என் மலர்
ஆட்டோமொபைல்
- பைக்கின் டிசைனில் எவ்வித சமரசமும் மேற்கொள்ளப்படவில்லை.
- இந்த பைக் பல்வேறு வேரியண்ட்களில் கிடைக்கும்.
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் சி.என்.ஜி. மோட்டார்சைக்கிள் இந்த மாதம் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி வந்தது. இந்த நிலையில், பஜாஜ் சி.என்.ஜி. பைக் ஜூலை மாதத்தின் இரண்டாவது வாரம் (ஜூலை 17) வெளியாகும் என்று பஜாஜ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராகேஷ் ஷர்மா தெரிவித்துள்ளார்.
புதிய பைக் குறித்து பேசிய ராகேஷ் ஷர்மா "பட்ஜெட் பிரிவில் கவனம் செலுத்துவோரை குறிவைத்து பஜாஜ் சி.என்.ஜி. பைக் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதற்காக பைக்கின் டிசைனில் எவ்வித சமரசமும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த பைக் என்ட்ரி லெவல் பிரிவிலேயே நிலைநிறுத்தப்படும்," என்று அவர் தெரிவித்தார்.
பஜாஜ் சி.என்.ஜி. பைக் ஒரே மாடலாக இல்லாமல், பல்வேறு வேரியண்ட்களில் கிடைக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார். இந்த பைக்கின் திறன் குறித்து எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. எனினும், இந்த பைக் 100 முதல் 150 சிசி வரையிலான திறன் வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.
- ஸ்போர்ட் வேரியண்டின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.
- 2.0 லிட்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட டீசல் எஞ்சின் கொண்டிருக்கிறது.
ஜீப் இந்தியா நிறுவனம் தனது குறைந்த விலை எஸ்.யு.வி. மாடல் காம்பஸ் விலையை இந்திய சந்தையில் குறைத்துள்ளது. இந்த விலை குறைப்பு ஜூன் மாதம் வரை மட்டும் அமலில் இருக்கும் என்று தெரிகிறது. தற்போதைய விலை குறைப்பின் படி ஜீப் காம்பஸ் மாடலின் விலைரூ. 18 லட்சத்து 99 ஆயிரம் என மாறி இருக்கிறது.
முன்னதாக ஜீப் காம்பஸ் என்ட்ரி லெவல் ஸ்போர்ட் வேரியண்ட் விலை ரூ. 20 லட்சத்து 69 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. தற்போது இந்த காரின் விலை ரூ. 1 லட்சத்து 70 ஆயிரம் வரை குறைந்துள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்திய சந்தையில் ஜீப் காம்பஸ் மாடல்: ஸ்போர்ட், லாங்கிடியூட், நைட் ஈகிள், லிமிடெட், பிளாக் ஷார்க் மற்றும் மாடல் எஸ் என மொத்தம் ஆறு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றில் ஸ்போர்ட் வேரியண்டின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டு இருக்கும் நிலையில், மற்ற வேரியண்ட்களின் விலை ரூ. 14 ஆயிரம் குறைக்கப்பட்டு உள்ளது.
தற்போது ஜீப் காம்பஸ் மாடல் 2.0 லிட்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட டீசல் எஞ்சின் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் டார்க் கன்வெர்ட்டர் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
- இந்தியர்களின் பிரியமான எஸ்.யு.வி. ரக கார் மாடலாக ஹூண்டாய் கிரெட்டா (Hyndai Creta) இருக்கின்றது.
- கடந்த மாதம் மட்டும் கிரெட்டா மாடல் 14 ஆயிரத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியர்களின் பிரியமான எஸ்.யு.வி. ரக கார் மாடலாக ஹூண்டாய் கிரெட்டா (Hyndai Creta) இருக்கின்றது. இந்த கார் இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் எஸ்.யு.வி. கார் மாடல் என்பதை தொடர்ச்சியாக உறுதி செய்து வருகின்றது.
கடந்த மே மாதத்தில் அதிகமான விற்பனையான கார்களின் பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருக்கிறது ஹூண்டாய் கிரெட்டா. கடந்த மாதம் மட்டும் கிரெட்டா மாடல் 14 ஆயிரத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கிரெட்டாவின் ஈவி (EV) எனப்படும் ஹூண்டாய் எலக்ட்ரிக் ரக காரை அறிமுகம் செய்ய இருக்கிறது. சமீபத்தில் தான் கிரெட்டாவின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து இந்த ஆண்டு இறுதிக்குள் புதிய எலெக்ட்ரிக் காரின் அறிமுகத்தையும், அதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இதன் வெளியீட்டையும் நாம் எதிர்பார்க்கலாம்.

