என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    உலகம் முழுக்க இன்று சமூக வலைத்தள தினம் கடைபிடிக்கப்படுகிறது. சமூக வலைத்தள வாசிகள் பலருக்கும் தெரிந்திராத சுவாரஸ்ய தகவல்களை தொடர்ந்து பார்ப்போம். #SocialMediaDay




    தொழில்நுட்ப யுகத்தின் அகன்ற கண்டுபிடிப்புகளில் நமக்கு அதிகம் பயன்தரும் சிலவற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாக சமூக வலைத்தளங்கள் இருக்கின்றன.

    இணைய வசதி மட்டும் இருந்தால் உலகில் உயிருடன் வாழும் எவருடனும் நட்பு கொள்ள வைக்கும் வலைத்தளங்களாக சமூக வலைத்தளங்கள் இருக்கின்றன. ஆரம்பத்தில் கம்ப்யூட்டரில் அமர்ந்து வலைத்தளங்களில் உலவி, சில மணி நேரங்களில் புதிய நட்பு வட்டாரத்தை டிஜிட்டல் உலகில் உருவாக்கக்கூடிய நிலை இருந்து வந்தது. 

    ஆனால் ஸ்மார்ட்போன் வரவுக்கு பின், சமூக வலைத்தளங்கள் நம் உள்ளங்கையில் வந்துவிட்டது. ஸ்மார்ட்போன் ஆப் மூலம் நட்புகளை கடல் கடந்தும் காதல் செய்ய இவை பாலமாக இருக்கின்றன. ஃபேஸ்புக், ட்விட்டர் என சமூக வலைத்தளங்களின் எண்ணிக்கை நீளும் தருவாயில் உலக மக்கள் தொகையில் குறைந்தபட்சம் 30% பேர் இவற்றில் நீந்துகின்றனர்.

    மக்கள் அதிகம் பயன்படுத்த துவங்கினால் கொண்டாட்டம் என்ற வகையில், இன்று உலகம் முழுக்க சமூக வலைத்தள தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்நாளில் சமூக வலைத்தளம் குறித்து பலரும் அறிந்திராத சுவாரஸ்ய தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.


    கோப்பு படம்

     - உலக மக்கள் தொகை சுமார் 760 கோடியாக இருக்கும் நிலையில், இணையத்தை பயன்படுத்துவோர் மட்டும் சுமார் 420 கோடி என கண்டறியப்பட்டு இருக்கிறது.

    - உலகில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை சுமார் 300 கோடி ஆகும்.

    - உலகின் பிரபல பிராண்டுகள் குறைந்தபட்சம் இரண்டுக்கும் அதிகமான சமூக வலைத்தள சேனல்களை பயன்படுத்துகின்றன.

    - வியாபாரம் செய்வோரில் 81% பேர் ஏதேனும் வகையில் வியாபார வளர்ச்சி காரணங்களுக்காக சமூக வலைத்தளத்தை பயன்படுத்தி வருகின்றனர். 

    - 2017-ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இருந்து 2017 மூன்றாவது காலாண்டு வரை மட்டும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 12.1 கோடியாக அதிகரித்தது. அந்த வகையில் ஒவ்வொரு 15 நொடியிலும் ஒருவர் சமூக வலைத்தளத்தில் சேர்கின்றனர்.

    - ஃபேஸ்புக் மெசன்ஜர் மற்றும் வாட்ஸ்அப் செயலிகளில் தினமும் 6000 கோடி குறுந்தகவல்கள் தினசரி அடிப்படையில் பரிமாறப்படுகின்றன.
     

    கோப்பு படம்

    - சமூக வலைத்தள விளம்பரங்களில் மட்டும் 2017-ம் ஆண்டு சுமார் 4000 கோடி டாலர்கள் செலவிடப்பட்டிருக்கிறது.

    - உலகின் 38 சதவிகித நிறுவனங்கள் 2015-ம் ஆண்டு வாக்கில் சமூக வலைத்தள செலவினங்களை சுமார் 20 சதவிகிதம் வரை அதிகரித்து இருக்கின்றன, இது முந்தைய ஆண்டை விட 13 சதவிகிதம் அதிகம் ஆகும்.

    - ட்விட்டரில் குறிப்பிட்ட பிரான்டு மீது புகார் தெரிவிப்போர் அந்நிறுவனத்தில் இருந்து ஒரு மணி நேரத்திற்குள் பதில் கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

    - ஃபேஸ்புக்கில் இருக்கும் வீடியோக்கள் தினமும் சராசரியாக 800 கோடி முறை பார்க்கப்படுகின்றன.

    - ஸ்னாப்சாட் தளத்திலும் வீடியோக்கள் தினமும் சுமார் 800 கோடி முறை  பார்க்கப்படுகின்றன.

    - 2018-ம் ஆண்டு மொத்த ஆன்லைன் தரவுகளில் 74 சதவிகிதம் வீடியோவாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

    உலகில் சமூக வலைத்தளங்களின் பயன்பாடு மற்றும் இத்துறை சார்ந்த வளர்ச்சி பல்வேறு பரிணாமங்களை கடந்து வருகிறது. உலக அரசியல் வரை ஆதிக்கம் செலுத்தும் சமூக வலைத்தளங்கள் பல்வேறு நன்மைகளை நமக்கு வழங்கினாலும், இவற்றால் நமக்கு ஏற்படும் அபாயங்களும் அதிகமாவதை அனைவரும் உணர வேண்டிய காலக்கட்டம் இது. #SocialMediaDay 
    ஜியோபோனில் பிரபல கூகுள் அம்சங்கள் வழங்கப்பட இருக்கிறது. இதனால் ஜியோபோன் பயன்படுத்துவோர் விரைவில் கூகுள் சேவைகளை பயன்படுத்த முடியும்.
      



