search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிகிச்சை"

    • திர்ப்பாளர்களை சமாதானப்படுத்த அரசாங்கம் பல கோடி ரூபாய் மானியத்தை அறிவித்தனர்.
    • படுகாயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    முசாபராபாத்:

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உணவு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. எதிர்ப்பாளர்களை சமாதானப்படுத்த அரசாங்கம் பல கோடி ரூபாய் மானியத்தை அறிவித்தனர்.

    ஆனாலும் பொதுமக்கள் அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில், முசாபராபாத்தில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.

    துணை ராணுவ வீரர்களின் வாகன கான்வாய் முசாபராபாத் சென்றடைந்த போது, ஷோரன் டா நக்கா கிராமத்திற்கு அருகே பொதுமக்கள் கற்கள் வீசி தாக்குதல் நடத்தினர். துணை ராணுவ வீரர்கள் பொதுமக்களை கலைந்து போகுமாறு வலியுறுத்தினர். ஆனாலும் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீசி துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

    இதில் பொதுமக்களில் 3 பேர் இறந்தனர். மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதில் சிலரது நிலைமை மோசமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அப்பகுதியில் இணைய சேவை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

    • காயம் அடைந்தவர்களை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனை மற்றும் புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
    • விபத்து காரணமாக கடலூர்-புதுச்சேரி சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    கடலூர்:

    அரசு பஸ் மீது ஆம்னி பஸ் மோதி 29 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

    சென்னையில் இருந்து காரைக்கால் நோக்கி அரசு பஸ்பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று இரவு சென்று கொண்டிருந்தது. கடலூர் அருகே உள்ள ரெட்டிச்சாவடி கரிக்கன் நகர் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, அரசு பஸ் திடீரென்று சாலையின் நடுவே இருந்த தடுப்பு கட்டையில் பயங்கர சத்தத்துடன் மோதி ஏறி நின்றது.

    அந்த சமயம் அரசு பஸ்சுக்கு பின்னால் வந்த தனியார் ஆம்னி பஸ் கட்டுப்பாட்டை இழந்து அரசு பஸ்சின் பின்புறம் மோதியது. அப்போது பஸ்சில் பயணம் செய்த பயணிகள் அலறினார்கள். இத்தகவல் அறிந்த ரெட்டிச்சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும் அரசு மற்றும் ஆம்னி பஸ்சில் பயணம் செய்து காயம் அடைந்தவர்களை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனை மற்றும் புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.


    இந்த விபத்தில் 29பேர்கள் காயம் அடைந்து உள்ளனர். இவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். விபத்தில் அரசு பஸ் முன்புறம் சிதைந்தது. ரெட்டிச்சாவடி போலீசார் உடனடியாக ஜே.சி.பி. மற்றும் கிரேன் போன்ற வாகனங்கள் மூலம் இடிப்பாட்டில் சிக்கிக் கொண்டிருந்த அரசு மற்றும் ஆம்னி பஸ்சை மீட்டு சாலையின் ஓரமாக நிறுத்தினார்கள். இந்த விபத்து காரணமாக கடலூர்-புதுச்சேரி சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

    • வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் வெப்ப அயர்ச்சி (ஹீட் ஸ்ட்ரோக்) ஏற்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
    • காரைக்கால் பகுதிகளில் இதுவரை மது போதையில் வெயில் மயக்கத்துடன் 6 பேர் சுருண்டு விழுந்து பலியாகி உள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி முழுவதும் கோடை வெயில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது கத்திரி வெயில் கொளுத்தி வருகிறது.

    புதுச்சேரியில் நேற்று 96.1 டிகிரி வெயில் பதிவானது. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வருகிற 10-ந் தேதி வரை 96.8 டிகிரி முதல் 100 டிகிரி வரை வெப்பம் பதிவாகும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் வெப்ப அயர்ச்சி (ஹீட் ஸ்ட்ரோக்) ஏற்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு பாதிக்கப்படுபவர்களுக்கு உடனடியாக முதலுதவி செய்யாவிட்டால் உயிருக்கு ஆபத்து நேரலாம்.

