என் மலர்
ஆரோக்கியம்
பாலக்கீரை நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இரத்ததில் உள்ள சர்க்கரையின் அளவை நிலையாக வைத்திருக்க இந்த கீரை உதவுகிறது.
தேவையான பொருட்கள்
பாலக்கீரை - 1 கப்
தோசை மாவு - 1 கப்
வெங்காயம் - 2
ரவை - அரை கப்
இஞ்சி - 1 அங்குல துண்டு,
பச்சை மிளகாய் - 2,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
வெங்காயம், பாலக்கீரையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தோசை மாவை போட்டு அதனுடன், ரவை, உப்பு சேர்த்து நன்றாக கரைத்து அரை மணி நேரம் அப்படியே வைக்கவும்.
மிச்சியில் பாலக்கீரை, இஞ்சி, ப.மிளகாய் சேர்த்து விழுது போல் அரைத்து மாவில் கலந்து கொள்ளவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் முதலில் வெங்காயத்தை பரப்பியபடி கல்லில் போட்டு மாவை சுற்றி ஊற்ற வேண்டும். பின்னர் சுற்றி எண்ணெய் ஊற்றவும்.
வெந்ததும் திருப்பி போட்டு எடுத்து பரிமாறவும்.
சூப்பரான பாலக்கீரை ரவா தோசை ரெடி.
பாலக்கீரை - 1 கப்
தோசை மாவு - 1 கப்
வெங்காயம் - 2
ரவை - அரை கப்
இஞ்சி - 1 அங்குல துண்டு,
பச்சை மிளகாய் - 2,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
வெங்காயம், பாலக்கீரையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தோசை மாவை போட்டு அதனுடன், ரவை, உப்பு சேர்த்து நன்றாக கரைத்து அரை மணி நேரம் அப்படியே வைக்கவும்.
மிச்சியில் பாலக்கீரை, இஞ்சி, ப.மிளகாய் சேர்த்து விழுது போல் அரைத்து மாவில் கலந்து கொள்ளவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் முதலில் வெங்காயத்தை பரப்பியபடி கல்லில் போட்டு மாவை சுற்றி ஊற்ற வேண்டும். பின்னர் சுற்றி எண்ணெய் ஊற்றவும்.
வெந்ததும் திருப்பி போட்டு எடுத்து பரிமாறவும்.
சூப்பரான பாலக்கீரை ரவா தோசை ரெடி.
குடும்பத்தில் நீரிழிவு பின்னணி இருக்கிறதா? தாய்மைக்குத் தயாராகும் போதே, இது பற்றி மகப்பேறு மருத்துவரிடம் தயங்காமல் தெரிவித்து விடுங்கள்.
தாயாகப் போகிறோம் என்கிற மகிழ்ச்சிக் கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும்போதே, திடீரென சில மாற்றங்கள் நிகழும். சோதனை முடிவுகளும் சோதனைக்கு உள்ளாக்கும். ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக ஏற்படும் இந்தப் பிரச்னை, கர்ப்ப காலத்தின் எந்த நேரத்திலும் வெளிப்படலாம். பிரசவத்தில் பிரச்னை ஏற்படுத்துகிற இந்த நீரிழிவிலும் இரு வகைகள் உண்டு.
* Gestational Diabetes Mellitus (GDM)
குளுக்கோஸ் தாங்குதிறன் குறைவதால் சிக்கல்களை உண்டாக்கும் கர்ப்ப கால நீரிழிவு இது. நீரிழிவால் பாதிக்கப்படுகிற கர்ப்பிணிகளில் 90 சதவிகிதத்தினருக்கும் இந்த வகை பிரச்னையே ஏற்படும். கர்ப்பத்தின் தொடக்கத்திலோ, அது அறியப்படும்போதோ, இந்த நீரிழிவும் அறியப்படும்.
* Pre-gestational diabetes or Type 1 or Type 2 diabetes
ஏற்கனவே டைப் - 1 அல்லது டைப் - 2 நீரிழிவு உள்ள பெண்கள் மற்றும் கர்ப்ப கால நீரிழிவு ஏற்படக்கூடிய நிலையில் உள்ளவர்கள்... இவர்களுக்குப் பிரசவத்தையே குழப்பமாக்கக்கூடிய தன்மை நீரிழிவுக்கு உண்டு. தாய்க்கும் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் ஆபத்து விளைவிக்கவோ, வளர்ச்சிக் குறைபாடு உண்டாக்கவோ இது காரணமாகலாம்.
கர்ப்ப காலத்தின் நடுவிலோ, இறுதிக் கட்டத்திலோ இந்தக் குழப்பங்கள் தீவிரமாகும். கர்ப்ப கால நீரிழிவு அல்லது அதற்கு முந்தைய நிலையில் அதிகம் பாதிக்கப்படுவது யார் ?25 வயதுக்குப் பிறகு கர்ப்பம் தரிப்பவர்களே இந்தப் பிரச்னைக்கு அதிகம் ஆளாகிறார்கள். எடை அதிகம் கொண்டவர்களும் இதில் சிக்கலாம். குடும்பப் பின்னணியில் நீரிழிவு கொண்டிருப்பவர்களுக்கும் இது ஏற்படலாம்.
இதற்கு முக்கியமான காரணிகள்...
* குடும்பப் பின்னணியில் நீரிழிவு
* 4 கிலோவுக்கும் அதிகமாக குழந்தை எடை பெறுதல்
* திரும்பத் திரும்ப கரு கலைதல் பிரச்னை
* சிறுநீரில் அதிக சர்க்கரை (Glycosuria) தொடர்ச்சியாக இருத்தல்
* பருமன், அதிக எடை
* முந்தைய பிரசவத்தில் பிரச்னைகள், தவறாக உருவாகி இருத்தல், குறைப் பிரசவம், குழந்தை இறத்தல் போன்ற குழப்பங்கள்
* நீர்க்குடத்தில் அதிக திரவம் சேர்கிற Polyhydramnios என்கிற நிலை, உயர் ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரில் அதிக புரோட்டீன் கலப்பு ஏற்பட்டு சிறுநீரகம் பாதிக்கப்படுகிற Pre-eclampsia என்கிற நிலை
* அளவுக்கு அதிகமான ரத்தக்கொதிப்பு
* பூஞ்சைத் தொற்று அல்லது சிறுநீரகக் குழாய் தொற்று அடிக்கடி ஏற்படுதல்
* முந்தைய கர்ப்ப காலத்தில், குழந்தைக்கு நரம்பியல் கோளாறு காரணமாக பிரசவத்தில் சிக்கல்.
இதுபோன்ற எந்தக் காரணியும், இந்தப் பிரசவத்துக்கு முன்பே நீரிழிவைக் கொண்டு வரக்கூடும். குடும்பத்தில் நீரிழிவு பின்னணி இருக்கிறதா? தாய்மைக்குத் தயாராகும் போதே, இது பற்றி மகப்பேறு மருத்துவரிடம் தயங்காமல் தெரிவித்து விடுங்கள். கர்ப்பம் தரித்தது அறிந்ததும் செய்யப்படும் முதல் ஆலோசனை தொடங்கி, ஒவ்வொரு முறையும் நீரிழிவு விஷயமும் கவனத்தில் கொள்ளப்படும்.
* Gestational Diabetes Mellitus (GDM)
குளுக்கோஸ் தாங்குதிறன் குறைவதால் சிக்கல்களை உண்டாக்கும் கர்ப்ப கால நீரிழிவு இது. நீரிழிவால் பாதிக்கப்படுகிற கர்ப்பிணிகளில் 90 சதவிகிதத்தினருக்கும் இந்த வகை பிரச்னையே ஏற்படும். கர்ப்பத்தின் தொடக்கத்திலோ, அது அறியப்படும்போதோ, இந்த நீரிழிவும் அறியப்படும்.
* Pre-gestational diabetes or Type 1 or Type 2 diabetes
ஏற்கனவே டைப் - 1 அல்லது டைப் - 2 நீரிழிவு உள்ள பெண்கள் மற்றும் கர்ப்ப கால நீரிழிவு ஏற்படக்கூடிய நிலையில் உள்ளவர்கள்... இவர்களுக்குப் பிரசவத்தையே குழப்பமாக்கக்கூடிய தன்மை நீரிழிவுக்கு உண்டு. தாய்க்கும் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் ஆபத்து விளைவிக்கவோ, வளர்ச்சிக் குறைபாடு உண்டாக்கவோ இது காரணமாகலாம்.
கர்ப்ப காலத்தின் நடுவிலோ, இறுதிக் கட்டத்திலோ இந்தக் குழப்பங்கள் தீவிரமாகும். கர்ப்ப கால நீரிழிவு அல்லது அதற்கு முந்தைய நிலையில் அதிகம் பாதிக்கப்படுவது யார் ?25 வயதுக்குப் பிறகு கர்ப்பம் தரிப்பவர்களே இந்தப் பிரச்னைக்கு அதிகம் ஆளாகிறார்கள். எடை அதிகம் கொண்டவர்களும் இதில் சிக்கலாம். குடும்பப் பின்னணியில் நீரிழிவு கொண்டிருப்பவர்களுக்கும் இது ஏற்படலாம்.
இதற்கு முக்கியமான காரணிகள்...
