என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் உள்ள மேலும் சில முக்கியமான கோவில்களைப் பற்றி சிறிய குறிப்பாக இங்கே பார்ப்போம்.
சென்னை நகரைச்சுற்றி ஏராளமான பிரசித்திபெற்ற திருக்கோவில்கள் அமைந்துள்ளன. வெளிமாவட்டங்களைச் சேர்ந்த பலருக்கும், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் உள்ளிட்டவைதான் அதிகமாகத் தெரிந்திருக்கும். சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் உள்ள மேலும் சில முக்கியமான கோவில்களைப் பற்றி சிறிய குறிப்பாக இங்கே பார்ப்போம்.
காளிகாம்பாள் கோவில்: சென்னை மாநரகத்தின் பரபரப்பு மிகுந்த பகுதியான பாரீஸ் கார்னரில், தம்புசெட்டி தெருவில் இந்த ஆலயம் உள்ளது. கி.பி.17-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சென்னை கடற்கரையை ஒட்டிய பகுதியில் இருந்த இந்தக் கோவில், பல்வேறு கால மாற்றங் களின் காரணமாக, தற்போதைய இடத்தில் எழுப்பப்பட்டிருக்கிறது. போர்ச்சுகீசியர்களின் ஆதிக்க காலத்தில் இந்த மாற்றம் நிகழ்ந்திருக்கலாம் என்கிறார்கள். இந்தக் கோவிலில் ‘காளி’ என்றும், ‘காமாட்சி’ என்றும் அழைக்கப்படும் பெண் தெய்வம் பிரதான மூலவராக அருளாட்சி செய்கிறார். முன்காலத்தில் உக்கிர காளியாக காட்சியளித்த இத்தல மூலவர், தற்போது சாந்தமான கோலத்தில் காமாட்சி வடிவில் அருள்வதாக ஐதீகம்.
திருநீா்மலை ரங்கநாதர்: தென் சென்னைப் பகுதியில் உள்ள குரோம்பேட்டையில் இருந்து 5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது, திருநீர்மலை. பல்லாவரத்தில் இருந்தும் 5 கிலோமீட்டர் சென்றால், இந்த ஊரை அடையலாம். திவ்ய தேசங்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்த ஆலயம், மலைக் குன்றின் மீது அமைந்திருக்கிறது. மலையின் அடிவாரத்திலும் சிறிய கோவில் உள்ளது. இங்கு நீர்வண்ணப்பெருமாள் வீற்றிருக்கிறார். மலையின் மீதுள்ள ஆலயத்தில் ரங்க நாதர் அருளாட்சி செய்கிறார். கோவிலுக்கு எதிரே ஒரு தீர்த்தக்குளம் அமைந்துள்ளது.
மருந்தீஸ்வரர் கோவில்: சென்னை, திருவான்மியூர் பகுதியில் அமைந்திருக்கிறது இந்தத் திருக்கோவில். இங்கு மூலவராக சிவபெருமான் வீற்றிருக்கிறார். நோய்களை தீர்க்கும் சக்தி படைத்தவர் என்பதால், இவருக்கு ‘மருந்தீஸ்வரர்’ என்று பெயர். அதோடு, அகத்திய முனிவருக்கு, தெய்வீக மருந்து முறைகளை உபதேசம் செய்ததாலும், இவருக்கு இப்பெயர் வந்தது. தேவாரப் பாடல்கள் பெற்ற 274 திருக்கோவில்களில் இந்த ஆலயமும் ஒன்று. இந்தக் கோவில் அமைந்த சாலை, அந்த காலத்தில் சோழ நாட்டை, பல்லவ நாட்டோடும், ஆந்திராவில் ஆட்சி செய்த சில ராஜ்ஜியங்களோடும் இணைக்கும் முக்கிய சாலையாக விளங்கியதாக சொல்லப்படுகிறது.
ஜெகந்நாதர் கோவில்: சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் இருந்து விலகி, ரெட்டிக்குப்பம் சாலையில் கானாத்தூர் என்ற இடத்தில் இந்தக் கோவில் இருக்கிறது. ஒடிசாவில் உள்ள பூரிஜெகந்நாதர் கோவிலை போன்ற வடிவமைப்பிலேயே இந்தக் கோவில் அமைக்கப்பட்டிருக்கிறது. பூரி ஜெகந்நாதர் கோவிலில் உள்ளதுபோலவே, இங்கும் ஜெகந்நாதர், பலராமர் மற்றும் சுபத்ரா தேவி ஆகியோரை தரிசிக்க முடியும். தெய்வங்களின் சிலைகளும், பூரியில் உள்ளது போலவே மரத்தால் செய்யப்பட்டவைதான். இதற்காக வேப்ப மரத் துண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பிரதான தெய்வங்களைத் தவிர யோக நரசிம்மர், விநாயகர், விமலாதேவி மற்றும் கஜலட்சுமி ஆகியோருக்கும் சன்னிதிகள் அமைந்துள்ளன. இந்த ஆலயம் வெண் சலவைக் கற்களாலும், கருப்புப் பளிங்கு கற்களாலும் கட்டப்பட்டுள்ளது. பளிங்கு கருங்கல் காஞ்சிபுரத்தில் இருந்தும், வெள்ளை சலவைக் கல் ராஜஸ்தானில் இருந்தும் வரவழைக்கப்பட்டுள்ளன.
தேவி கருமாரியம்மன்: சென்னை புறநகர் பகுதியில் மேற்கு பக்கத்தில் உள்ளது திருவேற்காடு கருமாரியம்மன் கோவில். புராண காலத்தில் இந்தப் பகுதியில் மருத்துவக் குணம் மிகுந்த மூலிகை வனம் இருந்ததாக சொல்லப்படுகிறது. தெய்வீக மூலிகை (வேர்) நிறைந்த வனம் என்பதால், இந்த பகுதி ‘திருவேற்காடு’ என்று பெயர் பெற்றதாக கூறுகிறார்கள். இந்த ஆலய அம்மன், குறி சொல்லும் பெண் வேடத்தில் சூரிய பகவானை பார்க்க அவரது இருப்பிடம் சென்றாள். ஆனால் அன்னையை அடையாளம் கண்டுகொள்ளாத சூரியபகவான், அவளுக்கு உரிய மரியாதை தராததோடு, அவமரியாதையும் செய்தான். இதையடுத்து சூரியனின் இடத்தில் இருந்து அன்னை புறப்பட்ட மறுநொடி, சூரியன் தன்னுடைய ஒளியை இழந்தான். இதனால் உலக உயிர்களும் துன்பத்தில் துவண்டன. தன் தவறை உணர்ந்த சூரியன், அன்னையிடம் மன்னிப்பு கோரினான் என்று தல வரலாறு சொல்கிறது. இதனால் சூரிய பகவானுக்கு உரிய ஞாயிற்றுக்கிழமையில் இந்த ஆலயத்தில் அருளும் கருமாரியம்மனுக்கு, சிறப்பு பூஜைகள் செய்யப்படு கின்றன.
சுப்பிரமணியர் ஆலயம்: சென்னையை அடுத்துள்ளது, பழமையும் பெருமையும் வாய்ந்த குன்றத்தூர். பல்லாவரத்தில் இருந்து மேற்கே 8 கிலோமீட்டர் தொலைவில்இந்த ஊர் இருக்கிறது. இங்குள்ள முருகன் கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். சிறிய குன்றின் மீது அமைந்திருக்கும் இந்த ஆலயத்தில் உள்ள மூலவர், வடக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்கிறார். இந்த ஆலயம், இரண்டாம் குலோத்துங்கச் சோழனால் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. பெரிய புராணம் என்னும் 63 நாயன்மார்களின் வரலாற்றை எழுதிய சேக்கிழார் அவதரித்த தலமாக குன்றத்தூர் குறிப்பிடப்படுகிறது.
காளிகாம்பாள் கோவில்: சென்னை மாநரகத்தின் பரபரப்பு மிகுந்த பகுதியான பாரீஸ் கார்னரில், தம்புசெட்டி தெருவில் இந்த ஆலயம் உள்ளது. கி.பி.17-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சென்னை கடற்கரையை ஒட்டிய பகுதியில் இருந்த இந்தக் கோவில், பல்வேறு கால மாற்றங் களின் காரணமாக, தற்போதைய இடத்தில் எழுப்பப்பட்டிருக்கிறது. போர்ச்சுகீசியர்களின் ஆதிக்க காலத்தில் இந்த மாற்றம் நிகழ்ந்திருக்கலாம் என்கிறார்கள். இந்தக் கோவிலில் ‘காளி’ என்றும், ‘காமாட்சி’ என்றும் அழைக்கப்படும் பெண் தெய்வம் பிரதான மூலவராக அருளாட்சி செய்கிறார். முன்காலத்தில் உக்கிர காளியாக காட்சியளித்த இத்தல மூலவர், தற்போது சாந்தமான கோலத்தில் காமாட்சி வடிவில் அருள்வதாக ஐதீகம்.
