என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    பெண்கள் மருதாணி அலங்காரம் செய்துகொள்ள எப்போதுமே விரும்புவார்கள். ஏனென்றால் அது அவர்களுக்கு அழகோடு, ஆரோக்கியத்தையும் சேர்த்து தருகிறது.
    இந்தியத் திருமணங்களில் மணப்பெண்களுக்கு பாரம்பரிய முறையில் பதினாறு வகையான அலங்காரங்களை செய்கிறார்கள். அதில் முக்கியமானது மருதாணி அலங்காரம். பெண்கள் மருதாணி அலங்காரம் செய்துகொள்ள எப்போதுமே விரும்புவார்கள். ஏனென்றால் அது அவர்களுக்கு அழகோடு, ஆரோக்கியத்தையும் சேர்த்து தருகிறது. மருதாணி உடலில் பித்தத் தன்மையை கட்டுப்படுத்தி, குளிர்ச்சியை தருகிறது.

    பாத்திரங்களை பளிச்சிடவைக்கும் சோப்பு முதல், துணி துவைக்க பயன்படுத்தும் பவுடர் வரை எல்லாமுமே தற்போது ரசாயன கலவைகளாக மாறி வருகின்றன. அவைகளால் பெண்களின் கைகளுக்கு ஏற்படும் அனைத்து பாதிப்புகளையும் போக்கும் சக்தி இயற்கையான மருதாணிக்கு இருக்கிறது. கால், கைகளில் ஏற்படும் பித்த வெடிப்பு, தோலுரிதல் போன்றவைகளும் மருதாணியால் மறையும். இத்தகைய மருத்துவ குணங்கள் கொண்ட மருதாணி சுப நிகழ்ச்சிகளில் மங்கள பொருளாகவும் விளங்குகிறது.

    மருதாணி அரைத்து கைகளை அழகுபடுத்திக் கொண்டு சில மணி நேரம் காத்திருக்க வேண்டியிருப்பதால் இன்றைய அவசர யுகத்தில் பெண்கள் அதற்கெல்லாம் நேரம் ஒதுக்குவதில்லை. அதனால் மருதாணி, பெண்களின் பயன்பாட்டில் இருந்து ஓரங்கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதை உணர்ந்த வியாபாரிகள் அதிலும் ரெடிமேட் வகைகளை கொண்டு வந்துவிட்டார்கள். வைத்ததும் அது காய்ந்துவிடும் என்றாலும், அதில் இயற்கையான மருத்துவ குணம் குறைவு. கிளிட்டர் மருதாணி, நெயில் பாலீஷ் மருதாணி, ஜர்தோசி மருதாணி என்று இப்போது அதற்கு பல பெயர்கள் உண்டு. அவைகளை பயன்படுத்தி கைகளில் அழகிய உருவங்களை வடிவமைக் கிறார்கள். அதன் மூலம் குறுகிய நேரத்திலே அந்த அலங்காரத்தை செய்துமுடித்துவிட முடிகிறது. காய்வதற்காக காத்திருக்கவேண்டிய அவசியம் இல்லை. அழகு நிலையங்களில் விதவிதமான மருதாணிகளை தயார் செய்துவைத்திருக்கிறார்கள். திடீர் விருந்து, விழாக்களுக்கு செல்லும்போது அதனை விருப்பம்போல் பயன் படுத்திக்கொள்ள முடியும்.

    ஜர்தோசி எனப்படும் பாரம்பரிய மருதாணியில் தங்கம், வெள்ளி துகள்கள் கலப்பதால் அது பளபளப்பாக காட்சியளிக்கிறது. கிளிட்டர் மருதாணியை உடைக்கு பொருத்தமாகவும் வைத்துக் கொள்ளலாம். பாரம்பரிய மருதாணியால் அழகுபடுத்திக்கொண்டு பின்பு அதற்குமேல் பளபளக்கும் ஜெல், மைக்கா போன்ற பொருட்களை கலந்து பூசி அழகிய வடிவத்தை அலங்காரம் செய்வார்கள். மருதாணியின் புதிய பரிமாணம் கவர்ச்சியாக இருப்பதால், இப்போது பலராலும் இது விரும்பி ஏற்றுக்கொள்ளப்பட்டுள் ளது. இதன் பெருமை வெளிநாடுகளுக்கும் பரவிக்கொண்டிருக்கிறது.

    ஹாலிவுட் பிரபலங்களான டேமிமூர், மடோனா, நாவோமி போன்றோர் மருதாணி அலங்காரத்தில் மனதை பறிகொடுத்திருப்பவர்கள். தங்கள் கரங்களில் இந்திய முறைப்படி மருதாணி அலங்காரம் செய்து கொண்டு சர்வதேச விழாக்களில் கலந்துகொண்டு பெருமை சேர்க்கிறார்கள். இந்தி நடிகைகளும் மருதாணி அலங்காரத்தில் பிரியம் கொண்டவர்கள்தான். ‘மை நேம் இஸ் கான்’ என்ற இந்தி சினிமாவில் நடிகை கஜோல் மருதாணி அலங்காரம் செய்திருந்தது ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. பாரம்பரிய மருதாணி உள்ளங்கைகளிலும், கால்களில் மட்டுமே வைக்கப்பட்டது. இப்போது தோள் பட்டையிலிருந்து விரல்கள் வரை அலங்கரிக்கப்படுகிறது.

    மருதாணிக்காக புதிய டிசைன்களை அழகுக்கலை நிபுணர்கள் உருவாக்குகிறார்கள். பூக்கள், இலை, கொடிகள், பறவைகள், விலங்குகள், அழகிய வாசகங்கள், விருப்பமானவர்களின் பெயர், தேள், டிராகன், பாம்பு போன்றவை அதில் பிரபலமாக இருக்கிறது. இந்த டிசைன்களை போடுவதற்கு தேர்ச்சி பெற்ற கலைஞர்களை அழகு நிலையங்கள் வேலைக்கு அமர்த்தியிருக்கின்றன.

    இந்த மருதாணி கலைஞர்களுக்கு வெளிநாடுகளிலும் இப்போது நல்ல மவுசு. வெளிநாடுகளில் நம்ம ஊர் சுத்தமான மருதாணிக்கு தனி செல்வாக்கு உள்ளது. அதன் வாசமும், இயற்கையான வண்ணமும் அவர்களுக்கு நன்றாக பிடித்துப்போய்விட்டது. அதனால் மருதாணியோடு சேர்ந்து மருதாணி கலைஞர்களும் வெளிநாடு செல்கிறார்கள்.

