என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    காராமணி சுண்டலில் புரதம் நிறைந்துள்ளது. மேலும் இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. ஒரு கிண்ணம் வேக வைத்த காராமணி சுண்டலை சாப்பிட்டால், நீங்கள் நீண்ட நேரம் பசி இல்லாமலும், ஆற்றலுடனும் இருப்பீர்கள்.
    தேவையான பொருட்கள்:

    காராமணி - 1/4 கப்
    எண்ணெய் - 2 டீஸ்பூன்
    கடுகு - 1/2 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிது
    வரமிளகாய் - 1
    பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
    துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
    சீரகப் பொடி - 1/4 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    முதலில் காராமணியை வாணலியில் போட்டு 2-3 நிமிடம் வறுத்து, பின் அதனை நீரில் 3 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

    பின்னர் அதனை குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி, 5 விசில் விட்டு இறக்கி நீரை வடித்து, காராமணியை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, பின் அதில் உப்பு தூவி, வேக வைத்துள்ள காராமணியை சேர்த்து கிளறி விட வேண்டும்.

    பின் அதில் துருவிய தேங்காய் சேர்த்து நன்கு கிளறி, இறுதியில் சீரகப் பொடி தூவி பிரட்டி இறக்கினால், காராமணி சுண்டல் ரெடி!!!

    சருமத்தில் உள்ள இறந்த செல்கள், தூசுக்களை அகற்றுவதில் மேக்கப் பிரஷ்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. அவைகளை தூய்மையாக வைத்துக்கொள்ளாவிட்டால் பாக்டீரியாக்கள், கிருமிகள் தங்கிவிடும்.
    ‘மேக்கப்’ செய்ய பயன்படுத்தும் ‘பிரஷ்’கள் சுத்தமாக பராமரிக்கப்பட வேண்டும். அவை சுத்தமாக இல்லை என்றால் சரும பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். சருமத்தில் உள்ள இறந்த செல்கள், தூசுக்களை அகற்றுவதில் மேக்கப் பிரஷ்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. அவைகளை தூய்மையாக வைத்துக்கொள்ளாவிட்டால் பாக்டீரியாக்கள், கிருமிகள் தங்கிவிடும்.

    பிரஷ்களை சுத்தமாக பராமரிக்கும் வழிமுறை:

    ஒரு கிண்ணத்தில் வெதுவெதுப்பான நீரை நிரப்பி அதில் பிரஷை முக்கி வைக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து அதன் நுனிப்பகுதியை கைவிரல்களால் தேய்க்க வேண்டும். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். அதன் பிறகு மென்மையான சோப் அல்லது பேபி ஷாம்புவை பயன்படுத்தி பிரஷை சுத்தம் செய்வது அவசியம்.

    பிரஷில் படிந்திருக்கும் ஈரப்பதத்தை டவல் பயன்படுத்தி துடைத்தெடுக்க வேண்டும். அதில் படிந்திருக்கும் நீர்த்தன்மை நீங்கும் வரை உலர்த்த வேண்டும். ஒருபோதும் பிரஷை முறுக்கவோ, பிழியவோ கூடாது. அதன் மென்மைத்தன்மை பாழாகிவிடும்.

    பிரஷ்களை போலவே மேக்கப்புக்கு பயன்படுத்தும் ‘ஸ்பான்ஞ்’களையும் சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். முதலில் அதனை வெதுவெதுப்பான நீரில் முக்கி வைக்க வேண்டும். பின்னர் அதையும் மென்மையான சோப் அல்லது சில துளி ஷாம்பு கொண்டு தேய்த்து கழுவ வேண்டும். நன்றாக கழுவிய பின்பு உலர வைக்க வேண்டும்.

    கூந்தலுக்கு பயன்படுத்தும் சீப்புகளையும் அடிக்கடி இதேபோல் சுத்தப்படுத்த வேண்டும். உபயோகப்படுத்தாத பல் துலக்கும் பிரஷில் ஷாம்பை தடவி சீப்பின் உள் பகுதியில் அழுத்தி தேய்த்து 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும். வினிகரையும் பயன்படுத்தலாம். பின்னர் தண்ணீரில் கழுவி உலர்த்த வேண்டும். கூந்தலுக்கு பயன்படுத்தும் பிரஷையும் சுத்தப்படுத்துவது அவசியம்.
    35 வயதுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு கால்சியம் குறைபாடு உண்டாகும். இதனால் எழும்பு முறிவு, எலும்பு தேய்மானம் ஏற்படும். இதனால் கால்சியம் அதிகமாக உள்ள உணவுகளை சாப்பிடவேண்டும்.
    "பெண்களை அதிகமாக பாதிக்கக் கூடிய நோய் அனீமியா எனப்படும் ரத்தசோகை. இதற்குக் காரணம் இரும்புச் சத்து குறைபாடு. அதனால், இரும்புச்சத்து அதிகமாக உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். பழங்கள், கீரை வகைகள், பருப்பு வகைகளில் இரும்புச்சத்து அதிகமாக இருக்கும். கூடவே வைட்டமின் சி சத்துள்ள உணவுகளையும் சேர்த்துக்கொள்வது நல்லது.

    உதாரணமாக மீன் சாப்பிடும்போது அதோடு எலுமிச்சம்பழச் சாறு சேர்த்துக்கொள்ளலாம். உணவு சுவையாக இருப்பதுடன் ஆரோக்கியத்தையும் கொடுக்கும். ஜூஸ்களிலும் கூட எலுமிச்சம்பழச் சாறு சேர்த்துக்கொள்ளலாம். முட்டைக்கோஸ், மாங்காய் போன்ற 'பச்சை'க் காய்கறிகளிலும் இரும்புச்சத்து அதிகமாக இருக்கும் . தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வருவதும் உடலுக்கு நல்லது. வைட்டமின் பி- 6 மற்றும் பி- 12 குறைவினாலும் அனீமியா உண்டாகும். பி -12 குறைபாடு, சைவ உணவுகள் சாப்பிடுவோருக்கு அதிகமாக ஏற்படும். எனவே தினமும் பால் உணவுகள் சேர்த்துக்கொள்வது மிகவும் அவசியமாகும்.

