என் மலர்
விழுப்புரம்
- திமுக முகவர்கள் மாநாடு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- பிப்ரவரி முழுவதும் அடுத்தடுத்த மாநாடுகளை திமுக நடத்துகிறது.
விழுப்புரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிப்ரவரி 8ம் தேதி திமுக முகவர்கள் மாநாடு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இளைஞரணி மாநாடு, மகளிரணி மாநாடு, வாக்குச்சாவடி மாநாடு என பிப்ரவரி முழுவதும் அடுத்தடுத்த மாநாடுகளை திமுக நடத்துகிறது.
- கூட்டணி பற்றி பேச கட்சி நிறுவனரிடம் அனுமதி பெற வேண்டும் என கட்சி விதி உள்ளது.
- நல்ல கட்சியெல்லாம் சேர்ந்து கூட்டணி அமைப்போம்.
திண்டிவனம்:
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கூட்டணி பற்றி பேச கட்சி நிறுவனரிடம் அனுமதி பெற வேண்டும் என கட்சி விதி உள்ளது. எடப்பாடி பழனிசாமி-அன்புமணி சந்திப்பு தெருக்கூத்து. அன்புமணி ஒரு மோசடி பேர்வழி. அன்புமணி யாருடன் கூட்டணி பேசினாலும் செல்லத்தக்கது அல்ல. கூட்டணிக்கு தலைமை தாங்கும் வலிமை தற்போது எங்களுக்கு இல்லை. தலைவர்களை அழைத்து பேசி அவர்களிடம் கருத்து கேட்டு முடிவு எடுப்போம். இதனால் 2 நாள் வரை நீங்கள் பொறுத்திருங்கள். போக.. போக.. தெரியும்.. என நான் கூறியது போல் இன்னும் 2 நாட்களில் தெரியும்.
அன்புமணி கூட்டணி குறித்து பேச போயிருப்பார். அங்கு அவர் பொய்யை சொல்லி புழுகு மூட்டையை அவிழ்த்துவிட்டுருப்பார். அ.தி.மு.க.வினர் இக்கூட்டணியை அங்கீகாரம் செய்ததாக எனக்கு தெரியவில்லை. எடப்பாடி பழனிசாமி என்னிடம் எந்த வகையிலும் தொடர்பு கொள்ளவில்லை.
நல்ல கட்சியெல்லாம் சேர்ந்து கூட்டணி அமைப்போம். நான் தான் கூட்டணி குறித்து பேச முடியும். நான் இருக்கும் அணிதான் வெற்றி பெறும். பா.ம.க. கூட்டணி குறித்து அன்புமணி பேச்சு வார்த்தை நடத்துவது நீதிமன்ற அவமதிப்பாகும். கூட்டணி குறித்து அன்புமணி பேசுவது சட்ட விரோதம். பா.ம.க. என்னுடையது. நான் தான் முடிவு எடுக்க முடியும். தந்தைக்கு துரோகம் செய்த அன்புமணிக்கா வாக்களிக்க வேண்டும் என மக்கள் புறக்கணிப்பார்கள். அன்புமணி செய்த துரோகங்களை கணித்த பிறகு தான் அவரை கட்சியில் இருந்து நீக்கினேன். கட்சியில் இல்லாத அன்புமணி கூட்டணி என்ற நாடகத்தை அரங்கேற்றி உள்ளார்.
அன்புமணி வேண்டுமென்றால் சிவில் நீதிமன்றத்திற்கு செல்லலாம். மீண்டும் மீண்டும் சொல்கிறேன். நாம் யாரோடு செல்கிறோமோ அக்கட்சிதான் ஆட்சி அமைக்கும். என் தலைமையில் கூட்டணி அமையும் என்று சொல்லமுடியாது.
