என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    ஓடிடியை நோக்கி செல்லும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
    டாடா பிளே நிறுவனம் தனது டிடிஹெச் சேனல் பேக்குகளின் விலையை திடீரென குறைத்துள்ளது.

    டாடா ஸ்கை என்ற பெயரில் இயங்கி வந்த டிடிஹெச் சேவை நிறுவனம் சில மாதங்களுக்கு முன் டாடா பிளே என பெயரை மாற்றியது. 
    இந்தியாவில் டாடா பிளே வாடிக்கையாளர்களாக 1.9 கோடி பேர் உள்ளனர்.

    இந்நிலையில் அந்த நிறுவனம் தற்போது தனது சேனல் பேக்குகளின் விலையை குறைத்துள்ளது. இதன்மூலம் வாடிக்கையாளர்கள் மாதம் ரூ.30 முதல் ரூ.100 வரை சேமிக்கலாம் என தெரிவித்துள்ளது.

    டாடா பிளே

    இந்த விலை குறைப்பு ஓவ்வொரு வாடிக்கையாளர்களுக்கும் வேறுபடும். வாடிக்கையாளர்கள் எந்தெந்த சேனல்களை அதிகம் பார்க்கின்றனர் என்பதை அறிந்து, அவர்கள் பார்க்காத சேனல்களுக்கு விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வாடிக்கையளர்கள் தாங்கள் விரும்பி பார்க்கும் சேனல்களுக்கு மட்டும் விலை கொடுத்தால் போதும் என்ற வசதி தரப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஹரித் நாக்பால் தெரிவித்துள்ளார்.

    இந்தியாவில் இன்று ஓடிடி சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றனர். இந்நிலையில் ஒடிடி நோக்கி செல்லும் டிடிஎச் வாடிக்கையாளர்களை தக்கவைத்துகொள்ள டாடா பிளே விலை குறைப்பு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
    இன்று மதியம் விற்பனைக்கு வரும் இந்த போனை ஹெச்.டி.எஃப்.சி வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் வாங்கினால் ரூ.1000 உடனடி தள்ளுபடி கிடைக்கும்.
    போக்கோ நிறுவனத்தின் போக்கோ எம்4 ப்ரோ இன்று முதல் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது.

    இந்த போனில் 6.43 இன்ச் AMOLED டிஸ்பிளே 90Hz ரெஃப்ரெஷ்ரேட் மற்றும் 1000 nits பிரைட்னஸுடன் இடம்பெற்றுள்ளது. மேலும் octa-core MediaTek Helio G96 SoC பிராசஸர், ஆண்ட்ராய்டு 11, MIUI 13 ஓ.எஸில் இந்த போன் இயங்குகிறது.

    கேமராவை பொறுத்தவரை 64 மெகாபிக்ஸல் பிரைமரி கேமரா, 118 டிகிரி 8 மெகாபிக்ஸல் அல்ட்ரா வைட் கேமரா, 2 மெகாபிக்ஸல் மேக்ரோ கேமரா, 16 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமரா ஆகியவை இடம்பெற்றுளன. 

    மேலும் இதில் லிக்விட் கூல் தொழில்நுட்பம் 1.0, டயனமிக் ரேம் எக்ஸ்பேஷன் ஆகியவை தரப்பட்டுள்ளன.

    போக்கோ எம்4 ப்ரோ

    இந்த போனின் 6 ஜிபி ரேம்+64 ஜிபி ஸ்டோரேஜ்ஜின் விலை ரூ.14,999-ஆகவும், 6 ஜிபி ரேம்+128 ஜிபி ஸ்டோரேஜ்ஜின் விலை ரூ.16,499-ஆகவும் மற்றும் 8 ஜிபி ரேம் +256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.17,999-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    கூல் ப்ளூ, போக்கோ யெல்லோ, பவர் பிளாக் ஆகிய நிறங்களில் இந்த போன் கிடைக்கிறது.

    இன்று மதியம் விற்பனைக்கு வரும் இந்த போனை ஹெச்.டி.எஃப்.சி வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் வாங்கினால் ரூ.1000 உடனடி தள்ளுபடி கிடைக்கும். 

