என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல் செய்திகள்

    இந்த ஸ்கூட்டர் பழைய அவெனிஸ் ஸ்கூட்டரின் புதிய வேரியண்டாகும். இது ஸ்போர்ட்டி இன்ஜினுடன் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    சுஸூகி நிறுவனத்தின் அவெனிஸ் ஸ்கூட்டரின் புதிய ட்ரிம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

    இந்த ஸ்கூட்டரில் 125cc இன்ஜின் FI தொழில்நுட்பத்துடன் தரப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 6750 rpm-ல் 8.7 PS அதிகப்பட்ச சக்தியையும், 5500 rpm-ல் 10Nm டார்க்கையும் உருவாக்கக்கூடியது. இந்த ஸ்கூட்டர் 106 கிலோ எடையை கொண்டுள்ளதால் குறைந்த எடை கொண்ட ஸ்கூட்டர்கலில் ஒன்றாக இருக்கிறது.

    மேலும் இந்த ஸ்கூட்டரில் எல்.இ.டி லைட்டிங் ஹெட்லேம்ப் மற்றும் டெயில் லேம்பிற்கு தரப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் வெளிப்புற ஹிஞ்ச் வகை எரிபொருள் கேப் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சீட்டிற்கு கீழே உள்ள இடம் மேலும் பெரிதாக்கப்பட்டுள்ளது.

    இந்த பைக் ஸ்போர்ட்டி இன்ஜினுடன் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த ஸ்கூட்டரின் விலை ரூ.86,500-ஆக அறிவிக்கபட்டுள்ளது. இது முந்தைய ட்ரிம்மை விட ரூ.200 குறைவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
    ஹோண்டா சிட்டி, ஹோண்டா WR-V, ஹோண்டா அமேஸ் ஆகிய கார்களுக்கு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
    ஹோண்டா நிறுவனம் தனது வாகனங்களுக்கு சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. இதன்படி ஹோண்டா சிட்டி கார்களுக்கு ரூ.5,396 வரை சலுகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் எக்ஸ்சேஜ் ஆஃபரில் வாங்குவோருக்கு கூடுதலாக ரூ.5000 சலுகையும், கார்பரேட் சலுகையில் வாங்குவோருக்கு ரூ.7000 கூடுதல் சலுகையும் வழங்கப்படவுள்ளது.

    இத்துடன் லாயல்டி போனஸும் இந்த காருக்கு வழங்கப்படுகிறது.

    ஹோண்டா சிட்டி 5வது ஜெனரேஷன் கார் மிட் அளவு செடான் காராக இருக்கிறது. இது பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் தேர்வுகளில் வருகிறது.

    இந்த கார் சிவிடி டிரான்ஸ்மிஷனை வழங்குகிறது. அத்துடன் அதிக இடமுள்ள, பல அம்சங்கள் நிறைந்த கேபினை வழங்குகிறது.

    அதேபோல ஹோண்டா WR-V காருக்கு எக்ஸ்சேஞ்ச் சலுகையாக ரூ.10000 வரை வழங்கப்படுகிறது. லாயல்டி போனஸாக ரூ.5000, கார்பரேட் சலுகையாக ரூ.5000 சலுகையும் இந்த காருக்கு உண்டு.

    இந்த கார் 5 பேர் அமரக்கூடிய கிராஸ் ஓவர் எஸ்யூவி ரக கார் ஆகும். இந்த கார் 4 வேரியண்டுகளில் 2 இன்ஜின் தேர்வுகளில் வருகிறது.

    ஹோண்டா நிறுவனம் ஹோண்டா அமேஸ் காருக்கும் சலுகையை அறிவித்துள்ளது. இதன்படி இந்த காரை வாங்குபவர்களுக்கு ரூ.5000 லாயல்டி போனஸ் வழங்கப்படும். அத்துடன் கார்பரேட் சலுகை, கார் எக்ஸ்சேஞ்ச் சலுகையும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இந்த பைக்கை ரூ.5000-ல் இருந்து ரூ.10000 வரை கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்யலாம்.
    யமஹா மோட்டார் இந்தியா புதிய எம்டி15 வெர்ஷன் 2.0 பைக்கை விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளது.

