என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    அகிலத்தை இடுப்பில் வைத்து அன்னை காட்டினால், தனக்கும் மேலே தூக்கி, உலகை காண்பிக்கும் ஒப்பற்ற உறவு தான் தந்தை. அன்றைய காலகட்டத்தில் நம் தந்தையர்கள் நம்மை எப்படி வளர்த்து ஆளாக்கினார்கள் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
    குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் பொறுப்பு எப்படி தாய்க்கு இருக்கிறதோ, அதேபோல் குழந்தைகளின் முன்னேற்றத்திலும், பாதுகாப்பிலும் தந்தையின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருக்கிறது. குடும்பத்திற்காக மாடாய் உழைத்து ஓடாய் தேய்வதுடன், கனிவான கண்டிப்பையும், மறைமுகமான பாசத்தையும் வெளிப்படுத்தும் தந்தையிடம் குழந்தைகளுக்கும் பாசம் எப்போதும் குறைந்து போய்விடுவதில்லை.

    ஆம், ‘தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே! நீ தந்தை ஆகும் வரை, உன் தந்தையின் அருமை உனக்கு தெரியாது. தந்தையின் மனதில் கஷ்டங்கள் அனைத்தும் புதைந்துவிடுவதால் அவை வெளியில் தெரிவதில்லை. தந்தையின் கடமைகள் குறித்து திருக்குறளிலும், சங்க இலக்கியங்களிலும் பல கருத்துகள் கூறப்பட்டு உள்ளன. அகிலத்தை இடுப்பில் வைத்து அன்னை காட்டினால், தனக்கும் மேலே தூக்கி, உலகை காண்பிக்கும் ஒப்பற்ற உறவு தான் தந்தை. அன்றைய காலகட்டத்தில் நம் தந்தையர்கள் நம்மை எப்படி வளர்த்து ஆளாக்கினார்கள் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

    மகனின் அறிவாற்றலையும் நற்குண, நற்செயல்களையும் கண்டவர்கள், இவனுடைய தந்தை இந்த அருமையான மகனை பெறுவதற்கு எத்தகைய கடும் தவத்தை செய்தானோ என்று வியந்து கூறுகின்ற சொல்லை பிள்ளைகள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். முதுமைக்காலத்தில் தந்தையின் செயற்பாடுகள் முடக்கப்பட்டு உடலும், உள்ளமும் உறவுகளுடன் உரையாட, பாசத்தில் நனைய நினைக்கும்போது அவற்றை அவர்களுக்கு வழங்கி இருக்கிறோமா? தள்ளாத வயதில் அவர்களுக்குரிய அனைத்து கடமைகளையும் செய்கிறோமா? என்ற கேள்வியை நம்முன்னே கேட்டு பார்த்து நமது தவறுகளை சரிசெய்வதே இன்றைய நாளின் முதற் பணியாகும்.

    அதுவே அவர்களுக்கு நாம் ஆற்றும் கடமையாக இருக்க முடியும். அனைத்து விஷயங்களுக்கும் அவர்களுடைய ஆலோசனைகளை கேட்பதுடன், அவர்களுடைய வார்த்தைகளுக்கு எப்போதும் மதிப்பளித்து அவர்கள் வழி நடப்போம்.
    கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை முடிவுக்கு வரும் நிலையில், 3-வது அலை எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்று மருத்துவ துறையினர் கூறி வருகிறார்கள்.
    தமிழகத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் 3-வது அலையை எதிர்கொள்ளும் வகையில் படுக்கைகள் தயாராக உள்ளன. குறிப்பாக கொரோனா 3-வது அலை குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என்கிற தகவல்  வைரலாகி இருக்கிறது.

    அதே நேரத்தில் 2-வது அலையிலேயே குழந்தைகளை கொரோனா தொற்று அதிகம் பாதித்துள்ளதாகவும், 3-வது அலையில் தனியாக எந்தவித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. பெரியவர்களை போன்றே குழந்தைகளையும் கொரோனா தாக்குவதற்கு வாய்ப்புள்ளது என்கிற கருத்தும் நிலவுகிறது.
    கைகொடுத்த சித்த மருத்துவம்

    கடந்த காலங்களில் கொரோனா நோயாளிகளுக்கு பெரிதும் கைகொடுத்தது சித்த மருத்துவம் என்றால் அதனை யாரும் மறுக்கமாட்டார்கள். அந்த அளவுக்கு தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று நோயாளிகளுக்கு சிறப்பான சித்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

    முதல் அலையிலும் சரி, 2-வது அலையிலும் சரி கொரோனா நோயாளிகள் பலர் பக்கவிளைவுகள் இல்லாத சித்த மருத்துவத்தால் குணம் அடைந்துள் ளனர். சென்னை அரும்பாக்கத்தில் உள்ள சித்த மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்  அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு தற் போது மருந்து, மாத்திரை வழங்கப்பட்டு வருகிறது.

    கொரோனா 2-வது அலை தாக்குதலின் போதும் நோயாளிகள் நலன் கருதி தமிழக அரசு சித்த மருத்துவ சிறப்பு மையங்களை தொடங்கி இருக்கிறது. சென்னையில் வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி, வேப்பேரி பெரியார் மையம்,  போரூர் வெங்கடேஸ்வரா கல்லூரி, மீனம்பாக்கம் ஏ.எம். ஜெயின் கல்லூரி, சூரப்பட்டு வேலம் மாள் கல்லூரி ஆகிய 5 இடங்களில் சித்த மருத்துவ சிறப்பு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழகம் முழு வதும் 50 மையங்கள் இயங்கி வருகின்றன. இங்கு கொரோனா நோயாளி களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்திய மருத்துவத்துறை இயக்குனர் கணேஷ், இணை இயக்குனர் பேராசிரியர் பார்த்திபன் ஆகியோரது ஆலோசனையின்படி டாக்டர்கள் பிச்சையாகுமார், சசிகுமார் ஆகியோரை ஒருங்கிணைப்பாளராக கொண்டு இந்த மையங்கள் செயல்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் கொரோனா 3-வது அலையில் இருந்து பொது மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள இப்போதே தகுந்த முன்னெச்சரிக்கையோடு செயல் பட வேண்டும் என்கிறார் சென்னை அரும்பாக்கம் சித்த மருத்துவ கல்லூரி விரிவுரையாளரான  சாய் சதீஷ். இவர் மீனம்பாக்கம் ஏ.எம்.ஜெயின் கல்லூரியில் உள்ள சித்த மருத்துவ மையத்தின் ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகிறார்.

    இதுதொடர்பாக அவர்  மேலும் கூறும்போது, ‘‘கொரோனா 3-ம் அலையில் முன்னெச்சரிக்கையே முதல் மருந்தாகும், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை வரும் காலங்களில் மிகுந்த கவனத்தோடு பார்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக அவர்கள் சாப்பிடும் உணவு வகைகளிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். உடலுக்கு ஆரோக்கியமான உணவுகளை அவர்களுக்கு அதிகமாக கொடுக்க வேண்டும். அப்போதுதான் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

    இந்த வைரஸ் தொற்று காலத்தில் அனைவரும் வயிறு உபாதைகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு ஏற்ற வகையில் நாம் பழங்களை அதிகளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். மாதுளை, சாத்துக்குடி, எலுமிச்சை, அத்தி, வாழைப் பழங்களை அதிகம் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.