திருநீா்மலை ரங்கநாதர்: தென் சென்னைப் பகுதியில் உள்ள குரோம்பேட்டையில் இருந்து 5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது, திருநீர்மலை. பல்லாவரத்தில் இருந்தும் 5 கிலோமீட்டர் சென்றால், இந்த ஊரை அடையலாம். திவ்ய தேசங்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்த ஆலயம், மலைக் குன்றின் மீது அமைந்திருக்கிறது. மலையின் அடிவாரத்திலும் சிறிய கோவில் உள்ளது. இங்கு நீர்வண்ணப்பெருமாள் வீற்றிருக்கிறார். மலையின் மீதுள்ள ஆலயத்தில் ரங்க நாதர் அருளாட்சி செய்கிறார். கோவிலுக்கு எதிரே ஒரு தீர்த்தக்குளம் அமைந்துள்ளது.
மருந்தீஸ்வரர் கோவில்: சென்னை, திருவான்மியூர் பகுதியில் அமைந்திருக்கிறது இந்தத் திருக்கோவில். இங்கு மூலவராக சிவபெருமான் வீற்றிருக்கிறார். நோய்களை தீர்க்கும் சக்தி படைத்தவர் என்பதால், இவருக்கு ‘மருந்தீஸ்வரர்’ என்று பெயர். அதோடு, அகத்திய முனிவருக்கு, தெய்வீக மருந்து முறைகளை உபதேசம் செய்ததாலும், இவருக்கு இப்பெயர் வந்தது. தேவாரப் பாடல்கள் பெற்ற 274 திருக்கோவில்களில் இந்த ஆலயமும் ஒன்று. இந்தக் கோவில் அமைந்த சாலை, அந்த காலத்தில் சோழ நாட்டை, பல்லவ நாட்டோடும், ஆந்திராவில் ஆட்சி செய்த சில ராஜ்ஜியங்களோடும் இணைக்கும் முக்கிய சாலையாக விளங்கியதாக சொல்லப்படுகிறது.
ஜெகந்நாதர் கோவில்: சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் இருந்து விலகி, ரெட்டிக்குப்பம் சாலையில் கானாத்தூர் என்ற இடத்தில் இந்தக் கோவில் இருக்கிறது. ஒடிசாவில் உள்ள பூரிஜெகந்நாதர் கோவிலை போன்ற வடிவமைப்பிலேயே இந்தக் கோவில் அமைக்கப்பட்டிருக்கிறது. பூரி ஜெகந்நாதர் கோவிலில் உள்ளதுபோலவே, இங்கும் ஜெகந்நாதர், பலராமர் மற்றும் சுபத்ரா தேவி ஆகியோரை தரிசிக்க முடியும். தெய்வங்களின் சிலைகளும், பூரியில் உள்ளது போலவே மரத்தால் செய்யப்பட்டவைதான். இதற்காக வேப்ப மரத் துண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பிரதான தெய்வங்களைத் தவிர யோக நரசிம்மர், விநாயகர், விமலாதேவி மற்றும் கஜலட்சுமி ஆகியோருக்கும் சன்னிதிகள் அமைந்துள்ளன. இந்த ஆலயம் வெண் சலவைக் கற்களாலும், கருப்புப் பளிங்கு கற்களாலும் கட்டப்பட்டுள்ளது. பளிங்கு கருங்கல் காஞ்சிபுரத்தில் இருந்தும், வெள்ளை சலவைக் கல் ராஜஸ்தானில் இருந்தும் வரவழைக்கப்பட்டுள்ளன.
தேவி கருமாரியம்மன்: சென்னை புறநகர் பகுதியில் மேற்கு பக்கத்தில் உள்ளது திருவேற்காடு கருமாரியம்மன் கோவில். புராண காலத்தில் இந்தப் பகுதியில் மருத்துவக் குணம் மிகுந்த மூலிகை வனம் இருந்ததாக சொல்லப்படுகிறது. தெய்வீக மூலிகை (வேர்) நிறைந்த வனம் என்பதால், இந்த பகுதி ‘திருவேற்காடு’ என்று பெயர் பெற்றதாக கூறுகிறார்கள். இந்த ஆலய அம்மன், குறி சொல்லும் பெண் வேடத்தில் சூரிய பகவானை பார்க்க அவரது இருப்பிடம் சென்றாள். ஆனால் அன்னையை அடையாளம் கண்டுகொள்ளாத சூரியபகவான், அவளுக்கு உரிய மரியாதை தராததோடு, அவமரியாதையும் செய்தான். இதையடுத்து சூரியனின் இடத்தில் இருந்து அன்னை புறப்பட்ட மறுநொடி, சூரியன் தன்னுடைய ஒளியை இழந்தான். இதனால் உலக உயிர்களும் துன்பத்தில் துவண்டன. தன் தவறை உணர்ந்த சூரியன், அன்னையிடம் மன்னிப்பு கோரினான் என்று தல வரலாறு சொல்கிறது. இதனால் சூரிய பகவானுக்கு உரிய ஞாயிற்றுக்கிழமையில் இந்த ஆலயத்தில் அருளும் கருமாரியம்மனுக்கு, சிறப்பு பூஜைகள் செய்யப்படு கின்றன.
சுப்பிரமணியர் ஆலயம்: சென்னையை அடுத்துள்ளது, பழமையும் பெருமையும் வாய்ந்த குன்றத்தூர். பல்லாவரத்தில் இருந்து மேற்கே 8 கிலோமீட்டர் தொலைவில்இந்த ஊர் இருக்கிறது. இங்குள்ள முருகன் கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். சிறிய குன்றின் மீது அமைந்திருக்கும் இந்த ஆலயத்தில் உள்ள மூலவர், வடக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்கிறார். இந்த ஆலயம், இரண்டாம் குலோத்துங்கச் சோழனால் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. பெரிய புராணம் என்னும் 63 நாயன்மார்களின் வரலாற்றை எழுதிய சேக்கிழார் அவதரித்த தலமாக குன்றத்தூர் குறிப்பிடப்படுகிறது.
ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமிக்கு சகஸ்ர தீப அலங்கார சேவை நடந்தது. பின்னர் உற்சவர்கள் கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் காலை தீபாவளி ஆஸ்தானம் நடந்தது. கோவில் தங்க வாசலில் உள்ள மணி மண்டபத்தில் கருடாழ்வார் சன்னதியில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி, விஸ்வக்சேனர் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் வைக்கப்பட்டனர். அதேபோல் மூலவர் ஏழுமலையானுக்கு புதிய பட்டு வஸ்திரம் அணிவிக்கப்பட்டு சிறப்புப்பூஜைகள் செய்து, ஆரத்தி காண்பித்து தீபாவளி ஆஸ்தானம் நடத்தப்பட்டது.
அதைத்தொடர்ந்து மாலை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமிக்கு சகஸ்ர தீப அலங்கார சேவை நடந்தது. பின்னர் உற்சவர்கள் கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
தீபாவளி ஆஸ்தானத்தில் பெரியஜீயர், சின்னஜீயர், தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் கே.எஸ். ஜவஹர்ரெட்டி, பாதுகாப்பு மற்றும் பறக்கும் படை துறை அதிகாரி கோபிநாத்ஜாட்டி, கோவில் துணை அதிகாரி ரமேஷ்பாபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அதேபோல் திருப்பதி கோவிந்தராஜசாமி, கோதண்டராமசாமி கோவில்களில் தீபாவளி ஆஸ்தானம் நடந்தது.
அதைத்தொடர்ந்து மாலை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமிக்கு சகஸ்ர தீப அலங்கார சேவை நடந்தது. பின்னர் உற்சவர்கள் கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
தீபாவளி ஆஸ்தானத்தில் பெரியஜீயர், சின்னஜீயர், தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் கே.எஸ். ஜவஹர்ரெட்டி, பாதுகாப்பு மற்றும் பறக்கும் படை துறை அதிகாரி கோபிநாத்ஜாட்டி, கோவில் துணை அதிகாரி ரமேஷ்பாபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அதேபோல் திருப்பதி கோவிந்தராஜசாமி, கோதண்டராமசாமி கோவில்களில் தீபாவளி ஆஸ்தானம் நடந்தது.
