என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • ஒடிசா அணியின் ஸ்வஸ்திக் சமல் இரட்டை சதமடித்து 202 ரன்கள் எடுத்தார்.
    • பீகார் அணியின் அதிரடி ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி 190 ரன் எடுத்து இரட்டை சதத்தை தவறவிட்டார்.

    புதுடெல்லி:

    இந்திய உள்ளூர் ஒருநாள் (50 ஓவர்) கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பையின் 33-வது சீசன் நேற்று தொடங்கியது. இந்தத் தொடர் ஜனவரி 18-ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது.

    நேற்று நடந்த பல்வேறு போட்டிகளில் நட்சத்திர வீரர்கள் உள்பட இளம் வீரர்களும் சதமடித்து அசத்தியுள்ளனர்.

    நேற்று ஒரே நாளில் 22 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:

    பீகார் அணியின் சூர்யவன்ஷி 190 ரன்னும், சகிபுல் கனி 128 ரன்னும், ஆயுஷ் லோஹருகா 116 ரன்னும் அடித்தனர்.

    ஒடிசா அணியின் ஸ்வஸ்திக் சமல் 202 ரன்னும், பிப்லாப் சமந்த்ரே 100 ரன்னும் எடுத்தனர்.

    விதர்பா அணியின் துருவ் ஷோரே 136 ரன்னும், அமன் மோகடே 110 ரன்னும் எடுத்தனர்.

    மேகாலயா அணியின் கிஷான் லிங்டோ 106 ரன்னும், அர்பித் படேவரா 104 ரன்னும் அடித்தனர்.

    மும்பை அணியின் ரோகித் சர்மா 155 ரன்னும், கர்நாடகா அணியின் தேவ்தத் படிக்கல் 147 ரன்னும், சவுராஷ்டிரா அணியின் சம்மார் கஜ்ஜார் 132 ரன்னும் எடுத்தனர்.

    டெல்லி அணியின் விராட் கோலி 131 ரன்னும், ஜம்மு காஷ்மீர் அணியின் ஷுபம் கஜுரியா 129 ரன்னும், அரியானா அணியின் ஹிமான்ஷு ரானா 126 ரன்னும் அடித்தனர்.

    ஜார்க்கண்ட் அணியின் இஷான் கிஷன் 125 ரன்னும், ஆந்திரா அணியின் ரிக்கி புய் 122 ரன்னும் எடுத்தனர்.

    ரயில்வேஸ் அணியின் ரவி சிங் 109 ரன்னும், கோவா அணியின் ஸ்நேஹல் கவுதன்கர் 107 ரன்னும், மத்திய பிரதேச அணியின் யாஷ் துபே 103 ரன்னும், கேரளா அணியின் விஷ்ணு வினோத் 102 ரன்னும், மணிப்பூர் அணியின் ஜோடின் பெய்ரோஜியாம் 101 ரன்னும் அடித்தனர்.

    • பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் அபிஷேக் ஷர்மா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.
    • பந்துவீச்சாளர் தரவரிசையில் வருண் சக்கரவர்த்தி முதல் இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார்.

    துபாய்:

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்குப் பிறகு ஐசிசி டி20 தரவரிசையில் இந்திய வீரர்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்பட்டன.

    பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் திலக் வர்மா தென் ஆப்பிரிக்கா தொடரில் 187 ரன்கள் குவித்து ஒரு இடம் முன்னேறி மூன்றாவது இடம் பிடித்துள்ளார்.

    இளம் தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.

    பந்துவீச்சாளர் தரவரிசையில் இந்தியாவின் வருண் சக்கரவர்த்தி தென் ஆப்பிரிக்கா தொடரில் சிறப்பாக செயல்பட்டு முதல் இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். இந்த தொடரில் 10 விக்கெட் வீழ்த்தியுள்ளார். வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 10 இடங்கள் முன்னேறி 18வது இடத்தைப் பிடித்தார். அவர் மூன்று போட்டிகளில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    ஆல் ரவுண்டர் தரவரிசையில் ஹர்திக் பாண்ட்யா நான்காவது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். அக்சர் படேல் ஒரு இடம் சரிந்து 10வது இடத்திற்குச் சென்றார்.

    • கம்பீர் தலைமையில் இந்திய அணி வெள்ளைப் பந்து போட்டிகளில் பொதுவாக வலுவாக செயல்பட்டது.
    • டெஸ்ட் போட்டிகளில் வெற்றி விகிதம் குறைவாக உள்ளது.

    இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் இருந்து வருகிறார். இவர் தலைமையில் 2025-ம் ஆண்டில் இந்திய அணி சாதித்ததும் சருக்கியது குறித்த தகவலை இந்த செய்தியின் மூலம் காணலாம்.

    அவரது தலைமையில் இந்திய அணி வெள்ளைப் பந்து (ODI, T20I) போட்டிகளில் பொதுவாக வலுவாக செயல்பட்டது, குறிப்பாக 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்றது. ஆனால் டெஸ்ட் போட்டிகளில் கடுமையான சவால்களை எதிர்கொண்டது. 2025-ல் அணி மொத்தம் சுமார் 42 சர்வதேச போட்டிகளில் விளையாடி 32-ஐ வென்றது, ஆனால் டெஸ்ட் போட்டிகளில் வெற்றி விகிதம் குறைவாக இருந்தது.

    இந்திய அணியின் முக்கிய வெற்றிகள்:ICC சாம்பியன்ஸ் டிராபி 2025 (பிப்ரவரி-மார்ச், பாகிஸ்தான்): இந்தியா சாம்பியன் ஆனது. இது கம்பீரின் முதல் மேஜர் ஐசிசி தொடர் வெற்றி.

    இந்தியா vs தென் ஆப்பிரிக்கா ஒருநாள் தொடர் (நவம்பர்-டிசம்பர்): 2-1 என்ற கணக்கில் இந்தியா வென்றது.

    இந்தியா vs தென் ஆப்பிரிக்கா டி20 தொடர் (டிசம்பர்): 3-1 என்ற கணக்கில் இந்தியா வென்றது (ஒரு போட்டி ரத்து).

    ஆஸ்திரேலியா vs இந்தியா டி20 தொடர்: (அக்டோபர்-நவம்பர்): 2-1 என்ற கணக்கில் இந்தியா வென்றது (ஒரு போட்டி ரத்து).

    இங்கிலாந்து சுற்றுப்பயணம் (ஜூன்-ஆகஸ்ட்): டெஸ்ட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமன் (டிரா). ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் இந்தியா பெரும்பாலும் வென்றது.

    மேற்கிந்திய தீவுகள் vs இந்தியா டெஸ்ட் தொடர் (அக்டோபர்): 2-0 என்ற கணக்கில் இந்தியா வென்றது.

    ஆசியா கோப்பை 2025 (செப்டம்பர், யுஏஇ): இந்தியா வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.

    முக்கிய தோல்விகள்:

    இந்தியா vs தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடர் (நவம்பர்): 0-2 என்ற கணக்கில் தோல்வி (ஹோம் தொடர் வைட்வாஷ்).

    பார்டர்-கவாஸ்கர் தொடர் (2024-25, ஆஸ்திரேலியா): மொத்தம் 1-3 தோல்வி (1 டிரா உடன்), 2025-ல் கடைசி போட்டி (சிட்னி) உட்பட சில தோல்விகள்.

    இங்கிலாந்து vs இந்தியா டெஸ்ட் தொடர்: 2-2 டிரா, ஆனால் சில போட்டிகளில் தோல்வி.

    வெள்ளைப் பந்து தொடர்களில் சில தனிப்பட்ட போட்டி தோல்விகள். உதாரணமாக தென் ஆப்பிரிக்கா vs இந்தியா 2-வது ஒருநாள்

    மொத்த டெஸ்ட் ரெக்கார்ட் (கம்பீர் தலைமையில் 2024-25): 19 போட்டிகள், 7 வெற்றிகள், 10 தோல்விகள், 2 டிராக்கள் - இதில் 2025-ல் பெரும்பகுதி தோல்விகள் வந்தன.

    வெள்ளைப் பந்தில் அணி வலுவாக இருந்தாலும், டெஸ்ட் போட்டிகளில் பேட்டிங் சரிவு மற்றும் ஹோம் தோல்விகள் கம்பீருக்கு விமர்சனங்களை ஏற்படுத்தின. 

    • கேல் ரத்னா விருதுக்கு இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் துணை கேப்டன் ஹர்திக் சிங் மட்டுமே பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
    • இந்த முறை கிரிக்கெட் வீரர்கள் யாரும் இதில் இடம் பெறவில்லை.

