என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல் செய்திகள்

    கிஸ்ஃப்ளோ என்ற நிறுவனம் 5 ஊழியர்களுக்கு பிஎம்டபில்யூ காரை பரிசளித்த நிலையில் தற்போது மற்றொரு ஐடி நிறுவனம் 100 ஊழியர்களுக்கு பரிசளித்துள்ளது.
    சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் Ideas2IT நிறுவனம் என்ற மென்பொருள் நிறுவனம், அதன் வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் தொடர்ந்து உறுதுணையாக இருந்த ஊழியர்களை பாராட்டும் விதமாக 100 பேருக்கு புதிய மாருதி சுஸூகி கார்களை பரிசளித்துள்ளது.

    இதுகுறித்து Ideas2IT நிறுவனத்தின் நிறுவனர் முரளி விவேகானந்தன் கூறுகையில், கார்களைப் பரிசளிப்பது குறித்து ஊழியர்களால் இணைந்து கூட்டாக முடிவு செய்யப்பட்டது. எங்கள் நிறுவனத்தில் ஐந்தாண்டுகள் பணியாற்றிய அனைத்து ஊழியர்களுக்கும் கார் பரிசளிக்கப்பட்டுள்ளது என கூறினார்.

    இந்த கார் எங்களது ஊழியர்கள் இதுவரை செய்த பணிக்காக வழங்கப்பட்டது. ஊழியர்களுக்கான ஊக்கத் திட்டங்களின் முதல் படி தான் இந்த நடவடிக்கை. நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்டவர்களுக்கு வளர்ச்சி ஒரு பங்கை அளிக்கும் முயற்சியாக இத்தகைய திட்டத்தைக் கையில் எடுத்துள்ளோம் எனக் கூறினார்.

    இந்த கார்களில் எஸ் கிராஸ் முதல் பலேனோ கார் வரை வழங்கப்பட்டுள்ளது. பரிசுபெற்ற ஊழியர்கள் சென்னையில் இருந்து மட்டுமில்லாமல் பல மாவட்டங்களிலும், சிலர் சிறிய ஊர்களையும் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே கிஸ்ஃப்ளோ என்ற நிறுவனம் 5 ஊழியர்களுக்கு பிஎம்டபில்யூ காரை பரிசளித்த நிலையில் தற்போது மற்றொரு ஐடி நிறுவனம் 100 ஊழியர்களுக்கு பரிசளித்துள்ளது.
    இந்த பேட்டரி தொழில்நுட்பம் 2028ம் ஆண்டுக்குள் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    பெட்ரோல், டீசல் விலை உயர்வால் உலகம் முழுவதும் மின்சார வாகனங்களுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. பெரும் நிறுவனங்கள் மின்சார வாகன தயாரிப்பில் தீவிரமாக இயங்கி வருகின்றன.

    தினமும் புதுப்புது தொழில்நுட்பங்களுடன், அம்சங்களுடன் மின்சார வாகனங்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் நிசான் நிறுவனம் புதிய பேட்டரி தொழில்நுட்பத்தை மின்சார வாகனங்களுக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

    சாலிட் ஸ்டேட் பேட்டரி செல்கள் மூலம் உருவாக்கப்பட்டுள்ள இந்த பேட்டரிகள் வழக்கமான லித்தியம் அயன் பேட்டரிகளை விடவும் இரண்டு மடங்கு டென்சிட்டியை உருவாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் குறைந்த விலையில் இந்த பேட்டரிகளை உற்பத்தி செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தற்போது பரிசோதனை நிலையில் உள்ள இந்த பேட்டரியை முழுதாக 15 நிமிடத்திற்கு சார்ஜ் செய்துவிடலாம் என்றும், தற்போது உள்ள பேட்டரியை விட எடை குறைவு எனவும் கூறப்பட்டுள்ளது. அதேசமயம் இந்த பேட்டரி வழக்கமான பேட்டரிக்களை விட மக்கள் நீண்ட நேரம் பயணம் செய்யலாம் என கூறப்படுகிறது.

