என் மலர்
விளையாட்டு
- நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 575 ரன் குவித்து டிக்ளேர் செய்தது.
- தொடக்க வீரர்களான கான்வே இரட்டை சதமும் (227 ரன்), கேப்டன் டாம் லாதம் சதமும் (137) அடித்தனர்.
நியூசிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மவுண்ட் மாங்கானுவில் நடைபெற்று வருகிறது.
நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 575 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. தொடக்க வீரர்களான கான்வே இரட்டை சதமும் (227 ரன்), கேப்டன் டாம் லாதம் சதமும் (137) அடித்தனர். ரச்சின் ரவீந்திரா 72 ரன் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜெய்டன் ஷீல்ஸ் , ஆண்டர்சன் பிலிப், ஜஸ்டின் கிரீவ்ஸ் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.
பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 420 ரன்கள் அடித்து ஆல் அவுட்டானது. இதையடுத்து 2 ஆவது இன்னிங்சில் விளையாடிய நியூசிலாந்து 2 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது. தொடக்க வீரர்களான கான்வே, டாம் லாதம் ஆகிய இருவரும் சதமடித்து அசத்தினர்.
இதனையடுத்து 462 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்தி களமிறங்கியுள்ள வெஸ்ட் இண்டீஸ் 4 ஆம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் அடித்துள்ளது.
கடைசி நாளில் 88 ஓவர்களில் 419 ரன்கள் அடித்தால் வெஸ்ட் இண்டீஸ் இந்த போட்டியில் வெற்றி பெறுமா? என்பதை நாளை பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.
இந்நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக இரு இன்னிங்ஸிலும் சதம் விளாசிய முதல் தொடக்க வீரர்கள் என்ற புதிய சாதனையை டாம் லேதம், கான்வே ஜோடி படைத்தது.
இந்த டெஸ்டில் கான்வே (227, 100), லேதம் (137,101) ஆகியோர் சதம் விளாசி இருந்தனர்.
- ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணியில் 2009 முதல் 2018 வரை விளையாடினார்.
- ரியல் மாட்ரிட் அணியில் ரொனால்டோ மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) ரியல் மாட்ரிட் அணியில் விளையாடிய காலத்தில் உலகின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். அவர் ரியல் மாட்ரிட் அணியில் 2009 முதல் 2018 வரை விளையாடினார்.
2009-ம் ஆண்டு மான்செஸ்டர் யுனைடெட் அணியிலிருந்து ரூ.94 மில்லியன் கொடுத்து வாங்கப்பட்டார். அப்போது இது உலக சாதனை தொகையாக இருந்தது.
2018-ம் ஆண்டு ரியல் மாட்ரிட் அணியில் இருந்து ஜுவென்டஸ் அணிக்கு சென்றார். அவரை அந்த அணி ரூ.100 மில்லியன் கொடுத்து வாங்கப்பட்டார்.
ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணியில் மொத்தம் 438 போட்டிகளில் விளையாடி 450 கோல்கள் அடித்தார். இது அந்த அணியின் வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையாக இருந்து வருகிறது.
இந்நிலையில், ரியல் மேட்ரிட் அணிக்காக ஓராண்டில் அதிக கோல்கள் (59) அடித்தவர் என்ற ரோனால்டோவின் சாதனையை கில்லியன் எம்பாப்பே சமன் செய்துள்ளார்.
- டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
- அதிகபட்சமாக சமீர் மின்ஹாஸ் 113 பந்துகளில் 172 ரன்கள் அடித்தார்.
19 வயதுக்குட்பட்ட வருக்கான (இளையோர்) 12-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. ஆயுஸ் மாத்ரே தலைமையிலான இந்திய அணி சிறப்பாக விளையாடி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
லீக் போட்டியில் இந்தியாவிடம் மட்டும் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இறுதிப்போட்டி UAE இல் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சமீர் மின்ஹாஸ் 113 பந்துகளில் 172 ரன்கள் அடித்தார்.
இந்திய அணி தரப்பில் தீபேஸ் ரவீந்திரன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனையடுத்து 348 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கவுள்ளது. இந்த இமாலய இலக்கை துரத்தி இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றுமா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
- தற்போது உள்ளூர் போட்டியில் தனது செயல் திறனை வெளிப்படுத்தி உள்ளார்.
- இந்தியாவுக்காக டி.ஆர்.எஸ். முடிவை எடுப்பதில் டோனிக்கு பிறகு ஜிதேஷ்தான் சிறந்த விக்கெட் கீப்பராக இருந்தார்.