கந்தசஷ்டி திருவிழாவையொட்டி சோலைமலை கோவிலில் காமதேனு வாகனத்தில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அழகர்மலை உச்சியில் உள்ளது முருகப்பெருமானின் ஆறாவது படைவீடு சோலைமலை முருகன் கோவிலாகும். இங்கு நடைபெறும் திருவிழாவில் ஐப்பசி மாதம் நடக்கும் கந்த சஷ்டி பெருந்திருவிழா முக்கியமானது ஆகும். இந்த விழாவானது கடந்த 4-ந்தேதி காலையில் தொடங்கியது. விழாவில் சண்முகார்ச்சனையும், அன்னவாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடந்தது.
நேற்று 2-ம் திருநாள். இதையொட்டி நேற்று காலையில் வழக்கம் போல் பூஜைகளும், பால், பழம், பன்னீர், விபூதி, சந்தனம், தீர்த்தம், உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள், அலங்காரம், சர விளக்கு தீபாராதனைகள் நடந்தது.
தொடர்ந்து மேளதாளம் முழங்க காமதேனு வாகனத்தில் உற்சவர் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளி, மூலவர் சன்னதி வெளி பிரகாரத்தில் வலம் வந்தது. அரசு வழிகாட்டுதல்படி பக்தர்கள் கலந்து கொண்டு நெய் விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக மூலவர் சுவாமிக்கும் வேல் சன்னதியிலும், வித்தக விநாயகருக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது.
இன்று 6-தேதி 3-ம் திருவிழா யானை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும்.நாளை 7-ம் தேதி 4-ம் திருநாள் ஆட்டுக்கிடாய் வாகனத்தில் சுவாமி புறப்பாடு, 8-ந் தேதி 5-ம் திருநாள் சப்பர வாகனத்தில் புறப்பாடு நடக்கிறது.
9-ந் தேதி 6-ம் திருநாள், காலையில் குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடும், மாலையில் 4.30 மணிக்கு வேல் வாங்குதல், 5.30 மணிக்கு சூரசம்ஹார நிகழ்வும் நடைபெற உள்ளது.
10-ந் தேதி 7-ம் திருவிழா அன்று காலையில் திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். பின்னர் ஊஞ்சல் சேவை, மஞ்சள் நீர் உற்சவம் நடைபெறும். கந்தசஷ்டி விழாவையொட்டி தினமும் காலை, மாலை 2 வேளைகளிலும் சண்முகார்ச்சனை நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் அனிதா, மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.
நேற்று 2-ம் திருநாள். இதையொட்டி நேற்று காலையில் வழக்கம் போல் பூஜைகளும், பால், பழம், பன்னீர், விபூதி, சந்தனம், தீர்த்தம், உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள், அலங்காரம், சர விளக்கு தீபாராதனைகள் நடந்தது.
தொடர்ந்து மேளதாளம் முழங்க காமதேனு வாகனத்தில் உற்சவர் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளி, மூலவர் சன்னதி வெளி பிரகாரத்தில் வலம் வந்தது. அரசு வழிகாட்டுதல்படி பக்தர்கள் கலந்து கொண்டு நெய் விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக மூலவர் சுவாமிக்கும் வேல் சன்னதியிலும், வித்தக விநாயகருக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது.
இன்று 6-தேதி 3-ம் திருவிழா யானை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும்.நாளை 7-ம் தேதி 4-ம் திருநாள் ஆட்டுக்கிடாய் வாகனத்தில் சுவாமி புறப்பாடு, 8-ந் தேதி 5-ம் திருநாள் சப்பர வாகனத்தில் புறப்பாடு நடக்கிறது.
9-ந் தேதி 6-ம் திருநாள், காலையில் குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடும், மாலையில் 4.30 மணிக்கு வேல் வாங்குதல், 5.30 மணிக்கு சூரசம்ஹார நிகழ்வும் நடைபெற உள்ளது.
10-ந் தேதி 7-ம் திருவிழா அன்று காலையில் திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். பின்னர் ஊஞ்சல் சேவை, மஞ்சள் நீர் உற்சவம் நடைபெறும். கந்தசஷ்டி விழாவையொட்டி தினமும் காலை, மாலை 2 வேளைகளிலும் சண்முகார்ச்சனை நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் அனிதா, மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.
உங்கள் ஜெபமானது, உங்களை பரலோகத்தோடு இணைக்கிறது. பரலோகம் என்பது, ஒளிமயமான மகிமையின் தேசம். அங்கே இருளோ, இரவோ இருப்பதில்லை.
“அவர் (இயேசு கிறிஸ்து) முகம் சூரியனைப் போல பிரகாசித்தது, அவர் வஸ்திரம் வெளிச்சத்தைப் போல, வெண்மையாயிற்று” (மத். 17:2).
இயேசு, ஜெபம் பண்ணுகையில் மறுரூபமானார். ஒருவர் எழும்பிப் பிரகாசிப்பதற்கு, ஜெபம் மிக முக்கியமானது. இயேசு ஜெபத்தை, தன்னுடைய மூச்சாக, இருதயத்துடிப்பாக வைத்திருந்தார். எப்பொழுதும் அவர் ஜெபிக்க வேண்டும், பிதாவோடு உறவாட வேண்டும் என்ற எண்ணமுடையவராகவே இருந்திருக்கக்கூடும். ஆகவே, அவர் அதிகாலையில் வனாந்தரமான ஓர் இடத்துக்குச் சென்று ஜெபம் பண்ணினார் (மாற். 1:35). இரவு நேரங்களில் ஒரு மலையின் மேல் ஏறி, இரா முழுவதும் ஜெபித்தார் (லூக். 6:12).
ஒரு மனுஷனுடைய ஜெப ஜீவியம், அவனுடைய உள்ளத்தைப் பிரகாசிக்கச் செய்கிறது. இரண்டாவது, அவனுடைய குடும்பத்தைப் பிரகாசிக்கச் செய்கிறது. மூன்றாவது, அவனுடைய ஊழியத்தைப் பிரகாசிக்கச் செய்கிறது. “இயேசு ஜெபம் பண்ணுகையில், அவருடைய முகரூபம் மாறிற்று. அவருடைய வஸ்திரம் வெண்மையாகிப் பிரகாசித்தது” (லூக். 9:29).
இயேசு ஞானஸ்நானம் பெற்று, கரையேறினவுடனே வானம் அவருக்குத் திறக்கப்பட்டது (மத். 3:16). கெத்செமனேயில் ஜெபித்தபோது தேவதூதன் இறங்கி, அவரைப் பலப்படுத்தினான் (லூக். 22:43). இயேசு இரவெல்லாம் ஜெபம் பண்ணி, சீஷர்களை தமக்கென்று தெரிந்தெடுத்தார். ஜெபம் பண்ணி, ஐந்து அப்பத்தையும், இரண்டு மீனையும் ஐயாயிரம் பேருக்குப் போஷித்தார். நீங்கள் எழும்பிப் பிரகாசிக்க வேண்டுமானால், உங்கள் ஜெப நேரத்தை அதிகப்படுத்துங்கள்.
ஜெபத்தினால் கொரியாவிலுள்ள, போதகர் பால் யாங்கி சோவின் சபையில், பெரும் எழுப்புதல் ஏற்பட்டது, பத்து லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள், சபையிலே சேர்ந்தார்கள். அவர் சொன்னார், எழுப்புதலுக்கு மூன்று காரணங்கள் உண்டு. “முதலாவது, ஜெபம், இரண்டாவது, ஜெபம். மூன்றாவது, ஜெபம்” என்றார்.
ஜான் வெஸ்லி என்ற பக்தன், எழும்பிப் பிரகாசித்ததன் முக்கிய காரணம், அவருடைய ஜெப ஜீவியம்தான். அவர் நற்செய்தி கூட்டங்களில் பேசப் போவதற்கு முன்பாக இரண்டு, மூன்று நாட்கள், தன் அறைக்கதவை மூடிக்கொண்டு, கண்ணீரோடும், பெருமூச்சோடும், பலத்த சத்தத்தோடும் ஜெபம் பண்ணுவார். அப்பொழுது அவருடைய ஒவ்வொரு வார்த்தையும், அக்கினியாய் வெளிவரும். ஜனங்கள் இருதயத்தில் குத்தப்பட்டவர்களாய் தங்களை ஒப்புக்கொடுப்பார்கள்.