    இந்த தொழில்நுட்பம் மக்களை மேலும் மின்சார வாகனங்களை நோக்கி செலுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரி தொழில்நுட்பம் 2028ம் ஆண்டுக்குள் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    பரிசு பெற்றவர்களிடம் முன்கூட்டியே தெரிவிக்காமல் அவர்களுக்கு ஆச்சரியம் அளிக்கும் வகையில் இந்த கார்கள் பரிசளிக்கப்பட்டுள்ளன.
    சென்னையை சேர்ந்த கிஸ்ஃப்ளோ இன்கார்பரேஷன் என்ற சர்வதேச மென்பொருள் சேவை நிறுவனம் தனது 5 ஊழியர்களுக்கு தலா ரூ.1 கோடி மதிப்புள்ள பி.எம்.டபில்யூ கார்களை பரிசளித்துள்ளது.

    பிஎம்டபில்யூ 5 சீரிஸ் லக்சரி செடான் கார்கள் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    கிஸ்ப்ளோ நிறுவனத்தின் 10வது ஆண்டு நிறைவையொட்டி இந்த பரிசு சிறந்த வஊழியர்களுக்கு தரப்பட்டுள்ளது. பரிசு பெற்றவர்களிடம் முன்கூட்டியே தெரிவிக்காமல் அவர்களுக்கு ஆச்சரியம் அளிக்கும் வகையில் இந்த கார் பரிசளிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அந்நிறுவனத்தின் சி.இ.ஓ சுரேஷ் சம்பந்தம் கூறியதாவது:-

    பரிசளிக்கப்பட்ட 5 ஊழியர்களும் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டதில் இருந்து என்னுடன் இருந்தவர்கள். குறிப்பாக பெருந்தொற்று காலத்தில் நிறுவனத்தை வெற்றிகரமாக வழிநடத்தியவர்கள். அதிலும் சிலர் மிகவும் எளிமையான பின்னணியில் இருந்து வந்தவர்கள்.

    இந்த நிறுவனத்தில் ஊழியர்களுக்கு அனைத்து வகை வசதிகளும் செய்து தரப்படுகிறது. விடுமுறையை பொறுத்தவரை தனித்தனியாக ஆரோக்கிய விடுப்பு, சாதாரண விடுப்பு என்றெல்லாம் கிடையாது. ஒரே விதமான விடுப்பு தான். அவர்களுக்கு பிடித்தால் எடுத்துகொள்ளலாம். அதேபோல அலுவலகத்திற்கு வர விருப்பமில்லை என்றால் ஊழியர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்துகொள்ளலாம். அதேபோல ஊழியர்களுக்கு அட்டெண்டஸும் பிற நிறுவனங்களை போல கிடையாது. 

    எங்கள் ஊழியர்களை நாங்கள் ஊக்குவிக்கும் வகையில் இவற்றை செய்து வருகிறோம்.

    இவ்வாறு தெரிவித்துள்ளார்.
    கடந்த மார்ச் மாதத்தில் அதிகம் விற்கப்பட்டுள்ள எஸ்.யூ.வி ரக கார்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
    இந்தியாவில் ஆட்டோமொபைல் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மக்கள் புதிய கார்களை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த மார்ச் மாதத்தில் அதிகம் விற்கப்பட்டுள்ள எஸ்.யூ.வி ரக கார்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

    இதன்படி மாருதி சுஸூகியின் வாகன் ஆர் கார் 24,634 யூனிட்டுகள் விற்பனை செய்யப்ப்பட்டுள்ளது.  இதை தொடர்ந்து மாருதி சுஸூகியின் டிஜையர் 18,623 யூனிட்டுகள் விற்பனை செய்யபட்டுள்ளன. அடுத்ததாக மாருதி சுஸூகியின் பலேனோ 14,520 யூனிட்டுகள் விற்கப்பட்டுள்ளன. 

    கடந்த மாதம் அதிகம் விற்கப்பட்ட கார்களில் முதல் மூன்று இடத்தில் மாருதி சுஸூகி நிறுவனமே ஆதிக்கம் செலுத்துகிறது.