    35 வயதுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு கால்சியம் குறைபாடு உண்டாகும். இதனால் எழும்பு முறிவு, எலும்பு தேய்மானம் ஏற்படும். இதனால் கால்சியம் அதிகமாக உள்ள உணவுகளை சாப்பிடவேண்டும்.

    அடுத்ததாக உடல்பருமன் பெண்களைப் பாதிக்கக்கூடிய முக்கியமான பிரச்சனையாக இருக்கிறது. இதனால் இதய நோய்கள் உண்டாவதற்கான வாய்ப்புகள் உண்டு. உடல்பருமன் ஏற்படுத்தக் கூடிய உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.

    சீரகம், சோம்பு, ஓமம் போன்றவற்றில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் மார்பகப் புற்று நோய் ஏற்படுவதைத் தடுக்கின்றன. எனவே, ஆன்டி ஆக்ஸ்டிடென்ட்கள் அதிகமாக உள்ள திராட்சை, பீட்ரூட் போன்ற நிற காய்கறிகள் மற்றும் பழ வகைகளை அதிகமாக சாப்பிட வேண்டும்.
    இளைய பருவப்பிள்ளைகளுக்கு மனம் புண்படும் வகையிலான விமர்சனங்களும், கிண்டல்களும் பிடிக்காது. அது தன்னம்பிக்கையை இழக்க செய்து அவர்களை முடக்கி போட்டுவிடும்.
    குழந்தைகளுக்கு சிறந்த கல்வி , உணவு, உடை தேவையான வசதிகளை ஏற்படுத்தி தருவது மட்டுமே பெற்றோரின் கடமையல்ல, வளரிளம் பருவத்தில் உள்ள தங்கள் பிள்ளைகளுக்கு தன்னம்பிக்கையை வளர்த்து அவர்களது எதிர்காலத்தை நிர்ணயிக்கும் வகையில் சரியான பாதையை தேர்ந்தெடுக்க வழிகாட்டுவதும் முக்கிய கடமைதான்.

    இன்றைய சூழலில் சமூக வலைத்தளங்கள் சுற்றி பழகும் சமூகம் வேலை, கல்விக்சூழல் எனப் பல வகையிலும் துவண்டு நிற்கும் இளைஞர்கள் தன்னம்பிக்கையை இழக்கின்றனர். இதனால் பலரும் வாழ்க்கை பாதையை தவறாக தேர்ந்தெடுத்து தோல்வியை தழுவுகின்றனர். பலர் முடிவு எடுக்க முடியாமல் குழம்பி நிற்கின்றனர். பெற்றோர் சரியான உக்திகளை கையாண்டு பிள்ளைகளை வழிநடத்தினால் தன்னம்பிக்கையை எளிதில் வளர்க்க முடியும்.

    அதற்கு என்ன செய்ய வேண்டும்? இதோ சில வழிகள்.

    மரியாதை கொடுங்கள்

    உங்கள் குழந்தைகள் எவ்வளவு வளர்ந்தாலும் உங்களுக்கு அவர்கள் குழந்தைகளாகவே தெரியலாம். ஆனால் அவர்கள் சமுதாயத்தை தனியாக எதிர்கொள்ள வேண்டிய இடத்தில் உள்ளார்கள். அவர்களை அனைத்து விஷயங்களிலும் முன்னிலை படுத்துங்கள். இதுவே தன்னம்பிக்கையை வளர்ப்பதற்கான முதல்படி.

    அடிக்கடி பாராட்டுங்கள்

    உங்கள் பிள்ளைகள் ஒரு செயலை செய்யும் போது பாராட்டுங்கள். அனைத்து வயதினரும் எதிர்பார்க்கும் ஓர் விஷயம் பாராட்டு. அது அவர்களுக்கு தன்னம்பிக்கையை அதிகரிக்கும். சரியான முடிவுகளை எடுக்கத்தூண்டும்.

    கிண்டலை தவிருங்கள்..

    நாம் செய்யும் செயலை பிறர் விமர்சிக்கும் போது அதில் வெளிப்படும் கிண்டல் நம்மை காயப்படுத்தும். அதுபோல் தான் நம் பிள்ளைகளுக்கும். அதுவும் இளைய பருவப்பிள்ளைகளுக்கு மனம் புண்படும் வகையிலான விமர்சனங்களும், கிண்டல்களும் பிடிக்காது. அது தன்னம்பிக்கையை இழக்க செய்து அவர்களை முடக்கி போட்டுவிடும்.

    தனித்திறமையை பாராட்டுங்கள்

    உங்கள் பிள்ளைகளுக்கு படிப்பு தவிர பல விஷயங்கள் தெரிந்திருக்கும். ஆனால் அதை பல பெற்றோரும் அறிவதில்லை. அதை தெரிந்து அத்திறமையை பாராட்டுங்கள்.

    நம்பிக்கையான நண்பராகுங்கள்

    தோளுக்கு மேல் வளர்ந்தால் தோழன் என்பது பழமொழி. நீங்கள் தவறையும் நட்பாக எடுத்துரைக்கும் நண்பராக மாறினால் உங்கள் மீது பிள்ளைகளுக்கு நம்பிக்கை ஏற்படுவதுடன் அனைத்தையும் உங்களிடம் பகிர்ந்து கொள்வதற்கு முன்வருவார்கள். இதுவே தன்னம்பிக்கையை வளர்க்க உதவும்.

