என் மலர்
ஆட்டோமொபைல்
- பைக் டிரையம்ப் பெர்ஃபாமன்ஸ் எல்லோ ஸ்கீம் மற்றும் அக்ரபோவிக் சைலன்சரைப் பெறுகிறது.
- பை-டைரக்ஷனல் குயிக்-ஷிஃப்டருடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் 2026-ம் ஆண்டிற்கான புதிய மாடலான ஸ்பீட் டிரிபிள் 1200 RX-ஐ வெளியிட்டுள்ளது. இந்த மாடலில் ஸ்பீட் டிரிபிள் 1200 RS-ஐ விட ஸ்போர்ட்டியான கூடுதல் அம்சங்கள் உள்ளன. மேலும் இது "ஸ்பீட் டிரிபிளின் இறுதி அவதாரம்" என்று அழைக்கப்படும் அளவுக்கு சிறந்தது. இந்த பைக் உலகளாவில் 1200 யூனிட்கள் மட்டுமே தயாரிக்கப்படுகிறது.
புதிய ஸ்பீட் டிரிபிள் 1200 RS அப்ரைட் ரைடிங் அனுபவத்தை வழங்காது, அதற்கு பதிலாக, இந்த பைக் சிறந்த அம்சங்களை பெற்றிருக்கிறது. இதன் ஃபூட் பெக்குகள் சற்று பின்னால் அமைக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் கிளிப்-ஆன் ஹேண்டில் பார்கள் பைக்கை ஓட்டுபவரின் கையை மேலும் முன்னோக்கி இருக்க செய்கிறது. கூடுதலாக, இருக்கையும் வேறு வடிவத்தில் வருகிறது. அதைத் தவிர, பைக் டிரையம்ப் பெர்ஃபாமன்ஸ் எல்லோ ஸ்கீம் மற்றும் அக்ரபோவிக் சைலன்சரைப் பெறுகிறது.
இந்த பைக்கிலும், ஸ்பீட் டிரிபிள் 1200 RS தொடர்ந்து 1,160 சிசி இன்லைன்-மூன்று சிலிண்டர் எஞ்சின் உள்ளது. இது 10,750 ஆர்பிஎம்மில் 180 ஹெச்பி பவரையும், 8,750 ஆர்பிஎம்மில் ரிவ் செய்யும் போது 127 என்எம் டார்க்கையும் வெளியிடும் வகையில் டியூன் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இத்துடன் பை-டைரக்ஷனல் குயிக்-ஷிஃப்டருடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

சஸ்பென்ஷனை பொருத்தவரை RS மாடலில் இருந்து தக்கவைக்கப்பட்ட ஆலின்ஸ் SmartEC3 எலக்ட்ரானிக் செமி-ஆக்டிவ் சஸ்பென்ஷன் மற்றும் ஆலின்ஸ் SD EC எலக்ட்ரானிக் ஸ்டீயரிங் டேம்பரும் உள்ளன. பிரேக்கிங் அமைப்பில் அதே டுவின் பிரெம்போ ஸ்டைல்மா மோனோபிளாக் காலிப்பர்கள் மற்றும் MCS ரேடியல் மாஸ்டர் சிலிண்டர் மற்றும் ஒரு கார்னரிங் ஆன்டிலாக் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளன.
இத்துடன் கார்னரிங் டிராக்ஷன் கண்ட்ரோல், முன்புறம் லிஃப்ட் கண்ட்ரோல், என்ஜின் பிரேக்கிங் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் ஐந்து ரைடிங் மோட்கள்: ரெயின், ரோடு, ஸ்போர்ட், டிராக் மற்றும் ரைடர் ஆகியவை உள்ளன. ட்ராக் பயன்பாடுகளுக்காக ரைடர் ரேக் ஸ்லைடு அசிஸ்ட் கொண்டுள்ளது.
- இந்தியாவில் இந்த காரின் வெளியீடு மும்பையில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.
- வெறும் 15 நிமிடங்களில் 321 கிமீ வரை அதிவேக சார்ஜிங் திறன்களை வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கார் பிரியர்களுக்கு எவ்வளவு தான் புதுவித மாடலில் கார்கள் சந்தைக்கு வந்தாலும், ஜாகுவார் மீதான ஈர்ப்பு அளவிடமுடியாதவை. ஜாகுவார் வைத்திருந்தால் பெருமிதம் என கருதுபவர்களும் உள்ளனர். இதனிடையே, கடந்த ஆண்டு இறுதியில் அறிமுகமான ஜாகுவார் டைப் 00 EV கான்செப்ட் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இதனை தொடர்ந்து இந்த கார் எப்போது சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், ஜாகுவார் டைப் 00 EV கான்செப்ட் அடுத்த மாதம் 14-ந்தேதி இந்தியாவில் அறிமுகமாகிறது. தற்போது மொனாக்கோவில் உள்ள இந்த மாடல் இந்தியா வருவதற்கு முன்பு டோக்கியோவில் சந்தைப்படுத்தப்பட உள்ளது. இந்தியாவில் இந்த காரின் வெளியீடு மும்பையில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.