    நெயில் பாலீஷ் கலந்த மருதாணியும் இப்போது கிடைக்கிறது. பல வண்ணங்களில், பல டிசைன்களில் அதை நகங்களில் வைத்துக்கொள்ளலாம். பிறகு ரிமூவர் கலந்து அழித்து விடலாம். தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்துபவர்கள், மேடை நிகழ்ச்சி செய்பவர்கள், ஐந்து நட்சத்திர ஓட்டல் வரவேற்பாளர்கள் போன்றவர்கள் இதனை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

    பல நட்சத்திர ஓட்டல்கள், தங்கள் வாடிக்கையாளர்களை கவர அவர்களுக்கு மருதாணி அலங்காரம் செய்கிறார்கள். பாரம்பரிய அழகு சாதனப் பொருளான மருதாணி இன்று பலவகையில் மாற்றம் அடைந்து பார் முழுவதும் மணக்கிறது. மருதாணி இந்தியாவின் பாரம்பரிய அழகு சாதனப் பொருள் மட்டுமல்ல. பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான், துபாய் போன்ற நாடுகளிலும் பிரசித்திப் பெற்றிருக்கிறது.
    கம்பில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த விநாயகர் சதுர்த்திக்கு சத்தான கொழுக்கட்டை செய்ய விரும்பினால் கம்பு கார கொழுக்கட்டை செய்து சுவைக்கலாம்.
    தேவையான பொருட்கள்

    கம்பு மாவு - 1 கப்
    வெங்காயம் - 1
    ப.மிளகாய் - 2
    கறிவேப்பிலை
    உளுத்தம்பருப்பு - 1 ஸ்பூன்
    கடலைப்பருப்பு - 2 ஸ்பூன்
    கடுகு - 1/2 ஸ்பூன்
    வரமிளகாய் - 1
    உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப

    கம்பு

    செய்முறை

    முழு கம்பை வறுத்து அரைக்க வேண்டும் அல்லது கம்பு மாவை நன்றாக வறுத்து கொள்ளவேண்டும்.

    வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு, வரமிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

    பின்பு வறுத்து வைத்த கம்பு மாவு மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கிளறி விடவேண்டும்.

    கை பொறுக்கும் சூட்டில் சிறிது தண்ணீர் சேர்த்து கொழுக்கட்டை பதத்திற்கு பிடிக்க வேண்டும்.

    பிடித்த கொழுக்கட்டைகளை ஆவியில் 10 நிமிடம் வேக வைத்து எடுத்தால் சுவையான ஆரோக்கியமான கம்பு மாவு கொழுக்கட்டை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    உலகம் முழுவதும் குழந்தையில்லாத தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. குழந்தை இல்லாத தம்பதிகள், முதலில் ‘குழந்தையின்மை என்றால் என்ன?’ என்பது பற்றி தெரிந்து கொள்ளவேண்டும்.
    உலகம் முழுவதும் குழந்தையில்லாத தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இந்தியாவிலும் அதே நிலைதான். அதற்கு ஆண், பெண்களின் வாழ்வியல் முறை, உணவுப்பழக்கம், உடற்பயிற்சி இன்மை மற்றும் மனமகிழ்ச்சி இன்மை காரணமாக உள்ளது.

    தம்பதிகள் இயல்பான தாம்பத்தியம் மேற்கொள்ளும்போது, இயற்கையாக கர்ப்பம் நிகழ்ந்துவிடும். அதுதான் இயற்கை விதி. அதே நேரத்தில் பெரும்பாலான பெண்களுக்கு வயது, சிலவித உடல் பாதிப்புகள், மனப் பிரச்சினை, ஆரோக்கிய குறைபாடு போன்றவை தாம்பத்தியத்திற்கு தடையாக இருக்கும். அந்த தடைகளை போக்கி ஆரோக்கியமாக தாம்பத்தியத்தில் ஈடுபடவும், தாய்மையடையவும் நவீன மருத்துவம் கைகொடுக்கிறது.

    குழந்தை இல்லாத தம்பதிகள், முதலில் ‘குழந்தையின்மை என்றால் என்ன?’ என்பது பற்றி தெரிந்து கொள்ளவேண்டும்.

    மனைவியின் சினைமுட்டையும், கணவரின் ஆரோக்கியமான உயிரணுவும் கலக்கும்போது, கருவாகிறது. இதன் வளர்ச்சி நிலைதான் கர்ப்பம். கர்ப்பத் தடை முறைகள் எதையும் கடைப்பிடிக்காமல் மூன்று மாதம் முதல் ஆறுமாதம் வரை தொடர்ச்சியாக தாம்பத்தியம் வைத்துக்கொண்டால் பெண்கள் இயற்கையாக கர்ப்பமாகிவிடுவார்கள். அப்படி கர்ப்பமாகாவிட்டால் அது குழந்தையின்மை என்று பொருள் கொள்ளப்படுகிறது.

    கணவரின் உயிரணு 72 மணி நேரம் வரை பெண் உறுப்பில் உயிருடன் இருக்கும். ஆனால் அதற்கு கருவாக்கும் திறன் 48 மணிநேரமே உண்டு. அதனால் மாதவிலக்கு தொடங்கிய 14 முதல் 18 நாட்களில் தாம்பத்தியம் வைத்துக்கொண்டால் கர்ப்பமடையும் வாய்ப்பு அதிகம். ஏனென்றால் மாதவிலக்கு ஆரம்பித்த 14-வது நாளில் பூரணத்துவம் பெற்ற சினைமுட்டை வெடித்து வெளியேறி உயிரணுவை சந்திக்க வெளியே வரும். அதனால் அந்த நாளில் தாம்பத்தியம் வைப்பது கருத்தரிப்பை பிரகாசமாக்கும்.