தற்போது இந்தியா சாலைகளில் இந்த கிரெட்டா EV-யை சோதனை செய்து வருகிறது ஹூண்டாய். அப்படி கிரெட்டா EV சோதனை செய்யப்பட்ட போது எடுக்கப்பட்ட படங்கள் வெளியாகி உள்ளது. இந்தியாவில் கிரெட்டா EV மாடல் ரூ.15 லட்சம் விலையில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிரெட்டா EV காரில் என்னனென்ன சிறப்பம்சங்கள் இடம் பெற்றிருக்கும் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.
- டார்க் தீம் செய்யப்பட்ட அலாய் வீல்கள், ரேசர் பேட்ஜ்கள் வழங்கப்பட்டுள்ளன.
- 1.2 லிட்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் எஞ்சின் வழங்கப்பட்டுள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அல்ட்ரோஸ் ரேசர் எடிஷன் கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. அல்ட்ரோஸ் ரேசர் ஹேச்பேக் மாடல் மூன்று வேரிண்ட்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 9 லட்சத்து 49 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது.
இந்த கார் அடோமிக் ஆரஞ்சு, அவென்யூ வைட் மற்றும் பியூர் கிரே போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் டூயல் டோன் ஆப்ஷன்களும் வழங்கப்படுகிறது. இத்துடன் டார்க் தீம் செய்யப்பட்ட அலாய் வீல்கள், ரேசர் பேட்ஜ்கள் வழங்கப்பட்டுள்ளன.

காரின் உள்புறத்திலும் ஸ்போர்ட் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இதில் 10.25 இன்ச் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே, ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், 7 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் பேனல் போன்ற வசதிகள் உள்ளன.
இந்த காரில் 1.2 லிட்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் எஞ்சின் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த எஞ்சின் 118 ஹெச்.பி. பவர், 170 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.
- இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை மெல்ல அதிகரித்து வருகிறது.
- பிஜிலி மகாதேவ் ரோப்வே திட்டம் குறித்தும், அதற்கான சாத்திய கூறுகள் குறித்தும் ஆலோசனை செய்தார்.
உலகம் முழுக்க ஆட்டோமொபைல் நிறுவனங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. இதன் காரணமாக சர்வதேச எலெக்ட்ரிக் வாகனங்கள் சந்தை ஒவ்வொரு ஆண்டும் கணிசமான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. இந்தியாவிலும், தற்போது எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை மெல்ல அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் கார்களின் பயன்பாட்டை அடுத்த பத்து ஆண்டுகளில் முழுமையாக நீக்குவதற்கான பணிகளில் மும்முரம் காட்டுவதாக முன்னாள் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து கடந்த வாரம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி,
மின்சார வாகனங்களை நோக்கிய மாற்றத்தை வலியுறுத்தி, அடுத்த பத்தாண்டுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் கார்களை ஒழிக்கும் அரசின் திட்டத்தை அறிவித்தார்.
இமாச்சல பிரதேசத்தில் போக்குவரத்துக்கான நீர் மின்சாரத்தின் சாத்தியக்கூறுகளை எடுத்துரைத்த அவர், பிஜிலி மகாதேவ் ரோப்வே திட்டம் குறித்தும், அதற்கான சாத்திய கூறுகள் குறித்தும் ஆலோசனை செய்தார்.
இந்தியாவின் போக்குவரத்து உள்கட்டமைப்பை மாற்றுவதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளதாக அவர் கூறினார்.
- கார்களுக்கு முறையான வகையில் பாதுகாப்பு பரிசோதனை (சேஃப்டி டெஸ்ட் ) செய்யப்படாமல் ஏமாற்று வேலை நடந்துள்ளதாக புகார் எழுந்தது
- டொயோட்டா நிறுவனத்தின் தலைவர் அகியோ டோயோடா பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.
ஜப்பானை தலைமையகமாகக் கொண்ட டொயோட்டா நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட 7 வகை மாடல் கார்களுக்கு முறையான வகையில் பாதுகாப்பு பரிசோதனை (சேஃப்டி டெஸ்ட் ) செய்யப்படாமல் ஏமாற்று வேலை நடந்துள்ளதாக புகார் எழுந்தது.
Collison டெஸ்ட், ஏர்பேக் டெஸ்ட், சீட் டேமேஜ் டெஸ்ட், இன்ஜின் பவர் டெஸ்ட் ஆகியவை உரிய முறையில் செய்யப்படாமல் அவற்றுக்கு தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து கொரோலா பீல்டர், கொரோலா ஆக்சியோ, யாரிஸ் கிராஸ் ஆகிய 3 மாடல் கார்களின் உற்பத்தியை டொயோட்டா நிறுத்திக்கொண்டது.