    ரிலையன்ஸ் ஜியோவின் ஃபீச்சர்போனான ஜியோபோன் விரைவில் பிரபல கூகுள் சேவைகளான கூகுள் அசிஸ்டண்ட், கூகுள் மேப்ஸ், யூடியூப் மற்றும் கூகுள் சர்ச் உள்ளிட்டவை பெற இருக்கிறது.

    ஜியோபோன் கைஓஎஸ் (KaiOS) இயங்குதளம் கொண்டு இயங்குகிறது. அமெரிக்காவை சேர்ந்த கைஓஎஸ் டெக்னாலஜிஸ் நிறுவனம் ஜியோபோனுக்கான இயங்குதளத்தை வழங்குகிறது. அந்த வகையில் கைஓஎஸ் நிறுவனம் கூகுளுடன் இணைந்து பிரபல கூகுள் சேவைகளை கைஓஎஸ் பயனர்களுக்கு வழங்க இருக்கின்றது.

    கூகுள் நிறுவனம் கைஓஎஸ் நிறுவனத்தில் சுமார் 2.2 கோடி அமெரிக்க டாலர்களை முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது. இது அடுத்த தலைமுறை பயனர்களிடம் இன்டர்நெட் வசதியை கொண்டு சேர்க்க உதவியாக இருக்கும்.



    “இந்த முதலீடை பயன்படுத்தி கைஓஎஸ் இயங்குதளத்தை வேகமாக வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வதோடு, உலகின் மற்ற சந்தைகளிலும் வெளியிட்டு ஸ்மார்ட் ஃபீச்சர் போன்களின் மூலம் இதுவரை இணையம் பயன்படுத்தாதோருக்கு இன்டர்நெட் வசதியை கொண்டு சேர்க்க முடியும்,” என கைஓஎஸ் டெக்னாலஜிஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரியான செபஸ்டியன் கோட்வில் தெரிவித்திருக்கிறார்.

    கைஓஎஸ் இயங்குதளம் இணையம் சார்ந்த தளம் ஆகும். இந்த இயங்குதளம் ஹெச்.டி.எம்.எல்.5 (HTML5), ஜாவாஸ்க்ரிப்ட் (JavaScript) மற்றும் சி.எஸ்.எஸ். (CSS) ஓபன் ஸ்டான்டர்டுகளை பயன்படுத்துகிறது. இந்தியாவில் 2018 ஜனவரி மாத வாக்கில் வெளியிட்டப்பட்ட நிலையில், இந்த இயங்குதளம் மொபைல் ஓஎஸ் சந்தையில் 15% பங்குகளை பெற்றிருக்கிறது. 

    டிவைஸ் அட்லஸ் வெளியிட்டிருக்கும் சமீபத்திய மொபைல் வெப் இன்டலிஜென்ஸ் ஆய்வு அறிக்கையின் படி கைஓஎஸ் இயங்குதளம் இந்தியாவில் ஆப்பிள் ஐஓஎஸ்-ஐ பின்னுக்குத்தள்ளி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மொபைல் போன்களில் அதிகம் பயன்படுத்தப்படும் இயங்குதளமாக ஆன்ட்ராய்டு இருக்கிறது.



    ஜியோபோன் சிறப்பம்சங்கள்:

    - 2.4 இன்ச் QVGA TFT டிஸ்ப்ளே
    - டூயல் கோர் பிராசஸர்
    - 512 எம்பி ரேம்
    - 4 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - 2 எம்பி பிரைமரி கேமரா
    - 0.3 எம்பி செல்ஃபி கேமரா
    - 4ஜி வோல்ட்இ
    - 2000 எம்ஏஹெச் பேட்டரி

    வாய்ஸ் கமான்ட் வசதி கொண்ட ஜியோபோனில் 22 இந்திய மொழிகளில் பயன்படுத்த முடியும். இத்துடன் இந்த மொபைலில் ஜியோ செயலிகள் ஏற்கனவே பிரீஇன்ஸ்டால் செய்யப்படுகிறது.
    வாட்ஸ்அப் செயலியில் பணப்பரிமாற்றம் செய்யும் வசதி நீண்ட காலமாக எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த அம்சம் தாமதமாக இது தான் காரணமாக கூறப்படுகிறது.




    வாட்ஸ்அப் செயலியில் பேமென்ட்ஸ் எனப்படும் பணப்பரிமாற்றம் செய்யும் வசதி பீட்டா முறையில் குறிப்பிட்ட வாடிக்கைாயளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் தற்சமயம் சுமார் பத்து லட்சம் பேர் வாட்ஸ்அப் செயலியின் பணப்பரிமாற்றம் செய்யும் அம்சத்தை சோதனை செய்து வருகின்றனர். 