    இந்த பைக் கிரே, வைட், கிளாசிக் பிளாக் மற்றும் ரேஷிங் ப்ளூ ஆகிய நிறங்களில் வருகிறது.

    இது மேம்பட்ட ஸ்டிரீட் நேக்கட் மோட்டார் சைக்கிள் மாடலில் கோல்டு ஃபினிஷ் செய்யப்பட்ட யுஎஸ்டி முன்புற ஃபோர்க்குளை கொண்டிருக்கும்  என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதில் டூயல் சேனல் ஏ.பி.எஸ்., டிராக்‌ஷன் கண்ட்ரோல், குவிக் ஷிஃப்டர், இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், ப்ளூடூத் கனெக்டிவிட்டி ஆகியவை இடம்பெறும் என கூறப்படுகிறது. 

    இதன் ரியல்டைம் டேட்டாவை ஸ்மார்ட்போனிலேயே பார்த்து தெரிந்துகொள்ளும் அம்சமும் இடம்பெற்றுள்ளது.

    இந்த பைக்கில் 155சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு இன்ஜின் மற்றும் விவிஏ தொழில்நுட்பம் வழங்கப்படவுள்ளது. மேலும் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் அப்-குயிக் ஷிஃப்டர் தரப்படுகிறது. இந்த இன்ஜின் 18.1 பி.ஹெச்.பி. பவர், 14.2 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறனை கொண்டுள்ளது.

    இந்த பைக்கை ரூ.5000-ல் இருந்து ரூ.10000 வரை கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்யலாம். 

    இந்த பைக்கின் விலை ரூ.1.46 லட்சமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    இந்த பைக்கில் உள்ள 125 சிசி பிஎஸ் 6 காம்பைலண்ட் இன்ஜின் 7000 RPM-ல் 9bhp மற்றும் 5500-ல் 10.4NM டார்க்கையும் உருவாக்ககூடியது.
    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புதிய டெஸ்டினி 125 XTEC ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்கூட்டரில் புதிய எல்.இ.டி ஹெட்லேம்புகள், ரெட்ரோ டிசைன் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

    இந்த ஸ்கூட்டரில் ஐ3எஸ் தொழில்நுட்பம்,  ஐடெல் ஸ்டாப் ஸ்டார்ட் சிஸ்டம், புதிய டிஜி அனலாக் ஸ்பீடோமீட்டர் ப்ளூடூத் கனெக்டிவிட்டியுடன் வருகிறது. இதன்மூலம் நாம் போன் கால் மற்றும் எஸ்எம்எஸ் அலர்ட்டுகளை மேற்கொள்ளமுடியும். இதைத்தவிர யூஎஸ்பி சார்ஜர், சைட் ஸ்டாண்ட் இன்ஜின் கட் ஆப், சீட் பேக்ரெஸ்ட் ஆகியவையும் வழங்கப்பட்டுள்ளன.

    இந்த பைக்கில் உள்ள 125 சிசி பிஎஸ் 6 காம்பைலண்ட் இன்ஜின் 7000 RPM-ல் 9bhp மற்றும் 5500-ல் 10.4NM டார்க்கையும் உருவாக்ககூடியது.

    இரண்டு ட்ரிம்களில் வெளியாகும் இந்த பைக்கின் ஸ்டாண்டர்ட் ட்ரிம்மின் விலை ரூ.69,900-ஆகவும், அதிக அம்சங்கள் கொண்ட ட்ரிம்மின் விலை ரூ.79,990-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    கடந்த வருடத்தில் 13 சதவீதம் வரை புதிய வாகனத்தின் விலை உயர்ந்துள்ளதாகவும், பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விலையும் 29 சதவீதம் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
    உலகம் முழுவதும் ஆட்டோமொபைல் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆட்டோமொபைல் நிறுவனங்கள் புதுப்புது கார்கள், பைக்குகளை தொடர்ந்து சந்தையில் அறிமுகம் செய்த வண்ணம் இருக்கின்றன.