இந்த விவகாரம் ஆட்டோமொபைல் துறையில் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் டொயோட்டா நிறுவனத்தின் தலைவர் அகியோ டோயோடா பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார். நேற்று (ஜூன் 3) செய்தியாளர்களை சந்திப்புக்கு ஏற்பாடு செய்து அதில் தோன்றிய அவர், இந்த முறைகேடுகளுக்கு தான் மிகவும் வருந்துவதாகவும் "I AM TRULY SORRY" என்றும் சில வினாடிகள் தலைகுனிந்து மன்னிப்பு கேட்டுள்ளார்.
- தொழில்துறை மொத்த விற்பனை புள்ளிவிவரங்கள் மே மாதத்தில் 4.4 சதவீதம் மட்டுமே வளர்ச்சி.
- கடந்த மே மாதத்தில் வாகன விற்பனை சரிவை கண்டுள்ளது.
இந்தியாவில் மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல்கள் மற்றும் நாட்டில் வடக்குப் பகுதிகளில் நிலவும் வெப்ப அலை காரணமாக கடந்த மே மாதத்தில் வாகன விற்பனை சரிவை கண்டுள்ளது.
தொழில்துறை மொத்த விற்பனை புள்ளிவிவரங்களின்படி, கடந்த மே மாதத்தில் 3,50,257 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இது, கடந்த ஆண்டு மே மாதத்தில் விற்பனையான 3,35,436 வாகனங்களை விட 4.4 சதவீதம் மட்டுமே வளர்ச்சியாகும்.
அதன்படி, ஒவ்வொரு வாகன தயாரிப்பு நிறுவனங்களின் அடிப்படையில் பார்ப்போம்..
மாருதி சுசுகி

மாருதி சுசூகியின் உள்நாட்டு விற்பனை 1,57,184 ஆக இருந்தது. இது கடந்த ஆண்டு மே மாதத்தில் 1,51,606 வாகன விற்பனை செய்யப்பட்டுள்ளன. இவை ஒப்பிடுகையில், இது 3.5 சதவீத வளர்ச்சியாகும். ஏற்றுமதியில், இந்நிறுவனம் மே 2023-ல் 26,477 வாகன எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது 17,367 யூனிட்களை மட்டுமே பெற்றுள்ளது.
டாடா மோட்டார்ஸ்
பயணிகள் மற்றும் வர்த்தக வாகனங்களுக்கான உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தையில் டாடா மோட்டார்சின் விற்பனை கடந்த ஆண்டு மே மாதத்தில் 74,973 யூனிட்களுடன் ஒப்பிடும்போது 76,766 ஆக இருந்தது.
மே 2023ல் 45,878 யூனிட்களுடன் ஒப்பிடும்போது பயணிகள் வாகனங்களின் உள்நாட்டு விற்பனை 46,697 ஆக இருந்தது. இது 2 சதவீத வளர்ச்சியாகும்.

கடந்த ஆண்டு மே மாதத்தில் 106 யூனிட்களாக இருந்த பயணிகள் வாகனங்களின் ஏற்றுமதி 378 யூனிட்களாக இருந்தது - இது 257 சதவீதம் வளர்ச்சி.
மே மாதத்தில் டாடா ஸ்டேபில் இருந்து எலெக்ட்ரிக் வாகன விற்பனை 5,558 யூனிட்களாக இருந்தது. இது, கடந்த ஆண்டு மே மாதத்தில் 5,805 யூனிட்களுடன் ஒப்பிடும்போது ஏற்றுமதிகள் உட்பட - 4 சதவீதம் சரிவு.
எம்&எம்
மஹிந்திரா & மஹிந்திரா, அதன் மொத்த விற்பனை ஆண்டுக்கு ஆண்டு 17 சதவீதம் அதிகரித்து மே மாதத்தில் 71,682 வாகனங்களாக இருந்தது.

