search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    • இந்த ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 90 கி.மீ. வேகத்தில் செல்லும்.
    • முன்னதாக ஒலா S சீரிஸ் மாடல்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டன.

    ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது S1 X எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை முற்றிலும் புதிய நிறங்களில் அறிமுகம் செய்துள்ளது. அந்த வகையில், ஒலா S1 X மாடல்- ஃபன்க், ஸ்டெல்லார், ரெட் வெலாசிட்டி, வோக் மற்றும் மிட்நைட் என ஐந்து டூயல் டோன் நிறங்களில் கிடைக்கிறது. புதிய நிறங்கள் அதிக பிரகாசமாகவும், சிங்கில் டோன் நிறங்களை விட அதிக வித்தியாசமாகவும் காட்சியளிக்கின்றன.

    நிறங்கள் தவிர ஒலா S1 X மாடல்களில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. ஒலா S1 X மாடலில் 2.7 கிலோவாட் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 90 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.

     


    இதே ஸ்கூட்டர் 3 கிலோவாட் ஹவர் மற்றும் 4 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது. இந்த வேரியண்ட்கள் முழு சார்ஜ் செய்தால் முறையே 151 கிலோமீட்டர்கள் மற்றும் 190 கிலோமீட்டர்கள் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது.

    சமீபத்தில் ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது S1 சீரிஸ் மாடல்களுக்கு அசத்தல் சலுகைகளை அறிவித்து இருந்தது. இவை இம்மாத இறுதிவரை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. முன்னதாக பிப்ரவரி மாதத்தில் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்க அதிகளவில் முன்பதிவுகளை பெற்றதாக அந்நிறுவனம் அறிவித்து இருந்தது.

    • மாருதி ஜிம்னி மாடல் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
    • இந்த காரில் 1.5 லிட்டர் NA பெட்ரோல் என்ஜின் உள்ளது.

    இந்திய சந்தையில் மாருதி சுசுகி ஜிம்னி மாடலுக்கு அதிரடி விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. தற்போது இந்த எஸ்.யு.வி. மாடலுக்கு ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் வரை பலன்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இவை மார்ச் மாத இறுதி வரை வழங்கப்படுகிறது.

    இந்த கார் சீட்டா மற்றும் ஆல்ஃபா என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. 2023 மாடலை வாங்கும் போது அதிகபட்சம் ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. 2024 மாருதி ஜிம்னி மாடலுக்கு ரூ. 50 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது.

     


    இத்துடன் ரூ. 3 ஆயிரம் வரை கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த சலுகைகள் ஒவ்வொரு பகுதி, ஸ்டாக் இருப்புக்கு ஏற்ப வேறுபடும். மாருதி ஜிம்னி மாடலில் 1.5 லிட்டர் NA பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் யூனிட் வழங்கப்படுகிறது.

    இந்த என்ஜின் 103 ஹெச்.பி. பவர், 134 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

    • NS 400 இதுவரை இல்லாத விலை ரூ.2 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) நிர்ணயிக்கப்பட்டது
    • இளைய தலைமுறையினரை கவரும் வகையில் ஸ்டைலிங்' ஆக வடிவமைக்கப்பட்டுள்ளது

    பஜாஜ் ஆட்டோவின் புதிய தயாரிப்பான NS 400 பல்சர் நவீன மாடல் இளைய தலைமுறையினரை கவரும் வகையில் மற்ற பல்சர்களில் இருந்து 'ஸ்டைலிங்' ஆக வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய பல்சர் NS 400 இதுவரை இல்லாத விலை உயர்வாக ரூ.2 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) நிர்ணயிக்கப்பட்டது.

