என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • 9 மாதங்கள் பெரிய படங்கள் போட்டு கொள்ளுங்கள்.
    • சிறு படங்கள் வெளியான நேரத்தில் பெரிய படங்கள் வரக்கூடாது.

    எல்.ஆர்.சுந்தரபாண்டி இயக்கத்தில் ஆரி அர்ஜூனன் நடிப்பில் மர்மங்கள் நிறைந்த திரில்லராக உருவாகி உள்ள படம் '4த் ப்ளோர்'. மனோ கிரியேஷன் ராஜா தயாரித்துள்ள இந்த படம் வருகிற 27-ந்தேதி திரைக்கு வருகிறது. இதையொட்டி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

    விழாவில் தயாரிப்பாளர் தனஞ்செயன், இயக்குநர்கள் சுசீந்திரன், விஜய் மில்டன், நடிகர் பரத், சேரன், பிரஜின், சுப்ரமணிய சிவா, இசை அமைப்பாளர் தரன்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் சேரன் பேசியதாவது:-

    குடும்பத்தில் இருந்து பணத்தை எடுத்து சினிமா தாகத்தில் இங்கு கொண்டு போடுகிற பணத்தை மீட்டு எடுப்பதற்கு தயாரிப்பாளருக்கு வழி இருக்கிறதா? என்றால் இல்லை. மனசாட்சியை அடகு வைத்துக் கொண்டு தயாரிப்பாளரை தெரிந்தே குழிக்குள் தள்ளுகிறோமா? என்றால் ஆமாம். எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தார். நம்ம ஊரில் டப்பிங் படங்கள் நிறைய வந்து கொண்டிருந்தது. அப்போது தமிழ் படங்கள் காணாமல் போகிற வாய்ப்பு உருவானது. எல்லோரும் ஜாக்கிசான் தமிழ் பேசுவதை பார்க்க தொடங்கினோம். எம்.ஜி.ஆர். என்ன பண்ணினார் என்றால் கூப்பிட்டு ஒரு ஆர்டர் போட்டார். எந்த திரையரங்கம் என்றாலும் கண்டிப்பாக 90 நாட்கள் தமிழ் படங்கள் போட வேண்டும். அப்படி போடவில்லை என்றால் லைசென்ஸ் ரத்து என்றார். அதுபோல் இன்று சிறுபடங்களுக்கு 3 மாதங்கள் ஒதுக்கி கொடுங்கள். அது எந்த 3 மாதம் என்றாலும் பரவாயில்லை.

    9 மாதங்கள் பெரிய படங்கள் போட்டு கொள்ளுங்கள். சிறு படங்கள் வெளியான நேரத்தில் பெரிய படங்கள் வரக்கூடாது. 3 மாதத்தில் 72 சிறுபடங்கள் ரிலீசாகும். தயாரிப்பாளர்கள் வாழ்வார்கள். இதை அனைவரும் சேர்ந்து அரசிடம் தயக்கமில்லாமல் முறையிட வேண்டும். படத்தின் கதாநாயகனான ஆரி என் மாணவர். இந்த படம் அவருக்கு ஒரு அடையாளமாகவும் நம்பிக்கையாகவும் அமைய வேண்டும் என்றார். 

    • இந்தப் படம் குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.
    • தெலுங்கில் உருவாகும் "பகாசல பந்தம்" திரைப்படத்தில் பணியாற்றி வருகிறார்.

    நடிகர் மஹத் ராகவேந்திரா தனது திரைப்பயணத்தில் அற்புதமான படத்தைச் சேர்த்துக் கொண்டிருக்கிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு, தயாரிப்பாளர் டி.ஜி. தியாகராஜன் இயக்கும் புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி பிலிம்ஸ் உடன் இணைந்து மஹத் ராகவேந்திரா பணியாற்றவுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

    மஹத் ஏற்கனவே சில பெரிய கூட்டணிகளைக் கொண்டுள்ள நிலையில், இது அவரது வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. தமிழ் திரையுலகில் பிரபல திரைப்பட நிறுவனங்களில் ஒன்று சத்ய ஜோதி ஃபிலிம்ஸ். நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்கள், முன்னணி நடிகர்களின் பெரிய படங்கள் மூலம் ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்கள் மத்தியில் பிரபலமாக அறியப்படுகிறது.

