என் மலர்
அறிந்து கொள்ளுங்கள்
ரிலையன்ஸ் ஜியோவின் டபுள் தமாக்கா சலுகைக்கு போட்டியாக பிஎஸ்என்எல் அதிரடி சலுகையை அறிவித்துள்ளது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:
ரிலையன்ஸ் ஜியோவின் டபுள் தமாக்கா சலுகைக்கு போட்டியாக பிஎஸ்என்எல் புதிய சலுகையை அறிவித்துள்ளது.
ரூ.149 விலையில் பிஎஸ்என்எல் அறிவித்திருக்கும் சலுகையில் பயனர்களுக்கு தினமும் 4 ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. 2018 உலக கோப்பை கால்பந்து தொடரை முன்னிட்டு பிஎஸ்என்எல் அறிவித்திருக்கும் புதிய சலுகை ஃபிஃபா உலக கோப்பை சிறப்பு டேட்டா எஸ்டிவி 149 (FIFA World Cup Special Data STV 149) என அழைக்கப்படுகிறது.
ஜூன் 14-ம் தேதி முதல் ஜூலை 15-ம் தேதி வரை இந்த சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த சலுகை ஜியோவின் ரூ.149 சலுகையில் தினமும் 3 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

கோப்பு படம்
புதிய பிஎஸ்என்எல் சலுகை ஏர்டெல் வழங்கும் ரூ.149 சலுகைக்கு போட்டியாக அமைந்துள்ளது. ஏர்டெல் சலுகையில் தினமும் 2 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் சேவைகள் 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
பிஎஸ்என்எல் சேவை வழங்கப்படும் அனைத்து வட்டாரங்களிலும் இன்று (ஜூன் 14) முதல் வழங்கப்படுகிறது.ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களை விட புதிய பிஎஸ்என்எல் சலுகை அதிக டேட்டா வழங்குகிறது. எனினும் புதிய சலுகையில் வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் போன்றவை வழங்கப்படவில்லை.
புதிய பிஎஸ்என்எல் சலுகை அந்நிறுவன அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் முன்னணி ரீசார்ஜ் அவுட்லெட்களில் கிடைக்கிறது. புதிய சலுகை பிஎஸ்என்எல் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் பிரத்யேகமாக கிடைக்கிறது.
கூகுள் டிரான்ஸ்லேட் செயலியில் புதிய தொழில்நுட்பம் சார்ந்து இயங்கும் ஆஃப்லைன் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
கலிஃபோர்னியா:
கூகுள் டிரான்ஸ்லேட் செயலியில் நியூரல் மெஷின் லெர்னிங் தொழில்நுட்பம் சார்ந்த ஆஃப்லைன் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் சாதனத்தில் மொழிமாற்றம் செய்யும் திறன் கொண்டிருக்கிறது.
புதிய தொழில்நுட்பம் சேர்க்கப்பட்டு இருப்பதால், ஆன்ட்ராய்டு அல்லது ஐஓஎஸ் தளங்களில் கூகுள் டிரான்ஸ்லேட் செயலியால் அதிக தரமுள்ள மொழிமாற்றங்களை இணைய வசதி இல்லாதபோதும் மேற்கொள்ள முடியும்.
செயலியில் சேர்க்கப்பட்டு இருக்கும் நியூரல் சிஸ்டம் ஒவ்வொரு வார்த்தையாக மொழிமாற்றம் செய்யாமல், ஒட்டுமொத்த வாக்கியத்தையும் மொழிமாற்றம் செய்யும் என கூகுள் தெரிவித்துள்ளது. மிகவும் நேர்த்தியான மொழிமாற்றம் செய்ய பல்வேறு அம்சங்களை கணக்கில் கொண்டு, அவற்றில் பொருத்தமானவற்றை, கிட்டத்தட்ட மனித குரலிலேயே வழங்கும்.

மொழி தெரியாத, டேட்டா கனெக்டிவிட்டி பெற சிக்கலாக இருக்கும் வெளிநாட்டு பயணங்களின் போது ஆஃப்லைன் டிரான்ஸ்லேஷன் அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒவ்வொரு மொழியும் 35 முதல் 45 எம்பி அளவு கொண்டிருப்பதால், மொபைலில் அதிக ஸ்டோரேஜ் எடுத்துக் கொள்ளாது.
ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் செயலிகளில் நியூரல் மெஷின் டிரான்ஸ்லேஷன் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன் ஆஃப்லைன் டிராஸ்லேஷன் அம்சம் பயன்படுத்தியிருந்தால், ஹோம் ஸ்கிரீனிலேயே பேனர் ஒன்று காட்சியளிக்கும், இதை க்ளிக் செய்ததும் உங்களின் ஆஃப்லைன் ஃபைல்களை அப்டேட் செய்யும்.
ஒருவேளை பயன்படுத்தவில்லை எனில் ஆஃப்லைன் டிரான்ஸ்லேஷன் செட்டிங்ஸ் சென்று, ஆஃப்லைனில் பயன்படுத்த வேண்டிய மொழியை டவுன்லோடு செய்யலாம். அடுத்த சில நாட்களில் ஆஃப்லைன் வசதி கூகுள் டிரான்ஸ்லேட் செயலியின் 59 மொழிகளில் சேர்க்கப்படுகிறது.
சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் இடையேயான காப்புரிமை சார்ந்த வழக்கில் கடந்த மாதம் தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், சாம்சங் நிறுவனம் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்துள்ளது.
கலிஃபோர்னியா:
சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களிடையேயான காப்புரிமை விவகாரத்தை சாம்சங் முடிவுக்கு கொண்டு வருவதாய் தெரியவில்லை.
கடந்த மாதம் ஆப்பிள் நிறுவனத்துக்கு சாதகமாக வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து சாம்சங் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. 34 பக்கங்கள் கொண்ட மேல் முறையீடு மனுவில் சாம்சங் வழங்க உத்தரவிடப்பட்டிருக்கும் ரூ.3600 கோடி தொகை மிகவும் அதிகம் ஆகும், இந்த தீர்ப்பு ஆதாரமற்றது என குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியா மாகானத்தின் சான் ஜோஸ் மாவட்ட நீதிமன்ற நீதிபதி சாம்சங் - ஆப்பிள் நிறுவனங்களின் காப்புரிமை மீறல் வழக்கில் மே மாத வாக்கில் தீர்ப்பு வழங்கினார். சாம்சங் நிறுவனத்துக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பில் சாம்சங் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்துக்கு ரூ.3600 கோடி இழப்பீடாக வழங்க வேண்டும் என உத்தரவிடப்ப்டு இருந்தது.