ஜாகுவார் டைப் 00 EV கான்செப்ட் என்றால் என்ன?
ஜாகுவார் டைப் 00 முற்றிலும் புதிய JEA (ஜாகுவார் எலக்ட்ரிக் ஆர்கிடெக்ச்சர்) அமைப்பை அடிப்படையாகக் கொண்டது. இது ஒரு பிரத்யேக எலெக்ட்ரிக் வாகனமாகும். '00' என்பது பூஜ்ஜிய உமிழ்வு மற்றும் பிரிட்டிஷ் வாகன உற்பத்தியாளருக்கு முழுமையான மாற்றத்தைக் குறிக்கிறது. மேலும், இந்த ஆண்டு இறுதியில் ஒரு புதிய உற்பத்திக்கு தயார் நிலையில் எலக்ட்ரிக் கார் வரும் என்று எதிர்பார்க்கலாம். டைப் 00 உடன், ஜாகுவார் முழு எலக்ட்ரிக் பாதையையும் எடுக்கிறது.
இந்த பிராண்ட் ஏற்கனவே இங்கிலாந்தில் நான்கு கதவுகள் கொண்ட சலூனை சோதித்து வருகிறது. வரவிருக்கும் 4-கதவு GT, டைப் 00 EV கான்செப்ட்டிலிருந்து வடிவமைப்பு உத்வேகங்களை எடுக்கும். உண்மையில், முன்மாதிரியும் ஒரு சூப்பர்-லாங் பானட், பிளாட்-டெக் பூட் கவர், டேப்பர்டு ரூஃப் லைன் மற்றும் பெரிய விளிம்புகளைப் பெறுகிறது. இது 770 கிமீ WLTP வரம்பை வழங்கும் என்றும், வெறும் 15 நிமிடங்களில் 321 கிமீ வரை அதிவேக சார்ஜிங் திறன்களை வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வரவிருக்கும் 4-கதவு GT இந்த ஆண்டு இறுதியில் சந்தைக்கு வரும். இந்த கார் முதலில் பிராண்ட்-இன் வருகையை குறிக்கும் வகையில் அமைகிறது. இதனால், வரிசையில் முதலிடத்தில் அமர்ந்திருக்கும். பின்னர், சிறிய, சற்றே குறைந்த விலை எலக்ட்ரிக் கார்கள் அறிமுகப்படுத்தப்படும். அடுத்த ஆண்டு வாக்கில் இந்த மாடல்கள் இந்தியாவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.
- RTX 300 என்பது 2-3 மாதங்களுக்குள் அறிமுகப்படுத்தப்படும்.
- ராயல் என்ஃபீல்ட் 750சிசி மோட்டார்சைக்கிளை சோதித்துப் பார்த்து தயாரித்து வருகிறது.
2025-ம் ஆண்டு பிறந்தது முதல் தற்போது வரை இருசக்கர வாகன பிரியர்களுக்கான புதுவித மாடல்கள் குறைந்த அளவிலே வெளிவந்துள்ளது. பல்வேறு காரணங்களால் எண்ணிக்கை குறைந்துள்ள போதிலும், ஆண்டின் இரண்டாம் பாதியில் நிலைமை முற்றிலும் மாறப்போவது தெரியவந்துள்ளது. அந்த வகையில், இந்த ஆண்டு இனி வரப்போக இருக்கும் பைக் மாடல்கள் குறித்து பார்ப்போம்...
சிஎஃப்மோட்டோ 450எம்டி (CFMoto 450MT)
சிஎஃப்மோட்டோ 450எம்டி என்பது சாகச பைக்கில் பிரபலமாக அறியப்படும் ஒன்றாகும். இந்த ஆண்டு பண்டிகை காலத்தில் இந்த மாடல் அறிமுகப்படுத்தும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், இது தொடர்பான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

டிவிஎஸ் ஆர்டிஎக்ஸ் 300 (TVS RTX 300)
இந்திய சந்தையில் புதிய RTX 300 என்பது 2-3 மாதங்களுக்குள் அறிமுகப்படுத்தப்படும். இது டிவிஎஸ் நிறுவனத்தின் முதல் அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் ஆக வெளியாகும் என தெரிகிறது. மேலும், இது பிராண்டின் புதிய 300cc எஞ்சினைப் பயன்படுத்தும் முதல் மோட்டார்சைக்கிள் ஆக இருக்கும். இந்த பைக் முதன்முதலில் ஜனவரி 2025 இல் பாரத் மொபிலிட்டி எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தப்பட்டது. 19-17-இன்ச் அலாய் வீல் அமைப்புடன் , டிவிஎஸ் பைக்கின் ஆஃப்-ரோடு சார்ந்த வேரியண்ட் வழங்கக்கூடும்.