    ஃபிளிப்கார்ட் ஆக்ஸிஸ் வங்கி கிரெடிட் கார்ட் மூலம் வாங்கினால் 5 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    மார்ச் 11-ம் தேதி வெளியாகும் இந்த போனை முன்பதிவு செய்து ரூ.400 தள்ளுபடியுடன் ரூ.6,599-க்கு பெறலாம்.
    இந்தியாவை சேர்ந்த ஸ்மார்ட்போன் நிறுவனமான லாவா புதிய லாவா எக்ஸ்2 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

    இந்த போனில் 6.5-inch HD+ IPS டிஸ்பிளே, octa-core MediaTek Helio SoC பிராசஸர் ஆகியவை இடம்பெற்றுள்ளன. மேலும் இதில் 8 மெகாபிக்ஸல் பிரைமரி கேமரா, 5 மெகாபிக்ஸல் செஃல்பி கேமரா ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

    5000mAh பேட்டரி, 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி மெமரி ஆகியவை வழங்கப்பட்டுள்ள இந்த போனின் விலை ரூ.6,999-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    மார்ச் 11-ம் தேதி வெளியாகும் இந்த போனை முன்பதிவு செய்து ரூ.400 தள்ளுபடியுடன் ரூ.6,599-க்கு பெறலாம். இந்த போன் நீலம் மற்றும் சியான் நிறங்களில் கிடைக்கிறது.
    ஃபேஸ்புக், யூடியூப்பை தொடர்ந்து ட்விட்டர் நிறுவனமும் இந்த சேவையை கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
    ட்விட்டர் நிறுவனம் ஸ்பேஸ் சேவையை கடந்த 2020-ம் ஆண்டு அறிமுகம் செய்தது. இதையடுத்து அந்த சேவை ட்விட்டர் பயனர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ட்விட்டர் நிறுவனம் மற்றொரு ஆடியோ சேவையான போட்கேஸ்ட் சேவையையும் மொபைலில் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

    இதன் மூலம் ட்விட்டர் ஆப்பிள், ஸ்பாடிஃபை உள்ளிட்ட நிறுவனங்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் ட்விட்டர் நிறுவனம் ஸ்பேஸ் அம்சத்தில் புதிய அப்டேட்டை வெளியிட்டது. இதன்மூலம் ஸ்பேஸ் சாட் ரூமில் பேசுபவர்களின் ஆடியோக்களை பதிவு செய்துகொள்ள முடியும். ஆனால் இந்த பதிவு செய்யப்பட்ட ஆடியோக்கள் 30 நாட்கள் மட்டுமே இருக்கும். பின் தானாக டெலிட் ஆகிவிடும். இதுவே போட்கேஸ்ட் அம்சம் வந்தால் நிரந்தரமாக ஆடியோ தகவல்களை பெற முடியும் என கூறப்பட்டுள்ளது.

    ஃபேஸ்புக் நிறுவனம் கடந்த ஆண்டு சில குறிப்பிட்ட பயனர்களுக்கு மட்டும் போட்கேஸ்ட் அம்சத்தை அறிமுகம் செய்தது. யூடியூப்பும் போட்கேஸ்ட் அம்சத்தை கொண்டு வர திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில் ட்விட்டர் நிறுவனமும் விரைவில் போட்கேஸ்ட் சேவையை தொடங்கும் என கூறப்படுகிறது.
    ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ள ஒரு அம்சம் 1000-க்கும் மேற்பட்ட செயலிகள் மற்றும் கேம்களின் செயல்திறனை தடுப்பதாக கூறப்படுகிறது.
    சாம்சங் நிறுவனம் சமீபத்தில் கேலக்ஸி எஸ்22 சீரிஸை இந்தியா உட்பட பல நாடுகளில் அறிமுகம் செய்தது. பல்வேறு சிறப்பம்சங்கள் நிறைந்த இந்த போனில் புதிய சிக்கல் ஒன்று ஏற்பட்டிருப்பதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