    இந்த நிலையில் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பித்துக் கொள்ள பகல் நேரங்களில் பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.

    புதுவை, காரைக்கால் பகுதிகளில் இதுவரை மது போதையில் வெயில் மயக்கத்துடன் 6 பேர் சுருண்டு விழுந்து பலியாகி உள்ளனர்.

    புதுவையில் வெயிலின் தாக்கத்தில் மயக்கம் அடைப வர்களுக்கு சிகிச்சை அளிக்க புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிகளில் அனைத்து மருத்துவ வசதிகளுடன் கூடிய சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இது குறித்து புதுச்சேரி சுகாதாரத் துறை இயக்குனர் ஸ்ரீராமுலு கூறியதாவது:-

    புதுவை மாநிலத்தில் வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது மேலும் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க தற்போது கதிர் காமம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் 5 படுக்கைகள் கொண்ட வார்டும், ராஜீவ்காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் 5 படுக்கைகள் கொண்ட வார்டும், அரசு பொது மருத்துவமனையில் 2 படுக்கைகள் கொண்ட வார்டும் அமைக்கப்பட்டுள்ளது.

    இங்கு அனைத்து மருத்துவ வசதிகளும் தயார் நிலையில் உள்ளது. போதுமான மருந்துகள் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் டாக்டர்கள் மற்றும் நர்சுகள் அங்கு பணியில் இருப்பார்கள்.

    வெப்ப அயர்ச்சியால் பொதுமக்கள் யாரும் பாதிக்கப்பட்டால் உடனடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு அவர்களை சிகிச்சைக்கு கொண்டு வந்து சேர்க்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • வாக்குவாதம் தீவிரம் அடைந்த நிலையில் அந்த வாலிபர் அந்த பெண்ணை தனது ஹெல்மெட்டால் தாக்கியுள்ளார்.
    • பெண்ணை காப்பாற்றுவது போல் உள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

    சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் இளைஞர் மற்றும் பெண் தோழி இருவரும் இருச்சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். திடீரென்று அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அந்த இளைஞர் அந்த பெண் தோழியை சரமாரியாக தாக்கினார். வாக்குவாதம் தீவிரம் அடைந்த நிலையில் அந்த வாலிபர் அந்த பெண்ணை தனது ஹெல்மெட்டால் தாக்கியுள்ளார். நிலை தடுமாறிய அந்த பெண் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.

    இதை அந்த வழியாக வந்த வக்கீல் ஒரு தனது செல்போனில் வீடியோவாக பதிவேற்றினார். இதை கண்ட அந்த வாலிபர் சற்று சுதாரித்து கொண்டு எதுவும் நடைபெறாததது போல், மயங்கிய அந்த பெண்ணை காப்பாற்றுவது போல் நடகமாடினார். சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளையும், வழக்கறிஞரையும் உதவிக்கு அழைப்பது போலும் நாடகமாடினார்.

    இதை செல்போனில் வீடியோ எடுத்த வழக்கறிஞர் மற்றும் அந்த வாலிபர் இருவரும் அந்த பெண்ணை அருகில் உள்ள மருத்துவமனை அழைத்து சென்றனர். அந்த பெண் தற்போது சிகிச்சை பெற்று வரும் நிலையில் பெண்ணை காப்பாற்றுவது போல் உள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

    இந்த சம்பவத்தையடுத்து கோயம்பேடு போலீசார் அந்த வாலிபரின் வண்டி எண்ணை வைத்தும், அங்குள்ள சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்தும் விசாரணை நடத்தி வந்த நிலையில் வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த ரோஷன் என்ற இளைஞரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.