பிஎம்டபிள்யூ எஃப் 450 ஜிஎஸ் (BMW F 450 GS)
பிஎம்டபிள்யூ எஃப் 450 ஜிஎஸ் கான்செப்ட் இந்தியாவில் முதன்முதலில் எக்ஸ்போ 2025-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இது பிஎம்டபிள்யூவின் மிகச்சிறிய மற்றும் மிகவும் மலிவு விலையில் பல சிலிண்டர் வகையாக இருக்கும். இந்த பைக்கின் தயாரிப்பு மாடல் சமீபத்தில் சோதனை ஓட்டங்களுக்கு உட்படுத்தப்பட்டது. மேலும் இது ஆஃப்-ரோடு-ரெடியாகத் தோன்றிய கான்செப்ட்டிலிருந்து மிகவும் வித்தியாசமாக இருந்தது. இது இந்தியாவில் டிவிஎஸ்-ஆல் தயாரிக்கப்படும். மேலும் அதிகாரப்பூர்வ வெளியீடு இந்த ஆண்டு நவம்பர்-டிசம்பர் மாதங்களில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராயல் என்ஃபீல்ட் ஹிமாலயன் 750 (Royal Enfield Himalayan 750)
உலகளவில் பிரபலமான ஹிமாலயன் பெயருக்கு விரைவில் 750 என்ற அடைமொழி கிடைக்கும். நீண்ட காலமாக ஒரு பெரிய ஹிமாலயன் பைக்கை ரைடர்கள் கோரி வந்த நிலையில், ராயல் என்ஃபீல்ட் 750சிசி மோட்டார்சைக்கிளை சோதித்துப் பார்த்து தயாரித்து வருகிறது. இந்த மோட்டார்சைக்கிள் இதுவரை சில முறை சோதனைக்குள்ளாப்பட்டது. மேலும், 19-17 அங்குல ஸ்போக் வீல் கலவை மற்றும் அதிக எடை கொண்ட ஆஃப்-ரோடர் பைக்கை விட இது ஒரு டூரர் பைக் என்பது தெளிவாக தெரிகிறது.

கேடிஎம் 390 எஸ்எம்சி ஆர் (KTM 390 SMC R)
கேடிஎம் 390 எஸ்எம்சி ஆர் அதன் பெரும்பாலான கூறுகளை 390 எண்டிரோ ஆர் உடன் பகிர்ந்து கொள்ளும். ஆனால் வழக்கமான சூப்பர்மோட்டோ பாணியில், இரு முனைகளிலும் 17 அங்குல சக்கரங்களில் சாலை-சார்புடைய டயர்களுடன் சவாரி செய்யும். இது ஒரு ஸ்போர்ட்ர்ஸ் ரோட் பைக்கை தேடும் ரைடர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். இது ரூ. 3.36 லட்சம் விலை கொண்ட 390 எண்டிரோ ஆர்-ஐ விட மலிவு விலையில் கிடைக்க்கும். மேலும் அதிகாரப்பூர்வ வெளியீடு ஓரிரு மாதங்களில் நடைபெறும்.
- வாடிக்கையாளர்கள் ஹோண்டா அமேஸில் ரூ.57,200 மதிப்புள்ள தள்ளுபடியைப் பெறலாம்.
- மே மாத தள்ளுபடியில் சிட்டி மாடலுக்கு ரூ.63,300 வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது.
ஜப்பானிய கார் நிறுவனமான ஹோண்டா, இந்தியாவின் அதன் விற்பனையை அதிகரிக்க முயற்சித்து வருகிறது. இதனால் மே மாதத்திற்கான சலுகைகளை அறிவித்துள்ளது. இந்த சலுகைகளில் ரொக்க தள்ளுபடி, ஸ்கிராப்பேஜ் போனஸ்கள் மற்றும் பல அடங்கும். இந்த சலுகைகள் நகரத்திற்கு நகரம் மற்றும் டீலர்ஷிப்களைப் பொறுத்து மாறுபடலாம்.
ஹோண்டா அமேஸ் சில மாதங்களுக்கு முன்பு ஒரு புதுப்பிப்பைப் பெற்றது, மேலும் இது இரண்டாம் தலைமுறை அமேஸுடன் விற்பனை செய்யப்படுகிறது. வாடிக்கையாளர்கள் ஹோண்டா அமேஸில் ரூ.57,200 மதிப்புள்ள தள்ளுபடியைப் பெறலாம்.
மூன்றாம் தலைமுறை ஹோண்டா அமேஸ் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் 90 ஹெச்பி உச்ச சக்தியை வெளிப்படுத்துகிறது. அதேசமயம், பழைய செடான் மாடலில் அதே பவர்டிரெய்ன் கொண்ட ஒற்றை வேரியண்ட் உள்ளது.

ஹோண்டா சிட்டி இ: ஹெச்இவி காரில் 120 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் பெட்ரோல்-எலக்ட்ரிக் ஹைப்ரிட் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், சிட்டியின் நிலையான மாடலில் 121 ஹெச்பி பீக் பவரை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.