    அடுத்ததாக டாடா நிறுவனத்தின் டாடா நேக்ஸன் 14,315 யூனிட்டுகள் விற்பனையாகியுள்ளது. பிறகு மீண்டும் மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் 13623 யூனிட்டுகளும், மாருதி சுஸூகி விட்டாரா ப்ரெசா 12,439 யூனிட்டுகளும் விற்பனையாகியுள்ளன. ஹுண்டாய் கிரேட்டா 10,532 யூனிட்டுகள் விற்பனையாகியுள்ளது. டாடா பஞ்ச் 10,526 யூனிட்டுகளும், ஹுண்டாய் கிராண்ட் ஐ10 நியோஒஸ் 9687 யூனிட்டுகளும், மாருதி சுஸூகி எக்கோ 9221 யூனிட்டுகளும் விற்பனையாகியுள்ளன.
    கடந்த வாரம் பூனேயில் ஓலா ஸ்கூட்டர் தீப்பற்றி எரிந்த பிரச்சனை எழுந்த நிலையில் தற்போது ரிவர்ஸ் மோட் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
    ஓலா நிறுவனத்தின் எஸ்1 ப்ரோ மின்சார ஸ்கூட்டர் மாடல் அதிக அளவில் விற்பனையாகி வருகிறது. இருப்பினும் சமீபத்தில் புனேவில் இந்த ஸ்கூட்டார் தீப்பிடித்து எரிந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது இந்த ஸ்கூட்டர் புதிய பிரச்சனை ஒன்றை சந்தித்து வருகிறது.

    இதன்படி இந்த ஸ்கூட்டரை பின்பக்கம் இழுக்கும்போது தானாகவே 'Reverse Mode' ஆன் ஆகி விடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆக்சலேட்டர் கொடுத்தால் வண்டி வேகமாக பின்பக்கத்தில் செல்கிறது.

    இதனால் வண்டியில் பேலன்ஸ் விடுப்பட்டு விபத்து ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    பெங்களூரில் பயனர் ஒருவர் இதுபோன்று ரிவர்ஸ் மோடில் விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து அவர் ஓலா நிறுவனத்தை தொடர்புகொண்டும் எந்த வித பதிலும் 48 மணி நேரத்திற்கு சரியாக அளிக்கப்படவில்லை என கூறினார்.

    இந்த பிரச்சனையை சரி செய்யக்கோரி பல ஓலா பயனர்களும் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.
    ஆக்டிவா 6ஜி மொத்தம் 6 நிறங்களிலும், ஆக்டிவா 125 5 நிறங்களிலும் கிடைக்கின்றன. லிமிட்டெட் எடிஷன் ஆக்டிவா 2 நிறங்களில் வருகிறது.
    இந்தியாவில் அதிகம் விற்கப்படும் ஸ்கூட்டர்களில் முதன்மையானதாக ஹோண்டா ஆக்டிவா இருக்கிறது. இந்நிலையில் ஆக்டிவா 125 மற்றும் ஆக்டிவா 6ஜி ஆகிய ஸ்கூட்டர்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன.

    இந்த ஸ்கூட்டர்களின் விலை ரூ.500 முதல் ரூ.1000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி ஆக்டிவா 6ஜி ஸ்டாண்டர்ட் ஸ்கூட்டர் ரூ.70,599-ல் இருந்து ரூ.71,432-ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஆக்டிவா 6ஜி டீலக்ஸ் ஸ்கூட்டரின் விலை ரூ.72,345-ல் இருந்து ரூ.73,177-ஆக விலை உயர்ந்துள்ளது.

    ஆக்டிவா 125 டிரம் ஸ்கூட்டர் விலை ரூ.74,157-ல் இருந்து ரூ.74,898-ஆகவும், ஆக்டிவா 12 டிரம் அலாய் ஸ்கூட்டரின் விலை ரூ.77,725-ல் இருந்து ரூ.78,657-ஆகவும், ஆக்டிவா 125 டிஸ்க்கின் விலை ரூ.81,280-ல் இருந்து ரூ.82,162-ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது.

    ஆக்டிவா 125 லிமிட்டர்ட் எடிஷன் டிரம் ரூ.78,725-ல் இருந்து ரூ.79,657-ஆகவும், ஆக்டிவா 125 லிமிட்டெட் எடிஷன் டிஸ்க் ரூ.82,280-ல் இருந்து ரூ.83,162-ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

    ஆக்டிவா 6ஜி மொத்தம் 6 நிறங்களிலும், ஆக்டிவா 125, 5 நிறங்களிலும் கிடைக்கின்றன. லிமிட்டெட் எடிஷன் ஆக்டிவா 2 நிறங்களில் வருகிறது.
    போலோவின் 12 வருட நிறைவை கொண்டாட ஃபோக்ஸ்வேகன், போலோ லெஜண்ட் சிறப்பு லிமிடெட் எடிஷனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. வெறும் 700 யூனிட்டுகள் மட்டுமே தயாரிக்கப்பட்ட இந்த காரின் விலை ரூ.10.25 லட்சமாகும்.
    ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்தியாவில் தனது போலோ கார் உற்பத்தியை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது. போலோ பிரீமியம் ஹேட்ச்பேக் கார் கடந்த 2009ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஃபோக்ஸ்வேகன் நிறுவன கார்களில் இந்தியாவில் அதிக வரவேற்பை பெற்ற கார் போலோ ஆகும்.