    அப்படி நடக்காத பட்சத்தில் குழந்தையின்மை நிலை தோன்றுகிறது. குழந்தையின்மைக்கு கணவன்-மனைவி யாராவது ஒருவரோ அல்லது இருவருமோ காரணமாக இருக்கலாம். சினைப்பை பிரச்சினை, சினைமுட்டை வெளியேறுவதில் ஏற்படும் சிக்கல்கள், கர்ப்பப்பையில் ஏற்படும் கோளாறுகள், கருக்குழாய்களில் ஏற்படும் பாதிப்புகள் என்டோமெட்ரியாசிஸ் கோளாறு போன்ற பிரச்சினைகள் பெண்களுக்கான குழந்தையின்மைக்கான காரணங்கள்.

    உயிரணு எண்ணிக்கை குறைவு, அதன் நீந்தும் வேகத்திறன் குறைவு, வெரிகோசிஸ், ஹார்மோன் பிரச்சினைகள், பாலியல் செயல்பாட்டுக் குறைவு போன்ற பல பிரச்சினைகள் ஆண்களுக்கான குறைபாடுகளாக இருக்கின்றன. திருமணமான தம்பதிகளுக்கு குழந்தைப்பேறு முக்கியம். அதற்குதக்கபடி வாழ்வியல் முறைகளை கடைப் பிடித்து ஆரோக்கியமான தாம்பத்திய உறவை மேற்கொள்ளவேண்டும்.

    குழந்தையின்மை பிரச்சினை அதிகரித்து வருவது உண்மைதான். அதனைப்பற்றி கவலைப்படாமல் குறிப்பிட்ட பருவத்தில் திருமணம் செய்து, ஆரோக்கியமான தாம்பத்தியத்தின் மூலம், குறிப்பிட்ட வயதில் தாய்மையடைந்து விடுவது நல்லது. தம்பதிகளின் மகிழ்ச்சியான வாழ்க்கை கர்ப்பத்துக்கு அடிப்படை காரணமாக இருக்கிறது. கணவன்-மனைவி இருவருமே உடல் நலத்தோடு மனநலனையும் பேணுவது தாய்மைக்கு மிக அவசியம்.
    வீட்டில் இருக்கும் சுட்டி குழந்தைகள் செடி, கொடிகளோடு விளையாடினால் எப்படி இருக்கும்...? அப்படி ஒரு பழக்கத்தை பெற்றோர்கள்தான் குழந்தைகளுக்கு பழக்கிவிட வேண்டும்.
    வீட்டில் இருக்கும் சுட்டி குழந்தைகள் செடி, கொடிகளோடு விளையாடினால் எப்படி இருக்கும்...? அப்படி ஒரு பழக்கத்தை பெற்றோர்கள்தான் குழந்தைகளுக்கு பழக்கிவிட வேண்டும். விதை விதைப்பது, செடி வளர்ப்பது, வளர்ந்த செடியை பராமரிப்பது போன்ற பழக்கங்களினால், குழந்தைகளை உற்சாகப்படுத்தலாம். இந்த பழக்கம் குழந்தைகளின் ஆர்வத்தை தூண்டுவதோடு, பசுமையான பொழுதுபோக்காகவும் அமையும். பாடப்புத்தகங்களின் வழியே தாவர வகைகளை பற்றி தெரிந்து கொள்வதற்கும், வீட்டுத்தோட்டத்தில் செடி வளர்த்து புரிந்து கொள்வதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. எப்படி என்கிறீர்களா...?

    * எளிமையான செடிகளை தேர்ந்தெடுங்கள்

    குழந்தைகளுக்கு இயற்கை பாடம் சொல்லி கொடுக்க, அதிகம் செலவழிக்க வேண்டியதில்லை. வீட்டு சமையலில் அதிகம் பயன்படுத்தும் தக்காளி, எலுமிச்சை, கொத்தமல்லி, புதினா, இஞ்சி போன்றவற்றை கொண்டே இயற்கை பாடம் நடத்தலாம். சமைத்தது போக மீதமிருக்கும் தக்காளி மற்றும் எலுமிச்சை விதைகளை, குழந்தைகளின் கையால் தோட்டத்தில் தெளித்துவிடுங்கள். அது ஓரிரு நாட்களில் செடியாக முளைத்துவிடும். கொத்தமல்லி, புதினா, இஞ்சி போன்றவற்றை நட்டு வைப்பதன் மூலம் செடிகளை வளர்க்கலாம். பப்பாளி, மாதுளை போன்ற பழவகைகளும் வெகு சுலபமாகவே வளரக்கூடியவை.

    * அறிவியல் அறியட்டும்

    சிறு தொட்டியில் மண் நிரப்பி, (கண்ணாடி தொட்டியாக இருப்பது சிறப்பு) அதில் குழந்தைகளை விதை நட செய்யுங்கள். ஒரு விதை எப்படி செடியாக முளைக்கிறது, எப்படி வேர் உருவாகிறது, வேர் வளர வளர செடி வளரும் ரகசியம், இலையின் வளர்ச்சி மாற்றம், நிற மாற்றம் இறுதியில் செடி பூ பூக்கும், காய் காய்க்கும் அதிசயம் போன்றவற்றை குழந்தைகளுக்கு கண் கூடாக காட்டுங்கள். இந்த பயிற்சி, தாவரம் பற்றிய முழு புரிதலை குழந்தைகளுக்கு உண்டாக்கும்.

    அதற்கு முன்பாக மண் எப்படி உருவானது?, எந்தெந்த வகையான மணலில் செடிகள் செழித்து வளரும், செடி, மரம் வளர என்னென்ன தேவை? (வளமான மண், உரம், தண்ணீர், சூரிய வெளிச்சம்), நாம் சுவாசிக்கும் ஆக்ஸிஜன் எப்படி உருவாகிறது? (மரம்தான் வெளியிடுகிறது), போன்றவற்றை குழந்தைகளுக்கு சொல்லி கொடுங்கள். ஒரு சின்ன செடி, எவ்வளவு பாடங்களை குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்கிறது பார்த்தீர்களா...?