    உலகம் முழுக்க சுமார் 150 கோடி பேர் வாட்ஸ்அப் பயன்படுத்தும் நிலையில், இந்தியாவில் மட்டும் சுமார் 20 கோடி பேர் வாட்ஸ்அப் சேவையை பயன்பத்துகின்றனர். சமீபத்தில் வாட்ஸ்அப் பணப்பரிமாற்றங்களை மேற்கொள்ள செயலியின் கொள்கைகள் மற்றும் விதிமுறைகளை மாற்றி, எளிய நடையில் பணப்பரிமாற்றம் செய்யும் அம்சம் எவ்வாறு வேலை செய்யும் என்பதை தெரிவித்து இருந்தது.

    இந்நிலையில், வாட்ஸ்அப் செயலியின் பணப்பரிமாற்றம் செய்யும் வசதி அனைவருக்கும் வழங்குவதற்கு தேசிய பணப்பட்டுவாடா நிறுவனம் தடையாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை சார்பில் எழுப்பப்பட்டு இருக்கும் சந்தேகங்களுக்கு தேசிய பணப்பட்டுவாடா நிறுவனம் பதில் அளிக்காமல் இருப்பதாக கூறப்படுகிறது.



    வாட்ஸ்அப் செயலியில் பணப்பரிமாற்றம் செய்ய தேசிய பணப்பட்டுவாடா நிறுவனம் ஒருங்கிணைந்த பணப்பரிமாற்ற மையத்தை (UPI) வழங்குகிறது. புதிய யுபிஐ சார்ந்த சேவை ஆர்.பி.ஐ நிர்ணயித்திருக்கும் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை விதிகளுக்கு பொருந்தும் வகையில் இருக்கிறதா என்ற வகையில் மத்திய தொழில்நுட்ப துறை சந்தேகங்கள் அமைந்திருக்கிறது.

    வாட்ஸ்அப் செயலியில் பணப்பரிமாற்றம் செய்வதற்கான அனுமதியை தேசிய பணப்பட்டுவாடா நிறுவனம் (NPCI) எப்போது வழங்கும் என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை. இத்துடன் வாட்ஸ்அப் பணப்பரிமாற்ற சேவை ஆர்.பி.ஐ. விதிகளுக்கு உட்படும் வகையில் இருக்கிறதா என்பது குறித்தும் எவ்வித தகவலும் இல்லை.

    முதற்கட்டமாக பீட்டா பயனர்களுக்கு வாட்ஸ்ப் பேமென்ட்ஸ் அம்சம் குறைந்த எண்ணிக்கையிலான வங்கி சப்போர்ட் உடன் வழங்கப்பட்டு இருக்கிறது.
    2018 செப்டம்பர் நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் ஆறு புதிய சாதனங்களை வெளியிட இருப்பதாக பிரபல ஆப்பிள் வல்லுநர் மிங் சி கியூ தெரிவித்திருக்கிறார்.





    ஆப்பிள் வல்லுநரான மிங் சி கியூ 2018 ஆப்பிள் வெளியீடு குறித்த விவரங்களை வெளியிட்டிருக்கிறார். அதன்படி இந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம் புதிய வடிவமைப்பு, பெரிய திரை கொண்ட வாட்ச், குறைந்த விலை மேக்புக் ஏர், ஃபேஸ் ஐடி வசதி கொண்ட ஐபேட் உள்ளிட்ட சாதனங்களை அறிமுகம் செய்யலாம் என தெரிவித்திருக்கிறார்.

    2019 ஐபோன்களில் முற்றிலும் புதிய அம்சங்கள் வழங்கப்படலாம் என்றும் எல்சிடி டிஸ்ப்ளே கொண்ட ஐபோன்களின் விற்பனை மற்ற மாடல்களை விட அதிகமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். 

    இத்துடன் ஃபேஸ் ஐடி தொழில்நுட்பம் கொண்ட புதிய ஐபேட், விலை குறைந்த மேக்புக் ஏர், பெரிய டிஸ்ப்ளே கொண்ட புதிய ஆப்பிள் வாட்ச்களை ஆப்பிள் அறிமுகம் செய்யலாம் என்றும், 2018 ஐபோன்களில் இரண்டாம் தலைமுறை ஐபோன் X, 6.5 இன்ச் திரை கொண்ட ஐபோன் X பிளஸ் மற்றும் 6.1 இன்ச் ஐபோன் என மூன்று மொபைல் போன்களை அறிமுகம் செய்யலாம்.

    6.1 இன்ச் ஐபோன் விற்பனை இந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் துவங்கும் பட்சத்தில் இரண்டாம் தலைமுறை ஐபோன் X மற்றும் ஐபோன் X பிளஸ் மாடல்களின் விற்பனையும் இதே காலகட்டத்தில் துவங்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் 2018 ஐபோன் மாடல்களில் அனைத்தும் செப்டம்பர் மாத வாக்கில் விற்பனை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அமெரிக்க சந்தையில் 6.1 இன்ச் ஐபோன் வாங்குவோர் தங்களது பழைய ஐபோன்களை வழங்கி, புதிய மாடலுக்கு அப்கிரேடு செய்து கொள்ளக்கூடிய வகையில் சலுகை வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. அந்த வகையில் 6.1 இன்ச் ஐபோன் விலை மற்ற மாடல்களை விட குறைவாக இருக்கும் என கூறப்படுகிறது. 
    சாம்சங் நிறுவனம் பெற்றிருக்கும் புதிய காப்புரிமையில் முழுமையான பெசல்-லெஸ் ஸ்கிரீன் கொண்ட ஸ்மார்ட்போனினை உருவாக்க அனுமதி பெற்றிருக்கிறது.