ஹோண்டா சிட்டி e: HEV மீது ரூ.65,000 மதிப்புள்ள தள்ளுபடியை வழங்குகிறது. அதே நேரத்தில் மே மாத தள்ளுபடியில் சிட்டி மாடலுக்கு ரூ.63,300 வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது.
சில நாட்களுக்கு முன்பு எலிவேட் அபெக்ஸ் சம்மர் பதிப்பை அறிமுகப்படுத்துவதன் மூலம் ஹோண்டா அதன் எலிவேட் சீரிசை பன்முகப்படுத்தியது. ஹோண்டா எலிவேட்டில் 121 ஹெச்பி உச்ச சக்தியைத் தூண்டும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் உள்ளது.
ஹோண்டா நிறுவனம் தற்போது ஹோண்டா எலிவேட்டில் ரூ.76,100 வரை தள்ளுபடியை வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் ரூ.12.39 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் கிடைக்கும் எலிவேட் சம்மர் அபெக்ஸ் மாடலையும் வாங்க சிந்திக்கலாம்.
- எஞ்சின் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
- ஆஃப்-ரோடு பயன்முறையில், பின்புற சக்கரத்தில் உள்ள ஏபிஎஸ் முழுமையாக துண்டிக்கும் வசதியும் வழங்கப்படுகிறது.
ஜாவா, பிஎஸ்ஏ மற்றும் யெஸ்டியின் தாய் நிறுவனமான கிளாசிக் லெஜண்ட்ஸ் நாளை மறுநாள் ஒரு புதிய மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்த இருந்தது. இது பெரும்பாலும் யெஸ்டி அட்வென்ச்சராக இருக்கலாம். ஆனால் புதிய வடிவமைப்புடன் இருக்கும் என்று கூறப்படுகிறது. இப்போது, புதிய மோட்டார்சைக்கிள் ஜூன் மாதம் அறிமுகப்படுத்தப்படும் என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.
எனினும், வெளியீட்டு தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை. யெஸ்டி அட்வென்ச்சர் ஒரு வருடத்திற்கு முன்பு, எஞ்சின் மற்றும் அம்சங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்களுடன் ஆகஸ்ட் 2024 இல் புதுப்பிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய மாடல் ஒரு தனித்துவமான வடிவமைப்பு மாற்றத்தைக் காணக்கூடும். இது முந்தைய ராயல் என்ஃபீல்ட் ஹிமாலயன் 411 மாடலை போன்ற தோற்றம் கொண்டிருக்கும் என்று தெரிகிறது.
புதிய மாடலில் எஞ்சின் மற்றும் சேசிஸ் அப்படியே இருக்கும். யெஸ்டி அட்வென்ச்சர் தற்போது 334 சிசி சிங்கிள்-சிலிண்டர் லிக்விட்-கூல்டு எஞ்சினை பெறுகிறது. இது 29.68 பிஹெச்பி பவர் கொண்டிருக்கிறது. இது முன்பை விட 0.6 பிஹெச்பி குறைவு ஆகும். ஆனால் டார்க் வெளியீட்டில் எவ்வித மாற்றமும் இல்லாமல், 29.84 என்எம் அப்படியே உள்ளது. இந்த எஞ்சின் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

அம்சங்களை பொருத்தவரை ஆன்போர்டு யூஎஸ்பி சார்ஜர், புளூடூத் இணைப்பு, டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், ஏபிஎஸ் மற்றும் ரோட், ரெயின் மற்றும் ஆஃப்-ரோடு என மூன்று ரைடிங் மோட்களை கொண்டிருக்கின்றன. ஆஃப்-ரோடு பயன்முறையில், பின்புற சக்கரத்தில் உள்ள ஏபிஎஸ் முழுமையாக துண்டிக்கும் வசதியும் வழங்கப்படுகிறது.
இந்த மோட்டார்சைக்கிள் தற்போது ரூ. 2.10 லட்சம் முதல் ரூ. 2.20 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் விலைகள் ஓரளவு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யெஸ்டி அட்வென்ச்சர், ஹீரோ எக்ஸ்-பல்ஸ் 210, கேடிஎம் 250 அட்வென்ச்சர் மற்றும் ராயல் என்ஃபீல்ட் ஹிமாலயன் போன்றவற்றுக்கு ஒரு நல்ல மாற்றாக இருக்கும்.
- அனைத்து வேரியண்ட்களும் 6 ஏர்பேக் பாதுகாப்பு அம்சத்தை பெறுகின்றன.
- வேரியண்ட்களை பொறுத்து பல அம்சங்களைக் கொண்டுள்ளது.