    இதையடுத்து அந்த வாலிபருக்கும், பெண்ணும் இடையே ஏன் வாக்குவாதம் ஏற்பட்டது என்றும், வாலிபர் ஏன் அந்த பெண்ணை தாக்கினார் என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பெண்ணையும் அழைத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். விசாரணையின் போது அந்த வாலிபர் மீது ஏதேனும் தவறு இருந்தால் வழக்குப்பதிவு செய்யவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    • சாரலப்பள்ளியில் உள்ள ஜெயிலில் முகமது ஷேக் என்ற கைதி அடைக்கப்பட்டு உள்ளார்.
    • ஜெயில் வார்டன் முகமது ஷேக்குக்கு ஜெயில் டாக்டரிடம் சிகிச்சை அளித்தனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் அடுத்த சாரலப்பள்ளியில் உள்ள ஜெயிலில் முகமது ஷேக் (வயது 32) என்ற கைதி அடைக்கப்பட்டு உள்ளார். இவருக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது.

    இதனை அறிந்த ஜெயில் வார்டன் முகமது ஷேக்குக்கு ஜெயில் டாக்டரிடம் சிகிச்சை அளித்தனர். இருப்பினும் வயிற்று வலி குறையவில்லை.

    இதையடுத்து முகமது ஷேக்கை ஐதராபாத்தில் உள்ள காந்தி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆஸ்பத்திரியில் முகமது ஷேக் வயிற்றை டாக்டர்கள் எக்ஸ்ரே எடுத்து பார்த்தனர்.

    இதில் முகமது ஷேக்கின் வயிற்றில் ஆணிகள் இருப்பது தெரியவந்தது. இரப்பை குடல் துறை தலைவர் டாக்டர் ஷ்ரவன் குமார் தலைமையிலான டாக்டர்கள் முகமது ஷேக் வயிற்றில் இருந்து எண்டோஸ்கோபி சிகிச்சை மூலம் 45 நிமிடங்களில் 5 அங்குலம் நீளமுள்ள 9 ஆணிகளை அப்புறப்படுத்தினர்.

    இதுகுறித்து கைதியிடம் விசாரித்த போது அவர் தற்கொலை செய்துவதற்காக ஆணிகளை விழுங்கியதாக தெரிவித்தார்.

    • திடீரென துரைராமலிங்கம் தனது இடது கை ஆள்காட்டி விரலை துண்டித்துக் கொண்டார்.
    • உடனடியாக அவரை மீட்டு கோவை கே.எம்.சி.எச். ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    கோவை:

    கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள ஆண்டாள் முள்ளிப்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் துரை ராமலிங்கம் (வயது 55). இவர் கடலூர் மாவட்ட பாரதிய ஜனதா துணை தலைவராக பதவி வகித்து வருகிறார்.

    கோவை தொகுதியில் தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை போட்டியிடுவதால் கடந்த 10 நாட்களாக கோவையில் முகாமிட்டு அவருக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

    இந்நிலையில் நேற்று ஹோப் கல்லூரி அருகே திடீரென துரைராமலிங்கம் தனது இடது கை ஆள்காட்டி விரலை துண்டித்துக் கொண்டார். இதை பார்த்து அருகில் நின்ற பா.ஜ.க.வினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு கோவை கே.எம்.சி.எச். ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    கைவிரலை துண்டித்தது குறித்து துரைராமலிங்கம் கூறியதாவது:-

    நான் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பாரதிய ஜனதா கட்சியில் உள்ளேன். 10 நாட்களுக்கு முன்பு கோவைக்கு வந்து அண்ணாமலைக்கு ஆதரவு திரட்டி பிரசாரம் செய்தேன். நேற்று ஹோப் கல்லூரி பகுதியில் பிரசாரம் செய்தபோது அருகில் நின்ற சிலர் அண்ணாமலை தோல்வியை சந்திப்பார் என்று கூறினர். இது எனக்கு மிகுந்த மனவேதனையை தந்தது. இதனால் அவர் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக எனது விரலை வெட்டிக் கொண்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அடர்ந்த வனப்பகுதியில் உடல்நலம் குன்றிய நிலையில் ஒரு பெண் யானை படுத்த நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தது.
    • தொடர்ச்சியாக யானைகள் இறப்பது மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவுவதால் வனப்பகுதியில் உள்ள குளம், குட்டை, ஏரி வறண்டு போய் உள்ளது. இதனால் காட்டுயானைகள் தண்ணீர் மற்றும் உணவை தேடி அங்கும் இங்கும் அலைகின்றன.