* குடும்பப் பின்னணியில் நீரிழிவு
* 4 கிலோவுக்கும் அதிகமாக குழந்தை எடை பெறுதல்
* திரும்பத் திரும்ப கரு கலைதல் பிரச்னை
* சிறுநீரில் அதிக சர்க்கரை (Glycosuria) தொடர்ச்சியாக இருத்தல்
* பருமன், அதிக எடை
* முந்தைய பிரசவத்தில் பிரச்னைகள், தவறாக உருவாகி இருத்தல், குறைப் பிரசவம், குழந்தை இறத்தல் போன்ற குழப்பங்கள்
* நீர்க்குடத்தில் அதிக திரவம் சேர்கிற Polyhydramnios என்கிற நிலை, உயர் ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரில் அதிக புரோட்டீன் கலப்பு ஏற்பட்டு சிறுநீரகம் பாதிக்கப்படுகிற Pre-eclampsia என்கிற நிலை
* அளவுக்கு அதிகமான ரத்தக்கொதிப்பு
* பூஞ்சைத் தொற்று அல்லது சிறுநீரகக் குழாய் தொற்று அடிக்கடி ஏற்படுதல்
* முந்தைய கர்ப்ப காலத்தில், குழந்தைக்கு நரம்பியல் கோளாறு காரணமாக பிரசவத்தில் சிக்கல்.
இதுபோன்ற எந்தக் காரணியும், இந்தப் பிரசவத்துக்கு முன்பே நீரிழிவைக் கொண்டு வரக்கூடும். குடும்பத்தில் நீரிழிவு பின்னணி இருக்கிறதா? தாய்மைக்குத் தயாராகும் போதே, இது பற்றி மகப்பேறு மருத்துவரிடம் தயங்காமல் தெரிவித்து விடுங்கள். கர்ப்பம் தரித்தது அறிந்ததும் செய்யப்படும் முதல் ஆலோசனை தொடங்கி, ஒவ்வொரு முறையும் நீரிழிவு விஷயமும் கவனத்தில் கொள்ளப்படும்.
சரும அலர்ஜி இருப்பவர்கள், எதெல்லாம் தனக்கு அலர்ஜியாகிறது என்பதை முதலில் தெரிந்துகொண்டு அவற்றைத் தவிர்க்க வேண்டும்.
உடுத்தும் உடை முதல் உண்ணும் உணவு வரை எதுவும் இந்த வகை சருமத்தினருக்கு அலர்ஜியை ஏற்படுத்தலாம். இத்தகைய சரும அலர்ஜி இருப்பவர்கள், எதெல்லாம் தனக்கு அலர்ஜியாகிறது என்பதை முதலில் தெரிந்துகொண்டு அவற்றைத் தவிர்க்க வேண்டும்.
* சரும அலர்ஜிக்குத் தண்ணீர்தான் சிறந்த மருந்து. நிறையத் தண்ணீர் அருந்துங்கள். இது உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி, ஒவ்வாமையைப் போக்கும்.
* குளிர்ந்த நீரில் குளித்தால்தான், அலர்ஜி உள்ள இடத்தில் அரிப்பு ஏற்படாமல் இருக்கும்.
* தனியாகத் துண்டு, சீப்பு பயன்படுத்துவதன் மூலம் அலர்ஜி வராமலும் பரவாமலும் தடுக்கலாம்.
* ஒரு டீஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன், பன்னீர் கலந்து பூசிக்கொள்வதன் மூலம் அலர்ஜி நெருங்காது.
* ஒவ்வாமை ஏற்படும் இடத்தில், எலுமிச்சைச் சாறு மற்றும் தேங்காய் எண்ணெயைத் தடவலாம்.
* வேப்பிலையைத் தண்ணீரில் ஊறவைத்து, விழுதாக அரைத்து, உடலில் தடவி, பிறகு குளிக்கலாம்.
* சரும அலர்ஜிக்குத் தண்ணீர்தான் சிறந்த மருந்து. நிறையத் தண்ணீர் அருந்துங்கள். இது உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி, ஒவ்வாமையைப் போக்கும்.
* குளிர்ந்த நீரில் குளித்தால்தான், அலர்ஜி உள்ள இடத்தில் அரிப்பு ஏற்படாமல் இருக்கும்.
* தனியாகத் துண்டு, சீப்பு பயன்படுத்துவதன் மூலம் அலர்ஜி வராமலும் பரவாமலும் தடுக்கலாம்.
* ஒரு டீஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன், பன்னீர் கலந்து பூசிக்கொள்வதன் மூலம் அலர்ஜி நெருங்காது.
* ஒவ்வாமை ஏற்படும் இடத்தில், எலுமிச்சைச் சாறு மற்றும் தேங்காய் எண்ணெயைத் தடவலாம்.
* வேப்பிலையைத் தண்ணீரில் ஊறவைத்து, விழுதாக அரைத்து, உடலில் தடவி, பிறகு குளிக்கலாம்.
மனதை பாதிக்கும் சம்பவங்கள் நடக்கும்போது இதுபோன்ற அறிகுறிகள் தொடர்ந்து நீடித்தால் மன நல மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியமானது.
பிரச்சினைக்குரிய விஷயத்தை பற்றி அதிக நேரம் சிந்தித்துக்கொண்டிருப்பது மனக் கவலையை உருவாக்கும். கவலைக்குரிய சம்பவங்களை மறந்து சில மணி நேரங் களிலோ, ஓரிரு நாட்களிலோ இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டால் பிரச்சினை இல்லை. தொடர்ந்து அந்த விஷயத்தை பற்றியே சிந்தித்து கொண்டிருப்பது, கவலையில் இருந்து மீள முடியாமல் தவிப்பது, தேவையற்ற மன அழுத்தத்துக்கு ஆளாவது போன்ற பாதிப்புகள் மனநோய்க்கு காரணமாகி விடும். மனநல பிரச்சினைகளை உடனடியாக கவனத்தில்கொள்ளவேண்டும். அதில் அலட்சியமாக இருந்தால் பாதிப்புகள் அதிகமாகிவிடும்.
பீதி அடைவது, பதற்றத்திற்கு ஆளாவது, மனம் வெறுமையாக இருப்பது போன்ற உணர்வுக்கு ஆட்படுதல், மார்பு வலி, உடல் சூடாவது அல்லது குளிர்ச்சி அடைவது போன்ற அறி குறிகள் தென்பட்டால் மனநலம் பாதிக்கப்பட்டிருக்கலாம். அதனால் பீதி அடையக்கூடாது. வியர்த்தல், தலைச்சுற்று, தலைவலி, இதயம் சத்தமாக துடிப்பது, மூச்சுவிட சிரமம், தசைகள் இறுக்கமடைதல், வயிற்று போக்கு, வயிற்று கோளாறு, நடுக்கம், அடிக்கடி சிறுநீர் கழிப்பது போன்ற அறிகுறிகளும் சிலருக்கு வெளிப்படக்கூடும். மனதை பாதிக்கும் சம்பவங்கள் நடக்கும்போது இதுபோன்ற அறிகுறிகள் தொடர்ந்து நீடித்தால் மன நல மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியமானது.
மனதில் நிலைகொண்டிருக்கும் கவலை தீவிரமாக மாறும்போது ஆரோக்கியத்தை பாதிக்கும். மன அழுத்தத்தால் பாதிக்கப்படும்போது கவலை தீவிரமடைவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.
பலவகையான கவலைகள் குறித்தும் அவை ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்தும் பார்ப்போம்!
பொதுவான கவலை: அன்றாடம் செய்யும் பணிகளில் ஏதேனும் சிக்கல்களை எதிர்கொள்ளும்போது இந்த வகையான கவலை உருவாகலாம். ஏதாவதொரு குறிப்பிட்ட பிரச்சினைக்கு தீர்வு கிடைப்பதற்கு காலதாமதம் ஏற்படும்போது கவலையின் தன்மையும் வீரியமடையக்கூடும். சில சமயங்களில் ஆறு மாதங்கள் அல்லது அதற்கு மேலும் கூட இத்தகைய கவலை நீடிக்கலாம்.
கட்டுப்பாடற்ற கவலை: மனதில் உதிக்கும் தேவையற்ற சிந்தனையால் இந்த கவலை உண்டாகிறது. சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் கவலைப் படுவது வாடிக்கையாகிவிடும். அதனால் புதுப்புது கவலைகள் தோன்றிக்கொண்டே இருக்கும். மன ஆரோக்கியமும் வெகுவாக பாதிப்புக்குள்ளாகும். இந்த கவலைக்கு ஆளாகுபவர்கள் அடிக்கடி கைகளை கழுவிக்கொண்டிருக்கும் நிர்பந்தத்திற்கு உள்ளாகுவார்கள்.
சமூக கவலை: மற்றவர்களுக்கு முன்னால் அவமானப்பட வேண்டிய சூழல் உருவாகி விடுமோ, என்ற பயம் ஏற்படும்போது இந்த கவலை உண்டாகிறது. இதனை சமூக பயம் என்றும் அழைக்கலாம். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் நிறைய பேர் கூடி இருக்கும் இடத்தில் சிறிது நேரம் நிற்பதற்கே தயங்குவார்கள். கூச்ச சுபாவமும் கொண்டிருப்பார்கள். சமூக கூட்டங்களில் பங்கேற்பதை தவிர்ப்பதற்கு முயற்சிப்பார்கள். சிலருக்கு சமூக கவலை வாழ்நாள் ழுழுவதும் இருக்கலாம்.
அதிர்ச்சிக் கவலை: மனதை பாதிக்கும் சம்பவம் அல்லது உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் நிகழ்வு நடைபெறும்போது மனம் அதிர்ச்சிக்குள்ளாகும். அதில் இருந்து மீண்டு வருவதற்கு சில நாட்களாகும். அந்த சமயத்தில் பழைய சோக சம்பவங்களை நினைவுக்கு கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும். மன அதிர்ச்சியில் இருந்து மீள காலதாமதமானால் மனம் தவிப்புக்குள்ளாகும். அதே நிலை நீடித்தால் மன ஆரோக்கியம் நிரந்தரமாக பாதிப்புள்ளாகிவிடும். மனம் நிச்சயமற்ற நிலைக்கு மாறிவிடக்கூடும்.