    புகழ்பெற்ற சத்ய ஜோதி பிலிம்ஸ் மற்றும் மஹத் ராகவேந்திரா இணைந்து பணியாற்றுவது திரைத்துறை வட்டாரங்களில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படம் குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தேர்ந்தெடுக்கப்பட்ட பாத்திரங்கள் மற்றும் தனித்துவமான கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர் மஹத் ராகவேந்திரா. நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் மட்டும் நடிப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கிகிறார். அந்த வரிசையில், இந்த கூட்டணி அவரது திரைப்பட வரலாற்றில் மற்றொரு குறிப்பிடத்தக்க கூடுதலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையில், மஹத் ராகவேந்திரா தற்போது தெலுங்கு மொழியில் உருவாகும் "பகாசல பந்தம்" திரைப்படத்தில் பணியாற்றி வருகிறார். இந்தப் படத்தில் மஹத் ஸ்வர்யா ராஜேஷ், ரம்யா கிருஷ்ணன் உள்பட முக்கிய நடிகர்களுடன் இணைந்து நடிக்கிறார். இந்தப் படம் குடும்ப பொழுதுபோக்கு படமாகும். பிறந்தநாளை ஒட்டி நடிகர் மஹத் ராகவேந்திராவின் புதிய போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

    • 2019-ம் ஆண்டு முதல் நுரையீரல் பைப்ரோ சிஸ் என்ற நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தார்.
    • ரஷ்மி லீலா உடலுக்கு சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

    கன்னட சின்னத்திரை உலகில் பிரபல நடிகையாக இருந்தவர் ரஷ்மி லீலா. காவ்யாஞ்சலி, ஆனந்த சாகர், பாந்தவ்யா போன்ற தொடர் மூலம் சின்னத்திரை பார்வையாளர்களை மிகவும் கவர்ந்து உள்ளார்.

    சின்னத்திரையில் பல்வேறு கேரக்டரில் நடித்து வந்த ரஷ்மி லீலா கிராம தேவதே, சிகிமுத்து போன்ற படங்களிலும் நடித்து உள்ளார். ரஷ்மி லீலா கணவர் சரிக்குமஞ்சு கன்னட தொலைக்காட்சியில் எழுத்தாளராகவும், வசன கர்த்தாகவும் இருக்கிறார்.

    புன்னகை நிறைந்த அழகாலும், நடிப்பாலும் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையை அலங்கரித்து வந்த ரஷ்மி லீலா கடந்த 2019-ம் ஆண்டு முதல் நுரையீரல் பைப்ரோ சிஸ் என்ற நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தார்.

    கடந்த சில ஆண்டுகளாக நோய் பாதிப்பினால் அவதிப்பட்டு வந்த ரஷ்மி லீலா மீண்டும் படப்பிடிப்புக்கு வருவேன் என்று தன்னம்பிக்கையுடன் இருந்தார். இந்நிலையில் 37 வயதான ரஷ்மி லீலா சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.

    இது குறித்து ரஷ்மி லீலா கணவர் சரிக்குமஞ்சு வெளியிட்டுள்ள பதிவில், என் மனைவி ரஷ்மி லீலா நுரையீரல் பைப்ரோசியுடன் சில ஆண்டுகளாக போராடினார். சமீபத்தில் அவருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. விரைவில் குணமடைந்து வருவார் என்ற நம்பிக்கையில் இருந்த போது உடல்நிலை மோசமடைந்து துரதிர்ஷ்டவசமாக நேற்று உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்கு இன்று பனசங்கரி மின் மயானத்தில் நடைபெறும் என பதிவிட்டுள்ளார்.