இந்திய கார் நிறுவனமான டாடா, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டாடா அல்ட்ரோஸ் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை வெளியிட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட அல்ட்ரோஸ் மாடல் முழுமையாக மேம்படுத்தப்பட்டிருப்பது இதுவே முதல் முறை ஆகும். முன்னதாக 2021 ஆம் ஆண்டில் இந்த காரின் டார்க் எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டது.
2025 டாடா அல்ட்ரோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் நேர்த்தியான, மெல்லிய கோடுகள் மற்றும் 3D முன்பக்க கிரில் கொண்டுள்ளது. இத்துடன் புதிய லுமினேட் LED விளக்குகள், இன்ஃபினிட்டி கனெக்டெட் LED டெயில் லைட்கள் மற்றும் ஃபிளஷ் டோர் ஹேண்டில்கள் ஆகியவற்றையும் பெறுகிறது. 2025 டாடா அல்ட்ரோஸில் உள்ள மற்ற குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செங்குத்தாக வைக்கப்பட்டுள்ள ஃபாக்-லேம்ப் ஹவுசிங், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட முன்பக்க பம்பர் மற்றும் புதிய 5-ஸ்போக் 16-இன்ச் அலாய் வீல்கள் அடங்கும்.

டாடா அல்ட்ரோஸ் ஃபேஸ்லிஃப்ட்டின் உட்புறத்திலும், கேபினிலும் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது 2-ஸ்போக் ஸ்டீரிங் வீல், 10.25-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் பல அம்சங்களை பெறுகிறது. ஒட்டுமொத்தமாக, டேஷ்போர்டின் வடிவமைப்பு புதுப்பிக்கப்பட்டு, முந்தைய மாடலில் இருப்பதை விட புதுமையான தோற்றத்தை அளிக்கிறது.
2025 டாடா அல்ட்ரோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் ஸ்மார்ட், ப்யூர், கிரியேட்டிவ், அக்கம்ப்ளிஷ்டு எஸ் மற்றும் அக்கம்ப்ளிஷ்டு + எஸ் என ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கிறது. அனைத்து வேரியண்ட்களும் 6 ஏர்பேக் பாதுகாப்பு அம்சத்தை பெறுகின்றன.
டாடா அல்ரோஸ் ஃபேஸ்லிஃப்ட் 17.78cm தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட், ஆட்டோ ஃபோல்டு ORVM, ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், உயரத்தை சரிசெய்யக்கூடிய ஓட்டுநர் இருக்கை, குரல் உதவியுடன் கூடிய மின்சார சன்ரூஃப் மற்றும் வேரியண்ட்களை பொறுத்து பல அம்சங்களைக் கொண்டுள்ளது.
அல்ட்ரோஸ் ஃபேஸ்லிஃப்ட் அதன் தற்போதைய மாடலில் இருந்து எஞ்சினைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. இது 2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சினையும் கொண்டுள்ளது.
- ஒரு உலோக மெஷ் மூலம் பாதுகாக்கப்பட்ட வட்ட வடிவ ஹெட்லேம்ப் கொண்டுள்ளது.
- 398 சிசி ஒற்றை-சிலிண்டர் எஞ்சினைக் கொண்டு இருக்கும்.
டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் இந்தியா நிறுவனம் தனது மலிவு விலை 400 சிசி பைக்குகளின் வேறுபாட்டை விரிவுபடுத்தி வருகிறது. இந்த வரிசையில் ஸ்க்ராம்ப்ளர் 400 X இன் ஆஃப்-ரோடு வகையும் சேர்க்கப்பட்டுள்ளது. இது ஸ்க்ராம்ப்ளர் 400 XC என்று அழைக்கப்படுகிறது. அறிமுகம் செய்யப்படுத்தப்படுவதற்கு முன்பு, இந்த பைக் பல்வேறு கட்டங்களில் சோதனைக்குட்பட்டது. வடிவமைப்பிலிருந்து தொடங்கி, டிரையம்ப் ஸ்க்ராம்ப்ளர் 400 XC ஆஃப்-ரோடிங்கிற்காக அர்ப்பணிக்கப்பட்ட வடிவமைப்பைக் கொண்டிருக்கும்.
ஒரு உலோக மெஷ் மூலம் பாதுகாக்கப்பட்ட வட்ட வடிவ ஹெட்லேம்ப் கொண்டுள்ளது. கூடுதலாக, பைக்கில் மஞ்சள் நிறத்தில் வரையப்பட்ட ஒரு பீக் உள்ளது. இது புதிய பெயிண்ட் ஸ்கீம் விருப்பங்களை அறிமுகப்படுத்துகிறது. அதைத் தவிர, பைக் அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ், கிராஸ்-ஸ்போக் டியூப்லெஸ் வீல்கள், ஹெட்லேம்ப்-இன் மேல் வைக்கப்பட்டுள்ள வைசர் மற்றும் எஞ்சினுக்கு சிறந்த சம்ப் கார்டு ஆகியவற்றுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிரையம்ப் ஸ்க்ராம்ப்ளர் 400 XC-யின் வன்பொருள் பெரும்பாலும் அதன் முந்தைய மாடல்களை போலவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், சிறந்த ஆஃப்-ரோடு செயல்திறனுக்காக சஸ்பென்ஷன் அமைப்புக்கு இது வேறுபட்ட டியூனிங்கைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கலாம். இதற்கிடையில், 398 சிசி ஒற்றை-சிலிண்டர் எஞ்சினைக் கொண்டு இருக்கும்.