    இந்நிலையில் நேற்று சத்தியமங்கலம் புலிகள் காப்பக பண்ணாரி வனப்பகுதியில் புதுக்குய்யனூர் என்ற இடத்தில் வனத்துறையினர் ரோந்து சென்ற போது அடர்ந்த வனப்பகுதியில் உடல்நலம் குன்றிய நிலையில் ஒரு பெண் யானை படுத்த நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தது. அந்த யானையை சுற்றி ஒரு குட்டி யானை சுற்றி சுற்றி வந்து பிளறிக் கொண்டிருந்தது.

    இது குறித்து உடனடியாக வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் கால்நடை மருத்துவ குழுவினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சத்தியம ங்கலம் புலிகள் காப்பாக துணை இயக்குனர் குலால் யோகேஷ் மற்றும் கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையிலான மருத்துவ குழுவினர் பெண் யானையை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    முதலில் குட்டி யானையை தாய் யானையிடம் இருந்து பிரித்து வனத்துறையினர் தனியாக அழைத்து சென்றனர். பின்னர் தாய் யானைக்கு முதலில் காது நரம்பு வழியாக குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. எனினும் அந்த யானையின் உடல்நிலை மோசமான நிலையில் இருந்தது. இதற்கு இடையே குட்டி யானையின் சத்தத்தை கேட்டு காட்டில் உள்ள 6 காட்டுயானை கூட்டம் சம்பவ இடத்திற்கு வந்தது.

    காட்டு யானைகள் கூட்டத்தை கண்டதும் வனத்துறையினர் மருத்துவக் குழுவினர் அங்கிருந்து சற்று விலகி இருந்தனர். பின்னர் அந்த யானை கூட்டத்துடன் அந்த குட்டி யானையும் சென்றது. அதன் பின்னர் உயிருக்கு போராடி கொண்டிருக்கும் யானையை காப்பாற்றும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வந்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி அந்த பெண் யானை இரவில் பரிதாபமாக இறந்தது.

    இதனையடுத்து அந்த யானையின் உடல் அங்கேயே மற்ற விலங்குகளுக்கு உணவாக போடப்பட்டுள்ளது. இதற்கிடையே காட்டு யானை கூட்டத்துடன் சென்ற குட்டி யானையின் நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறை சார்பாக 2 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த 2 குழுவினர் அந்த குட்டி யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

    கடந்த மாதம் பண்ணாரி கோவில் அருகே பெண் யானை உயிரிழந்தது. இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடம்பூரில் ஒரு பெண் யானை உயிரிழந்தது. தற்போதும் ஒரு பெண் யானை உயிரிழந்துள்ளது.

    தொடர்ச்சியாக யானைகள் இறப்பது மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    • தர்மபுரியில் நடந்த அ.தி.மு.க. பொதுக்கூட்டத்திற்கு கலந்து கொள்வதற்காக விநாயக சரவணன் என்பவர் காரில் வந்தனர்.
    • விபத்து குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கடத்தூர்:

    கடத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ரத்தினம் பிள்ளை தெருவை சேர்ந்தவர் ராமன் (வயது 67). அ.தி.மு.க.வின் முன்னாள் அவை தலைவரான இவரும் கடத்தூரைச் சேர்ந்த விநாயகர் சரவணன் மற்றும் அ.தி.மு.க. கட்சியினர் சிலரும் தர்மபுரியில் நடந்த அ.தி.மு.க. பொதுக்கூட்டத்திற்கு கலந்து கொள்வதற்காக விநாயக சரவணன் என்பவர் காரில் வந்தனர். பின்னர் அவர்கள் கூட்டம் முடிந்து விடு திரும்பினர்.

