதவிடாய்க்கு இடையில் வலி
* மாதவிடாய் நின்ற பிறகு அல்லது இடுப்பு பரிசோதனைக்கு பிறகு அசாதாரண யோனி ரத்தப்போக்கு
அசாதாரண யோனி வெளியேற்றம், இது கனமாகவும் துர்நாற்றமாகவும் இருக்கலாம். பரவிய பிறகு புற்றுநோய் உண்டாகலாம்.
* இடுப்பு வலி
* சிறுநீர் கழிப்பதில் சிக்கல்
* வீங்கிய கால்கள்
* சிறுநீரக செயலிழப்பு
* எலும்பு வலி
* எடை இழப்பு மற்றும் பசியின்மை
* சோர்வு போன்றவை இருக்கலாம்.

ஒரு பெண்ணுக்கு 21 அல்லது 22 வயது கடக்கும் போதே கருப்பை வாய்ப்புற்றுநோய் பரிசோதனை செய்வது நல்லது. பேப்ஸ்மியர் பரிசோதனை என்று அழைக்கப்படும் இந்த பரிசோதனை வலி இல்லாதது.
ஒவ்வொரு பெண்ணும் உடலுறவு வாழ்க்கைக்கு நுழைந்த பிறகு பேப்ஸ்மியர் பரிசோதனை மிகவும் அவசியம். இதன் மூலம் தொற்று இருப்பதை முன்கூட்டியே கண்டறிய முடியும்.
இது ஹெச்பிவி வைரஸ் 200 முதல் 300 விதமானவை உண்டு. இதில் அதிகமாக 16 முதல் 18 வரையான வேரியண்ட்கள் கர்ப்பப்பை வாய்ப்புற்றுநோய்க்கு காரணமாகிறது.
21 முதல் 34 வயது வரை இருக்கும் பெண்கள் 2 முதல் 3 வருடங்களுக்கு ஒரு முறை இந்த பரிசோதனை செய்ய வேண்டும்.
35 வயதை கடந்தாலே வருடம் ஒருமுறை பேப்ஸ் மியர் பரிசோதனை செய்ய வேண்டும். இதனோடு ஹெச்பிவி பரிசோதனையும் செய்து கொள்ளலாம்.
- பல்லுக்கும் மொத்த உடம்புக்குமே நிறைய சம்பந்தம் இருக்கிறது.
- உப்பு கரைத்த சுடுநீரில் வாயை பல முறை கொப்பளிப்பது நல்லது.
பல்லுக்கும் முட்டிக்கும் மட்டுமல்ல, பல்லுக்கும் மொத்த உடம்புக்குமே நிறைய சம்பந்தம் இருக்கிறது. நீண்டகாலமாக உடம்பில் நோயோடு இருக்கிறவரின் பற்களை சோதித்துப் பார்த்தால், அந்த நோய்க்கான மூலகாரணம் பற்களில் தான் இருக்கும்.
பற்கள், ஈறுகள், வாயின் உட்பகுதிகள், நாக்கின் அடிப்பகுதியில் ஏற்படும் நோய்களினால் நோய்க்கிருமிகள் உருவாகின்றன. இவை ரத்தத்தின் மூலம் உடலில் பல்வேறு பாகங்களுக்கு பரவுகின்றன.

இந்த நோய்க்கிருமிகள் ரத்தத்தின் வழியாக பயணம் செய்து மூட்டுகளின் உள்ளிருக்கும் திரவத்தில் போய் சேர்ந்து மூட்டுகளுக்குத் தொந்தரவு கொடுக்க ஆரம்பிக்கும். எனவே பற்களுக்கும் மூட்டுவலிக்கும் சம்பந்தம் இருக்கிறது என்பது இதன் மூலம் உறுதியாகிறது.

தவிர்ப்பது எப்படி?
பொருத்தமான பற்பசை, பிரஷ்கள் கொண்டு தினமும் காலை-இரவு நேரங்களில் நன்றாக பல் துலக்க வேண்டும். பற்களுக்கு இடையில் சேரும் உணவுத்துகள்களை உடனே அப்புறப்படுத்த வேண்டும்.
தினமும் இரவு படுக்க போகும்முன் உப்பு கரைத்த சுடுநீரில் வாயை பல முறை கொப்பளிப்பது நல்லது. பலபேர் வாயை தண்ணீரில் கொப்பளிக்காமல் உதடுகளுக்கு மேலேயே தண்ணீரை வைத்து துடைத்துவிட்டு, வாயைக் கழுவிவிட்டேன் என்று வந்துவிடுகிறார்கள். இது மிகப்பெரிய தவறு.

ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பல் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது. உதடு, வாய்-கன்னத்தின் உட்பகுதிகள் வீக்கம், ஈறுகளில் ரத்தக் கசிவு, புண், சீழ், கெட்ட நாற்றம் முதலியவைகள் இருந்தால் உடனே பல் மருத்துவரிடம் சிகிச்சை பெறுவது அவசியம்.
ஒரு பல் கெட்டுப் போய்விட்டால் அந்த பல்லைப் பிடுங்கி எறிவது மிகமிகச் சுலபம். ஆனால் மறுபடியும் அந்த இடத்தில் புதிய பல் வளராது. போனது போனதுதான். பற்களை ஒழுங்காக பராமரிக்காமல் ஒவ்வொரு பல்லாக பிடுங்கிக் கொண்டே வந்தால் உணவை சரியாக, முழுமையாக மெல்ல முடியாது.

வாயில் பற்கள் இல்லை என்றால் நாம் பேசும் பேச்சு மற்றவர்களுக்கு சரியாக புரியாது. சொற்கள் சரியாக வராது. பேச்சு குளறுகிற மாதிரி இருக்கும். மொத்தத்தில் பல் போனால் சொல் போய்விடும்.