    ஆண்டுதோறும் விளையாட்டு வீரர்களை கவுரவிக்கும் வகையில் கேல் ரத்னா விருது, அர்ஜுனா விருது வழங்கப்பட்டு வருகிறது.

    கேல் ரத்னா விருது என்பது இந்தியாவின் உயரிய விளையாட்டு விருதாகும். இது அதிகாரப்பூர்வமாக மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது என்று அழைக்கப்படுகிறது.

    மற்றொரு விருதான அர்ஜுனா விருது என்பது இந்தியாவில் விளையாட்டுத் துறையில் சிறந்த செயல்பாட்டை அங்கீகரிக்கும் 2-வது உயரிய விருதாகும்.

    இந்த விருது விளையாட்டு அமைச்சகத்தால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. விருதுடன் ரூ.15 லட்சம் பரிசுத்தொகை, சான்றிதழ் மற்றும் அர்ஜுனா சிலை வழங்கப்படுகிறது.

    இந்நிலையில் இந்த ஆண்டுக்கான மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருதுக்கு இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் துணை கேப்டன் ஹர்திக் சிங் மட்டுமே பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

    அதே நேரத்தில் அர்ஜூனா விருதுக்கு தடகளம், ஹாக்கி, செஸ், டேபிள் டென்னிஸ், மல்யுத்தம், பேட்மிண்டன், கபடி ஆகிய போட்டிகளில் சாதித்த 24 பேர் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதில் கிரிக்கெட் வீரர்கள் யாரும் இல்லை.

    மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா: ஹர்திக் சிங் (ஹாக்கி)

    அர்ஜுனா விருதுகள்:

    தேஜஸ்வின் சங்கர் (தடகளம்), பிரியங்கா (தடகளம்), நரேந்தர் (குத்துச்சண்டை), விதித் குஜ்ராத்தி (செஸ்), திவ்யா தேஷ்முக் (செஸ்), தனுஷ் ஸ்ரீகாந்த் (காதுகேளாதோர் துப்பாக்கி சுடுதல்), பிரணதி நாயக் (ஜிம்னாஸ்டிக்ஸ்), ராஜ்குமார் பால் (ஹாக்கி), சுர்ஜித்ரான்ஹோக்கி கண்டேல்வால் (பாரா-ஷூட்டிங்), ஏக்தா பியான் (பாரா தடகளம்), பத்மநாப் சிங் (போலோ), அரவிந்த் சிங் (ரோயிங்), அகில் ஷியோரன் (துப்பாக்கிச் சுடுதல்), மெஹுலி கோஷ் (துப்பாக்கிச் சுடுதல்), சுதிர்தா முகர்ஜி (டேபிள் டென்னிஸ்), சோனம் மாலிக் (மல்யுத்தம்), டிமிண்டோன், அராட்டி கோபிசந்த் (பேட்மிண்டன்), லால்ரெம்சியாமி (ஹாக்கி), முகமது அப்சல் (தடகளம்), பூஜா (கபடி).

    • ஆந்திரா அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி சதம் அடித்தார்.
    • விராட் கோலி 101 பந்தில் 131 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இந்திய உள்ளூர் ஒருநாள் (50 ஓவர்) கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பையின் 33-வது சீசன் இன்று முதல் ஜனவரி 18-ந் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இந்த போட்டியில் மொத்தம் 38 அணிகள் பங்கேற்கின்றன.

    இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடும் வீரர்கள் அனைவரும் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று பி.சி.சி.ஐ. அறிவுறுத்தி உள்ளது. இதனால் இந்த தொடரில் விராட், ரோகித், பண்ட் உள்ளிட்ட பல முன்னணி வீரர்கள் விளையாடுகின்றனர்.

    இந்நிலையில் டெல்லி அணிக்காக இந்திய வீரர் விராட் கோலி விளையாடி வருகிறார். இன்று நடந்த லீக் ஆட்டத்தில் டெல்லி - ஆந்திரா அணிகள் மோதின. இந்த போட்டியில் டெல்லி அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இதன்மூலம் பல சாதனைகளை விராட் கோலி படைத்துள்ளார். அதன்படி முதல்தர கிரிக்கெட்டில் அதிவேகமாக 16 ஆயிரம் ரன்களை கடந்து விராட் கோலி சாதனை படைத்துள்ளார். மேலும் அதிவேகமாக 10 ஆயிரம் முதல் 11, 12, 13, 14, 15, 16 ஆயிரம் ரன்களை விளாசிய ஒரே வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.