    * செடிகளை வெட்டி, ஒட்டலாம்

    காகிதங்களை மட்டுமல்ல, செடிகளையும் வெட்டி, ஒட்டி விளையாடலாம். ஆனால் அதற்கு பெற்றோரின் வழிகாட்டுதல் அவசியம். சிகப்பு நிற செம்பருத்தி பூக்கும் செடியில், திடீரென மஞ்சள் நிற பூ பூத்தால் எப்படி இருக்கும்?, இந்த அதிசயத்தையும் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கலாம். இருவேறு நிற செம் பருத்தி செடிகளின் தண்டுகளை வெட்டி, ஒன்றாக ஒட்டுவதன் மூலம் அவை ஒரே செடியாக வளர்ந்து, இருவேறு நிறங்களில் பூ பூக்கும். இந்த வெட்டு, ஒட்டு முறையில் பல செடிகளை வளர்த்து, வர்ணஜாலம் படைக்கலாம். மேலும் தாவர தண்டுகளில் ஒளிந் திருக்கும் தாவரவியல் பாடங்களையும் சுலபமாக கற்றுக்கொடுக்கலாம்.

    * தோட்டத்தில் விளையாடுங்கள்

    குழந்தைகள் விளையாட வேண்டிய மைதானங்களில், வீட்டுத்தோட்டமும் ஒன்று. மணல் பரப்பில் பள்ளம் தோண்டுவது, சிறு செடிகளை இடம்மாற்றி நடுவது, செடி-மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவது, பூக்களை பறித்து மணம் முகர்வது என இயற்கை எழிலோடு, குழந்தைகளை விளையாட விடுங்கள். வீட்டுத்தோட்டம் இல்லாதவர்கள், மாடித்தோட்டம், தொட்டி செடிகள் என குழந்தைகளை இயற்கையோடு பிசியாக வைத்திருக்கலாம்.
    பால், தயிர், மோர் இந்த மூன்றையும் நிறைய பேர் விரும்பி பருகுவார்கள். ஆயுர்வேதத்தில் இந்த மூன்றையும் உட்கொள்வதற்கான சரியான நேரம் குறித்து பார்ப்போம்.
    உணவுகள் மற்றும் பானங்களை சரியான நேரத்தில் உட்கொண்டால்தான் நோய்களை தவிர்க்கலாம். எந்த நேரத்தில் எவற்றை சாப்பிட வேண்டும் என்பது ஆயுர்வேதத்தில் வரைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பால், தயிர், மோர் இந்த மூன்றையும் நிறைய பேர் விரும்பி பருகுவார்கள். ஆயுர்வேதத்தில் இந்த மூன்றையும் உட்கொள்வதற்கான சரியான நேரம் குறித்து பார்ப்போம்.

    பால் ஒரு முழுமையான உணவாக கருதப்படுகிறது. உடலுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் இதில் உள்ளன. பகலில் எப்போது வேண்டுமானாலும் பால் உட்கொள்ளலாம். அதைவிட இரவு நேரம்தான் நல்லது. உடல் சோர்வை நீக்கி ஆழ்ந்த தூக்கத்தை தரும் ஆற்றல் பாலுக்கு இருக்கிறது. காலையில் பால் குடித்தால் நாள் முழுவதும் உடலில் ஆற்றல் நீடித்திருக்கும். முதியவர்கள் மதிய வேளையில் பால் பருகலாம். பால் ஜீரணமாவதற்கு தாமதமாகும் என்பதால் அதனுடன் மற்ற உணவுகளை சேர்த்து சாப்பிடக்கூடாது.

    நண்பகலுக்கு முன்பாக தயிர் சாப்பிடுவது நல்லது. வெறும் வயிற்றில் தயிர் சாப்பிட்டால் இரத்த அழுத்தம் ஏற்படும். காலை உணவுக்கும், மதிய உணவுக்கும் இடைப்பட்ட நேரத்தில் தயிர் சாப்பிடலாம். ஒருபோதும் இரவில் தயிர் சாப்பிடக்கூடாது. தயிரை சூடுபடுத்தியும் சாப்பிடக்கூடாது. தயிருடன் சிறிது சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு உடனடி ஆற்றலை தரும்.

    மோரை எந்த நேரத்திலும் பருகலாம். மதிய உணவு சாப்பிட்டதும் பருகுவது நல்லது. மாலை, இரவு வேளையில் மோர் பருகுவதாக இருந்தால் பருவநிலை மாற்றத்தை கவனத்தில் கொள்ளுங்கள். வயிற்று பிரச்சினைஇருந்தால் காலையில் வெறும் வயிற்றில் மோர் பருகலாம். நல்ல பலன் தரும்.
    காலமாற்றம், நவீன வாழ்க்கை, பெண்களும் வேலைக்குச் செல்லுதல், ஐ.டி வாழ்க்கைமுறை போன்ற காரணங்களால் பெண்களிடையேயும் புகைப்பிடிக்கும் பழக்கம் நகரங்களில் அதிகரித்துள்ளது.
    பொதுவாகவே புகைப்பிடிக்கும் பழக்கம் காரணமாக மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதிலும், பெண்களுக்கு இப்பாதிப்பு ஏற்படுவதற்கான அபாயம் மூன்று மடங்கு அதிகமாக இருப்பதாக இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

    காலமாற்றம், நவீன வாழ்க்கை, பெண்களும் வேலைக்குச் செல்லுதல், ஐ.டி வாழ்க்கைமுறை போன்ற காரணங்களால் பெண்களிடையேயும் புகைப்பிடிக்கும் பழக்கம் நகரங்களில் அதிகரித்துள்ளது. புகைப்பழக்கம் மாரடைப்பை ஏற்படுத்தும் என்றாலும், பெண்களின் உடலமைப்பு காரணமாக அவர்கள் எளிதாக மாரடைப்பு, ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற பாதிப்புக்கு ஆளாகிறார்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.

    ஆய்வினை மேற்கொண்டவர்கள் 40 முதல் 69 வயதுள்ள 5 லட்சம் பேரை ஆய்வுக்குட்படுத்தினர். இதயம் மற்றும் ரத்த நாள நோய்க்கான அறிகுறிகள் எதுவும் இல்லாததை தொடக்கத்தில் உறுதிப்படுத்திக் கொண்டனர். இவர்களை 7 வருடங்கள் வரை தொடர்ந்து கண்காணித்ததில், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு மாரடைப்பு முதல் தடவை ஏற்பட்டது தெரிய வந்தது. அவர்களில், 29%-வினர் பெண்களாக இருந்தனர்.