பீதி: பதற்றத்தின் காரணமாக மனம் பீதியடைகிறது. அப்போது இதயத் துடிப்பு அதிகரித்தல், மூச்சு திணறல், நெஞ்சு வலி போன்றவற்றை அனுபவிக்கக்கூடும். அடிக்கடி இதுபோன்ற சூழ்நிலையை மனம் எதிர்கொள்வதற்கு இடம் கொடுக்கக்கூடாது. மன கவலை நீண்ட நேரம் நீடித்தால் மன அழுத்தத்தை சீராக்கும் ஹார்மோன் வெளியாகக் கூடும். ஆனால் தொடர்ந்து மன கவலை நீடித்தால் தலைவலி, தலைச்சுற்றல் போன்ற பக்கவிளைவுகளையும் அனுபவிக்க வேண்டி யிருக்கும்.
ஒருவர் மன ரீதியாகவோ, உடல் ரீதியாகவோ அச்சுறுத்தலை அனுபவிக்கும்போது அதனை சமாளிக்கும் விதத்தில் மூளையின் செயல்திறன் அமைந்திருக்கும். அப்போது நரம்பு மண்டலத்தில் வெளியாகும் ஹார்மோன் மன அழுத்தம், பதற்றத்தை போக்குவதற்கு துணைபுரியும். ஆனால் தொடர்ந்து மனம் சார்ந்த பிரச்சினையை எதிர்கொண்டால் நரம்பு மண்டலத்தில் சமநிலையற்ற நிலை உருவாகக்கூடும். அதன் காரணமாக உடல் எடை அதிகரிப்பு, நீண்டகால ஆரோக்கிய குறைபாடு போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும்.
பீதி அடைவது, பதற்றத்திற்கு ஆளாவது, மனம் வெறுமையாக இருப்பது போன்ற உணர்வுக்கு ஆட்படுதல், மார்பு வலி, உடல் சூடாவது அல்லது குளிர்ச்சி அடைவது போன்ற அறி குறிகள் தென்பட்டால் மனநலம் பாதிக்கப்பட்டிருக்கலாம். அதனால் பீதி அடையக்கூடாது. வியர்த்தல், தலைச்சுற்று, தலைவலி, இதயம் சத்தமாக துடிப்பது, மூச்சுவிட சிரமம், தசைகள் இறுக்கமடைதல், வயிற்று போக்கு, வயிற்று கோளாறு, நடுக்கம், அடிக்கடி சிறுநீர் கழிப்பது போன்ற அறிகுறிகளும் சிலருக்கு வெளிப்படக்கூடும். மனதை பாதிக்கும் சம்பவங்கள் நடக்கும்போது இதுபோன்ற அறிகுறிகள் தொடர்ந்து நீடித்தால் மன நல மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியமானது.
மனதில் நிலைகொண்டிருக்கும் கவலை தீவிரமாக மாறும்போது ஆரோக்கியத்தை பாதிக்கும். மன அழுத்தத்தால் பாதிக்கப்படும்போது கவலை தீவிரமடைவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.
பலவகையான கவலைகள் குறித்தும் அவை ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்தும் பார்ப்போம்!
பொதுவான கவலை: அன்றாடம் செய்யும் பணிகளில் ஏதேனும் சிக்கல்களை எதிர்கொள்ளும்போது இந்த வகையான கவலை உருவாகலாம். ஏதாவதொரு குறிப்பிட்ட பிரச்சினைக்கு தீர்வு கிடைப்பதற்கு காலதாமதம் ஏற்படும்போது கவலையின் தன்மையும் வீரியமடையக்கூடும். சில சமயங்களில் ஆறு மாதங்கள் அல்லது அதற்கு மேலும் கூட இத்தகைய கவலை நீடிக்கலாம்.
கட்டுப்பாடற்ற கவலை: மனதில் உதிக்கும் தேவையற்ற சிந்தனையால் இந்த கவலை உண்டாகிறது. சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் கவலைப் படுவது வாடிக்கையாகிவிடும். அதனால் புதுப்புது கவலைகள் தோன்றிக்கொண்டே இருக்கும். மன ஆரோக்கியமும் வெகுவாக பாதிப்புக்குள்ளாகும். இந்த கவலைக்கு ஆளாகுபவர்கள் அடிக்கடி கைகளை கழுவிக்கொண்டிருக்கும் நிர்பந்தத்திற்கு உள்ளாகுவார்கள்.
சமூக கவலை: மற்றவர்களுக்கு முன்னால் அவமானப்பட வேண்டிய சூழல் உருவாகி விடுமோ, என்ற பயம் ஏற்படும்போது இந்த கவலை உண்டாகிறது. இதனை சமூக பயம் என்றும் அழைக்கலாம். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் நிறைய பேர் கூடி இருக்கும் இடத்தில் சிறிது நேரம் நிற்பதற்கே தயங்குவார்கள். கூச்ச சுபாவமும் கொண்டிருப்பார்கள். சமூக கூட்டங்களில் பங்கேற்பதை தவிர்ப்பதற்கு முயற்சிப்பார்கள். சிலருக்கு சமூக கவலை வாழ்நாள் ழுழுவதும் இருக்கலாம்.
அதிர்ச்சிக் கவலை: மனதை பாதிக்கும் சம்பவம் அல்லது உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் நிகழ்வு நடைபெறும்போது மனம் அதிர்ச்சிக்குள்ளாகும். அதில் இருந்து மீண்டு வருவதற்கு சில நாட்களாகும். அந்த சமயத்தில் பழைய சோக சம்பவங்களை நினைவுக்கு கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும். மன அதிர்ச்சியில் இருந்து மீள காலதாமதமானால் மனம் தவிப்புக்குள்ளாகும். அதே நிலை நீடித்தால் மன ஆரோக்கியம் நிரந்தரமாக பாதிப்புள்ளாகிவிடும். மனம் நிச்சயமற்ற நிலைக்கு மாறிவிடக்கூடும்.
பீதி: பதற்றத்தின் காரணமாக மனம் பீதியடைகிறது. அப்போது இதயத் துடிப்பு அதிகரித்தல், மூச்சு திணறல், நெஞ்சு வலி போன்றவற்றை அனுபவிக்கக்கூடும். அடிக்கடி இதுபோன்ற சூழ்நிலையை மனம் எதிர்கொள்வதற்கு இடம் கொடுக்கக்கூடாது. மன கவலை நீண்ட நேரம் நீடித்தால் மன அழுத்தத்தை சீராக்கும் ஹார்மோன் வெளியாகக் கூடும். ஆனால் தொடர்ந்து மன கவலை நீடித்தால் தலைவலி, தலைச்சுற்றல் போன்ற பக்கவிளைவுகளையும் அனுபவிக்க வேண்டி யிருக்கும்.
ஒருவர் மன ரீதியாகவோ, உடல் ரீதியாகவோ அச்சுறுத்தலை அனுபவிக்கும்போது அதனை சமாளிக்கும் விதத்தில் மூளையின் செயல்திறன் அமைந்திருக்கும். அப்போது நரம்பு மண்டலத்தில் வெளியாகும் ஹார்மோன் மன அழுத்தம், பதற்றத்தை போக்குவதற்கு துணைபுரியும். ஆனால் தொடர்ந்து மனம் சார்ந்த பிரச்சினையை எதிர்கொண்டால் நரம்பு மண்டலத்தில் சமநிலையற்ற நிலை உருவாகக்கூடும். அதன் காரணமாக உடல் எடை அதிகரிப்பு, நீண்டகால ஆரோக்கிய குறைபாடு போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும்.
சிலருக்கு கைகள், கால்களில் நரம்புகள் நன்கு புடைத்தபடி வெளியே தெரியும். சிலருக்கு இளம் பருவத்திலேயே கை, கால்களில் நரம்புகள் வெளியே தெரிய தொடங்கும்.
சிலருக்கு கைகள், கால்களில் நரம்புகள் நன்கு புடைத்தபடி வெளியே தெரியும். பெரும்பாலும் வயதானவர்களுக்குதான் இந்த பிரச்சினை எட்டிப்பார்க்கும். சிலருக்கு இளம் பருவத்திலேயே கை, கால்களில் நரம்புகள் வெளியே தெரிய தொடங்கும். கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளும்போது சிலருக்கு பக்கவிளைவுகள் ஏற்படக்கூடும்.
அத்தகைய கடினமான பயிற்சிமுறைகள் தசை கடினமாக்குவதற்கும், நரம்புகளை தோலின் மேற்பரப்பில் தள்ளுவதற்கும் காரணமாகிவிடும். தமனிகளில் ரத்த அழுத்தம் அதிகரிப்பதாலும் இந்த பாதிப்பு ஏற்படும். சரும பராமரிப்பில் கவனம் செலுத்தாவிட்டாலும் இத்தகைய பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும்.
பலர் முகத்திற்கு தவறாமல் அழகு சாதனப்பொருட்களை பயன்படுத்துவார்கள். ஆனால் கை, கால்களை பராமரிப்பதற்கு கவனம் செலுத்தமாட்டார்கள். அதன் காரணமாகவும் கைகளில் நரம்புகள் புடைத்து வயதான தோற்றத்தில் காட்சியளிக்கத்தொடங்கும். சருமத்தை போலவே கை, கால்களுக்கும் போதுமான பராமரிப்பைக் கொடுக்க தொடங்கினால் நரம்புகள் தெரிவது குறைந்து பொலிவான தோற்றத்துடன் காட்சியளிக்க தொடங்கும். அதேசமயத்தில் வயதாகிவிட்டால் உடலில் கொழுப்பின் அளவு குறைந்து கைகளில் சுருக்கங்களுடன், நரம்புகள் தெரிவது தவிர்க்கமுடியாதது.
