என் மலர்
அறிந்து கொள்ளுங்கள்
ஐபிஎல் போட்டிகள் கடந்த மார்ச் 26-ம் தேதி தொடங்கிய நிலையில் வோடஃபோன் - ஐடியா நிறுவனம் 2 புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.
ஐபிஎல் போட்டிகளில் 15-வது சீசன் கடந்த மார்ச் 26-ம் தேதி தொடங்கியது. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளை காணும் வகையில் வோடஃபோன் ஐடியா நிறுவனம் 2 புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.
இதன்படி ரூ.499-க்கு ரீசார்ஜ் செய்தால் தினமும் 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள், 100 எஸ்.எம்.எஸ்கள் 28 நாட்களுக்கு வழங்கப்படும். இத்துடன் 1 வருடத்திற்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவும் வழங்கப்படுகிறது.
அதேபோல ரூ.1066-க்கு ரீசார்ஜ் செய்தால் தினம் 2 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் அழைப்புகள், தினம் 100 எஸ்.எம்.எஸ்கள் 84 நாட்களுக்கு வழங்கப்படும். இத்துடன் 1 வருடத்திற்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவும் உண்டு.
ஐபிஎல் போட்டிகளை முன்னிட்டு ஜியோ 2 புதிய ரீசார்ஜ் திட்டங்களில் 1 வருடத்திற்கான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாவை வழங்குகிறது.
ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் இன்று தொடங்குகிறது. இந்த தொடரில் 10 அணிகள் மோதவுள்ளன. இந்நிலையில் ஐபிஎல் தொடரை முன்னிட்டு ஜியோ நிறுவனம், ஹாட்ஸ்டார் டிஸ்னி+ சேவையை வழங்கும் 2 புதிய ரிசார்ஜ் திட்டங்களை அறிவித்துள்ளது.
இதன்படி ஜியோ ரூ.555 திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதில் 55 ஜிபி டேட்டா, 55 நாட்களுக்கு வழங்கப்படும். இத்துடன் 1 வருடத்திற்கு டிஸ்னி+ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவும் இலவசம். இத்துடன் ஜியோ செயலிகளுக்கும் சந்தா வழங்கப்படுகிறது. ஆனால் இந்த திட்டத்தில் இலவச அழைப்புகள், எஸ்.எம்.எஸ்கள் கிடையாது.
ஜியோ ஏற்கனவே ரூ.2999 திட்டத்தை வழங்கி வந்தது. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளை முன்னிட்டு இந்த திட்டத்துடன் ஒரு வருடத்திற்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா 1 வருடத்திற்கு இலவசமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இந்த திட்டத்தில் தினம் 2.5 ஜிபி டேட்டா 365 நாட்களுக்கு வழங்கப்படும். இத்துடன் அன்லிமிட்டெட் அழைப்புகள், 100 எஸ்.எம்.எஸ்கள் தினமும் இலவசம்.
ஸ்மார்ட்போன் மூலம் இதயம், கண் பரிசோதனைகளை செய்யும் அம்சத்தை அறிமுகம் செய்ய கூகுள் திட்டமிட்டு வருகிறது.
கூகுள் நிறுவனம் ஸ்மார்ட்போனை பயன்படுத்தி இதயம் மற்றும் கண் கோளாறு சார்ந்த பிரச்சனைகளை கண்டறியும் வசதியை உருவாக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதன்மூலம் லட்சக்கணக்கான ஆண்ட்ராய்டு பயனர்கள் தங்கள் ஆரோக்கிய நிலையை வீட்டில் இருந்தே கண்டறிய முடியும் என தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கூகுள் கூறியதாவது,
இதய துடிப்பு மற்றும் செயல்பாட்டை கண்டறியும் செயல்முறையை நாங்கள் பரிசோதனை செய்து வருகிறோம். ஸ்மார்ட்போனை நெஞ்சில் வைப்பதன் மூலம் மைக்ரோபோன்களை கொண்டு இதயம் துடிக்கும் சத்தத்தை பதிவு செய்ய முடியும். மருத்துவர்கள் ஸ்தெதஸ்கோப் உதவியை கொண்டு இதயம் மற்றும் நுரையீரல் சார்ந்த ஆரோக்கியத்தை கண்டறிகின்றனர். இதனை ஸ்மார்ட்போன் மைக்ரோபோனை கொண்டே செய்ய நாங்கள் திட்டமிட்டு வருகிறோம்.
