என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tata altroz"

    • புதுப்பிப்புகள் அல்ட்ரோஸின் உட்புறத்திலும் நீட்டிக்கப்பட்டுள்ளன.
    • முழு டிஜிட்டல் HD 10.25-இன்ச் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டருடன் கவனத்தைப் பகிர்ந்து கொள்கிறது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட அல்ட்ரோஸ் காரை கடந்த மாதம் (மே 2025) ரூ. 6.89 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தியது. அறிமுகம் செய்வதற்கு சில நாட்களுக்கு முன்பு இந்த நிறுவனம் பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலுக்கான முன்பதிவுகளை எடுக்கத் தொடங்கியிருந்தாலும், இந்த கார் இப்போது நாட்டில் உள்ள டீலர்ஷிப்களுக்கு வரத் தொடங்கியுள்ளது.

    டாடா அல்ட்ரோஸ் குறிப்பிடத்தக்க வடிவமைப்பு புதுப்பிப்புகளைக் கொண்டுள்ளது. இந்த மாற்றங்கள் முன் பகுதியில் முழுமையாக LED ஹெட்லைட்களுடன் LED DRL உடன் தெளிவாகத் தெரியும். டாடா சின்னத்தைக் காண்பிக்கும் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட கிரில் மூலம் இது மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது. பம்பர் வடிவமைப்பும் மாற்றப்பட்டுள்ளது. இதற்கிடையில், வாகனத்தின் நிழல் மாறாமல் உள்ளது.

    இந்த புதுப்பிப்புகள் அல்ட்ரோஸின் உட்புறத்திலும் நீட்டிக்கப்பட்டுள்ளன. இது மென்மையான-தொடு பொருட்களுடன் புதுப்பிக்கப்பட்ட டேஷ்-போர்டு அமைப்பைக் கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்-பிளே இரண்டையும் ஆதரிக்கும் ஹார்மனின் 10.25-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் டச்-ஸ்கிரீன் ஒரு தனித்துவமான அம்சமாகும்.

    இது முழு டிஜிட்டல் HD 10.25-இன்ச் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டருடன் கவனத்தைப் பகிர்ந்து கொள்கிறது. கூடுதல் அம்சங்களில் சுற்றுப்புற விளக்குகள், குரல்-செயல்படுத்தப்பட்ட சன்ரூஃப், வயர்லெஸ் சார்ஜிங், காற்று சுத்திகரிப்பு, பவர் ஃபோல்டிங் ORVMகள் மற்றும் பல உள்ளன.

    பாதுகாப்பிற்காக, 2025 டாடா அல்ட்ரோஸ் காரில் ஆறு ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP), ஹில் ஹோல்ட் அசிஸ்ட், ஃபாக் லேம்ப்கள், 360 டிகிரி கேமரா, SOS அழைப்பு செயல்பாடு மற்றும் கூடுதல் பாதுகாப்பு கூறுகள் போன்ற அம்சங்கள் உள்ளன.

    எஞ்சின் முன்பக்கத்தில், டாடா அல்ட்ரோஸ் ஃபேஸ்லிஃப்ட் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் 1.5 லிட்டர் டீசல் மற்றும் ட்வின்-சிலிண்டர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் 1.2 லிட்டர் CNG பவர்டிரெய்னை வழங்குகிறது. இந்த எஞ்சினுடன் 5-ஸ்பீடு மேனுவல், 6-ஸ்பீடு டூயல்-கிளட்ச் ஆட்டோமேட்டிக் மற்றும் புதிய 5-ஸ்பீடு ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் (AMT) ஆகியவை அடங்கும்.

    • அனைத்து வேரியண்ட்களும் 6 ஏர்பேக் பாதுகாப்பு அம்சத்தை பெறுகின்றன.
    • வேரியண்ட்களை பொறுத்து பல அம்சங்களைக் கொண்டுள்ளது.

    இந்திய கார் நிறுவனமான டாடா, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டாடா அல்ட்ரோஸ் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை வெளியிட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட அல்ட்ரோஸ் மாடல் முழுமையாக மேம்படுத்தப்பட்டிருப்பது இதுவே முதல் முறை ஆகும். முன்னதாக 2021 ஆம் ஆண்டில் இந்த காரின் டார்க் எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டது.