    புனே நகரில் உள்ள தொழிற்சாலையில் இதன் உற்பத்தி தொடங்க திட்டமிடப்பட்டது. தற்போது மார்ச் மாத இறுதியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அறிமுகப்படுத்த தயார் நிலையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் திடீரென புதிய பஜாஜ் பல்சர் NS 400 அறிமுகம் அடுத்த ஆண்டுக்கு (2025) தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    அதிகாரப்பூர்வ அனுமதி கிடைக்காத காரணத்தால் அடுத்த ஆண்டு ஏப்ரல், ஜூன் மாதங்களில் புதிய பஜாஜ் பல்சர் NS 400 வெளியீடு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
    • இந்த கார் 5 பேர் அமரக்கூடிய எஸ்.யு.வி. மாடல் ஆகும்.

    எம்.ஜி. மோட்டார் இந்தியா நிறுவனம் தனது ஹெக்டார் எஸ்.யு.வி.-யை ஷைன் ப்ரோ மற்றும் செலக்ட் ப்ரோ என இரண்டு வேரியண்ட்களில் அறிமுகம் செய்தது. இவற்றின் விலை முறையே ரூ. 16 லட்சம் மற்றும் ரூ. 17 லட்சத்து 30 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    தற்போது எம்.ஜி. ஹெக்டார் என்ட்ரி லெவல் மாடலுக்கான விலையை அந்நிறுவனம் அதிரடியாக குறைத்து இருக்கிறது. விலை குறைப்பின் படி எம்.ஜி. ஹெக்டார் மாடலின் விலை ரூ. 13 லட்சத்து 99 ஆயிரம் என துவங்குகிறது. முன்னதாக இதன் விலை ரூ. 14 லட்சத்து 95 ஆயிரம் என நிர்யணயம் செய்யப்பட்டு இருந்தது. அதன்படி தற்போது இதன் விலை ரூ. 96 ஆயிரம் குறைக்கப்பட்டு இருக்கிறது.

    விலை குறைப்பு எம்.ஜி. ஹெக்டார் ஸ்டைல் 1.5 லிட்டர் பெட்ரோல் மேனுவல் வேரியண்டிற்கு மட்டுமே அறிவிக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக எம்.ஜி. மோட்டார் நிறுவனம் தனது கொமெட் EV மாடலின் இரண்டு வேரியண்ட்களிலும் ஃபாஸ்ட் சார்ஜரை அறிமுகம் செய்தது.

    இந்திய சந்தையில் எம்.ஜி. ஹெக்டார் மாடல் ஐந்து பேர் அமரக்கூடிய இருக்கை அமைப்பில் கிடைக்கிறது. இந்த கார் 1.5 லிட்டர் மற்றும் 2 லிட்டர் என இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    • பி.ஒய்.டி. சீல் மூன்றாவது மாடல் ஆகும்.
    • பி.ஒய்.டி. சீல் மாடல் நான்கு நிறங்களில் கிடைக்கிறது.

    பி.ஒய்.டி. இந்தியா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சீல் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய பி.ஒய்.டி. சீல் மாடலின் விலை ரூ. 41 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்திய சந்தையில் பி.ஒய்.டி. இ6 மற்றும் அட்டோ 3 மாடல்களின் வரிசையில் பி.ஒய்.டி. சீல் மூன்றாவது மாடல் ஆகும்.

    புதிய பி.ஒய்.டி. சீல் மாடல் டைனமிக், பிரீமியம் மற்றும் பெர்ஃபார்மன்ஸ் என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இத்துடன் ஆர்க்டிக் புளூ, அரோரா வைட், அட்லான்டிஸ் கிரே மற்றும் காஸ்மோஸ் பிளாக் என நான்கு நிறங்களில் கிடைக்கிறது.

     


    தோற்றத்தில் இந்த கார் டெஸ்லா மாடல் 3 போன்றே காட்சியளிக்கிறது. முன்புறம் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், முன்புற பம்ப்பரில் ஏரோ வடிவம் கொண்ட இன்சர்ட்கள் உள்ளன. இத்துடன் ஸ்லோபிங் ரூஃப்லைன், ஃபிளஷ் டோர் ஹேண்டில்கள், பின்புறம் எல்.இ.டி. பார், எல்.இ.டி. டெயில் லேம்ப்கள், பிளாக் டிஃப்யுசர் உள்ளது.