கை, கால்களில் நரம்புகள் புடைத்துக்கொண்டு இருப்பதற்கு மரபணுக்களும் காரணமாக இருக்கின்றன. குடும்பத்தில் மூதாதையர் யாருக்காவது நரம்புகள் புடைத்திருந்தால் மற்றவர்களுக்கும் அந்த பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. உடலில் சரியான அளவில் கொழுப்புகள் இருந்தால் நரம்புகள் புடைக்கும் பிரச்சினை எட்டிப்பார்க்காது.
உடலில் போதுமான அளவு கொழுப்பு இல்லாவிட்டால் ஊட்டச்சத்து நிபுணரை அணுகுவது நல்லது. உடல் எடை குறைய ஆரம்பிக்கும்போது, சருமத்திற்கு அடியில் உள்ள கொழுப்பு உருக ஆரம்பித்து, நரம்புகள் வெளிப்பட தொடங்கும். எடை இழப்பின்போது அப்படி தெரிவது இயல்பானது. இருப்பினும் வலி ஏதேனும் இருந்தால் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.
அத்தகைய கடினமான பயிற்சிமுறைகள் தசை கடினமாக்குவதற்கும், நரம்புகளை தோலின் மேற்பரப்பில் தள்ளுவதற்கும் காரணமாகிவிடும். தமனிகளில் ரத்த அழுத்தம் அதிகரிப்பதாலும் இந்த பாதிப்பு ஏற்படும். சரும பராமரிப்பில் கவனம் செலுத்தாவிட்டாலும் இத்தகைய பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும்.
பலர் முகத்திற்கு தவறாமல் அழகு சாதனப்பொருட்களை பயன்படுத்துவார்கள். ஆனால் கை, கால்களை பராமரிப்பதற்கு கவனம் செலுத்தமாட்டார்கள். அதன் காரணமாகவும் கைகளில் நரம்புகள் புடைத்து வயதான தோற்றத்தில் காட்சியளிக்கத்தொடங்கும். சருமத்தை போலவே கை, கால்களுக்கும் போதுமான பராமரிப்பைக் கொடுக்க தொடங்கினால் நரம்புகள் தெரிவது குறைந்து பொலிவான தோற்றத்துடன் காட்சியளிக்க தொடங்கும். அதேசமயத்தில் வயதாகிவிட்டால் உடலில் கொழுப்பின் அளவு குறைந்து கைகளில் சுருக்கங்களுடன், நரம்புகள் தெரிவது தவிர்க்கமுடியாதது.
கை, கால்களில் நரம்புகள் புடைத்துக்கொண்டு இருப்பதற்கு மரபணுக்களும் காரணமாக இருக்கின்றன. குடும்பத்தில் மூதாதையர் யாருக்காவது நரம்புகள் புடைத்திருந்தால் மற்றவர்களுக்கும் அந்த பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. உடலில் சரியான அளவில் கொழுப்புகள் இருந்தால் நரம்புகள் புடைக்கும் பிரச்சினை எட்டிப்பார்க்காது.
உடலில் போதுமான அளவு கொழுப்பு இல்லாவிட்டால் ஊட்டச்சத்து நிபுணரை அணுகுவது நல்லது. உடல் எடை குறைய ஆரம்பிக்கும்போது, சருமத்திற்கு அடியில் உள்ள கொழுப்பு உருக ஆரம்பித்து, நரம்புகள் வெளிப்பட தொடங்கும். எடை இழப்பின்போது அப்படி தெரிவது இயல்பானது. இருப்பினும் வலி ஏதேனும் இருந்தால் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.
போதுமான தாய்ப்பால் கிடைக்கிறதா என்ற சந்தேகம் ஒரு பக்கம் என்றால் குழந்தைக்கு ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமான தாய்ப்பால் கொடுத்துவிட்டோமா என்கிற பயமும் ஏற்படுவதுண்டு.
குழந்தை தாய்ப்பால் குடிக்கும் போது உங்கள் மார்ப்பகத்தில் தொடர்ந்து உறியும். அப்படி தொடர்ந்து உறியும் போது தான் தாய்ப்பால் சுரப்பும் அதிகரித்து குழந்தைக்கு தாய்ப்பால் கிடைக்கிறது. குழந்தை தொடர்ந்து உறிந்து அதற்கு தாய்ப்பால் கிடைத்தால் அதனை முழுங்கும்.
தாய்ப்பால் கிடைத்துவிட்டது என்பதை குழந்தையின் தாடை அசைவை வைத்து குழந்தை முழுங்குகிறதா இல்லையா என்பதை பார்த்து கண்டுபிடிக்கலாம். குழந்தைக்கு தாய்ப்பால் கிடைக்கவில்லையெனில் முழுங்கும் தாடை அசைவு இருக்காது. தொடர்ந்து உறிந்து கொண்டேயிருக்கும் அந்த சோர்விலேயே பல நேரங்களில் தூங்கி விடுவதும் உண்டு. இதனால் குழந்தை தாய்ப்பால் குடிக்கும் போது அதன் தாடை அசைவை உன்னிப்பாக கவனியுங்கள்.
பொதுவாக தாய்ப்பால் குடித்ததும் குழந்தை உற்சாகமாக இருக்க வேண்டும். அதைவிடுத்து எப்போதும் சோர்வாக இருந்தால் போதுமான தாய்ப்பால் கிடைக்கவில்லை என்று அர்த்தம். தாய்ப்பால் குடித்த ஒரு மணி நேரம் வரை குழந்தை பசிதாங்கும். அதற்குள்ளான நேரத்தில் தொடர்ந்து குழந்தை பசிக்காக அழுதாலும் அதற்கு தாய்ப்பால் போதவில்லை என்று அர்த்தம்.
குழந்தை பிறந்த போது இருந்த எடைக்கும் பின் ஒரு வாரத்திற்கு பிறகு எடை வித்தியாசங்கள் இருக்கும். அதாவது பிறந்திருப்பதை விட ஐந்து முதல் ஏழு சதவீதம் எடை குறையலாம். ஆனால் பத்து சதவீதத்திற்கும் அதிகமாக உடல் எடை குறைந்தால் குழந்தைக்கு தேவையான உணவு கிடைக்கவில்லை என்று அர்த்தம். முதல் பத்து நாட்கள் மட்டுமே இந்த எடை குறைவு பிரச்சனை இருக்கும். அதன் பிறகு நிலையான எடையில் இருக்க ஆரம்பித்து விடும். அதைத் தாண்டியும் குழந்தையின் எடையில் மாற்றங்கள் தெரிந்தால் அதற்கு உணவு போதவில்லை அல்லது உடலில் நோய்த்தொற்று இருக்கிறது என்று அர்த்தம்.
குழந்தை தாய்ப்பால் குடிப்பதற்கு முன்னும் பின்னும் உங்களுடைய மார்பகத்தை கவனித்தால் இந்த மாற்றம் உங்களுக்கு தெரியும். குடிப்பதற்கு முன் உங்கள் மார்பகம் மிகவும் பாரமாகவும் விறைப்பாக இருப்பது போன்றும் தோன்றும். இதே குழந்தை குடித்த பிறகு மிகவும் லேசானதாக தோன்றிடும்.
குழந்தை பிறந்த முதல் மூன்று வாரங்களுக்கு அடிக்கடி தாய்ப்பால் கொடுப்பது போன்ற சூழல் உருவாகும். அதன் பின்னர் இரண்டு மணி நேரங்களுக்கு ஒரு முறை நான்கு மணி நேரங்களுக்கு ஒரு முறை என்று அந்த இடைவேளி குறையும். இந்த இடைவேளியை கணக்கிடுங்கள். இடைவேளி நேரம் குறைவாக இருந்தால் குழந்தைக்கு தொடர் பசியிருக்கிறது, வயிறு நிறையவில்லை என்று அர்த்தம்.
சில குழந்தைகள் தூங்கும் நேரத்தில் மட்டும் வந்து தாய்ப்பால் குடிக்க நினைப்பார்கள். அது தாய்ப்பால் தேவைக்காக அல்லாமல் ஒரு அரவணைப்புத் தேவையாக இருக்கும். பகல் நேரங்களில் அல்லது முழித்துக் கொண்டிருக்கும் போது தாய்ப்பால் கேட்காமல் சரியாக தூங்கும் போது மட்டும் தாய்ப்பால் கேட்டால்… அது குழந்தை பசியாற்ற அல்ல என்பதை புரிந்து கொள்ளலாம்.
போதுமான தாய்ப்பால் கிடைக்கிறதா என்ற சந்தேகம் ஒரு பக்கம் என்றால் குழந்தைக்கு ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமான தாய்ப்பால் கொடுத்துவிட்டோமா என்கிற பயமும் ஏற்படுவதுண்டு. தாயிடமிருந்து நேரடியாக குடிக்கும் குழந்தைக்கு இந்தப் பிரச்சனை இருக்காது. ஏனென்றால் தனக்குத் தேவையான பாலை தானே உறிந்து குடிக்க வேண்டும். அதனால் குழந்தை தனக்குத் தேவையானளவு மட்டுமே உறிந்து குடிக்கும்.
பாட்டிலில் எடுத்து வைத்த தாய்ப்பாலோ அல்லது பவுடரை கலந்து கொடுப்பது அல்லது பசும்பாலை கொடுப்பது போன்ற நேரத்தில் தான் குழந்தைக்கு அளவுக்கு அதிகமான பால் சென்றிடும். ஏனென்றால் பாட்டிலில் குடிக்கும் போது அதன் நிப்பில் வழியாக பால் வந்து கொண்டேயிருக்கும். அதனை நிறுத்த வேண்டும் தனக்குப் போதும் என்று குழந்தைகளால் உணர முடியாது அளவுக்கு மீறி குடித்து விடுவார்கள்.