    இதன்படி சாம்சங் கேலக்ஸி எஸ்22 சீரிஸ் போனில் உள்ள கேம் ஆப்டிமைசிங் சர்விஸ் பிற செயலிகளின் செயல்பாடுகளை குறைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கேம் ஆப்டிமைசிங் சர்வீஸ்

    கேமிங் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக கேமிங் ஆப்டிமைசிங் சர்வீஸ் அம்சம் எஸ் 22 சீரிஸில் தரப்பட்டுள்ளது. ஆனால் இந்த அம்சத்தை பயன்படுத்தும்போது 1000-க்கும் மேற்பட்ட செயலிகள் மற்றும் கேம்களின் செயல்திறன் பாதிக்கப்படுவதாக புகார் வந்துள்ளது.  

    இருப்பினும் ஃபேஸ்புக் உள்ளிட்ட பிரபலமான செயலிகளில் எந்த பாதிப்பும் இல்லை என கூறப்படுகிறது.

    இதுகுறித்து சாம்சங் நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தில், சிபியூ, ஜிபியூ செயல்திறனை மேம்படுத்தவே இந்த கேம் ஆப்டிமைசிங் அம்சம் வேலை செய்கிறது. பிற செயலிகள் இதனால் பாதிக்கப்படுவதில்லை. இருப்பினும் வர இருக்கும் புதிய அப்டேட்டில் இந்த பிரச்சனை தீர்க்கப்படும் என தெரிவித்துள்ளது.
    இந்த புதிய திட்டத்தில் 1000 ஜிபி டேட்டா குறைந்த விலையில் வழங்கப்படுகிறது.
    பி.எஸ்.என்.எல் நிறுவனம் ரூ.329-க்கு ஃபைபர் பிராட்பேண்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. 

    இந்த திட்டத்தில் ரூ.329-க்கு வாடிக்கையாளர்கள் 1000 ஜிபி டேட்டாவை, 20 Mbps வேகத்தில் பெறுவர். அத்துடன் ஃபிக்சட் லைன் வாய்ஸ் அழைப்பு இலவசமாக வழங்கப்படும். இதுமட்டும் இல்லாமல் முதல் மாத கட்டண தொகையில் 90 சதவீத தள்ளுபடியும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

    இதற்கு முன் குறைந்த விலை ஃபைபர் பிராட்பேண்ட் திட்டமாக பி.எஸ்.என்.எல்லின் ரூ.449 திட்டம் இருந்தது. இந்த திட்டத்தில் 30Mbps வேகத்தில் 3.3 டிபி டேட்டா இலவசமாக வழங்கப்பட்டது. இருப்பினும் இந்த புதிய திட்டம் தனி நபர் ஒருவர் இணையம் பயன்படுத்த போதுமானதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த புதிய திட்டம் நாட்டின் சில மாநிலங்களில் மட்டுமே அமல்படுத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் பி.எஸ்.என்.எல் இணையதளத்திற்கு சென்று இந்த திட்டம் தங்கள் இடங்களுக்கு அமலில் உள்ளதா என அறிந்துகொள்ளலாம்.
    தற்போது இந்த அம்சம் ஆண்ட்ராய்டு 2.22.6.7 அப்டேட்டில் இயங்கும் வாட்ஸ்அப் பிஸ்னஸ் பீட்டா டெஸ்டர்களுக்கு தரப்பட்டுள்ளது.
    வாட்ஸ்அப் நிறுவனம் தனது வாய்ஸ் மெசேஜ் சேவையில் ‘பாஸ்’ அம்சத்தை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதன்மூலம் வாய்ஸ் மெசேஜ் அனுப்பும்போது பயனர்கள் தாங்கள் பேசுவதை பாதியில் நிறுத்திவிட்டு, மீண்டும் சிறிது நேரம் கழித்து கூட தொடர முடியும். இதற்கு முன் ஒரு முறை நிறுத்திவிட்டால் அந்த மெசேஜ்ஜை அனுப்பிவிட வேண்டும் அல்லது டெலிட் செய்துவிட வேண்டும் என்ற இரண்டு தேர்வுகள் மட்டுமே இருந்தன.