உங்களுடைய ஜெப நேரத்தில் கல்வாரிச் சிலுவையை அதிகமாய் தியானம் செய்யுங்கள். வேதம் சொல்லுகிறது, “அவர்கள் அவரை நோக்கிப் பார்த்துப் பிரகாசமடைந்தார்கள். அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை” (சங். 34:5). உங்கள் ஜெபமானது, உங்களை பரலோகத்தோடு இணைக்கிறது. பரலோகம் என்பது, ஒளிமயமான மகிமையின் தேசம். அங்கே இருளோ, இரவோ இருப்பதில்லை.
பேதுரு, சிறையில் அடைக்கப்பட்டிருக்கும்போது, சபையார் பரலோக தேவனை நோக்கி முறையிட்டார்கள். அப்பொழுது கர்த்தருடைய தூதன் அங்கே வந்து நின்றான். அறையிலே வெளிச்சம் பிரகாசித்தது. அவன் பேதுருவை விலாவிலே தட்டி, சீக்கிரமாய் எழுந்திரு என்று, அவனை எழுப்பினான். பேதுரு விடுதலையடைந்தார். சத்துருவின் சங்கிலிகள் அறுபட்டுப்போகும்படி, ஜெபியுங்கள்.
நினைவிற்கு:- “இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின் மேல் வெளிச்சம் பிரகாசித்தது” (ஏசா. 9:2).
இயேசு, ஜெபம் பண்ணுகையில் மறுரூபமானார். ஒருவர் எழும்பிப் பிரகாசிப்பதற்கு, ஜெபம் மிக முக்கியமானது. இயேசு ஜெபத்தை, தன்னுடைய மூச்சாக, இருதயத்துடிப்பாக வைத்திருந்தார். எப்பொழுதும் அவர் ஜெபிக்க வேண்டும், பிதாவோடு உறவாட வேண்டும் என்ற எண்ணமுடையவராகவே இருந்திருக்கக்கூடும். ஆகவே, அவர் அதிகாலையில் வனாந்தரமான ஓர் இடத்துக்குச் சென்று ஜெபம் பண்ணினார் (மாற். 1:35). இரவு நேரங்களில் ஒரு மலையின் மேல் ஏறி, இரா முழுவதும் ஜெபித்தார் (லூக். 6:12).
ஒரு மனுஷனுடைய ஜெப ஜீவியம், அவனுடைய உள்ளத்தைப் பிரகாசிக்கச் செய்கிறது. இரண்டாவது, அவனுடைய குடும்பத்தைப் பிரகாசிக்கச் செய்கிறது. மூன்றாவது, அவனுடைய ஊழியத்தைப் பிரகாசிக்கச் செய்கிறது. “இயேசு ஜெபம் பண்ணுகையில், அவருடைய முகரூபம் மாறிற்று. அவருடைய வஸ்திரம் வெண்மையாகிப் பிரகாசித்தது” (லூக். 9:29).
இயேசு ஞானஸ்நானம் பெற்று, கரையேறினவுடனே வானம் அவருக்குத் திறக்கப்பட்டது (மத். 3:16). கெத்செமனேயில் ஜெபித்தபோது தேவதூதன் இறங்கி, அவரைப் பலப்படுத்தினான் (லூக். 22:43). இயேசு இரவெல்லாம் ஜெபம் பண்ணி, சீஷர்களை தமக்கென்று தெரிந்தெடுத்தார். ஜெபம் பண்ணி, ஐந்து அப்பத்தையும், இரண்டு மீனையும் ஐயாயிரம் பேருக்குப் போஷித்தார். நீங்கள் எழும்பிப் பிரகாசிக்க வேண்டுமானால், உங்கள் ஜெப நேரத்தை அதிகப்படுத்துங்கள்.
ஜெபத்தினால் கொரியாவிலுள்ள, போதகர் பால் யாங்கி சோவின் சபையில், பெரும் எழுப்புதல் ஏற்பட்டது, பத்து லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள், சபையிலே சேர்ந்தார்கள். அவர் சொன்னார், எழுப்புதலுக்கு மூன்று காரணங்கள் உண்டு. “முதலாவது, ஜெபம், இரண்டாவது, ஜெபம். மூன்றாவது, ஜெபம்” என்றார்.
ஜான் வெஸ்லி என்ற பக்தன், எழும்பிப் பிரகாசித்ததன் முக்கிய காரணம், அவருடைய ஜெப ஜீவியம்தான். அவர் நற்செய்தி கூட்டங்களில் பேசப் போவதற்கு முன்பாக இரண்டு, மூன்று நாட்கள், தன் அறைக்கதவை மூடிக்கொண்டு, கண்ணீரோடும், பெருமூச்சோடும், பலத்த சத்தத்தோடும் ஜெபம் பண்ணுவார். அப்பொழுது அவருடைய ஒவ்வொரு வார்த்தையும், அக்கினியாய் வெளிவரும். ஜனங்கள் இருதயத்தில் குத்தப்பட்டவர்களாய் தங்களை ஒப்புக்கொடுப்பார்கள்.
உங்களுடைய ஜெப நேரத்தில் கல்வாரிச் சிலுவையை அதிகமாய் தியானம் செய்யுங்கள். வேதம் சொல்லுகிறது, “அவர்கள் அவரை நோக்கிப் பார்த்துப் பிரகாசமடைந்தார்கள். அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை” (சங். 34:5). உங்கள் ஜெபமானது, உங்களை பரலோகத்தோடு இணைக்கிறது. பரலோகம் என்பது, ஒளிமயமான மகிமையின் தேசம். அங்கே இருளோ, இரவோ இருப்பதில்லை.
பேதுரு, சிறையில் அடைக்கப்பட்டிருக்கும்போது, சபையார் பரலோக தேவனை நோக்கி முறையிட்டார்கள். அப்பொழுது கர்த்தருடைய தூதன் அங்கே வந்து நின்றான். அறையிலே வெளிச்சம் பிரகாசித்தது. அவன் பேதுருவை விலாவிலே தட்டி, சீக்கிரமாய் எழுந்திரு என்று, அவனை எழுப்பினான். பேதுரு விடுதலையடைந்தார். சத்துருவின் சங்கிலிகள் அறுபட்டுப்போகும்படி, ஜெபியுங்கள்.
நினைவிற்கு:- “இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின் மேல் வெளிச்சம் பிரகாசித்தது” (ஏசா. 9:2).
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய இணையதளத்தில் இன்று முதல் முன்பதிவு செய்யலாம் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான தீபத் திருவிழா வருகிற 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று காலை 6 மணி முதல் 7.30 மணிக்கு கோவில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து 10 நாட்கள் தீபத் திருவிழா உற்சவம் நடைபெறும். விழாவின் உச்ச நிகழ்ச்சியாக வருகிற 19-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு அருணாசலேஸ்வரர் கோவிலில் பரணி தீபமும், அன்று மாலை 6 மணிக்கு கோவில் பின்புறம் உள்ள 2668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.
இந்த நிலையில் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக அதிகளவு மக்கள் கூடும் திருவிழாக்களை நடத்த அரசு கட்டுப்பாடுகள் விதித்து உள்ளது. அதன்படி திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் மாவட்ட நிர்வாகம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அருணாசலேஸ்வரர் கோவிலில் 7-ந் தேதி (நாளை) முதல் தினமும் 13 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை நடை திறக்கப்பட்டு அனுமதி அளிக்கப்படும். தரிசன அனுமதி 7-ந் தேதி முதல் 17-ந் தேதி வரையும், 21-ந் தேதி முதல் 23-ந் தேதி வரையும் நடைபெற உள்ளது. இதையொட்டி இ-பாஸ் பெறுவதற்கான ஆன்லைனில் முன்பதிவு செய்ய இணையதளம் இன்று (சனிக்கிழமை) முதல் செயல்படத் தொடங்குகிறது.
அதனால் பக்தர்கள் www.arunachaleswarartemple.tnhrce.in மற்றும் www.tnhrce.gov.in இணைய தளங்களில் தரிசனம் செய்ய விரும்பும் நாள், நேரம், ஆகியவற்றை தேர்வுசெய்து இ-பாஸ் பெறலாம். அப்போது ஆதார் எண், முகவரி, செல்போன் எண், இரண்டு தவணை கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்டதற்கான ஆவணம் போன்றவற்றை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு 30 சதவீதமும், வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு 70 சதவீதமும் அனுமதி வழங்கப்படும்.