மே 2023-ல் நிறுவனத்தின் மொத்த விநியோகங்கள் அதன் டீலர்களுக்கு 61,415 ஆக இருந்தது.
கியா இந்தியா
தென் கொரிய ஆட்டோமொபைல் நிறுவனமான கியா இந்தியா கடந்த மே மாதத்தில் 19,500 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் 18,766 யூனிட்களுடன் ஒப்பிடுகையில் இந்நிறுவனம் 3.9 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

ஜனவரியில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய சோனெட் 7,433 வாகனங்களுடன் அதிக விற்பனையான மாடலாக உருவெடுத்தது. தொடர்ந்து, செல்டோஸ் மற்றும் கேரன்ஸ் முறையே 6,736 மற்றும் 5,316 வாகனங்களுடன் அடுத்தடுத்து உள்ளன.
டொயோட்டா கிர்லோஸ்கர்

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (டிகேஎம்) மே மாதத்தில் மொத்த மொத்த விற்பனை ஆண்டுக்கு ஆண்டு 24 சதவீதம் அதிகரித்து 25,273 வாகனங்களாக உள்ளது. கடந்த மாதம், உள்நாட்டில் விற்பனை 23,959 ஆகவும், ஏற்றுமதி 1,314 ஆகவும் இருந்தது.
எம்ஜி மோட்டார்ஸ்

எம்ஜி மோட்டார் இந்தியா சனிக்கிழமையன்று மொத்த விற்பனையில் 5 சதவீதம் சரிந்து 4,769 வாகனங்களாக இருந்தது. இது, கடந்த ஆண்டு மே-ல் டீலர்களுக்கு 5,006 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டன.
ராயல் என்ஃபீல்டு
மோட்டார்சைக்கிள் தயாரிப்பாளரான ராயல் என்ஃபீல்டு, மே மாதத்தில் மொத்த விற்பனையில் 8 சதவீதம் சரிந்து 71,010 வாகனங்களாக இருந்தது. இதுவே ஒரு வருடத்திற்கு முன்பு இதே மாதத்தில் 77,461 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

உள்நாட்டில் விற்பனை 63,531 ஆக இருந்தது. இது முந்தைய ஆண்டின் இதே மே மாதத்தில் 70,795 ஆக இருந்தது.
- விலை குறைப்பு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
- விலைகளைக் குறைப்பதன் மூலம், மாருதி சுசுகி தனது ஏஜிஎஸ் மாடல்களுக்கு அதிக வாடிக்கையாளர்களை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று மாருதி சுசுகி நிறுவனம். கடந்த 1986-ம் ஆண்டு முதல் வாகனங்களை ஏற்றுமதி செய்து வரும் மாருதி சுசுகி நிறுவனத்தின் கார்கள் 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
தற்போது, மாருதி சுசுகி நிறுவனம் தனது குறிப்பிட்ட சில மாடல் கார்களின் விலையை ரூ.5,000 வரை குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஆல்ட்டோ K10, S-Presso, செலிரியோ, வேகன்-ஆர், Swift, டிசையர், Baleno, Fronx மற்றும் Ignis உள்ளிட்ட பல மாடல்களுக்கு இந்த விலைக் குறைப்பு பொருந்தும் என கூறப்பட்டுள்ளது.
ஏஜிஎஸ் ரக கார்களை மலிவு விலையில் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக விலை குறைக்கப்பட்டதாக நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விலை குறைப்பு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
விலைகளைக் குறைப்பதன் மூலம், மாருதி சுசுகி தனது ஏஜிஎஸ் மாடல்களுக்கு அதிக வாடிக்கையாளர்களை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் இந்த மாடல் அறிமுகம்.
- 73 கிலோமீட்டர்கள் மைலேஜ் வழங்கும் என்று தகவல்.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் முற்றிலும் புதிய ஸ்பிலெண்டர் பிளஸ் எக்ஸ்டெக் மோட்டார்சைக்கிள் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஸ்பிலெண்டர் பைக்கின் விலை ரூ. 82 ஆயிரத்து 911, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஹீரோ நிறுவனத்தின் 30 ஆம் ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் இந்த மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த பைக்கிலும் ஏர் கூல்டு, 97.2சிசி, எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த யூனிட் 8.02 ஹெச்.பி. பவர், 8.05 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த பைக் லிட்டருக்கு 73 கிலோமீட்டர்கள் மைலேஜ் வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