இந்த மருத்துவ பரிசோதனையின் ஆரம்ப கட்டத்தில் நாங்கள் இருக்கிறோம். ஆனால் விரைவில் ஸ்மார்ட்போன் செயல்முறையை செயல்படுத்துவோம்.
அதேபோல ஸ்மார்ட்போன் மூலம் கண்பரிசோதனை செய்யும் அம்சத்தையும் நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.
ஸ்மார்ட்போன் கேமராக்களை கொண்டு நீரிழிவு மற்றும் நீரிழிவு அல்லாத கண் சார்ந்த பிரச்சனைகளை கண்டறிய திட்டமிட்டுள்ளோம். இதற்காக EyePACS மற்றும் Chang Gung மருத்துவமனையின் உதவியை நாடியுள்ளோம்.
எங்கள் விஞ்ஞானிகள் மருத்துவர்களின் உதவியுடன் இந்த ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்பட்டு வருகிறது என கூறப்பட்டுள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் வாட்ஸ்ஆப் பீட்டா பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருந்த இந்த அம்சம் தற்போது ஐ.ஓஎஸ் பயனர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்ஆப் நிறுவனம் தனது வாய்ஸ் மெசேஜ் சேவையில் ‘பாஸ்’ அம்சத்தை மீண்டும் அறிமுகம் செய்துள்ளது.
இதன்மூலம் வாய்ஸ் மெசேஜ் அனுப்பும்போது பயனர்கள் தாங்கள் பேசுவதை பாதியில் நிறுத்திவிட்டு, மீண்டும் சிறிது நேரம் கழித்து கூட தொடர முடியும். இதற்கு முன் ஒரு முறை நிறுத்திவிட்டால் அந்த மெசேஜ்ஜை அனுப்பிவிட வேண்டும் அல்லது டெலிட் செய்துவிட வேண்டும் என்ற இரண்டு தேர்வுகள் மட்டுமே இருந்தன.
இந்த மாத தொடக்கத்தில் வாட்ஸ்ஆப் பீட்டா பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருந்த இந்த அம்சம் தற்போது ஐ.ஓஎஸ் பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. விரைவில் ஆண்ட்ராய்டு போன் பயனர்களுக்கும் இந்த சேவை அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் வாட்ஸ்ஆப், பயனர்கள் வாட்ஸ்ஆப் அழைப்புகளில் எளிதாக இணைவதற்கு லிங்க் அனுப்பும் அம்சத்தையும் கொண்டுவரவுள்ளது. இதன்மூலம் நமது தொடர்பில் இல்லாதவர்கள் கூட அந்த லிங்கை கிளிக் செய்து அழைப்பில் இணையலாம்.
தற்போது செல்போன் பயன்படுத்தும் 10.15 சதவீதம் பேர் பி.எஸ்.என்.எல் சேவை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு இறுதியில் பிஎஸ்என்எல் 4ஜி சேவை அமல்படுத்தப்படும் என தகவல் தொடர்பு மந்திரி தேவுசின் சவுகான் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச எம்.பி குன்வார் ரேவதி ராமன் சிங், மாநிலங்களவை கேள்வி நேரத்தின்போது இந்தியாவில் பி.எஸ்.என்.எல் 4ஜி சேவை எப்போது வழங்கப்படும் என கேள்வி எழுப்பினார். இதற்கு தேவுசின் சவுகான் இந்த ஆண்டுக்குள் வழங்கப்படும் என பதிலளித்துள்ளார்.
தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் போட்டியிட்டு வரும் பி.எஸ்.என்.எல் இழப்பை சந்தித்து வருகிறது. இதை சரி செய்வதற்காக மத்திய அரசு பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் ஆகியவற்றை இணைக்க முடிவெடுத்துள்ளது. தற்போது இந்தியாவில் 10.15 சதவீதம் வாடிக்கையாளர்களை பி.எஸ்.என்.எல் வைத்துள்ளது.
இன்னும் வாடிக்கையாளர்களை விரிவு செய்யும் வகையில் 4ஜி சேவை கொண்டுவரப்படவுள்ளது.
மேலும் இந்த ஆண்டு இறுத்திக்குள் 5ஜி சேவையும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் எனவும் மந்திரி தெரிவித்துள்ளார்.
5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் முடிந்தபின், இந்த வருட சுதந்திர தினத்தின்போது 5ஜி சேவை அறிமுகம் செய்யப்படும் என ஏர்டெல் அறிவித்துள்ளது.