    புகைப்பழக்கம் இல்லாத ஆண்கள், அப்பழக்கம் உடைய ஆண்கள் ஆகியோரை ஒப்பிட்டுப் பார்க்கும்போது சிகரெட் பழக்கம் உடைய ஆண்களுக்கு குறைந்தது 2 தடவையாது மாரடைப்பு வரும் அபாயம் இருப்பது தெரிய வந்தது. அதேவேளையில், பெண்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, புகைப்பழக்கம் அற்ற மகளிரைவிட, சிகரெட் பழக்கம் உள்ள பெண்களுக்கு இது 3 தடவையாக அதிகமாக இருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டது.

    இந்த ஆய்வின் மூலம், புகைப்பிடித்தல் காரணமாக ஆண்களைவிட பெண்களுக்கு 83% உயர் ரத்த அழுத்த பாதிப்பு இருப்பதும், டைப்-1 நீரிழிவு நோயின் தாக்கம் ஆடவரைவிட பெண்களுக்கு 3 மடங்கு அதிகமாகவும், டைப்-2 நீரிழிவு பாதிப்பு, மகளிருக்கு ஆண்களைவிட 47%-ம் அதிகமாக இருப்பதும் தெரிய வந்தது.

    ‘‘பெண்களிடம் அதிகரித்து வரும் மாரடைப்பு குறித்து இதன் மூலம் புரிந்துகொள்ள முடிந்தது. இதன்மூலம் சிகரெட் பழக்கத்தை நிறுத்துவதற்கு உதவ முடியும் என்பதையும் வலியுறுத்துவதாக இந்த ஆய்வு அமைந்தது’ என்கிறார்கள் இதுபற்றி கருத்து தெரிவித்திருக்கும் ஆய்வுக்குழுவினர். புதுமையான இந்த ஆய்வு முடிவுகள் பிரிட்டனில் இருந்து வெளியாகும் BMJ என்ற இதழில் வெளியாகின.
    பெண்களுக்கு முகத்தில் இருக்கும் தேவையில்லாத முடிகளை அழிக்க ஆவாரம் பூ அதிக அளவில் உதவி புரிகின்றது. மேலும் முடி கொட்டுவதை தடுக்கவும் ஆவாரம்பூ மிகச்சிறந்த பணிபுரிகிறது.
    * ஆவாரம்பூவுடன் வெள்ளரி விதை, கசகசா, பால் ஆகியவற்றை சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும். இவற்றை உடலிலும் முகத்திலும் தேய்த்துக் குளிக்கலாம். வாரத்துக்கு இரண்டு முறை இவ்வாறு செய்து வந்தால் உடல் வறட்சி நீங்கிவிடும், நிறம் பளிச்சென்று இருக்கும்.

    * பெண்களுக்கு முகத்தில் இருக்கும் தேவையில்லாத முடிகளை அழிக்க ஆவாரம் பூ அதிக அளவில் உதவி புரிகின்றது. பூலான் கிழங்கு, கோரைக்கிழங்கு, உலர்ந்த ஆவாரம் பூ ஆகிய மூன்றையும் பசை போல அரைத்துக்கொள்ள வேண்டும். இதை தொடர்ந்து உங்கள் முகத்திற்கு பூசி வந்தால் முகம் பளிச்சென்று மின்ன ஆரம்பித்துவிடும்.

    * முடி கொட்டுவதை தடுக்கவும் ஆவாரம்பூ  மிகச்சிறந்த பணிபுரிகிறது. செம்பருத்தி, தேங்காய்ப் பால் மற்றும் ஆவாரம்பூ ஆகியவற்றைச் சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும். இதை வாரத்துக்கு மூன்று முறை தேய்த்து குளித்து வந்தால் முடி கொட்டுவது நின்றுவிடும். கூந்தலும் நன்கு வளர்ச்சி அடையும்.

    * வடிகட்டிய ஆவாரம் பூவின் தண்ணீரை வைத்து உங்கள் கூந்தலை அலசலாம். முகத்தையும் கழுவலாம், இதை தொடர்ந்து செய்தால் முடி சுத்தமாவதுமட்டுமில்லாமல், முகமும் பளிச்சென்று இருக்கும். உடலின் நிறம் அதிகரிக்கும். உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.

    * ஆவாரம் பூவின் சாற்றை சுண்டக் காய்ச்சி, அதனுடன் தேங்காய் எண்ணெயை சேர்த்து தினமும் முடிக்கு தடவி வரலாம். இவ்வாறு தொடர்ந்து செய்தால் முடி நன்கு வளருவதுடன் முடி கொட்டுவதும் நின்று விடும்.

    விநாயகர் சதுர்த்திக்கு சத்தான கொழுக்கட்டை செய்ய விரும்பினால் கோதுமை ரவை வைத்து சத்தான சுவையான கொழுக்கட்டை செய்யலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை ரவை - 1 கப்
    கடலை பருப்பு - கால் கப்
    காய்ந்த மிளகாய் ? 2
    தேங்காய் துருவல் - கால் கப்
    தண்ணீர் - 2 கப்
    உப்பு - தேவைக்கு

    தாளிக்க :

    எண்ணெய் - தேவைக்கு
    கடுகு - 1 டீஸ்பூன்
    கடலைபருப்பு - 1 டீஸ்பூன்
    உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

    கோதுமை ரவை உப்புமா கொழுக்கட்டை

    செய்முறை :

    வெறும் வாணிலியில் கோதுமை ரவையை போட்டு வாசனை வரும் வரை வறுக்கவும்.

    கடலைப்பருப்பை அரை மணிநேரம் ஊற வைத்து காய்ந்த மிளகாயுடன் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் இதில் கடுகு, கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் வறுத்த ரவை, அரைத்த கடலைப்பருப்பு விழுது, சிறிது உப்பு சேர்த்து கைவிடாமல் கிளறவும்.

    கலவை உப்புமா பதத்தில் வந்தவுடன் அதை கொழுக்கட்டைகளாக பிடித்து இட்லி சட்டியில் வேக வைத்து எடுக்கவும்.

