என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • ‘பைசன்’ எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
    • உங்களின் படங்கள் அழுத்தமானதாகவும், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் உள்ளன.

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். கபடி வீரரின் வாழ்க்கையை தத்துரூபமாக வெளிப்படுத்தி உள்ள 'பைசன்' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூலையும் குவித்தது.

    இப்படத்தை பார்த்து பிரபலங்கள் பலரும் படக்குழுவினரை பாராட்டி வந்தனர். இந்த நிலையில், முன்னாள் கிரிக்கெட்டி வீரர் தினேஷ் கார்த்திக் 'பைசன்' படத்தை பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக தினேஷ் கார்த்திக் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,




    'பைசன்' எனக்கு மிகவும் பிடித்திருந்தது. என்ன ஒரு அருமையான திரைப்படம் மாரிசெல்வராஜ். உங்களின் படங்கள் அழுத்தமானதாகவும், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் உள்ளன. இந்த எதார்த்தமான நடிப்பிற்காக துருவ் கடுமையாக உழைத்துள்ளார். மற்ற நடிகர்களும் சிறப்பாக நடித்திருந்தனர். படக்குவுக்கு என் வாழ்த்துகள் என கூறியுள்ளார்.



    • கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார்.
    • இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியான 'கங்குவா' அவரது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறாத நிலையில், அடுத்து வெளியான 'ரெட்ரோ' படம் ஓரளவு வரவேற்பை பெற்றது என்று சொல்லாம்.

    இதனை தொடர்ந்து, ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடித்துள்ள சூர்யாவின் 45-வது படமான 'கருப்பு' படம் விரைவில் வெளியாக உள்ளது. டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார். மேலும், சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    இப்படம் நீதிமன்ற வழக்கு ஒன்றை மையமாக வைத்து அதில் கடவுள் நம்பிக்கையை இணைத்து உருவாகியுள்ளது. 'கருப்பு' திரைப்படத்தை அடுத்தாண்டு ஜனவரி 23-ந்தேதி வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.

    இந்த நிலையில், 'கருப்பு' படத்தின் ஓ.டி.டி. உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் அதிக தொகைக்கு வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், சாட்டிலைட் உரிமத்தை ஜீ5 நிறுவனமும் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

    • தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகனுடன் ‘பராசக்தி' படத்திலும் நடித்துள்ளார்.
    • விமர்சனங்கள் பெரியளவில் வரவில்லை என்றாலும், எனக்கும் சவால்கள் என்பது இருந்தது.

    தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகர்களில் ஒருவர் முரளி. அவரது மூத்த மகனான அதர்வா வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கிய இடம் வகிக்கிறார். அதர்வாவின் நடிப்பில் இந்தாண்டு வெளியான டி.என்.ஏ. படம் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றது. தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகனுடன் 'பராசக்தி' படத்திலும் நடித்துள்ளார்.

    அதர்வாவிடம் 'வாரிசு நடிகர் என்ற விமர்சனத்தை எப்படி எதிர்கொண்டீர்கள்?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அதர்வா பதிலளிக்கையில் ''விமர்சனங்கள் பெரியளவில் வரவில்லை என்றாலும், எனக்கும் சவால்கள் என்பது இருந்தது. என்னதான் ஒரு அடையாளத்துடன் வந்தாலும், நான் சந்தித்த ஒவ்வொரு களமும் எனக்கென உத்வேகத்தை தந்தது. அடையாளத்தை ஏற்படுத்தியது. எனவே விமர்சனங்கள் என்னை பாதிக்கவில்லை'', என்றார்.

    • இசையமைப்பாளர் M.S. ஜோன்ஸ் ரூபர்ட் இசையில் உருவாகியுள்ள பாடல்கள் ரசிக்கும்படி உள்ளது.

    கதாநாயகன் ரஜினி கிஷன் மற்றும் கதாநாயகி திவிகா இருவரும் காலக்கின்றனர். இவர்கள் ஓடிப்போய் திருமணம் செய்துக் கொள்ள முடிவு செய்கின்றனர். திவிகாவை எப்படியாவது திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று திட்டமிடுகிறார் அவரது மாமாவான கூல் சுரேஷ். இருவரும் ஓடிப்போய் திருமணம் செய்துக்கொள்வதை தெரிந்த கூல் சுரேஷ் தடுக்க முயற்சிக்கிறார். ஆனால், முனீஷ்காந்த் மற்றும் நண்பர்களின் உதவியுடன் இருவருக்கும் திருமணம் நடக்கிறது. பிறகுதான் தெரிகிறது, ரஜினி கிஷன் திவிகாவின் கழுத்தில் கட்டியிருக்கும் தாலியில் பேய் மறைந்து இருப்பது தெரிய வருகிறது.