ஏழு ஆண்டு கால பிரச்சனையில் ஆப்பிள் நிறுவனம் 1 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 6700 கோடி) தொகையை சாம்சங் நிறுவனத்திடம் காப்புரிமை பிரச்சனைக்கான இழப்பீடாக வழங்க வேண்டும் என கோரியது. ஏற்கனவே சாம்சங் நிறுவனம் 54.8 கோடி டாலர்களை இழப்பீடாக வழங்கியிருக்கும் நிலையில் மீதமிருக்கும் 39.9 கோடி டாலர்களை ஆப்பிள் நிறுவனம் கேட்டிருந்தது.
இந்த விவகாரத்தில் இரண்டு காப்புரிமை மீறல்கள்: அதாவது அமெரிக்க காப்புரிமை எண் D618,677 மற்றும் அமெரிக்க காப்புரிமை எண் D593,087 சார்ந்தது ஆகும். இதன் முதல் காப்புரிமை ஐபோனின் முன்பக்கம் கருப்பு நிற செவ்வக பகுதியையும், இரண்டாவது காப்புரிமை பெசல்கள் என அழைக்கப்படும் ஸ்கிரீனை சுற்றியிருக்கும் சிறிய பகுதிகளை சார்ந்தது ஆகும்.
காப்புரிமை சார்ந்த வழக்கு விசாரணையில் ஆப்பிள் நிறுவன வழக்கறிஞர் ஆப்பிள் ஐபோன்களில் வடிவமைப்பும் முக்கியத்துவம் வாயந்த அம்சம் என தெரிவித்திருந்தார். ஆப்பிள் பிரான்டு வடிவமைப்பு புரட்சிகரமானது என்றும் அவர் வாதாடினார். 2011-ம் நடைபெற்ற வழக்கின் போது ஆப்பிள் நிறுவனம் சார்பில் 275 கோடி டாலர்கள் இழப்பீடு கோரப்பட்ட நிலையில் ஆப்பிள் நிறுவனத்துக்கு 105 கோடி டாலர்களை இழப்பீடாக வழங்க சாம்சங் நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டது.
ஆப்பிள் இயங்குதளங்களில் ஆப் உருவாக்குவோர் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை ஆப்பிள் நிறுவனம் மேம்படுத்தியுள்ளது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
கலிஃபோர்னியா:
ஆப்பிள் நிறுவன சாதனங்களில் க்ரிப்டோகரென்சிக்களை மைனிங் செய்யும் செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆப் ஸ்டோர் நெறிமுறைகளை சமீபத்தில் அப்டேட் செய்து புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. புதிய தடை ஆப்பிள் நிறுவனத்தின் அனைத்து தளங்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக மார்ச் மாத வாக்கில் காலென்டர் 2 செயலியை மேக் ஆப் ஸ்டோரில் இருந்து ஆப்பிள் நிறுவனம் நீக்கியது. இந்த ஆப் பயனர்களின் சாதனங்களை க்ரிப்டோகரென்சிக்களை மைன் செய்ய பயன்படுத்திக் கொண்டு, மாற்றாக பிரீமியம் அம்சங்களை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டது.
க்ரிப்டோகரென்சி செயலிகளுக்கு எதிராக ஆப்பிள் மேற்கொண்ட முதல் நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது. முன்னதாக இதுபோன்ற செயலிகளுக்கு எதிராக ஆப்பிள் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொண்டது கிடையாது. ஆப்பிள் ஆப் ஸ்டோர் விதிமுறைகளை மீறியதால் காலென்டர் 2 செயலி நீக்கப்பட்டதாக ஆப்பிள் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்சமயம் ஆப்பிள் நிறுவனம் க்ரிப்டோகரென்சிக்களுக்கு எதிரான புதிய நெறிமுறைகளை அறிவித்துள்ளது. புதிய நெறிமுறைகள் ஐஓஎஸ், மேக் ஓஎஸ், வாட்ச் ஓஎஸ் மற்றும் டிவி ஓஎஸ் செயலிகளுக்கும் பொருந்தும். அந்த வகையில் ஆப்பிள் அறிவித்திருக்கும் புதிய நெறிமுறைகளை தொடர்ந்து பார்ப்போம்.

கோப்பு படம்
- ஆப்பிள் இனி விர்ச்சுவல் கரென்சி வாலெட் செயலிகளை அனுமதிக்கும், எனினும் இதற்கு டெவலப்பர்கள் தங்களை நிறுவனங்களாக பதிவு செய்திருக்க வேண்டும்.
- க்ரிப்டோகரென்சி மைனிங்-ஐ சாதனத்துக்கு வெளியே செய்யும் செயலிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. அதாவது கிளவுட்-சார்ந்த மைனிங் செய்யும் செயலிகள் அனுமதிக்கப்படுகின்றன.
- செயலிகளை கொண்டு பயனர்கள் பணம் செலுத்துவது, பண பரிமாற்றம் அல்லது அனுமதிக்கப்பட்ட எக்சேஞ்ச்களில் க்ரிப்டோகரென்சிக்களை பெறவும் முடியும்.
- இதேபோன்று காயின்களை வழங்கும் செயலிகள், பிட்காயின் பரிமாற்றங்கள், இதர க்ரிப்டோகரென்சி பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்டவை வங்கிகள், நிறுவனங்கள் மற்றும் இதர அதிகாரப்பூர்வ நிதி நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும் அவை சட்டரீதியாகவும் இருக்க வேண்டும்.
- பயனர்களை சமூக வலைத்தள நடவடிக்கை, மற்றவர்களை குறிப்பிட்ட செயலிகளை டவுன்லோடு செய்ய தூண்டுவது மற்றும் செயலிகளை டவுன்லோடு செய்வது உள்ளிட்டவற்றுக்கு க்ரிப்டோகரென்சி செயலிகள் அதன் பயனர்களுக்கு விர்ச்சுவல் காயின்களை வழங்க கூடாது.