இந்த யூனிட் 39 ஹெச்பி பவரையும் 37 என்எம் பீக் டார்க்கையும் வெளிப்படுத்தும் வகையில் டியூன் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
புதிய டிரையம்ப் ஸ்க்ராம்ப்ளர் 400 XC ரூ.2.94 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். இது ஸ்க்ராம்ப்ளர் 400 X உடன் ஒப்பிடும்போது ரூ.27,000 அதிகம்.
- பியூர் பிளாக் அல்லது காக்னாக் பிரவுன் நிற இன்டீரியர் ஆப்ஷன்களுடன் கிடைக்கின்றன.
- இந்த கார் ஒரு முறை சார்ஜ் செய்தால் 430 கிமீ தூரம் செல்லும் என்று கூறப்படுகிறது.
கார் பிரியர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட MG M9 இந்திய சந்தையில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்நிகழ்வுக்கு முன்னதாக இந்த மாடல் கார்கள் ஷோரூம்களுக்கு வர தொடங்கி உள்ளன. இதனை தொடர்ந்து நிறுவனம் மூலம் விற்பனை செய்யப்படும். சைபர்ஸ்டர் மாடலுடன் இணைந்து, கியா நிறுவனத்தின் சொகுசு கார் டீலர்ஷிப் வழியாக விற்கப்படும் பிராண்டின் இரண்டாவது மாடலாக M9 இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மின்சார MPV-யின் உட்புற இடத்தை அதிகப்படுத்தும் நோக்கில் ஒரு பாக்ஸி வடிவமைப்பைக் கொண்டுள்ளது. ஒரு தனித்துவமான தோற்றத்தை உருவாக்க, வாகனத்தின் முன்பக்கம் LED விளக்குகளால் மேம்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, முன்பக்கம் பம்பரில் ஒருங்கிணைக்கப்பட்ட ஹெட்லேம்ப்கள் உள்ளன. அவை வாகனத்தின் கீழ் பகுதி வரை நீட்டிக்கப்படும் ஒரு குரோம் டிரிம் மூலம் சூழப்பட்டுள்ளன.
வாகனத்தின் பின்புறம் இந்த வடிவமைப்பை எதிரொலிக்கிறது. அதன்படி பின்புறத்தில் குரோம் அக்சென்ட்கள் மற்றும் முழு அகல லைட் பார் மூலம் இணைக்கப்பட்ட செங்குத்தான டெயில் லைட்களைக் கொண்டுள்ளது. அதன் அழகியல் கவர்ச்சியை மேம்படுத்த, பிராண்ட் பின்புற பம்பரில் சில கோடுகள் மற்றும் வரையறைகளை வழங்கியுள்ளது.
எம்ஜி M9 காருக்கான அம்சங்கள் பட்டியலில் பனோரமிக் சன்ரூஃப், 64-வண்ண சுற்றுப்புற விளக்குகள், 12-ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம், சௌகரியமான இருக்கைகள், இருக்கைகளை 16-வழிகளில் அட்ஜஸ்ட் செய்யும் வசதி மற்றும் காற்றோட்டம் மற்றும் வெப்பமூட்டும் செயல்பாடுகளுடன் 8 மசாஜ் அமைப்புகள் ஆகியவை அடங்கும்.
இவை அனைத்தும் பியூர் பிளாக் அல்லது காக்னாக் பிரவுன் நிற இன்டீரியர் ஆப்ஷன்களுடன் கிடைக்கின்றன. எம்ஜி M9 மாடலில் 90 kWh பேட்டரி பேக் பொருத்தப்பட்டிருக்கும். இந்த அலகு 240 hp மற்றும் 350 Nm பீக் டார்க்கை உற்பத்தி செய்யும் மின்சார மோட்டாரை இயக்குகிறது. இந்த கார் ஒரு முறை சார்ஜ் செய்தால் 430 கிமீ தூரம் செல்லும் என்று கூறப்படுகிறது. 120 kW DC சார்ஜரைப் பயன்படுத்தி பேட்டரியை வெறும் 30 நிமிடங்களில் 30 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்யலாம்.
- பிளாட்டினா NXT 17-இன்ச் அலாய் வீல்களுடன் வருகிறது.
- பஜாஜ் பிளாட்டினா 110 NXT ரூ.74,214 விலையில் கிடைக்கிறது.