    ரஷ்மி லீலா உடலுக்கு சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

    • ஒரு விளம்பர படப்பிடிப்பிற்காக அவர் அணிந்துள்ள சேலை விலையை கேட்டால் மூக்கின் மேல் விரலை வைக்க வைக்கிறது.
    • திஷா பதானி அணிந்திருக்கும் புடவை விலை நடுத்தர குடும்பத்தின் காரின் விலைக்கு சமமானது என சோசியல் மீடியாக்களில் கருத்துக்கள் பரவலாகி வருகிறது.

    சூர்யா நடிப்பில் வெளியான 'கங்குவா' படத்தில் கதாநாயகியாக நடித்து கவனம் ஈர்த்தவர் நடிகை திஷா பதானி. தொடர்ந்து பாலிவுட்டில் பல படங்களில் நடித்து முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.

    பாலிவுட்டில் கவர்ச்சியான அழகியாக இருந்து வரும் திஷாபதானி சமூக வலைதளங்களில் வெளியிடும் புகைப்படங்களும், வீடியோக்களும் ரசிகர்களை வியக்க வைத்து வருகின்றன.

    இந்நிலையில் ஒரு விளம்பர படப்பிடிப்பிற்காக அவர் அணிந்துள்ள சேலை விலையை கேட்டால் மூக்கின் மேல் விரலை வைக்க வைக்கிறது. காஞ்சிபுரம் பாரம்பரிய புடவையுடன் தங்க காதணிகள் மற்றும் நெக்லஸ் அணிந்து பின்னப்பட்ட ஜடையை முன்னாள் போட்டு சேலையை கைகளில் தவழவிட்டபடி எடுத்த புகைப்படங்கள் ரசிகர்களை சுண்டி இழுக்கிறது.

    இதைவிட பெரிய 'ஹைலைட்' திஷாபதானி அணிந்திருக்கும் சேலையின் விலை. திஷா பதானி அணிந்திருக்கும் கண் கவர் சேலையின் விலை ரூ.5.58 லட்சம் என மதிப்பிடப்பட்டு உள்ளது. திஷா பதானி அணிந்திருக்கும் புடவை விலை நடுத்தர குடும்பத்தின் காரின் விலைக்கு சமமானது என சோசியல் மீடியாக்களில் கருத்துக்கள் பரவலாகி வருகிறது.

    • நித்யா மேனனுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
    • நான் நடிக்கத் தொடங்கிய முதல் நாளிலிருந்தே அது எனது செயல்முறையாகவும் நோக்கமாகவும் இருந்து வருகிறது.

    தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் நடித்து தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர் நடிகை நித்யா மேனன். 'திருச்சிற்றம்பலம்' படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதையும் வென்றுள்ளார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான 'இட்லி கடை', 'தலைவன் தலைவி' படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இதனை தொடர்ந்து அடுத்த படம் குறித்த எந்த தகவலையும் நித்யா மேனன் அறிவிக்காமல் இருந்தார்.

    இந்த நிலையில், தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நடிகை நித்யா மேனன் அதில், தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான கேயுரி புரொடக்ஷனை தொடங்குவதாக அறிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில்,

    "எனக்கு, திரைப்படங்களை உருவாக்குவது என்பது வெறும் கதைகளைச் சொல்வதை விட எப்போதும் மேலானது. இது உண்மையான மக்களை இவ்வளவு ஆழமான மட்டத்தில் சென்றடைய முடிவது பற்றியது. அறிவை விட ஆழமானது,

    சிந்தனை, பகுத்தறிவுக்கு மேலே ஒரு இடம் பெரியது.

    ஒரு மாற்றத்தைத் தூண்டுவது - படைப்பு செயல்பாட்டில் நான் மூழ்கியிருக்கும் போது எனக்குள்ளும், கவனிக்கும் மற்றவருக்குள்ளும். அமைதியாக அலை அலையாக வரும் மாற்றங்களை உருவாக்குவது.