    இந்நிலையில் ஃபோக்ஸ்வேகன், மெர்சடிஸ் பென்ஸ், பி.எம்.டபில்யூ, டொயோட்டோ உள்ளிட்ட நிறுவனங்கள் திடீரென விலை உயர்வை இந்த மாதம் முதல் அறிவித்துள்ளன.

    ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் மற்றும் ஏனைய ஆட்டோ மொபைல் சார்ந்த பொருட்கள் விலை ஏறியதால் வாகனங்களின் விலையும் உயர்த்தப்படுவதாக ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அறிவித்தன. இந்நிலையில் இந்த விலை உயர்வுக்கு ரஷியா - உக்ரைன் போர் முக்கிய பங்குவகிப்பதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த போரினால் உலக ஆட்டோமொபைல் துறை பெரும் பாதிப்பை சந்திக்கும் என்றும், அந்த பாதிப்பு தொடர்ந்து வளரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
     
    ரஷியா உக்ரைன் போரினால் பி.எம்.டபில்யூ இரண்டு ஜெர்மன் தொழிற்சாலைகளில் உற்பத்தியை நிறுத்தியுள்ளது. பென்ஸ் நிறுவனமும் தங்களது தொழிற்சாலையில் உற்பத்தியை தாமதப்படுத்தியுள்ளது. இதுபோன்ற உற்பத்தி பாதிப்பு உலக அளவில் வாகனங்கள் வாடிக்கையாளர்கள் கைகளுக்கு சென்று சேர்வதை தாமதமாக்குவதால், வாகனங்களின் விலையும் உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதைத்தவிர கம்ப்யூட்டர் சிப்ஸ் மற்றும் பிற கணினி பாகங்களுக்கான பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. இதுவும் பழைய மற்றும் புதிய கார்களின் விலை உயர்வை அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது.

    உக்ரைன் நாடு எலக்ட்ரிக்கல் ஒயரிங் ஏற்றுமதியில் பெரும் பங்கு வகிக்கிறது. ரஷியாவும் கேட்டலிட்டிக் கன்வெர்டர் மற்றும் மின்சார வாகன பேட்டரிக்களுக்கான நிக்கல் உள்ளிட்ட உலோக ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகிக்கும் நாடாக இருக்கிறது. இந்த இரு நாடுகளும் போரில் ஈடுபட்டுள்ளதால் இந்த பாதிப்பு ஆட்டோமொபைல் சந்தையையை பெரிதும் பாதித்துள்ளது.

    கடந்த வருடத்தில் 13 சதவீதம் வரை புதிய வாகனத்தின் விலை உயர்ந்துள்ளதாகவும், பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விலையும் 29 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ரஷிய உக்ரைன் பிரச்சனை நீடிக்கும் வரை இந்த விலை தொடர்ந்து அதிகரித்துகொண்டே இருக்கும் என கூறப்படுகிறது.
    கடந்த காலாண்டில் விற்பனையான கார்களில் 40 சதவீத புதிய கார்கள் மின்சாரம் அல்லது ஹைப்ரிட் வகை கார்களாகவே இருந்துள்ளன.
    உலகம் முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை தொடர்ந்து மின்சார வாகனங்களை வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர்.

    பெரும் ஆட்டோமொபைல் நிறுவனங்களும் மின்சார வாகனங்களை தயாரித்து புதிய புதிய மாடல்களை சந்தையில் அறிமுகம் செய்கின்றன. ஏற்கனவே பெட்ரோல், டீசலில் உற்பத்தி செய்யப்பட்ட மாடலில் மின்சார வெர்ஷனையும் நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன.

    இந்நிலையில் பிரான்ஸ் நாட்டில் முதல் முதலாக பெட்ரோல் வாகனங்களை விட மின்சார வாகனங்களின் விற்பனை அதிகரித்து சாதனை படைத்துள்ளது.

