search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Abdul Nasser Madani"

    • உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பதால் நிபந்தனை ஜாமீனில் இருந்து வந்தார்.
    • எர்ணாகுளம் மருத்துவமனையில் கடந்த ஒரு மாத திற்கும் மேலாக சிகிச்சை பெற்று வருகிறார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் செயல்படும் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் அப்துல் நாசர் மதானி. கோவை குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர். அவர் மீது கூறப்பட்டிருந்த அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந் தும் விடுவிக்கப்பட்டார்.

    இதனால் பல ஆண்டுகள் விசாரணை கைதியாக கோவை மத்திய ஜெயிலில் அகை்கப்பட்டிருந்த அவர், விடுதலை ஆனார். ஆனால் 2008 பெங்களூர் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் மதானி கைது செய்யப்பட்டு, அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டார். உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பதால் நிபந்தனை ஜாமீனில் இருந்து வந்தார்.

    தனது உடல்நல பாதிப்புக்கு தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டியிருப்பதால் தனது ஜாமீனில் மேலும் தளர்வுகள் வழங்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதன்பேரில் அவருக்கான ஜாமீன் நிபந்தனைகளை சுப்ரீம் கோர்ட்டு தளர்த்தியது.

    இதையடுத்து மதானி கடந்த ஆண்டு ஜூலை மாதம் கேரளாவுக்கு வந்தார். அவர் கல்லீரல் நோய் பாதித்து அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் எர்ணாகுளம் மருத்துவமனையில் கடந்த ஒரு மாத திற்கும் மேலாக சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்நிலையில் மதானி யின் உடல்நிலை கவலைக் கிடமான நிலையில் இருப்ப தாக தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு ரத்த அழுத்தம் மற்றும் ஆக்சிஜன் அளவு குறைந்தது. இதனால் அவரை டாக்டர்கள் குழுவினர் வென்டிலேட்டர் சிகிச்சையில் வைத்தனர். மேலும் டயாலிசிஸ் சிகிச்சை யும் நடந்து வருகிறது.

    மருத்துவமனையில் மதானியின் மனைவி சுபியா, மகன் சலாவுதீன் மற்றும் மக்கள் ஜனநாயக கட்சியின் நிர்வாகிகள் உள்ளனர்.

    • உச்சநீதிமன்றம் மதானிக்கு ஜாமீன் நிபந்தனைகளில் தளர்வு வழங்கியது.
    • உடல்நிலை மோசமடைந்ததால் மீயன்னூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார்.

    திருவனந்தபுரம்:

    பெங்களூருவில் 2008-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளி கேரள மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் அப்துல் நாசர் மதானி. இவர் தனது உடல்நலம் பாதித்த தந்தையை பார்ப்பதற்காகவும், கேரளாவில் தங்கியிருக்க அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    அதனை விசாரித்த உச்சநீதிமன்றம் மதானிக்கு ஜாமீன் நிபந்தனைகளில் தளர்வு வழங்கி, அவர் கேரளாவில் தங்கியிருந்து சிகிச்சை பெற அனுமதி வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து அவர் கடந்த 20-ந்தேதி கேரளாவுக்கு வந்தார். இந்நிலையில் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அவரது உடல்நிலை மோசமடைந்ததால் மீயன்னூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

    • மதானி கேரளாவில் தங்கியிருந்து சிசிக்சை பெறலாம், நோய்வாய்ப்பட்டுள்ள அவரது தந்தையை அவர் பார்க்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
    • ஜாமீன் நிபந்தனைப்படி மதானி கொல்லத்தில் உள்ள போலீஸ் நிலையத்தில் 15 நாட்களுக்கு ஒருமுறை கையெழுத்திட வேண்டும்.

    திருவனந்தபுரம்:

    பெங்களூருவில் கடந்த 2008-ம் ஆண்டு ஜூலை 25-ந்தேதி நடந்த தொடர் குண்டு வெடிப்பில் ஒருவர் கொல்லப்பட்டார். 20பேர் காயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்பில் தொடர்புடையதாக கேரள மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் அப்துல்நாசர் மதானி கைது செய்யப்பட்டு பெங்களூருவில் உள்ள சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டார்.

    இந்நிலையில் உடல்நிலை பாதித்து சிகிச்சை பெற்று வந்த தனது தந்தையை சந்திக்க கொல்லத்திற்கு கடந்த ஜூன் 26-ந்தேதி முதல் கடந்த 7-ந்தேதி வரை ஜாமீனில் கேரளாவிற்கு மதானி வந்திருந்தார். அப்போது அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால், அங்குள்ள மருத்துவமனையில் மதானி அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் தனக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளில் தளர்வு வழங்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மதானி சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

    அது விசாரணைக்கு வந்தது. அதில் மதானி கேரளாவில் தங்கியிருந்து சிசிக்சை பெறலாம், நோய்வாய்ப்பட்டுள்ள அவரது தந்தையை அவர் பார்க்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் ஜாமீன் நிபந்தனைப்படி அவர் கொல்லத்தில் உள்ள போலீஸ் நிலையத்தில் 15 நாட்களுக்கு ஒருமுறை கையெழுத்திடவேண்டும் என்றும், மருத்துவ சிகிச்சைக்காக மாவட்டத்தை விட்டு வெளியே செல்லலாம் எனவும் கோர்ட்டு தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

    அதே நேரத்தில் விசாரணை நீதிமன்றம் ஆஜராகுமாறு கூறினால், மதானி பெங்களூரு செல்லவேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    ×