கோப்பு படம்
புதிய விதிமுறைகளால் சில மூன்றாம் தரப்பு க்ரிப்டோகரென்சி செயலிகள் தடை செய்யப்படும் சூழலில் இருக்கும் நிலையில், ஆப்பிள் க்ர்ப்டோகரென்சி செயலிகளின் போக்கு முற்றிலும் மாற்றியமைக்கும். புதிய விதிமுறைகளால் எத்தனை செயலிகள் நீக்கப்படும் என்ற தகவல்கள் இனி வரும் நாட்களில் தெரியவரும்.
ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருக்கும் அனைத்து செயலிகளுக்கும் புதிய விதிமுறை பொருந்தும் என்பதால், மேக் மற்றும் ஜெயில்பிரேக் செய்யப்பட்ட ஐபோன்களில் தொடர்ந்து க்ரிப்டோகரென்சிக்களை மைன் செய்ய முடியும்.
பாஸ்போர்ட் விண்ணப்பம் சார்ந்த அனைத்து சேவைகளை வழங்கும் செயலி ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஆமதாபாத்:
பாஸ்போர்ட் அலுவலகம் சார்பில் புதிய மொபைல் ஆப் வெளியிடப்பட்டது. இந்த செயலியை பயன்படுத்தி ஆன்லைனில் பாஸ்போர்ட் விண்ணப்பிக்க முடியும்.
இத்துடன் ஏற்கனவே பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்து இருந்தால், அதன் ஃபைல் நம்பர் மற்றும் பிறந்த தேதி உள்ளிட்டவற்றை கொண்டு விண்ணப்ப நிலையை அறிந்து கொள்ள முடியும். தபால் மூலம் அனுப்பப்பட்ட பாஸ்போர்ட் டெலிவரி சார்ந்த விவரங்களை இந்த செயலி மூலம் டிராக் செய்ய முடியும்.

பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் வழிமுறைகளை மிக எளிமையாக மாற்றும் திட்டத்தின் முதல் படியாக இந்த செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களில் கிடைக்கும் செயலியை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்க முடியும். என ஆமதாபாத் வட்டார பாஸ்போர்ட் அலுவலர் நீலம் ரானி தெரிவித்தார்.
இதனால் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் வழிமுறைகளில் ஏஜென்டுகள் மற்றும் தரகர்களின் உதவியை நாட வேண்டிய அவசியமின்றி நேரடியாக விண்ணப்பதாரர்கள் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கலாம். என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செயலியை கொண்டு பாஸ்போர்ட் சேவா கேந்ரா அல்லது வட்டார பாஸ்போர் மையத்தையும் தேட முடியும்.
வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு தளத்துக்கான பீட்டா பதிப்பில் புதிய அம்சம் சோதனை செய்யப்படுகிறது. இதன் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:
வாட்ஸ்அப் புதிய பீட்டா பதிப்பில் (2.18.179) உங்களுக்கு வரும் மெசேஜ்களை மற்றவர்களுக்கு ஃபார்வேர்டு செய்யும் போது லேபெல் செய்யப்படுகிறது. அந்த வகையில் வாட்ஸ்அப்பில் பகிர்ந்து கொள்ளப்படும் ஃபார்வேர்டு மெசேஜ்களில் இனி ஃபார்டுடெடு (Forwarded) என்ற லேபெல் இருக்கும்.
இந்த புதிய அம்சம் மூலம் இனி உண்மையான மெசேஜ்கள் மற்றும் ஃபார்வேர்டு செய்யப்பட்ட மெசேஜ்களுக்கு வித்தியாசப்படுத்திக் கொள்ள முடியும். இந்த லேபெல் மெசேஜை அனுப்புவோர் மற்றும் அதனை பெறுவோருக்கும் காணப்படும். முன்னதாக பீட்டா செயலியில் மீடியா விசிபிலிட்டி அம்சத்தை மறைக்கும் வசதி வழங்கப்பட்டு இருந்தது. இது கேலரியில் இருக்கும் வாட்ஸ்அப் மீடியாவை மறைக்கவோ அல்லது காண்பிக்கவோ செய்யும்.
இந்த அம்சத்துடன் புதிய கான்டாக்ட் ஷார்ட்கட் அம்சம் வழங்கப்பட்டிருக்கிறது. இது பீட்டா பயனர்களை மிக எளிமையாக கான்டாக்ட்களை சேர்க்க வழி செய்கிறது.