இந்த நிலையில் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக அதிகளவு மக்கள் கூடும் திருவிழாக்களை நடத்த அரசு கட்டுப்பாடுகள் விதித்து உள்ளது. அதன்படி திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் மாவட்ட நிர்வாகம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அருணாசலேஸ்வரர் கோவிலில் 7-ந் தேதி (நாளை) முதல் தினமும் 13 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை நடை திறக்கப்பட்டு அனுமதி அளிக்கப்படும். தரிசன அனுமதி 7-ந் தேதி முதல் 17-ந் தேதி வரையும், 21-ந் தேதி முதல் 23-ந் தேதி வரையும் நடைபெற உள்ளது. இதையொட்டி இ-பாஸ் பெறுவதற்கான ஆன்லைனில் முன்பதிவு செய்ய இணையதளம் இன்று (சனிக்கிழமை) முதல் செயல்படத் தொடங்குகிறது.
அதனால் பக்தர்கள் www.arunachaleswarartemple.tnhrce.in மற்றும் www.tnhrce.gov.in இணைய தளங்களில் தரிசனம் செய்ய விரும்பும் நாள், நேரம், ஆகியவற்றை தேர்வுசெய்து இ-பாஸ் பெறலாம். அப்போது ஆதார் எண், முகவரி, செல்போன் எண், இரண்டு தவணை கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்டதற்கான ஆவணம் போன்றவற்றை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு 30 சதவீதமும், வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு 70 சதவீதமும் அனுமதி வழங்கப்படும்.
இந்த தகவலை அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
இதையும் படிக்கலாம்...கந்த சஷ்டி விரதத்தின் போது சொல்ல வேண்டிய திருப்புகழ்
திருப்பரங்குன்றம் கோவிலில் கந்த சஷ்டி திருவிழாவையொட்டி தினமும் 2முறை சண்முகப்பெருமானுக்கு 6 வித படையலுடன் சண்முகார்ச்சனை நடக்கிறது. 9-ந்தேதி சூரசம்ஹாரம் நடக்கிறது.
தமிழ் கடவுள் முருகப்பெருமான் குடிகொண்டு அருளாட்சி புரியும் அறுபடை வீடுகளில் முதல் படை வீடு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில். இங்கு கொண்டாடப்படும் திருவிழாக்களில் கந்தசஷ்டி திருவிழா மிகவும் முக்கிய வாய்ந்ததாகும்.
இந்த திருவிழாவில் மட்டும் தான் சுவாமிக்கும், பக்தர்களுக்கும் காப்புக்கட்டுதல் நடைபெறும்.காப்புகட்டும் பக்தர்கள் மிளகு, துளசி, பால் ஆகியவை ஒருவேளை மட்டுமே சாப்பிட்டு கடும் விரதம் இருப்பார்கள்.மேலும் பக்தர்கள் அனைவரும் கோவிலிலேயே 7 நாட்களும் தங்கி இருந்து இருவேளை சரவண பொய்கையில் நீராடி, கிரிவலம் வந்து முருகப்பெருமானை தரிசனம் செய்வார்கள்.
ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் 2-வது ஆண்டாக பக்தர்கள் காப்பு கட்டுவதற்கும், கோவிலில் தங்கி இருந்து கடும் விரதம் இருப்பதற்கும் அனுமதி தவிர்க்கப்பட்டுள்ளது. ஆகவே நேற்று முன்தினம் காப்பு கட்டுதலுடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது.
அதில் மேளதாளங்கள் முழங்க உற்சவர் சன்னதியில் தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமிக்கு காப்பு கட்டுதல் நடந்தது. இதனையடுத்து சண்முகர் சன்னதியில் மேளதாளங்கள் முழங்க தெய்வானை, வள்ளி சமேத சண்முகப் பெருமானுக்கு காப்பு கட்டுதல் நடந்தது. இதனை தொடர்ந்து முருகப்பெருமானின் பிரதியான நம்பி பட்டருக்கு காப்பு கட்டுதல் நடந்தது.
கந்தசஷ்டி திருவிழாவின் சிறப்பு அம்சமாக சண்முகப் பெருமானுக்கு தினமும் காலை 11 மணியளவில், மாலை 5 மணியளவிலும் சண்முகார்ச்சனை நடைபெறும். ஒரே வேளையில் எலுமிச்ச பழசாதம், புளியோதரை சாதம், தேங்காய் சாதம், வெண்பொங்கல் சாதம், வடை சாதம், பால்சாதம் ஆகிய 6 விதமான சாதங்கள் படைத்து சாமிக்கு படையல் செய்யப்பட்டது. மேலும் 6 சிவாச்சாரியர்கள் சுவாமிக்கு மலர்கள் தூவி அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
இந்த நிகழ்வின்போது தரிசனத்திற்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.இதேசமயம் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற 8-ந்தேதி வேல்வாங்குதலும், 9-ந்தேதி சூரசம்காரமும், 10-ந்தேதி பாவாடை தரிசனமும் நடக்கிறது.
இந்த திருவிழாவில் மட்டும் தான் சுவாமிக்கும், பக்தர்களுக்கும் காப்புக்கட்டுதல் நடைபெறும்.காப்புகட்டும் பக்தர்கள் மிளகு, துளசி, பால் ஆகியவை ஒருவேளை மட்டுமே சாப்பிட்டு கடும் விரதம் இருப்பார்கள்.மேலும் பக்தர்கள் அனைவரும் கோவிலிலேயே 7 நாட்களும் தங்கி இருந்து இருவேளை சரவண பொய்கையில் நீராடி, கிரிவலம் வந்து முருகப்பெருமானை தரிசனம் செய்வார்கள்.
ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் 2-வது ஆண்டாக பக்தர்கள் காப்பு கட்டுவதற்கும், கோவிலில் தங்கி இருந்து கடும் விரதம் இருப்பதற்கும் அனுமதி தவிர்க்கப்பட்டுள்ளது. ஆகவே நேற்று முன்தினம் காப்பு கட்டுதலுடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது.
அதில் மேளதாளங்கள் முழங்க உற்சவர் சன்னதியில் தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமிக்கு காப்பு கட்டுதல் நடந்தது. இதனையடுத்து சண்முகர் சன்னதியில் மேளதாளங்கள் முழங்க தெய்வானை, வள்ளி சமேத சண்முகப் பெருமானுக்கு காப்பு கட்டுதல் நடந்தது. இதனை தொடர்ந்து முருகப்பெருமானின் பிரதியான நம்பி பட்டருக்கு காப்பு கட்டுதல் நடந்தது.
கந்தசஷ்டி திருவிழாவின் சிறப்பு அம்சமாக சண்முகப் பெருமானுக்கு தினமும் காலை 11 மணியளவில், மாலை 5 மணியளவிலும் சண்முகார்ச்சனை நடைபெறும். ஒரே வேளையில் எலுமிச்ச பழசாதம், புளியோதரை சாதம், தேங்காய் சாதம், வெண்பொங்கல் சாதம், வடை சாதம், பால்சாதம் ஆகிய 6 விதமான சாதங்கள் படைத்து சாமிக்கு படையல் செய்யப்பட்டது. மேலும் 6 சிவாச்சாரியர்கள் சுவாமிக்கு மலர்கள் தூவி அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
இந்த நிகழ்வின்போது தரிசனத்திற்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.இதேசமயம் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற 8-ந்தேதி வேல்வாங்குதலும், 9-ந்தேதி சூரசம்காரமும், 10-ந்தேதி பாவாடை தரிசனமும் நடக்கிறது.
குழந்தை வரம் வேண்டுபவர்கள், திருமணம் தடைப்படுபவர்கள் கந்த சஷ்டி விரதத்தை அனுஷ்டிக்கும் போது சொல்ல வேண்டிய திருப்புகழை பார்க்கலாம்.
செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த
திருமாது கெர்ப்ப... முடலூறித்
தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில்
திரமாய ளித்த ... பொருளாகி
மகவாவி னுச்சி விழியாந நத்தில்
மலைநேர்பு யத்தி... லுறவாடி
மடிமீத டுத்து விளையாடி நித்த
மணிவாயின் முத்தி... தரவேணும்
முகமாய மிட்ட குறமாதி னுக்கு
முலைமேல ணைக்க... வருநீதா
முதுமாம றைக்கு ளொருமாபொ ருட்குள்
மொழியேயு ரைத்த... குருநாதா
தகையாதெ னக்கு னடிகாண வைத்த
தனியேர கத்தின்... முருகோனே
தருகாவி ரிக்கு வடபாரி சத்தில்
சமர்வேலெ டுத்த... பெருமாளே.
இந்த திருப்புகழ் பாடல் உண்டு. இந்த சுவாமி மலை பாராயணம் செய்யலாம்.