    குழந்தைகள், பெரியவர்களை போல பொறுமையாக மென்று சாப்பிட மாட்டார்கள். இதனால் சில நேரங்களில் அவர்களுக்கு செரிமான பிரச்சினை ஏற்படும். தறபோதுள்ள சூழலில் உடலில் செரிமான பிரச்சினை ஏற்படாமல் நாம் பார்த்துக் கொள்ள வேண்டும். இதற்காக சித்த மருத்துவத்தில் உரை மாத்திரை குழந்தைகளுக்கான நல்ல செரிமான மருந்தாக உள்ளது.

    பெரியவர்களும் இதை சாப்பிடலாம். சிறிய அளவிலான உரை மாத்திரையை எடுத்து அதில் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். அதுபோன்று தொடர்ந்து 6 மாதங்கள் இந்த மாத்திரையை குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் செரிமான பிரச்சினை வராது.

    உரை மாத்திரையில் அதிமதுரம், வசம்பு, ஜாதிக் காய், கடுக்காய், பூண்டு, திப்பிலி, பெருங்காயம், இஞ்சி, அக்ர ஹாரம் உள் ளிட்ட 10 மருத்துவ பொருட்கள் அடங்கி உள்ளது. இதனால் உடலுக்கு எந்த கேடும் ஏற்படாது. எனவே குழந்தைகளுக்கு தயங்காமல் இந்த உரை மாத்திரையை கொடுத்து வரலாம்.  இதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கும். கொரோனா தொற்று ஏற்படாமல் தடுப்பதற்கு இது உதவும்.

    அதே நேரத்தில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படாமலும் இந்த நேரத்தில் பார்த்துக் கொள்ள வேண்டும். அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். இதுதவிர சித்த மருத்துவ மருந்துகளான தாளிசாதி சூரண மருந்தையும் தேனில் கலந்து சாப்பிடலாம்.

    பூண்டு தேன் குழந்தைகளுக்கு நல்ல மருந்தாகும். இதனை வீட்டிலேயே தயாரிக்கலாம். 5 மில்லி பூண்டு தண்ணீரில் தேன் கலந்து தொடர்ந்து குழந்தைகளுக்கு கொடுத்து வருவதன் மூலம் மூச்சுப்பாதையில் எந்தவித சுவாச பிரச்சினைகளும் ஏற் படாமல் பார்த்துக் கொள்ள முடியும்.

    இந்த வைரஸ் தொற்று காலத்தில் குழந்தைகள் வயிற்றில் மந்தநிலையை ஏற்படுத்தும் பழங்களை தவிர்க்க வேண்டும். மாம் பழம், பலாப்பழம் ஆகிய வற்றை அதிகமாக குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாது. இதன் மூலம் செரிமான பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது.

    தினமும் காலை வெயிலில் 5 நிமிடம் குழந்தைகளை நிற்க வைப்பது நல்லது. இதன் மூலம் வைட்டமின் ‘டி’ சத்து கிடைக்கும். நோய் எதிர்ப்பு சக்தி உருவாவதற்கு வைட்டமின் சத்து மிகவும் அவசியமானதாகும்.

    இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மேற்கொண்டால் நிச்சயம் கொரோனா தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்றும் சித்தா டாக்டர் சாய்சதீஷ் தெரிவித்துள்ளார்.

    உஷாராக இருப்போம்...
    கொரோனாவை விரட்டுவோம்...

    சித்த மருத்துவம் தொடர்பாக
    உங்களுக்கு என்ன தகவல் வேண்டும்?
    7358723063-க்கு
    போன் செய்யுங்கள்

    சித்த மருத்துவம் தொடர்பாக உங்களுக்கு என்ன தகவல் வேண்டும்? உங்களது அத்தனை சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விடை அளிக்க காத்து இருக்கிறது ஒருங்கிணைந்த சித்த மருத்துவ கட்டளை மையம். 7358730363- என்ற எண்ணை தொடர்பு கொண்டால் சித்த மருத்துவம் தொடர்பாக தேவையான தகவல்களை பெறலாம். இந்த எண் காலை 8மணியில் இருந்து இரவு 8 மணி வரை செயல்படும்.

    கொரோனா தடுப்பூசியின் தன்மை, மதிப்பு, முன்எச்சரிக்கைகள் குறித்து கர்ப்பிணி பெண்களிடம் முதலில் முன்கள பணியாளரோ, தடுப்பூசியை செலுத்தும் சுகாதார பணியாளரோ விளக்க வேண்டும்.
    புதுடெல்லி

    கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடுவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் தயாரித்து வெளியிட்டுள்ளது. இதில் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு முன்பாக முன்கள பணியாளர்களுக்கும், தடுப்பூசி போடுவோருக்கும் சில வழிகாட்டுதல்கள் தரப்பட்டுள்ளன.

    இதுபற்றிய முக்கிய தகவல்கள் பின்வருமாறு:-

    * 35 வயதுக்கு மேற்பட்ட கர்ப்பிணிகள், அதிக உடல் எடை உள்ளவர்கள், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் கொரோனா தொற்றுக்கு பிறகு ஆபத்தை சந்திக்க வாய்ப்பு உண்டு.

    * கர்ப்பிணி பெண்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டவர்களுக்கு கொரோனா தொற்றின் ஆபத்து அதிகரிக்காது.

    * கொரோனா தடுப்பூசியின் தன்மை, மதிப்பு, முன்எச்சரிக்கைகள் குறித்து கர்ப்பிணி பெண்களிடம் முதலில் முன்கள பணியாளரோ, தடுப்பூசியை செலுத்தும் சுகாதார பணியாளரோ விளக்க வேண்டும்.

    * கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது. மற்றவர்களைப் போலவே கொரோனாவில் இருந்து கர்ப்பிணிகளை பாதுகாக்கிறது. பக்கவிளைவுகள் லேசானதுதான். லேசான காய்ச்சல் வரலாம். ஊசி செலுத்திய இடத்தில் வலி வரலாம். 3 நாட்கள் வரை பாதிப்பு இருக்கலாம்.

    * மிக அரிதாக 1.5 லட்சம் பேரில் ஒரு கர்ப்பிணிக்கு, தடுப்பூசி போட்ட 20 நாளில் சில முக்கிய அறிகுறிகள்( மூச்சு திணறல், வாந்தி, வயிற்று வலி, கைகால்களை அழுத்தும்போது வலி, மூட்டு வீக்கம், சருமத்தில் சிராய்ப்பு,தொடர் தலைவலி போன்றவை) இருக்கலாம். இதுகுறித்து அவர்கள் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்.

    * கர்ப்ப காலத்தில் கொரோனா தாக்கினால், குழந்தையை பிரசவித்த பின்னர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.