    மேலும் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிக சதங்கள் விளாசிய வீரர்களில் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்த இடத்தில் விராட் கோலி உள்ளார். சச்சின் 538 போட்டிகள் விளையாடி 60 சதங்கள் விளாசியுள்ளார். விராட் கோலி 330 போட்டிகளில் 58 சதங்கள் விளாசி சாதனை படைத்துள்ளார்.

    • மும்பை அணிக்காக விளையாடிய ரோகித் 94 பந்தில் 155 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • டெல்லி அணிக்காக விளையாடிய விராட் கோலி 83 பந்து சதம் அடித்துள்ளார்.

    இந்திய உள்ளூர் ஒருநாள் (50 ஓவர்) கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பையின் 33-வது சீசன் இன்று முதல் ஜனவரி 18-ந் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இந்த போட்டியில் மொத்தம் 38 அணிகள் பங்கேற்கின்றன.

    இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடும் வீரர்கள் அனைவரும் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று பி.சி.சி.ஐ. அறிவுறுத்தி உள்ளது. இதனால் இந்த தொடரில் விராட், ரோகித், பண்ட் உள்ளிட்ட பல முன்னணி வீரர்கள் விளையாடுகின்றனர்.

    இந்த தொடரில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி விளையாடும் போட்டிகளில் ரசிகர்கள் அதிக அளவில் வந்துள்ளனர்.

    இந்நிலையில் சீக்கிம்- மும்பை அணிகள் மோதின. இந்த போட்டியில் மும்பை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 61 பந்தில் சதம் விளாசிய மும்பை வீரர் ரோகித் சர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 17 ஆண்டுகளுக்கு பிறகு ரோகித் சர்மா சதம் விளாசியுள்ளார். ரோகித் 94 பந்தில் 155 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதில் 18 பவுண்டரிகளும் 9 சிக்சர்களும் அடங்கும்.

    மற்றொரு ஆட்டத்தில் டெல்லி அணிக்காக விளையாடி வரும் விராட் கோலி 83 பந்தில் சதம் விளாசி அசத்தினார். ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா தொடரை தொடர்ந்து விஜய் ஹசாரே தொடரிலும் இருவரும் அசத்தி வருகின்றனர்.

    • விஜய் ஹசாரே தொடரில் நடக்கும் லீக் போட்டி ஒன்றில் ஒடிசா- சவுராஸ்டிரா அணிகள் மோதி வருகின்றனர்.
    • இதில் ஒடிசா வீரர் ஸ்வஸ்திக் இரட்டை சதம் விளாசினார்.

    33-வது விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் இன்று (புதன்கிழமை) முதல் ஜனவரி 18-ந் தேதி வரை ஆமதாபாத், ராஜ்கோட், ஜெய்ப்பூர், பெங்களூரு ஆகிய 4 நகரங்களில் நடைபெற்று வருகிறது.

    இதன் 'எலைட்' வகைப்பிரிவில் இடம் பெற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'பிளேட்' வகைப்பிரிவில் நாகாலாந்து, பீகார், மிசோரம், மேகாலயா, மணிப்பூர், அருணாச்சல பிரதேசம் ஆகிய அணிகள் அங்கம் வகிக்கின்றன.

    இந்நிலையில் இன்று நடக்கும் ஒரு லீக் போட்டியில் ஒடிசா- சவுராஸ்டிரா அணிகள் மோதி வருகின்றனர். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஒடிசா அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 345 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்வஸ்திக் சமல் 212, சாமந்த்ரே 100 ரன்கள் எடுத்தனர்.

    இதன்மூலம் விஜய் ஹசாரே தொடரில் இரட்டை சதம் விளாசி ஸ்வஸ்திக் சமல் சாதனை படைத்துள்ளார். மேலும் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 14-வது இரட்டை சதம் விளாசிய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

    இவரை ஐபிஎல் ஏலத்தில் எந்த அணியும் வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • பீகார் அணியில் சூர்யவன்ஷி, சகிபுல் கனி சதம் விளாசினர்.
    • ஜார்க்கண்ட் அணியின் கேப்டன் இஷான் கிஷன் சதம் விளாசினார்.