    அம்சங்களை பொருத்தவரை பி.ஒய்.டி. சீல் மாடலில் அதிநவீன இன்டெலிஜன்ட் காக்பிட், 15.6 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன், 10.2 இன்ச் எல்.சி.டி. டிரைவர் டிஸ்ப்ளே, எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் வசதி கொண்ட ஏ.சி. வென்ட்கள், எலெக்ட்ரிக் டெயில்கேட், ரெயின் சென்சிங் வைப்பர்கள் உள்ளன.

     


    இத்துடன் 360 டிகிரி கேமரா, இரு வயர்லெஸ் போன் சார்ஜர்கள், முன்புறம் பவர்டு மற்றும் வென்டிலேட் செய்யப்பட்ட இருக்கைகள், பானரோமிக் சன்ரூஃப், ADAS பாதுகாப்பு வசதிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த மாடல் 61.44 கிலோவாட் ஹவர் மற்றும் 72.56 கிலோவாட் ஹவர் என இருவித பேட்டரி பேக் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    இவை முறையே 510 கிலோமீட்டர்கள் மற்றும் 650 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. இதன் பேஸ் மாடலில் உள்ள எலெக்ட்ரிக் மோட்டார் 201 ஹெச்.பி. பவர், 310 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதன் டாப் என்ட் மாடலில் உள்ள பேட்டரி 308 ஹெச்.பி. பவர், 360 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதன் பெர்ஃபார்மன்ஸ் வேரியண்ட் 523 ஹெச்.பி. பவர், 670 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    விலை விவரங்கள்:

    பி.ஒய்.டி. சீல் டைனமிக் ரூ. 41 லட்சம்

    பி.ஒய்.டி. சீல் பிரீமியம் ரூ. 45 லட்சத்து 55 ஆயிரம்

    பி.ஒய்.டி. சீல் பெர்ஃபார்மன்ஸ் ரூ. 53 லட்சம்

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

    • டார்க் எடிஷன் மாடல்களில் முழுமையான கருப்பு நிறம் பூசப்பட்டுள்ளது.
    • நெக்சான் EV டார்க் எடிஷன் லாங் ரேன்ஜ் வேரியண்டில் மட்டுமே கிடைக்கிறது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது நெக்சான் டார்க் எடிஷன் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. டார்க் எடிஷன் மாடல்கள் ஃபேஸ்லிஃப்ட்-க்கு முந்தைய வெர்ஷன்களிலும் கிடைத்தது. புதிய ஸ்பெஷல் எடிஷன் வேரியண்ட்களில் ஏராளமான காஸ்மடிக் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    புதிய டாடா நெக்சான் டார்க் எடிஷன் விலை ரூ. 11 லட்சத்து 45 ஆயிரம் என துவங்குகிறது. டாடா நெக்சான் EV டார்க் எடிஷன் விலை ரூ. 19 லட்சத்து 49 ஆயிரம் என நிரணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

     


    தோற்றத்தில் நெக்சான் மற்றும் நெக்சான் EV டார்க் எடிஷன் மாடல்களில் முழுமையான கருப்பு நிறம் பூசப்பட்டு, பிளாக் அலாய் வீல்கள், ரூஃப் ரெயில்கள், டாடா லோகோ வழங்கப்பட்டு இருக்கிறது. இன்டீரியரிலும் பிளாக் தீம் செய்யப்பட்டுள்ளது. பிளாக் நிற லெதர் இருக்கைகள், டேஷ்போர்டு மற்றும் சென்டர் கன்சோல் என அனைத்தும் கருப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது.

    தோற்றத்தில் மட்டும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் நிலையில், பவர்டிரெயின் ஆப்ஷன்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில், புதிய டார்க் எடிஷனிலும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின்கள் வழங்கப்படுகின்றன. இவை முறையே 87 ஹெச்.பி. பவர், 170 நியூட்டன் மீட்டர் டார்க் மற்றும் 84.5 ஹெச்.பி. பவர், 260 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகின்றன.