    * கர்ப்பிணி பெண்கள் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு கோ-வின் தளத்தில் பதிவு செய்து கொள்ளவேண்டும். அல்லது தடுப்பூசி மையங்களுக்கு நேரில் சென்று பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    - கொரோனா தடுப்பூசி பற்றிய மிக முக்கிய பிரச்சினைகள் குறித்து கர்ப்பிணி பெண்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு முன்கள பணியாளர்கள் தெரிவிப்பதை எளிதாக்கும் வகையில் கேள்வி பதில் வடிவில் குறிப்புகள் தயாரிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
    எப்போது ரவையில் கிச்சடி செய்து அலுத்து விட்டதா? இன்று வித்தியாசமான சத்தான சுவையான வேர்க்கடலை-ஜவ்வரிசி கிச்சடி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள

    வேர்க்கடலை  - ஒரு கப்,
    ஜவ்வரிசி - அரை கப்,
    உருளைக்கிழங்கு - 1
    பச்சை மிளகாய் - 2  
    எண்ணெய் - 2 டீஸ்பூன்,
    கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, எலுமிச்சைச் சாறு - தலா ஒரு டீஸ்பூன்,
    கொத்தமல்லி - சிறிதளவு,
    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை

    வேர்க்கடலையை வறுத்து, தோல் நீக்கி பொடித்து கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேக வைத்து துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

    ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஜவ்வரிசியை அரை மணி நேரம் ஊற விடவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு போட்டுத் தாளித்து, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பை போடவும்.

    அடுத்து அதில் வேக வைத்த உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய் துண்டுகளைப் போட்டு, சிறிது நேரம் வதக்கவும்.

    பிறகு இதில் ஊற வைத்த ஜவ்வரிசி, உப்பு சேர்த்து, 5 நிமிடம் கிளறவும்.

    வேர்க்கடலைப் பொடி சேர்த்துக் கிளறி, கீழே இறக்கும்போது கொத்தமல்லி தூவி எலுமிச்சைச் சாறு சேர்த்துப் பரிமாறவும்.

    சூப்பரான வேர்க்கடலை-
    ஜவ்வரிசி கிச்சடி ரெடி.

    வயது வரம்பின்றி தோன்றும் முகப்பருக்களை அகற்ற தரமான கிரீம் வகைகளை தேடிப்பிடித்து பயன்படுத்தினாலும், பலன்கள் ஏதுமில்லையா? இதோ இயற்கையான வழிமுறைகளை பயன்படுத்தி பருக்களை அகற்ற உதவும் சில தீர்வுகளை பார்ப்போம்.
    அழகாக மேக்கப் செய்திருந்தாலும் முகப்பருக்கள் காரணமாக இமேஜ் டேமேஜ் ஆகும் சங்கடம் பலருக்கும் ஏற்பட்டு விடுகிறது. வயது வரம்பின்றி தோன்றும் முகப்பருக்களை அகற்ற தரமான கிரீம் வகைகளை தேடிப்பிடித்து பயன்படுத்தினாலும், பலன்கள் ஏதுமில்லையா? இதோ இயற்கையான வழிமுறைகளை பயன்படுத்தி பருக்களை அகற்ற உதவும் சில தீர்வுகளை பார்ப்போம்.

    தோலுக்கு அடியில் அமைந்துள்ள செபேஷியஸ் சுரப்பிகளில் இருந்து சீபம் என்னும் எண்ணெய் பொருள் சுரக்கிறது. மாசு மற்றும் தூசு இந்த எண்ணெய் பொருளில் படிந்து சருமத்தில் உள்ள துளைகளை அடைத்து கொள்கிறது. இதனால் தோலுக்கடியில் சுரக்கும் சீபம் வெளிவர முடியாமல் தேங்கி நிற்கும். இதில் பாக்டீரியா போன்ற கிருமிகளால் தொற்று ஏற்பட்டு சருமத்தில் பருக்கள் தோன்றுகின்றன. உடனடியாக அவற்றை கிள்ளி விட பலருடைய கைகள் துடிக்கும். ஆனால் அவ்வாறு செய்யக்கூடாது. அவற்றை கிள்ளிவிட்டால் புண்ணாகி விடும். அவற்றின் மேல் புதினா இலைகளை அரைத்து தடவலாம்.

    மேலும் வேப்பிலை பொடியுடன் மஞ்சள் தூள், சந்தனம் சேர்த்து நீர்விட்டு குழைத்து பருக்களின் மீது பூசி வரலாம்.

    அருகம்புல் சாறு, பன்னீர், பப்பாளி விழுது ஆகியவற்றை சற்று குழைத்து முகத்தில் தடவி உலர்ந்தவுடன் குளிர்ந்த நீரில் கழுவலாம். இது சூரிய வெப்பத்தால் ஏற்பட்ட கருமையை அகற்றுவதுடன், முகப்பருக்களையும் மறையச்செய்யும்.

    வேப்பிலை பொடி, புதினா பொடி, துளசிப்பொடி ஆகியவற்றை தலா 10 கிராம் எடுத்து நீரில் குழைத்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இம்முறையை தொடர்ந்து 5 நாட்கள் செய்தால் பருக்கள் படிப்படியாக மறைய ஆரம்பிக்கும். இந்த கலவையை கண்களுக்கு கீழ்ப்புறம் தடவக்கூடாது.

    தேன் மெழுகையும், சர்க்கரையையும் சேர்த்து குழைத்து முகப்பருக்களின் மீது தடவி வர பருக்கள் விரைவில் மறைந்து முகம் பளபளக்கும்.

    4 துளசி இலை, சிறிதளவு வேப்பந்தளிர், ஒரு டீஸ்பூன் கடலை மாவு, அரை டீஸ்பூன் எலுமிச்சை சாறு ஆகியவற்றை நன்றாக அரைத்து அதை பருக்களின் மீது தடவி, 15 நிமிடங்கள் கழித்து மிதமான சுடுநீரில் முகத்தை கழுவினால் சருமம் மிருதுவாகி பருக்களும் மறையும்.

    அருகம்புல் பொடி, குப்பை மேனி இலைப்பொடி இரண்டையும் சமஅளவு எடுத்து கலக்கி இரவில் பருக்களின் மீது தடவி காலையில் முகத்தை கழுவவும். ஒரு வாரம் தொடர்ச்சியாக இம்முறையை கடைப்பிடித்தால் பருக்கள் அகன்று முகம் மிளிரும்.
    மருத்துவச் செலவுகளுக்கு என்று பணம் சேர்த்து வைப்பதைவிட மருத்துவக் காப்பீடு எடுத்துக்கொள்வது புத்திசாலித்தனமாகும். குறைந்த செலவில் குடும்பத்தினர் அனைவருக்குமான மருத்துவ செலவுகளை இதன் மூலம் சமாளிக்கலாம்.
    மருத்துவமனை செலவுகள் அதிகரித்துவிட்ட இந்த காலத்தில், அந்த செலவுகளை சமாளிக்க முடியாமல் விழி பிதுங்கி நின்ற அனுபவம் ஒவ்வொரு குடும்பத்துக்கும் இருக்கவே செய்கிறது. மருத்துவச் செலவுகளுக்கு என்று பணம் சேர்த்து வைப்பதைவிட மருத்துவக் காப்பீடு எடுத்துக்கொள்வது புத்திசாலித்தனமாகும். குறைந்த செலவில் குடும்பத்தினர் அனைவருக்குமான மருத்துவ செலவுகளை இதன் மூலம் சமாளிக்கலாம். இந்த காப்பீடு தனித்தனியாகவும், குடும்பத்தினருக்கும் என 2 வகையில் கிடைக்கிறது.