    ஸ்மார்ட்போன் சந்தையில் 2018-ம் ஆண்டில் பல்வேறு ஸ்மார்ட்போனில் மிகவும் மெல்லிய பெசல்கள் கொண்டிருக்கின்றன. பெசல்-லெஸ் டிஸ்ப்ளே தொழில்நுட்பத்தை இதுவரை விவோ மற்றும் ஒப்போ போன்ற பிரான்டுகள் வெற்றிகரமாக செய்து முடித்திருக்கும் நிலையில், சாம்சங் இந்த பட்டியலில் இணைந்திருக்கிறது.

    சமீபத்தில் சாம்சங் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு இருக்கும் காப்புரிமையில் முழுமையான பெசல்-லெஸ் ஸ்மார்ட்போனினை உருவாக்க சாம்சங் திட்டமிட்டிருப்பது தெரியவந்துள்ளது. ஆகஸ்டு 24, 2017-இல் சாம்சங் பதிவு செய்த காப்புரிமையானது ஜூன் 21, 2018-ம் தேதி சர்வதேச காப்புரிமை அலுவலகத்தால் உறுதி செய்யப்பட்டது. 

    சாம்சங் பதிவு செய்திருக்கும் காப்புரிமையில் நான்கு ஸ்ட்ரிப்கள் டிஸ்ப்ளேவின் நான்கு ஓரங்களிலும் இணைக்கக் கூடியதாக இருக்கிறது. இந்த ஸ்ட்ரிப்கள் மெட்டல், அலுமினியம் மூலம் உருவாக்கவோ அல்லது பேட்டன் செய்யப்பட்ட மரத்தை பயனர் மாற்றக்கூடிய சாதனங்களாகவோ மாற்ற முடியும்.

    இதே போன்ற வடிவமைப்பு தொலைகாட்சிகள், மானிட்டர்கள் மற்றும் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் மற்ற சாதனங்களிலும் பயன்படுத்த முடியும் என கூறப்படுகிறது. இத்துடன் இதே போன்ற வடிவமைப்பு ஹூவாய் ஏற்கனவே பயன்படுத்துகிறது. மேலும் இதில் டஸ்ட் மற்றும் வாட்டர் ப்ரூஃப் வசதியை வழங்குகிறது. 

    எனினும் சாம்சங் பதிவு செய்திருக்கும் காப்புரிமையில் இந்த அம்சங்கள் வழங்கப்படுவது குறித்து எவ்வித தகவலும் இல்லை.
    மசாசூட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தின் கம்ப்யூட்டர் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆய்வகம் இணைந்து, மனிதர்கள் மனதில் நினைப்பதை செய்யும் ரோபோடிக் தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளன.

     



    மசாசூட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தின் (எம்.ஐ.டி.) கணினி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆய்வக பிரிவு சார்பில் கண்டறியப்பட்டு இருக்கும் புதிய தொழில்நுட்பம் மக்கள் ரோபோட்களுடன் தகவல் பரிமாற்றம் செய்ய புதிய வழிமுறையை கண்டறிந்துள்ளனர்.

    அந்த வகையில் ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கும் புதிய தொழில்நுட்பம் மின்னலை மற்றும் கை அசைவுகளை கொண்டு ரோபோட்களுடன் தகவல் பரிமாற்றம் செய்ய முடியும். முந்தைய ஆய்வுகளில் ரோபோட்களை மிக எளிமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வைக்க முடிந்தது.

    இந்நிலையில், புதிய அப்டேட் கொண்டு ரோபோட்களால் மேலும் பல்வேறு பணிகளை செய்து முடிக்க முடியும், இதனால் ரோபோட்களை குழுவாகவும் இயக்க முடியும். 

    புதிய தொழில்நுட்பம் எவ்வாறு இயங்குகிறது என்பதை எம்.ஐ.டி.-யின் கணினி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆய்வக பிரிவு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், ரோபோட் நடவடிக்கைகளில் பிழையை மனிதன் கண்டறிந்தால் ரோபோட் குறிப்பிட்ட பணியை உடனடியாக நிறுத்திவிட்டு, மனிதரின் உதவியை கேட்கும்.



    கை அசைவுகளை கொண்டு ரோபோட்டில் இருக்கும் ஆப்ஷன்களை ஸ்கிரால் செய்து, ரோபோட் செய்யும் பிழையை திருத்த முடியும். என எம்.ஐ.டி. வலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. 