    தற்போது இந்த அம்சம் ஆண்ட்ராய்டு 2.22.6.7 அப்டேட்டில் இயங்கும் வாட்ஸ்அப் பிஸ்னஸ் பீட்டா டெஸ்டர்களுக்கு தரப்பட்டுள்ளது. இது விரைவில் பிறருக்கும் தரப்படும் என கூறப்படுகிறது.

    இதேபோல பயனர்கள் வாட்ஸ்அப் அழைப்புகளில் எளிதாக இணைவதற்கு லிங்க் அனுப்பும் அம்சத்தையும் கொண்டுவரவுள்ளது. இதன்மூலம் நமது தொடர்பில் இல்லாதவர்கள் கூட அந்த லிங்கை கிளிக் செய்து அழைப்பில் இணையலாம்.
    ஆப்பிள், அமேசான், ஸ்பாட்டிஃபை ஆகிய நிறுவனங்களுடன் போட்டியிடுவதற்கு யூடியூப் திட்டமிட்டுள்ளது.
    யூடியூப் நிறுவனம் போட்கேஸ்ட் படைப்பாளிகள், வீடியோக்களை உருவாக்குவதை ஊக்குவிக்கும் வகையில் ரூ.2.30 கோடி வரை தருவதற்கு முன்வந்துள்ளது. 

    இன்று இணையத்தில் வீடியோக்கள் எந்தளவிற்கு மக்களால் பார்க்கப்படுகிறதோ, அதே அளவுக்கு போட்கேஸ்ட் எனப்படும் ஆடியோ வடிவிலான தகவல்களும் விரும்பி கேட்கப்படுகின்றன.

    ஆப்பிள், அமேசான், ஸ்பாட்டிஃபை உள்ளிட்ட நிறுவனங்கள் போட்கேஸ்ட் உருவாக்கத்தில் அதிகம் கவனம் செலுத்தி வருகின்றன. இந்நிலையில் அவர்களுடன் போட்டியிடுவதற்கு கூகுளும் யூடியூப் மூலம் போட்கேஸ்ட் படைப்பாளிகளை ஊக்குவிப்பதற்கு பணத்தொகை வழங்கவுள்ளது.

    போட்கேஸ்ட் எபிசோட்களை வீடியோ வடிவில் எடுப்பதற்கு இந்த நிதியுதவி வழங்கப்படுகிறது.  தனிப்பட்ட படைப்பாளிகளுக்கு ரூ.38 லட்சமும், போட்கேஸ்ட் நிறுவனங்களுக்கு ரூ.2.30 கோடி வரையும் கொடுக்கவுள்ளது.
    இந்த சீரிஸில் ரியல்மி 9 4ஜி, ரியல்மி 9 5ஜி மற்றும் ரியல்மி 9 5ஜி எஸ்.இ ஆகிய மூன்று போன்கள் இடம்பெறுகிறது.
    ரியல்மி நிறுவனம், ரியல்மி 9 சீரிஸை மார்ச் 10-ம் தேதி அறிமுகம் செய்யவுள்ளது. இந்த சீரிஸில் ரியல்மி 9 4ஜி, ரியல்மி 9 5ஜி மற்றும் ரியல்மி 9 5ஜி எஸ்.இ ஆகிய மூன்று போன்கள் வெளியாகிறது. மிட் ரேஞ்ச் விலையில் அறிமுகமாகவுள்ள இந்த போன்கள் Qualcomm Snapdragon 778 5G SoC மற்றும் MediaTek Dimensity 810 5G SoC ஆகிய பிராசஸர்களை கொண்டிருக்கும் என கூறப்பட்டுள்ளது.