ஏர்டெல் நிறுவனம் அதிவேக 5ஜி சேவையை அறிமுகம் செய்ய தயாராகவுள்ளதாக தெரிவித்துள்ளது.
ஏர்டெல் நிறுவனம் தனது அதிவேக 5ஜி நெட்வொர்க் மற்றும் குறைந்த லேட்டன்ஸி திறனை காட்சிப்படுத்தியுள்ளது. இந்த லோ லேட்டன்ஸி திறன்மூலம் அதிக அளவிலான டேட்டாவை மிக குறைந்த நேரத்தில் ஸ்ட்ரீம் செய்ய முடியும்.
இத்துடன் ஐ.ஓ.டி என அழைக்கப்படும் இணைய சேவை தொடர்பான கிளவுட் கேமிங், அணிந்துகொள்ளக்கூடிய சாதனங்கள், ட்ரோன்கள் ஆகியவற்றில் 5ஜி செயல்படும் விதம் குறித்தும் காட்டப்பட்டது. 5ஜி உதவியுடன் முன்னாள் இந்திய அணியின் கிரிக்கெட் கேப்டன் கபில் தேவின் உருவம் ஹோலோகிராமில் உருவாக்கப்பட்டது. 1983 உலகக்கோப்பையின்போது கபில் தேவ் 175 ரன்கள் அடித்த காட்சி 5ஜி ஹோலோகிராம் மூலம் மறு உருவாக்கம் செய்யப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது.
ஏர்டெல்லின் 5ஜி சேவையின் மூலம் 1 ஜிபிபிஎஸ் வேகத்திற்கு மேல், 20ms லேட்டன்ஸிக்கும் குறைவாக கிடைக்கும் 4கே வீடியோக்களை 50 பயனர்கள் தடை இல்லாமல் ஸ்மார்ட்போனில் கண்டுகளித்தனர். மல்டிபிள் கேமரா ஆங்கிள், 360 டிகிரி இன் ஸ்டேடியம் காட்சி, ஷாட் அனாலிசிஸ் ஆகியவையும் 5ஜி மூலம் காட்டப்பட்டது.
5ஜி சேவைமூலம் துல்லியமான ஹோலோகிராம்களை உருவாக்கி எந்த இடத்திற்கு வேண்டுமனாலும் அனுப்ப முடியும், இணைய சந்திப்பு, இணைய நிகழ்ச்சி, நேரலை செய்திகள் ஆகியவற்றில் இந்த ஹோலோகிராம் பெறும் மாற்றத்தை ஏற்படுத்தும் என ஏர்டெல் தெரிவித்துள்ளது.
இன்னும் 2 மாதத்தில் 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் நடைபெறவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின் இந்த வருட சுதந்திர தினத்தின்போது 5ஜி சேவை அறிமுகம் செய்யப்படும் என ஏர்டெல் அறிவித்துள்ளது.
ஜிஃபை கண்டுபிடித்ததற்காக வில்ஹிட்டுக்கு வெப்பி வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்பட்டது.
இன்று இணையம் முழுவதும் GIF என்ற அசையும் படத்தின் பயன்பாடு அதிகமாக இருக்கிறது. சமூக வலைதளங்களில் நகைச்சுவையாக கமெண்ட் செய்வதற்கும், ரியாக்ட் செய்வதற்கும் ஜிஃப் படங்கள் அதிகம் பயன்பட்டு வருகின்றன. ஜிஃபை பயன்படுத்தாதவர்கள் என யாருமே இருக்க முடியாது.
இந்நிலையில் இந்த ஜிஃப் அசையும் படத்தை கண்டுபிடித்த கணிப்பொறி விஞ்ஞானி ஸ்டீபன் வில்ஹிட் கொரோனா காரணமாக கடந்த வாரம் காலமானார். அவருக்கு வயது 74. இந்த செய்தி தற்போது தான் வெளியே தெரியவந்துள்ளது. வில்ஹிட் ஜிஃப் படத்தை 1987-ம் ஆண்டு கண்டுபிடித்தார். இவரது முதல் ஜிஃப் இமேஜ் பறக்கும் விமானத்தின் படமாகும்.
அவர் அப்போது கண்டுபிடித்த ஜிஃப் இன்று இணைய உலகில் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது.