    2025 டாடா அல்ட்ரோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் நேர்த்தியான, மெல்லிய கோடுகள் மற்றும் 3D முன்பக்க கிரில் கொண்டுள்ளது. இத்துடன் புதிய லுமினேட் LED விளக்குகள், இன்ஃபினிட்டி கனெக்டெட் LED டெயில் லைட்கள் மற்றும் ஃபிளஷ் டோர் ஹேண்டில்கள் ஆகியவற்றையும் பெறுகிறது. 2025 டாடா அல்ட்ரோஸில் உள்ள மற்ற குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செங்குத்தாக வைக்கப்பட்டுள்ள ஃபாக்-லேம்ப் ஹவுசிங், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட முன்பக்க பம்பர் மற்றும் புதிய 5-ஸ்போக் 16-இன்ச் அலாய் வீல்கள் அடங்கும்.



    டாடா அல்ட்ரோஸ் ஃபேஸ்லிஃப்ட்டின் உட்புறத்திலும், கேபினிலும் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது 2-ஸ்போக் ஸ்டீரிங் வீல், 10.25-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் பல அம்சங்களை பெறுகிறது. ஒட்டுமொத்தமாக, டேஷ்போர்டின் வடிவமைப்பு புதுப்பிக்கப்பட்டு, முந்தைய மாடலில் இருப்பதை விட புதுமையான தோற்றத்தை அளிக்கிறது.

    2025 டாடா அல்ட்ரோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் ஸ்மார்ட், ப்யூர், கிரியேட்டிவ், அக்கம்ப்ளிஷ்டு எஸ் மற்றும் அக்கம்ப்ளிஷ்டு + எஸ் என ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கிறது. அனைத்து வேரியண்ட்களும் 6 ஏர்பேக் பாதுகாப்பு அம்சத்தை பெறுகின்றன.

    டாடா அல்ரோஸ் ஃபேஸ்லிஃப்ட் 17.78cm தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட், ஆட்டோ ஃபோல்டு ORVM, ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், உயரத்தை சரிசெய்யக்கூடிய ஓட்டுநர் இருக்கை, குரல் உதவியுடன் கூடிய மின்சார சன்ரூஃப் மற்றும் வேரியண்ட்களை பொறுத்து பல அம்சங்களைக் கொண்டுள்ளது.

    அல்ட்ரோஸ் ஃபேஸ்லிஃப்ட் அதன் தற்போதைய மாடலில் இருந்து எஞ்சினைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. இது 2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சினையும் கொண்டுள்ளது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அல்ட்ரோஸ் எக்ஸ்.இ. பிளஸ் வேரியண்ட் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது.


    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அல்ட்ரோஸ் எக்ஸ்.இ. பிளஸ் வேரியண்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டுவந்த எக்ஸ்.எம். வேரியண்ட் நீக்கப்பட்டு அதற்கு மாற்றாக புதிதாக எக்ஸ்.இ. வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை ரூ. 6.34 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 7.54 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    புதிய எக்ஸ்.இ. பிளஸ் வேரியண்ட் டாடா அல்ட்ரோஸ் பேஸ் வேரியண்ட் எக்ஸ்.இ. காரின் மேல் அல்ட்ரோஸ் எக்ஸ்.எம். பிளஸ் வேரியண்டின் கீழ் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. புதிய எக்ஸ்.இ. பிளஸ் மாடல் விலை எக்ஸ்.எம். பிளஸ் வேரியண்டை விட ரூ. 15 ஆயிரம் குறைவு ஆகும். 

     டாடா அல்ட்ரோஸ்

    டாடா அல்ட்ரோஸ் எக்ஸ்.இ. பிளஸ் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் பெட்ரோல் என்ஜின் 85 பி.ஹெச்.பி. திறன், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. டீசல் என்ஜின் 89 பி.ஹெச்.பி. திறன், 200 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டாடா அல்ட்ரோஸ் கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படம் மீண்டும் இணையத்தில் வெளியாகியுள்ளது.
    டாடா அல்ட்ரோஸ் கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படம் மீண்டும் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இம்முறை சோதனையில் சிக்கியது அல்ட்ரோஸ் பேஸ் வேரியண்ட் ஆகும். முன்னதாக அல்ட்ரோஸ் கார் இமய மலைப்பகுதிகளில் சோதனை செய்யப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி இருந்தது.

    இம்முறை சோதனை செய்யப்பட்ட அல்ட்ரோஸ் காரில் மெல்லிய டையர்கள் மற்றும் ஸ்டீல் ரிம்கள் காணப்படுகிறது. இத்துடன் இந்த காரில் எல்.இ.டி. டெயில் லேம்ப்கள் காணப்படவில்லை. இவை அனைத்தும் சோதனை செய்யப்பட்ட கார் பேஸ் வேரியண்ட் என்பதை உணர்த்துகிறது.