    வலிமையை உருவாக்குங்கள்

    பிள்ளைகள் நம்பிக்கை இழக்கும் வகையிலான சம்பவங்கள் நடந்தால் துவண்டு தவறான வழியைத் தேர்ந்தெடுக்கக்கூடும். அச்சமயத்தில் அவர்களுடன் நேரத்தை செலவிட்டு அவர்களின் வலிமை எது என்பதை தெளிவுப்படுத்துங்கள். பலம் எது என்பதை கண்டறிந்து அதை மேலும் பலப்படுத்த உதவுங்கள். அப்போது தான் வாழ்க்கையில் எதையும் எதிர்கொள்ளும் பண்பு வளரும்.

    தொழில் ரீதியாக உதவுங்கள்

    படித்த பலருக்கும் வேலை கிடைப்பதில் சிக்கல்கள் உள்ளன. இதனால் தன்னம்பிகைக் இழக்கும் வாய்ப்பும் உண்டு. அவர்களுக்கு ஏற்ற தொழில் எது என்பதை கண்டறிந்து அதை அடைய பிள்ளைகளுக்கு உதவுங்கள்.

    தன்னம்பிக்கை என்பது வெறும் வார்த்தை மட்டுமல்ல. வாழ்க்கையின் வெற்றிக்கு அடிப்படையாக தேவைப்படும் மருந்து. அதனை சரியான படி பிள்ளைகளுக்கு கற்று கொடுத்தால் சமுதாயத்தில் அவர்களால் சாதிக்க முடியும்.
    முறையற்ற நேரத்தில் பேரரசரைப்போலவே நம்மில் பலர் இரவு உணவை சாப்பிடுகிறோம் என்பதை பல்வேறு ஆய்வு முடிவுகள் முன் வைக்கின்றன. இந்த தலைகீழான நிலையால் ஏராளமான உடல் உபாதைகளும் ஏற்படுகின்றன.
    காலை உணவினை அரசனை போலவும், மதிய உணவினை இளவரசரைப்போலவும், இரவு உணவினை ஏழையை போலவும் சாப்பிட வேண்டும் என்பது உணவுமுறையை எடுத்துரைக்கும் வாழ்வியல் கூற்றாகும்.

    3 வேளை உணவையும், எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பது போல எந்தெந்த நேரத்திற்குள் சாப்பிட வேண்டும் என்பதும் முக்கியமானது. இதில் இரவு உணவை பொறுத்தவரை 7 முதல் 9 மணிக்குள் சாப்பிடுவதே சிறந்தது.

    ஆனால் இன்றைக்கு பணி நிமித்தமாக நாள் முழுவதும் ஓடிக்கொண்டே இருப்பவர்களுக்கு, இரவு உணவை குறிப்பிட்ட நேரத்திற்குள் குறிப்பிட்ட அளவிலும் சாப்பிட முடிவதில்லை என்பதே உண்மை.

    முறையற்ற நேரத்தில் பேரரசரைப்போலவே நம்மில் பலர் இரவு உணவை சாப்பிடுகிறோம் என்பதை பல்வேறு ஆய்வு முடிவுகள் முன் வைக்கின்றன. இந்த தலைகீழான நிலையால் ஏராளமான உடல் உபாதைகளும் ஏற்படுகின்றன.

    சாப்பிட்ட உடனேயே உறங்கச் செல்வோருக்கு இரைப்பையில் செரிமானத்திற்காக சுரக்கும் அமிலம் இரைப்பை குடலை நோக்கி மேலே ஏறுகிறது. இவ்வாறு தொடர்ந்து நடப்பதால் குடல் பகுதியில் புண்கள் உண்டாகின்றன. காலை நேரத்தில் நெஞ்செரிச்சல் ஏற்பட இதுவும் ஒரு காரணமாகும்.

    துரித உணவுகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு தற்போது பரவலாக உள்ளது. அவற்றை போல எண்ணெய்யில் பொரித்த உணவுகளும் இரவுக்கு ஏற்றவை அல்ல. அவை செரிமானமாக அதிக நேரம் எடுப்பதால் நம்முடைய ஓய்வுக்கு மிகவும் தேவையான ஆழ்ந்த உறக்கத்தை கெடுக்கும் தன்மை கொண்டவை.

    முடிந்தவரை இரவு நேரத்தில் அசைவ உணவுகளை தவிர்த்துவிடுவது நல்லது. அவை செரிமானம் ஆக நீண்ட நேரமாகும்.

    தயிர், கீரை வகைகள் சார்ந்த உணவுகளை இரவில் தவிர்த்து விடுவதால் சில ஒவ்வாமைகளில் இருந்து தப்பிக்கலாம். அவற்றிற்கு மாற்றாக காய்கறிகள் அடங்கிய சூப் வகைகள், மிளகு, மஞ்சள் கலந்த பால் ஆகியவற்றை பருகலாம்.

    இவையெல்லாம் இரவு உணவில் கடைப்பிடிக்க வேண்டிய எளிய வழிமுறைகளாகும். இவற்றில் சற்றே கவனமாக இருந்தால் செரிமான மண்டலம் நிம்மதி அடையும். ஏனெனில் நாம் உறங்கி இளைப்பாறும் நேரத்தில் தான் செரிமான உறுப்புகளும் ஓய்வெடுக்கும். முறையற்ற இரவு உணவால் அதற்கு வாய்ப்பளிக்காவிட்டால் உடல் பருமன் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
    தசைநார் தேய்வு எந்த வயதிலும் ஏற்படலாம். எனினும் குழந்தை பருவத்திலே அதற்கான அறிகுறிகள் தென்பட தொடங்கிவிடும். இந்த நோய் குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    தசை நார் தேய்வு பிரச்சினையால் பாதிப்புக்குள்ளாகும் பெண்கள் அதிகரித்து வருகிறார்கள். உடலில் உள்ள தசை நார்களின் செயல்பாட்டுக்கு புரதத்தின் பங்களிப்பு இன்றியமையாதது. அதில் குறைபாடு ஏற்படும்போது தசை நார்கள் பலவீனமாகி விடும். அதன் காரணமாக உடலை தாங்கும் சக்தியை கால்கள் இழந்துவிடும். நாளடைவில் எழுந்து நடமாட முடியாத சூழ்நிலை உருவாகிவிடும்.