அ.தி.மு.க.-பா.ம.க. கூட்டணி நியாயமற்றது. பா.ம.க. வில் கூட்டணி குறித்து பேச அன்புமணிக்கு அருகதை இல்லை. மாம்பழம் சின்னம் என் கையில் தான் உள்ளது. அன்புமணி செய்தது அடாவடித்தனம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அவரிடம் எந்த கூட்டணியில் இணைவீர்கள் என நிருபர்கள் கேட்டபோது, தேசிய, திராவிட, தமிழக கட்சியுடன் கூட்டணி இருக்கும் என்றார்.
- அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கும், என்ன மாற்றங்கள் வேண்டுமானாலும் நடக்கும்.
- அன்புமணி அறிவித்த கூட்டணி செல்லாது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* 2 நாட்களில் மூத்த தலைவர்களுடன் கலந்தாலோசித்து யாருடன் கூட்டணி என்பது குறித்து அறிவிக்கப்படும்.
* அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கும், என்ன மாற்றங்கள் வேண்டுமானாலும் நடக்கும்.
* அ.தி.மு.க. தரப்பில் இருந்து இதுவரை கூட்டணி குறித்து யாரும் பேசவில்லை என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து பா.ம.க. செயல் தலைவர் ஸ்ரீ காந்தி கூறியதாவது:
* அன்புமணி அறிவித்த கூட்டணி செல்லாது.
* ராமதாஸ் அறிவிக்கும் கூட்டணிதான் வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அன்புமணி செய்த தில்லுமுல்லு காரணமாகவே பா.ம.க.வை விட்டு நீக்கினேன்.
- அன்புமணி நிறுத்தும் வேட்பாளருக்கு மக்கள் யாரும் வாக்களிக்க மாட்டார்கள்.
அ.தி.மு.க.வுடன் அன்புமணி கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நிலையில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* பா.ம.க.வை பொறுத்தவரை தனிமனிதன் ஆரம்பித்த கட்சி, இதற்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது.
* அன்புமணி செய்த தில்லுமுல்லு காரணமாகவே பா.ம.க.வை விட்டு நீக்கினேன்.
* கட்சியில் இருந்து நீக்கிய பின்னர் ஒரு கோஷ்டியை வைத்துக்கொண்டு இருக்கிறான். தமிழக அரசியலில் இதுபோன்று நடந்ததில்லை.
* கொஞ்சம்கூட தலைமைப்பண்பு இல்லாதவர் அன்புமணி, பா.ம.க. தொண்டர்கள் என்னுடன் தான் இருக்கிறார்கள்.
* அன்புமணி நிறுத்தும் வேட்பாளருக்கு மக்கள் யாரும் வாக்களிக்க மாட்டார்கள்.
* அன்புமணி செய்த துரோகத்தை கட்சிக்கு அப்பாற்பட்டவர்களும் பொதுமக்களும் புரிந்து கொண்டுள்ளனர்.
* அன்புமணி எனக்கு வேட்டு வைப்பார் என்று எனக்கு முன்னதாகவே தெரியாமல் போய்விட்டது.
* தந்தைக்கு துரோகம் செய்த கும்பலுக்காக வாக்களிக்க வேண்டும் என நினைத்து அன்புமணி தரப்புக்கு வாக்களிக்க மாட்டார்கள்.
* நான் அமைப்பதே பா.ம.க. கூட்டணி, அந்த கூட்டணியே சட்டசபை தேர்தலில் வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- டாக்டர் ராமதாஸ் பொதுக்குழு மற்றும் செயற்குழுவை நடத்த அதிகாரமில்லை என்பது எவ்வளவு அநாகரீகமானது.
- செயற்குழு, பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி சரியாக நடக்கும்.
பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் வரும் 29-ந்தேதி சேலத்தில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்திற்கு பா.ம.க. பெயரில் அனுமதி வழங்கக் கூடாது என அன்புமணி தரப்பினர் சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இந்த நிலையில் பாமக கௌரவ தலைவர் ஜி.கே. மணி இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* வருகிற 29-ந்தேதி சேலத்தில் பாமக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது.