    நான் நடிக்கத் தொடங்கிய முதல் நாளிலிருந்தே அது எனது செயல்முறையாகவும் நோக்கமாகவும் இருந்து வருகிறது. நான் இப்போது படங்களைத் தயாரிக்கும் போதும் அதுவே என் நோக்கமாகவே இருக்கும். நான் உங்களுக்கு - Keyuri Productions-ஐ வழங்குகிறேன்," என்று தெரிவித்துள்ளார்

    சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ள நித்யா மேனனுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.



    • சர்வம் மாயா படம் ரூ.100 கோடி வசூலை குவித்துள்ளது.
    • டெலுலு என்ற கதாபாத்திரத்தில் நடித்த ரியா ஷிபுவின் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது.

    நிவின் பாலி நடிப்பில் அண்மையில் வெளியான சர்வம் மாயா படம் ரூ.100 கோடி வசூலை குவித்துள்ளது. இப்படத்தில் டெலுலு என்ற கதாபாத்திரத்தில் நடித்த ரியா ஷிபுவின் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது.

    இந்நிலையில், 'சர்வம் மாயா' படத்தை பாராட்டி நடிகை ரியா ஷிபுவுக்கு மலர்கொத்துடன் சூர்யா - ஜோதிகா தம்பதி வாழ்த்து செய்து அனுப்பியுள்ளனர்.

    20 வயதே ஆன ரியா ஷியு தயாரிப்பு நிறுவனமான HR பிக்சர்ஸின் உரிமையாளர் ஆவார். விக்ரம் நடிப்பில் வெளியான வீர தீர சூரன் படத்தை ரியா ஷியு தான் தயாரித்தார்.

    ரியா ஷிபு இன்ஸ்டாகிராமில் மிகவும் ஃபேமஸ் மற்றும் வைரலானவர். இவர் செய்யும் ரீல்ஸ்-க்கும் மற்றும் பிரத்யேக எடிட்டுக்கு பல ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இப்படத்தில் சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன், முனிஷ்காந்த், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
    • 75 வயது மூதாட்டியாக முக்கிய கதாபாத்திரத்தில் ராதிகா நடித்துள்ளார்.

    சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா நடித்துள்ள புதிய படம் 'தாய் கிழவி'. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ளார். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ள இப்படத்தில் சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன், முனிஷ்காந்த், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    உசிலம்பட்டி கிராமத்தில் உள்ள காடுபட்டியில் வாழும் 75 வயது மூதாட்டி மற்றும் அவரது குடும்பத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் 75 வயது மூதாட்டியாக முக்கிய கதாபாத்திரத்தில் ராதிகா நடித்துள்ளார். இதனை தொடர்ந்து 'தாய் கிழவி' படம் வருகிற 20-ந்தேதி வெளியாகும் என தெரிவித்திருந்த நிலையில், வருகிற 27-ந்தேதி இப்படம் வெளியாகும் என படக்குழு தெரிவித்து இருந்தது. இதனால் வெளியீட்டிற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில், 'தாய் கிழவி' படம் இலங்கையிலும், பிரான்சிலும் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட போஸ்டரில், 'ஒரு தாய் எப்போதும் தன் வழியைக் கண்டுபிடிப்பாள். தாய் கிழவி இலங்கைக்கு வருகிறது, Zineflix நிறுவனம் வெளியிடுகிறது. பிரான்சில் 180 என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் வெளியிடுகிறது. 

    • சாய் அபயங்கர் இசையமைத்து பாடிய பாடல்கள் இளைஞர்கள் மத்தியில் பெரும் ஹிட் அடித்தது.
    • சாய் அபயங்கர் இசையமைத்த டியூட், பல்டி ஆல்பங்கள் ரசிகர்களை கவர்ந்தன.