    டாடா நிறுவனத்தின் பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலான டாடா அல்ட்ரோஸ் ஆல்ஃபா பிளாட்ஃபார்மில் உருவாகி இருக்கிறது. இத்துடன் இந்த கார் இம்பேக்ட் 2.0 தொழில்நுட்பத்தில் தயாராகி இருக்கும் டாடா நிறுவனத்தின் இரண்டாவது கார் மாடல் ஆகும். டாடா அல்ட்ரோஸ் கார் மூன்று வித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது.


    அந்த வகையில் 1.2 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இரண்டு 1.5 லிட்டர் என்ஜின்களும் நெக்சன் மாடலில் இருந்தும் 1.2 லிட்டர் யூனிட் டியாகோ மாடலில் இருந்தும் பயன்படுத்தப்படுகிறது.

    இந்தியாவில் டாடா அல்ட்ரோஸ் கார் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா அல்ட்ரோஸ் கார் இந்திய சந்தையில் ஹூனடாய் எலைட் ஐ20, மாருதி சுசுகி பலேனோ, ஃபோக்ஸ்வேகன் போலோ மற்றும் ஹோன்டா ஜாஸ் உள்ளிட்ட கார்களுக்கு போட்டியாக இருக்கும் என தெரிகிறது.

    புதிய அல்ட்ரோஸ் காரின் விலை பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. எனினும், அல்ட்ரோஸ் ஹேட்ச்பேக் மாடலின் விலை ரூ.8 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) துவங்கி டாப்-எண்ட் மாடல் ரூ.10 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

    புகைப்படம் நன்றி: carwale
    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது அல்ட்ரோஸ் காரை முதலில் இந்த வேரியண்ட்டில் தான் அறிமுகம் செய்யும் என தகவல் வெளியாகியுள்ளது. #TataMotors



    இந்திய சந்தையில் பெரும்பாலான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களது 4 மீட்டருக்கும் குறைவான கார்களில் டீசல் என்ஜின்களை வழங்க மாட்டோம் என்று அறிவித்திருக்கின்றன. மேலும், ஒருசில நிறுவனங்கள் விரைவில் இது சார்ந்த அறிவிப்பை வெளியிட இருக்கின்றன. 

    இந்நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது அல்ட்ரோஸ் காரை டீசல் என்ஜினுடன் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் டாடா அல்ட்ரோஸ் காரில் தற்சமயம் நெக்சான் காரில் வழங்கப்பட்டு இருக்கும் 1.5 லிட்டர் ரெவோடார்க் டர்போசார்ஜ்டு 4-சிலிண்டர் என்ஜினின் டி-டியூன் செய்யப்பட்ட வெர்ஷன் வழங்கப்படும் என கூறப்படுகிறது. 

    இதன் காரணமாக அல்ட்ரோஸ் காரின் செயல்திறன் குறையும். டி-டியூன் செய்யப்பட்ட என்ஜின் 91 பி.ஹெச்.பி. பவர், 210 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும் என்றும் இந்த என்ஜின் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடன் கிடைக்கும் என தெரிகிறது. நெக்சான் காரில் இருக்கும் என்ஜின் 108 பி.ஹெச்.பி. பவர், 260 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடன் வழங்கப்படுகிறது.



    முன்னதாக வெளியான தகவல்களில் டாடா அல்ட்ரோஸ் காரில் புத்தம் புதிய 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டத்துடன் வழங்கப்படும் என கூறப்பட்டது. இத்துடன் இந்த காரில் டூயல்-கிளட்ச் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படலாம் என்றும் தகவல் வெளியானது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய ஹேட்ச்பேக் காரில் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், 16-இன்ச் அலாய் வீல்கள், செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே வசதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தியாவில் அறிமுகமானதும் புதிய டாடா அல்ட்ரோஸ் கார் மாருதி சுசுகி பலேனோ, ஹூன்டாய் ஐ20 மற்றும் ஹோன்டா ஜாஸ் போன்ற கார்களுக்கு போட்டியாக இருக்கும் என கூறப்படுகிறது.
    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டாடா அல்ட்ரோஸ் கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புதிய புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. #TataMotors



    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் புதிய பிரீமியம் ஹேட்ச்பேக் கார் மாடலான அல்ட்ரோஸ்-ஐ அறிமுகம் செய்ய இருக்கிறது. வெளியீட்டு முன் இந்த கார் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. இவை மனாலியில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    டாடா அல்ட்ரோஸ் ஹேட்ச்பேக் கார் முதன்முதலில் 2019 ஜெனிவா மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. டாடா அல்ட்ரோஸ் கார் அந்நிறுவனத்தின் ஆல்ஃபா தளத்தில் உருவான முதல் கார் ஆகும். இதுதவிர டாடாவின் எதிர்கால கார் மாடல்களும் ஆல்ஃபா தளத்திலேயே உருவாக இருக்கிறது.