    அத்தகைய பாதிப்புக்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சகோதரிகள் ஆளாகி இருக்கிறார்கள். அவர்கள் பெயர்: ரேணு, நீது, சோனியா, இவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் பிறந்தவர்கள். பள்ளிப்படிப்பின்போது ஒழுங்காக நடக்க முடியாமல் சிரமப்பட்டிருக்கிறார்கள். உடலை தாங்கும் சக்தியை கால்கள் இழக்கத் தொடங்கி இருக்கிறது. அந்த சமயத்தில் தசை நார் தேய்வு பற்றி போதிய விழிப்புணர்வு இல்லாததால் சாதாரணமாக இருந்துவிட்டார்கள். அதுவே பின்னாளில் பாதிப்பை அதிகப்படுத்திவிட்டது. அதுபற்றி 43 வயதாகும் ரேணு சொல்கிறார்:-

    ‘‘15 வயதில் நான் பாதிக்கப்பட்டேன். அப்போது தசை நார் தேய்வு பற்றி போதிய விழிப்புணர்வு இல்லாததால் டாக்டர்களும் குழம்பி போனார்கள். என் உறவினர்களில் சிலர் நான் ரொம்ப பலவீனமாக இருப்பதாக கூறினார்கள். சிலர் காய்ச்சல் வந்ததால் இப்படி ஆகிவிட்டது என்றார்கள். கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்தபோது என்னால் சரியாக நடக்க முடியவில்லை. என் கால்கள் தளர்ந்துபோனது. அதனால் கல்லூரிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. படிப்பை பாதியில் நிறுத்திவிட எனக்கு மனமில்லை. எனக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சினைக்கான காரணத்தை அறிவதற்கு ஏராளமான டாக்டர்களை அணுகினேன். ஆனால் எந்த பலனும் ஏற்படவில்லை. உடலில் உள்ள தசைகள் பலவீனமாகி நிலைமை மோசமானது. எனக்கு ஏற்பட்டிருப்பது எந்த மாதிரியான பாதிப்பு என்பதை கண்டறிவதற்குள் உடல்நிலை கடும் பாதிப்புக்குள்ளாகிவிட்டது’’ என்கிறார், ரேணு.

    ரேணுவுக்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருந்த வேளையில் சகோதரிகள் நீதுவும், சோனியாவும் அதே போல் பாதிக்கப்பட்டார்கள். ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்துவிட்டாலும் அவர்களை இயல்பு நிலைக்கு கொண்டு வர மருத்துவம் கைகொடுக்கவில்லை. இப்போது மூன்று பேரும் சக்கர நாற்காலிகளின் உதவியுடன் தங்கள் வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருக்கிறார்கள். ரேணுவும், நீதுவும் சேர்ந்து மாணவர்களுக்கு டியூசன் எடுக்கிறார்கள். சோனியா பட்டப்படிப்பை முடித்துவிட்டு பேஷன் டிசைனிங் பயிற்சியும் பெற்றிருக்கிறார்.

    ‘‘எனக்கு 24 வயதில் கால்கள் பலவீனமாக தொடங்கியது. ஸ்டாப் செலக்‌ஷன் கமிஷன் தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்றேன். ஆனால் வேலை கிடைக்கவில்லை. எங்களை போல் தசை பாதிப்பு பிரச்சினைக்குள்ளாகி இருப்பவர்களுக்கு தனி இடஒதுக்கீடு ஏற்படுத்த வேண்டும். அங்கன்வாடி பணியில் சேர தகுதி இருந்தும் அந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை’’ என்று கவலையுடன் கூறுகிறார், சோனியா.

    தற்போது மூன்று பேரும் தசைநார் தேய்வு பாதிப்புக்கான சிகிச்சையை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். தங்களை போன்று பாதிக்கப்பட்டவர்களுக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்கள்.

    தசைநார் தேய்வு எந்த வயதிலும் ஏற்படலாம். எனினும் குழந்தை பருவத்திலேஅதற்கான அறிகுறிகள் தென்பட தொடங்கிவிடும். நடப்பதற்கு சிரமம், நிற்பதற்கு அசவுகரியம், சுவாச கோளாறு, பேசுவதற்கு சிரமம், அன்றாட வேலைகளுக்கே அடுத்தவர்களை சார்ந்திருக்கும் நிலை, தசைகள் பலவீனமாக இருப்பது, எலும்புகள் அடர்த்தி குறைவது, நுரையீரல் மற்றும் இதயம் பலவீனமாக இருப்பது உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் விழிப்பாக இருக்க வேண்டும். அது தசைநார் தேய்வு நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்.

    சர்க்கரைவள்ளிக்கிழங்கில் அதிகளவில் பீட்டா கரோட்டின் மூலக்கூறுகள் உள்ளன. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியவை. சர்க்கரைவள்ளிக் கிழங்கில் குறைந்தளவு கொழுப்புச்சத்தும், அதிகளவு நார்ச்சத்தும் உள்ளன.
    தேவையான பொருட்கள்

    சர்க்கரைவள்ளிக்கிழங்கு - 2,
    வெங்காயம் - 1,
    பச்சைமிளகாய் - 1 (நறுக்கியது),
    இஞ்சி - 1 துண்டு (நறுக்கியது),
    உப்பு - தேவையான அளவு,
    எண்ணெய் - 1 டீஸ்பூன்,
    கடுகு - 1 டீஸ்பூன்,
    கறிவேப்பிலை - சிறிது.

    செய்முறை

    சர்க்கரைவள்ளிக்கிழங்கை குக்கரில் 3 விசில் வரும்வரை வேக வைக்கவும்.

    தோல் உரித்து சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

    ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை, வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி போட்டு வதக்கவும்.