    இதுபோன்ற அதிநவீன திட்டத்தை உருவாக்க, எம்.ஐ.டி. குழுவினர் மூளையின் நடவடிக்கையை கண்டறிய எலெக்ட்ரோ-என்சி-ஃப்ளோகிராஃபி-யையும் (electroencephalography - EEG) உடல் தசை அசைவுகளை கண்டறிந்து கொள்ள எலெக்ட்ரோ-மியோகிராஃபியை (electromyography - EMG) பயன்படுத்தியுள்ளனர். இரண்டு தொழில்நுட்பங்களும் வெவ்வேறு அம்சங்களை கொண்டிருந்தாலும், இவை இரண்டும் இணையும் போது புதிதாய் பயன்படுத்துவோருக்கு மிக எளிமையான வழிமுறையாக இருக்கும் என வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    முன்னதாக எலெக்ட்ரோ-மியோகிராஃபியை பயன்படுத்தும் போது இருந்ததை விட எலெக்ட்ரோ-என்சி-ஃப்ளோகிராஃபி மற்றும் எலெக்ட்ரோ-மியோகிராஃபியை இணைக்கும் போது மனிதன் மற்றும் ரோபோட்களிடையே மிக இயற்கையான தகவல் பரிமாற்றத்தை மேற்கொள்ள முடியும். உடல் தசை அசைவுகளை புரிந்து கொள்ளக்கூடிய அம்சம் மூலம் ஜெஸ்ட்யூர்களை கொண்டு ரோபோட்களிடம் முன்பை விட சிறப்பாக பணியை செய்ய வைக்க முடியும். என எம்.ஐ.டி. கணினி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப மையத்தின் இயக்குனர் டேனியல் ரஸ் தெரிவித்துள்ளார். 

    முன்னதாக இந்த தொழில்நுட்பம் மக்கள் பொதுவாக நினைக்கும் தகவல்களை புரிந்து கொள்ளாமல் இருக்கும்படி கட்டுப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் என்ன நினைக்க வேண்டும் என்பதை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது. இந்த இயந்திரம், ஒருவருக்கு ஏற்ற வகையில் மாற்றிக் கொள்ளும் என இந்த திட்டத்தில் பணியாற்றிய ஜோசப் டெல்பிரெடோ தெரிவித்தார்.

    புதிய தொழில்நுட்பம் எவ்வாறு இயங்குகிறது என்பதை விளக்கும் வீடியோவை கீழே காணலாம்..,


    நெதர்லாந்து நாட்டின் சர்வதேச விமான நிலையத்தில் பிட்காயின் ஏடிஎம் நிறுவப்பட்டுள்ளது. இதை கொண்டு யூரோக்களை க்ரிப்டோகரென்சிகளாக மாற்ற முடியும்.




    நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் பிட்காயின் ஏடிஎம் இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி, யூரோக்களை க்ரிப்டோகரென்சிக்களாக மாற்றிக் கொள்ள முடியும். ஸ்கிபோல் விமான நிலையம் வரும் பயணிகள் இனி தங்களது ரொக்கத்தை பிட்காயின் மற்றும் எத்திரியம்களாக மாற்ற முடியும்.

    சோதனை அடிப்படையில் ஆறு மாத காலத்திற்கு நிறுவப்பட்டிருக்கும், இந்த ஏடிஎம் பயணாளிகளின் வரவேற்புக்கு ஏற்ற வகையில் நீ்ட்டிப்பது குறித்த முடிவு எடுக்கப்பட இருக்கிறது. ஐரோப்பியாவில் இது போன்ற ஏடிஎம் பெறும் முதல் விமான நிலையம் இது என ஸ்கிபோல் தெரிவித்திருக்கிறது. 

    ஸ்கிபோல் விமான நிலையத்தின் வாடிக்கையாளர் சேவை பிரிவு தலைவர் தன்ஜா டிக் கூறும் போது, “பயணாளிகளுக்கு தலைசிறந்த சேவையை வழங்க ஸ்கிபோல் தொடர்ந்து புதுவித மற்றும் வித்தியாச வழிமுறைகளை வழங்க முயற்சிக்கிறது என தெரிவித்தார். 
    “பிட்காயின் ஏடிஎம் மூலம் பயணர்கள் தங்களின் யூரோக்களை சர்வதேச க்ரிப்டோகரென்சிக்களாக மாற்றிக் கொள்ள முடியும். இது பலருக்கும் பயன்தரும் வகையில் இருக்கும்.” என அவர் மேலும் தெரிவித்தார். 



    புதிய ஏடிஎம் இயந்திரம் பேலெக்ஸ் டேட்டா சொல்யூஷன்ஸ் பிவி (ByeleX Data Solutions BV) எனும் தட்சு நிறுவனத்துடன் இணைந்து நிறுவப்பட்டிருக்கிறது. இந்நிறுவனம் வியாபாரங்களுக்கு தேவையான க்ரிப்டோகரென்சி சேவைகளை வழங்கி வருகிறது.

    உலகில் முதல் முறையாக க்ரிப்டோகரென்சி பரிமாற்றங்களை மேற்கொள்ளும் வசதியை ஆஸ்திரேலிய விமான நிலையம் அறிமுகம் செய்தது. மே மாத வாக்கில் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் விமான நிலையத்தில் முதல் முறையாக க்ரிப்டோகரென்சி ஏடிஎம் இயந்திரம் நிறுவப்பட்டது. 

    பல்வேறு வியாபார நிறுவனங்களும் விர்ச்சுவல் கரென்சிக்களை பரிமாற்றங்களுக்கு பயன்படுத்த துவங்கிவிட்ட நிலையில், க்ரிப்டோகரென்சிக்களை கொண்டே உலகை சுற்றி வருவது மிகவும் எளிமையாகிவிட்டது.
    உலகில் 5ஜி சேவை வழங்கப்படும் வேளையில், இந்தியாவிலும் 5ஜி சேவையை அறிமுகம் செய்ய பி.எஸ்.என்.எல். பணியாற்றி வருகிறது.