* தமிழ்நாடு, புதுச்சேரி மாநில கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
* செயற்குழு, பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி சரியாக நடக்கும்.
* 2026 சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி குறித்து டாக்டர் ராமதாஸ் அறிவிப்பார் என்று மாநில அளவிலும், தேசிய அளவிலும் பார்க்கப்படுகிற முக்கியமான கூட்டமாக கருதப்படுகிறது.
* கூட்டணி குறித்து அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கிறோம்.
* டாக்டர் ராமதாஸை கொச்சைப்படுத்தாதீர்கள். அவமானப்படுத்தாதீர்கள். அவர்கள் வேதனைப்படுகிறார். கண் கலங்குகிறார். அதோடு வேகமாகிறார். நீங்கள் பேச பேச மக்கள் மத்தியில் டாக்டர் ராமதாஸ் வலிமை அதிகரித்து வருகிறது.
* டாக்டர் ராமதாஸ் பொதுக்குழு மற்றும் செயற்குழுவை நடத்த அதிகாரமில்லை என்பது எவ்வளவு அநாகரீகமானது. வெட்கக்கேடானது. வன்மையாக கண்டிக்கிறேன்.
இவ்வாறு ஜி.கே. மணி தெரிவித்தார்.
- அன்புமணி பா.ம.க.வில் இல்லை. அவரை ஏற்கனவே பா.ம.க.வில் இருந்து நீக்கிவிட்டேன்.
- 29-ந் தேதி நடைபெறும் பொதுக்குழு செல்லாது என அறிவிக்க அன்புமணிக்கு உரிமை இல்லை.
திண்டிவனம்:
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பெரியாரின் 52-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது உருவச்சிலைக்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எனது தரப்பு நடத்தும் பொதுக்குழு செல்லாது என அன்புமணி தரப்பினர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளனர். அவர்கள் பொய்யர்கள், புரட்டர்கள். எது வேணாலும் சொல்வார்கள். அதை பற்றி எல்லாம் கவலைப்படுவதில்லை. 99 சதவீதம் மக்கள் என் பக்கம் தான் உள்ளார்கள். அன்புமணி பா.ம.க.வில் இல்லை. அவரை ஏற்கனவே பா.ம.க.வில் இருந்து நீக்கிவிட்டேன். அவர் எது வேணாலும் பொய்களை சொல்லுவார். 29-ந் தேதி நடைபெறும் பொதுக்குழு செல்லாது என அறிவிக்க அன்புமணிக்கு உரிமை இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- பா.ம.க. என்ற 46 ஆண்டு கால வரலாற்றுக்கு சொந்தமானவர் டாக்டர் ராமதாஸ்.
- வன்னியர் சங்கமும், பா.ம.க.வும் பல்வேறு சாதனைகளை செய்துள்ளது.
திண்டிவனம்:
திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாஸ் தலைமையில் தேர்தல் கூட்டணி தொடர்பாக கடலூர், சேலம் உள்ளிட்ட 20 தொகுதி நிர்வாகிகள் கருத்து கேட்பு கூட்டம் இன்று காலை நடந்தது. இதில் கவுரவ தலைவர் ஜி.கே. மணி, செயல் தலைவர் ஸ்ரீகாந்தி, பா.ம.க.இணைப் பொதுச் செயலாளரும், சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான அருள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் அருள் நிருபர்களிடம் கூறியதாவது:-
டாக்டர் ராமதாஸ் ஜனநாயக பூர்வமான தலைவர். தேர்தல் வருகிறது. அதனால் மாவட்ட தலைவர், செயலாளர் உள்ளிட்ட முக்கிய பொறுப்பாளர்களை அழைத்து கருத்துக்களை கேட்டு வருகிறார்.