இருசக்கர வாகன பிரியர்களின் விருப்பத்திற்கு ஏற்ப புதுவிதமான மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. எனினும் நடுத்தர மக்கள் பெட்ரோல் விலையை கருத்தில் அதிக மைலேஜ் தரும் வாகனங்களே வாங்க விரும்புகின்றனர். அந்த வகையில் பஜாஜ் நிறுவனம் தற்போது பிளாட்டினா NXT 110 மாடலை அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த மாடல் பல்வேறு கட்ட சோதனைகளுக்குப் பிறகு சிறப்பு அம்சங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் OBD-2B விதிமுறைகளுக்கு ஏற்ப எஞ்சின் டியூன் செய்யப்பட்டுள்ளது. இந்த புதுப்பிப்புகள் ஸ்டாண்டர்ட் மாடலின் விலையில் இருந்து சற்று (அதாவது ரூ.2,600) உயர்த்தப்பட்டு உள்ளது.
புதுப்பிக்கப்பட்ட பிளாட்டினா 110 NXT முந்தைய மாடலைப் போலவே அதே எஞ்சினைக் கொண்டுள்ளது. இருப்பினும், இது இப்போது இந்திய அரசாங்கத்தால் செயல்படுத்தப்பட்ட OBD-2B விதிமுறைகளுக்கு இணங்க டியூன் செய்யப்பட்டுள்ளது. இது 115.45cc எஞ்சினை முறையே 8.5 hp பவர் மற்றும் 9.81 Nm இழுவிசை கொண்டுள்ளது.

2025 பஜாஜ் பிளாட்டினா முந்தைய மாடலில் காணப்பட்ட அதே அடிப்படைகளைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. இருப்பினும், இப்போது ஹெட்லைட் அமைப்பைச் சுற்றி குரோம் பெசல் முன்பக்கத்தில் LED DRLகளுடன் உள்ளது மற்றும் சிவப்பு-கருப்பு, சில்வர்-கருப்பு மற்றும் மஞ்சள் கருப்பு வண்ணங்களில் வழங்கப்படுகிறது. மேலும், எரிபொருள் டேங்கில் உள்ள புதிய கிராபிக்ஸ் முந்தைய மாடலிலிருந்து அதை வேறுபடுத்துகிறது. மேலும், டிஜிட்டல் கன்சோலுக்கு மேலே ஒரு USB சார்ஜிங் போர்ட்டை ஒருங்கிணைத்துள்ளது.
பிளாட்டினா NXT 17-இன்ச் அலாய் வீல்களுடன் வருகிறது. 2025 பஜாஜ் பிளாட்டினா 110 NXT சில கூடுதல் அம்சங்கள், புதிய அழகுசாதனப் பொருட்கள் மற்றும் OBD-2B இணக்கமான எஞ்சின் ஆகியவற்றைப் பெறுகிறது. இது விலையில் சிறிது அதிகரிப்புக்கு வழிவகுக்கிறது. பஜாஜ் பிளாட்டினா 110 NXT ரூ.74,214 விலையில் கிடைக்கிறது.
- விலை உயர்வு இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விலை உயர்வானது, ரூ.90,000 முதல் ரூ.12.2 லட்சம் வரை இருக்கும்.
மெர்சிடிஸ் பென்ஸ் கார் அனைவரையும் ஈர்க்கும் டிசைன் கொண்டது. இந்த நிறுவனத்தின் மாடலை பயன்படுத்த பெரும்பாலானோர் ஆர்வம் கொள்வர்.
இந்த நிலையில், மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் சில மாடல்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்தள்ளது. இந்த விலை உயர்வு இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 1-ந்தேதி முதல் கட்டமாகவும், செப்டம்பர் 1-ந்தேதி இரண்டாவது கட்டமாகவும் விலை உயர்வானது அமல்படுத்தப்பட உள்ளது.
ஜூன் 1-ந்தேதி முதல் சி-கிளாஸ், இ-கிளாஸ், ஜிஎல்சி, ஜிஎல்இ, ஜிஎல்எஸ், ஈக்யூஎஸ் மற்றும் மேபேக் எஸ்-கிளாஸ் போன்ற கார் மாடல்களின் விலை உயர்த்தப்பட்டுகிறது. அதன்படி விலை உயர்வானது, ரூ.90,000 முதல் ரூ.12.2 லட்சம் வரை இருக்கும். இதைத் தொடர்ந்து, செப்டம்பர் 1-ந்தேதி முதல் அமலுக்கு வரும் இரண்டாம் கட்ட விலை உயர்வானது முதல் ஜெர்மன் வாகன உற்பத்தியாளரின் முழு மாடல் வரிசையையும் உள்ளடக்கும். வாகனங்களின் விலையில் 1.5 சதவீதம் வரை மாற்றங்களைக் கொண்டுவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இரண்டு கட்டங்களான விலை உயர்வானது வாடிக்கையாளர்களின் திட்டமிடலுக்கு அதிக நேரத்தை வழங்கும் என்று கூறப்படுகிறது.