புதிய ஹீரோ ஸ்பிலெண்டர் பைக் டூயல் டோன் நிறங்களில் கிடைக்கிறது. இந்த பைக்கின் இண்டிகேட்டர் வடிவம் சற்றே வித்தியாசமாக காட்சியளிக்கிறது. இதன் ஃபியூவல் டேன்க் மற்ற ஸ்பிலெண்டர் மாடல்களில் இருப்பதை போன்றே சதுரங்க வடிவம் கொண்டுள்ளது.
எக்ஸ்-டெக் மாடல் என்பதால் புதிய ஸ்பிலெண்டர் பைக்கில் டிஜிட்டல் டிஸ்ப்ளே, ப்ளூடூத் கனெக்டிவிட்டி, யு.எஸ்.பி. சார்ஜிங் போர்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கின் விலை மற்ற எக்ஸ்டெக் மாடல்களை விட ரூ. 3 ஆயிரம் வரை அதிகம் ஆகும்.
- இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளாக கார் விற்பனை அதிக அளவில் நடந்து வந்த நிலையில் இந்த மே மாதம் கார் விற்பனை மந்த நிலையை எட்டியுள்ளது.
- ஒரு லட்சம் யூனிட்கள் கூட தற்போது விற்பனை செய்யப்படாமல் தேங்கியிருப்பது வழக்கத்துக்கு மாறாக பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளாக கார் விற்பனை அதிக அளவில் நடந்து வந்த நிலையில் இந்த மே மாதம் கார் விற்பனை மந்த நிலையை எட்டியுள்ளது. இதனால் கடந்த காலங்களில் அதிக லாபம் ஈட்டி வந்த கார் டீலர்கள், தற்போது சுமார் 4.5 லட்சம் யூனிட் அளவிலான உற்பத்தி செய்யப்பட்ட கார்கள் விற்பனை ஆகாமல் உற்பத்தியாளர்களிடமே தேங்கியுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் ஒரு மாதத்துக்கு 3.5 லட்சம் யூனிட் கார்கள் விற்பனையாகும் அளவிற்கு கார் விற்பனை சந்தை வளர்ந்துள்ள போதிலும் ஒரு லட்சம் யூனிட்கள் கூட தற்போது விற்பனை செய்யப்படாமல் தேங்கியிருப்பது வழக்கத்துக்கு மாறாக பார்க்கப்படுகிறது.

ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் விங்கேஷ் குலாட்டி இதுகுறித்து பேசுகையில், உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு தாயாராக இருக்கும் கார்கள் 4 லட்சம் யூனிட் அளவிற்கு விற்பனைக்கு செல்வது ஆரோக்கியமான சந்தையை உருவாக்கும்.

ஆனால் தற்போது 1 லட்சம் யூனிட் அளவு கூட விற்பானையாகாமல் தேங்கி நிற்கிறது. இதனால் உற்பத்தி செய்யப்பட்ட கார் யூனிட்களை கூடுதலாக பல மாதங்களாக இருப்பில் வைத்திருக்கும் செலவு அதிகரிப்பது கார் வாங்குபவர்களுக்கு டீலர்களுக்கும் நல்லதல்ல என்று தெரிவித்துள்ளார்.
இந்த அசாதாரண நிலையை சரி செய்ய உற்பத்தியாளர்கள் தங்களது உற்பத்தியை குறைத்துக்கொள்வதே தீர்வாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
- ஹார்னெட் 2.0 பைக்கை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.
- மற்ற அம்சங்களில் மாற்றம் செய்யப்படவில்லை.
ஹோண்டா நிறுவனத்தின் CB200X மோட்டார்சைக்கிள் மாடல் சத்தமின்றி அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக்கில் தற்போது அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த சிஸ்டம் வழங்கப்படுவதால், பைக்கின் கிளட்ச் லீவரை சிரமம் இன்றி பயன்படுத்த முடியும்.
அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதியில் பைக்கை ஓட்டும் போது இந்த சிஸ்டம் உதவிகரமாக இருக்கும். இத்துடன் ஸ்லிப்பர் வசதி மூலம், பைக்கின் கியரை குறைக்கும் போது வீல் லாக் ஆவதை தடுக்கும். CB200X மாடல் ஹோண்டா ஹார்னெட் 2.0 பைக்கை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.