பா.ம.க. என்ற 46 ஆண்டு கால வரலாற்றுக்கு சொந்தமானவர் டாக்டர் ராமதாஸ். வன்னியர் சங்கமும், பா.ம.க.வும் பல்வேறு சாதனைகளை செய்துள்ளது. நேற்று பெய்த மழையில் இன்றைக்கு முளைத்த காளான் அல்ல நாங்கள். பா.ம.க.வை பொறுத்தவரையில் பல்வேறு சாதனைகளை செய்துள்ளது. 6 இட ஒதுக்கீட்டை பெற்று தந்தவர் ராமதாஸ். மக்கள் பிரச்சனைகளுக்கு போராடி பெற்று தந்தவர். நூற்றாண்டு கால சாதனைக்கு சொந்தக்காரர் அவர்.
பா.மக. தலைவர் பதவி முடிவுற்றது. புதிய தலைவராக ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டார். அன்புமணி செயல் தலைவராக நியமிக்கப்பட்டார். அதிலும் சரியாக செயல்படவில்லை என ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கவுரவ தலைவருக்கு கடிதம் அனுப்புவதற்கு அன்புமணிக்கு எந்தவிதமான தகுதியும், உரிமையும் இல்லை என்றார்.
- என் பெயரை அன்புமணி பயன்படுத்த கூடாது.
- எங்கள் கட்சி பெயரை பயன்படுத்தி தவறு செய்கிறார்கள்.
திண்டிவனம்:
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தனது மகன் அன்புமணி தனி கட்சி ஆரம்பித்து கொள்ளட்டும். பா.ம.க. கட்சி பெயரையோ அல்லது எனது பெயரையோ பயன்படுத்தக்கூடாது. எனது இன்ஷியலை வேண்டுமானால் பயன்படுத்திக் கொள்ளலாம் என தொடர்ந்து பேசி வருகிறார்.
இந்த நிலையில் இந்த மாதம் இறுதியில் சேலம் தலைவாசலில் பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் ராமதாஸ் தலைமையில் நடைபெறுகிறது. இதற்கு முன்னோட்டமாக விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தலைமையில் ராமதாஸ் உட்பட 22 பேர் கொண்ட நிர்வாக குழு கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பா.ம.க.கவுரவ தலைவர் ஜி.கே. மணி, பா.ம.க.செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ராமதாசின் மூத்த மகள் ஸ்ரீ காந்தி, அருள் எம்.எல்.ஏ., பொதுச் செயலாளர் முரளி சங்கர்,பொருளாளர் சையத் மன்சூர் அலி, முன்னாள் எம்.பி. துரை, தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், மாநில நிர்வாகி பரந்தாமன் உள்ளிட்ட 22 நிர்வாகிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
முன்னதாக ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
என் பெயரை அன்புமணி பயன்படுத்த கூடாது. அவர் அன்புமணி ராமதாஸ் அல்ல. அன்புமணி மட்டுமே. எங்கள் கட்சி பெயரை பயன்படுத்தி தவறு செய்கிறார்கள். அன்புமணிக்கு கட்சியே இல்லை. அவர் உறுப்பினரும் இல்லை. பா.ம.க.வை கைப்பற்ற அவர் பம்மாத்து வேலை செய்து கொண்டிருக்கிறார். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
அன்புமணி பா.ம.க. தலைவர் இல்லை என்பது வழக்கில் தெளிவுபடுத்தபட்டுள்ளது. பா.ம.க.வை நான் கஷ்டப்பட்டு வியர்வை சிந்தி ஆரம்பித்தேன். 46 ஆண்டுகள் கட்சிக்காக உழைத்தேன். அன்புமணிக்கு பல்வேறு பதவிகள் கொடுத்து அழகு பார்த்தேன். 96 ஆயிரம் கிராமங்களுக்கு சென்று ஆலமரம் போல் பா.ம.க.வை வளர்த்தேன். ஆலமரம் கிளையின் நுனியை வெட்ட நினைப்பவர்கள் கீழே விழுவார்கள். ஆயிரம் பொய் மூட்டைகளை அன்புமணி ஊடகங்களுக்கு தெரிவித்து வருகிறார். நான் வளர்த்த பூந்தோட்டத்தில் உள்ள செடிகளை பல குரங்குகள் நாசம் செய்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனை தொடர்ந்து நடைபெற்ற பா.ம.க. நிர்வாக குழு கூட்டத்தில் நிறைவேற்றபட்ட தீர்மானங்கள் வருமாறு:-
ஒட்டு கேட்பு கருவியை வைத்து சொந்த தந்தைக்கு ஆப்பு வைக்க துணிந்தவர்கள் மீது புகார் கொடுத்தும் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்காத காவல்துறையை கண்டிப்பது.