    33-வது விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் இன்று (புதன்கிழமை) முதல் ஜனவரி 18-ந் தேதி வரை ஆமதாபாத், ராஜ்கோட், ஜெய்ப்பூர், பெங்களூரு ஆகிய 4 நகரங்களில் நடைபெற்று வருகிறது.

    இதன் 'எலைட்' வகைப்பிரிவில் இடம் பெற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'பிளேட்' வகைப்பிரிவில் நாகாலாந்து, பீகார், மிசோரம், மேகாலயா, மணிப்பூர், அருணாச்சல பிரதேசம் ஆகிய அணிகள் அங்கம் வகிக்கின்றன.

    இந்நிலையில் இந்த தொடரில் 3 இந்திய வீரர்கள் அதிரடியான ஆட்டத்தின் மூலம் அதிவேக சதம் அடித்து பல சாதனைகளை குவித்து வருகின்றனர். பிளேட் வகைப்பிரிவில் அருணாச்சல பிரதேசம் அணிக்கு எதிரான போட்டியில் பீகார் அணியை சேர்ந்த இளம் வீரர் சூர்யவன்ஷி 36 பந்தில் சதம் விளாசினார். இதன்மூலம் குறைந்த பந்தில் சதம் விளாசிய இந்திய வீரர்கள் பட்டியலில் அவர் இடம் பிடித்தார்.

    இதே போட்டியில் பீகார் அணியின் கேப்டன் சகிபுல் கனி 32 பந்தில் சதம் விளாசி சாதனை படைத்தார். இதன்மூலம் வைபவ் சாதனையை சகிபுல் முறியடித்தார்.

    எலைட் வகைப்பிரிவில் கர்நாடகா அணிக்கு எதிரான போட்டியில் ஜார்கண்ட் அணியின் கேப்டன் இஷான் கிஷன் 33 பந்தில் சதம் விளாசி சாதனை படைத்துள்ளார்.

    ஒரு இந்தியரின் வேகமான லிஸ்ட் ஏ சதங்கள்:

    32 பந்துகள்: சகிபுல் கனி (பீகார்)

    33 பந்துகள்: இஷான் கிஷன் (ஜார்க்கண்ட்)

    35 பந்துகள்: அன்மோல்பிரீத் சிங் (பஞ்சாப்)

    36 பந்துகள்: வைபவ் சூர்யவன்ஷி (பீகார்)

    40 பந்துகள்: யூசுப் பதான் (பரோடா)

    41 பந்துகள்: உர்வில் படேல் (குஜராத்)

    42 பந்துகள்: அபிஷேக் சர்மா (பஞ்சாப்)

    முதல் தர கிரிக்கெட்டில் அதிவேக சதம் அடித்த வீரர்கள்:-

    29 பந்துகள் - ஜேக் ஃப்ரேசர் மெக்கர்க்

    31 பந்துகள் - ஏபி டி வில்லியர்ஸ்

    32 பந்துகள்: சகிபுல் கனி

    33 பந்துகள்: இஷான் கிஷன்

    35 பந்துகள் - அன்மோல்பிரீத் சிங்

    36 பந்துகள் - கோரி ஆண்டர்சன்

    36 பந்துகள் - வைபவ் சூர்யவன்ஷி

    37 பந்துகள் - ஷாஹித் அப்ரிடி

    • விஜய் ஹசாரே கோப்பை தொடரில் பீகார்- அருணாச்சல பிரதேசம் அணி விளையாடி வருகிறது.
    • முதல் பேட்டிங் செய்த பீகார் அணியில் 3 பேர் சதம் விளாசினர்

    33-வது விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் இன்று (புதன்கிழமை) முதல் ஜனவரி 18-ந் தேதி வரை ஆமதாபாத், ராஜ்கோட், ஜெய்ப்பூர், பெங்களூரு ஆகிய 4 நகரங்களில் நடைபெற்று வருகிறது.

    'பிளேட்' வகைப்பிரிவில் நாகாலாந்து, பீகார், மிசோரம், மேகாலயா, மணிப்பூர், அருணாச்சல பிரதேசம் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளனர்.

    இந்நிலையில் இந்த பிரிவில் பீகார் - அருணாச்சல பிரதேசம் ஆகிய அணிகள் விளையாடி வருகின்றனர். இதில் டாஸ் வென்ற பீகார் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பீகார் அணியில் சூர்யவன்ஷி 190, சகிபுல் கனி 128, ஆயுஷ் லோஹருகா 116, பியூஷ் சிங் 77 ரன்கள் விளாசியுள்ளனர்.