    அப்போது மணியம்பாடி அருகே சாலை ஓரமாக காரை நிறுத்திவிட்டு இறங்கி பேசிக் கொண்டிருந்தனர்.

    அப்பொழுது அவ் வழியாக வந்த தனியார் பஸ் காரின் மீது மோதியதில் காரின் அருகில் நின்றிருந்த ராமன் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இந்த விபத்து குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பதால் நிபந்தனை ஜாமீனில் இருந்து வந்தார்.
    • எர்ணாகுளம் மருத்துவமனையில் கடந்த ஒரு மாத திற்கும் மேலாக சிகிச்சை பெற்று வருகிறார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் செயல்படும் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் அப்துல் நாசர் மதானி. கோவை குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர். அவர் மீது கூறப்பட்டிருந்த அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந் தும் விடுவிக்கப்பட்டார்.

    இதனால் பல ஆண்டுகள் விசாரணை கைதியாக கோவை மத்திய ஜெயிலில் அகை்கப்பட்டிருந்த அவர், விடுதலை ஆனார். ஆனால் 2008 பெங்களூர் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் மதானி கைது செய்யப்பட்டு, அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டார். உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பதால் நிபந்தனை ஜாமீனில் இருந்து வந்தார்.

    தனது உடல்நல பாதிப்புக்கு தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டியிருப்பதால் தனது ஜாமீனில் மேலும் தளர்வுகள் வழங்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதன்பேரில் அவருக்கான ஜாமீன் நிபந்தனைகளை சுப்ரீம் கோர்ட்டு தளர்த்தியது.

    இதையடுத்து மதானி கடந்த ஆண்டு ஜூலை மாதம் கேரளாவுக்கு வந்தார். அவர் கல்லீரல் நோய் பாதித்து அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் எர்ணாகுளம் மருத்துவமனையில் கடந்த ஒரு மாத திற்கும் மேலாக சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்நிலையில் மதானி யின் உடல்நிலை கவலைக் கிடமான நிலையில் இருப்ப தாக தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு ரத்த அழுத்தம் மற்றும் ஆக்சிஜன் அளவு குறைந்தது. இதனால் அவரை டாக்டர்கள் குழுவினர் வென்டிலேட்டர் சிகிச்சையில் வைத்தனர். மேலும் டயாலிசிஸ் சிகிச்சை யும் நடந்து வருகிறது.

    மருத்துவமனையில் மதானியின் மனைவி சுபியா, மகன் சலாவுதீன் மற்றும் மக்கள் ஜனநாயக கட்சியின் நிர்வாகிகள் உள்ளனர்.

    • பயணிகளை ஆம்புலன்ஸ் உதவியுடன் லால்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.
    • 15க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    லால்குடி:

    திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்து நத்த மாங்குடியில் இருந்து சத்திரம் பேருந்து நிலையம் நோக்கி அரசு பஸ் பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது.

    மேட்டுப்பட்டி அருகே வந்து கொண்டு இருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையில் அங்குமிங்கும் ஓடி. சாலை ஓரத்தில் இருந்த வயலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதில் பஸ் பயணிகள் ரத்த வெள்ளத்தில் காயங்களுடன் துடி துடித்தனர். இதனை பார்த்த அப்பகுதி பொது மக்கள் ஓடிவந்து, காயத்து டன் காணப்பட்ட 15க்கு மேற்பட்ட பயணிகளை ஆம்புலன்ஸ் உதவியுடன் லால்குடி அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.

    அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த 2 பேருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற லால்குடி இன்ஸ்பெக்டர் சரவணகுமார் மற்றும் போலீசார் சம்பவம் குறித்து அப்பகுதியில் விசாரணை நடத்தினர். பின்னர் வழக்கு பதிவு செய்து பேருந்து கவிழ்ந்தது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து 15க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும் போது, பூவாளூர் பின்னவாசல் முதல் ஆலங்குடி மகாஜனம் வரை சாலை மிகவும் குறுகலாக உள்ளதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. சாலை அகலப்படுத்த பலமுறை கோரிக்கை வைத்தும் நட வடிக்கை எடுக்கப்படவில்லை என வேதனையுடன் அவர்கள் தெரிவித்தனர்.