    தனிநபர் பாலிசியில் காப்பீடு செய்பவர் மட்டும் க்ளைம் செய்து கொள்ளலாம். குடும்பத்தினருக்கான புளோட்டர் பாலிசியில் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் க்ளைம் செய்து கொள்ளலாம். திருமணத்துக்கு முன்பு தனிநபர் பாலிசி எடுத்திருந்தால் திருமணத்துக்கு பிறகு மனைவி மற்றும் குழந்தைகளையும் இணைத்துக்கொண்டு புளோட்டர் பாலிசியாக மாற்றிக்கொள்ளலாம். வயதான பெற்றோருக்கு அடிக்கடி மருத்துவச் செலவுகள் ஏற்படும் என்பதால் இவர்களை புளோட்டர் பாலிசியில் சேர்க்காமல் தனிதனி தனிநபர் பாலிசி எடுத்துக்கொள்வதும் நல்லது. 3 மாத குழந்தை முதல் 86 வயது வரை இந்த பாலிசி அனுமதிக்கப்படுகிறது.

    நமது மருத்துவ தேவைகளை பொறுத்து மருத்துவக் காப்பீட்டை முடிவு செய்ய வேண்டும். பிரீமியம் குறைவாக இருக்கிறது என்பதற்கான பாலிசியை தேர்ந்தெடுக்கக்கூடாது. பாலிசி மூலம் கிடைக்கும் பலன்களை பார்த்து முடிவு செய்ய வேண்டும். பாலிசியின் வரம்புகளுக்கு ஏற்ப க்ளைம் செய்து கொள்ளலாம். மருத்துவக் காப்பீட்டை அனுமதிக்கும் மருத்துவமனைகள் குறித்த விவரம் பாலிசிதாரர்களுக்கு கொடுக்கப்படும். இந்த மருத்துவமனைகளில் உள்நோயாளியாக மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டால் காப்பீட்டு தொகையில் இருந்து மருத்துவ செலவுகளை கழித்துக்கொள்வார்கள். புறநோயாளியாக சிகிச்சை எடுத்துக் கொண்டால் மருத்துவ செலவை க்ளைம் செய்துகொள்ள முடியாது. ஆனால் பாலிசி அனுமதிக்கும்பட்சத்தில் இதற்கு ஆகும் செலவுகளையும் க்ளைம் செய்து கொள்ளலாம்.

    பாலிசி எடுப்பதற்கு முன் காப்பீடு நிறுவனத்திடம் சில விஷயங்களை தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். முக்கியமாக பாலிசி எடுப்பதற்கு முன்பே சில நோய்கள் இருந்துவரலாம். உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நோய்கள், நீண்ட காலத்திற்கு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறக்கூடிய நோய்கள் ஆகியவற்றின் உண்மை தன்மைகளை மறைக்காமல் குறிப்பிட வேண்டும். சில பாலிசிகள் மருத்துவ செலவுகளை மட்டும் ஏற்பதாகக் குறிப்பிடும். மருத்துவமனை தங்கும் கட்டணங்கள் அதிகரித்துவரும் நிலையில் அதற்கும் கவரேஜ் கிடைக்க வேண்டும். மேலும் மருத்துவமனை தங்கும் கட்டணங்கள் நாள் ஒன்றுக்கு இவ்வளவுதான் என வரம்பு இருக்கும். இதில் அதிகபட்ச தொகை க்ளைம் ஆவது போல பாலிசி எடுத்துக்கொள்ளுங்கள்.

    சில பாலிசிகளில் மருத்துவச் செலவுகளை நாம் செய்த பிறகு, ரசீதுகளை சமர்ப்பித்து க்ளைம் செய்து கொள்வதாக இருக்கலாம். இதற்கான காலம் எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். முக்கிய மருத்துவமனைகள், அல்லது அருகில் உள்ள பெரிய மருத்துவமனைகளுடன் காப்பீடு நிறுவனத்துக்கு ஒப்பந்தம் உள்ளதா என்பதையும் தெரிந்து கொண்ட பிறகே மருத்துவ காப்பீடு எடுக்க வேண்டும்.
    குளிர்காலத்தில் தம்பதிகள் தாம்பத்தியத்தில் அதிக நெருக்கம் காட்டுவதும், கோடைகாலத்தில் விலகியிருப்பதும் வழக்கமாக இருக்கிறது. அதுபோல் மனைவியின் நிலை அறிந்து கணவரும் நடந்துகொள்வது அவசியம்.
    தம்பதிகளுக்கு இடையேயான தாம்பத்திய வாழ்க்கையில் சீதோஷ்ணநிலை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. குளிர்காலத்தில் அவர்கள் தாம்பத்தியத்தில் அதிக நெருக்கம் காட்டுவதும், கோடைகாலத்தில் விலகியிருப்பதும் வழக்கமாக இருக்கிறது. அதனால் காலநிலையை புரிந்துகொண்டு தம்பதிகள் தாம்பத்திய  செயல்பாடுகளை அமைத்துக்கொள்வது அவர்களுக்குள் அதிக இணக்கத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும்.

    தென்னிந்தியாவில் ஜூலை முதல் ஜனவரி வரையிலான காலகட்டம் தாம்பத்தியத்திற்கு அதிக சவுகரியமானது என்று பாலியல் நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள். ஜூலை மாதத்தில் பெரும்பாலும் மழை இருந்துகொண்டிருக்கும். அதனால் கணவனும், மனைவியும் மனோரீதியாக அதிக உற்சாகத்துடன் காணப்படுவார்கள். மேகம் சூழ்ந்திருக்கும் சூழல் மனதில் எப்போதும் மகிழ்ச்சியை நிரப்பும். அது தாம்பத்திய இன்பத்திற்கு துணைபுரிவதாக அமையும்.

    பிப்ரவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டம் உஷ்ணம் நிறைந்தது. அப்போது உடல் எளிதாக சோர்ந்துவிடும். அது தாம்பத்திய ஆர்வத்தை வெகுவாக குறைத்துவிடும். அதே நேரத்தில் கோடைகாலத்தில் குளிர்பிரதேசங்களை நோக்கி பயணப்படுவதும், அங்கு ஜோடியாக தங்கியிருப்பதும் தாம்பத்திய ஆர்வத்தை தூண்டும் விதத்தில் அமையும். குளிர் பிரதேசங்களில் உள்ள அறைகளில் இரண்டு மூன்று நாட்கள் வெளியே வராமலே இருந்தால், தம்பதிகளிடம் இணக்கமும் புரிதலும் அதிகரிக்கும். அவர்கள் உடலில் புத்துணர்ச்சியும், சக்தியும் அதிகரிக்கும். அது அவர்களது தாம்பத்தியத்திலும் எதிரொலிக்கும்.

    சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப ஆண்களின் மனநிலையிலும் வித்தியாசம் காணப்படும். ஆனாலும் பெரும்பாலும் ஆண்களின் மனநிலை சீராகத்தான் இருக்கும். அதே நேரத்தில் பெண்களுக்கு மாதந்தோறும் ஹார்மோன் சுரப்பதில் சமச்சீரற்ற நிலை தோன்றும். அதற்கு தக்கபடி அவர்களது மனநிலையிலும் மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டிருக்கும். குறிப்பாக பெண்களுக்கு மாதவிலக்குக்கு முந்தைய நாட்களில் ஏற்படும் ஹார்மோன் சுரப்பு வித்தியாசங்களால் அவர்களுக்கு எரிச்சல் கலந்த மனநிலை தோன்றிவிடும். அதனால் அமைதியற்றவர்களாக நடந்துகொள்வார்கள். அது அவர்களது தாம்பத்திய ஆர்வத்தை வெகுவாக குறைத்துவிடும்.

    சில தருணங்களில் ஹார்மோன் மாற்றங்களால் பாலியல் உறுப்புகளுக்கு செல்லும் ரத்த ஓட்டம் அதிகரித்து தாம்பத்திய ஆர்வத்தை தூண்டும். ஆனால் அதை செயல்படுத்தும் விதத்தில் அவர்களது உடல்நிலை இருக்காது. அதனாலும் தாம்பத்திய உறவில் இருந்து விலகியிருக்க விரும்புவார்கள்.

    மாதவிலக்கு நாட்கள் முடிந்த பின்பு பொதுவாகவே பெண்களுக்கு தாம்பத்திய ஆர்வம் அதிகரிக்கும். அதை கணவர் புரிந்துகொண்டு, மனைவியின் மனநோக்கம் அறிந்து செயல்பட்டு ஆர்வத்தை மேம்படுத்தும் விதத்தில் நடந்துகொண்டால் மகிழ்ச்சி நீடிக்கும். தாம்பத்திய தொடர்பை சிறப்பாக அமைத்துக்கொள்ள கணவரின் மனநிலையையும், உடல்நிலையையும் அறிந்து மனைவி நடந்துகொள்ளவேண்டும். அதுபோல் மனைவியின் நிலை அறிந்து கணவரும் நடந்துகொள்வது அவசியம்.
    சிறுநீரகங்களின் செயல்பாடு முடங்கும்போது வாழ்க்கையே முடங்கிவிடும். சிறுநீரகங்களின் ஆரோக்கியத்திற்காக கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான வழிமுறைகளை இங்கே தருகிறோம்.
    மனித உறுப்புகளில் மிக மென்மையானவை சிறுநீரகங்கள். உடலில் முக்கியமான செயல்பாடுகள் அவைகளால் நடக்கின்றன. அவற்றின் செயல்பாடு முடங்கும்போது வாழ்க்கையே முடங்கிவிடும். சிறுநீரகங்களின் ஆரோக்கியத்திற்காக கடைப்பிடிக்கவேண்டிய முக்கியமான வழிமுறைகளை இங்கே தருகிறோம்.

    1. உடல் தகுதியை மேம்படுத்துங்கள். தினமும் அரை மணி நேரமாவது உடற்பயிற்சி செய்து ஒட்டுமொத்த உடலின் ஆரோக்கியத்தையும் கட்டிக்காத்திடுங்கள். நடைப்பயிற்சி, சைக்கிளிங், ஜாக்கிங் போன்ற ஏதாவது ஒன்றை தினமும் செய்யுங்கள்.

    2. ரத்தத்தில் சர்க்கரையின் அளவை எப்போதும் கட்டுக்குள் வைத்திருங்கள். நீரிழிவு நோய் இருப்பவர்களில் 30 சதவீதம் பேருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்படும். அதனால் நீரிழிவு நோயாளிகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் டாக்டரை சந்தித்து சிறுநீரகத்தின் செயல்பாடுகளை பரிசோதனை செய்துகொள்ளவேண்டும்.

    3. ரத்த அழுத்தம் அதிகரிக்காமல் கவனிக்கவேண்டும். ரத்த அழுத்தத்திற்கான மருந்தினை தவறாமல் உட்கொள்வது அவசியம். உயர் ரத்த அழுத்தத்தினால் இதயபாதிப்பு, பக்கவாதம் போன்றவை உருவாகும் என்பது பலருக்கும் தெரியும். ஆனால் அது சிறுநீரக பாதிப்பையும் ஏற்படுத்தும் என்பது பெரும் பாலானவர்களுக்கு தெரிவதில்லை. அதனால் எப்போதும் ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருங்கள்.

    4. ஆரோக்கியமான உணவினை சாப்பிடுங்கள். உப்பின் அளவை முடிந்த அளவு குறைத்திடுங்கள். ஊறுகாய், அப்பளம், உப்பு சேர்த்த பாலாடைக்கட்டி, கருவாடு போன்றவைகளை சாப்பிடாதீர்கள். பாக்கெட்டுகளில் விற்கும் உணவுப் பொருட்களையும் உட்கொள்ளவேண்டாம்.

    5. தினமும் மூன்று லிட்டர் வரை தண்ணீர் பருகுங்கள். அதாவது 12 கப் தண்ணீர் பருகுவது அவசியம். அதிகமாக தண்ணீர் பருகினால் உடலில் சேரும் சோடியம், யூரியா போன்ற நச்சுப்பொருட்கள் சிறுநீர் வழியாக வெளியேறிவிடும். சிறுநீரக கல் தொந்தரவு கொண்டவர்கள் அதிகமாக தண்ணீர் பருகுவதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். அவர்கள் மருத்துவ ஆலோசனை பெற்று, மேலும் சிறுநீரக கற்கள் உருவாகாமல் இருப்பதற்கான உணவு முறையை மேற்கொள்வது அவசியம்.

    6. புகைப்பிடிப்பதை தவிர்த்திடுங்கள். புகைப்பிடித்தால் கிட்னிக்கு செல்லும் ரத்த ஓட்டம் தடைபடும்.

    7. குறிப்பிட்ட சில வலி நிவாரண மாத்திரைகளும், ஆன்டிபயாடிக்குகளும் சிறுநீரகத்தை பாதிக்கும். அளவுக்கு அதிகமாக வலி நிவாரண மாத்திரைகளை உட்கொள்ளாதீர்கள். டாக்டரின் ஆலோசனைபடி தேவைக்கு மட்டும் அவைகளை சாப்பிடுங்கள். சிறுநீரக நோய் இருப்பவர்கள் வலி நிவாரண மாத்திரைகளை சாப்பிடும் முன்பு டாக்டரின் ஆலோசனையை பெற்றுக்கொள்ளுங்கள்.

    8. உடல் எடையை கட்டுக்குள் வைத்திருங்கள். அதிக எடை இருந்தால் அது சிறுநீரகத்திற்கு ஆபத்தாக முடியலாம்.