    மேலும் இந்த போன்களில் ஃப்ளூயட் லைட் டிசைனை கொண்டிருக்கும், 6 லேயர் யூ.வி கிரைன் புராசஸில் தயாரிக்கப்பட்டுள்ள 8.5 எம்.எம் மெலிதான பேக் பேனல் இடம்பெறும். ரியல்மி 9 5ஜி எஸ்.இ 144Hz ரெஃப்ரெஷ் ரேட்டுடன் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ரியல்மி 9 சீரிஸ்

    ரியல்மி 9 5ஜி 90Hz ரெஃப்ரெஷ் ரேட் டிஸ்பிளே, மீடியா டெக் டைமென்சிட்டி 810 சிப்செட், 6ஜிபி ரேம்+ 64 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 8 ஜிபி ரேம்+128 ஜிபி ஸ்டோரேஜ் ஆகியவற்றை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    மேலும் இந்த போன் ஆண்ட்ராய்டு 12 அவுட் ஆஃப் தி பாக்ஸில் இயங்கும், 48 மெகா பிக்ஸல் மெயின் சென்சார், 2 மெகாபிக்ஸல் டெஃப்த் சென்சார், 2 மெகாபிக்ஸல் மேக்ரோ சென்சார் என்ற 3 பின்புற கேமராவையும், 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவையும், சைட் மவுட்ண்டர் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், 5000 mAh பேட்டரி, 18W சார்ஜிங் வசதி ஆகியவற்றை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
    இந்த தள்ளுபடி விற்பனை எம்.ஐ டாட்காம், எம்.ஐ ஹோம், ஃபிளிப்கார்ட், அமேசானில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ஜியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட் ஹோம் டேஸ் விற்பனை வரும் மார்ச் 7-ம் தேதி முதல் தொடங்கி மார்ச் 10 வரை நடைபெறவுள்ளது. இந்த விற்பனையில் வீட்டிற்கு தேவையான ஸ்மார்ட் சாதனங்களுக்கு தள்ளுபடி வழங்கப்படவுள்ளது.

    இந்த விற்பனையில் ஸ்மார்ட் சாதனங்களுக்கு 80 சதவீதம் வரை சலுகைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விற்பனையில் எம்.ஐ ரோபோட் வேக்கம்-மாப், எம்.ஐ ஹோம் செக்யூரிட்டி கேமரா 360 டிகிரி 1080, எம்.ஐ ஸ்மார்ட் வாட்டர் புயூரிஃபையர் (ஆர்ஓ+யூவி), எம்.ஐ 360 ஹோம் செக்யூரிட்டி கேமரா 2கே ப்ரோ, எம்.ஐ எல்.இ.டி ஸ்மார்ட் பல்ப், எம்.ஐ ஸ்மார்ட் எல்.இ.டி டெஸ்க் லேம்ப் 1 எஸ், எம்.ஐ பெட்சைட் லேம்ப் 2 மற்றும் எம்.ஐ ரவுட்டர் 4ஏ கிகாபிட் எடிஷன் ஆகியவை வழங்கவுள்ளது.

    ஸ்மார்ட் ஹோம் டேஸ் விற்பனை

    மேலும் தள்ளுபடி விற்பனை நடைபெறும் 4 நாட்களும் தினசரி மாலை 4 மணிக்கு வைப் அவுட் சேல் நடைபெறும். இதில் ஒவ்வொரு நாளும் 2 சாதனங்களுக்கு அதிக விலை குறைப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்த தள்ளுபடி விற்பனை எம்.ஐ டாட்காம், எம்.ஐ ஹோம், ஃபிளிப்கார்ட், அமேசானில் நடைபெறும்.
    ஆப்பிள் சாதனங்களில் மட்டுமே டோல்பி அட்மாஸ் வழங்கப்பட்டு வந்த நிலையில் ரியல்மி நிறுவனம் தனது இயர்போனில் இந்த தொழில்நுட்பத்தை அளித்துள்ளது.
    ரியல்மி நிறுவனம் புதிய ஒயர்லெஸ் இயர்பட்ஸை அறிமுகம் செய்துள்ளது. இதற்கு பட்ஸ் க்யூ2எஸ் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த Q2s இயர்பட்டில் டோல்பி அட்மோஸ் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. 

    இந்த டோல்பி அட்மாஸ் மூலம் ஆடியோவை கேட்கும்போது துல்லிய தரம் வெளிப்படும். இசை கேட்பவர்களால் வெவ்வேறு இசைக்கருவிகளின் துல்லியத்தையும், இசை எந்த திசையில் இருந்து வருகிறது என்பதையும் அறிய முடியும்.