புதிய ஃபார்வேர்டெடு லேபிலை பார்க்க உங்களுக்கு வாட்ஸ்அப் செயலியில் வரும் மெசேஜ்களை தேர்வு செய்து மற்றவர்களுக்கு வாட்ஸ்அப்-இல் ஃபார்வேர்டு செய்ய வேண்டும். இந்த லேபில் மெசேஜின் மேல்புறம் பார்க்க முடியும். குறிப்பாக இந்த லேபிளலை மறைக்கச் செய்யும் ஆப்ஷன் எதுவும் வழங்கப்படவில்லை. இதனால் மெசேஜ்களை மற்றவர்களுக்கு அனுப்பினால் நிச்சயம் அதில் ஃபார்வேர்டடு லேபில் இருக்கும்.
வாட்ஸ்அப் பீட்டா செயலியில் சேர்க்கப்பட்டு இருக்கும் புதிய வசதி ஸ்பேம் மெசஜ்கள் அதிகம் பரப்பப்படுவதை தவிர்க்கவோ அல்லது தெரியப்படுத்தவோ ஏதுவாக இருக்கும். முன்னதாக ஃபார்வேர்டடு மெசேஜ் லேபெல் பிப்ரவரி மாத வாக்கில் காணப்பட்டது. தற்சமயம் பீடடா டெஸ்டிங்-இல் இருக்கும் இந்த அம்சத்தை உடனே பயன்படுத்த வாட்ஸ்அப் பீட்டா செயலியை ஆன்ட்ராய்டு சாதனத்தில் டவுன்லோடு செய்ய வேண்டும்.
மேலும் இந்த செயலி கூகுள் பிளே பீட்டா திட்டம் மற்றும் ஏபிகே மிரர் தளத்தின் ஏபிகே ஃபைல் வடிவிலும் கிடைக்கிறது. புதிய அம்சம் ஐஓஎஸ் தளத்தில் வழங்கப்படுவது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
புகைப்படம்: Twitter
ஃபேஸ்புக் தளத்தில் கண்டறியப்பட்டு இருக்கும் புதிய பிழை அதன் பயனர்கள் பதிவிட்ட போஸ்ட்களை பொதுவெளியில் அனைவரும் பார்க்க செய்கிறது.
புதுடெல்லி:
உலகின் பிரபல சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் சமீப காலங்களில் அதிக சர்ச்சைகளுக்கு ஆளாகி வரும் நிலையில், ஃபேஸ்புக் தளத்தில் கண்டறியப்பட்டு இருக்கும் புதிய பிழை அந்நிறுவனத்துக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.
ஃபேஸ்புக்கின் புதிய பிழை (பக்) அதன் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை பொதுவெளியில் பதிவிட்டிருக்கிறது. இந்த பிழை ஃபேஸ்புக் போஸ்ட் பிதிவிட்டோர், அதனை யாருடன் பகிர்ந்து கொள்ள வேண்டுமென கட்டுப்பாடுகளை செட் செய்திருந்தாலும், அனைவருக்கும் பகிர்ந்து இருக்கிறது.
“தற்சமயம் நடைபெற்றிருக்கும் பிழைக்கு பயனர்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறோம்,” என ஃபேஸ்புக் நிறுவன தனியுரிமை பிரிவு தலைவர் எரின் எகன் தெரிவித்துள்ளார்.

கோப்பு படம்
புதிய பிழை மூலம் பாதிக்கப்பட்ட பயனர்களுக்கு தகவல் அவர்களின் நியூஸ் ஃபீடில் தெரிவிக்கப்படும். “ஃபேஸ்புக்கில் போஸ்ட் செய்வோருக்கு போஸ்ட்களை பொதுவாக போஸ்ட் செய்யக்கோரும் பரிந்துரைகள் தானாக செயல்படுவது தெரியவந்துள்ளது.” என எகன் தெரிவித்துள்ளார்.
“இந்த பிழை சரிசெய்யப்பட்டு விட்டது, இன்று முதல் இந்த பிழை மூலம் பாதிக்கப்போட்டுருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த பிழையில் ஏற்கனவே பயனர்கள் ஏற்கனவே பதிவிட்ட போஸ்ட்களில் எவ்வித மாற்றங்களும் ஏற்படாது.
மேலும் பயனர்கள் முன்பை போன்று தங்களது போஸ்ட்களை யாருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதை தேர்வு செய்ய முடியும். இந்த பிழைக்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறோம்.” என அவர் மேலும் தெரிவித்தார்.