    இதன் பெட்ரோல் என்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல், AMT, DCT கியர்பாக்ஸ், டீசல் என்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது AMT கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. டாடா நெக்சான் EV டார்க் எடிஷன் லாங் ரேன்ஜ் வேரியண்டில் மட்டுமே கிடைக்கிறது. இதில் எலெக்ட்ரிக் மோட்டார் 143 ஹெச்.பி. பவர், 215 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 465 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்குகிறது.

    • பிப்ரவரில் 3,73,177 யூனிட்கள் விற்பனையாகி உள்ளன
    • கார்கள் விற்பனை பிப்ரவரியில் மிகச்சிறப்பாக அமைந்துள்ளது

    கடந்த ஆண்டு பிப்ரவரியில் கார்கள் 3,35,324 யூனிட்கள் விற்பனையாகி இருந்த நிலையில் இந்த ஆண்டு பிப்ரவரில் 3,73,177 யூனிட்கள் விற்பனையாகி உள்ளன. மேலும் கார்கள் விற்பனை பிப்ரவரியில் மிகச்சிறப்பாக அமைந்துள்ளது.

    தொழில்துறை மதிப்பீட்டின்படி இது கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் விற்பனையான 3,35,324 யூனிட்களை விட 11.3 சதவீதம் அதிகம். உள்நாட்டு சந்தையில் இதுவரை பதிவு செய்யப்பட்ட பயணிகள் வாகன விற்பனையில் 3-வது சிறந்த மாதமாக பிப்ரவரி அமைந்துள்ளது.

    உள்ளூர் சந்தையில் விளையாட்டு பயன்பாட்டு வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களின் விற்பனை பிப்ரவரியில் அதிகரித்துள்ளது. மஹிந்திரா வாகன விற்பனை 40 சதவீதம் அதிகரித்துள்ளது. டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் வாகனங்கள் மாதாந்திர விற்பனை 23,300 ஆக உள்ளது

    • இது 2024 ஜனவரி மாதத்தை விட 8.2 சதவீதம் அதிகம் ஆகும்.
    • இந்திய சந்தையில் மூன்றாவது இடத்தை தக்கவைத்துக் கொண்டது.

    இந்திய இருசக்கர வாகனங்கள் சந்தையில் முன்னணி பிராண்டுகள் கடந்த பிப்ரவரி மாதம் விற்பனை செய்த வாகன எண்ணிக்கை விவரங்கள் வெளியாகி உள்ளன. இதில் முதலிடம் பிடித்த நிறுவனம் மட்டுமின்றி முன்னணி பிராண்டுகள் ஒட்டுமொத்தமாக எத்தனை வாகனங்களை விற்பனை செய்துள்ளன என்ற விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

    ஹீரோ மோட்டோகார்ப்

    ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும் போது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் இருசக்கர வாகனங்கள் விற்பனை பிப்ரவரியில் 5.8 சதவீதம் அதிகரித்துள்ளது. பிப்ரவரி 2024 மாதத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 4 லட்சத்து 45 ஆயிரத்து 257 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. ஜனவரி மாதத்தில் ஹீரோ நிறுவனம் 4 லட்சத்து 20 ஆயிரத்து 930 யூனிட்கள் விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஹீரோ நிறுவனம் 3 லட்சத்து 82 ஆயிரத்து 317 யூனிட்களை விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

     


    ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா

    2024 பிப்ரவரி மாதத்தில் ஹோண்டா நிறுவனம் 4 லட்சத்து 13 ஆயிரத்து 967 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இது 2024 ஜனவரி மாதத்தை விட 8.2 சதவீதம் அதிகம் ஆகும். 2023 பிப்ரவரி மாதத்தில் ஹோண்டா நிறுவனம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 064 யூனிட்களை விற்பனை செய்திருந்தது.

    டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி

    இந்திய இருசக்கர வாகனங்கள் சந்தையில் டி.வி.எஸ். நிறுவனம் மூன்றாவது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. ஜனவரி 2024 மாதத்துடன் ஒப்பிடும் போது டி.வி.எஸ். வாகன விற்பனை 0.3 சதவீதம் சரிவடைந்துள்ளது. ஜனவரியில் 2 லட்சத்து 68 ஆயிரத்து 233 யூனிட்களை டி.வி.எஸ். நிறுவனம் விற்பனை செய்திருந்த நிலையில், பிப்ரவரியில் 2 லட்சத்து 67 ஆயிரத்து 502 யூனிட்களையே விற்பனை செய்துள்ளது.

     


    பஜாஜ் ஆட்டோ

    2024 பிப்ரவரி மாதம் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 1 லட்சத்து 70 ஆயிரத்து 527 யூனிட்களை விற்பனை செய்திருக்கிறது. இது ஜனவரி 2024 மாதத்தில் விற்பனையான 1 லட்சத்து 90 ஆயிரத்து 350 யூனிட்களை விட 11.80 சதவீதம் குறைவு ஆகும்.

    சுசுகி

    2024 ஜனவரி மாதத்தை போன்றே சுசுகி நிறுவனம் பிப்ரவரியிலும் 80 ஆயிரத்திற்கும் அதிக யூனிட்களை விற்பனை செய்துள்ளது. முந்தைய மாதத்துடன் ஒப்பிடும் போது சுசுகியின் மாதாந்திர விற்பனை 3.47 சதவீதம் அதிகம் ஆகும். சமீபத்தில் தான் சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் தனது 10 லட்சமாவது யூனிட்டை உற்பத்தி செய்ததாக அறிவித்தது.

    • ஹூண்டாய் பிரான்டிங்கில் மூன்றாவது N சீரிஸ் மாடல் இது.
    • கிரெட்டா N லைன் மாடலின் புகைப்படங்கள் வெளியானது.

    ஹூண்டாய் நிறுவனம் தனது கிரெட்டா N லைன் மாடலுக்கான முன்பதிவை துவங்கியது. புதிய காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 25 ஆயிரம் ஆகும். இந்திய சந்தையில் மார்ச் 11-ம் தேதி புதிய கிரெட்டா N லைன் மாடல் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஹூண்டாய் பிரான்டிங்கில் மூன்றாவது N சீரிஸ் மாடலாக கிரெட்டா அறிமுகமாக உள்ளது.

    புதிய கிரெட்டா N லைன் மாடலின் வெளிப்புறம் மற்றும் உள்புறங்களில் ஸ்போர்ட் அம்சங்கள் வழங்கப்படுகிறது. முன்னதாக ஹூண்டாய் நிறுவனம் தனது கிரெட்டா N லைன் மாடலின் புகைப்படங்களை வெளியிட்டது. இதன் முன்புறம் ஸ்போர்ட் தோற்றம் கொண்டிருக்கிறது. இத்துடன் புதிய கிரில் மற்றும் பம்ப்பர் வழங்கப்பட்டு இருக்கிறது.

     


    ஹெட்லேம்ப் மற்றும் எல்.இ.டி. லைட்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த காரின் பிரேக் கேலிப்பர்கள் சிவப்பு நிறம் கொண்டிருக்கின்றன. பின்புறம் ரூஃப்-இல் ஸ்பாயிலர் உள்ளது. இத்துடன் ஸ்போர்ட் பம்ப்பர், டிஃப்யூசர் உள்ளது. கிரெட்டா N லைன் மாடல் தண்டர் புளூ மற்றும் பிளாக் ரூஃப் எனும் புதிய ஆப்ஷனில் கிடைக்கிறது.

    புதிய கிரெட்டா N லைன் மாடலில் 1.5 லிட்டர், 4 சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 160 ஹெச்.பி. பவர், 253 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படும் என்று தெரிகிறது.

    • எலெக்ட்ரிக் கார் உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்ததாக தகவல்.
    • திட்ட இயக்குனர் கெவின் லின்ச் கூட்டத்தில் கலந்து கொண்டதாக தகவல்.