    இதனால் பீகார் அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 574 ரன்கள் குவித்தது. இதன்மூலம் 50 ஓவர் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்களை குவித்த அணி என்ற சாதனையை பீகார் அணி படைத்துள்ளது.

    இதற்கு முன்பு 2022-ம் ஆண்டு தமிழ்நாடு அணி 506 ரன்களை குவித்தது. அதுவே லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற சாதனையை படைத்திருந்தது. இன்று அந்த வரலாற்று சாதனையை பீகார் அணி முறியடித்துள்ளது.

    • ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி வரும் 26-ந் தேதி தொடங்குகிறது.
    • 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா 3-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா தொடரை கைப்பற்றி விட்டது.

    இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி வரும் 26-ந் தேதி நடைபெற உள்ளது.

    இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டிக்கான ஆடும் லெவன் அணியை இங்கிலாந்து அணி அறிவித்துள்ளது. இந்த அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி பேட்டர்களில் ஒல்லி போப்-க்கு பதிலாக பெத்தேல் அணியில் இடம் பெற்றுள்ளார்.

    மேலும் பந்து வீச்சாளர்களில் காயம் காரணமாக ஆர்ச்சர் விலகியுள்ள நிலையில் அவருக்கு பதிலாக கஸ் அட்கின்சன் அணியில் இடம் பெற்றுள்ளார்.

    இங்கிலாந்து ஆடும் லெவன்:-

    க்ராலி, பென் டக்கெட், பெத்தேல், ஜோ ரூட், ஹாரி ப்ரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித், வில் ஜாக்ஸ், கஸ் அட்கின்சன், கார்ஸ், ஜோஸ் டங்.

    • சூர்யவன்ஷி 36 பந்தில் சதம் விளாசினார்.
    • லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் குறைந்த வயதில் சதம் விளாசிய இளம் வீரர் என்ற சாதனையை வைபவ் படைத்துள்ளார்.

    33-வது விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் இன்று (புதன்கிழமை) முதல் ஜனவரி 18-ந் தேதி வரை ஆமதாபாத், ராஜ்கோட், ஜெய்ப்பூர், பெங்களூரு ஆகிய 4 நகரங்களில் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் 'பிளேட்' வகைப்பிரிவில் இன்று பீகார் - அருணாச்சல பிரதேசம் ஆகிய அணிகள் விளையாடி வருகின்றனர். இதில் முதலில் பீகார் அணி பேட்டிங் செய்து விளையாடி வருகிறது. இந்த அணியில் 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி இடம் பெற்று தொடக்க வீரராக விளையாடினார்.

    எப்போதும் போல தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய வைபவ் 36 பந்தில் சதம் அடித்து அசத்தினார். தொடர்ந்து விளையாடிய அவர் இரட்டை சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 190 ரன்களில் ஆட்டமிழந்தார். இரட்டை சதத்தை தவறவிட்டாலும் பல சாதனைகளை அவர் படைத்துள்ளார்.

    சதம் அடித்ததன்மூலம் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் குறைந்த வயதில் சதம் விளாசிய இளம் வீரர் என்ற சாதனையை வைபவ் படைத்துள்ளார்.

    லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் சதம் அடித்த இளம் வீரர்கள்:-

    வைபவ் சூர்யவன்ஷி - 14 ஆண்டுகள் 272 நாட்கள் (2025)

    ஜஹூர் இலாஹி - 15 ஆண்டுகள் 209 நாட்கள் (1986)

    ரியாஸ் ஹாசன் - 16 ஆண்டுகள் 9 நாட்கள் (2018)

    மேலும் 36 பந்தில் சதம் விளாசியதன் மூலம் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் குறைந்த பந்தில் சதம் விளாசிய 2-வது இந்திய வீரர் என்ற சாதனையை வைபவ் படைத்துள்ளார். முதல் இடத்தில் அன்மோல்ப்ரீத் சிங் 35 பந்தில் அருணாச்சல பிரதேசம் அணிக்கு எதிராக கடந்த 2024-ம் ஆண்டில் அடித்திருந்தார்.