    இதில் சிறு துண்டுகளாக வெட்டிய சர்க்கரைவள்ளிக்கிழங்கில் உப்பு சேர்த்து கிளறி 5 நிமிடம் குறைந்த தீயில் வைத்து வதக்கவும்.

    வெந்தவுடன் சூடாகப் பரிமாறவும்.
    மன நல முதலுதவி பெட்டியில் என்னென்ன பொருட்கள் இருக்க வேண்டும்? அதனை ஏன் அவசியம் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து பார்ப்போம்.
    திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டாலோ, காயம் அடைந்தாலோ மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்பாக அவசர முதலுதவி செய்வதற்கு வீட்டில் முதலுதவி பெட்டி கட்டாயம் இருக்க வேண்டும். அதுபோலவே மன நலம் பாதிப்புக்குள்ளாகும்போது அதிலிருந்து தற்காலிக நிவாரணம் பெறுவதற்கும் சிறப்பு முதலுதவி பெட்டி கைவசம் இருக்க வேண்டும். அந்த மன நல முதலுதவி பெட்டியில் என்னென்ன பொருட்கள் இருக்க வேண்டும்? அதனை ஏன் அவசியம் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து பார்ப்போம்.

    மன நிலையை சட்டென்று மேம்படுத்துவதற்கு இசை உதவும். ‘மியூசிக் தெரபி’ மனச்சோர்வை சமாளிப்பதற்கான சிறந்த உத்தி என்றும், கவனச்சிதறலை கட்டுப்படுத்தி கவனத்தை ஓரிடத்தில் குவிக்க உதவும் என்றும் ஆய்வுகள் உறுதிபடுத்தியுள்ளன. மன அழுத்தத்தில் இருக்கும்போது எந்தவொரு செயலிலும் ஆர்வமாக ஈடுபட முடியாது. அந்த சமயத்தில் சிறிது நேரம் இசையை கேட்பது மன அழுத்த அளவை குறைக்க உதவும். மேலும் இசை மீது நாட்டம் கொள்வது கவலை மற்றும் மன அழுத்தத்திற்கு எதிராக மேஜிக் போல் மந்திர ஜாலம் புரியக் கூடியது. அதனால் மனநல முதலுதவி பெட்டியில் தவறாமல் ஹெட்போனை இடம்பெற செய்யுங்கள்.

    செல்போனில் மட்டுமின்றி கையடக்க நோட்டு ஒன்றிலும் நெருங்கிய நண்பர்கள், உறவினர்களின் தொலை பேசி எண்களை எழுதி வைத்துக்கொள்ள வேண்டும்.

    சில நண்பர்கள் நீண்ட காலமாக தொடர்பில் இல்லாமல் இருக்கலாம். நெருங்கி பழகியவர்களுடன் பிரிவை சந்திந்த பிறகு அவர்களுடனும் நீண்ட நாட்களாக பேசாமல் இருக்கலாம். அவர்களின் நம்பர்களை நோட்டில் எழுதி வைத்திருந்தால், அதனை புரட்டிப்பார்க்கும்போது உடனே தொடர்பு கொண்டு பேசுவதற்கு நினைவூட்டும். அவர்களுடன் மொபைல் போனில் பேசுவதற்கு பதிலாக நேரில் சந்தித்து சில மணி நேரங்களை செலவிடலாம். அது மனதிற்கு சந்தோஷத்தை கொடுக்கும்.

    மன நல உதவி பெட்டியின் ஒரு பகுதியாக பேனா மற்றும் டைரி கட்டாயம் இடம்பெற வேண்டும். ஒவ்வொரு முறையும் எதிர்மறையான சிந்தனைகள், எண்ணங்கள் தலைதூக்கும்போது உங்கள் பிரச்சினைகளை டைரியில் எழுதி வைக்கலாம். அந்த சமயத்தில் உங்கள் உணர்வுகளை பிரதிபலிக்கும் கண்ணாடியாக அது அமையும். இயல்பான மன நிலையில் இருக்கும்போது அதனை படித்து பார்க்கலாம். அந்த சமயத்தில் வெளிப்பட்ட உணர்வு களை சுய பரிசோதனை செய்து கொள்வதற்கு வாய்ப்பாகவும் அமையும். மன அழுத்தத்தில் இருக்கும்போது டைரி படிக்கும் பழக்கத்தை பின்பற்றலாம். கடந்த கால நினைவுகளை அசை போடும்போது மனம் இலகுவாகும்.

    நறுமணம் கமழ செய்யும் எண்ணெய் வகைகளில் ஒன்றையும் மன நல முதலுதவி பெட்டியில் இடம் பெற செய்யலாம். அத்தியாவசிய எண்ணெய்கள் பதற்றத்தை குறைக்கக்கூடியவை. மன அழுத்தத்தில் இருக்கும்போது அதன் வாசத்தை நுகரலாம். வாசனை தரும் மெழுகு வர்த்திகளையும் மன நல பெட்டியில் இடம்பெற செய்யலாம். மன கஷ்டத்தில் இருக்கும் சூழலில் இருள் சூழ்ந்த இடத்தில் மெழுகுவர்த்தியை எரிய வைத்து சிறிது நேரம் மனதை ஆசுவாசப்படுத்திக்கொள்ளலாம்.