    ஆப்பிள் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் கார் திட்டத்தை ரத்து செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆப்பிள் நிறுவனம் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக எலெக்ட்ரிக் கார் உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    ஊழியர்களுடன் நிறுவனத்திற்குள் நடைபெற்ற கூட்டத்தில் ஆப்பிள் கார் திட்டம் ரத்து செய்யப்படுதாக அதன் தலைமை நிர்வாக அலுவலர் ஜெஃப் வில்லியம்ஸ் தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் போது திட்ட இயக்குனர் கெவின் லின்ச் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

    இந்த திட்டத்தில் பணியாற்றி வந்த 2 ஆயிரத்திற்கும் அதிக டெக்னிஷியன்கள் ஆப்பிள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு பிரிவுக்கு மாற்றப்படுவர் என தெரிகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் செயற்கை நுண்ணறிவு சார்ந்த திட்டங்களில் அதிக கவனம் செலுத்த முடியும். புதிய தகவல் குறித்து ஆப்பிள் சார்பில் எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    ஆப்பிள் கார் திட்டம் ரத்து செய்யப்படுவதற்கான மிகப்பெரிய காரணம், சந்தையில் தற்போது ஆப்பிள் சாதனங்கள் ஈட்டி வரும் லாபத்தை புதிய கார் ஈட்டுமா என்பதும், காரை வெளியிடுவதற்கு மட்டுமே இன்னமும் பல மில்லியன் டாலர்களை முதலீடு செய்ய வேண்டியிருக்கும் என்பதும் தான் என்று கூறப்படுகிறது.

    இது தொடர்பாக வெளியான தகவல்களின் படி ஒருவேளை ஆப்பிள் கார் வெளியாகும் பட்சத்தில் அதன் விலை நிச்சயம் 1 லட்சம் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 83 லட்சம் வரையிலான விலையை கொண்டிருக்கும். இத்தனை விலை கொடுத்து காரை வாங்குவோர் எண்ணிக்கை மிகவும் குறைவு. இதனால் சந்தையில் இது எதிர்பார்த்த லாபத்தை ஈட்டும் வாய்ப்புகள் குறைவு தான் என ஆப்பிள் நிர்வாக குழு உறுப்பினர்கள் கவலை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    • எலெக்ட்ரிக் எஸ்.யு.வி.-க்கான காப்புரிமை கோரி விண்ணப்பித்தது.
    • இந்த கார் 200 கி.மீ. ரேன்ஜ் வழங்கும் என தகவல்.

    வியட்நாமை சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம் சமீபத்தில் இந்திய சந்தையில் களமிறங்கியது. மேலும் தமிழ்நாட்டில் தனது வாகனங்களை உற்பத்தி செய்வதற்கான ஆலையை கட்டமைத்து வருகிறது. இந்த வரிசையில் வின்பால்ட் நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் வாகனம், VF3 காம்பேக்ட் எலெக்ட்ரிக் எஸ்.யு.வி.-க்கான காப்புரிமை கோரி விண்ணப்பித்து இருக்கிறது.

    புதிய வின்பாஸ்ட் VF3 மாடல் இந்திய சந்தையில் எம்.ஜி. கொமெட் EV மாடலுக்கு போட்டியாக அமைகிறது. தற்போது காப்புரிமை கோரி விண்ணப்பிக்கப்பட்டு இருக்கும் நிலையில், வின்பாஸ்ட் VF3 மாடல் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.

     


    அளவீடுகளை பொருத்தவரை வின்பாஸ்ட் VF3 மாடல் 3190mm நீளம், 1678mm அகலம், 1620mm உயரமாக இருக்கிறது. இந்த காரின் பூட் ஸ்பேஸ் (இருக்கையின் பின்புறம் பொருட்களை வைத்துக் கொள்வதற்கான பகுதி) மட்டும் 550 லிட்டர்கள் ஆகும். இந்த காரில் வழங்கப்பட இருக்கும் பேட்டரி பேக் பற்றிய விவரங்கள் மர்மமாகவே உள்ளன.