    குறிப்பாக  இந்த ஆண்டு ஜனவரி முதல் பிரான்ஸ் நாட்டில் மின்சார வாகனங்கள்ள் விற்பனை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அரசாங்கமும் மானியம் உள்ளிட்டவற்றை வழங்கி வருவதால் மக்கள் மின்சார வாகனங்களில் அதிகம் ஆர்வம் செலுத்த தொடங்கியுள்ளனர்.

    கடந்த காலாண்டில் விற்பனையான கார்களில் 40 சதவீத புதிய கார்கள் மின்சாரம் அல்லது ஹைப்ரிட் வகை கார்களாகவே இருந்துள்ளன. 38 வகை கார்கள் பெட்ரோல் வகை மாடல்களாக இருந்துள்ளன.

    கடந்த மாதம் அதிகம் விற்ற மின்சார கார்களின் முதலிடத்தில் டெஸ்லா மாடல் 3 இருந்துள்ளது, ரெனால்டின் டாசியா, ஸ்டெல்லாண்டிஸின் பியேகியாட் 208 ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. பிரான்ஸில் உள்நாட்டு தயாரிப்பாக சிட்ரியான், ஜெர்மன் கார் தயாரிப்புகளான பிஎம்டபில்யூ, ஆடி, மெர்சடிஸ் ஆகியவற்றின் கார்களும் அதிகம் விற்கப்பட்டுள்ளன.

    மேலும் பிரான்சில் புதிய கார்கள் விற்பனை கடந்த காலாண்டில் 20 சதவீதம் வரை சரிவை சந்தித்துள்ளது. இதற்கு காரணம் உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள செமி கண்டெக்டர்கள் சிப் பற்றாக்குறை தான் என கூறப்படுகிறது.

    ஃபிரான்ஸில் பெட்ரோல் கார் விற்பனையை மின்சார வாகனங்கள் முந்தினாலும் அந்நாட்டில் டீசல் வாகனங்களே அதிகம் விற்கப்பட்டு வருகின்றன. கிட்டதட்ட 16.5 சதவீதம் சந்தை பங்கை டீசல் கார்கள் முதல் காலாண்டில் வைத்திருந்தன. தற்போதும் வைத்துள்ளன. ஆனால் இன்னும் 3 ஆண்டுகளில் மின்சார கார் விற்பனை டீசல் கார்களையும் முந்தி செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    மாருது சுஸூகி நிறுவனம் இதுவரை 22.5 லட்சம் கார்களை 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஏற்றுமதி செய்துள்ளது.
    நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மாருதி சுஸுகி இந்தியா, கடந்த 2021 - 22ஆம் நிதியாண்டில் 2,38,376 கார்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து சாதனை படைத்துள்ளது. 

    அதுபோல, இந்த 2022ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மட்டும் 26,496 கார்களை மாருதி சுஸூகி ஏற்றுமதி செய்திருக்கிறது. இது மாருதி சுஸுகி வரலாற்றிலேயே ஒரு மாதத்தில் ஏற்றுமதி செய்யப்பட்ட அதிகபட்ச கார்களின் எண்ணிக்கை ஆகும். 

    கடந்த 1986-ம் ஆண்டு முதல் வாகனங்களை ஏற்றுமதி செய்து வரும் மாருது சுஸூகி நிறுவனம் இதுவரை 22.5 லட்சம் கார்களை ஏற்றுமதி செய்துள்ளது. மாருதியின் கார்கள் 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.


    இதுகுறித்து மாருதி சுஸுகி இந்தியாவின் புதிய நிா்வாக இயக்குநா் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக பொறுப்பேற்றிருக்கும் ஹிஷாசி டாக்யூச்சி கூறியதாவது:-

    இந்த நாள் வாழ்வில் மறக்க முடியாத நாளாக அமைந்துவிட்டது. நான் இந்த நிறுவனத்தின் புதிய நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக பொறுப்பேற்றுக் கொண்டிருக்கும் இந்த வேளையில், மாருதி சுஸுகி நிறுவனம் ஏற்றுமதியில் வரலாற்றுச் சிறப்பு மிக்க சாதனையை படைத்துள்ளது. இந்த வளர்ச்சி தொடந்து அதிகரிக்கும் என நம்புகிறேன்.