    இந்தியர்களின் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேக சதத்தின் பட்டியல்:

    35 - அன்மோல்ப்ரீத் சிங், பஞ்சாப் vs அருணாச்சல பிரதேசம், 2024

    36 - வைபவ் சூரியவன்ஷி, பீகார் vs அருணாச்சல பிரதேசம், இன்று

    40 - யூசுப் பதான், பரோடா vs மகாராஷ்டிரா, 2010

    41 - உர்வில் படேல், குஜராத் vs அருணாச்சல பிரதேசம், 2023

    42 - அபிஷேக் சர்மா, பஞ்சாப் vs மத்திய பிரதேசம், 2021

    ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் குறைந்த பந்தில் சதம் விளாசிய பாகிஸ்தான் வீரர் அப்ரிடியின் சாதனையை வைபவ் முறியடித்துள்ளார். 1996-ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 37 பந்துகளில் ஷாஹித் அப்ரிடி சதம் அடித்திருந்தார்.

    லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேக சதம்

    29 பந்துகள் - ஜேக் ஃப்ரேசர் மெக்கர்க்

    31 பந்துகள் - ஏபி டி வில்லியர்ஸ்

    35 பந்துகள் - அன்மோல்பிரீத் சிங்

    36 பந்துகள் - கோரி ஆண்டர்சன்

    36 பந்துகள் - வைபவ் சூர்யவன்ஷி

    37 பந்துகள் - ஷாஹித் அப்ரிடி

    குறைந்த பந்தில் அதிவேக 150 ரன்கள் குவித்த தென் ஆப்பிரிக்கா வீரர் ஏபிடி வில்லியர்ஸ் சாதனையை வைபவ் முறியடித்துள்ளார்.

    லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேக 150 ரன்கள் அடித்த வீரர்கள்:-

    59 பந்துகள் - வைபவ் சூர்யவன்ஷி vs அருணாச்சல பிரதேசம் (2025)

    64 பந்துகள் - ஏபி டிவில்லியர்ஸ் vs மேற்கிந்திய தீவுகள் (2015)

    65 பந்துகள் - ஜோஸ் பட்லர் vs நெதர்லாந்து (2022)

    • வைபவ் சூர்யவன்ஷி 84 பந்தில் 190 ரன்கள் விளாசியுள்ளார்.
    • இதில் 16 பவுண்டரிகளும் 15 சிக்சர்களும் அடங்கும்.

    33-வது விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் இன்று (புதன்கிழமை) முதல் ஜனவரி 18-ந் தேதி வரை ஆமதாபாத், ராஜ்கோட், ஜெய்ப்பூர், பெங்களூரு ஆகிய 4 நகரங்களில் நடைபெற்று வருகிறது.

    'பிளேட்' வகைப்பிரிவில் நாகாலாந்து, பீகார், மிசோரம், மேகாலயா, மணிப்பூர், அருணாச்சல பிரதேசம் ஆகிய அணிகள் அங்கம் வகிக்கின்றன. அவை தங்களுக்குள் தலா ஒரு முறை மோதும். இதன் முடிவில் முதலிடத்தை பிடிக்கும் அணி அடுத்த ஆண்டு எலைட் வகைப் பிரிவுக்கு ஏற்றம் பெறும். எலைட் பிரிவில் கடைசி இடத்துக்கு தள்ளப்படும் அணி அடுத்த ஆண்டு பிளேட் வகைப்பிரிவுக்கு தரம் இறக்கப்படும்.

    இந்நிலையில் இந்த பிரிவில் பீகார் - அருணாச்சல பிரதேசம் ஆகிய அணிகள் விளையாடி வருகின்றனர். இதில் முதலில் பீகார் அணி பேட்டிங் செய்து விளையாடி வருகிறது. இந்த அணியில் 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி இடம் பெற்று தொடக்க வீரராக விளையாடி வருகிறார்.

    இந்த போட்டியில் அதிரடியாக விளையாடி வந்த வைபவ், இரட்டை சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் 190 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் 10 ரன்னில் தனது இரட்டை சதத்தை வைபவ் தவறவிட்டார். அவர் 84 பந்தில் 190 ரன்கள் விளாசினார். இதில் 16 பவுண்டரிகளும் 15 சிக்சர்களும் அடங்கும்.

    இதற்கு முன்பு u19 ஆசிய கோப்பை தொடரில் யுஏஇ அணிக்கு எதிரான போட்டியில் 171 ரன்களில் ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×