    எனினும், வின்பாஸ்ட் VF3 எலெக்ட்ரிக் மின் எஸ்.யு.வி. மாடல் முழு சார்ஜ் செய்தால் 200 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என்று கூறப்படுகிறது. சர்வதேச சந்தையில் வின்பாஸ்ட் VF3 மாடல்- இகோ மற்றும் பிளஸ் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த கார் ஒற்றை மோட்டார் வடிவில் மட்டுமே விற்பனை செய்யப்படும் என தெரிகிறது.

    இந்த காரில் 10 இன்ச் அளவில் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே கனெக்டிவிட்டி வழங்கப்படுகிறது. இத்துடன் டிஜிட்டல் கிளஸ்டர், மல்டி ஃபன்ஷன் ஸ்டீரிங் வீல், 2-ஸ்போக் வீல் டிசைன் வழங்கப்படுகிறது. மேலும் ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், டூயல் ஏர்பேக், குரூயிஸ் கண்ட்ரோல் போன்ற வசதிகள் வழங்கப்படுகிறது.

    • எலெக்ட்ரிக் கார்களை இந்தியாவில் அசெம்பில் செய்யும் வால்வோ.
    • 690 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்துள்ளது.

    வால்வோ நிறுவனத்தின் இரண்டு புதிய எலெக்ட்ரிக் கார் மாடல்கள் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட உள்ளது. முற்றிலும் எலெக்ட்ரிக் வடிவில் உருவாக்கப்பட்ட வால்வோ EX90 மற்றும் EX30 EV மாடல்கள் அடுத்த ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என வால்வோ கார்ஸ் இந்தியா நிர்வாக இயக்குனர் ஜோதி மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.

    இந்திய சந்தையில் வால்வோ நிறுவனம் XC40 ரிசார்ஜ் மற்றும் C40 ரிசார்ஜ் என இரண்டு எலெக்ட்ரிக் கார் மாடல்களை விற்பனை செய்து வருகிறது. வால்வோ புது அறிவிப்பின் படி இந்த எண்ணிக்கை அடுத்த ஆண்டு இருமடங்கு அதிகரிக்க இருக்கிறது.

     


    புதிய எலெக்ட்ரிக் கார்கள் அறிமுகம் செய்யப்படுவதோடு, இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை அசெம்பில் செய்வதற்கான பணிகளிலும் வால்வோ ஈடுபட்டு வருவதாக ஜோதி மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.

    விற்பனையை பொருத்தவரை வால்வோ இந்தியா நிறுவனம் 2023 ஆண்டில் 690 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்துள்ளது. இது அந்நிறுவனத்தின் மொத்த விற்பனையில் 28 சதவீதம் ஆகும். இதில் 519 யூனிட்கள் XC40 ரிசார்ஜ், 180 யூனிட்கள் C40 ரிசார்ஜ் அடங்கும். இந்த ஆண்டு தனது எலெக்ட்ரிக் வாகன விற்பனை 33 சதவீதம் ஆக அதிகரிக்கும் என வால்வோ இந்தியா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

     


    எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. என்ற வகையில், வால்வோ EX90 மாடல் கடந்த 2022-ம் ஆண்டு சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இது ஒரு 7 சீட்டர் எலெக்ட்ரிக் கார் ஆகும். இந்த கார் EV SPA2 ஆர்கிடெக்ச்சரில் உருவான வால்வோ-வின் முதல் மாடல் என்ற பெருமையை பெற்றது.

    இந்த காரின் டாப் எண்ட் மாடலில் 111 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்படுகிறது. இது முழு சார்ஜ் செய்தால் 600 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என சான்று பெற்று இருக்கிறது. இதில் உள்ள எலெக்ட்ரிக் மோட்டார்கள் 517 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்துகிறது.

    வால்வோ EX30 மாடல் என்ட்ரி லெவல் எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. ஆகும். இதில் 69 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்படுகிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 442 கிலோமீட்டர்கள் வரை செல்லும் என சான்று பெற்றிருக்கிறது. இதில் உள்ள எலெக்ட்ரிக் மோட்டார் 427 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. 

    ×