கோப்பு படம்
இந்த பிழை என்ன செய்யும்?
ஃபேஸ்புக்கில் பயனர்கள் போஸ்ட் செய்யும் போது, குறிப்பிட்ட போஸ்ட்-ஐ யார் யார் பார்க்க வேண்டும் என்பதை தேர்வு செய்யக்கோரும் மெனு தெரியும். இதில் பயனர் பப்ளிக் என தேர்வு செய்யும் பட்சத்தில் போஸ்ட்-ஐ அனைவரையும் பார்க்க முடியும். மற்ற ஆப்ஷன்கள் பயனர் தேர்வு செய்வதற்கு ஏற்ப போஸ்ட்-ஐ பார்ப்போர் பிரிக்கப்படுவர்.
எனினும் மே 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை அதிகம் பேர் பார்க்கக்கூடாது என கட்டுப்படுத்தப்பட்ட போஸ்ட்களையும் ஃபேஸ்புக் தானாக மற்றவர்கள் பார்க்கும் படி செய்துள்ளது. செட்டிங் மாற்றப்பட்டு இருப்பதை பயனர்கள் கவனிக்காத பட்சத்தில், அவர்களின் போஸ்ட் அதிகம் பேருக்கு பகிர்ந்து கொள்ளப்படும்.
ஃபேஸ்புக்கின் புதிய பிழை 1.4 கோடி பயனர்களை பாதித்து இருக்கலாம் என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. இதில் பாதிக்கப்பட்ட போஸ்ட்களுக்கான செட்டிங் மாற்றப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோப்பு படம்
ஃபேஸ்புக்கின் சமீபத்திய சொதப்பல்கள்
முன்னதாக கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்துடனான விவகாரம் ஃபேஸ்புக் தளம் மீது பல்வேறு கேள்விகளை எழுப்பியதோடு, உலக நாடுகளின் எச்சரிக்கைக்கு ஆளானது. இந்த விவகாரத்தில் ஃபேஸ்புக் அதிகாரிகள் மற்றும் நிறுவனர் இன்று வரை பதில் அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என அமெரிக்க புலனாய்வு நிறுவனங்களால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட சீன நிறுவனங்களுடன் வாடிக்கையாளர்கள் தகவல்களை பகிர்ந்து கொள்ள ஃபேஸ்புக் நிறுவனம் ஒப்பந்தம் போட்டதாக அறிவித்தது பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியது. அந்த வகையில் ஹூவாய், லெனோவோ, ஒப்போ மற்றும் டிசிஎல் போன்ற நிறுவனங்களுடன் ஃபேஸ்புக் ஒப்பந்தம் மேற்கொண்டது.
பயனர் தகவல் பகிர்ந்து கொள்ளப்பட்ட விவகாரத்தில், ஹூவாய் நிறுவனம் ஃபேஸ்புக் பயனர் தகவல்களை சேகரிக்கவோ, சேமிக்கவோ இல்லை என்றும், ஃபேஸ்புக் நிறுவனத்துடனான ஒப்பந்தம் சேவையை மேம்படுத்தும் நோக்கில் போடப்பட்டது என தெரிவித்தது.
டிஜிடெக் அறிமுகம் செய்திருக்கும் குட்டி சாதனம் இருந்தால் உங்களது பொருட்களை களவு போகாமல் பார்த்து கொள்ள முடியும்.
புதுடெல்லி:
ஸ்மார்ட்போன்களை களவு போகாமல் பார்த்துக் கொள்ள பல்வேறு வழிமுறைகள் இருக்கும் நிலையில், லேப்டாப் அல்லது இதர கேட்ஜெட்களை கண்டறிய போதுமான அளவு சாதனங்களோ வழிமுறைகளோ இல்லை என்றே கூற வேண்டும்.
சுவாரஸ்ய சாதனங்களை அறிமுகம் செய்யும் டிஜிடெக் நிறுவனம் புதிய ஆன்டி-லாஸ்ட் (anti-lost) வயர்லெஸ் டிராக்கர் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த சாதனம் கொண்டு களவு போகும் சாதனங்களை பயனர்கள் மிக எளிமையாக கண்டறிய முடியும். இந்த டிராக்கர் டிஜிடெக் டிராக்கர் எனும் செயலியுடன் இணைக்கப்படுகிறது.
டிஜிடெக் டிராக்கர் ஆப் ஆன்ட்ராய்டு கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர்களில் இலவசமாக டவுன்லோடு செய்ய முடியும். வெவ்வேறு வடிவமைப்புகளில் கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கிறது. இந்த சாதனத்தை கீசெயின், வாலெட், லேப்டாப் மற்றும் இதர சாதனங்களில் இணைத்துக் கொள்ள முடியும்.
மொபைல் செயலியுடன் இணைக்கப்பட்டால், டிராக்கர் இருக்கும் லொகேஷனை கண்டறிய முடியும். ப்ளூடூத் 4.0 கனெக்டிவிட்டி மற்றும் கூடுதல் பேட்டரிகளுடன் கிடைக்கிறது. மின்சாதனங்கள் மட்டுமின்றி இந்த சாதனம் கொண்டு கார்களையும் பாதுகாக்க முடியும்.
இதன் இன்-பில்ட் அலாரம் நிர்ணயிக்கப்பட்ட எல்லைக்குள் சீராக வேலை செய்யும். இத்துடன் இது வேலை செய்யும் எல்லை அளவுகளை மாற்றியமைக்கவும் முடியும். அதிகபட்சம் 30 மீட்டர்கள் பரப்பளவில் இயங்கும் டிராக்கர் நிர்ணயிக்கப்பட்ட எல்லையை கடக்கும் போது ஸ்மார்ட்போனில் அலாரம் அடிக்கும்.
இத்துடன் இணைக்கப்பட்ட சாதனம் நிர்ணயிக்கப்பட்ட எல்லைக்கு வெளியே அசைந்தாலும், பயனர்களுக்கு எச்சரிக்கை செய்யப்படுகிறது. டிராக்கர் பயன்படுத்தி, ரிமோட் முறையில் ஸ்மார்ட்போன்களில் புகைப்படங்களை எடுக்கவும் முடியும். புகைப்படம் அல்லது வீடியோக்களை எடுக்க டிஜிடெக் டிராக்கரில் உள்ள பட்டனை அழுத்த வேண்டும்.
கேம்ப்ர்டிஜ் அனாலிடிகாவை தொடர்ந்து சீன நிறுவனங்களுடன் தகவல்களை பகிர்ந்து கொண்ட விவகாரத்தில் ஃபேஸ்புக் புதிய பதில் அளித்துள்ளது.
வாஷிங்டன்:
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என அமெரிக்க புலனாய்வு நிறுவனங்களால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட சீன நிறுவனங்களுடன் வாடிக்கையாளர்கள் தகவல்களை பகிர்ந்து கொள்ள ஃபேஸ்புக் நிறுவனம் ஒப்பந்தம் போட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
"அமெரிக்காவில் இயங்கி வரும் மற்ற தொழில்நுட்ப நிறுவனங்களை போன்றே ஃபேஸ்புக் நிறுவனமும் சீன நிறுவனங்களுடன் இணைந்து தங்களது சேவைகளை சீன நிறுவன சாதனங்களில் இயங்க வைக்க ஒன்றிணைந்து பணியாற்றியது," என ஃபேஸ்புக் நிறுவனத்தின் மொபைல் ஒப்பந்தங்கள் பிரிவு தலைவர் ஃபிரான்சிஸ்கோ வரெலா வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஹூவாய் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தங்களின் படி வாடிக்கைாயளர்களின் தகவல்கள் ஹூவாய் சர்வர்களில் சேமிக்கப்படாமல், வாடிக்கையாளர் சாதனத்தில் தான் சேமிக்கப்பட்டது என்றும் அவர் மேலும் தெரிவித்தார். ஃபேஸ்புக் சார்பில் ஹூவாய் மட்டுமின்றி லெனோவோ, ஒப்போ மற்றும் டிசிஎல் போன்ற நிறுவனங்களுடனும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