    டாடாவின் பெரிய கார்கள் ஒமேகா தளத்தில் உருவாக்கப்படுகின்றன. இது முதன்முதலில் ஹேரியர் எஸ்.யு.வி. மாடலில் அறிமுகம் செய்யப்பட்டது. டாடா அல்ட்ரோஸ் கார் இமேபேக்ட் 2.0 வடிவமைப்பில் அறிமுகமாகும் டாடாவின் இரண்டாவது கார் ஆகும். முன்னதாக இதேபோன்ற வடிவமைப்பு ஹேரியர் எஸ்.யு.வி. மாடலில் பயன்படுத்தப்பட்டிருந்தது.



    புதிய காரில் ஏ.பி.எஸ்., இ.பி.டி., ஏர்பேக், சீட்-பெல்ட் ரிமைண்டர், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் வழங்கப்படுகின்றன. புதிய ஹேட்ச்பேக் கார் 2019 அக்டோபரில் அமலாக இருக்கும் புதிய பாதுகாப்பு விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்படுகிறது. 

    டாடா அல்ட்ரோஸ் கார் இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் என்ஜின் என மூன்றுவித ஆப்ஷன்களில் அறிமுகமாகும் என தெரிகிறது. இதில் 1.2 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் கொண்டிருக்கிறது. இரண்டு 1.5 லிட்டர் என்ஜின்களும் நெக்சன் மாடலில் இருந்தும் 1.2 லிட்டர் யூனிட் டியாகோ மாடலில் இருந்து பயன்படுத்தப்படுகிறது.

    புகைப்படம் நன்றி: Rushlane
    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் கார் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #TataAltroz



    டாடா அல்ட்ராஸ் ப்ரோடோடைப் வாகனம் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 2019 ஜெனீவா மோட்டார் விழாவில் அறிமுகமான அல்ட்ராஸ் கார் ஏற்கனவே 2018 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் டாடா 45X என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது.

    இதில் புதிய அல்ட்ராஸ் கார் இந்த பிரிவில் கிடைக்கும் கார்களில் அதிக ஸ்டைலானதாக இருக்கும் என தெரிகிறது. காரின் முன்புற கிரில் சற்று உள்புறம் அகலமாக உருவாக்கப்பட்டு, ஸ்வெப்ட் பேக் லேம்ப்களை கொண்டிருக்கிறது. இத்துடன் இன்டென்டட் டெயில்கேட், எல்.இ.டி. டெயில் லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன.

    டாடா அல்ட்ராஸ் கார் அட்வான்ஸ்டு மாட்யூலர் பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டுள்ளது. தற்சமயம் ஆல்ஃபா என அழைக்கப்படும் இந்த கார் டாடாவின் இம்பேக்ட் 2.0 வடிவமைப்பில் உருவாகியிருக்கிறது. 45X சாந்து உருவாகியிருக்கும் பிரீமியம் ஹேட்ச்பேக் மாருதி சுசுகி பலேனோ, ஹோன்டா ஜாஸ் மற்றும் ஹூன்டாய் ஐ20 உள்ளிட்ட கார்களுக்கு போட்டியாக அமையும்.



    புதிய அல்ட்ரோஸ் கார் நெக்சான் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலில் வழங்கப்பட்டிருக்கும் என்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இந்த காரில் 1.2 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட 110 பி.எஸ். பவர், 170 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 1.5 லிட்டர் மோட்டார் 110 பி.எஸ். பவர், 260 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.

    பக்கவாட்டில் இருந்து பார்க்கும் போது அல்ட்ரோஸ் வடிவமைப்பு முற்றிலும் புதிதாக காட்சியளிக்கிறது. ஜெனீவா மோட்டார் விழாவில் அறிமுகமான அல்ட்ரோஸ் காரில் 5-ஸ்போக் அலாய் வீல்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இத்துடன் பிளாக்டு அவுட் ரூஃப் வழங்கப்பட்டுள்ளது.

    புகைப்படம் நன்றி: Cartoq
    ×