தாய்ப்பால் கிடைத்துவிட்டது என்பதை குழந்தையின் தாடை அசைவை வைத்து குழந்தை முழுங்குகிறதா இல்லையா என்பதை பார்த்து கண்டுபிடிக்கலாம். குழந்தைக்கு தாய்ப்பால் கிடைக்கவில்லையெனில் முழுங்கும் தாடை அசைவு இருக்காது. தொடர்ந்து உறிந்து கொண்டேயிருக்கும் அந்த சோர்விலேயே பல நேரங்களில் தூங்கி விடுவதும் உண்டு. இதனால் குழந்தை தாய்ப்பால் குடிக்கும் போது அதன் தாடை அசைவை உன்னிப்பாக கவனியுங்கள்.
பொதுவாக தாய்ப்பால் குடித்ததும் குழந்தை உற்சாகமாக இருக்க வேண்டும். அதைவிடுத்து எப்போதும் சோர்வாக இருந்தால் போதுமான தாய்ப்பால் கிடைக்கவில்லை என்று அர்த்தம். தாய்ப்பால் குடித்த ஒரு மணி நேரம் வரை குழந்தை பசிதாங்கும். அதற்குள்ளான நேரத்தில் தொடர்ந்து குழந்தை பசிக்காக அழுதாலும் அதற்கு தாய்ப்பால் போதவில்லை என்று அர்த்தம்.
குழந்தை பிறந்த போது இருந்த எடைக்கும் பின் ஒரு வாரத்திற்கு பிறகு எடை வித்தியாசங்கள் இருக்கும். அதாவது பிறந்திருப்பதை விட ஐந்து முதல் ஏழு சதவீதம் எடை குறையலாம். ஆனால் பத்து சதவீதத்திற்கும் அதிகமாக உடல் எடை குறைந்தால் குழந்தைக்கு தேவையான உணவு கிடைக்கவில்லை என்று அர்த்தம். முதல் பத்து நாட்கள் மட்டுமே இந்த எடை குறைவு பிரச்சனை இருக்கும். அதன் பிறகு நிலையான எடையில் இருக்க ஆரம்பித்து விடும். அதைத் தாண்டியும் குழந்தையின் எடையில் மாற்றங்கள் தெரிந்தால் அதற்கு உணவு போதவில்லை அல்லது உடலில் நோய்த்தொற்று இருக்கிறது என்று அர்த்தம்.
குழந்தை தாய்ப்பால் குடிப்பதற்கு முன்னும் பின்னும் உங்களுடைய மார்பகத்தை கவனித்தால் இந்த மாற்றம் உங்களுக்கு தெரியும். குடிப்பதற்கு முன் உங்கள் மார்பகம் மிகவும் பாரமாகவும் விறைப்பாக இருப்பது போன்றும் தோன்றும். இதே குழந்தை குடித்த பிறகு மிகவும் லேசானதாக தோன்றிடும்.
குழந்தை பிறந்த முதல் மூன்று வாரங்களுக்கு அடிக்கடி தாய்ப்பால் கொடுப்பது போன்ற சூழல் உருவாகும். அதன் பின்னர் இரண்டு மணி நேரங்களுக்கு ஒரு முறை நான்கு மணி நேரங்களுக்கு ஒரு முறை என்று அந்த இடைவேளி குறையும். இந்த இடைவேளியை கணக்கிடுங்கள். இடைவேளி நேரம் குறைவாக இருந்தால் குழந்தைக்கு தொடர் பசியிருக்கிறது, வயிறு நிறையவில்லை என்று அர்த்தம்.
சில குழந்தைகள் தூங்கும் நேரத்தில் மட்டும் வந்து தாய்ப்பால் குடிக்க நினைப்பார்கள். அது தாய்ப்பால் தேவைக்காக அல்லாமல் ஒரு அரவணைப்புத் தேவையாக இருக்கும். பகல் நேரங்களில் அல்லது முழித்துக் கொண்டிருக்கும் போது தாய்ப்பால் கேட்காமல் சரியாக தூங்கும் போது மட்டும் தாய்ப்பால் கேட்டால்… அது குழந்தை பசியாற்ற அல்ல என்பதை புரிந்து கொள்ளலாம்.
போதுமான தாய்ப்பால் கிடைக்கிறதா என்ற சந்தேகம் ஒரு பக்கம் என்றால் குழந்தைக்கு ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமான தாய்ப்பால் கொடுத்துவிட்டோமா என்கிற பயமும் ஏற்படுவதுண்டு. தாயிடமிருந்து நேரடியாக குடிக்கும் குழந்தைக்கு இந்தப் பிரச்சனை இருக்காது. ஏனென்றால் தனக்குத் தேவையான பாலை தானே உறிந்து குடிக்க வேண்டும். அதனால் குழந்தை தனக்குத் தேவையானளவு மட்டுமே உறிந்து குடிக்கும்.
பாட்டிலில் எடுத்து வைத்த தாய்ப்பாலோ அல்லது பவுடரை கலந்து கொடுப்பது அல்லது பசும்பாலை கொடுப்பது போன்ற நேரத்தில் தான் குழந்தைக்கு அளவுக்கு அதிகமான பால் சென்றிடும். ஏனென்றால் பாட்டிலில் குடிக்கும் போது அதன் நிப்பில் வழியாக பால் வந்து கொண்டேயிருக்கும். அதனை நிறுத்த வேண்டும் தனக்குப் போதும் என்று குழந்தைகளால் உணர முடியாது அளவுக்கு மீறி குடித்து விடுவார்கள்.
தக்காளி உணவுகளை அடிக்கடி பெண்கள் சாப்பிடுவதால் அவர்களுக்கு வரக்கூடிய கருப்பை வாய் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், சுவாசப்பை புற்றுநோயிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
தக்காளி - கால் கிலோ,
கடலைப்பருப்பு- 100 கிராம்,
கடுகு - 1 ஸ்பூன்,
பூண்டு - 4 பல்,
காய்ந்த மிளகாய்- 10,
எண்ணெய் - 2 ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை
தக்காளி நன்றாக கழுவி 4 துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு வெடித்தவுடன் கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், பூண்டு சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.
பின்னர் வெட்டி வைத்த தக்காளியை சேர்த்து வதக்கவும்.
சூடு ஆறியவுடன் எல்லாவற்றையும் மிக்சியில் போட்டு அதனுடன் உப்பு சேர்த்து கரகரப்பாக அரைத்தால் சுவையான தக்காளி பருப்பு துவையல் தயார்.
தக்காளி - கால் கிலோ,
கடலைப்பருப்பு- 100 கிராம்,
கடுகு - 1 ஸ்பூன்,
பூண்டு - 4 பல்,
காய்ந்த மிளகாய்- 10,
எண்ணெய் - 2 ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை
தக்காளி நன்றாக கழுவி 4 துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு வெடித்தவுடன் கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், பூண்டு சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.
பின்னர் வெட்டி வைத்த தக்காளியை சேர்த்து வதக்கவும்.
சூடு ஆறியவுடன் எல்லாவற்றையும் மிக்சியில் போட்டு அதனுடன் உப்பு சேர்த்து கரகரப்பாக அரைத்தால் சுவையான தக்காளி பருப்பு துவையல் தயார்.
இது சப்பாத்தி, இட்லிக்கு மிகவும் நன்றாக இருக்கும்.
பெற்றோர்களை பொறுத்தவரையில் குழந்தைகள் அதிகமாக சாப்பிட வேண்டும் என்ற ஒரு கருத்து மட்டுமே நிலவுகிறது. இன்று பெற்றோர் குழந்தையின் உணவு விஷயத்தில் செய்யும் சில தவறுகளை பற்றி காணலாம்.
குழந்தைகளின் விஷயத்தில் பெற்றோர்களே சில தவறுகளை செய்கின்றார்கள். பெற்றோர்களை பொறுத்தவரையில் குழந்தைகள் அதிகமாக சாப்பிட வேண்டும் என்ற ஒரு கருத்து மட்டுமே நிலவுகிறது. அதற்காக அவர்கள் போதும்.. போதும் என்று கூறினாலும் கூட அதிகப்படியான உணவினை குழந்தைக்கு திணிக்கின்றார்கள். இது உங்களது குழந்தையின் செயல் திறனை பிற்காலத்தில் பாதிக்கிறது. இன்று உங்களது குழந்தையின் உணவு விஷயத்தில் செய்யும் சில தவறுகளை பற்றி காணலாம்.
1. ஸ்நாக்ஸ்..!
குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் அதிகமாக சாக்லேட், ஐஸ்க்ரீம் என கொடுத்துவிட்டால், அது அவர்களுக்கு இரவு உணவுக்கு முன்னர் எப்படி ஜீரணமாகும். 10 வயது குழந்தைக்கு ஒரு நாளைக்கு 1000 கலோரிகள் மட்டும் போதுமானது. 300 முதல் 400 கலோரிகள் வரை அவர்களது ஜங்க் உணவுகள் மற்றும் நொறுக்கு தீனிகளின் மூலமாகவே பூர்த்தியடைந்துவிடும்.
2. உணவு தேவை
பெரும்பாலான பெற்றோர்களுக்கு ஒருவேளைக்கு தனது குழந்தைக்கு எவ்வளவு உணவு மட்டும் போதுமானது என்பதே தெரிவதில்லை. அவர்களுக்கு தேவைக்கு அதிகமாக உணவை கொடுப்பதால், உடல் எடை அதிகரிப்பு மற்றும் மெட்டபாலிசத்தில் பிரச்சனை உண்டாகிறது.
3. உணவு இடைவெளி
குழந்தைகளுக்கு தரவேண்டிய உணவை சரியான இடைவெளியில் கொடுக்க வேண்டியது அவசியம். அதன்படி அவர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு மற்றும் 2 முறை ஸ்நாக்ஸ் தருவதே சிறந்ததாகும்.