    பேய் இருக்கும் தாலி எப்படி இவர்கள் கையில் சிக்கியது..? திவிகாவை விட்டு பேய் விரட்டியடித்தார்களா? என்பது படத்தின் மீதிக்கதை..

    நடிகர்கள்

    கதாநாயகனாக நடித்துள்ள ரஜினி கிஷன் இப்படத்தி்கு பொறுத்தம். திவிகா கதாப்பாத்திற்கு ஏற்ப நடித்திருக்கிறார். கூல் சுரேஷ், மொட்டை ராஜேந்திரன், முனீஷ்காந்த், கல்கி உள்ளிட்டோர் படத்திற்கு பலம்.

    இயக்கம்

    இயக்குநர் எம்.ரமேஷ் பாரதி இயக்கியுள்ள காமெடி த்ரில்லர் கதை வர்க் அவுட் ஆகியுள்ளது. முதல் பாதி படம் கொஞ்சம் இழுவையாக இருந்தாலும், இரண்டாவது பாதியில் நகைச்சுவை கலந்து ஹாரர் படமாக விறுவிறுப்பாக எடுத்திருக்கிறார். பேயை வைத்து கமெடி செய்ய முயற்சித்திருக்கிறார்.

    இசை

    இசையமைப்பாளர் M.S. ஜோன்ஸ் ரூபர்ட் இசையில் உருவாகியுள்ள பாடல்கள் ரசிக்கும்படி உள்ளது.

    ஒளிப்பதிவு

    ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.

    • தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் வெளியானது.
    • பனாரஸின் குறுகிய பாதைகளில் குந்தன் என்ற பெயர் இன்னும் எதிரொலிக்கிறது.

    பாலிவுட்டில் இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ், சோனம் கபூர் நடிப்பில் கடந்த 2013 இல் வெளியாகி வரவேற்பை பெட்ரா படம் 'ராஞ்சனா'.

    தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் வெளியானது. குந்தன் என்ற கதாபாத்திரத்தில் தனுஷ் வாழ்ந்திருந்தார். படத்தில் ஏஆர் ரகுமான் இசையில் இடம்பெற்ற ஒவ்வொரு பாடலும் ஒரு கிளாசிக்.

    இந்நிலையில் தனுஷ் - ஆனந்த் எல் ராய் - ஏஆர் ரகுமான் கூட்டணியில் புதிதாக உருவாகி உள்ள படம் "தேரே இஸ்க் மேன்" (Tere Ishk Mein). இதில் ஷங்கர் என்ற கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்துள்ளார். 

    இதுவும் ராஞ்சனா போலவே காதல் படமாக அமைந்துள்ளது. அந்த கதையோடு தொடர்புடையது என்றும் கூறப்படுகிறது. 

    இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கிரித்தி சனோன் நடித்துள்ளார். இப்படம் நாளை, 28ம் தேதி வெளியாக உள்ளது.

    இப்படத்தில் ஏ ஆர் ரகுமான் இசையில் வெளியான 'உசே கெனா' மனதை உருக்கும் வகையில் இருந்தது.

    இந்நிலையில் ரே இஷ்க் மெய்ன் புரமோஷனுக்காக வாரணாசி சென்றுள்ள தனுஷ் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில், "நினைவுப் பாதையில் ஒரு நடை. இதெல்லாம் எங்கிருந்து தொடங்கியது. குந்தன், ஒரு தசாப்தத்திற்கும் மேலாகியும் என்னை விட்டு விலக மறுக்கும் ஒரு கதாபாத்திரம்.

    பனாரஸின் குறுகிய பாதைகளில் குந்தன் என்ற பெயர் இன்னும் எதிரொலிக்கிறது. மக்கள் என்னை அழைக்கும்போது நான் இன்னும் திரும்பிச் சிரிக்கிறேன்.

    எனக்கு குந்தனைக் கொடுத்த மனிதருடன் இப்போது அதே பாதைகளில் நடந்து, அதே வீட்டின் முன் அமர்ந்து, அதே தேநீர் கடையில் இருந்து தேநீர் அருந்தி, புனித கங்கைக் கரையில் நடந்து, ஒரு முழு வட்டம் பூர்த்தியானது போல் உணர்கிறேன். இப்போது ஷங்கருக்கான நேரம். தேரே இஷ்க் மெய்ன்… நாளை வெளியாகிறது. ஹர் ஹர் மகாதேவ்" என்று பதிவிட்டுள்ளார்.   

    உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகி இருக்கும் படம் 'ப்ராமிஸ்'.

    "ப்ராமிஸ்" கதையின் நாயகனாக நடித்து இந்தத் திரைப்படத்தை அருண்குமார் சேகரன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராக வினோத்குமார் DFT பணியாற்றி உள்ளார்.

    சரவண தீபன் இசையமைத்துள்ளார்.படத்தொகுப்பு ஸ்ரீராம் விக்னேஷ், பாடலாசிரியர் பாலா, DI மணிகண்டன், நடனம் அகிலா பணியாற்றியுள்ளனர்.

    நாயகன் அருண்குமார் சேகர னுடன் கதாநாயகியாக புதுமுகம் நதியா சோமு நடித்துள்ளார். படத்தின் பிற கதை மாந்தர்களாக சுஜன், அம்ரிஷ் ,பிரதாப், கோகுல், சுந்தரவேல், ராஜ்குமார்,கலைவாணி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    சங்கமித்ரன் ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் அம்மன் ஆர்ட் க்ரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. 

    மக்களிடம் புகழ்பெற்ற உண்மையையே பேசிய அரிச்சந்திரனும் அவனைப் பின்பற்றிய காந்தியும் வரலாற்றில் சத்தியத்தின் சாட்சியங்களாக இருப்பதை அறியலாம்.

    அப்படி அந்தச் சத்தியத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம்தான் ப்ராமிஸ். இந்த நிலையில் 'ப்ராமிஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை திரைப் பிரபலங்கள் வெளியிட்டு வாழ்த்தியிருக்கிறார்கள்.

    'ப்ராமிஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் சேரன் மற்றும் ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி நட்ராஜ் ஆகியோர் வெளியிட்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.

    தமிழில் நாளை (நவ. 28) 10 திரைப்படங்களும், 2 படம் ரீ-ரிலீசும் செய்யப்படுகிறது.

    தமிழ் சினிமாவில் வெளியாக உள்ள புதுப்படங்கள் மற்றும் மக்களின் மனதில் நீங்கா இடம்பெற்ற படங்களின் ரீ-ரிலீஸ் என நாளை திரைக்கு வரவுள்ள படங்கள் குறித்து பார்ப்போம்...

    அதன்படி, தமிழில் நாளை (நவ. 28) 10 திரைப்படங்களும், 2 படம் ரீ-ரிலீசும் செய்யப்படுகிறது.

    தேரே இஷ்க் மே

    ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ் , க்ரித்தி சனோன் நடித்துள்ள திரைப்படம் 'தேரே இஷ்க் மே' . ஏ.ஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 'தேரே இஷ்க் மே' ஒரு தீவிரமான காதல் கதையாகும், இது தனுஷ் மற்றும் கிருத்தி சனோனை சுற்றி நகர்கிறது.

    ரிவால்வர் ரீட்டா

    கீர்த்தி சுரேஷ் கதை நாயகியாக நடித்துள்ள 'ரிவால்வர் ரீட்டா' படத்தை தி ரூட், தி ஃபேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. சரஸ்வதி சபதம் படத்தை இயக்கிய ஜே.கே. சந்துரு இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    ஐபிஎல்

    பிரபல யூடியூப்பரும், சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவருமான டிடிஎஃப் வாசன் தற்போது படம் ஒன்றில் நடித்து உள்ளார். அப்படத்திற்கு ஐபிஎல் (Indian Penal Law) என்று பெயரிடப்பட்டுள்ளது.

    இப்படத்தில் நடிகர் கிஷோர் மற்றும் நடிகை அபிராமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். கருணாநிதி இயக்கி உள்ள இப்படத்தை ஜி.ஆர். மதன் கிருஷ்ணன் தயாரித்துள்ளார்.

    வெள்ளகுதிர

    *நிஜம் சினிமா* தயாரிப்பில் சரண்ராஜ்செந்தில்குமார் இயக்கத்தில் ஹரிஷ் ஓரி, அபிராமி போஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வெள்ளகுதிர'.