    9. பரம்பரை ரீதியாக சிறுநீரக நோய் இருப்பவர்கள் அதிக கவனம் காட்டவேண்டும். அவ்வப்போது தேவையான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியம்.

    10. சிறுநீரக தொந்தரவு இருப்பவர்கள் உணவில் புரோட்டினின் அளவை கட்டுப்படுத்தவேண்டும். மாமிச உணவுகளில் புரோட்டின் அதிகம் இருக்கிறது.
    ஜவ்வரிசியில் அதிக அளவிலான புரதம் இருப்பதால், தசைகளை வலுவூட்டவும் செல்களைப் புதுப்பிக்கவும் ரத்த ஓட்டத்தை சீராக்கவும் செய்கிறது. இன்று ஜவ்வரிசி கோதுமை ரவை அடை செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ஜவ்வரிசி - ஒரு கப்,
    கோதுமைரவை- அரை கப் ,
    அரிசி மாவு, கேரட் துருவல் - தலா அரை கப்,
    வெங்காயம் - 4,
    இஞ்சி, பச்சை மிளகாய் - தேவையான அளவு,
    தேங்காய் துருவல் - தேவைக்கு
    எண்ணெய் - தேவைக்கு
    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை :

    இஞ்சி, ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஜவ்வரிசியை முதல் நாள் ஊற வைத்து, மறுநாள் பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் ஜவ்வரிசியுடன், கோதுமைரவை, அரிசி மாவு, கேரட் துருவல், வெங்காயம், இஞ்சி, ப.மிளகாய், தேங்காய் துருவல், உப்பு சேர்த்து நன்றாக கலந்து சிறிது தண்ணீர் தெளித்து கொட்டிய பிசைந்து அரை மணி நேரம் அப்படியே வைக்கவும். இப்போது ரவை நன்றாக ஊறி மாவு கொட்டியான பதத்தில் இருக்கும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை அடை போல மெல்லியதாக தட்டி, சுற்றிலும் எண்ணெய் விட்டு பொன்னிறமாக எடுக்கவும்.

    இதை ஏதாவது ஒரு சட்னியுடன் சாப்பிடலாம்.

    சூப்பான ஜவ்வரிசி கோதுமை  ரவை  அடை ரெடி.
    டீன்ஏஜ் பெண்களையும் கவரும் விதத்தில் விதவிதமான வடிவமைப்புகளில் பட்டுப்பாவாடைகள் தயாராகின்றன. இப்போது பட்டுப் பாவாடைக்கான ஜாக்கெட்டில் டிசைனர் மெட்டீரியலைத்தான் பெரும்பாலும் பயன்படுத்துகிறார்கள்.
    காலம் மாறினாலும் பட்டுப் பாவாடையில் பெண்களுக்கு இருக்கும் ஆசை குறையவில்லை. அதனால் டீன்ஏஜ் பெண்களையும் கவரும் விதத்தில் விதவிதமான வடிவமைப்புகளில் பட்டுப்பாவாடைகள் தயாராகின்றன. விழாக்காலங்களிலும், பண்டிகை நாட்களிலும் சிறுமிகள் பட்டுப் பாவாடையுடன் உலா வருவதை பார்க்கவே அழகாக இருக்கும். பளிச்சென்ற நிறத்தில் ஜரிகை வேலைப்பாடுகள் கொண்ட பட்டுப் பாவாடை அணிந்து அழகுக் குழந்தைகள் நடந்துசெல்லும்போது மின்னல்வெட்டியதுபோல் இருக்கும்.

    பாரம்பரிய டிசைன்களும், நிறக்கலவைகளுமே பட்டுப் பாவாடைக்கு அழகு சேர்க்கிறது. பொருத்தமான ஜாக்கெட்டுகள் அதற்கு கூடுதல் அழகு சேர்க்கும். சிவப்பு பட்டில் தயாரான மேலாடைக்கு, கை பகுதியில் ‘பப்’வைத்து அதன் இறுதியில் சூரிய கதிர்கள் ஜொலிப்பதுபோல் ஜரிகை வேலைப்பாடு செய்திருந்தால் அது கண்களை பறிக்கும்.

    இப்போது பட்டுப் பாவாடைக்கான ஜாக்கெட்டில் டிசைனர் மெட்டீரியலைத்தான் பெரும்பாலும் பயன்படுத்துகிறார்கள். கலம்காரி, டிஜிட்டல், பத்திக், காயின் டாட், இக்காத் போன்ற பல வகை பிரிண்ட் மெட்டீரியல்களை பட்டுப் பாவாடை- ஜாக்கெட்களில் பயன்படுத்துகிறார்கள். ஜாக்கெட் துணி பாவாடைக்கு பார்டர் ஆகிவிடுகிறது. ஸ்கர்ட்டுக்கு பதில் பலாசோ பயன்படுத்துவது புதிய பேஷனாக உருவாகிக்கொண்டிருக்கிறது. இதற்கான ஜாக்கெட் ‘க்ரோப் டாப்’ போன்றிருக்கும். இப்போது பட்டுப் பாவாடை- ஜாக்கெட்டுடன் தாவணியையும் இணைத்து தருகிறார்கள். டீன்ஏஜ் பெண்களை இது வெகுவாக கவர்கிறது.

    அடர்த்தியான நிறங்களை கொண்ட பட்டுப்பாவாடைகளே முந்தைய ஸ்டைலாக இருந் தது. அந்த பாரம்பரிய ஸ்டைல் இப்போதும் பெண்களை ஈர்க்கத்தான் செய்கிறது. பச்சை- மஞ்சள், நீலம்- சிவப்பு, மெருன்- நீலம், நீலம்-பிங்க், பிங்க்- கிளிப்பச்சை போன்றவைகளே அதற்கான கலர் காம்பினேஷன்களாக இருக்கின்றன. பிராக்கெட் ஜாக்கெட்களுக்கு பாவாடையின் பார்டரில் இருந்து வெட்டி எடுத்த துண்டுகளை ‘ஸ்லீவ்’ ஆக பயன்படுத்துகிறார்கள். அதன் நெக்லைனில் எம்ப்பிராய்டரி, ஸ்டோன் ஒர்க் போன்றவைகளை செய்கிறார்கள்.

    3 முதல் 14 வயது வரையுள்ள சிறுமிகளுக்கு ஆன்லைனில் ரெடிமேடு பட்டுப்பாவாடைகளை வாங்கலாம். சில்க் காட்டன் மெட்டீரியலில் தயாரான லைனிங் செய்த டாப்பும், பேன்சி நெக்கும், எம்ப்ராய்டரிங் வேலைப்பாடுகளும் அதில் இருக்கும். ஆன்லைனில் வாங்கும்போது நம்பகமான பிராண்ட்களை தேர்ந்தெடுப்பதே சிறந்தது. துணியின் தரத்தையும், டிசைனையும் தேர்ந்தெடுத்துவிட்டால் எந்த இணையதளத்தில் இருந்து அதனை வாங்கவேண்டும் என்று தீர்மானிக்கவேண்டும். குறைந்தது ஐந்து வெப்சைட்டுகளையாவது பார்த்துவிட்டு நிதானமாகவே ஆர்டர் செய்யவேண்டும். ரிட்டர்ன் செய்வது, எக்சேஞ்ச் செய்வது போன்ற சவுகரியங்கள் இருக்கவேண்டும்.