4. ஆரோக்கிய உணவுகள்
வீட்டில் சமைக்கப்படாத எந்த ஒரு உணவும் ஆரோக்கியமானது அல்ல. நீங்கள் உங்களது குழந்தைகளுக்கு வெளியில் இருந்து உணவுகள் அல்லது குளிர்பானங்களை வாங்கி கொடுத்தால் அவற்றில் உள்ள லேபிளை கவனமாக படிக்க வேண்டியது அவசியம். பதப்படுத்தப்பட்ட உணவுகளில் அதிகமாக சர்க்கரை இருக்கும். எனவே கவனம் தேவை.
5. நேரத்திற்கு உணவு
நீங்கள் உங்களது குழந்தைகளுக்கு தரும் உணவினை தினமும் சரியான நேரத்திற்கு தர வேண்டியது அவசியம். அந்த நேரத்திற்கு இடையில் நீங்கள் அதிக கலோரி உணவுகள் அல்லது செரிமானமாக தாமதமாகும் உணவுகளை கொடுப்பதை தவிர்க்க வேண்டும். நீங்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரத்திற்கு உணவு கொடுத்தால், அது குழந்தையின் மெட்டபாலிசத்தை பாதிக்கும்.
பொதுவாக இத்தகைய பிளீச்சிங்கை அதிக செலவு இன்றி வீட்டிலேயே செய்யலாம். சருமத்திற்கும் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் பார்த்துக்கொள்ளலாம்.
ப்ளீச்சிங் செய்வதால், சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள், அழுக்குகள் போன்றவை முற்றிலும் வெளிவந்து, முகம் பொலிவோடு பளிச்சென்று இருக்கும். பிளீச்சிங் செய்வதன் மூலம் உடனடியாக நல்ல நிறத்தைப் பெற முடியும். ஏனெனில் சருமம் பொலிவிழந்து கருமையாக காணப்படுவதற்கு காரணம் சருமத்தில் தங்கியுள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள்தான். ஆனால் அத்தகைய அழுக்குகளையும், இறந்த செல்களையும் பிளீச்சிங் செய்வதால் உடனே போக்கலாம்.
1 டேபிள் ஸ்பூன் தேனில், 1 1/2 டேபிள் ஸ்பூன் க்ரீம் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி நன்கு உலர வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
1 சிட்டிகை மஞ்சள் தூளில், சில துளிகள் எலுமிச்சை சாறு மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து, முகத்தில் தடவி நன்கு காய வைத்து, வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவலாம்.
2 டேபிள் ஸ்பூன் பாலில், 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் போல் வரும் வரை நன்கு கலந்து, முகத்தில் தடவி காயவைத்து, பின் நீரில் கழுவ வேண்டும்.
ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் சந்தன பொடி, 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு, 2 டேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் ஜூஸ் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தக்காளி ஜூஸ் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி நன்கு உலர வைத்து, பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனால் எவ்வித பக்கவிளைவும் இல்லாமல் பளிச்சென்ற முகத்தைப் பெறலாம்.
1 டேபிள் ஸ்பூன் தேனில், 1 1/2 டேபிள் ஸ்பூன் க்ரீம் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி நன்கு உலர வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
1 சிட்டிகை மஞ்சள் தூளில், சில துளிகள் எலுமிச்சை சாறு மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து, முகத்தில் தடவி நன்கு காய வைத்து, வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவலாம்.
2 டேபிள் ஸ்பூன் பாலில், 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் போல் வரும் வரை நன்கு கலந்து, முகத்தில் தடவி காயவைத்து, பின் நீரில் கழுவ வேண்டும்.
ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் சந்தன பொடி, 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு, 2 டேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் ஜூஸ் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தக்காளி ஜூஸ் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி நன்கு உலர வைத்து, பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனால் எவ்வித பக்கவிளைவும் இல்லாமல் பளிச்சென்ற முகத்தைப் பெறலாம்.
இப்போதெல்லாம் குழந்தைகளுக்கு எழுதும் பழக்கமே இல்லாமல் போய்விட்டது. எல்லாவிஷயங்களையும் செல்போனில் ‘டைப்’ செய்து மெசேஜ்களாக அனுப்பிவிடுகிறார்கள். அதனால் கையால் எழுதுவது காணாமல் போய்க்கொண்டிருக்கிறது.
நவீன காலத்து குழந்தைகளை ‘டச் போன்’கள் மகிழ்வித்துக்கொண்டிருக்கின்றன. பெரும்பாலான நேரத்தை அவர்கள் அதனோடுதான் செலவிடுகிறார்கள். அதன் பின்விளைவுகள் மோசமாக இருக்கும் என்பதை பெற்றோர் உணர்ந்துகொள்ள வேண்டும். பெரும்பாலான பெற்றோர்கள் வேலைபார்த்துவிட்டு களைத்துப் போய் வீடு திரும்புகிறார்கள். குழந்தைகளிடம் பேசக்கூட நேரமில்லாத நிலையில், கையில் இருக்கும் போனை அதனிடம் கொடுத்துவிட்டு, ‘இதை பார்த்துக்கொண்டு அம்மாவை தொந்தரவு செய்யாமல் இரு’ என்கிறார்கள். அவர்களும் சந்தோஷமாக அதை வைத்துக்கொண்டு விளையாடுகிறார்கள். அம்மா-அப்பாவைவிட போன் தான் அதிக மகிழ்ச்சியை தரும் விஷயம் என்ற நிலைக்கு ஆளாகிறார்கள்.
சின்ன குழந்தைகள் கூட விரல்களால் அழகாக டச் ஸ்கிரீனை தள்ளி தங்களுக்கு வேண்டிய விவரங்களை தேடிக் கொள்ள தெரிந்துவைத்திருக்கிறார்கள். இது அவர் களுக்கு பழகிவிட்டது. இதனால் பென்சில் பிடித்து எழுதும் வழக்கம் படிப்படியாக குறைந்துவருகிறது. வளரும் குழந்தைகள் எழுதிப் பழக வேண்டும். அப்போதுதான் அந்த விஷயம் ஆழமாக மனதில் பதியும். என்றும் மறக்காமலிருக்கும். இப்போதெல்லாம் குழந்தைகளுக்கு எழுதும் பழக்கமே இல்லாமல் போய்விட்டது. எல்லாவிஷயங்களையும் செல்போனில் ‘டைப்’ செய்து மெசேஜ்களாக அனுப்பிவிடுகிறார்கள். அதனால் கையால் எழுதுவது காணாமல் போய்க்கொண்டிருக்கிறது.
இன்றைய குழந்தைகள் எதிர்கால மாணவர்கள். அவர்கள் வருங்காலத்தில் எல்லா தேர்வுகளையும் எழுதித்தான் தேர்ச்சி பெற வேண்டும். அந்த நிலையில் வேகமாக எழுத முடியாமல் திண்டாட வேண்டியிருக்கும். அப்போது வருத்தப்பட்டு பலனில்லை. எழுதும் வழக்கம் குறையக் குறைய மூளைக்கும் நரம்பு மண்டலத்திற்கும் உள்ள தொடர்பு குறைந்துபோகும். நாளடைவில் எழுதுவது அவர்களுக்கு ஒரு சுமையான வேலையாகிவிடும். எழுதினாலும் கிறுக்கல்போல் தோன்றும். இந்த நிலை ஏற்பட்டபின் மாற்றுவது கடினம்.
இன்று கஷ்டப்பட்டு தேடுவது என்பது குழந்தைகளிடம் இல்லை. செல்போன் மூலம் எதையும் அவர்களால் எளிதாக தேடிவிட முடிகிறது. தேடும் விஷயம் எளிமையாக கிடைத்து விடும்போது ஏன் கஷ்டப்பட வேண்டும்? என்று நினைத்து, கஷ்டப்படாமலே அவர்கள் வாழ விரும்புகிறார்கள். அப்படி ஒரு கஷ்ட நிலை வரும்போது அதை தாங்கிக்கொள்ள முடியாமல் தடுமாறிவிடுவார்கள். அப்போதும் தங்களுக்கு எளிதாக வழிகாட்டுவது யார் என்று தேடிக்கொண்டிருப்பார்கள். அது மட்டுமல்ல, இந்த ‘டச் ஸ்கிரீன்’ அவர்களுடைய விரல்களை செல்போன் பயன்பாட்டிற்குதக்கபடி மாற்றிவிடும். வேறு எந்த வேலைக்கும் பிரயோஜனமில்லாமல் செய்துவிடும். வரைவது, பெயிண்டிங் செய்வது எல்லாமே அவர் களுக்கு கஷ்டமாகிவிடும். விரல்களோடு மூளை ஒத்துழைக்காது. விரல்கள் சோம்பேறியாகிவிடவும் செய்யும்.
குழந்தைகள் விரல்களை பயன்படுத்தி எழுதினாலோ, படம் வரைந்தாலோ மூளை சுறுசுறுப்பாகும். அந்த வேலையை சிறப்பாக செய்துமுடிக்கவைக்கும். நாளடைவில் அந்த வேலையும் எளிமையாகிவிடும். எழுதும் போதும், ஓவியம் வரையும்போதும் மனம் அதிலே லயித்து ஒருநிலைப்படும். அதன் மூலம் மனஅழுத்தம் நீங்கும். மனதுக்கு அமைதி கிடைக்கும். உடலுக்கும்- மனதுக்கும் ஒருங்கிணைப்பும் கிடைக்கும். இவை அனைத்துமே டச்போன் செயல்பாடு களால் கிடைக்காது. குழந்தைகளுக்கு எழுத்துத்திறன் இல்லாமல் போனால் அவர்கள், படித்ததையும், தெரிந்ததையும் எழுதமுடியாமல் தடுமாறி கல்வியில் பின்தங்கிவி டுவார்கள்.