    சாய் அபயங்கர், பிரபல பின்னணி பாடகர்கள் திப்பு - ஹரிணி தம்பதியின் மகன் ஆவார். சுயாதீன இசைக்கலைஞரான சாய் அபயங்கர் இசையமைத்து பாடிய 'கட்சி சேர' மற்றும் 'ஆச கூட' பாடல்கள் இளைஞர்கள் மத்தியில் பெரும் ஹிட் அடித்தது.

    இதையடுத்து அவர் இசையமைத்த டியூட், பல்டி ஆல்பங்கள் ரசிகர்களை கவர்ந்தன. இதனால் பல பெரிய நடிகர்களின் படங்களுக்கு தற்போது சாய் அபயங்கர் இசையமைத்து வருகிறார்.

    இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் மேடையில் வைத்து சாய் அபயங்கரிடம் தன மகளுக்கு நடிகை தேவயானி வாய்ப்பு கேட்டுள்ளார்.

    மேடையில் சாய் அபயங்கரிடம் பேசிய தேவயானி, "முதலில் சாய் அபயங்கரின் அம்மா - அப்பாவின் ரசிகை நான். இப்போது சாய் அபயங்கரின் ரசிகை. என் மகளும் அவரின் ரசிகை தான். என் மகள் இனியா நன்றாக பாடுவாள். அவளுக்கு உங்களுடன் பாட வேண்டும் என்பது தான் கனவு. எதாவது வாய்ப்பு இருந்தால் என் மகளுக்கு கொடுங்கள்" என்று தெரிவித்தார்.

    • மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.
    • இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

    எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியீட்டிற்கு தயாராக உள்ள படம் 'ஜன நாயகன்'. இப்படம் விஜயின் கடைசி படம் என கூறப்படுவதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. மேலும் இப்படம் ஜனவரி மாதம் 9-ந்தேதி வெளியாகும் என கூறப்பட்ட நிலையில் தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாததால் இதுவரை வெளியாகாமல் உள்ளது.

    'ஜன நாயகன்' படத்தில் பாபி தியோல், கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், பிரியாமணி, பூஜா ஹெக்டே, மமிதா பைஜு மற்றும் நரேன் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை ஜெகதீஷ் பழனிசாமி மற்றும் லோஹித் என்.கே ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

    இதனிடையே, 'ஜன நாயகன்' படத்தில் நடித்துள்ள மமிதா பைஜு, விஜயுடன் பணிபுரிந்த அனுபவத்தை நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்துள்ளார். மமிதா பைஜு கூறியதாவது:- விஜய் சார் படப்பிடிப்பு தளத்திற்கு மிகவும் சரியான நேரத்தில் வருபவர். மிகவும் நிதானமான இயல்புடையவராக இருந்தாலும், அவர் மிகவும் இனிமையானவர். நாம் அவரிடம் சிறிய சிறிய விஷயங்களைச் சொன்னாலும், அவர் அவற்றை நினைவில் வைத்திருப்பார். இரண்டு மாதங்களுக்குப் பிறகு நான் அவரைச் சந்தித்தாலும், அவர் திடீரென்று என்னிடம் அதைப் பற்றிக் கேட்பார்.

    அவருக்குப் பிடித்த உணவுகள் பற்றியும் நான் தெரிந்துக்கொண்டேன். அவர் எப்போதும் மதிய உணவாக சால்மன் (மீன்) சாப்பிடுவார். மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு நான் எப்போதும் அவரிடம், "சார், நீங்கள் சால்மன் (மீன்) சாப்பிட்டீர்களா?" என்று கேட்பேன், அவர் ஒவ்வொரு முறையும் புன்னகையுடன் கூறுவார்" என்றார்.

    • திருமண அழைப்பிதழும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
    • அமிஷ் ஷர்மா இயக்கத்தில் ஷாகித் கபூர் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா நடிப்பதாக இருந்தது.

    விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா திருமணம் வருகிற 26-ந்தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உதய்பூர் அரண்மனையிலும், அதனைத்தொடர்ந்து திருமண வரவேற்பு மார்ச் 4-ந்தேதி நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பான அழைப்பிதழும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. திருமணத்துக்கு சில நாட்களே உள்ள நிலையில், இந்தியில் முன்னணி நடிகரின் படத்தில் இருந்து ராஷ்மிகா விலகியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    அதாவது அமிஷ் ஷர்மா இயக்கத்தில் ஷாகித் கபூர் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா நடிப்பதாக இருந்தது. இதற்கிடையில் ராஷ்மிகாவின் திடீர் விலகல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணத்தையொட்டி, இந்த விலகல் முடிவை அவர் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

    வாழ்க்கை அவரைச் சோதித்தபோது கூட அவர் நேர்மறையாகவே இருந்தார்.

    பிரபல இந்தி நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவின் தந்தை சுனில் மல்ஹோத்ரா (50) நீண்ட நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.

    இந்நிலையில் கடந்த பிப்ரவரி 14 (சனிக்கிழமை) டெல்லியில் அவர் உயிர் பிரிந்ததாக சித்தார்த் மல்ஹோத்ரா நேற்று இரவு தனது இன்ஸ்டா பதிவில் அறிவித்தார்.

    அவரது மறைவைத் தொடர்ந்து, சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் அவரது மனைவி நடிகை கியாரா அத்வானி டெல்லிக்குச் சென்று இறுதிச் சடங்குகளை முடித்துள்ளனர்.

    தனது தந்தையின் மறைவு குறித்த பதவில் சித்தார்த், "அவர் நேர்மை கொண்ட அரிய மனிதர். எதற்கும் வளைந்து கொடுக்காத விழுமியங்களுடன் வாழ்ந்தவர்.

    முரட்டுத்தனம் இல்லாத ஒழுக்கம், அகந்தை இல்லாத பலம் ஆகியவை அவரிடம் இருந்தன. வாழ்க்கை அவரைச் சோதித்தபோது கூட அவர் நேர்மறையாகவே இருந்தார். அப்பா, உங்களின் நேர்மையே எனக்குக் கிடைத்த சொத்து" என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

    சுனில் மல்ஹோத்ரா வணிகக் கடற்படை கேப்டனாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    தற்போது சித்தார்த் மல்ஹோத்ரா தனது குடும்பத்தினருடன் டெல்லியில் தங்கியுள்ளார். திரையுலகைச் சேர்ந்த பலரும் அவருக்குத் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.   

    • மரகத நாணயம் இரண்டாம் பாகத்தையும் ஏகேஆர் சரவணன்தான் இயக்குகிறார்
    • இப்படத்தில் கதாநாயகிகளாக நிக்கி கல்ராணி, பிரியா பவானி சங்கர் நடிக்கின்றனர்.

    தமிழ் திரையுலகில் பேண்டஸி மற்றும் நகைச்சுவை இணைந்து வெற்றிகரமாக உருவான சில படங்களில், ஒன்று மரகத நாணயம். நடிகர் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி நடிப்பில், இயக்குநர் ஏ.ஆர்.கே. சரவணன் இயக்கத்தில் வெளியான இந்த படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

    இதனைத்தொடர்ந்து தற்போது இதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இரண்டாம் பாகத்தையும் ஏகேஆர் சரவணன்தான் இயக்குகிறார். இதில் ஆதி, நிக்கி கல்ராணி, பிரியா பவானி சங்கர், முனிஷ்காந்த், சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார்.

    பேஷன் ஸ்டூடியோஸ், அக்செஸ் ஃபிலிம் ஃபேக்டரி இணைந்து படத்தை தயாரித்துள்ளது. அண்மையில் மரகத நாணயம் 2' படத்தின் பூஜை நடைபெற்றது.பூஜையில் நடிகர் கார்த்தி, இயக்குநர் வெங்கட் பிரபு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

    இந்நிலையில், 'மரகத நாணயம் 2' படப்பிடிப்பின் பூஜை வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. 

    ×