search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    காராமணி சுண்டல்
    X
    காராமணி சுண்டல்

    புரதம், நார்ச்சத்து நிறைந்த காராமணி சுண்டல்

    காராமணி சுண்டலில் புரதம் நிறைந்துள்ளது. மேலும் இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. ஒரு கிண்ணம் வேக வைத்த காராமணி சுண்டலை சாப்பிட்டால், நீங்கள் நீண்ட நேரம் பசி இல்லாமலும், ஆற்றலுடனும் இருப்பீர்கள்.
    தேவையான பொருட்கள்:

    காராமணி - 1/4 கப்
    எண்ணெய் - 2 டீஸ்பூன்
    கடுகு - 1/2 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிது
    வரமிளகாய் - 1
    பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
    துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
    சீரகப் பொடி - 1/4 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    முதலில் காராமணியை வாணலியில் போட்டு 2-3 நிமிடம் வறுத்து, பின் அதனை நீரில் 3 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

    பின்னர் அதனை குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி, 5 விசில் விட்டு இறக்கி நீரை வடித்து, காராமணியை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, பின் அதில் உப்பு தூவி, வேக வைத்துள்ள காராமணியை சேர்த்து கிளறி விட வேண்டும்.

    பின் அதில் துருவிய தேங்காய் சேர்த்து நன்கு கிளறி, இறுதியில் சீரகப் பொடி தூவி பிரட்டி இறக்கினால், காராமணி சுண்டல் ரெடி!!!

    Next Story
    ×