படிப்பது, எழுதுவது இரண்டும், இரு கண்கள் போன்றவை. படிக்க படிக்க எழுதியும் பழகவேண்டும். முதன் முதலில் சிலேட்டில் எழுதிப் பழகுவார்கள். அதில் எழுதும்போது எழுத்து களுக்கு ஒரு அழுத்தம் கிடைக்கும். கைகள் தடுமாறாமல் இருக்கும். எழுத்துகள் தாறுமாறாக போகாது. அப்படி எழுதி பழகியதும், அடுத்தகட்டமாக நோட்டில் எழுதப் பழக்குவார்கள். எழுத ஓரளவு பழகும் வரைதான் சிலேட்டில் எழுத வேண்டும். குழந்தை முதன் முதலில் எழுத ஆரம்பிப்பதை ஒரு விழாவாகவே கொண்டாடுவார்கள். எழுத்து என்பது அவ்வளவு முக்கியமானது. கல்வியின் ஆரம்பம், நம் மூளைக்கும்- கல்விக்கும் தொடர்பை ஏற்படுத்தும் எழுத்துதான்.
இது பற்றி நரம்பியல் நிபுணர் டாக்டர் தீபாலி தேஷ்முக் சொல்கிறார்.. "இன்றைய தலைமுறை எதிர்கொண்டிருக்கும் மிகப்பெரிய பிரச்சினை இது. ஒவ்வொரு மனிதருக்குள்ளும் கலை அறிமுகத்தை விரல்கள்தான் ஏற்படுத்துகின்றன. எழுதும் பழக்கம் மறந்து போனால் எதிர்காலத்தில் பேனா, பென்சில் பிடித்து எதுவுமே செய்ய முடியாத நிலை ஏற்பட்டுவிடும். கலையும் துளிர்விடாது. இது மூளையை பாதிக்கும் விஷயமாகி விடும். அதனால் சிறுவயதிலேயே ‘டச் ஸ்கிரீன்’ கலாசாரத்தை முறைப் படுத்தி அதற்கு முற்றுப்புள்ளிவைக்க முன்வாருங்கள்” என்கிறார்.
சின்ன குழந்தைகள் கூட விரல்களால் அழகாக டச் ஸ்கிரீனை தள்ளி தங்களுக்கு வேண்டிய விவரங்களை தேடிக் கொள்ள தெரிந்துவைத்திருக்கிறார்கள். இது அவர் களுக்கு பழகிவிட்டது. இதனால் பென்சில் பிடித்து எழுதும் வழக்கம் படிப்படியாக குறைந்துவருகிறது. வளரும் குழந்தைகள் எழுதிப் பழக வேண்டும். அப்போதுதான் அந்த விஷயம் ஆழமாக மனதில் பதியும். என்றும் மறக்காமலிருக்கும். இப்போதெல்லாம் குழந்தைகளுக்கு எழுதும் பழக்கமே இல்லாமல் போய்விட்டது. எல்லாவிஷயங்களையும் செல்போனில் ‘டைப்’ செய்து மெசேஜ்களாக அனுப்பிவிடுகிறார்கள். அதனால் கையால் எழுதுவது காணாமல் போய்க்கொண்டிருக்கிறது.
இன்றைய குழந்தைகள் எதிர்கால மாணவர்கள். அவர்கள் வருங்காலத்தில் எல்லா தேர்வுகளையும் எழுதித்தான் தேர்ச்சி பெற வேண்டும். அந்த நிலையில் வேகமாக எழுத முடியாமல் திண்டாட வேண்டியிருக்கும். அப்போது வருத்தப்பட்டு பலனில்லை. எழுதும் வழக்கம் குறையக் குறைய மூளைக்கும் நரம்பு மண்டலத்திற்கும் உள்ள தொடர்பு குறைந்துபோகும். நாளடைவில் எழுதுவது அவர்களுக்கு ஒரு சுமையான வேலையாகிவிடும். எழுதினாலும் கிறுக்கல்போல் தோன்றும். இந்த நிலை ஏற்பட்டபின் மாற்றுவது கடினம்.
இன்று கஷ்டப்பட்டு தேடுவது என்பது குழந்தைகளிடம் இல்லை. செல்போன் மூலம் எதையும் அவர்களால் எளிதாக தேடிவிட முடிகிறது. தேடும் விஷயம் எளிமையாக கிடைத்து விடும்போது ஏன் கஷ்டப்பட வேண்டும்? என்று நினைத்து, கஷ்டப்படாமலே அவர்கள் வாழ விரும்புகிறார்கள். அப்படி ஒரு கஷ்ட நிலை வரும்போது அதை தாங்கிக்கொள்ள முடியாமல் தடுமாறிவிடுவார்கள். அப்போதும் தங்களுக்கு எளிதாக வழிகாட்டுவது யார் என்று தேடிக்கொண்டிருப்பார்கள். அது மட்டுமல்ல, இந்த ‘டச் ஸ்கிரீன்’ அவர்களுடைய விரல்களை செல்போன் பயன்பாட்டிற்குதக்கபடி மாற்றிவிடும். வேறு எந்த வேலைக்கும் பிரயோஜனமில்லாமல் செய்துவிடும். வரைவது, பெயிண்டிங் செய்வது எல்லாமே அவர் களுக்கு கஷ்டமாகிவிடும். விரல்களோடு மூளை ஒத்துழைக்காது. விரல்கள் சோம்பேறியாகிவிடவும் செய்யும்.
குழந்தைகள் விரல்களை பயன்படுத்தி எழுதினாலோ, படம் வரைந்தாலோ மூளை சுறுசுறுப்பாகும். அந்த வேலையை சிறப்பாக செய்துமுடிக்கவைக்கும். நாளடைவில் அந்த வேலையும் எளிமையாகிவிடும். எழுதும் போதும், ஓவியம் வரையும்போதும் மனம் அதிலே லயித்து ஒருநிலைப்படும். அதன் மூலம் மனஅழுத்தம் நீங்கும். மனதுக்கு அமைதி கிடைக்கும். உடலுக்கும்- மனதுக்கும் ஒருங்கிணைப்பும் கிடைக்கும். இவை அனைத்துமே டச்போன் செயல்பாடு களால் கிடைக்காது. குழந்தைகளுக்கு எழுத்துத்திறன் இல்லாமல் போனால் அவர்கள், படித்ததையும், தெரிந்ததையும் எழுதமுடியாமல் தடுமாறி கல்வியில் பின்தங்கிவி டுவார்கள்.
படிப்பது, எழுதுவது இரண்டும், இரு கண்கள் போன்றவை. படிக்க படிக்க எழுதியும் பழகவேண்டும். முதன் முதலில் சிலேட்டில் எழுதிப் பழகுவார்கள். அதில் எழுதும்போது எழுத்து களுக்கு ஒரு அழுத்தம் கிடைக்கும். கைகள் தடுமாறாமல் இருக்கும். எழுத்துகள் தாறுமாறாக போகாது. அப்படி எழுதி பழகியதும், அடுத்தகட்டமாக நோட்டில் எழுதப் பழக்குவார்கள். எழுத ஓரளவு பழகும் வரைதான் சிலேட்டில் எழுத வேண்டும். குழந்தை முதன் முதலில் எழுத ஆரம்பிப்பதை ஒரு விழாவாகவே கொண்டாடுவார்கள். எழுத்து என்பது அவ்வளவு முக்கியமானது. கல்வியின் ஆரம்பம், நம் மூளைக்கும்- கல்விக்கும் தொடர்பை ஏற்படுத்தும் எழுத்துதான்.
இது பற்றி நரம்பியல் நிபுணர் டாக்டர் தீபாலி தேஷ்முக் சொல்கிறார்.. "இன்றைய தலைமுறை எதிர்கொண்டிருக்கும் மிகப்பெரிய பிரச்சினை இது. ஒவ்வொரு மனிதருக்குள்ளும் கலை அறிமுகத்தை விரல்கள்தான் ஏற்படுத்துகின்றன. எழுதும் பழக்கம் மறந்து போனால் எதிர்காலத்தில் பேனா, பென்சில் பிடித்து எதுவுமே செய்ய முடியாத நிலை ஏற்பட்டுவிடும். கலையும் துளிர்விடாது. இது மூளையை பாதிக்கும் விஷயமாகி விடும். அதனால் சிறுவயதிலேயே ‘டச் ஸ்கிரீன்’ கலாசாரத்தை முறைப் படுத்தி அதற்கு முற்றுப்புள்ளிவைக்க முன்வாருங்கள்” என்கிறார்.
பெண்களுக்கு ஏதேனும் ஒரு பிரச்சனை அல்லது எந்த ஒரு விஷயமாக இருப்பினும், அதை நேர்க்கோட்டில் கூறுவதை விடுத்து, தலையை சுற்றி மூக்கை தொடும் வகையில் அதிகமாக பேசுவார்கள்.
ஆண்களின் வர்க்கத்தில் பெண்கள் என்றால் புரியாத புதிர் என்று சில நேரங்களில் உவமையாக கூறப்படுவது உண்டு.
ஆனால் அது உண்மை தான் என்று கூறலாம். பல சூழல்களில் அப்பா, கணவன், அண்ணன், காதலன், சகோதரன் இது போன்று எந்த ஒரு ஆண் உறவினாலும் பெண்களின் சில குணாதிசயங்கள் மற்றும் செயல்பாடுகளை பற்றி நன்றாக புரிந்துக் கொள்ளவே முடியாது.
ஏனெனில் ஒருசில விஷயங்களில் பெண்கள் அடம்பிடிப்பது, சிறு குழந்தைகளை போன்று நடந்துக் கொள்வது இது போன்ற செயல்பாடுகள் தான் அதற்கு காரணமாகும்.
பெண்களிடம் புரிந்துக் கொள்ள முடியாத விஷயங்கள் என்ன?