    2010ம் ஆண்டு நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் இந்த கார் காட்சிக்கு வைக்கப்பட்டது. 3 லட்சத்திற்கும் அதிகமான போலோ கார்கள் இந்தியாவில் விற்கப்பட்டுள்ளன. இந்தியாவில் உருவான ஹேட்ச்பேக் கார்களில் 2 ஏர் பேக்குகளுடன் வந்ததில் போலோ தான் முதன்மையானது.

    இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

    போக்ஸ்வேகன் போலோ கடந்த 12 வருடங்களாக இந்திய சாலைகளில் ஓடி வருகிறது. இப்போது பிரேக் பிடிப்பதற்கான நேரம் வந்துவிட்டது.

    வாடிக்கையாளர்களிடம் பல்வேறு உணர்வுகளை இந்த கார் உருவாக்கியது. ஒரு குடும்பத்தின் முதல் காராக எப்போதும் போலோ தான் இருந்திருக்கும். இதன் ஸ்போர்ட்டி டிசைன், சேஃப்டி, ஃபன் டூ டிரை அனுபவம், பில்ட் குவாலிட்டி ஆகியவை இந்த காரை அனைவருக்கும் நெருக்கமாக்கியது என கூறியுள்ளது.

    போலோவின் 12 வருட நிறைவை கொண்டாட ஃபோக்ஸ்வேகன், போலோ லெஜண்ட்  சிறப்பு லிமிடெட் எடிஷனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. வெறும் 700 யூனிட்டுகள் மட்டுமே தயாரிக்கப்பட்ட இந்த காரின் விலை ரூ.10.25 லட்சமாகும்.

    இதில் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் TSI பெட்ரோல் இன்ஜின், 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டார்க் கன்வேர்டர் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த கார் 110PS மேக்ஸிமம் பவர், 175 Nm பீக் டார்க்கை உருவாக்கூடியது.
    இந்த பைக்கில் ஒவ்வொரு ட்ரிமிற்கும் மாறுபடும் வகையில் ரூ.1,500 முதல் ரூ.2000 வரை விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
    யமஹா நிறுவனம் தனது YZF-R15 ஸ்போர்ட் பைக்கிற்கான விலை உயர்வை அறிவித்துள்ளது. ஒரு வருடத்திற்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட இந்த பைக் இதுவரை 3 முறை விலை உயர்வு செய்யப்ப்பட்டுள்ளது.

    இந்த பைக்கில் ஒவ்வொரு ட்ரிமிற்கும் மாறுபடும் வகையில் ரூ.1,500 முதல் ரூ.2000 வரை விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதன்படி யமஹா R15 V4 மெட்டாலிக் ரெட்- ரூ.1,76,300-ஆக அதிகரித்துள்ளது. டார்க் நைட் விலை ரூ.1,77,300-ஆக அதிகரித்துள்ளது. ரேசிங் ப்ளூ ரூ.1,81,300-ஆகவும், மோட்டோ ஜிபி எடிஷன் (எம்) ரூ.1,82,800-ஆகவும், மெட்டாலிக் கிரே (எம்) ரூ.1,86,300-ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளன.

    இந்த பைக்கில் 155சிசி லிக்விட் கூல்டு இன்ஜின், மாறுபட்ட வால்வ் அக்யூட்டேஷன் தொழில்நுட்பத்துடன் வழங்கப்பட்டுள்ளது.இந்த இன்ஜின் 18.1 bhp, அதிகபட்சமாக 14.2Nm பீக் டார்க்கை வழங்கக்கூடியது. 

    இந்த இன்ஜின் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன், க்யுக் ஷிப்டர்களுடன் டாப் ஸ்பெக் கொண்ட எம் ட்ரீமில் வழங்கப்பட்டுள்ளது. இதைத்தைவிர அசிஸ்டெண்ட், ஸ்லிப்பர் கிளட்ச், டிராக்‌ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் உள்ளிட்ட முதல் தர அம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.
    மாருதி சுஸூகி நிறுவனம் இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை 8.8 சதவீதம் வாகனங்களுக்கான விலையை உயர்த்தியுள்ளது.
    இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக மாருதி சுஸூகி இருக்கிறது. இந்த நிறுவனம் ஆல்டோ, எஸ் கிராஸ் என நிறைய மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. 