    உலகின் மற்ற டெலிகாம் நிறுவனங்களுடன் அதிவேக 5ஜி சேவையை வழங்க பி.எஸ்.என்.எல். திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பத்தை வழங்குவதற்கான உள்கட்டமைப்புகளை உருவாக்கும் பணிகளில் பி.எஸ்.என்.எல். ஈடுபட்டுள்ளது. 

    இதற்கென நோக்கியா, இசட்.டி.இ மற்றும் கொரியன்ட் போன்ற நிறுவனங்களுடன் பி.எஸ்.என்.எல். இணைகிறது. 2020-ம் ஆண்டு வாக்கில் 5ஜி சேவைகளை துவங்க பி.எஸ்.என்.எல். திட்டமிட்டுள்ளது. சர்வதேச சந்தையில் 5ஜி வெளியாகும் போதே இந்தியாவிலும் பி.எஸ்.என்.எல். 5ஜி சேவைகள் வழங்கப்படும் என பி.எஸ்.என்.எல். நிறுவன தலைமை பொது மேலாளர் அனில் ஜெயின் தெரிவித்தார்.

    முன்னதாக பி.எஸ்.என்.எல். போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு தபால் முலம் கட்டணத்திற்கான பில்கள் அனுப்பப்படுகிறது. சென்னையில் 5.5 லட்சம் தரைவழி டெலிபோன்களும், 3.5 லட்சம் போஸ்ட்பெய்டு மொபைல் போன் வாடிக்கையாளர்களும் உள்ளனர்.

    இந்த நிலையில் மாத கட்டண விவரத்தை தபால் வழியாக அனுப்புவதை பி.எஸ்.என்.எல். நிறுத்த முடிவு செய்துள்ளது. அதற்கு பதிலாக வாடிக்கையாளர்களின் ‘பில்’ விபரத்தை இ.மெயில் வழியாக, இ-பில்லாக அனுப்ப திட்டமிட்டு ‘கோ கிரீன்’ என்ற புதிய முறையை பி.எஸ்.என்.எல். அறிமுகம் செய்துள்ளது.


    கோப்பு படம்

    இது பற்றி பி.எஸ்.என்.எல். துணை பொது மேலாளர் விஜயா கூறியதாவது:-

    இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் ‘‘கோகிரீன்’’ என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதில் பேப்பர் பில்லுக்கு பதிலாக வாடிக்கையாளர்களின் இ-மெயில் முகவரிக்கு ‘பில்’ அனுப்பப்படும்.

    அழிக்காமல் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இத்திட்டத்தை பின்பற்றுவோருக்கு ‘பில்’ தொகையில் ரூ.10 தள்ளுபடி செய்யப்படும். இதுவரையில் 40 ஆயிரம் பேர் இந்த திட்டத்தில் பதிவு செய்துள்ளனர்.

    வாடிக்கையாளர்கள் விரும்பினால் மட்டுமே இ.பில் வழங்கப்படும். இல்லையெனில் தபால் மூலமே வழக்கம் போல் வினியோகிக்கப்படும். போஸ்ட்பெய்டு பில் தாரர்களுக்கு எம்.எம்.எஸ். மூலமாக பில் தொகை வழங்கவும் திட்டமிட்டுள்ளோம். இதற்காக வாடிக்கையாளர்கள் பதிவு செய்த மொபைல் போன் எண்ணுக்கு தொடர்ந்து எஸ்.எம்.எஸ். அனுப்பி வருகிறோம்.

    செலவை குறைப்பதற்காக இத்திட்டத்தை செயல்படுத்தவில்லை. இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் இது செயல்படுத்தப்படுகிறது என்றார்.
    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எஸ்இ 2 வெளியீடு மற்றும் புதிய ஐபோன் மாடல் குறித்த சுவாரஸ்ய தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.


     

    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எஸ்இ2 இந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஆப்பிள் நிறுவனம் ஐபோன் எஸ்2 மாடலை வெளியிடாது என தகவல் வெளியாகியுள்ளது. ஐபோன் எஸ்2 முழுமையாக ரத்து செய்யப்பட்டு விட்டதாக ஃபோர்ப்ஸ் வெளியிட்டிருக்கும் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆலிக்சர் வெளியிட்டிருக்கும் தகவல்களில் புதிய ஐபோன் குறித்த விவரங்கள் வெளியாகி இருக்கிறது. முன்னதாக பல்வேறு ஸ்மார்ட்போன் விவரங்களை சரியாக லீக் செய்ததில் பிரபலமாக இருக்கிறது. இவை ஸ்மார்ட்போன் வெளியீட்டை தொடர்ந்து அவற்றுக்கான உபகரணங்களை (அக்சஸரீ) தயாரிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளன.