    சத்தான கோதுமை ரவை உப்புமா கொழுக்கட்டை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்


    எல்லா குடும்பங்களிலும் தனிநபர் வருமானத்தை பெருக்கி, பெண் கல்வி, பெண்களுக்கான வேலைவாய்ப்பை அதிகரித்தால், சட்டம் நிறைவேற்ற வேண்டிய தேவையே இல்லாமல், பெண்களின் திருமண வயது தானாகவே உயர்ந்துவிடும்.
    திருமணம் என்பது இருமனங்கள் கலப்பது. இரு குடும்பங்கள் சேர்ந்து முடிவு செய்வது. யாரை, யார் திருமணம் செய்துகொள்வது?, எப்போது திருமணம் செய்வது?, எங்கு திருமணத்தை நடத்துவது? என்பதெல்லாம், திருமணம் செய்துகொள்ளப்போகிறவர்களும், அவர்கள் குடும்பத்தினர்களும் முடிவு செய்வதுதான் சமுதாயத்தில் இன்றும் ஒரு நடைமுறையாக இருக்கிறது.

    பொதுவாக கிராமங்களில் சொல்வார்கள். “அவனுக்கும் பிடிக்கிறது, அவளுக்கும் பிடிக்கிறது, இரு குடும்பங்களுக்கும் பிடிக்கிறது. பிறகு என்ன தடை? திருமணத்தை ஜாம்.. ஜாம்.. என்று நடத்துவதுதானே” என்பார்கள். அந்த வகையில், திருமணம் என்பது ஒரு தனிப்பட்ட சுதந்திரம் என்பதுதான் எல்லோருடைய கருத்தும் ஆகும். தற்போது ஆண்களுக்கான திருமண வயது 21 என்றும், பெண்களுக்கான திருமண வயது 18 என்றும் இருக்கிறது. ஆனால், பெண்களுக்கான திருமண வயதை 18-ல் இருந்து உயர்த்த மத்திய அரசாங்கம் முடிவு செய்திருக்கிறது என்ற வகையில், சில கருத்துகளை பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். சுதந்திர தினத்தன்று அவர் உரையில் தெரிவித்த கருத்துகள் விமர்சனங்களை கிளப்பி உள்ளது. பெண்கள் திருமணம் செய்வதற்கு எது சரியான வயது? என்பது குறித்து முடிவு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு விரைவில் தன் அறிக்கையை தாக்கல் செய்தவுடன் முடிவு எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

    பெண்களுக்கு ஊட்டச்சத்து இல்லாத நிலைமையை முடிவுக்கு கொண்டுவரத்தான், திருமணத்திற்கு ஏற்ற வயதை ஆராய்ந்து முடிவு செய்ய இந்த கமிட்டியை அமைத்திருக்கிறோம் என்று அவர் கூறியிருக்கிறார். இந்த அறிவிப்பை ஏற்கனவே நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டில் தெரிவித்து இருக்கிறார். பெண்களின் திருமண வயது 15-ல் இருந்து 18 ஆக 1978-ல் ஏற்கனவே நடைமுறையில் இருந்த, 1929-ம் ஆண்டு சாரதா சட்டத்தை திருத்தி நிறைவேற்றப்பட்டது என்று கூறி, திருமணம் வயதை உயர்த்த வேண்டியதன் அவசியம் குறித்து சில கருத்துகளை கூறினார். இதுகுறித்து, ஜெயா ஜெட்லி தலைமையில் 10 பேர் கொண்ட குழுவை மத்திய அரசாங்கம் அமைத்துள்ளது. அந்தக்குழு இன்னும் தனது அறிக்கையை தாக்கல் செய்யவில்லை.

    உலகில் திருமண வயது தொடர்பாக பல நாடுகளில் பலவிதமான சட்டங்கள் இருக்கின்றன. சில நாடுகளில் குறைந்தபட்ச வயதே கிடையாது. சில நாடுகளில் 14 வயதுக்கும் குறைந்த வயதிலேயே திருமணம் செய்துகொள்ளலாம். இந்தியா உள்பட 143 நாடுகளில் 18 வயது என்றும், 20 நாடுகளில் 21 வயது என்றும் குறைந்தபட்ச வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எல்லா துறைகளிலும் வளர்ந்த நாடான அமெரிக்காவில்கூட, ஒவ்வொரு மாகாணத்திலும் வெவ்வேறு விதமான சட்டங்கள் இருக்கின்றன. கலிபோர்னியா, மாசசூசெட்ஸ், மிச்சிகன், மிசிசிப்பி, நியூ மெக்சிகோ, ஓக்லஹோமா, ரோட் ஐலண்ட், வாஷிங்டன், வெஸ்ட் வெர்ஜினியா, வியோமிங் ஆகிய 10 மாகாணங்களில் திருமணம் செய்துகொள்ள வயது வரம்பே கிடையாது.

    கடந்த ஜூன் மாத கணக்குப்படி, 40 மாகாணங்களில் 14 வயது முதல் 18 வயதுவரை குறைந்தபட்ச வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் பெற்றோரின் சம்மதத்தின் பேரிலோ, சம்மதம் இல்லாமலோ திருமணம் செய்யலாம் என்ற நிலையும் இருக்கிறது. ஆக, அமெரிக்காவிலேயே இந்த நிலை என்றால், இந்தியாவில் குறைந்தபட்ச திருமண வயது நடைமுறைக்கு சாத்தியமா? என்பதை யோசிக்க வேண்டும். திருமணத்தை குடும்பச் சூழ்நிலை, அவர்களது தனி விருப்பம், பெற்றோரின் விருப்பம் ஆகியவைதான் முடிவு செய்யவேண்டுமே தவிர, சட்டம்போட்டு திருமண வயதை நிர்ணயிக்க முடியாது. கிராமங்களில் பொருளாதார நிலைமையை மேம்படுத்தி, எல்லா குடும்பங்களிலும் தனிநபர் வருமானத்தை பெருக்கி, பெண் கல்வி, பெண்களுக்கான வேலைவாய்ப்பை அதிகரித்தால், சட்டம் நிறைவேற்ற வேண்டிய தேவையே இல்லாமல், பெண்களின் திருமண வயது தானாகவே உயர்ந்துவிடும். 
    பால் பற்கள்(விழுந்து முளைக்கும் தன்மை கொண்டவை) பராமரிப்பில் தொடங்கும் ஆரோக்கியம் வயோதிக காலம் வரை நீடிக்கும். மழலைகளின் மயக்கும் புன்னகைக்குக் காரணமான பற்களைப் பாதுகாக்கும் எளிய டிப்ஸ் இதோ...
    பச்சிளம் குழந்தைகளின் உடல்நலத்தில் முக்கிய பங்காற்றுபவை பற்கள். பால் பற்கள்(விழுந்து முளைக்கும் தன்மை கொண்டவை) பராமரிப்பில் தொடங்கும் ஆரோக்கியம் வயோதிக காலம் வரை நீடிக்கும். அதைக் கருத்தில் கொண்டு இளம் பெற்றோர்களுக்கு, மழலைகளின் மயக்கும் புன்னகைக்குக் காரணமான பற்களைப் பாதுகாக்கும் எளிய டிப்ஸ் இதோ...