    ஆப்பிள் நிறுவனம் தனது ஆப்பிள் மியூசிக்கில் டோல்பி அட்மோஸ் மியூசிக்கை அறிமுகம் செய்ததில் இருந்து மக்கள் ஆடியோ சாதனங்களில் அதிநவீன தொழில்நுட்பங்களை எதிர்பார்க்க தொடங்கினர். 

    ஆப்பிள் சாதனங்களில் மட்டுமே டோல்பி அட்மாஸ் வழங்கப்பட்டு வந்த நிலையில், ரியல்மி நிறுவனம் தனது இயர்பட்ஸிலும் இந்த தொழில்நுட்பத்தை அளித்துள்ளது.

    இந்த இயர்பட்டில் 10mm டிரைவர்கள், 5.2 ப்ளூடூத்தை கொண்டுள்ளது. ஏஏசி, எஸ்.பிசி கோடக்குகளை இந்த இயர்பட்ஸ் சப்போர்ட் செய்யும். இந்த விலை மதிப்பில் மேற்கூறிய கோடக்குகளை சப்போர்ட் செய்யும் இயர்பட்கள் வேறு கிடையாது. மேலும் இந்த இயர்பட் 88m சூப்பர் லேட்டன்சி மோடுகளை வழங்குகிறது. இந்த இயர்பட்களை ஒருமுறை சார்ஜ் செய்தால் 30 மணி நேரம் வரை பயன்படுத்தலாம்.

    இந்திய மதிப்பில் இதன் விலை ரூ.2,400-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது உலகளவில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த இயர்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ஏற்கனவே டிக்டாக்கால் ஃபேஸ்புக்கின் தினசரி பயனர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ள நிலையில் தற்போது யூடியூப்பையும் எதிர்கொள்ள டிக்டாக் இந்த அம்சத்தை அறிமுகம் செய்கிறது.
    உலகம் முழுவதும் வீடியோக்களை பதிவேற்றும் பிரபல தளமாக யூடியூப் இருந்து வருகிறது. கல்வி, விளையாட்டு, திரைப்படம் என்று அத்தனை பிரிவுகளிலும் ஏராளமான யூடியூப் வீடியோக்கள் காண கிடைக்கின்றன. 

    அதேபோன்று சிறிய அளவிலான வீடியோக்களை பதிவேற்றுவதில் டிக்டாக் பிரபலமாக இருந்து வருகிறது. டிக்டாக்கின் வளர்ச்சியால் ஃபேஸ்புக் நிறுவனமே தினசரி பயனர்களை இழக்கும் அளவிற்கு அந்நிறுவனம் ஆதிக்கம் செலுத்துகிறது.

    இந்நிலையில் யூடியூப்பிற்கும் கடும் போட்டியாக அமையும் வகையில் டிக்டாக் புதிய அம்சத்தை அறிவித்துள்ளது. இதன்படி டிக்டாக்கில் பயனர்கள் இனி 10 நிமிடங்கள் வரை வீடியோக்களை பதிவேற்றம் செய்யலாம் என அறிவித்துள்ளது.

    டிக்டாக் ஆரம்பத்தில் அறிமுகமானபோது 1 நிமிடத்திற்கு வீடியோக்களை பதிவேற்றம் செய்யும் வகையில் இருந்தது.  அதன்பின்  கடந்த ஆண்டு முதல் 3 நிமிடங்களுக்கு வீடியோக்களை பதிவேற்றுவதற்கு அனுமதி அளித்தது. இன்னிலையில் தற்போது 10 நிமிடங்கள் வரையிலான வீடியோக்களையும் டிக்டாக்கில் பதிவேற்றலாம் என கூறியுள்ளது. 

    யூடியூப், டிக்டாக்

    உலகெங்கிலும் உள்ள படைப்பாளர்களின் படைப்பாற்றலை அதிகரிக்கும் வகையில் இந்த அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

    உலகம் முழுவதும் உள்ள மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் டிக்டாக் இந்தியாவில் தடை செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 
    ×