ஜிஃபை கண்டுபிடித்ததற்காக வில்ஹிட்டுக்கு வெப்பி வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்பட்டது.
இந்த அறிவிப்புக்கு பின் பங்குச்சந்தையில் ஆப்பிள் நிறுவனத்தின் மதிப்பு வெகுவாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆப்பிள் நிறுவனம் புதிய ஹார்ட்வேர் சப்ஸ்கிரிப்ஷன் சேவையை தொடங்கவுள்ளது.
இதன்மூலம் ஐபோன், ஐபேட், இயர்பட்ஸ் உள்ளிட்ட ஆப்பிள் சாதனங்களை பயன்படுத்த விரும்புபவர்கள் அதனை சொந்தமாக விலைக்கு வாங்காமல், மாதம் சில தொகை என சந்தா கட்டி பயன்படுத்திகொள்ள முடியும். சந்தா முடிந்தவுடன் சாதனங்களை திருப்பி தர வேண்டும்.
இந்த திட்டம் தற்போது தயாரிப்பு நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மூலம் வசதியில்லாதவர்கள் கூட ஆப்பிள் சாதனங்களை பயன்படுத்த முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே ஆப்பிள் நிறுவனம் ஐபோன் அப்கிரேட் திட்டம் என்ற சேவையை வழங்கி வருகிறது. இதன்படி வாடிக்கையாளர்கள் 12 மாதங்களுக்கு குறிப்பிட்ட தொகையை கட்டி பழைய ஐபோனை புதிய ஐபோனாக அப்கிரேட் செய்துகொள்ள முடியும். இந்த திட்டம் போல ஹார்ட்வேர் திட்டமும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அறிவிப்புக்கு பின் பங்குச்சந்தையில் ஆப்பிள் நிறுவனத்தின் மதிப்பு வெகுவாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏர்டெல்லின் இந்த சேவையுடன் 5000-க்கும் மேற்பட்ட செயலிகள், கேம்ஸ்களும் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.
ஏர்டெல் நிறுவனம் தனது ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பாக்ஸ் விலையை ரூ.2,499-ல் இருந்து ரூ.2000-ஆக குறைத்துள்ளது. இந்த விலை புதிதாக ஏர்டெல் டிஜிட்டல் டிவி கனெக்ஷன் வாங்குபவர்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை குறைப்புடன் டிஸ்னி+ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் வீடியோ, சோனி லிவ், இரோஸ் நவ், ஹங்காமா மற்றும் இதர ஓ.டி.டி சேவைகளுக்கான சந்தாவையும் ஏர்டெல் இலவசமாக வழங்குகிறது.
இந்த விலை குறைப்பு குறைந்த காலசலுகையாக மட்டுமே வழங்கப்படவுள்ளது. இந்த எக்ஸ்ட்ரீம்பாக்ஸ் ஆண்ட்ராய்டு 9.0 ஓ.எஸ்ஸில் இயங்குகிறது. இதில் 5000-க்கும் மேற்பட்ட செயலிகள், கேன்ஸ்கள் தரப்பட்டுள்ளன. மேலும் இதில் க்ரோம்கேஸ்ட் வசதியும் உண்டு.
பிக்பாஸ்கெட் 20 நிமிடத்தில் டெலிவரி செய்யும் சேவையை வழங்கி வந்தாலும், இந்த புதிய சேவையில் முக்கிய மாற்றம் ஒன்றை செய்துள்ளது.
பிக்பாஸ்கட் நிறுவனம் பி.பி எக்ஸ்பிரஸ் சேவையை அடுத்த மாதம் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த சேவையின்படி வாடிக்கையாளர்களுக்கு 1 மணி நேரத்திற்குள் மளிகை பொருட்கள் டெலிவரி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிக்பாஸ்கெட் பிபி நவ் என்ற சேவையையும் வழங்கி வருகிறது. இதில் 20 நிமிடங்களில் மளிகை பொருட்கள் டெலிவரி செய்யப்படுகின்றன. ஆனால் இந்த சேவையின் கீழ் 3,500 வகையான பொருட்கள் வரை மட்டுமே டெலிவரி செய்யப்பட்டு வந்தன. தற்போது தொடங்கப்படவுள்ள பிபி எக்ஸ்பிரஸ் சேவையின் கீழ் 8000 வகையான பொருட்கள் டெலிவரி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பிபி நவ் சேவையில் 450 ரூபாய்க்கு மேல் பொருட்களை வாங்குபவர்களுக்கு மட்டும் டெலிவரி செய்யப்பட்டு வந்த நிலையில், பிபி எக்ஸ்பிரஸில் 800 ரூபாய்க்கு மேல் பொருட்கள் வாங்குபவர்களுக்கு மட்டுமே டெலிவரி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யூடியூப்பில் நிலவி வரும் போலியான மருத்துவம் சார்ந்த தகவல்களை கட்டுப்படுத்த இந்த அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
யூடியூப் உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தப்படும் வீடியோ தளமாக உள்ளது. யூடியூப்பில் ஏராளமான வீடியோக்கள் காணக்கிடைக்கின்றன.