திருமாது கெர்ப்ப... முடலூறித்
தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில்
திரமாய ளித்த ... பொருளாகி
மகவாவி னுச்சி விழியாந நத்தில்
மலைநேர்பு யத்தி... லுறவாடி
மடிமீத டுத்து விளையாடி நித்த
மணிவாயின் முத்தி... தரவேணும்
முகமாய மிட்ட குறமாதி னுக்கு
முலைமேல ணைக்க... வருநீதா
முதுமாம றைக்கு ளொருமாபொ ருட்குள்
மொழியேயு ரைத்த... குருநாதா
தகையாதெ னக்கு னடிகாண வைத்த
தனியேர கத்தின்... முருகோனே
தருகாவி ரிக்கு வடபாரி சத்தில்
சமர்வேலெ டுத்த... பெருமாளே.
இந்த திருப்புகழ் பாடல் உண்டு. இந்த சுவாமி மலை பாராயணம் செய்யலாம்.
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் நேற்று இரவில் சுவாமி, அம்பாள் ரிஷப வாகனங்களில் அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் மறுவீடு பட்டினப்பிரவேச வீதி உலா நடந்தது.
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் நடைபெறுகின்ற திருவிழாக்களில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். நேற்று இரவில் சுவாமி, அம்பாள் ரிஷப வாகனங்களில் அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் மறுவீடு பட்டினப்பிரவேச வீதி உலா நடந்தது.
இந்த வீதி உலா நெல்லை டவுன் 4 ரத வீதிகளிலும் நடந்தது. இதனால் போலீசார் போக்குவரத்தை மாற்றிவிட்டனர்.
இந்த வீதி உலா நெல்லை டவுன் 4 ரத வீதிகளிலும் நடந்தது. இதனால் போலீசார் போக்குவரத்தை மாற்றிவிட்டனர்.
ரதயாத்திரையில் வந்த துறவியர் மற்றும் சன்னியாசிகள் காவிரித்தாய் சிலைக்கு அம்மா மண்டபம் படித்துறை அருகே அபிஷேக, ஆராதனையுடன் கூட்டு வழிபாடு நடத்தினர்.
அகில பாரதீய சன்னியாசிகள் சங்கம் மற்றும் அன்னை காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் துலா மாதம் எனப்படும் ஐப்பசி மாதத்தில் புனித நதியான காவிரி உற்பத்தியாகும் கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் தலைக்காவிரியில் தொடங்கி காவிரியாறு வங்கக்கடலில் கலக்கும் பூம்புகார் வரை நதிநீரின் புனிதத்தை பாதுகாக்க வலியுறுத்தியும், நதிநீர் மாசுபடாமல் பாதுகாக்க வலியுறுத்தியும் சிறப்பு ரத யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது.
இதன்படி 11-ம் ஆண்டு ரதயாத்திரை, குடகுமலையில் அகில பாரத சன்னியாசிகள் சங்க நிறுவனர் மற்றும் துணைத்தலைவர் சுவாமி ராமானந்தா தலைமையில் கடந்த 23-ந்தேதி தொடங்கியது. நேற்று மாலை ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்திற்கு வந்த காவிரி ரதயாத்திரைக்கு விசுவ இந்து பரிஷத் மாநில அமைப்பு செயலாளர் சேதுராமன், பா.ஜ.க. மாநகர் மாவட்ட தலைவர் புவனேஸ்வரி மற்றும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் மேளதாளம், வாணவேடிக்கை முழங்க பூரணகும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து ரதயாத்திரையில் வந்த துறவியர் மற்றும் சன்னியாசிகள் காவிரித்தாய் சிலைக்கு அம்மா மண்டபம் படித்துறை அருகே அபிஷேக, ஆராதனையுடன் கூட்டு வழிபாடு நடத்தினர்.
இதைத்தொடர்ந்து காவிரித்தாய்க்கு மகா ஆரத்தி நடந்தது. இந்நிகழ்ச்சியில் மன்னார்குடி செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர், காவிரி யாத்திரை ஒருங்கிணைப்பாளர் ஜெகநாதானந்த சரஸ்வதி, வித்யாம்பா சரஸ்வதி மாதாஜீ, அறங்காவலர் கண்ணன் உள்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த காவிரி ரதயாத்திரை திருக்காட்டுப்பள்ளி, திருவையாறு, கும்பகோணம், மயிலாடுதுறை வழியாக வருகிற 11-ந் தேதி பூம்புகாரில் நிறைவடைகிறது.
இதன்படி 11-ம் ஆண்டு ரதயாத்திரை, குடகுமலையில் அகில பாரத சன்னியாசிகள் சங்க நிறுவனர் மற்றும் துணைத்தலைவர் சுவாமி ராமானந்தா தலைமையில் கடந்த 23-ந்தேதி தொடங்கியது. நேற்று மாலை ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்திற்கு வந்த காவிரி ரதயாத்திரைக்கு விசுவ இந்து பரிஷத் மாநில அமைப்பு செயலாளர் சேதுராமன், பா.ஜ.க. மாநகர் மாவட்ட தலைவர் புவனேஸ்வரி மற்றும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் மேளதாளம், வாணவேடிக்கை முழங்க பூரணகும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து ரதயாத்திரையில் வந்த துறவியர் மற்றும் சன்னியாசிகள் காவிரித்தாய் சிலைக்கு அம்மா மண்டபம் படித்துறை அருகே அபிஷேக, ஆராதனையுடன் கூட்டு வழிபாடு நடத்தினர்.
இதைத்தொடர்ந்து காவிரித்தாய்க்கு மகா ஆரத்தி நடந்தது. இந்நிகழ்ச்சியில் மன்னார்குடி செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர், காவிரி யாத்திரை ஒருங்கிணைப்பாளர் ஜெகநாதானந்த சரஸ்வதி, வித்யாம்பா சரஸ்வதி மாதாஜீ, அறங்காவலர் கண்ணன் உள்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த காவிரி ரதயாத்திரை திருக்காட்டுப்பள்ளி, திருவையாறு, கும்பகோணம், மயிலாடுதுறை வழியாக வருகிற 11-ந் தேதி பூம்புகாரில் நிறைவடைகிறது.
கோவை மருதமலை முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா தொடங்கியது. இதையொட்டி விரதம் இருக்கும் பக்தர்கள் ஏராளமானவர்கள் காப்பு கட்டினர்.
கோவையை அடுத்த வடவள்ளியில் மருதமலை முருகன் கோவிலில் அமைந்துள்ளது. இந்த கோவில் பக்தர்களால் முருகனின் ஏழாம் படை வீடாக போற்றப்படுகிறது. இங்கு ஆண்டு தோறும், கந்தசஷ்டி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு கந்தசஷ்டி விழா நேற்று தொடங்கியது. அதிகாலை 5 மணிக்கு கோ-பூஜையும், அதனைத்தொடர்ந்து 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. இதையடுத்து பால், பன்னீர், மஞ்சள், ஜவ்வாது போன்ற 16 வகையான வாசனை திரவியங்களால் மூலவருக்கு அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் மலர் அலங்காரத்தில் சிறப்பு தோற்றத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். காலை 7.30 மணிக்கு விநாயகர் பூஜை, விழா நடைபெற இறை அனுமதி பெறுதல், மண் எடுத்தல், முளைப்பாலிகை இடுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது.
இதை தொடர்ந்து கருவறையை அடுத்துள்ள மகாமண்டபத்தில் சுப்பிரமணியசுவாமி வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளினார். காலை 9 மணிக்கு சுப்பிரமணியசுவாமிக்கும் மற்றும் பிற தெய்வங்களுக்கும் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து அர்த்த மண்டபத்தில் யாகசாலை பூஜை தொடங்கியது.
தொடர்ந்து கந்த சஷ்டி விரதம் இருக்கும் பக்தர்கள் முருகப்பெருமானை வேண்டி காப்புக் கட்டிக் கொண்டனர். காப்பு கட்டிய பக்தர்கள் 6 நாட்கள் விரதம் இருந்து வருகிற 9-ந் தேதி சூரபத்மனை முருகப்பெருமான் வதம் செய்யும் நாளன்று முருகப்பெருமானை தரிசனம் செய்து விரதம் முடிப்பார்கள்.
மதியம் 12 மணிக்கு உச்சி கால பூஜை நடைபெற்றது. நேற்று விடுமுறை தினம் என்பதால் திரளான பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்திருந்து நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
கந்த சஷ்டி திருவிழாவையொட்டி வருகிற 9-ந் தேதி வரை தினமும் காலையிலும், மாலையிலும் அர்த்த மண்டபத்தில் யாகசாலை பூஜைகள், சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் நடைபெறுகிறது.