    துணியின் தரத்தை பற்றிய விவரங்களையும் வாசித்து பார்க்கவேண்டும். துல்லியமான அளவில் ஒருபோதும் ஆர்டர்கொடுக்கக்கூடாது. துல்லிய அளவின் அடுத்த சைஸ்க்கு ஆர்டர் கொடுப்பதே சிறந்தது. துல்லிய அளவில் ஆர்டர் கொடுத்து வாங்கினால் அது இறுக்கமாக தோன்றலாம். சற்று அளவு அதிகமான பட்டுப்பாவாடை என்றால் அதன் அளவை சுருக்குவது மிக எளிது.

    மெலிந்து உயரமாக தோன்றும் பெண்கள் குறுக்கான கோடுகளை கொண்ட பிரிண்டுகள் அமைந்த டிசைன்களை வாங்கக்கூடாது. அகலமான பார்டரும், பெரிய பூக்களை கொண்ட டிசைன்களும் அவர்களுக்கு பொருத்தமாக இருக்கும். பாவாடைக்கும்- ஜாக்கெட்டுக்கும் கான்ட்ராஸ்ட் நிறங்களை தேர்ந்தெடுங்கள். மெலிந்த உடல்வாகு கொண்டவர்களுக்கு பாவாடையில் அதிக சுருக்கங்கள் வைத்துக்கொள்ளலாம். ஜாக்கெட்டுகளில் ‘பப் ஸ்லீவ்’ வைத்துக்கொள்ளலாம். குண்டான உடல்வாகு கொண்டவர்களுக்கு சிறிய பிரிண்டுகளை கொண்ட டிசைன்கள் பொருத்தமாக இருக்கும். சிறிய செக் டிசைன்களும் அவர்களுக்கு கூடுதல் அழகு தரும்.
    குழந்தைகளுடன் தொடர்ந்து பேசும் போது தான் அவர்கள் எதை நோக்கி பயணிக்கிறார்கள்? எதை விரும்புகிறார்கள்?. எப்படிப்பட்ட சிந்தனை அவர்களிடம் மேலோங்கி வருகிறது என்பதையும் புரிந்து கொள்ள முடியும்.
    பள்ளிக்கூடத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் குழந்தைகள் படிக்கின்றனர். அவர்களின் குடும்ப சூழல், பொருளாதாரம், சமூக சூழல் உள்ளிட்ட அம்சங்கள் வேறுபட்டதாக இருக்கும். அதுபோல் குழந்தைகளின் பழக்க, வழக்கங்களும் வேறுபட்டதாகவே இருக்கும். ஆனாலும் குழந்தைகள் பள்ளியில் ஒரு வகுப்பறையில் ஒன்றாக அமர்ந்து படிக்கும் நிலை உள்ளது. அப்போது அவர்களிடம் வேறுபாடு ஏற்படக்கூடாது என்பதற்காக சீருடை வழங்கப்படுகிறது.

    ஆனாலும் அவர்களின் செயல்பாடுகள் ஒன்றுக்கொன்று வேறுபட்டதாகவே இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் மாணவர்களை கையாளுவதில் ஆசிரியர்கள் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருக்கிறார்கள். என்றாலும் மாணவர்களின் சிந்தனை, புரிந்து கொள்ளும் திறன், பெற விரும்பும் பதில், கேட்கும் கேள்விகள் போன்றவை மிகவும் வித்தியாசமானதாகவே இருக்கிறது. எனவே வீட்டில் இருந்து பள்ளி செல்லும் குழந்தைகள் என்ன மாதிரியான அனுபவத்தை பெற்று வருகிறார்கள் என்பதை பெற்றோர் அறிந்து கொள்வது அவசியம்.

    பெற்றோரின் பெரிய கடமை

    அதற்கு பெற்றோர் தங்களின் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட வேண்டும். பள்ளியில் நடந்த நிகழ்வுகள், நடத்தப்பட்ட பாடம், நண்பர்களுடன் பகிர்ந்து கொண்ட உணர்வுகள், தேர்வுகள் ஆகியவை தொடர்பாக பெற்றோர் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். அதையும் தாண்டி பள்ளியில் மாணவர்கள் இடையே நடைபெறும் பொதுவான நிகழ்வுகள், அதை குழந்தைகள் எதிர்கொண்ட விதம் குறித்தும் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.

    குழந்தைகள் ஒவ்வொரு நாளும் வளர்ந்து கொண்டே இருக்கிறார்கள். சமூகம் குறித்து அவர்களின் பார்வையும் மாறிக்கொண்ட இருக்கிறது. அவர்களுக்கு பெற்றோர் கற்றுக்கொடுப்பது, அதை குழந்தைகள் புரிந்து கொண்டு செயல்படுவது போன்றவற்றில் வேறுபாடு இருக்கும். அதை புரிந்து கொண்டு சரி செய்ய வேண்டியது பெற்றோரின் பெரிய கடமையாக இருக்கிறது. குழந்தைகளுடன் தொடர்ந்து பேசும் போது தான் அவர்கள் எதை நோக்கி பயணிக்கிறார்கள்? எதை விரும்புகிறார்கள்?. எப்படிப்பட்ட சிந்தனை அவர்களிடம் மேலோங்கி வருகிறது என்பதையும் புரிந்து கொள்ள முடியும். அதில் உள்ள தவறுகளை திருத்தவும் வாய்ப்பு ஏற்படும்.

    தொடக்க கல்வி முக்கியம்

    பணிச்சுமை, வேலை என்று ஏதாவது காரணங்களை கூறிக்கொண்டு பெற்றோர், குழந்தைகளிடம் இருந்து ஒதுங்கிவிடக்கூடாது. குழந்தைகளுடன் நேரம் செலவிடுவதால் புதிய தொழில்நுட்பங்களை அறிந்து தங்களை மேம்படுத்திக்கொள்ள முடியும். ஒவ்வொரு காலகட்டத்திலும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும். அதற்கு நம்மை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். மாற்றங்களை எதிர் கொண்டு, நல்லவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு புதிய சமூக சூழலில் நிகழும் மாற்றங்களை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். பாடப்புத்தகத்தை தாண்டி பள்ளியில் கிடைக்கும் பாடம் என்பது குழந்தைகளுக்கு எந்த நாளும் மறக்க முடியாத ஒன்றாக இருக்கிறது. குழந்தைகளின் வாழ்வை செம்மைப்படுத்துவதில் தொடக்க கல்வி முக்கிய இடம் பெறுகிறது. அந்த பருவத்தில் குழந்தைகளை நற்பண்புகள் மிகுந்தவர்களாக வளர்த்தெடுக்க வேண்டும். அது அவர்களின் எதிர்கால நல்வாழ்வுக்கு உறுதுணையாக இருக்கும்.