    உபகரணங்களை தயாரிக்கும் ஆக்சிலர்-க்கு கிடைத்திருக்கும் தகவல்களின் படி ஐபோன் எஸ்2 மாடலுக்கு மாற்றாக இதுவரை ஆப்பிள் வெளியிட்டதில் மிகப்பெரிய ஐபோன் மாடலை வெளியிட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் விலையில் 6.1 இன்ச் ஸ்கிரீன் கொண்ட ஐபோன் X மாடலை ஆப்பிள் உருவாக்கி வருவதாகவும், இதற்கான உபகரணங்களை தயாரிக்க ஆக்சிலர் துவங்கிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக வெளியான தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் X மினி மாடலாக ஐபோன் எஸ்இ2-வை வெளியிடும் என கூறப்பட்டிருந்தது. இந்நிலையி்ல் ஆப்பிள் நிறுவனம் 6.1 இன்ச் அளவில் பெரிய ஐபோன் X வெர்ஷனை சற்றே குறைந்த விலையில் வெளியிட திட்டமிட்டிருக்கிறது. 

    மிகப்பெரிய ஐபோன் X மாடலில் 6.5 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்படும் என்றும் இதன் விலை அதிகமாகவே நிர்ணயம் செயய்ப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 6.5 இன்ச் மாடல் ஐபோன் X பிளஸ் என அழைக்கப்படலாம் என கூறப்படுகிறது. வழக்கம் போல இம்முறை வெளியாகியிருக்கும் தகவல்களுக்கு ஆப்பிள் சார்பில் எவ்வித பதிலும் வழங்கப்படவில்லை.
    இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களான வோடபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லுலார் இணைவது குறித்த முக்கிய அறிவிப்பு நாளை வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



    வோடபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லுலார் நிறுவனங்கள் இணைவதற்கான அனுமதியை மத்திய டெலிகாம் துறை நாளை வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இருநிறுவனங்கள் இணைப்பு அனுமதி வழங்கப்படும் பட்சத்தில் வோடபோன் ஐடியா லிமிட்டெட் என்ற பெயரில் இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமாக உருவெடுக்கும். 

    மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையம் வோடபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லுலார் இணைவதற்கான அனுமதியை அதிகாரப்பூர்வ சான்றிதழ் மூலம் நாளை வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஐடியா மற்றும் வோடபோன் நிறுவனங்கள் இணைந்து இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமாக உருவெடுக்க முடிவு செய்துள்ளன. இரு நிறுவனங்களின் மதிப்பு இந்திய மதிப்பில் ரூ.1.5 லட்சம் கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் இரு நிறுவனங்கள் இணைந்ததும், சுமார் 43 கோடி வாடிக்கையாளர்களுடன் டெலிகாம் சந்தையின் 35% பங்குகளை பெறும்.

    இந்திய டெலிகாம் சந்தையில் ஏற்பட்டிருக்கும் பலத்த போட்டி காரணமாக இலவச வாயஸ் கால்கள் வழங்கப்படும் சூழலில் இருநிறுவனங்கள் இணைப்பின் மூலம், ஐடியா மற்றும் வோடபோன் நிறுவனங்களின் கடன் சுமையை சமாளிக்க முடியும் என கூறப்படுகிறது. இரண்டு நிறுவனங்களின் ஒன்றிணைந்த கடன் சுமை இந்திய மதிப்பில் ரூ.1.15 லட்சம் கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.

    ஐடியா நிறுவனம் சார்பில் தேவையான வங்கி உத்தரவாதம், வோடபோன் இந்தியா கடன்களை ஏற்றுக்கொண்டதும், இருநிறுவனங்கள் இணைப்பு அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 
    ஐஓஎஸ் இயங்குதளத்துக்கான ஜிமெயில் செயலியின் புதிய அப்டேட் பயனர்களுக்கு நோட்டிஃபிகேஷன்களை அதன் முக்கியத்துவம் பார்த்து, அதன்பின் வழங்குகிறது.


    ஐஓஎஸ் இயங்குதளத்துக்கான ஜிமெயில் செயலியில் கூகுள் புதிய அப்டேட் வழங்கியுள்ளது. புதிய அப்டேட் பயனர்களுக்கு நோட்டிஃபிகேஷன்களை அனுப்பும் வழிமுறையை மாற்றியிருக்கிறது.

    ஜிமெயில் இன்பாக்ஸ்-இல் முக்கியத்துவம் வாய்ந்த மின்னஞ்சல்களை பெறும் போது, அதனை செயலி சரியாக கண்டறிந்து கொள்ளும். ஜிமெயிலின் மெஷின் லெர்னிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, நீங்கள் முதலில் படிக்க விரும்பும் மின்னஞ்சல்களை கண்டறியும்.

    புதிய அம்சத்தை செயல்படுத்த ஐஓஎஸ் தளத்தின் ஜிமெயில் செயலியின் செட்டிங்ஸ் மெனு -- நோட்டிஃபிகேஷன் -- ஹை ப்ரியாரிட்டி ஒன்லி (ஏettings menu -- Notifications -- High priority only) ஆப்ஷன்களை க்ளிக் செய்ய வேண்டும். 