கோப்பு படம்
பிளாக்பெரி நிறுவனத்துக்கு வழங்கப்பட்டதை போன்ற உரிமையை மட்டுமே சீன நிறுவனங்களுக்கும் வழங்கியதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. பிளாக்பெரி மற்றும் ஃபேஸ்புக் இடையேயான ஒப்பந்தத்தில் ஃபேஸ்புக் பயனர்கள் மற்றும் அவர்களது நண்பர்களின் மதம், அரசியல் விருப்பம், பணி, கல்வி மற்றும் இதர விவரங்களை அறிந்து கொள்ள வழி செய்கிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வாடிக்கையாளர்கள் மற்றும் அவர்களது நண்பர்களின் தகவல்களை செல்போன் நிறுவனங்கள் முறைகேடாக பயன்படுத்தி வந்தது எங்களுக்கு தெரியாது என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.
ஃபேஸ்புக் ஆப் சேவைகளின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், செல்போன் நிறுவனங்களுடனான இன்டர்ஃபேஸ் ஏற்பாடுகளை ஃபேஸ்புக் நிறுவனம் முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளது.

கோப்பு படம்
ஹூவாய் மற்றும் ஃபேஸ்புக் நிறுவனங்களிடையே வாடிக்கையாளர்களின் தகவல்களை பகிர்ந்து கொள்வது குறித்து 2010-ம் ஆண்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின, இவற்றின் காலக்கெடு இந்த வார இறுதியில் நிறைவுறுகிறது. என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. மேலும் மற்ற சீன நிறுவனங்களுடனான ஒப்பந்தங்களும் நிறைவுற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹூவாய், லெனோவோ, ஒப்போ மற்றும் டிசிஎல் போன்ற சீன நிறுவனங்களுடன் ஃபேஸ்புக் டேட்டா பகிர்ந்து கொள்வது குறித்த ஒப்பந்தங்கள் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை பயன்படுத்த வழி செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வகை ஒப்பந்தங்களின் மூலம் 2007-ம் ஆண்டு முதல் ஃபேஸ்புக் தளத்தை மொபைலில் பயன்படுத்துவோர் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் போடப்பட்டிருக்கின்றன.
சீன நிறுவனங்களுடன் ஃபேஸ்புக் சார்பில் போடப்பட்ட ஒப்பந்தங்களுக்கு அமெரிக்க சட்ட வல்லுநர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கோப்பு படம்
"ஹூவாய் மற்றும் டிசிஎல் போன்ற நிறுவனங்களுடன் ஃபேஸ்புக் ஏபிஐ - அப்ளிகேஷன் ப்ரோகிராமிங் இன்டர்ஃபேஸ் தகவல்களை பகிர்ந்து கொண்ட விவகாரம் சட்ட ரீதியாக அச்சத்தை ஏற்படுத்துகிறது. ஃபேஸ்புக் தனது வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை சீன சர்வர்களுக்கு வழங்கவில்லை என்பதை எவ்வாறு விளக்கும் என அறிந்து கொள்ள விரும்புகிறேன்," என புலனாய்வு பிரிவு துணை தலைவர் மார்க் வார்னர் தெரிவித்துள்ளார்.
ஏபிஐ அல்லது அப்ளிகேஷன் ப்ரோகிராம் இன்டர்ஃபேஸ் என்பது மென்பொருள்களின் பாகங்கள் எவ்வாறு இயங்கும் என்பதை குறிக்கும். சீன நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகள் மிக கவனமாக கையாளப்பட்டதாக ஃபேஸ்புக் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சீன அரசுடனான தொடர்பு குறித்து ஹூவாய் பலமுறை மறுத்திருக்கிறது. மேலும், ஹூவாய் உள்கட்டமைப்புகள் மற்றும் கம்ப்யூட்டிங் சாதனங்கள் உலகம் முழுக்க 170 நாடுகளில் பயன்படுத்தப்படுவதாக ஹூவாய் நீண்ட காலமாக அறிவிக்கத்து வருகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் சர்வதேச டெவலப்பர் நிகழ்வில் மென்பொருள் சார்ந்த பல்வேறு முக்கிய அறிவிப்புகளை ஆப்பிள் அறிவித்தது. #WWDC18 #Memoji
கலிஃபோர்னியா:
ஆப்பிள் நிறுவனத்தின் 2018 சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வில் மென்பொருள் சார்ந்த புதிய அம்சங்களை அந்நிறுவனம் அறிவித்தது. ஐஓஎஸ் 12 துவங்கி, வாட்ச் ஓஎஸ், டிவி ஓஎஸ், மேக் ஓஎஸ் என ஆப்பிள் சாதனங்களுக்கான இயங்குதளங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு இயங்குதளத்திலும் பல்வேரு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த ஆண்டு டெவலப்பர் நிகழ்வில் ஹார்டுவேர் சார்ந்து எவ்வித அறிவிப்பும் இடம்பெறவில்லை.
சிரி சேவையை மேம்படுத்தியிருக்கும் ஆப்பிள், ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி, ஏஆர்கிட் போன்றவற்றை ஐஓஎஸ் 12 இயங்குதளத்தில் சேர்த்திருக்கிறது. இத்துடன் மேக் மற்றும் ஆப்பிள் வாடச் சாதனங்களை முன்பை விட மிக எளிமையாக இயக்க வழி செய்யும் அம்சங்களை புதிய இயங்குதளங்கள் கொண்டிருக்கின்றன.