    நல்ல வார்த்தைகள்

    குழந்தைகள் எதையும் எளிதாக கற்றுக்கொள்பவர்கள் மட்டுமல்ல யாருக்கும் எதையும் எளிதாக கற்றுக்கொடுக்கும் திறன் பெற்றவர்கள் ஆவர். அவர்களின் அணுகுமுறை யாரையும் எளிதில் ஈர்த்து விடும். அதன் மூலம் அவர்கள் சொல்லாத விஷயங்களின் அர்த்தத்தையும் புரிந்து கொள்ள முடியும். எனவே குழந்தைகளுடன் நேரம் செலவிடுவது அவர்களுக்கு மட்டுமல்ல பெற்றோருக்கும் பயன் உள்ளதாக இருக்கும். குழந்தைகள் பெரும்பாலும் பெற்றோரிடம் இருந்து கற்றுக்கொள்கின்றன. எனவே அவர்களுக்கு முன்னுதாரணமாக பெற்றோர் நடந்து கொள்ள வேண்டும். நற்பண்புகளை வெளிப்படுத்த வேண்டும். நல்ல வார்த்தைகளை உபயோகிக்க வேண்டும். பரஸ்பரம் மரியாதை அளிக்க வேண்டும். இது போன்ற நிகழ்வுகள் குழந்தைகளிடம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். குழந்தைகளை நல்ல மனிதர்களாக மாற்ற அவர்களுடன் நேரம் செலவிடுவதே நல்ல அணுகுமுறை ஆகும்.
    குடும்ப உறவுகள் விலகி விடாமல், காலம் காலமாக தொடர வேண்டும் என்பதற்காகவே முன்னோர்கள் இதுபோன்ற சில சம்பிரதாயங்களை வகுத்துள்ளனர். இது உலகைக் கவர்ந்த நமது பண்பாடாகும்!
    பெண்களிடம் பாசம் காட்டுவதில்தான் சமூக பண்பாடு உறுதிசெய்யப்படுகிறது. பாசம்காட்டும் அந்த பண்பாடு ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும் தொடங்குகிறது. பெண் திருமணமாகி கணவர் வீட்டுக்கு சென்ற பின்பும், பிறந்த வீட்டினர் அவளை மறக்காமல் இருப்பதுதான் தமிழகத்தின் சமூக பண்பாடு. அனைத்து விசேஷங்களுக்கும் அவளை குடும்பத்தோடு பிறந்த வீட்டுக்கு அழைத்து வருகின்றனர். மணமாகி சென்றாலும் பெண்ணுக்கு குடும்பம் ஆதரவாக இருக்கிறது என்பதை, அவளின் கணவர் வீட்டினருக்கு புரிய வைக்கும் வகையில் அந்த பண்பாடு அமைகிறது. அது அந்த பெண்ணுக்கும் தன்னம்பிக்கையை அளிக்கும்.

    திருமணம், வளைகாப்பு, குழந்தை பிறப்பு, காதுகுத்து, மஞ்சள் நீராட்டு.. என அடுத்தடுத்து நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பிறந்த வீட்டின் சொந்தங்கள் அவளோடு கூடி மகிழ்வார்கள். அதற்கு ஏற்றார்போல் பெண்களும், உடன்பிறந்த அண்ணன், தம்பிகளை கணவரிடமோ அல்லது கணவரின் வீட்டாரிடமோ ஒருபோதும் விட்டுக் கொடுப்பதில்லை.

    பெண்ணின் வாழ்வில் முக்கியமான நிகழ்வு குழந்தைப் பிறப்பு. அப்போது அவள் தனது தாய் வீட்டில் இருக்க வேண்டும் என்றே நினைப்பாள். பிறந்த வீட்டு சொந்தங்கள் அனைத்தும் அங்கே இருப்பதே அதற்கான காரணம். குழந்தை பிறந்த உடன் முதலில் தெரிவிக்க வேண்டிய நபர்களில் தாய்மாமனும் ஒருவர். அதனால் புதிய வரவான குழந்தையின், பச்சிளம் பருவத்தில் இருந்தே தாய்மாமன் உறவு தொடங்கி விடுகிறது.

    குடும்ப உறவுகளில் தாய் மாமன் உறவு என்பது ஆழமானது. அது குழந்தையின் தாயை பொறுத்தே அமையும். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு குழந்தைக்கு தொட்டில் கட்டும் வழக்கம்.

    இப்போதெல்லாம் மர தொட்டில், ஸ்பிரிங் தொட்டில் என பலவகையான தொட்டில்கள் வந்து விட்டன. முன்பெல்லாம் வெள்ளை கயிறு, பல வண்ணங்களுடன் கூடிய தொட்டில் கம்பு, வெள்ளை வேட்டியில் கட்டப்படும் தொட்டில்களே அதிகம். இப்போதும் அதை பல இடங்களில் காண முடியும். இந்த தொட்டிலில் இருந்துதான் குழந்தைக்கும், தாய்மாமனுக்கும் இடையேயான பந்தம் தொடங்குகிறது.

    சகோதரிக்கு பிறக்கும் குழந்தைக்கு, குழந்தையின் தாய்மாமன் தொட்டில் வாங்கி கொடுக்க வேண்டும். இதை ஒரு சம்பிரதாயமாக இல்லாமல், உறவை பலப்படுத்த ஏற்படுத்திய யுக்தி என்றே சொல்லலாம். குழந்தைக்கு தாய் மாமன் தொட்டில் கட்டுவதற்கு வேட்டி, தொட்டில் கம்பு, தொட்டில் கட்டும் கயிறு, வெள்ளிச் சங்கு போன்று முதல் குழந்தைக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கி கொடுப்பார். பிற பொருட்களை தான் மற்றவர்கள் வாங்கிக் கொடுப்பதுண்டு. தாய்மாமன் வாங்கி கொடுக்கும் வேட்டியில் குழந்தைக்கான முதல் தொட்டிலை கட்டுவார்கள். தற்போதும் பல கிராமங்களில் இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது. தாய்மாமன் தொட்டில் தரும்வரை குழந்தைக்கு வேறு தொட்டில் கட்ட மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    குழந்தையின் தாய்மாமன் வேலைக்காக வெளியூருக்கு சென்று விட்டாலும், குழந்தையை பார்க்க ஒரு சில நாட்களில் வரவேண்டும் என பெரியோர்கள் அறிவுறுத்துவார்கள். சகோதரி தனக்கு கொடுத்த அன்பு, மரியாதையை அந்த குழந்தை மீது தனது கடைசி காலம் வரை தாய்மாமன் வைத்திருப்பான். ஒரு தொட்டிலில் உருவாகும் இந்த பந்தம், அந்த குழந்தையின் காலம் வரை நீடிக்கும்.

    குடும்ப உறவுகள் விலகி விடாமல், காலம் காலமாக தொடர வேண்டும் என்பதற்காகவே முன்னோர்கள் இதுபோன்ற சில சம்பிரதாயங்களை வகுத்துள்ளனர். இது உலகைக் கவர்ந்த நமது பண்பாடாகும்!
    ×