அன்புமணியின் ஆட்டம் பாட்டம், ஆதாயம் ஆகியவைகளுக்காக அசைந்து, வளைந்து நெளிந்து தேர்தல் ஆணையத்தில் பொய்யான ஆவணங்களை கொடுத்து ஆணைத்தையே ஏமாற்றியது குறித்து ஆய்வு செய்து அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நிலுவையில் உள்ள அன்புமணி மீதான ஊழல் வழக்கோடு, கட்சியின் சின்னம், தலைவர் சம்மந்தமான விஷயத்தில் அன்புமணி மற்றும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளையும் மோசடி வேலைகளையும் சேர்த்து சி.பி.ஐ. விரைந்து விசாரித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வருகிற சட்டமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கவும், பேச்சுவார்த்தை நடத்தவும், வியூகம் அமைக்கவும் ராமதாசுக்கு முழுஅதிகாரம் வழங்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- இந்த மாதம் இறுதியில் சேலம் தலைவாசலில் பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெறுகிறது.
- 22 நிர்வாகிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
திண்டிவனம்:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது மகன் அன்புமணி தனி கட்சி ஆரம்பித்து கொள்ளட்டும். பா.ம.க. கட்சி பெயரையோ அல்லது எனது பெயரையோ பயன்படுத்தக் கூடாது. எனது இன்ஷியலை வேண்டுமானால் பயன்படுத்திக் கொள்ளலாம் என தொடர்ந்து பேசி வருகிறார்.
இந்த நிலையில் இந்த மாதம் இறுதியில் சேலம் தலைவாசலில் பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெறுகிறது. இதற்கு முன்னோட்டமாக விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் இன்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் ராமதாஸ் உட்பட 22 பேர் கலந்து கொண்ட நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பா.ம.க.கவுரவ தலைவர் ஜி.கே. மணி, பா.ம.க.செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் ராமதாசின் மூத்த மகள் ஸ்ரீ காந்தி,அருள் எம்.எல்.ஏ.,பொதுச் செயலாளர் முரளி சங்கர்,பொருளாளர் சையத் மன்சூர் அலி, முன்னாள் எம்.பி. துரை, தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், மாநில நிர்வாகி பரந்தாமன் உள்ளிட்ட 22 நிர்வாகிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அன்புமணி தொடர்ந்து பா.ம.க.பெயரையும், டாக்டர் ராமதாஸ் பெயரை பயன்படுத்தி வருவதற்கு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கவும், கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்தும், வருகிற தேர்தலில் தேசிய கட்சியுடன் கூட்டணி அமைக்கலாமா? அல்லது மாநில கட்சியுடன் கூட்டணி அமைக்கலாமா? அல்லது வேறு ஏதேனும் புதிய கட்சியுடன் கூட்டணி அமைக்கலாமா? என டாக்டர் ராமதாஸ் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
- விஜய் இப்போது தான் வந்து இருக்கிறார்.
- ஒரு மீட்டிங் போட்டவுடன் எது வேண்டுமானாலும் பேசலாம் என்று பேசிக்கொண்டு இருக்கிறார்.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எடப்பாளையம் கிராமத்தில் சுமார் 60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பல்வேறு திட்ட பணிகளை கட்டி முடிக்கப்பட்ட பணிகளின் தரம் குறித்தும் திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான பொன்முடி ஆய்வு செய்தார்.
ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் புதுச்சேரியில் த.வெ.க. கூட்டத்தின்போது விஜய், புதுச்சேரி முதலமைச்சரிடம் தமிழ்நாடு முதலமைச்சர் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது:
த.வெ.க. தலைவர் விஜய் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. இப்போது தான் அவர் வந்து இருக்கிறார். ஒரு மீட்டிங் போட்டவுடன் எது வேண்டுமானாலும் பேசலாம் என்று பேசிக்கொண்டு இருக்கிறார். அவர் கற்றுக்கொள்ள வேண்டியதே நிறைய இருக்கிறது.
கரூர் மக்கள் அளித்த பாடத்தில் கற்றுக்கொண்டு, இப்போது அவர் டயத்துக்கு வந்து டயத்துக்கு சரியாக போகிறார் என்றால் இப்போது தான் கொஞ்சம் பாடம் கற்றுக்கொண்டு உள்ளார். விஜய் எல்.கே.ஜி. படிச்சிட்டு இருக்காரு. வரட்டும் அவர் வரும்போது பார்க்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கட்சிக்காக நான் உழைத்ததை எத்தனை முறை சொல்லி காட்ட வேண்டியுள்ளது.
- தேர்தல் ஆணையத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்து உள்ளோம்.
திண்டிவனம்:
பா.ம.க.வில் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் கருத்து மோதல் நீடித்து வருகிறது. கட்சிக்கு சொந்தம் கொண்டாடி இருவரும் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டனர். ஆனால் தேர்தல் ஆணையம் 2026 ஆகஸ்டு மாதம் வரை அன்புமணி தான் பா.ம.க. தலைவர் என கூறியது. தேர்தல் ஆணையத்தை கண்டித்து ராமதாஸ் தரப்பிரனர் டெல்லி தேர்தல் ஆணையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மேலும் கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த நிலையில் திண்டிவனம், தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவன தலைவர் ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கட்சிக்காக நான் உழைத்ததை எத்தனை முறை சொல்லி காட்ட வேண்டியுள்ளது. தேர்தல் ஆணையத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்து உள்ளோம். இதில் சம்பந்தமே இல்லாமல் பொய்மூட்டைகளுடன் அன்புமணி தரப்பு நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளது.
கட்சி எங்களுக்கே என்று சொல்ல எனக்கு வெட்கமாக உள்ளது. கட்சி எங்களுக்கு இல்லை சொல்ல எனக்கு ஒரு பிள்ளை. தேவையென்றால் அன்புமணி தனிக்கட்சி தொடங்கி கொள்ளட்டும். இனி என் பெயரையோ, படத்தையோ அன்புமணி பயன்படுத்த கூடாது. அதற்கு அவருக்கு உரிமை இல்லை. என் வீட்டில் ஒட்டு கேட்பு கருவி வைத்தது தொடர்பாக புகார் அளித்து எந்த வித நடவடிக்கையும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.
- சாதிவாரி கணக்கெடுப்பை முன்னெடுக்காத தமிழக அரசை கண்டித்து டிச.12-ந்தேதி மாநில முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு நிறுவனர் ராமதாஸ் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் தலைவர் தீரன், பா.ம.க. பொதுச்செயலாளர் முரளி சங்கர், அருள் எம்.எல்.ஏ., தலைமை நிலைய செயலாளர், அன்பழகன், மாநில நிர்வாகிகள், கட்சி அமைப்பு ரீதியாக உள்ள 108 மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் யாருடன் கூட்டணி அமைப்பது, எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து ராமதாஸ் கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.
இந்நிலையில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் கூட்டணி தொடர்பாக அடுத்த மாதம் அறிவிக்கப்படும்.
* அடுத்த மாதம் சேலம் ஆத்தூரில் உள்ள தலைவாசலில் நடைபெற உள்ள கூட்டத்தில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்.
* சாதிவாரி கணக்கெடுப்பை முன்னெடுக்காத தமிழக அரசை கண்டித்து டிச.12-ந்தேதி மாநில முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.