    மன குழப்பத்திலோ, மன அழுத்தத்திலோ இருக்கும்போது ஷூ அணிந்து சிறிது தூரம் ஓடலாம். ஏரோபிக் உடற்பயிற்சிகளில் ஈடுபடலாம். நடனம் ஆடலாம். இந்த பயிற்சிகள் அனைத்தும் மனச்சோர்வுடன் தொடர்புடைய எதிர்மறையான எண்ணங்களை தகர்த்தெறிய உதவும்.ஷூ, மிதமான மனச்சோர்வை கையாள்வதற்கு பயனுள்ளதாக இருக்கும் என்று ஆய்வுகளும் சுட்டிக்காட்டுகின்றன.
    தினமும் கூந்தலை கழுவுவது சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும் என்று கருதலாம். ஆனால் பெண்களை பொறுத்தவரை அது ஏற்புடையதல்ல.
    தினமும் தலைமுடியை கழுவினால் பக்க விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று ஒரு ஆய்வு முடிவு எச்சரிக்கிறது. சருமத்தைப்போலவே தலை முடியும் மென்மையான உணர் திறன் கொண்டது. அதனை அளவுக்கு அதிகமாக கழுவினால் அதன் ஆரோக்கியம் பாதிப்புக்குள்ளாகும். சுற்றுச்சூழல் மாசு, தூசு போன்றவை கூந்தலை நேரடியாக பாதிக்கும். உலர்தன்மை கொண்டதாகவும் மாற்றிவிடும்.

    தினமும் தலைமுடியை கழுவுவது அதன் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கருதி, பெண்கள் பலரும் தலைமுடியை கழுவும் பழக்கத்தை பின்பற்றுகிறார்கள். அத்துடன் ஷாம்பு பயன்படுத்துவது உச்சந்தலை சுகாதாரத்தை பராமரிக்க ஏதுவாக அமைந்திருப்பதாக கருதுகிறார்கள். ஆனால் தினமும் ஷாம்பு பயன்படுத்துவது கூந்தல் ஆரோக்கியத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தக்கூடும். தினமும் கூந்தலை கழுவுவது சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும் என்று கருதலாம். ஆனால் பெண்களை பொறுத்தவரை அது ஏற்புடையதல்ல. கூந்தலுக்கு கெடுதலே நேரும். தலைமுடியை அடிக்கடி கழுவுவது முடியின் இயற்கையான அமைப்பையும், பளபளப்பையும் பாதிக்கும். முடியும் பொலிவிழந்து மந்தமாகிவிடும்.

    குறிப்பாக உலர்ந்த கூந்தல் முடி கொண்டவர்கள் தினமும் தலைமுடியை கழுவ தேவையில்லை. அவ்வாறு செய்வது தலைமுடி வறண்டு, வெளிர்தன்மை அடைந்து சேதமடைய வாய்ப்பிருக்கிறது. அத்துடன் தலைமுடியில் சிக்கலும் ஏற்படக்கூடும். அதனை அகற்றுவதற்கு கடினமாக இருக்கும். தலை முடியை சீப்பு கொண்டு சீவும்போது முடி உதிர்வு பிரச்சினையும் உண்டாகும்.

    தலைமுடியை கழுவுவது உச்சந்தலை ஆரோக்கியத்தை பேண உதவும். தலை முடி உதிர்வு, அரிப்பு பிரச்சினையை தடுக்கும். ஆனால் இதை அடிக்கடி செய்துவந்தால் உச்சந்தலையில் ஈரப் பதம் இல்லாத நிலை ஏற்படும். தலைமுடிக்கு ஷாம்பு பயன்படுத்துவது பொடுகு பிரச்சினைக்கு நிவாரணம் தரும். அதற்காக தலைமுடியை அளவுக்கு அதிகமாக ஷாம்பு கொண்டு கழுவக்கூடாது. அடிக்கடி கழுவுவதால் பொடுகு பலவீனமடைந்தாலும், தலைமுடி மெல்லியதாக மாறக்கூடும். முடி உடைந்து போகும் வாய்ப்பும் அதிகம். தலைமுடியை சீவும்போது சீப்பில் முடிகள் படிந்தால் முடி உதிர்வு பிரச்சினையை எதிர்கொள்வதை உணரலாம்.

    ஈரமான தலைமுடியில் சீப்பு பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் கூந்தல் முடி சேதம் அடைவதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது. எந்த அளவுக்கு அதிகமாக தலைமுடியை கழுவுகிறீர்களோ, அந்தளவுக்கு முடி உடைந்து சேதமடையும். எனவே தலைமுடியின் ஆரோக்கியத்தை பேணுவதற்கு அடிக்கடி கழுவுவதை தவிருங்கள்.

    ஆன்லைன் நேர்காணலுக்கு நீங்கள் தயாராகும்போதே, எங்கு அமர்ந்து நேர்காணலை எதிர்கொள்ளலாம் என்பதையும் திட்டமிட்டுக்கொள்ளுங்கள்.
    ‘‘முன்பெல்லாம், வேலைவாய்ப்பு குறித்த செய்திகளை செய்தித்தாள்களில் தேடி படிப்போம். அதில் நமக்கு ஏற்ற அழைப்பு இருந்தால், அந்த நேர்காணலுக்கு தயாராவோம். ‘ரெஸ்யூம்’ பிரிண்ட் எடுப்பது, நண்பர்களிடமிருந்து ஷூ மற்றும் டை, கடன் வாங்கி வைப்பது, டிப்-டாப் ஆக உடை அணிந்து அலுங்காமல் குலுங்காமல் பேருந்தில் ஏறி, இலக்கை அடைவது.... என ஏகப்பட்ட பிரச்சினைகளை கடந்துதான், நேர்காணல் நடைபெறும் இடத்தையே அடைவோம்.

    அங்கு நமக்கு முன்பாகவே பெருங்கூட்டம், அந்த நேர்காணலுக்காக வந்திருக்கும். அதையும் கடந்து, நமக்கான நேரம் வரும்போது, நேர்காணல் நடத்துபவரை இம்பிரஸ் செய்வதெல்லாம், தனிக்கலை. ஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. வேலை அறிவிப்பில் தொடங்கி, நேர்காணல் வரை எல்லாமே ஆன்லைனில் வந்துவிட்டது. ஏன்...? பணிபுரிவதும் ஆன்லைனில்தான்’’ என்ற முதல் கருத்திலேயே ஆச்சரியப்படுத்துகிறார், கோவையை சேர்ந்த வசந்த். மனிதவளத்துறையில் அதீத அனுபவம் உள்ளவரான இவர், ஆன்லைன் நேர்காணல் மற்றும் அதற்கான தயாரிப்புகள் பற்றி பகிர்ந்து கொள்கிறார். குறிப்பாக ஆன்லைன் நேர்காணலில், இளைஞர்கள் எப்படி சொதப்புகிறார்கள் என்பதை விளக்குகிறார்.