ஹோண்டா CB200X மாடல் ஹார்னெட் 2.0 பைக்கின் அட்வென்ச்சர் வெர்ஷன் ஆகும். இந்த பைக்கின் முன்புறம் சற்றே உயர்த்தப்பட்டு இருக்கிறது. இது பைக்கை ஓட்டுவோருக்கு சவுகரியமான வசதியை வழங்குகிறது. இவைதவிர இந்த பைக்கின் மற்ற அம்சங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
இந்த பைக்கில் புதிய ஃபேரிங், உயரமான வின்ட்-ஸ்கிரீன் உள்ளிட்டவை வழக்கமான அட்வென்ச்சர் பைக் போன்ற தோற்றத்தை வழங்குகிறது. ஹோண்டா CB200X மாடலில் 184.4 சிசி, ஏர்-கூல்டு, சிங்கில் சிலிண்டர் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 17 ஹெச்.பி. பவர், 15.9 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
- போர்ஷே 911 மாடல் இரண்டு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது.
- இந்த மாடலில் 3.0 லிட்டர் டுவின் டர்போ பாக்சர் எஞ்சின் உள்ளது.
போர்ஷே நிறுவனத்தின் புதிய 911 பேஸ்லிப்ட் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்த சூப்பர் கார் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது. இந்திய சந்தையில் போர்ஷே 911 பேஸ்லிப்ட் மாடல் கரெரா மற்றும் கரெரா 4 GTS என இரண்டு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது.
2024 போர்ஷே 911 கரெரா மாடலின் விலை ரூ. 1 கோடியே 99 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த சூப்பர் கார் மாடலில் 3.0 லிட்டர் டுவின் டர்போ பாக்சர் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 394 ஹெச்.பி. பவர், 450 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 8 ஸ்பீடு PDK ஆட்டோ கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

இந்த வேரியண்டில் போர்ஷே ஆக்டிவ் சஸ்பென்ஷன் மேனேஜ்மென்ட், 4 விதங்களில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஸ்போர்ட் சீட்கள், ஹீட்டிங் வசதி, 6 பிஸ்டன்கள் கொண்ட அலுமினியம் மோனோ-பிலாக் பிரேக் கேலிப்பர்கள், மேட்ரிக்ஸ் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், ரிவர்ஸ் கேமரா, 2-ஜோன் ஆட்டோ கிளைமேட் கண்ட்ரோல், எலெக்ட்ரிக் சன்ரூஃப் வழங்கப்படுகிறது.
2024 போர்ஷே 911 கரெரா 4 GTS வேரியண்டின் விலை ரூ. 2 கோடியே 75 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடலில் புதிய T-ஹைப்ரிட் பவர்டிரெயிடன் அதாவது 3.6 லிட்டர் ஆறு சிலிண்டர்கள் கொண்ட எஞ்சின் மற்றும் எலெக்ட்ரிக் டர்போசார்ஜர் வழங்கப்படுகிறது. இந்த எஞ்சின் 541 ஹெச்.பி. பவர், 610 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 8 ஸ்பீடு PDK ஆட்டோ டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
இந்த காரில் ஸ்போர்ட் க்ரோனோ பேக்கேஜ் வழங்கப்படுகிறது. இதில் அனலாக், டிஜிட்டல் ஸ்டாப் வாட்ச், ஸ்போர்ட் க்ரோனோ கிளாக், பிளாக் ஷிப்ட் பேடில்கள், ஸ்போர்ட் பிளஸ் மோட், PSM ஸ்போர்ட் மோட், போர்ஷே டிராக் பிரெசிஷன் ஆப், டயர் டெம்ப்பரேச்சர் டிஸ்ப்ளே, ஸ்போர்ட் ரெஸ்பான்ஸ் பட்டன் போன்ற வசதிகள் வழங்கப்படுகின்றன.