    • ஆத்திரமடைந்த சமீனா வீட்டில் இருந்த டர்பென்டைன் எண்ணெயை ஷேக் யாகூப் பாஷா மீது ஊற்றினார்.
    • பாஷாவின் தாயார் போலீசில் புகார் அளித்தார்.

    தெலுங்கானா மாநிலம் கம்மம் நிஜாம் பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஷேக் யாகூப் பாஷா. கூலித் தொழிலாளி. இவருடைய மனைவி சமீனா. தம்பதிக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    சமீனா தன்னுடைய கணவரிடம் கம்மல் வாங்கி தரும்படி நீண்ட நாட்களாக கேட்டு வந்தார். நேற்று இரவு கணவன் மனைவி இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது சமீனா தனக்கு உடனடியாக கம்மல் வேண்டுமென கேட்டார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது ஆத்திரமடைந்த சமீனா வீட்டில் இருந்த டர்பென்டைன் எண்ணெயை ஷேக் யாகூப் பாஷா மீது ஊற்றினார்.

    மேலும் கணவர் என்று கூட பார்க்காமல் அவரது உடலில் தீ வைத்தார். உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்ததால் ஷேக் யாகூப் பாஷா அலறினார் .அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் உடல் முழுவதும் தீ பற்றியது. தீயை அணைத்த பொதுமக்கள் அவரை மீட்டு அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 45 சதவீத தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்

    இது குறித்து பாஷாவின் தாயார் போலீசில் புகார் அளித்தார் . ஷேக் யாகூப் பாஷாவும் மனைவி தன்னைக் கொல்ல முயன்றதாக போலீசாரிடம் தெரிவித்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • இந்த சம்பவம் குறித்து மயங்கின் மேலாளர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
    • மயங்கின் மேலாளர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

    இந்திய கிரிக்கெட் வீரர் மயங்க் அகர்வால் தற்போது ரஞ்சி தொடரில் விளையாடி வருகிறார். கர்நாடக அணி கேப்டனான மயங்க் அகர்வால் தனது அணியினருடன் டெல்லி புறப்பட விமான நிலையம் சென்றார். அணியினருடன் விமானத்தில் ஏறிய மயங்க் அகர்வாலுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

    விமானத்தில் இருந்த படி சில முறை அவர் வாந்தி எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து விமானத்தில் இருந்து அவசரஅவசரமாக வெளியேறிய மயங்க் அகர்வால் உடனடியாக அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு அவரு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இந்நிலையில் மயங்க் அகர்வாலின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து மயங்க் அகர்வால் குணமடைய வேண்டிக்கொண்ட அனைவருக்கும் நன்றி என எக்ஸ் தளத்தில் தனது புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

    அதில், நான் இப்போது நன்றாக உணர்கிறேன். மீண்டு வர தயாராகி வருகிறேன். குணமடைய வேண்டிக்கொண்ட அனைவருக்கும் நன்றி. பிரார்த்தனைக்கும், அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி, அனைவருக்கும்' என்று பதிவிட்டுள்ளார்.

    இருப்பினும், இந்த சம்பவம் குறித்து மயங்கின் மேலாளர் போலீசில் புகார் அளித்துள்ளார். விமானத்தில் அமர்ந்திருக்கும் போது தண்ணீர் என்று தவறாக நினைத்து மயங்க் அந்த திரவத்தை தனக்கு முன்னால் குடித்ததாக மேலாளர் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

    இதுகுறித்து மேற்கு திரிபுரா எஸ்பி கிரண் குமார் கூறுகையில், மயங்கின் மேலாளர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

    ×