குறிப்பாக ஆரோக்கியம் சார்ந்த வீடியோக்கள் கோடிக்கணக்கில் யூடியூப்பில் இருக்கிறது. இவற்றில் பெரும்பாலானவை அதிகாரப்பூர்வ தகவல் கிடையாது. யூடியூப் பயனர்கள் பலர் தங்களுக்கு தெரிந்த ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களையே யூடியூப்பில் அப்லோட் செய்கின்றனர். இதனை பின்பற்றும் பார்வையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பும் உண்டு. இந்த பிரச்சனையை சரிசெய்ய யூடியூப் இரண்டு புதிய அம்சங்களை கொண்டு வந்துள்ளது.
இதன்படி யூடியூப்பில் ‘Health Source information panels' என்ற புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த அம்சத்தில் ஒவ்வொரு வீடியோவுக்கும் கீழ்அந்த வீடியோ அதிகாரப்பூர்வ மருத்துவ நிபுணர்கள், நிறுவனங்களிடம் இருந்து பதிவு செய்யப்பட்டுள்ளதா என காட்டும். ஒரு மருத்துவ வீடியோவில் கூறப்பட்ட தகவல்கள் உண்மை தானா என்பதையும் இந்த புதிய அம்சத்தில் வழங்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்.
அதேபோல ‘Health content shelves' என்ற புதிய அம்சமும் இடம்பெற்றுள்ளது. இந்த அம்சத்தின்படி நாம் ஆரோக்கியம் குறித்த வீடியோக்களை தேடினால், அதிகாரப்பூர்வ சேனல்களில் இருந்து வெளியிடப்பட்டுள்ள வீடியோக்களை மட்டுமே யூடியூப் முன்னிலைப்படுத்தி காட்டும். உதாரணமாக நாம் மூட்டுவலி நிவாரணம் என்று தேடினால் அதிகாரப்பூர்வமாக மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட மருத்துவ செயல்முறைகள் மட்டுமே இதில் காட்டப்படும்.
சமீபத்தில் தந்தையான ஆண் ஊழியர்களும் தனது மனைவி மற்றும் குழந்தையை பார்த்துகொள்ள 8 வாரம் விடுமுறை எடுத்துகொள்ளலாம் என ஏர்டெல் அறிவித்துள்ளது.
ஏர்டெல் நிறுவனம் இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது. அந்நிறுவனம் தனது பெண் ஊழியர்கள் யாருக்கேனும் குழந்தை பிறந்தால் அவர்களுக்கு மாதம் ரூ.7000 உதவித்தொகை தரப்போவதாக அறிவித்துள்ளது.
குழந்தைக்கு 18 மாதங்கள் ஆகும் வரை ரூ.7000 உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தனது பெண் ஊழியர்கள் குழந்தையை தத்தெடுத்தாலும் இந்த தொகை வழங்கப்படும் என கூறியுள்ளது.

இதைத்தவிர பெண் ஊழியர்கள் 26 வாரங்கள் மகப்பேறு விடுமுறை எடுத்துகொள்ளலாம், அதன்பிறகு 24 வாரங்களுக்கு தாங்கள் விரும்பும் நேரங்களில் வேலை செய்துகொள்ளலாம் என தெரிவித்துள்ளது. இத்துடன் ஒவ்வொரு 3 மாதங்களுக்கு 2 நாட்கள் என ஒரு வருடத்திற்கு கூடுதல் விடுமுறையும் வழங்கப்படவுள்ளது.
அதேபோல சமீபத்தில் தந்தையானவர்களும் தனது மனைவி மற்றும் குழந்தையை பார்த்துகொள்ள 8 வாரங்களுக்கு விடுமுறை எடுத்துகொள்ளலாம் அறிவித்துள்ளது.