    ‘‘நேர்காணலுக்கு என எழுதப்பட்டிருந்த, கடைப்பிடிக்கப்பட்டிருந்த எல்லா பார்முலாக்களையும், ஆன்லைன் நேர்காணல் உடைத்துவிட்டது. அதனால் இளைஞர்கள் ஒருசில விஷயங்களில் தடுமாறுகிறார்கள். குறிப்பாக ஆன்லைன் நேர்காணல் நடைபெறும்போது, இருட்டு அறைக்குள் அமர்ந்திருந்து பதிலளிப்பது பெரும்பாலானோரின் பணி வாய்ப்பை நிராகரித்துவிடுகிறது. அதனால் ஆன்லைன் நேர்காணலுக்கு நீங்கள் தயாராகும்போதே, எங்கு அமர்ந்து நேர்காணலை எதிர்கொள்ளலாம் என்பதையும் திட்டமிட்டுக்கொள்ளுங்கள்.

    ‘‘உங்களது அறையும், முகமும் பிரகாசமாகும்போது, உங்களுடைய பணிவாய்ப்பும் பிரகாசமாகிறது’’ என்று பொறுப்பாய் ஆலோசனை வழங்கும் வசந்த், வழக்கமான நேர்காணலை போன்றே, நவ-நாகரிக உடை அணிந்து ஆன்லைன் நேர்காணலை எதிர்கொள்ள அறிவுறுத்துகிறார்.

    ‘‘ஆன்லைன் தானே என அலட்சியம் காட்டாமல் நல்ல உடை அணிந்து அமருங்கள். முடிந்தால் கோட்-சூட் அணிந்து நேர்காணலை எதிர்கொள்வது உங்களுக்கு கூடுதல் மதிப்பையும், மதிப்பெண்ணையும் பெற்றுக்கொடுக்கும். கேமராவை ஆன் செய்ததும் மலர்ந்த சிரிப்புடன் ‘ஹலோ/வணக்கம்’ சொல்லுங்கள். முகத்திலும், உடல் அசைவிலும் நம்பிக்கையை வெளிப்படுத்துங் கள்.. நேராக நிமிர்ந்து அமர்ந்தபடி பேசுங்கள்.

    ஆன்லைன் என்பதால் சில நேரங்களில் நாம் பேசுவது அல்லது அவர்கள் பேசுவது சிறிது நேரம் கழித்து கேட்கலாம். எனவே பதில் அளிக்கவோ, அவர்கள் பேசுவதை கவனிப்பதிலோ பொறுமை அவசியம். அவர்கள் முழுமையாக பேசி முடித்த பின்பு, நன்கு கேட்டுவிட்டு உங்கள் பதிலை தர தயாராகுங்கள். முன்கூட்டியே வாய் திறக்க வேண்டாம். முடிக்கும்போதும் சிரித்த முகத்துடன் நிறைவு செய்யுங்கள்’’ என்றவர், ஆன்லைன் நேர்காணலுக்கு சுயபரிசோதனை அவசியம் என்றார்.

    ‘‘ஆன்லைன் இண்டர்வியூ புதிது என்பதால் முன் கூட்டியே என்ன பேச வேண்டும், எப்படி பேச வேண்டும், அறிமுகம் எப்படி செய்ய வேண்டும் என்பதை திட்டமிட்டுக்கொள்ளுங்கள். கேமராவில் நீங்களே பேசி ரெக்கார்ட் செய்து ஒரு முறை கேட்டுப்பாருங்கள். ஆன்லைன் என்பதால் நோட்டில் குறிப்பு கூட எழுதி வைத்துக்கொண்டு அமரலாம்’’ என்று ஆன்லைன் நேர்காணலுக்கான தயாரிப்புகளை விளக்கிய வசந்த், ‘‘நேர்காணலுக்கு முன் இணைய வசதி, சிக்னல் சிறப்பாக இருக்கிறதா, ஆடியோ, லேப்டாப் கேமரா, மைக்ரோபோன் நன்கு வேலை செய்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்’’ என்ற கருத்தோடு விடைபெற்றார்.
    வீட்டில் இருந்த படியே அலுவலக வேலையை தொடர்ந்து கொண்டிருப்பவர்களுக்கு உடல் இயக்க செயல்பாடுகளில் தொய்வு ஏற்படுவதால் முதுகுவலி பிரச்சினை அதிகரித்துக்கொண்டிருக்கிறது.
    அலுவலக பணியாளர்கள் ஒரே இடத்தில் அமர்ந்து நீண்ட நேரம் பணி செய்வதால் முதுகுவலி பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடுகிறது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக வீட்டில் இருந்து அலுவலக பணியை தொடரும் சூழலில் கூடுதல் நேரம் கணினி, லேப்டாப் முன்பு அமருவதால் உடல் இயக்கம் குறைந்து விட்டது.

    காலையில் அலுவலகத்திற்கு புறப்பட்டு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பும்போது உடல் இயக்க செயல்பாடுகள் ஓரளவுக்கு நடைமுறையில் இருக்கும். ஆனால் வீட்டில் இருந்தபடியே அலுவலக வேலையை தொடர்ந்து கொண்டிருப்பவர்களுக்கு உடல் இயக்க செயல்பாடுகளில் தொய்வு ஏற்படுவதால் முதுகுவலி பிரச்சினை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. ஒரே இடத்தில் பல மணி நேரம் அமர்ந்து வேலை செய்வதுதான் அதற்கு காரணம். முதுகுவலியை தவிர்ப்பதற்கு சில எளிய வழிமுறைகள் இருக்கின்றன.