    BP 180

    ரேடியன்ட் இன்டர்நேஷனல் மூவிஸ் மற்றும் அதுல் இந்தியா மூவிஸ் சார்பில் பிரதிக் டி சத்பர் & அதுல் எம் போசாமியா இணைந்து தயாரித்துள்ள BP180 படத்தை ஜே.பி இயக்கி உள்ளார். தன்யா எஸ் ரவிச்சந்திரன், மறைந்த நடிகர் டேனியல் பாலாஜி, கே.பாக்யராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

    Friday

    Dakdam Motion Pictures சார்பில் அனிஷ் மசிலாமணி தயாரிப்பில் ஹரிவெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் FRIDAY. இந்த படத்தில் மைம் கோபி, KPY தீனா, அனிஷ் மாசிலாமணி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

    ஒண்டிமுனியும் நல்லபாடனும்

    திருமலை புரொடக் ஷன் சார்பில் கா.கருப்புசாமி தயாரித்துள்ள ஒண்டிமுனியும் நல்லபாடனும் படத்தை சுகவனம் எழுதி இயக்கியுள்ளார்.

    அஞ்சான்

    திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் சார்பில் லிங்குசாமி இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அஞ்சான். இந்த படத்தில் சூர்யா, சமந்தா ரூத் பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    அட்டகாசம்

    சரண் இயக்கத்தில் நடிகர் அஜித், பூஜா நடிப்பில் 'அட்டகாசம்' திரைப்படம் 2004-இல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

    'பட்டுமா' பாடல் வரிகளை படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார்.

    விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள படம் 'LIK' (லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி). இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானும், எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளனர்.

    நயன்தாரா மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கான பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து அடுத்த மாதம் 18-ந்தேதி இப்படம் வெளியாக உள்ளது.

    'LIK' படத்தின் 2வது பாடல் 'பட்டுமா' இன்று மாலை வெளியானது. இதுதொடர்பாக போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு முன்னதாகவே தெரிவித்து இருந்த நிலையில், ப்ரோமோவை வெளியிட்டனர்.

    இந்த நிலையில், பட்டுமா பாடல் வெளியாகியுள்ளது. அனிருத் இசையில் உருவாகி உள்ள 'பட்டுமா' பாடல் வரிகளை படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இப்படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 12-ந்தேதி ‘ஜெயிலர்2’ வெளியாகும் என தெரிவித்து இருந்தார்.
    • ‘ஜெயிலர்2’ படத்தில் சந்தானம் நடிக்க இருப்பதால் நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது என கூறப்பட்டது.

    இயக்குநர் நெல்சன்- நடிகர் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகி வரும் படம் 'ஜெயிலர்2'. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. சென்னை, கேரளா, கோவா மற்றும் மைசூர் போன்ற இடங்களில் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்டது.

    'ஜெயிலர்' முதல் பாகத்தில் நடித்தவர்களே இரண்டாம் பாகத்திலும் நடிப்பதாக கூறினாலும், ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன் மற்றும் சிவராஜ்குமார் தவிர்த்து பிற நடிகர்களின் விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

    சமீபத்தில் 'ஜெயில் 2' படத்தின் தனது படப்பிடிப்பை முடித்ததாக தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த் இப்படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 12-ந்தேதி 'ஜெயிலர்2' வெளியாகும் என தெரிவித்து இருந்தார்.

    இதனிடையே, 'ஜெயிலர்2' படத்தில் சந்தானம் நடிக்க இருப்பதால் நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது என கூறப்பட்டது. இந்த நிலையில், நடிகர் விஜய் சேதுபதியும் இந்த படத்தில் இணைந்துள்ளதாகவும், கோவா படப்பிடிப்பின் போது அவர் படப்பிடிப்பு தளத்தில் இணைந்ததாகவும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

    இருப்பினும், இத்தகவல் தொடர்பாக விஜய் சேதுபதி மற்றும் படக்குழுவினரிடமிருந்து எந்த தகவலும் வெளியாகவில்லை. உறுதிப்படுத்தல் எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை 'ஜெயிலர் 2 ' படத்தில் விஜய்சேதுபதி இணைவது உண்மையானால், கார்த்திக் சுப்பராஜின் பேட்ட (2019) படத்திற்குப் பிறகு விஜய் சேதுபதி ரஜினிகாந்துடன் இணைந்து பணியாற்றும் இரண்டாவது படமாக இது இருக்கும்.

    • ரஜினியின் புதிய படத்தை இயக்கப் போவது யார்? என்பது குறித்து மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
    • நடிகை சாய் பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது.

    கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் 173-வது படத்தை சுந்தர் சி இயக்கப்போவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அப்படத்தில் இருந்து சுந்தர் சி விலகினார் . சுந்தர் சி விலகலுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வரும் நிலையில், அவர் தற்போது 'மூக்குத்தி அம்மன்-2' படத்தை இயக்குவதில் பிசியாக இருக்கிறார்.

    இதற்கிடையில் ரஜினியின் புதிய படத்தை இயக்கப் போவது யார்? என்பது குறித்து மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனிடையே, ரஜினிகாந்த் அவர்களுக்கு ஏற்றார் போல், பிடித்தார் போல் கதை அமைய வேண்டும். அதுவரை கதைக்கேட்டுக்கொண்டு இருப்போம் என கமல்ஹாசன் கூறியிருந்தார்.



    இந்த நிலையில், 'பார்க்கிங்' படத்தை இயக்கி கவனம் ஈர்த்த ராம்குமார் பாலகிருஷ்ணன் தான், ரஜினி-கமல் கூட்டணி படத்தை இயக்கப்போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது சிம்பு நடிப்பில் புதிய படத்தை இயக்க இருந்த ராம்குமார் பாலகிருஷ்ணன், இப்படத்தை இயக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும், நடிகை சாய் பல்லவி மற்றும் நடிகர் கதிர் இப்படத்தில் முக்கிய நடிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாக உள்ளது.

    இதனால் இனிவரும் நாட்களில் 'தலைவர் 173' குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • இப்படத்தின் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
    • இத்திரைப்படம் அடுத்த மாதம் 5-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

    நடிகை அனுபமா பரமேஷ்வரன் நடிப்பில் விரைவில் திரையரங்கிற்கு வர இருக்கும் படம் 'லாக் டவுன்'. லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குநரான ஏ.ஆர் ஜீவா இயக்கியுள்ளார்.

    இப்படத்திற்கு ரகுநந்தன் மற்றும் சித்தார்த் விபின் ஆகியோர் இணைந்து இசையமைக்க சக்திவேல் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார்.

    இத்திரைப்படம் கொரோனா காலக்கட்டத்தில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படமாகும். இப்படத்தின் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து இத்திரைப்படம் அடுத்த மாதம் 5-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.


    இந்நிலையில், 'லாக் டவுன்' படத்தின் டிரெய்லரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண்ணுக்கு ஏற்படும் பிரச்சனை அதன்பிறகு கொரோனாவால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு என சுழலும் கதையில் அப்பெண்ணிற்கு ஏற்பட்ட பிரச்சனை என்ன? அதில் இருந்து அவர் எப்படி தப்பிக்கிறார் என்பதே இந்த டிரெய்லர் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


    • முக்கிய கதாபாத்திரத்தில் சோனியா அகர்வால், அயலி புகழ் மதன், ஆதர்ஷ் மற்றும் லிவிங்ஸ்டன் நடிக்கிறார்கள்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் வாரத்தில் கோபிசெட்டிபாளையத்தில் தொடங்க உள்ளது.

    தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் லிவிங்ஸ்டன். இவரது மகள் ஜோவிதா லிவிங்ஸ்டன். இவர் தந்தையுடன் சேர்ந்து பாடல்களை பாடி சமூக வலைத்தளங்களில் பிரபலமானவர்.

    ஜோவிதா லிவிங்ஸ்டன் தற்போது கே.எஸ்.கிஷான் இயக்கத்தில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார். இப்படத்திற்கான தொடக்கவிழா நேற்று நடைபெற்றது.

    இது ஒரு ஹாரர் திரில்லர் படம் என்று கூறப்படும் நிலையில், இதில் கதாநாயகியாக ஜோவிதாவும் முக்கிய கதாபாத்திரத்தில் சோனியா அகர்வால், அயலி புகழ் மதன், ஆதர்ஷ் மற்றும் லிவிங்ஸ்டன் நடிக்கிறார்கள். மேலும் இவர்களுடன் சேர்ந்து விஜே விஜய், கிருத்திகாவும் நடிக்கிறார்கள்.

    விக்னேஷ் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு சங்கீத் மணிகோபால் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

    இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் வாரத்தில் கோபிசெட்டிபாளையத்தில் தொடங்க உள்ளது. அதனைத் தொடர்ந்து சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் ஒரே செட்யூலாக நடத்த திட்டமிட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. 

    ×