10-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை இந்தியா, இலங்கையில் நடைபெறுகிறது.
இதற்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. டெஸ்ட், ஒரு நாள் போட்டியில் கேப்டனாக இருக்கும் சுப்மன்கில் அணியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.
20 ஓவர் அணியில் துணை கேப்டனாக இருக்கும் அவர் தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் தேர்வுக் குழு துணிச்சலான முடிவு எடுத்து அவரை நீக்கி உள்ளது. உள்ளூர் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் இஷான் கிஷன் தேர்வு செய்யப்பட்டார். இதேப் போல ரிங்குசிங்குக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் 20 ஓவர் போட்டிக்கான இந்திய அணியின் தேர்வில் எந்த தவறும் இல்லை என்று முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
இஷான்கிஷன் மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒருவர் சிறப்பாக செயல்படுவதை பார்த்தால் அவரை தேர்ந்து எடுக்க வேண்டும். இஷான் கிஷன் ஏற்கனவே அணியில் தன்னால் சிறப்பாக செயல்பட முடியும் என்பதை நிரூபித்து உள்ளார்.
தற்போது உள்ளூர் போட்டியில் தனது செயல் திறனை வெளிப்படுத்தி உள்ளார். அவருக்காக நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் 2 ஆண்டுகளாக அணிக்கு வெளியே இருந்தார். சையத் முஸ்தாக் அலி கோப்பையை ஜார்க்கண்ட் அணி கைப்பற்ற இஷான் கிஷன் முக்கிய பங்கு வகித்தார்.
ஜிதேஷ்சர்மா அணியில் இருந்து நீக்கப்படுவதற்கு அவர் எந்த தவறும் செய்யவில்லை. இந்தியாவுக்காக டி.ஆர்.எஸ். முடிவை எடுப்பதில் டோனிக்கு பிறகு ஜிதேஷ்தான் சிறந்த விக்கெட் கீப்பராக இருந்தார். அவருக்காக நான் வருத்தப்படுகிறேன். இளம் வீரரான அவர் மீண்டும் உள்ளூர் போட்டியில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட வேண்டும் என்றார்.
- கராத்தே உள்பட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
- ஏராளமான வீரர், வீராங்கனைகள் இப்போட்டியில் பங்கேற்றனர்.
இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு நடத்தும் 69-வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் மத்தியப் பிரதசே மாநிலம் இந்தோர் நகரில் கடந்த 15ம் தேதி முதல் 18ம் தேதி வரை நடைபெற்றது.
இந்த போட்டியில் கராத்தே உள்பட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. ஏராளமான வீரர், வீராங்கனைகள் இப்போட்டியில் பங்கேற்றனர்.
இந்நிலையில், 69-வது தேசிய விளையாட்டுப் போட்டியில் நடைபெற்ற கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த அக்ஷய் ராம் வெண்கலப் பதக்கம் வென்று தமிழகத்திற்கு பெருமையை சேர்த்துள்ளார்.
சாதனைப் படைடத்த கராத்தே வீரர் அக்ஷய் ராமுக்கு தலைமை பயிற்சியாளர் ஷிகான்.டி.நிர்மல்குமா் நேரில் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

- 3வது டெஸ்டின் முதல் இன்னிங்சி் ஆஸ்திரேலியா 371 ரன்கள் குவித்தது.
- 3வது போட்டியில் 82 ரன்கள் வித்தயாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றுள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 3வது போட்டியில் 82 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றுள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 3வது போட்டியில் 82 ரன்கள் வித்தயாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றுள்ளது.
இங்கிலாந்து அணிககு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி கைப்பற்றி அசத்தியது.
3வது டெஸ்டின் முதல் இன்னிங்சி் ஆஸ்திரேலியா 371 ரன்கள் குவித்த நிலையில் இங்கிலாந்து 286 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
2வது இன்னிங்சில் ஆஸ்திரேலயா 349 ரன் எடுத்தது. 435 ரன் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து 352 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
- சமாரி அட்டப்பட்டு தலைமையிலான இலங்கை அணியில் இளம் வீராங்கனைகள் அதிகம் இடம் பிடித்துள்ளனர்.
- வலுவான இந்திய அணியை சமாளிப்பது இலங்கை அணிக்கு கடும் சவாலாக இருக்கும் எனலாம்.
இந்தியா வந்துள்ள இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆடுகிறது. இதில் இந்தியா-இலங்கை பெண்கள் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று நடக்கிறது.