9-ந் தேதி மதியம் அன்னையிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சியும், 3 மணிக்கு சூரபத்மனை முருகப்பெருமான் வதம் செய்யும் சூரசம்ஹார விழாவும் நடக்கிறது. பின்னர் சூரபத்மனை வதம் செய்த முருகப்பெருமானின் கோபம் தணிக்கும் விதமாக சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.
மறுநாள் காலை 10-ந் தேதி சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை மருதமலை கோவில் உதவி ஆணையர் (பொறுப்பு) விமலா மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
இதேபோல கோவை காந்திபுரத்தில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவிலில் கந்த சஷ்டி விழா தொடங்கியது. அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து மூலவருக்கு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
தொடர்ந்து முருகப்பெருமானுக்கும், சக்தி வேலுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து பரிவார தேவதைகளுக்கு காப்பு கட்டப்பட்டது. பின்னர் கோவிலில் திரண்ட ஏராளமான பக்தர்கள் முருகனை வணங்கி, தங்களது கைகளில் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர். வருகிற 9-ந் தேதி சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்த ஆண்டு கந்தசஷ்டி விழா நேற்று தொடங்கியது. அதிகாலை 5 மணிக்கு கோ-பூஜையும், அதனைத்தொடர்ந்து 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. இதையடுத்து பால், பன்னீர், மஞ்சள், ஜவ்வாது போன்ற 16 வகையான வாசனை திரவியங்களால் மூலவருக்கு அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் மலர் அலங்காரத்தில் சிறப்பு தோற்றத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். காலை 7.30 மணிக்கு விநாயகர் பூஜை, விழா நடைபெற இறை அனுமதி பெறுதல், மண் எடுத்தல், முளைப்பாலிகை இடுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது.
இதை தொடர்ந்து கருவறையை அடுத்துள்ள மகாமண்டபத்தில் சுப்பிரமணியசுவாமி வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளினார். காலை 9 மணிக்கு சுப்பிரமணியசுவாமிக்கும் மற்றும் பிற தெய்வங்களுக்கும் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து அர்த்த மண்டபத்தில் யாகசாலை பூஜை தொடங்கியது.
தொடர்ந்து கந்த சஷ்டி விரதம் இருக்கும் பக்தர்கள் முருகப்பெருமானை வேண்டி காப்புக் கட்டிக் கொண்டனர். காப்பு கட்டிய பக்தர்கள் 6 நாட்கள் விரதம் இருந்து வருகிற 9-ந் தேதி சூரபத்மனை முருகப்பெருமான் வதம் செய்யும் நாளன்று முருகப்பெருமானை தரிசனம் செய்து விரதம் முடிப்பார்கள்.
மதியம் 12 மணிக்கு உச்சி கால பூஜை நடைபெற்றது. நேற்று விடுமுறை தினம் என்பதால் திரளான பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்திருந்து நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
கந்த சஷ்டி திருவிழாவையொட்டி வருகிற 9-ந் தேதி வரை தினமும் காலையிலும், மாலையிலும் அர்த்த மண்டபத்தில் யாகசாலை பூஜைகள், சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் நடைபெறுகிறது.
9-ந் தேதி மதியம் அன்னையிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சியும், 3 மணிக்கு சூரபத்மனை முருகப்பெருமான் வதம் செய்யும் சூரசம்ஹார விழாவும் நடக்கிறது. பின்னர் சூரபத்மனை வதம் செய்த முருகப்பெருமானின் கோபம் தணிக்கும் விதமாக சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.
மறுநாள் காலை 10-ந் தேதி சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை மருதமலை கோவில் உதவி ஆணையர் (பொறுப்பு) விமலா மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
இதேபோல கோவை காந்திபுரத்தில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவிலில் கந்த சஷ்டி விழா தொடங்கியது. அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து மூலவருக்கு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
தொடர்ந்து முருகப்பெருமானுக்கும், சக்தி வேலுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து பரிவார தேவதைகளுக்கு காப்பு கட்டப்பட்டது. பின்னர் கோவிலில் திரண்ட ஏராளமான பக்தர்கள் முருகனை வணங்கி, தங்களது கைகளில் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர். வருகிற 9-ந் தேதி சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
ஆறாவது நாள் சூரசம்ஹாரத்தை தரிசித்து நீராடிப் பின் முருகனை வழிபட வேண்டும். ஒருசிலர் சூரசம்ஹாரம் முடிந்ததும் உணவு எடுத்துக் கொள்வார்கள். அது தவறு.
04.11.2021 அன்று தொடங்கும் இந்த விரதம் ஆறாவது நாளான 9.11.2021 அன்று சூரசம்ஹாரத்தோடு நிறைவுபெறும்.
ஆறுநாள்களும் தினமும் அதிகாலையில் எழுந்து குளித்து திருநீறு தரித்து, முருகக் கடவுளை வணங்க வேண்டும். அருகில் இருக்கும் ஆலயங்களுக்குச் சென்று வணங்குவது சிறப்பு. குறிப்பாக, யாகசாலை அமைத்து பூஜைகள் நடைபெறும் ஆலயங்களுக்குச் செல்வது விசேஷம். ஆறுநாள்களும் உண்ணா நோன்பிருக்க வேண்டும்.
ஒருசிலர் பால் பழம் உட்கொள்வது வழக்கம். ஒருசிலர் ஒரு வேளை மட்டும் உப்பில்லா உணவை உண்பர். எதுவாக இருந்தாலும் ஆறுநாள்களும் ஒரே மாதிரி வழக்கத்தைப் பின்பற்றுவது நன்று. முருகனின் பெருமைகளைப் பாடும், கந்த சஷ்டிக் கவசம், கந்த குரு கவசம், வேல்மாறல், வேல் வகுப்பு போன்ற துதிகளை நாள்முழுவதும் பாட வேண்டும். இதன்மூலம் மன ஒருமைப்பாடு சாத்தியப்படும்.
ஆறாவது நாள் சூரசம்ஹாரத்தை தரிசித்து நீராடிப் பின் முருகனை வழிபட வேண்டும். ஒருசிலர் சூரசம்ஹாரம் முடிந்ததும் உணவு எடுத்துக் கொள்வார்கள். அது தவறு. ஏழாவது நாள் காலையில் முருகப்பெருமானை தரிசித்த பின்பு உணவு உண்டு விரதம் முடிப்பதே சிறந்தது.
ஆறுநாள்களும் தினமும் அதிகாலையில் எழுந்து குளித்து திருநீறு தரித்து, முருகக் கடவுளை வணங்க வேண்டும். அருகில் இருக்கும் ஆலயங்களுக்குச் சென்று வணங்குவது சிறப்பு. குறிப்பாக, யாகசாலை அமைத்து பூஜைகள் நடைபெறும் ஆலயங்களுக்குச் செல்வது விசேஷம். ஆறுநாள்களும் உண்ணா நோன்பிருக்க வேண்டும்.
ஒருசிலர் பால் பழம் உட்கொள்வது வழக்கம். ஒருசிலர் ஒரு வேளை மட்டும் உப்பில்லா உணவை உண்பர். எதுவாக இருந்தாலும் ஆறுநாள்களும் ஒரே மாதிரி வழக்கத்தைப் பின்பற்றுவது நன்று. முருகனின் பெருமைகளைப் பாடும், கந்த சஷ்டிக் கவசம், கந்த குரு கவசம், வேல்மாறல், வேல் வகுப்பு போன்ற துதிகளை நாள்முழுவதும் பாட வேண்டும். இதன்மூலம் மன ஒருமைப்பாடு சாத்தியப்படும்.
ஆறாவது நாள் சூரசம்ஹாரத்தை தரிசித்து நீராடிப் பின் முருகனை வழிபட வேண்டும். ஒருசிலர் சூரசம்ஹாரம் முடிந்ததும் உணவு எடுத்துக் கொள்வார்கள். அது தவறு. ஏழாவது நாள் காலையில் முருகப்பெருமானை தரிசித்த பின்பு உணவு உண்டு விரதம் முடிப்பதே சிறந்தது.
விரதத்தில் முக்கியமானது பக்தி. இந்த ஆறுநாள்களும் முருகனை மனதில் நினைத்துத் துதித்த வண்ணம் இருக்க வேண்டும். அவ்வாறு விரதம் இருந்தால் முருகப் பெருமானின் அருள் ஸித்திக்கும் என்பது நம்பிக்கை.