    இவ்வாறு ஹிடாஷி டாக்யூச்சி கூறினார்.
    Global NCAP அமைப்பு இந்த காரின் பாதுகாப்புக்கு 4 ஸ்டார் மதிப்பீட்டை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
    ரெனால்ட் இந்தியா நிறுவனம் 2022 ஆம் ஆண்டிற்கான புதிய ரெனால்ட் கிகர் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டில் ரெனால்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கும் 3-வது கார் இதுவாகும்.

    இப்போது வெளியிடப்பட்டிருக்கும் இந்தக் கார் கருப்பு நிறத்திலான டாப் ரூப்பைக் கொண்ட இரண்டு வண்ண விருப்பங்களில் அறிமுகப்படுத்தியுள்ளது. கம்பீரமான தோற்றம் மற்றும் அசத்தல் அம்சங்களை கொண்டிருக்கும் ரெனால்ட் கிகருக்கான முன்பதிவும் தொடங்கப்பட்டுள்ளது.

    சிறிய எஸ்யூவி டர்போ ரக காரான இதில் புதிய டெயில்கேட் மற்றும் குரோம் வேலைப்பாடு, முன்பக்கத்தில் ஸ்கிட் பிளேட்டுகள் மற்றும் டர்போ டோர் டீக்கால்ஸ் ஆகியவை உள்ளன. இந்த காரில் 16-இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள் சிவப்பு வீல்கேப்களுடன் வருகின்றன.

    இந்த காரில் மல்டி சென்ஸ் டிரைவிங் மோடுகள் மற்றும் PM2.5 அட்வான்ஸ்டு அட்மாஸ்பியர் ஃபில்டரை உள்ளடக்கிய லேட்டஸ்ட் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. வயர்லெஸ் சார்ஜிங், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் 60/40 ஸ்பிலிட் ரியர் சீட் உடன் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட் உள்ளது. 

    மேலும் இந்த புதிய ரெனால்ட் சிகர் கார் இரண்டு எஞ்சின் தேர்வுகளுடன் வழங்கப்படுகிறது. 1.0-லிட்டர் எனர்ஜி இன்ஜின் மேனுவல் மற்றும் ஈஸி-ஆர் ஏஎம்டி டிரான்ஸ்மிஷன்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. மற்றொரு இன்ஜின் மேனுவல் மற்றும் எக்ஸ்-டிரானிக் சிவிடி டிரான்ஸ்மிஷன்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. 

    ஒரு லிட்டர் பெட்ரோலில் இந்த கார் 20 கிலோ மீட்டர் மைலேஜுக்கு மேல் தரும் என கூறப்படுகிறது. 

    இந்த காரில் 2 ஏர்பேக்குகள், EBD உடன் ஏபிஎஸ், பின்புற பார்க்கிங் சென்சார்கள், சென்சிங் டோர் அன்லாக் மற்றும் ஸ்பீட் சென்சிங் டோர் லாக் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதற்காக Global NCAP அமைப்பு இந்த காரின் பாதுகாப்புக்கு 4 ஸ்டார் மதிப்பீட்டை வழங்கியுள்ளது. 

    இந்த காரின் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ.5.84 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
    ஏற்கனவே பி.எம்.டபில்யூ, பென்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் வாகனங்களின் விலையை உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளன.
    இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், தனது மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களின் விலையை ரூ.2,000 வரை உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளது.  இந்த விலை உயர்வு ஏப்ரல் 5 முதல் அமலுக்கு வரும் என தெரிவித்துள்ளது.

