என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
பைக்
X
இந்த மாதம் முழுவதும் இலவச சர்வீஸ்- அறிவித்தது பிரபல நிறுவனம்
Byமாலை மலர்6 April 2022 9:32 AM GMT (Updated: 6 April 2022 9:32 AM GMT)
அந்நிறுவனம் 4.5 லட்சம் வாடிக்கையாளர்களுடன் நேருக்கு நேர் உரையாடல் நிகழ்த்தி பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவுள்ளது.
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வதை தொடர்ந்து மின்சார வாகனங்களின் விற்பனை அதிகரித்து வருகிறது.
பெரிய நிறுவனங்கள் மின்சார ஸ்கூட்டர், பைக், கார்களை அறிமுகம் செய்து வருகின்றன.
இருப்பினும் சமீபத்தில் 3 மின்சார ஸ்கூட்டர்கள் தீப்பிடித்து எரிந்ததை தொடர்ந்து மக்களுக்கு மின்சார வாகனங்களின் மீதான பயம் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்நிலையில் மக்களின் பயத்தை போக்கும் வகையிலும், மின்சார ஸ்கூட்டர் விற்பனையை அதிகரிக்கும் வகையில் ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம் இந்த ஏப்ரல் மாதத்தை ‘மின்சார வாகன பேட்டரி பாதுகாப்பு’ வாரமாக கொண்டாட இருக்கிறது.
இதன்படி ஹீரோ நிறுவனம் 4.5 லட்சம் வாடிக்கையாளர்களுடன் நேருக்கு நேர் உரையாடல் நிகழ்த்தி பேட்டரி பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவுள்ளது. மேலும் மின்சார ஸ்கூட்டர்களை வைத்திருக்கும் வாடிகையாளர்களுக்கு நாடு முழுவதும் உள்ள சர்வீஸ் செண்டர்களில் இலவச சர்வீஸ் வழங்கப்படவுள்ளது. குறிப்பாக கோடைக்காலத்தில் பேட்டரிகள் தீப்பிடிக்காமல் பாதுகாக்க இந்த முன்னெடுப்பு எடுக்கப்படுகிறது.
இதுகுறித்து அந்நிறுவனத்தின் சி.இ.ஓ சோஹிந்தர் கில் கூறுகையில், ஏற்கனவே சாலையில் சென்றுகொண்டிருக்கும் மின்சார வாகனங்களின் பாதுகாப்பு முக்கியம். பேட்டரி மற்றும் சார்ஜிங் குறித்து வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது எங்கள் நோக்கம். இதற்காக சர்வீஸ் நிபுணர்களுடன் வாடிக்கையாளர்களை நேரடியாக உரையாட அழைத்துள்ளோம்.
இத்துடன் மின்சார வாகனங்களை எப்படி பராமரிக்க வேண்டும் என்று கையேடு ஒன்றையும் வழங்கவுளோம். இந்தியாவில் 500 நகரங்களில் கட்டணம் இல்லாமல் சர்வீஸும் இந்த மாதம் முழுவதும் வழங்கப்படும் என கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X