ஐஓஎஸ் 12-இல் ஸ்மார்ட்போன் பயன்பாட்டை குறைக்கும் ஆப்பிள்:
ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்து இருப்பதை ஆப்பிள் நிறுவனம் ஐஓஎஸ் 12 தளத்தின் புதிய அம்சம் மூலம் தெரிவித்திருக்கிறது. டு நாட் டிஸ்டர்ப் (DND), ஸ்கிரீன்டைம் ஆப் உள்ளிட்டவை உங்களின் ஸ்மார்ட்போன் பயன்பாட்டை டிராக் செய்து தகவல்களை மிக துல்லியமாக வழங்குகிறது.
பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் பயன்பாடு குறித்த தகவல்களை பார்த்து, அதற்கு ஏற்ப செட்டிங்களை மாற்றியமைக்க முடியும். இதேபோன்று அனைவரும் தங்களின் பயன்பாட்டை குறைக்க புதிய செட்டிங்களை பயன்படுத்திக் கொள்ள முடியும். ஒவ்வொரு செயலியை பயன்படுத்த குறிப்பிட்ட நேரத்தை செட் செய்து விட்டால், நீங்கள் செட் செய்த நேரத்தில் உங்களுக்கு நோட்டிஃபிகேஷன் மூலம் எச்சரிக்கை செய்யப்படும். இதன் மூலம் செயலிகளில் அதிக நேரம் செலவழிப்பதை தவிர்க்க முடியும்.

அனைவரையும் கவர்ந்த மீமோஜி:
ஆப்பிள் நிறுவனத்தின் அனிமோஜி அம்சத்தின் மேம்படுத்தப்பட்ட வடிவமாக மீமோஜி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த அம்சம் உங்களது முகத்தை அனிமேஷன் வடிவில் உருவாக்கி ஐமெசேஜில் பகிர்ந்து கொள்ள வழி செய்கிறது. மெசேஜஸ் கேமராவில் இதுபோன்ற பல்வேறு வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
இதேபோன்று ஃபேஸ்டைம் அம்சத்தில் இனி க்ரூப் கால்களை மேற்கொள்ள முடியும். அந்த வகையில் இனி ஒரே சமயத்தில் 32 பேருடன் க்ரூப் கால்களை பேச முடியும். இத்துடன் வீடியோவில் ஒருவர் பேசும் போது, அவரின் வீடியோ தானாக பெரியதாகும் படி நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது. க்ரூப் ஃபேஸ்டைம் அம்சம் ஐபோன், ஐபேட் மற்றும் ஐமேக் சாதனங்களில் வேலை செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் ஆப்பிள் வாட்ச் கொண்டு ஆடியோ முறையிலும் பதில் அளிக்க முடியும்.

சிரி வழங்கும் சிறப்பு சேவைகள் என்னென்ன?
ஆப்பிள் வாய்ஸ் அசிஸ்டன்ட் சேவை போட்டியாளர்களை பந்தாடியிருந்தாலும், அதிக வசதிகளை வழங்குவதில் அமேசானின் அலெக்சா மற்றும் கூகுள் அசிஸ்டன்ட் ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்த இரு சேவைகளும் ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் வடிவில் சந்தையை ஆக்கிரமித்துவிட்டன.
2018 டெவலப்பர் நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் சிரி ஷார்ட்கட்களை அறிமுகம் செய்தது. இதை கொண்டு சில செயலிகளில் குறிப்பிட்ட கமான்டுகளை உருவாக்க முடியும். இத்துடன் உங்களின் அன்றாட பயன்பாட்டை வைத்து சிரி இனி உங்களுக்கு பயன்தரும் பரிந்துரைகளை வழங்கும்.

ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி அற்புதங்கள்:
ஐஓஎஸ் 12 இயங்குதளத்தின் முதல் அறிவிப்பாக ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி இருந்தது. ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி தொழில்நுட்பம் டிஜிட்டல் புகைப்படங்களை நிஜ உலகில் பிரதிபலித்து விசேஷ ஹெட்போன்கள் மூலம் அவற்றை போன்களில் பார்க்க வழி செய்கின்றன. போக்கிமான் கோ அல்லது ஃபில்ட்டர்கள் மற்றும் லென்ஸ்கள் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டியின் பிரபல கேம் மற்றும் செயலிகளாக இருந்தன.
ஒரு ஆண்டுக்கு முன் ஆப்பிள் டெவலப்பர் நிகள்வில் அந்நிறுவனம் டெவலப்பர்களுக்காக ஏஆர் கிட் அறிமுகம் செய்தது. இந்த கிட் பயன்படுத்தி டெவலப்பர்கள் ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களில் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி செயலிக்களை உருவாக்க முடியும். மேலும் வால்வ் நிறுவனத்துடன் இணைந்து விர்ச்சுவல் ரியாலிட்டி தளத்தை டெஸ்க்டாப் மேக் சாதனங்களுக்கு கொண்டு வரயிருப்பதாக ஆப்பிள் அறிவித்து இருந்தது.
இந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி தளத்துக்கென USDZ எனும் புதிய ஃபார்மேட் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஃபார்மேட் கொண்டு பல்வேறு வசதிகளை வழங்க ஆப்பிள் நிறுவனம் பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்துள்ளது. அந்த வகையில் அடோப் நிறுவனம் மெஷர் எனும் புதிய ஏஆர் செயலியை அறிமுகம் செய்துள்ளது.
இத்துடன் ஆப்பிள் நிறுவனம் ஏஆர் கிட் 2 அறிமுகம் செய்து, அதில் செய்யக்கூடியவற்றை நிகழ்ச்சியின் மேடையிலேயே நிகழ்த்தி காண்பித்தது. விர்ச்சுவல் ரியாலிட்டி மற்றும் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி தொழில்நுட்பத்துக்கான சந்தை வரும் ஆண்டுகளில் பெருமளவு வளர்ச்சி பெற இருக்கிறது. அந்த வகையில் வாடிக்கையாளர்கள் சுமார் 2.2 கோடி விஆர் மற்றும் ஏஆர் ஹெட்செட்களை வாங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்ஸ்டாகிராம் சேவையில் நியூஸ் ஃபீட் ஸ்டோரிக்களை ஒவ்வொருத்தருக்கும் பிரத்யேகமாக வழங்க அந்நிறுவனம் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது.
புதுடெல்லி:
இன்ஸ்டாகிராம் சேவையில் ரிவர்ஸ் க்ரோனோலாஜிக்கல் ஃபீட் வழிமுறையை 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் நிறுத்தியது. அந்த வகையில் இன்ஸ்டாகிராம் புதிய ரேன்கிங் அல்காரிதத்தை அறிமுகம் செய்துள்ளது.
அந்த வகையில் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் ஒவ்வொருத்தருக்கும் பிரத்யேக ஃபீட் வழங்க மெஷின் லெர்னிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளது. மெஷின் லெர்னிங் பயன்படுத்துவதால், மற்றவர்கள் பயன்படுத்தும் கணக்குகளையே நீங்கள் பயன்படுத்தினாலும் அவற்றுடன் நீங்கள் உரையாடும் விதத்தை கொண்டு பிரத்யேக ஃபீட் பார்க்க முடியும்.
இன்ஸ்டாகிராம் நியூஸ் ஃபீடில் நீங்கள் பார்க்கும் போஸ்ட்கள் விருப்பம், பயன்பாட்டு அளவு மற்றும் உரையாடல் என மூன்று அம்சங்களை கணக்கில் கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது. குறிப்பிட்ட வகையிலான போஸ்ட்களுக்கு முன்னதாக நீங்கள் அணுகிய விதத்தை புரிந்து கொண்டு நியூஸ் ஃபீடில் வரும் போஸ்ட்களை நீங்கள் விரும்பும் வகையில் இருப்பதை இன்ஸ்டாகிராம் சரியாக புரிந்து கொள்ளும்.