    இந்நிலையில் மாருதி சுஸூகி நிறுவனம் மீண்டும் வாகனங்களின் விலைகளை உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளது. மாருதி சுஸூகியின் அனைத்து வகை வாகனங்களுக்கும் விலை உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வாகனங்களின் உள்ளீட்டு செலவுகள் தொடர்ந்து உயர்ந்து வருவதால் இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

    ஏற்கனவே மாருதி சுஸூகி நிறுவனம் இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை 8.8 சதவீதம் வாகனங்களுக்கான விலையை உயர்த்தியுள்ளது. இந்நிலையில் தற்போது ஏப்ரல் மாதமும் விலை உயர்வை அறிவித்துள்ளது. 

    உயர்த்தப்பட்ட விலைகளின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    இந்த திட்டத்தின்படி 40 சார்ஜிங் நிலையங்களை நிறுவி மின்சார கார்கள் மற்றும் பைக்குகளுக்கு இலவச சார்ஜ் வழங்கப்படவுள்ளன.
    இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இருப்பினும் மின்சார வகானங்கள் அவ்வபோது தீப்பிடிப்பது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. 

    இந்நிலையில் மக்களை மின்சார வாகனங்களை வாங்குவதற்கு ஊக்குவிக்கும் வகையில் ElectiVa என்ற நிறுவனம் ஜூன் 1ம் தேதி முதல் இலவச சார்ஜ் வழங்கப்போவதாக அறிவித்துள்ளது.

    இதன்படி டெல்லி முழுவதும் 40 சார்ஜிங் நிலையங்களை நிறுவி மின்சார கார்கள் மற்றும் பைக்குகளுக்கு இலவச சார்ஜ் வழங்கப்படவுள்ளன.
    இந்த இலவச சார்ஜ் சேவை பொது சார்ஜிங் நிலையங்களில் பகல் 12 மணி முதல் 3 மணி வரை மட்டுமே வழங்கப்படவுள்ளது.

    இதுகுறித்து ElectiVa-ன் நிறுவனர் சுமித் தனுஷ்கா கூறுகையில், அனைத்து கமர்ஷியல் மற்றும் கமர்ஷியல் அல்லாத மின்சார வாகன பயனர்களுக்கும் இந்த இலவச சார்ஜ் வழங்கப்படவுள்ளது. இந்த முன்னெடுப்பு பெட்ரோல், டீசல் எரிபொருளில் இருந்து மின்சார வாகனத்தை நோக்கி மக்களை நகர்த்துவதற்காக செய்யப்படுகிறது.

    டெல்லியில் ஒவ்வொரு 3 கி.மீட்டர்களுக்கும் இடையும் சார்ஜிங் நிலையம் அமைக்கப்படவுள்ளது.  இந்த திட்டத்திற்கு டெல்லியை தேர்ந்தெடுப்பதற்கு காரணம் அங்கு கடந்த மார்ச் மாதம் வாங்கப்பட்ட வாகனங்களில் 19 சதவீதம் மின்சார வாகனங்களே ஆகும். இதில் 10,707 வாகனங்கள் இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 5,888 வாகனங்கள் இருசக்கர வாகங்களாகும் என கூறினார்.

    இந்த திட்டத்தை தொடர்ந்து அரசாங்க அமைப்புகளுடன் இணைந்து மேலும் 100 சார்ஜிங் நிலையங்கள் நிறுவப்படும் எனவும் கூறியுள்ளார்.

    தற்போது டெல்லியில் 1 யூனிட் சார்ஜ் ரூ.10க்கு விற்பனையாகி வரும் நிலையில் இந்த இலவச திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
    அந்நிறுவனம் 4.5 லட்சம் வாடிக்கையாளர்களுடன் நேருக்கு நேர் உரையாடல் நிகழ்த்தி பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவுள்ளது.
    இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வதை தொடர்ந்து மின்சார வாகனங்களின் விற்பனை அதிகரித்து வருகிறது.

    பெரிய நிறுவனங்கள் மின்சார ஸ்கூட்டர், பைக், கார்களை அறிமுகம் செய்து வருகின்றன.