சமீபத்தில் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பையை வென்ற பிறகு இந்திய அணி பங்கேற்கும் முதல் போட்டி இதுவாகும். ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணியில் துணை கேப்டன் மந்தனா, தீப்தி ஷர்மா, சினே ராணா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷபாலி வர்மா உள்ளிட்ட முன்னணி வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.
சமாரி அட்டப்பட்டு தலைமையிலான இலங்கை அணியில் இளம் வீராங்கனைகள் அதிகம் இடம் பிடித்துள்ளனர். அடுத்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெறும் 20 ஓவர் உலகக் கோப்பைக்கு தயாராகுவதற்கு இரு அணிகளும் இந்த தொடரை சரியாக பயன்படுத்தி கொள்ள தீவிரம் காட்டும். வலுவான இந்திய அணியை சமாளிப்பது இலங்கை அணிக்கு கடும் சவாலாக இருக்கும் எனலாம்.
இவ்விரு அணிகளும் இதுவரை 26 இருபது ஓவர் போட்டியில் நேருக்கு நேர் மோதியிருக்கின்றன. இதில் 20-ல் இந்தியாவும், 5-ல் இலங்கையும் வென்று இருக்கின்றன. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது. இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- கிரெய்க் எர்வின் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
- ஆல் பார்மட் துணை கேப்டனாக பிரையன் பென்னட் நியமிக்கப்பட்டார்.
ஹராரே:
ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு கூட்டம் ஹராரேவில் நடைபெற்றது. இதில் ஜிம்பாப்வே கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து பல முடிவுகள் எடுக்கப்பட்டன.
அதன்படி, அந்த அணியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான அணிக்கு புதிய கேப்டன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கிரெய்க் எர்வின் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ஜிம்பாப்பே கிரிக்கெட்டின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான அணியின் புதிய கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் ரிச்சர்ட் நகரவா நியமிக்கப்பட்டார்.
ஜிம்பாப்வே கிரிக்கெட்டின் ஆல் பார்மட் துணை கேப்டனாக பிரையன் பென்னட் நியமிக்கப்பட்டார்.
- ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடந்து வருகிறது.
- இறுதிப்போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது.
துபாய்:
12-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டு மோதின.
லீக் சுற்றுகள் முடிவில் இந்தியா, இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
முதல் அரையிறுதியில் இலங்கையை வீழ்த்தி இந்தியாவும், 2வது அரையிறுதியில் வங்கதேசத்தை வீழ்த்தி பாகிஸ்தானும் இறுதிப் போட்டிக்கு முன்னேறின.
இந்நிலையில், துபாயில் நடைபெறும் இறுதிப் போட்டியில் 8 முறை சாம்பியனான இந்திய அணி, பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது. இந்தப் போட்டி இந்திய நேரப்படி இன்று காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது.
இந்தப் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் இறுதி களத்தில் சந்திப்பது 11 ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும். ஏற்கனவே லீக் சுற்றில் இந்திய அணி 90 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்தது நினைவு கூரத்தக்கது.
- டி20 உலகக் கோப்பை போட்டி பிப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை இந்தியா, இலங்கையில் நடைபெறுகிறது.
- டி20 உலகக் கோப்பை தொடருக்கான 15 பேர் அடங்கிய இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
புதுடெல்லி:
10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது.
இந்நிலையில், டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அந்த அணியில் 15 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். துணை கேப்டன் சுப்மன் கில் அணியில் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக அக்சர் படேல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், சஞ்சு சாம்சன் முதன்மை விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டது குறித்து சஞ்சு சாம்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நிறங்கள் நிச்சயம் மங்காது என பதிவிட்டது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- சீனாவில் பாட்மிண்டன் வேர்ல்டு டூர் பைனல்ஸ் தொடர் நடந்து வருகிறது.
- ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதி சுற்றில் இந்திய ஜோடி தோல்வி அடைந்தது.
பீஜிங்:
சீனாவின் ஹாங்சு நகரில் பாட்மிண்டன் வேர்ல்டு டூர் பைனல்ஸ் தொடர் நடந்து வருகிறது.
ஆண்கள் ஒற்றையர், இரட்டையர், பெண்கள் ஒற்றையர், இரட்டையர், கலப்பு இரட்டையர் தரவரிசையில் உலகின் 'டாப்-8' ஜோடி இதில் பங்கேற்கின்றன. இவை இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, போட்டிகள் லீக் முறையில் நடக்கின்றன.
இந்தியா சார்பில் ஆண்கள் இரட்டையரில் உலகத் தரவரிசையில் நம்பர்-3 ஆக உள்ள சாத்வித் சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி பங்கேற்றது.