    ஒவ்வொரு முறையும் பால் புகட்டிய பின்னர் சுத்தமான, கொதிக்க வைத்து, ஆற வைத்த தண்ணீரில், மஸ்லின் போன்ற மெல்லிய துணியை நனைத்து, ஈறுகள் மற்றும் நாக்கைச் சுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் உங்கள் குழந்தை வளர வளர அவர்களைப் பிரஷ் பண்ணும் பழக்கத்திற்குக் கொண்டு வர சிரமப்பட வேண்டியதில்லை.    

    மழலையின் முதல் ஸ்பரிசம் எவ்வளவு முக்கியமோ, அதேபோன்று பச்சிளம் குழந்தைக்கான முதல் பிரஷும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆகவே, அதைத் தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருப்பது அவசியம். உங்கள் செல்லத்திற்கான பிரஷை வாங்கும்போது முன்பக்கம் சிறிதாகவும், நைலான் இழைகளைக் கொண்டுள்ளதாகவும் பார்த்து வாங்க வேண்டும்.

    உங்கள் குழந்தைக்கான பேஸ்ட்டைத் தேர்ந்தெடுப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும். இயற்கையான முறையில் தயாரான, ஃப்ளோரைட் சேர்க்கப்படாத, மழலைக்கு ஏற்ற பற்பசையாக தேர்ந்தெடுப்பது நல்லது. அதற்கு முன்னர் பல் மருத்துவர்/குடும்ப மருத்துவருடன் கலந்து ஆலோசிப்பதும் சிறப்பு.

    ஆரம்பத்தில் குழந்தைகள் அடம் பிடிக்கும். பற்களைத் தேய்த்த பிறகு எச்சிலுடன் கலந்த பேஸ்ட்டை எவ்வாறு துப்புவது என்பது தெரியாது. பெரும்பாலான குழந்தைகள் ஒன்றரை வயதிலேயே பிரஷ் செய்யும் விதத்தைக் கற்றுக்கொள்கின்றன. விதிவிலக்காக, ஒரு சில குழந்தைகளுக்குத்தான் இதற்கு மூன்று ஆண்டுகள் தேவைப்படுகின்றன. அதனால் பொறுமையுடன் கற்றுக் கொடுக்கவும்.

    இந்தியாவில் ஆரம்பத்தில் முக கவசம் பெரிய அளவில் மக்கள் பயன்பாட்டை பெறாதபோதும், இப்போது பெரும்பாலான மக்கள் விழிப்புணர்வு பெற்று அணியத்தொடங்கி இருக்கிறார்கள்.
    கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி மக்களின் பயன்பாட்டுக்கு வருகிற வரையில், தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முக கவசம், தனிமனித இடைவெளி, கைச்சுத்தம் ஆகிய மூன்றும்தான் பாதுகாப்பு கவசங்களாக பயன்படும் என உலக சுகாதார நிறுவனம் தொடங்கி அனைத்து தரப்பினராலும் வலியுறுத்தப்படுகிறது.

    இந்தியாவில் ஆரம்பத்தில் முக கவசம் பெரிய அளவில் மக்கள் பயன்பாட்டை பெறாதபோதும், இப்போது பெரும்பாலான மக்கள் விழிப்புணர்வு பெற்று அணியத்தொடங்கி இருக்கிறார்கள்.

    இந்த நிலையில் 14 விதமான முக கவசங்களை அமெரிக்காவில் டர்ஹாம் நகரில் அமைந்துள்ள டியூக் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து இருக்கிறார்கள்.

    இந்த ஆய்வில் பங்கேற்பாளர் ஒருவருடைய மூச்சில் இருந்து நீர்த்துளிகள் சிதறடிக்கப்படுவதை ஒப்பிட்டு பார்த்தார்கள்.

    இதில் சாதாரணமாக சுகாதார ஊழியர்கள் அணிகிற வால்வுகள் இல்லாத என்-95 முக கவசங்கள்தான் மிகவும் பயனுள்ள முக கவசம் என்று அவர்கள் கண்டறிந்தனர். நெக் பிளஸ் வகை முக கவசம்தான் மிக குறைவான பயன் அளிக்கத்தக்கது. உண்மையில் இந்த வகை முக கவசம்தான் தொற்று அபாயத்தை அதிகரிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆய்வினை நடத்திய ஆராய்ச்சியாளர் மார்டிட்டின் பிஷ்ஷர் கூறுகையில், “எந்த முக கவசமும் அணியாமல் அளவிடப்பட்ட துகள்களின்அளவை விட நெக் பிளஸ் வகை முக கவசம் அணிகிறபோது அதில் உள்ள துகள்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது கண்டு ஆச்சரியம் அடைந்தோம். நாங்கள் மக்கள் முக கவசங்கள் அணிவதை ஊக்குவிக்கிறோம். ஆனால் அவர்கள் வேலை செய்கிற முக கவசங்களை அணிய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என்கிறார்.

    பண்டனாஸ் வகை முக கவசம் மோசமான முக கவசத்தில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. பின்னலாடை முக கவசம் மூன்றாவது மோசமான முக கவசம் என கண்டறிந்துள்ளனர்.

    அறுவை சிகிச்சையின்போது டாக்டர்கள் அணிகிற சர்ஜிக்கல் முக கவசம், ஆய்வில் நன்றாக வேலை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இது நல்ல முக கவசங்களில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

    பாலிபுரொபைலின் முக கவசம் மூன்றாவது சிறந்த முக கவசம்.