    முதற்கட்டமாக இந்த அம்சம் ஐஓஎஸ் இயங்குதளத்தில் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது. எனினும், விரைவில் ஆன்ட்ராய்டு தளத்திலும் இந்த அம்சம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இது டீஃபால்ட் அம்சம் கிடையாது என்பதால், பயனர்கள் இதனை செட்டிங்ஸ் மெனு சென்று தேர்வு செய்ய வேண்டும். அனைத்து ஐஓஎஸ் பயனர்களுக்கும் இந்த அம்சம் இன்னும் சில தினங்களில் வழங்கப்பட்டு விடும் என கூகுள் தெரிவித்துள்ளது.
    ஸ்மார்ட்போன்களில் பயனரின் வங்கி சார்ந்த மிகமுக்கிய தகவல்களை திருடும் ட்ரோஜன் மால்வேர் சார்ந்த விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

    தகவல் தொழில்நுட்ப சேவைகளை வழங்குவதில் பிரபல நிறுவனமாக அறியப்படும் க்விக்ஹீல் (QuickHeal) ட்ரோஜன் மால்வேர் ஒன்றை கண்டறிந்துள்ளது. இது ஸ்மார்ட்போன்களில் பயனர்கள் பயன்படுத்தி வரும் வங்கி சார்ந்த செயலிகளில் இருந்து முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை திருடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வங்கி சார்ந்த பரிவர்த்தனைகள் ஸ்மார்ட்போன்களில் அன்றாடம் அதிகளவு நடைபெறுவதை தொடர்ந்து புதிய அச்சுறுத்தல் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பூனேவில் இயங்கி வரும் க்விக்ஹீல் பாதுகாப்பு ஆய்வகம், பயனர்களின் தகவல்களை ஸ்மார்ட்போன்களில் இருந்து திருடும் இரண்டு ட்ரோஜன்களை கண்டிறிந்திருக்கிறது.

    புதிய மால்வேர் மற்றும் ட்ரோஜன்கள் குறித்த தகவல்களை க்விக்ஹீல் தனது வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதன் படி ஸ்மார்ட்போனில் இதுபோன்ற மால்வேர்களை கண்டறிவது எப்படி என்பது குறித்த தகவல்களும் பதிவிடப்பட்டுள்ளது.


    கோப்பு படம்

    பேங்கிங் ட்ரோஜன் என்றால் என்ன?

    பொதுவாக பேங்கிங் ட்ரோஜன் என்பது செயலி அல்லது மென்பொருள்களில் இருந்து பயனர்களின் பேங்கிங் சார்ந்த விவரங்களை திருடும் தன்மை கொண்டதாகும். 

    பயனர்கள் தங்களது ஸ்மார்ட்போனில் ஆட்டோ-சேவ் செய்திருந்த பேங்க் பாஸ்வேர்டு மற்றும் லாக்-இன் விவரங்கள், வங்கி வலைத்தளங்களுக்கு பயனர் செல்லும் விவரங்கள், மற்றும் வங்கி சார்ந்த இதர நடவடிக்கைகளை பேங்கிங் டேட்டா என அழைக்கப்படுகிறது.

    க்விக்ஹீல் கண்டறிந்த பேங்கிங் ட்ரோஜன்களின் விவரங்கள்

    க்விக்ஹீல் ஆய்வகம் பிளே ஸ்டோரில் இருந்து பயனர் தகவலை திருடும் இரண்டு செயலிகளை கண்டறிந்திருக்கிறது. முதல் ஆப் அடோப் ஃபிளாஷ் பிளேயர் போன்ற ஐகான், இரண்டாவது ஆப் அப்டேட் என்ற பெயர் கொண்டிருக்கிறது. இவை பயனர்களை பிரபல பெயர்கள் மற்றும் ஐகான் மூலம் ஏமாற்றுகின்றன.


    கோப்பு படம்

    இந்த ட்ரோஜன்கள் எவ்வாறு வேலை செய்யும்?

    பயனர்கள் இதுபோன்ற செயலிகளை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து இன்ஸ்டால் செய்யும் போது, செயலி தரப்பில் பயனருக்கு சில அனுமதிகளை வழங்க கோரிக்கை விடுக்கப்படும், இவற்றில் டிவைஸ் அட்மினிஸ்ட்ரேட்டர் செட்டிங்-களும் அடங்கும். இந்த செட்டிங்களில் பாஸ்வேர்டு மாற்றுவது, பாஸ்வேர்டு விதிமுறைகளை செட் செய்வது, லாக் ஸ்கிரீன் மற்றும் பல்வேறு அம்சங்கள் அடங்கும். 

    பயனர் இதற்கான அனுமதியை ரத்து (cancel) செய்தாலும் அடிக்கடி பாப்-அப் ஆகி இதற்கான அனுமதியை கோரும். சில பயனர்கள் செயலியை அன்-இன்ஸ்டால் செய்யலாம், எனினும் பலர் இவற்றை இன்ஸ்டால் செய்து அதற்கான அனுமதியை வழங்கி விடுகின்றனர். ட்ரோஜன் அடங்கிய செயலி பயனர் ஏதேனும் வங்கி சார்ந்த செயலியை இயக்கும் வரை காத்திருந்து, பின் தானாகவே பின்னணியில் இயங்க துவங்கிடும்.

    சில சமயங்களில் போலி விண்டோ திரையில் தோன்றி தானம் செய்ய கிரெடிட் அல்லது டெபிட் கார்டு விவரங்களை பதிவு செய்ய கோரும். இதில் பயனர் லாக்-இன் செய்யும் போது ட்ரோஜன்கள் பயனர் விவரங்களை ஹேக்கர் வைத்திருக்கும் சர்வெருக்கு அனுப்பும், பின் சேகரிக்கப்பட்ட விவரங்கள் தீங்கு விளைவிக்கும் செயல்களுக்கு பயன்படுத்தப்படலாம்.

    புகைப்படம்: நன்றி PIXABAY
    ×