    மோட்டார் உதிரி பாகங்கள் மற்றும் வாகனப் பிரிவின் பல அம்சங்களின் ஏற்பட்டுள்ள விலை உயர்வால் இருசக்கர வாகனங்களின் விலையை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த விலை உயர்வு  மாடல் மற்றும் சந்தையைப் பொறுத்து மாறுபடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     டோயோடோ கிர்லோஸ்கர் மோடர், ஆடி, பிஎம்டபிள்யூ, மெர்சடிஸ்-பென்ஸ் ஆகிய நிறுவனங்களும் ஏற்கனவே ஏப்ரல் 2022 முதல் வாகனங்களின் விலையை உயர்த்தப்போவதாக அறிவித்த நிலையில், ஹீரோ நிறுவனமும் விலையை உயர்த்தப்போகிறது.
    இந்தியாவில் மக்கள் பழைய கார்களை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் பல்வேறு காரணங்களால் அதன் விலை அதிகரித்துள்ளது.
    இந்தியாவில் புதிய கார்களை விட பயன்படுத்தப்பட்ட கார்களே அதிகம் விற்பனை ஆகி வருகின்றன. இந்நிலையில் இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட கார்களின் விலை 10 சதவீதம் வரை கடந்த ஆண்டு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் பயன்படுத்தப்பட்ட கார்கள் தற்போது கிடைப்பதே அரிதாக இருப்பதாக கூறப்படுகிறது. அதிகரிக்கும் பணவீக்கம், வேலைவாய்ப்பு குறித்த பிரச்சனைகள் ஆகிய காரணங்களால் புதிய கார்கள் வாங்கப்படுவது குறைவதனால் பழைய கார்களை விற்க யாரும் முன்வருவதில்லை என்பதால் தேவை அதிகரித்து விலை உயர்ந்துள்ளது.

    இதுகுறித்து மாருதி சுஸூகியின் நிர்வாக இயக்குநர் ஷாசங் ஸ்ரீனிவாட்சா கூறுகையில், வாடிக்கையார்கள் புது கார் ஒன்றை வாங்க வேண்டும் என பணம் சேர்த்து அல்லது கடனுக்கு விண்ணப்பித்து பணம் கைக்கு வந்தவுடன் வாங்க வரும்போது அந்த காரின் விலை ஏறி விடுகிறது. இதனால் அவர்களுக்கு பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்குவது தான் சுலபமாக இருக்கிறது. மேலும் பெரும்பாலான மாநிலங்கள் பழைய கார்களை அழிக்கும் திட்டங்களை கொண்டு வருவதால் பயன்படுத்தப்பட்ட கார்களின் விலை உயர்ந்து வருகிறது என தெரிவித்துள்ளார்.

    கொரோனா காலக்கட்டத்தில் ஒருவர் பழைய காரை விற்றுவிட்டு புதிய காரை வாங்குவது 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

    மகிந்திரா நிறுவனத்தை பொறுத்தவரை அதன் பயன்படுத்தப்பட்ட கார்களின் விலை 5 முதல் 15 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
    ஒரு லிட்டருக்கு 45 கி.மீ தூரம் வரை செல்லக்கூடிய எகானமியை இந்த ஸ்கூட்டர் கொண்டுள்ளது.
    2022 ஆண்டுக்கான யமஹா ஃபோர்ஸ் எக்ஸ் ஸ்போர்டி ஸ்கூட்டர் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த ஸ்கூட்டரில் ஹெவி ட்யூட்டி டிசைன் வெளிப்பக்கத்தில் தரப்பட்டுள்ளது. மேலும் டூயல் டோன் பாடி பேனல்கள் இதற்கு ஸ்போர்ட்டினஸை தருகிறது. மேலும் இதில் முன்பக்கத்தில் உள்ள அப்ரான் மவுண்ட் செய்யப்பட்ட ஹெட் லேம்ப், சிங்கிள் ஸ்டெப்ட் சீட், அலாய் வீல்கள் தரப்பட்டுள்ளன.