    கையால் செய்யப்பட்ட பருத்தி முக கவசமும் நன்றாக செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் சாதாரண உரையாடல்களில் கணிசமான எண்ணிக்கையிலான நீர்த்துளிகளை அகற்றுவதும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பிற முக்கிய தகவல்கள்:-

    * மக்கள் பேசுகிறபோது சிறிய அளவில் நீர்த்துளிகள் வெளியேறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே இருமல், தும்மல் இன்றி பேசுவதின் மூலமும் தொற்று பரவலாம்.

    * கொரோனா தொற்றை விரட்டியடிக்க முக கவசம் அணிவது எளிய வழி.

    * பாதி நோய் தொற்று அறிகுறிகளை காட்டாத நபர்களிடம் இருந்து வந்தவை. ஆனால் சம்மந்தப்பட்ட நபர்களுக்கு தாங்கள் பாதிக்கப்பட்டிருப்பது தெரியாது. அவர்கள் இருமும்போது, தும்மும்போது, ஏன் பேசும்போது கூட தொற்று பரவுகிறது.

    * எல்லோரும் முக கவசம் அணிந்தால், நீர்த்துளிகள் 99 சதவீதம் வரை வேறொருவரை அடைவதற்கு முன் தடுத்து நிறுத்த முடியும்.
    பெண்கள் பஸ்களில் ஏறி-இறங்கவும், வாகனங்களை இயக்கவும் ஜீன்ஸ் சவுகரியமாக இருக்கிறது என்பது அனேகமானவர்களின் கருத்தாக இருக்கிறது. ஆனாலும் ஜீன்ஸ் அணிவது பெண்களுக்கு பல்வேறு விதத்தில் உடல்நல கோளாறுகளை ஏற்படுத்துகிறது.
    காதலி, பேண்ட் அணியும் தனது காதலனிடம் ‘உங்களுக்கு ஜீன்ஸ் போட்டால் நன்றாக இருக்கும். அடுத்த முறை நாம் சந்திக்கும்போது நீங்கள் ஜீன்ஸ் அணிந்துவரவேண்டும்’ என்று அன்புக்கட்டளை விடுத்த காலம் அப்படியே தலைகீழாக மாறியது. காதலர்கள், தங்கள் காதலியும் ஜீன்ஸில் கம்பீரமாக வலம் வரவேண்டும் என்று எதிர்பார்த்தார்கள். அவர்களுக்கு ஜீன்ஸ் வாங்கிக்கொடுத்து, போட்டுக் கொள்ள சொல்லி அழகு பார்த்தார்கள். இப்படி இருபாலரும் மாறி மாறி அணியும் நிலை வந்ததால் ஜீன்ஸ் இப்போது வீதி எங்கும் கோலாச்சிக்கொண்டிருக்கிறது.

    பெண்களின் உடலை உரிமையோடு இறுக்கிப்பிடிக்கும் இந்த உடை, நாகரிகத்தின் அடையாளமாகவும் ஆகிவிட்டது. அதுமட்டுமில்லை, பெண்கள் பஸ்களில் ஏறி-இறங்கவும், வாகனங்களை இயக்கவும் ஜீன்ஸ் சவுகரியமாக இருக்கிறது என்பது அனேகமானவர்களின் கருத்தாக இருக்கிறது. ஆனாலும் ஜீன்ஸ் அணிவது பெண்களுக்கு பல்வேறு விதத்தில் உடல்நல கோளாறுகளை ஏற்படுத்துகிறது.

    உணவுப் பழக்கமும், உடை அணியும் வழக்கமும் ஒவ்வொரு நாட்டு சீதோஷ்ணநிலை மற்றும் வாழ்வியல் சூழலோடு தொடர்புடையது. அவை குளிர்நாடுகளுக்கு ஒரு மாதிரியாகவும், உஷ்ண நாடுகளுக்கு இன்னொரு மாதிரியாகவும் இருக்கும்.

    இந்தியா உஷ்ணமான நாடு. இங்கு நாம் அணியும் உடைகள் எல்லாமே உஷ்ணத்தை குறைக்கும் விதத்தில் தான் இருக்கவேண்டும். அதனால்தான் மென்மையான, தளர்வான உடைகளை இந்திய பெண்கள் அணியவேண்டும் என்று கூறப்படுகிறது. ஆனால் ஜீன்ஸ் குளிர் நாடுகளுக்காக உருவாக்கப்பட்ட உடை. அது உடல் உஷ்ணத்தை அதிகரிக்க தயார் செய்யப்பட்ட உடையாகும். மேற்கத்திய நாட்டினர்களுக்கு உருவாக்கப்பட்டுள்ள உடையை இங்குள்ளவர்களும் அணிகிறார்கள். அது உடலை இறுக்கிப் பிடித்து காற்றோட்டம் இல்லாத நிலையை உருவாக்குவதால், அதை அணியும் பெண்கள் பல்வேறு உடல் உபாதைகளுக்கு உள்ளாகிறார்கள்.

    இந்தியா போன்ற உஷ்ணநாடுகளை சேர்ந்தவர்கள் ஜீன்ஸை அணிவதாலும், தொடர்ச்சியாக அதிக நேரம் அணிவதாலும் ஜீன்ஸ் அணிபவர்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.

    ‘டைட் ஜீன்ஸ்’ அணியும் ஆண்களுக்கு உயிரணு உற்பத்தி விரைவாக குறைகிறது. ஜீன்ஸ் அவர்களுடைய விரைப்பைகளை இறுக்கிப்பிடிப்பது தான் அதற்கான காரணம்.

    கீழ் வயிற்றிலிருந்து மேல் நோக்கிச் செல்லும் மிகவும் நுட்பமான நரம்பு அழுத்தப்படுவதால் அஜீரணம், நெஞ்சு எரிச்சல், மூட்டுக்களில் வலி, மரத்துப் போதல் போன்ற பல பிரச்சினைகள் தோன்றுகின்றன.

    பெண்கள் டைட் ஜீன்ஸ், ஹைஹீல்ஸ் செருப்பு அணிந்து நடப்பதால் முதுகு வலியும், கழுத்து வலியும் ஏற்படுகிறது. அவர்களது இனப்பெருக்க உறுப்புகளும் அழுத்தத்தால் பாதிக்கப்படுவதால் பெண்கள் அதிக நேரம் ஜீன்ஸ் அணிவதை தவிர்க்க வேண்டும். 
    ×