    இருப்பினும் சமீபத்தில் 3 மின்சார ஸ்கூட்டர்கள் தீப்பிடித்து எரிந்ததை தொடர்ந்து மக்களுக்கு மின்சார வாகனங்களின் மீதான பயம் தொடர்ந்து இருந்து வருகிறது.  இந்நிலையில் மக்களின் பயத்தை போக்கும் வகையிலும், மின்சார ஸ்கூட்டர் விற்பனையை அதிகரிக்கும் வகையில் ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம் இந்த ஏப்ரல் மாதத்தை  ‘மின்சார வாகன பேட்டரி பாதுகாப்பு’ வாரமாக கொண்டாட இருக்கிறது.

    இதன்படி ஹீரோ நிறுவனம் 4.5 லட்சம் வாடிக்கையாளர்களுடன் நேருக்கு நேர் உரையாடல் நிகழ்த்தி பேட்டரி பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவுள்ளது. மேலும் மின்சார ஸ்கூட்டர்களை வைத்திருக்கும் வாடிகையாளர்களுக்கு நாடு முழுவதும் உள்ள சர்வீஸ் செண்டர்களில் இலவச சர்வீஸ் வழங்கப்படவுள்ளது. குறிப்பாக கோடைக்காலத்தில் பேட்டரிகள் தீப்பிடிக்காமல் பாதுகாக்க இந்த முன்னெடுப்பு எடுக்கப்படுகிறது.

    இதுகுறித்து அந்நிறுவனத்தின் சி.இ.ஓ சோஹிந்தர் கில் கூறுகையில், ஏற்கனவே சாலையில் சென்றுகொண்டிருக்கும் மின்சார வாகனங்களின் பாதுகாப்பு முக்கியம். பேட்டரி மற்றும் சார்ஜிங் குறித்து வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது எங்கள் நோக்கம். இதற்காக சர்வீஸ் நிபுணர்களுடன் வாடிக்கையாளர்களை நேரடியாக உரையாட அழைத்துள்ளோம். 

    இத்துடன் மின்சார வாகனங்களை எப்படி பராமரிக்க வேண்டும் என்று கையேடு ஒன்றையும் வழங்கவுளோம். இந்தியாவில் 500 நகரங்களில் கட்டணம் இல்லாமல் சர்வீஸும் இந்த மாதம் முழுவதும் வழங்கப்படும் என கூறியுள்ளார்.
    சீனாவில் ஊரடங்கு பிரச்சனை இருந்தபோதும் இத்தகைய விற்பனையை டெஸ்லா எட்டியுள்ளதற்கு டெஸ்லா அணி தான் காரணம் என அந்நிறுவனத்தின் சி.இ.ஓ எலான் மஸ்க் பாராட்டு தெரிவித்துள்ளார்.
    டெஸ்லா நிறுவனம் உலகின் முன்னணி மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமாக இருக்கிறது.

    இந்த நிறுவனம் கடந்த ஏப்ரல் 2021 முதல் இந்த ஆண்டு மார்ச் 2022 வரை சுமார் 10 லட்சத்திற்கும் மேலான கார்களை விற்றுள்ளதாக அறிவித்துள்ளது. இதில் 3 லட்சத்து 10 ஆயிரத்து 048 கார்கள் இந்த ஆண்டு முதல் காலாண்டில் விற்கப்பட்டுள்ளது.

    இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 67 சதவீதம் அதிகம்.

    டெஸ்லா மாடல் எஸ் மற்றும் டெஸ்லா மாடல் ஒய் கார்கள் கடந்த ஆண்டு 24,964 யூனிட்டுகள் விற்பனையாகியுள்ளன. இந்த ஆண்டு முதல் காலாண்டில் 14,724 யூனிட்டுகள் எஸ் மற்றும் ஒய் மாடல்களில் விற்பனையாகியுள்ளது. 

    உலகம் முழுவதும் லாஜிஸ்டிக்ஸ் பிரச்சனை மற்றும் சிப் பற்றாக்குறை பிரச்சனை ஆட்டோமொபைல் சந்தையை பலவீனப்படுத்தியுள்ளது. இருப்பினும் டெஸ்லா அதிக எண்ணிக்கையிலான கார்களை விற்றுள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

    சீனாவில் ஊரடங்கு பிரச்சனை இருந்தபோதும் இத்தகைய விற்பனையை டெஸ்லா எட்டியுள்ளதற்கு டெஸ்லா அணி தான் காரணம் என அந்நிறுவனத்தின் சி.இ.ஓ எலான் மஸ்க் பாராட்டு தெரிவித்துள்ளார்.
    ×