இந்நிலையில், இன்று நடந்த அரையிறுதி போட்டியில் இந்தியாவின் சாத்விக் - சிராக் ஜோடி, சீனாவின் வாங் சாங் - லியான் வெய்கெங் ஜோடியை எதிர்கொண்டது.
இந்திய ஜோடி முதல் செட்டை 21-10 என எளிதில் கைப்பற்றியது.
இதில் சுதாரித்துக் கொண்ட சீன ஜோடி அடுத்த இரு செட்களை 21-17, 21-13 என வென்றது. இதன்மூலம் சீன ஜோடி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. இதன்மூலம் இந்திய ஜோடி தொடரில் இருந்து வெளியேறியது.
- 2025 ஆண்டு தமிழக விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பான ஆண்டாக அமைந்தது.
- தமிழக வீரர்கள் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் ஏராளமான பதக்கங்களை வென்றுள்ளனர்.
2025-ம் ஆண்டில் தமிழக வீரர்களின் முக்கிய விளையாட்டு சாதனைகள் 2025 ஆண்டு தமிழக விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பான ஆண்டாக அமைந்தது. தமிழ்நாடு அரசின் விளையாட்டு வளர்ச்சி ஆணையம் மற்றும் தமிழ்நாடு சாம்பியன்ஸ் பவுண்டேஷன் போன்ற அமைப்புகளின் ஆதரவுடன், தமிழக வீரர்கள் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் ஏராளமான பதக்கங்களை வென்றுள்ளனர்.
அதில் தடகளம், பாரா விளையாட்டுகள், சதுரங்கம், ஸ்கேட்டிங், ஸ்குவாஷ், டேக்வாண்டோ போன்ற துறைகளில் சாதனை படைத்துள்ளனர்.
1. பாரா விளையாட்டுகள் (Para Sports)கேலோ இந்தியா பாரா கேம்ஸ் 2025 (Khelo India Para Games):
தமிழக அணி 28 தங்கம், 19 வெள்ளி, 27 வெண்கலம் (மொத்தம் 74 பதக்கங்கள்) வென்று ஒட்டுமொத்த ரன்னர்-அப் இடத்தைப் பிடித்தது. பாரா பேட்மிண்டனில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் சாம்பியன். மனிஷா ராமதாஸ், நித்யா ஸ்ரீ, நவீன் சிவகுமார், ருதிக் ரகுபதி உள்ளிட்டோர் தங்கம் வென்றனர்.
ஆசிய இளம் பாரா கேம்ஸ் 2025 (Asian Youth Para Games): லின்சியா (பாரா டேக்வாண்டோ) வெண்கலம் வென்றார்.
இந்தோனேஷியா பாரா பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் 2025 (Indonesian Para Badminton Championship): தமிழக வீரர்கள் 4 தங்கம், 6 வெள்ளி, 4 வெண்கலம் (மொத்தம் 14 பதக்கங்கள்) வென்றனர்.
ஆசிய பாரா டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் 2025 (Asian Para Taekwondo Championship): 9 பதக்கங்கள் வென்றனர்.
உலக வித்தியாசமான திறனுடையோர் விளையாட்டுகள் 2025 (World Differently-Abled Sports Games): மதுரை பாரா வீரர்கள் பல பதக்கங்கள் வென்று இந்தியாவின் வெற்றிக்கு பங்களித்தனர்.
2. தடகளம் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் 2025 (Asian Athletics Championships, கொரியா):
சுபா வெங்கடேசன், சந்தோஷ், விஷால் ஆகியோர் இந்திய கலப்பு ரிலே அணியில் தங்கம் வென்றனர். .


பிரவீன் சித்ரவேல் டிரிபிள் ஜம்பில் வெள்ளி பதக்கம் வென்றார்.
தேசிய இன்டர்-ஸ்டேட் தடகள சாம்பியன்ஷிப் 2025 (National Inter-State Athletics Championships):
இந்த தொடரில் தமிழ்நாட்டின் விஷால் தென்னரசு (Vishal TK) ஆண்கள் 400மீ ஓட்டத்தில் 45.12 வினாடிகளில் முடித்து தங்கப்பதக்கம் வென்றதுடன், புதிய தேசிய சாதனையைப் படைத்தார் (முந்தைய சாதனை: 45.21 வினாடிகள், முகமது அனாஸ், 2019).
முரளி ஸ்ரீஷங்கர் (Murali Sreeshankar) ஆண்கள் நீளம் பாய்தலில் 8.06 மீட்டர் பாய்ந்து தங்கம் வென்றார்.