பெண்கள் தான் காதலிக்கும் ஆண்கள் தன்னுடன் ஒவ்வொரு நாளும் முழுவதுமாக அன்பாக, அக்கறையாக பேசிக் கொண்டு இருக்க வேண்டும். என்று நினைப்பார்கள். இல்லையெனில் அவர்கள் தன்னை காதலிக்கவில்லை என்று கூறுவார்கள்.
பெண்கள் தன்னை அலங்கரிக்கும் போது, உடுத்தும் உடையிலிருந்து, உதட்டு சாயம், காலணிகள் வரை அனைத்தும் ஒரே நிறத்தில் வைத்திருப்பார்கள். ஆனால் அந்த விஷயத்தில் ஒருசில பெண்கள் ஆண்கள் ரசிக்க வேண்டும் என்பதை விட, பெண்கள் பொறாமை பட வேண்டும் என்று நினைப்பார்கள்.
பெண்கள் ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் ஒரு புதிய ஆடைகள் எடுக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் புதிய ஆடைகள் அவர்களிடம் நிறைய இருந்தாலும் ஆடைகளே இல்லை என்று கூறுவார்கள்.
பெண்கள் தன்னை பற்றி கவலைப் பட வேண்டாம் என்று கூறினால், அதற்கு நீங்கள் அவர்கள் மீது அக்கறை கொள்ளவில்லை அவர்களுக்கு உங்கள் மேல் கோபம் உள்ளது என்பதை வெளிப்படுத்துகிறார்கள் என்று அர்த்தமாகும்.
பெண்களுக்கு ஏதேனும் ஒரு பிரச்சனை அல்லது எந்த ஒரு விஷயமாக இருப்பினும், அதை நேர்க்கோட்டில் கூறுவதை விடுத்து, தலையை சுற்றி மூக்கை தொடும் வகையில் அதிகமாக பேசுவார்கள்.
ஸ்லிம்மாக இருக்கும் பெண்கள் புதிதாக ஒருமுறை புடவை உடுத்திக் கொண்டு வரும் போது, அவர்களை பார்த்து நீ குண்டாக இருக்கிறாய் என்று கூறிவிட்டால் போதும் அதற்கு உடனே அவர்கள் நான் குண்டாக தெரிகின்றனா என்று புலம்பிக் கொண்டே இருப்பார்கள்.
ஆனால் அது உண்மை தான் என்று கூறலாம். பல சூழல்களில் அப்பா, கணவன், அண்ணன், காதலன், சகோதரன் இது போன்று எந்த ஒரு ஆண் உறவினாலும் பெண்களின் சில குணாதிசயங்கள் மற்றும் செயல்பாடுகளை பற்றி நன்றாக புரிந்துக் கொள்ளவே முடியாது.
ஏனெனில் ஒருசில விஷயங்களில் பெண்கள் அடம்பிடிப்பது, சிறு குழந்தைகளை போன்று நடந்துக் கொள்வது இது போன்ற செயல்பாடுகள் தான் அதற்கு காரணமாகும்.
பெண்களிடம் புரிந்துக் கொள்ள முடியாத விஷயங்கள் என்ன?
பெண்கள் தான் காதலிக்கும் ஆண்கள் தன்னுடன் ஒவ்வொரு நாளும் முழுவதுமாக அன்பாக, அக்கறையாக பேசிக் கொண்டு இருக்க வேண்டும். என்று நினைப்பார்கள். இல்லையெனில் அவர்கள் தன்னை காதலிக்கவில்லை என்று கூறுவார்கள்.
பெண்கள் தன்னை அலங்கரிக்கும் போது, உடுத்தும் உடையிலிருந்து, உதட்டு சாயம், காலணிகள் வரை அனைத்தும் ஒரே நிறத்தில் வைத்திருப்பார்கள். ஆனால் அந்த விஷயத்தில் ஒருசில பெண்கள் ஆண்கள் ரசிக்க வேண்டும் என்பதை விட, பெண்கள் பொறாமை பட வேண்டும் என்று நினைப்பார்கள்.
பெண்கள் ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் ஒரு புதிய ஆடைகள் எடுக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் புதிய ஆடைகள் அவர்களிடம் நிறைய இருந்தாலும் ஆடைகளே இல்லை என்று கூறுவார்கள்.
பெண்கள் தன்னை பற்றி கவலைப் பட வேண்டாம் என்று கூறினால், அதற்கு நீங்கள் அவர்கள் மீது அக்கறை கொள்ளவில்லை அவர்களுக்கு உங்கள் மேல் கோபம் உள்ளது என்பதை வெளிப்படுத்துகிறார்கள் என்று அர்த்தமாகும்.
பெண்களுக்கு ஏதேனும் ஒரு பிரச்சனை அல்லது எந்த ஒரு விஷயமாக இருப்பினும், அதை நேர்க்கோட்டில் கூறுவதை விடுத்து, தலையை சுற்றி மூக்கை தொடும் வகையில் அதிகமாக பேசுவார்கள்.
ஸ்லிம்மாக இருக்கும் பெண்கள் புதிதாக ஒருமுறை புடவை உடுத்திக் கொண்டு வரும் போது, அவர்களை பார்த்து நீ குண்டாக இருக்கிறாய் என்று கூறிவிட்டால் போதும் அதற்கு உடனே அவர்கள் நான் குண்டாக தெரிகின்றனா என்று புலம்பிக் கொண்டே இருப்பார்கள்.
எந்தவிதமான பிரச்சனையும் இல்லாத சூப்பரான சருமம் இது. தரமான அழகு சாதனங்களைப் பயன்படுத்துவதன் மூலம், பாதிப்பு ஏற்படாமல், அழகைக் கூட்டலாம்.
சருமத்தை சுத்தம் செய்வது என்பது அன்றாடம் செய்யும் செயல்களில் இன்றியமையாதது. அப்படி சுத்தம் செய்யும் போது சாதாரணமாக முகத்தை மட்டும் தான் கழுவுவோம். இல்லையெனில் சோப்பு அல்லது ஃபேஷ் வாஷ் பயன்படுத்தி கழுவுவோம். ஆனால் அப்படி கழுவுவது அனைவருக்கும் ஏற்றதாக இருக்காது. ஏனெனில் சருமத்தில் பல வகைகள் உள்ளன. அதில் மிகவும் தொல்லை தரக்கூடிய சருமம் தான் எண்ணெய் பசை சருமம் மற்றும் வறட்சியான சருமம்.
இத்தகைய சருமத்தினருக்காக கடைகளில் பல அழகு சாதன பொருட்கள் விற்கப்படுகின்றன. ஆனால் சாதாரண சருமம் உள்ளவர்களுக்காக என்று எதுவும் விற்பதில்லை. இதனால் சாதாரண சருமம் உள்ளவர்கள், எதை பயன்படுத்துவது என்று தெரியாமல், மற்ற சருமத்தினருக்காக தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்கிப் பயன்படுத்துகின்றனர்.
* காய்ச்சாத பாலில் பஞ்சை நனைத்து, முகத்தில் தடவி, சிறிது நேரத்திற்குப் பிறகு கழுவினால் முகம் பளபளப்பாக இருக்கும்.
* உலர்ந்த திராட்சையின் தோல் நீக்கி, உதட்டின் மீது தடவி வந்தால், உதடுகள் எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்கும்.
* குளிர்காலத்தில், சருமத்தின் மென்மை மற்றும் நெகிழ்வுத்தன்மை ஆகியவற்றைப் பராமரிக்க, சோப்பிற்குப் பதிலாகக் கடலை மாவைப் பயன்படுத்தலாம்.
* பொதுவான பிரச்சனை உதடு வெடிப்பு. சிறந்த பெட்ரோலியம் ஜெல்லை உதட்டில் தடவலாம். பெட்ரோலியம் ஜெல்லுக்குப் பதிலாக வெண்ணெயையும் உதட்டில் தடவலாம். இதனால், உதடு வெடிப்பு குணமாவதுடன், கூடுதல் மென்மையும் கிடைக்கும்.
* குளிர்காலத்தில் மாய்ஸ்ச்சரைசர்கள் மற்றும் க்ரீம்கள் தடவி, சரும பொலிவைத் தக்கவைக்கலாம்.
இத்தகைய சருமத்தினருக்காக கடைகளில் பல அழகு சாதன பொருட்கள் விற்கப்படுகின்றன. ஆனால் சாதாரண சருமம் உள்ளவர்களுக்காக என்று எதுவும் விற்பதில்லை. இதனால் சாதாரண சருமம் உள்ளவர்கள், எதை பயன்படுத்துவது என்று தெரியாமல், மற்ற சருமத்தினருக்காக தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்கிப் பயன்படுத்துகின்றனர்.
* காய்ச்சாத பாலில் பஞ்சை நனைத்து, முகத்தில் தடவி, சிறிது நேரத்திற்குப் பிறகு கழுவினால் முகம் பளபளப்பாக இருக்கும்.
* உலர்ந்த திராட்சையின் தோல் நீக்கி, உதட்டின் மீது தடவி வந்தால், உதடுகள் எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்கும்.
* குளிர்காலத்தில், சருமத்தின் மென்மை மற்றும் நெகிழ்வுத்தன்மை ஆகியவற்றைப் பராமரிக்க, சோப்பிற்குப் பதிலாகக் கடலை மாவைப் பயன்படுத்தலாம்.
* பொதுவான பிரச்சனை உதடு வெடிப்பு. சிறந்த பெட்ரோலியம் ஜெல்லை உதட்டில் தடவலாம். பெட்ரோலியம் ஜெல்லுக்குப் பதிலாக வெண்ணெயையும் உதட்டில் தடவலாம். இதனால், உதடு வெடிப்பு குணமாவதுடன், கூடுதல் மென்மையும் கிடைக்கும்.
* குளிர்காலத்தில் மாய்ஸ்ச்சரைசர்கள் மற்றும் க்ரீம்கள் தடவி, சரும பொலிவைத் தக்கவைக்கலாம்.