விலை உயர்வு குறித்து மெர்சிடிஸ் நிறுவனம் கூறுகையில், சமீபத்திய விலை உயர்வுக்குக் கடந்த நான்கு மாதங்களில் யூரோவிற்கு எதிராக இந்திய ரூபாயின் அந்நியச் செலாவணி மதிப்பு கிட்டத்தட்ட 10 சதவீதம் சரிந்ததே காரணம் என கூறியுள்ளது.
மெர்சிடிஸ் பென்ஸைத் தவிர, ஆடி இந்தியாவும் அதன் வாகனங்களின் விலைகளை 2 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வானது வருகிற 15-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.
- வெறும் 2.7 வினாடிகளில் மணிக்கு 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டும்.
- மொத்த பிரேக் ஹார்ஸ்பவர் 907 bhp ஆகும்.
லம்போர்கினி இந்தியா நிறுவனம், நாட்டில் புதிய உயர் செயல்திறன் கொண்ட பிளக்-இன் ஹைப்ரிட் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காரின் பெயர் லம்போர்கினி டெமராரியோ. இந்த காரின் ஷோரூம் விலை ரூ.6 கோடியில் இருந்து தொடங்குகிறது.
லம்போர்கினி டெமராரியோ மூன்று மின்சார மோட்டார்களுடன் இணைந்து செயல்படும் 4.0 லிட்டர் இரட்டை-டர்போ V8 எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. மொத்த பிரேக் ஹார்ஸ்பவர் 907 bhp ஆகும். இந்த காரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 343 கி.மீ என்று நிறுவனம் கூறுகிறது.
இது மட்டுமல்லாமல், இந்த கார் வெறும் 2.7 வினாடிகளில் மணிக்கு 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டும். இந்த ஹைப்ரிட் சிஸ்டம் 3.8 kWh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது.

இதை 7 kW AC சார்ஜரைப் பயன்படுத்தி 30 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்யலாம். ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங்கைப் பயன்படுத்தி பயணத்தின்போதும் பேட்டரியை ரீசார்ஜ் செய்யலாம்.
இது முன்புறத்தில் 20 அங்குல டயர்களையும் பின்புறத்தில் 21 அங்குல டயர்களையும் பெறுகிறது.
காரில் 12.3 அங்குல டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, 8.4 அங்குல செங்குத்து இன்ஃபோடெயின்மென்ட் திரை மற்றும் 9.1 அங்குல கோ-டிரைவர் டிஸ்ப்ளேவும் உள்ளன. இந்த காரில் சிட்டி, ஸ்ட்ராடா, ஸ்போர்ட் மற்றும் கோர்சா போன்ற 13 டிரைவிங் மோடுகளும் உள்ளன.
- இந்த டாடா காரின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலானது.
- ஆறு ஏர்பேக்குகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது பிரீமியம் ஹேட்ச்பேக் காரான டாடா அல்ட்ரோஸின் ஃபேஸ்லிஃப்ட் பதிப்பை மே 21 ஆம் தேதி அறிமுகப்படுத்த உள்ளது.
டாடா அல்ட்ரோஸ் ஒரு பிரீமியம் ஹேட்ச்பேக் ஆகும். இது ஒரு கிராஸ்ஓவர் ஹேட்ச்பேக் என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட காரின் வடிவமைப்பு, குறிப்பாக பாரம்பரிய அல்ட்ரோஸ் கார்களுடன் ஒப்பிடும்போது வித்தியாசமாக இருக்கும். மேலும், சில சிறப்பு அம்சங்கள் சுவாரஸ்யம் ஏற்படுத்துகிறது. சமீபத்தில், இந்த டாடா காரின் சில புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலானது.
இந்த காரின் முன்பக்க தோற்றம் மிகவும் நேர்த்தியானது. டாடா நெக்ஸான் மற்றும் ஹாரியர் போன்ற தோற்றமுடைய இந்த கார், வெளியிடப்பட்டால் அந்த கார்களுக்கு கடுமையான போட்டியை கொடுக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக இந்த காரின் கிரில் மற்றும் பம்பர் இதற்கு ஒரு ஸ்போர்ட்டி தோற்றத்தை அளிக்கிறது.
மேலும், டாடா அல்ட்ரோஸின் ஃபேஸ்லிஃப்ட் பதிப்பில் பயணிகளின் பாதுகாப்புக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட் விலையில் வரும் டாடாவின் இந்த புதிய அல்ட்ரோஸ் காரில் ஆறு ஏர்பேக்குகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என்ஜின்களைப் பொறுத்தவரை, பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி ஆகியவற்றில் அதிக மாற்றம் இருக்காது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
மேம்பட்ட ADAS அமைப்பு இந்த காரின் சிறப்பு அம்சமாகும். மாருதி சுஸுகி பலேனோ மற்றும் ஸ்விஃப்ட் கார்களுக்கு நேரடி போட்டியாக டாடா அல்ட்ரோஸ் இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.