ரோஹித் யாதவ் (Rohit Yadav) ஆண்கள் ஈட்டி எறிதலில் 83.65 மீட்டர் எறிந்து தங்கம் வென்றார் (தனிப்பட்ட சிறந்தது).
அங்கிதா (Ankita) பெண்கள் 3000மீ தடை தாண்டும் ஓட்டத்தில் 9:44.83 நிமிடங்களில் வென்றார்.

போட்டியின் இறுதியில், தமிழ்நாடு அணி அதிக தங்கப்பதக்கங்கள் (10) பெற்று ஒட்டுமொத்த சாம்பியனாக திகழ்ந்தது.
தமிழ்நாடு மாநில தடகள சாம்பியன்ஷிப் 2025 (Tamil Nadu State Athletic Championship): வீரர்களின் சிறப்பான செயல்பாடுகள்.
முதல்வர் கோப்பை 2025 (CM Trophy Games): நீல் சம்ராஜ் 100மீ ஓட்டத்தில் தங்கம் வென்று ரூ.1 லட்சம் பரிசு பெற்றார்.
தைவான் தடகள ஓப்பன் 2025 (Taiwan Athletics Open): இந்திய அணியில் தமிழக வீரர்கள் பங்களித்து 12 தங்கம், 3 வெள்ளி, 1 வெண்கலம் (மொத்தம் 16 பதக்கங்கள்) வென்றனர்.
3. கேலோ இந்தியா இளம் வீரர்கள் போட்டிகள் (Khelo India Youth Games 2025)தமிழக அணி 15 தங்கம், 21 வெள்ளி, 29 வெண்கலம் (மொத்தம் 65 பதக்கங்கள்) வென்றது.
4. ஸ்கேட்டிங் (Skating)உலக வேக ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் 2025 (World Speed Skating Championships): ஆனந்த் வேல்குமார் 42 கிமீ மாரத்தான் பிரிவில் தங்கம் வென்று, இந்தியாவின் முதல் உலக சாம்பியனானார். முன்பு 500மீ ஸ்பிரிண்டில் வெண்கலம், 1000மீயில் தங்கம்.
தேசிய ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் 2025 (National Roller Skating Championship): தமிழக வீரர் கௌதம் (ஆல்பைன் இவென்ட்) வெண்கலம் வென்றார்.
5. சதுரங்கம் (Chess)ஆசிய இளம் சதுரங்க சாம்பியன்ஷிப் 2025 (Asian Youth Chess Championship, தாய்லாந்து): ஆரண்யா ஆர் (குழு தங்கம், தனிப்பட்ட தங்கம்), தமிழ் அமுதன் எஸ் (தனிப்பட்ட வெள்ளி, வெண்கலம்), நிவேதிதா வி சி (தனிப்பட்ட தங்கம், வெள்ளி) உள்ளிட்டோர் பல பதக்கங்கள் வென்றனர். பயிற்சியாளர்கள் ஆகாஷ் கணேசன் மற்றும் கவிதா (தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்).
6. ஸ்குவாஷ் (Squash)ஆசிய ஸ்குவாஷ் டபுள்ஸ் சாம்பியன்ஷிப் 2025 (Asian Squash Doubles Championships, மலேசியா): ஜோஷ்னா சின்னப்பா (பெண்கள் டபுள்ஸ்), வேலவன் செந்தில்குமார் மற்றும் அபய் சிங் (ஆண்கள் டபுள்ஸ், கலப்பு டபுள்ஸ்) தங்கம் வென்றனர்.
SDAT ஸ்குவாஷ் உலகக் கோப்பை 2025 (SDAT Squash World Cup, சென்னை):
இந்திய அணி முதல் முறையாக உலக ஸ்குவாஷ் அணி போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றது. அனஹத் சிங் (Anahat Singh), ஜோஷ்னா சின்னப்பா (Joshna Chinappa), அபய் சிங் (Abhay Singh) ஆகியோர் தலைமையில் அணி செயல்பட்டது. ஜோஷ்னா சின்னப்பா தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
7. டேக்வாண்டோ (Taekwondo)தேசிய டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் 2025 (National Taekwondo Championship):
இந்த தொடரில் தமிழ்நாடு அணி சிறப்பாக செயல்பட்டது. இதில் பங்கேற்ற தமிழக வீரர்கள் 5 தங்கப் பதக்கங்கள், 4 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 5 வெண்கலப் பதக்கங்கள் (மொத்தம் 14 பதக்கங்கள்) வென்றனர்.