    ஹெட்லேம்பிற்கு கீழ் தரப்பட்டுள்ள ஃபிரெண்ட் பீக் இந்த ஸ்கூட்டருக்கு தனித்தன்மையான தோற்றத்தை தருகிறது. மேலும் இதில் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர்கள் அனைத்தும் டிஜிட்டலைஸ் செய்யப்பட்டுள்ளன.

    இந்த ஸ்கூட்டரில் 125சிசி ஏர் கூல்ட் இன்ஜின் தரப்பட்டுள்ளது. இது 6500rpm-ல் 8.9bhp பவரை தரக்கூடியது. அதேபோல 5000rpm-ல் 9.7Nm பீக் டார்க்கையும் இந்த ஸ்கூட்டர் தரக்கூடியது. இதன் டிரான்ஸ்மிஷனுக்காக சிவிடி கியர்பாக்ஸ் தரப்பட்டுள்ளது.

    இந்த ஸ்கூட்டரில் ஸ்டாண்டர்ட் 10 இன்ச் வீல் முன்பக்கத்தில் பின்பக்கத்திலும் தரப்பட்டுள்ளன.  இதன் முன்பக்கத்தில் டிஸ்க் பிரேக்கும், பின்பக்கத்தில் டிரம்யூனிட்டும் தரப்பட்டுள்ளன. சஸ்பென்ஷனுக்காக இதில் ஃப்ரண்ட் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகள் இடம்பெற்றுள்ளன.

    இந்த பைக் 92 கிலோ எடையை கொண்டது. மேலும் ஒரு லிட்டருக்கு 45 கி.மீ தூரம் வரை செல்லக்கூடிய எகானமியை கொண்டுள்ளது.

    இந்த ஸ்கூட்டரின் விலை இந்திய மதிப்பில் ரூ.1.07 லட்சமாகும். இந்தியாவில் இந்த ஸ்கூட்டரை வெளியிடுவதற்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. 
    கடந்த மாதம் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் ஏர்பேக் பிரச்சனை காரணமாக 2 லட்சம் யூனிட்டுகள் எஸ்.யூ.வியை திரும்ப பெற்றது குறிப்பிடத்தக்கது.
    ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் சுமார் 10,119 காரை அமெரிக்காவில் திரும்ப பெற்றுள்ளது. தயாரிப்பின் போது ரியர் சஸ்பென்ஷனில் ஏற்பட்ட பிரச்சனை தான் இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    2021 மற்றும் 2022-ம் ஆண்டு டிகுவான், 2022 டாவோஸ் ஆகிய காம்பெக்ட் கிராஸ் ஓவர் கார்கள் மேற்கூறிய தயாரிப்பு பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளன.

    ரியர் சஸ்பென்ஷன் பிரச்சனையால் பின்பக்கம் உள்ள இடது அல்லது வலது பக்கம் உள்ள கினக்குல்கள் உடைந்துக்கொள்கின்றன.

    திரும்ப பெறப்பட்ட கார்களில் 6 சதவீதம் பின்பக்க கினக்கில் பிரச்சனைகளே காரணம் என கூறப்படுகிறது.

    ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் அமெரிக்காவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு இந்த பிரச்சனை குறித்து தகவல் அனுபி வருகிறது. குறிப்பாக டிகுவான், டாவோஸ் வாகனம் வைத்திருப்பவர்கள் அருகில் உள்ள ஃபோக்ஸ்வேகன் டீலரிடம் சென்று பரிசோதனை செய்துகொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளன. பிரச்சனை எதுவும் இருந்தால் கூடுதல் செலவு எதுவும் இல்லாமல் இரண்டு கினக்கில்களும் மாற்றித்தரப்படும் என கூறப்படுகிறது.

    அமெரிக்காவை தாண்டி பிறநாடுகளுக்கும் இந்த பிரச்சனை இருக்குமா என சரிபார்க்கப்படுகிறது.

    அதேபோல கடந்த மாதம் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் ஏர்பேக் பிரச்சனை காரணமாக 2 லட்சம் யூனிட்டுகள் எஸ்.யூ.வியை திரும்ப பெற்றது குறிப்பிடத்தக்கது.
    ×