இதையும் படிக்கலாம்...கந்த சஷ்டி விரதம் இருப்பவர்கள் சொல்ல வேண்டிய கவசம்
திருச்செந்தூர், பழனி, திருத்தணி உள்பட தமிழகம் முழுவதும் முருகன் கோவில்களில் கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது. சூரசம்ஹாரத்தில் பக்தர்களுக்கு அனுமதியில்லை
திருச்செந்தூர்
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பிரசித்தி பெற்ற கந்தசஷ்டி திருவிழா நேற்று யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இதற்காக ஆன்லைன் மூலமாக 5 ஆயிரம் பக்தர்கள், நேரில் வருபவர்களில் முன்னுரிமை அடிப்படையில் 5 ஆயிரம் பக்தர்கள் என மொத்தம் 10 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
2-ம் திருவிழாவான இன்று முதல் 5-ம் திருவிழாவான 8-ந்தேதி வரை அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், பகல் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை, மாலை 3.30 மணிக்கு சாய ரட்சை தீபாராதனை நடக்கிறது.
சிகர நிகழ்ச்சியாக சூரசம் ஹாரம் 9-ந்தேதி (செவ்வாய்க் கிழமை) நடக்கிறது. அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, மதியம் விஸ்வரூப தரிசனம், உதய மார்த்தாண்ட அபிஷேகம், உச்சிகால அபிஷேகம், சாயரட்சை தீபாராதனை, மாலை 4.30 மணிக்கு சூரசம்ஹாரம் நடக்கிறது.
7-ம் திருவிழாவான 10-ந்தேதி இரவு திருக் கல்யாண வைபவம் நடக்கிறது. கொரோனா தடுப்ப நடவடிக்கையாக சூரசம்ஹாரம், திருக்கல்யாணம் நடைபெறும் 9 மற்றும் 10-ந்தேதிகளில் பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை. மற்ற நாட்களில் 10 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
பழனி
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலில் முக்கிய திருவிழாவான கந்தசஷ்டி விழா நேற்று காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. 7 நாட்கள் நடைபெறும் விழாவில் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வருகிற 9-ம் தேதி மாலை கிரி வீதியில் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து 10-ம் தேதி காலை மலைக்கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சியுடன் நிறைவு பெறும்.
இவ்விழாவிற்கு ஏராளமான பக்தர்கள் 7 நாட்கள் விரதமிருந்து. மலைக் கோவிலில் நடைபெறும் திருக்கல்யாண நிகழ்ச்சிக்கு பிறகு விரதத்தை நிறைவு செய்வார்கள். திருவிழாவுக்கு கொரோனா கட்டுப்பாடு காரணமாக சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாண நிகழ்ச்சிக்கு பக்தர்கள் அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டும் இதே போல் சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாண நிகழ்ச்சிக்கு பக்தர்களை அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
திருக்கல்யாண நிகழ்ச்சிக்காக பழனி பெரியநாயகியம்மன் கோவிலில் இருந்து கோவில் யானை கஸ்தூரி மலைக்கோவிலுக்கு சென்றது. பின்பு உச்சிக்கால பூஜையின் போது. காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. கருவறையில் உள்ள விநாயகர், முருகன் சண்முகர், துவாரபாலகர் உள்ளிட்ட அனைத்து சாமி சிலைகளுக்கும் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போழுது பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
திருத்தணி
திருத்தணி முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா இன்று முதல் வருகிற 10-ந் தேதி வரை நடை பெற உள்ளது. கொரோனா தொற்று முன் எச்சரிக்கை நட வடிக்கையாக கோவி லில் லட்சார்ச்சனைக்கு அனுமதி இல்லை. விழா நாட்களில் பக்தர்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். மேலும் 9-ந் தேதி மாலை 5.30 மணியளவில் நடைபெறும் புஷ்பாஞ்சலி மற்றும் 10-ந் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சிகளில் பக்தர்கள் அமர்ந்து சுவாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை. இதற்கு மாறாக பக்தர்கள் வரிசையில் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
புஷ்பாஞ்சலி மற்றும் திருக்கல்யாண நிகழ்ச்சிகள் அனைத்தும் திருக்கோவில் யூடியூப்சேனல் மற்றும் வலை தளம் மூலம் நேரடி ஒளி பரப்பு செய்ய கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய் துள்ளது. பக்தர்கள் முக கவசம் அணிந்தும், சமூக இடை வெளியை பின்பற்றியும், கைகளுக்கு கிருமிநாசினி தெளித்தும் பாதுகாப்பான முறையில் சுவாமி தரிசனம் செய்ய வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான்வர்கீஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பிரசித்தி பெற்ற கந்தசஷ்டி திருவிழா நேற்று யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இதற்காக ஆன்லைன் மூலமாக 5 ஆயிரம் பக்தர்கள், நேரில் வருபவர்களில் முன்னுரிமை அடிப்படையில் 5 ஆயிரம் பக்தர்கள் என மொத்தம் 10 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
2-ம் திருவிழாவான இன்று முதல் 5-ம் திருவிழாவான 8-ந்தேதி வரை அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், பகல் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை, மாலை 3.30 மணிக்கு சாய ரட்சை தீபாராதனை நடக்கிறது.
சிகர நிகழ்ச்சியாக சூரசம் ஹாரம் 9-ந்தேதி (செவ்வாய்க் கிழமை) நடக்கிறது. அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, மதியம் விஸ்வரூப தரிசனம், உதய மார்த்தாண்ட அபிஷேகம், உச்சிகால அபிஷேகம், சாயரட்சை தீபாராதனை, மாலை 4.30 மணிக்கு சூரசம்ஹாரம் நடக்கிறது.
7-ம் திருவிழாவான 10-ந்தேதி இரவு திருக் கல்யாண வைபவம் நடக்கிறது. கொரோனா தடுப்ப நடவடிக்கையாக சூரசம்ஹாரம், திருக்கல்யாணம் நடைபெறும் 9 மற்றும் 10-ந்தேதிகளில் பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை. மற்ற நாட்களில் 10 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
பழனி
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலில் முக்கிய திருவிழாவான கந்தசஷ்டி விழா நேற்று காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. 7 நாட்கள் நடைபெறும் விழாவில் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வருகிற 9-ம் தேதி மாலை கிரி வீதியில் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து 10-ம் தேதி காலை மலைக்கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சியுடன் நிறைவு பெறும்.
இவ்விழாவிற்கு ஏராளமான பக்தர்கள் 7 நாட்கள் விரதமிருந்து. மலைக் கோவிலில் நடைபெறும் திருக்கல்யாண நிகழ்ச்சிக்கு பிறகு விரதத்தை நிறைவு செய்வார்கள். திருவிழாவுக்கு கொரோனா கட்டுப்பாடு காரணமாக சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாண நிகழ்ச்சிக்கு பக்தர்கள் அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டும் இதே போல் சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாண நிகழ்ச்சிக்கு பக்தர்களை அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
திருக்கல்யாண நிகழ்ச்சிக்காக பழனி பெரியநாயகியம்மன் கோவிலில் இருந்து கோவில் யானை கஸ்தூரி மலைக்கோவிலுக்கு சென்றது. பின்பு உச்சிக்கால பூஜையின் போது. காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. கருவறையில் உள்ள விநாயகர், முருகன் சண்முகர், துவாரபாலகர் உள்ளிட்ட அனைத்து சாமி சிலைகளுக்கும் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போழுது பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
திருத்தணி
திருத்தணி முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா இன்று முதல் வருகிற 10-ந் தேதி வரை நடை பெற உள்ளது. கொரோனா தொற்று முன் எச்சரிக்கை நட வடிக்கையாக கோவி லில் லட்சார்ச்சனைக்கு அனுமதி இல்லை. விழா நாட்களில் பக்தர்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். மேலும் 9-ந் தேதி மாலை 5.30 மணியளவில் நடைபெறும் புஷ்பாஞ்சலி மற்றும் 10-ந் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சிகளில் பக்தர்கள் அமர்ந்து சுவாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை. இதற்கு மாறாக பக்தர்கள் வரிசையில் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
புஷ்பாஞ்சலி மற்றும் திருக்கல்யாண நிகழ்ச்சிகள் அனைத்தும் திருக்கோவில் யூடியூப்சேனல் மற்றும் வலை தளம் மூலம் நேரடி ஒளி பரப்பு செய்ய கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய் துள்ளது. பக்தர்கள் முக கவசம் அணிந்தும், சமூக இடை வெளியை பின்பற்றியும், கைகளுக்கு கிருமிநாசினி தெளித்தும் பாதுகாப்பான முறையில் சுவாமி தரிசனம் செய்ய வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான்வர்கீஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.