    நீங்கள் அமரும் நாற்காலி முதுகு பகுதியை நேராகவும், சவுகரியமாகவும் வைத்திருப்பதற்கு ஏற்றதாக அமைந்திருக்க வேண்டும். முதுகுக்கு அழுத்தம் கொடுக்கும் விதத்தில் நாற்காலியின் அமைப்பு அமைந்துவிடக்கூடாது. லேப்டாப் பயன்படுத்தி வேலை செய்பவர்கள் ‘பீன் பேக்’ எனப்படும் சொகுசு பை மீது அமர்வதற்கு ஆர்வம் காட்டுவார்கள். அப்படி அமர்ந்து வேலை பார்ப்பதை தவிர்ப்பது நல்லது. அலுவலக பணிக்கு என்றே பொருத்தமாக வடிவமைக்கப்படும் நாற்காலிகளை தேர்வு செய்து கொள்வதுதான் சிறந்தது. உடலுக்கும் பாதுகாப்பானது.

    முதுகுவலிக்கு மற்றொரு காரணமாக அமைந்திருப்பது உட்காரும் தோரணைதான். சரியான தோரணையில் அமர்ந்திருக்காவிட்டால் முதுகுவலி மட்டுமல்ல வேறு சில பிரச்சினைகளையும் எதிர்கொள்ள நேரிடும். நல்ல உடல் தோரணை என்பது தரையில் கால்கள் அழுத்திய நிலையில் தொட்டுக்கொண்டிருக்க வேண்டும். இடுப்பு பகுதி நாற்காலியின் உள்புற பகுதியில் ஒட்டிய நிலையில் இருக்க வேண்டும். கணினியானது உங்கள் தோள்பட்டை மட்டத்திற்கு சற்று உயரமாக அமைந்திருக்க வேண்டும். நேராக நிமிர்ந்த நிலையில் அமர்ந்து பணி செய்ய வேண்டும்.

    கணினியின் திரைக்கும், கண்களுக்கும் இடையே குறைந்த பட்சம் ஒரு அடி தூரமாவது இடைவெளி இருக்க வேண்டும். கணினியின் மேல் பகுதியும் கண் மட்டத்திற்கு இணையாக இருக்க வேண்டும். கணினி திரை இடைவெளி, கண் மட்டம் போன்றவற்றை சரியாக கடைப்பிடிக்காவிட்டால் கழுத்துவலியையும் அனுபவிக்க நேரிடும். பணிக்கு இடையே சிறிது நேரம் இடைவெளி எடுத்து சில நிமிடங்கள் நடப்பது, செடி, கொடிகள், மரங்கள் போன்ற இயற்கையை ரசிப்பது மனம், கண்கள் மற்றும் உடலுக்கு தேவையான ஓய்வு கொடுக்க உதவும்.
    பெரும்பாலான குழந்தைகள் ஒன்றரை வயதிலேயே பிரஷ் செய்யும் விதத்தைக் கற்றுக்கொள்கின்றன. அதனால் பொறுமையுடன் கற்றுக் கொடுக்கவும்.
    பச்சிளம் குழந்தைகளின் உடல்நலத்தில் முக்கிய பங்காற்றுபவை பற்கள். பால் பற்கள்(விழுந்து முளைக்கும் தன்மை கொண்டவை) பராமரிப்பில் தொடங்கும் ஆரோக்கியம் வயோதிக காலம் வரை நீடிக்கும். இளம் பெற்றோர்களுக்கு, மழலைகளின் மயக்கும் புன்னகைக்குக் காரணமான பற்களைப் பாதுகாக்கும் எளிய டிப்ஸ் இதோ...

    மழலையின் முதல் ஸ்பரிசம் எவ்வளவு முக்கியமோ, அதேபோன்று பச்சிளம் குழந்தைக்கான முதல் பிரஷும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆகவே, அதைத் தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருப்பது அவசியம். உங்கள் செல்லத்திற்கான பிரஷை வாங்கும்போது முன்பக்கம் சிறிதாகவும், நைலான் இழைகளைக் கொண்டுள்ளதாகவும் பார்த்து வாங்க வேண்டும். அதேவேளையில் சிலிக்கான் போன்ற மெட்டலினாலான பிரஷைத் தவிர்ப்பது பாதுகாப்பானது. வாயின் கடைசிப் பகுதியில் அமைந்துள்ள பற்களையும் சுத்தம் செய்வது இன்றியமையாதது. எனவே, அதற்கேற்றவாறு நீளமான பிரஷ் பயன்படுத்தலாம்.

    உங்கள் குழந்தைக்கான பேஸ்ட்டைத் தேர்ந்தெடுப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும். இயற்கையான முறையில் தயாரான, ஃப்ளோரைட் சேர்க்கப்படாத, மழலைக்கு ஏற்ற பற்பசையாக தேர்ந்தெடுப்பது நல்லது. அதற்கு முன்னர் பல் மருத்துவர்/குடும்ப மருத்துவருடன் கலந்து ஆலோசிப்பதும் சிறப்பு.

    எண்ணிக்கையில் குறைந்த, சிறிய பற்கள் என்பதால் பேஸ்ட் சிறிதளவு போதும். ஆரம்பத்தில்
    குழந்தைகள் அடம் பிடிக்கும். பற்களைத் தேய்த்த பிறகு எச்சிலுடன் கலந்த பேஸ்ட்டை எவ்வாறு துப்புவது என்பது தெரியாது. பெரும்பாலான குழந்தைகள் ஒன்றரை வயதிலேயே பிரஷ் செய்யும் விதத்தைக் கற்றுக்கொள்கின்றன. விதிவிலக்காக, ஒரு சில குழந்தைகளுக்குத்தான் இதற்கு மூன்று ஆண்டுகள் தேவைப்படுகின்றன. அதனால் பொறுமையுடன் கற்றுக் கொடுக்கவும்.
    ×