கோப்பு படம்
மேலும் இந்த வழிமுறை போஸ்ட்களை பகிர்ந்து கொண்டவர்களிடம் நீங்கள் எத்தனை முறை உரையாடி இருக்கிறீர்கள் என்பதை கமென்ட், லைக் மற்றும் இதர அ்மசங்களை கருத்தில் கொண்டு கண்டறிந்து கொள்கிறது. மூன்று முக்கிய அம்சங்களை கடந்து ஃப்ரீக்வன்சி, பின்பற்றுவது மற்றும் பயன்பாடு உள்ளிட்டவற்றை அடுத்தக்கட்ட முக்கிய அம்சங்களாக எடுத்துக் கொள்கிறது.
குறிப்பிட்ட நபர்களை ஃபாளோ செய்யும் போது ஃப்ரீக்வன்சி அம்சம் நீங்கள் எத்தனை முறை அவர்களின் போஸ்ட்களை பார்க்கின்றீர்கள் என்பதையும், பயன்பாடு என்பது நீங்கள் எத்தனை நேரம் போஸ்ட்களில் செலவிடுகின்றீர்கள் என்பதை புரிந்து கொள்ளும்.
மேலும் ஃபீட்களில் எதுபோன்ற போஸ்ட்கள் வரவேண்டும் என்பதை கட்டுப்படுத்தவில்லை என்றும், இன்ஸ்டா வாசிகள் விரும்பும் போஸ்டகள் மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் அம்சங்களை புரிந்து கொண்டு புகைப்படம் அல்லது வீடியோ என அனைத்து ஃபீட்களும் தெரியும் என இன்ஸ்டாகிராம் தெரிவித்துள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் 2018 டெவலப்பர் நிகழ்வு இன்று துவங்க இருக்கும் நிலையில், நிகழ்வில் எதிர்பார்க்கப்படும் முக்கிய அறிவிப்புகளை தொடர்ந்து பார்ப்போம்.
கலிஃபோர்னியா:
ஆப்பிள் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் தனது மென்பொருள் அப்டேட் சார்ந்த முக்கிய அறிவிப்புகளை டெவலப்பர் நிகழ்வில் தெரிவித்து வருகிறது. அந்த வகையில் 2018 டெவலப்பர் நிகழ்வு இன்று (ஜூன் 4) துவங்குகிறது. அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் அந்நாட்டு நேரப்படி காலை 10.00 மணிக்கு (இந்திய நேரப்படி இரவு 10.30 மணி) துவங்குகிறது. ஆப்பிள் 2018 டெவலப்பர் நிகழ்வு ஜூன் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது.
ஆப்பிள் டெவலப்பர் நிகழ்வு 2018
ஆப்பிள் நிறுவனம் இம்முறை அதிக அம்சங்களை அறிமுகம் செய்வதை காட்டிலும் பிழை திருத்தங்களில் அதிக கவனம் செலுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் புதிய அம்சங்களை விட பிழைகளை சரிசெய்வதில் அதிக முக்கியத்துவம் வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த ஆண்டு ஐபோன் மற்றும் ஆப்பிள் வாட்ச்களில் என்எஃப்சி சிப்களை திறக்கலாம் என கூறப்படுகிறது. இதை கொண்டு ஆப்பிள் பே சேவையை தவிர அக்சஸ் கார்டுகளை போன்று கதவுகளை திறக்க பயன்படுத்த முடியும்.

ஐஓஎஸ் 12
ஐஓஎஸ் 12 இயங்குதளத்தில நோட்டிஃபிகேஷன் சென்டரை மாற்றுவதை பெரும்பாலானோர் எதிர்பார்க்கின்றனர். சமீப காலங்களில் நோட்டிஃபிகேஷன்களை ஐபோன் இயக்கும் விதம் கவலை கொள்ளும் வகையில் இருக்கிறது. ஆன்ட்ராய்டு இயங்குதளத்துடன் ஒப்பிடும் போது ஐஓஎஸ்-இல் நோட்டிஃபிகேஷன் சென்டர் மோசமாக இயங்குவதாக பலரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இத்துடன் புதிய இயங்குதளத்தில் உடல்நலம் சார்ந்த அம்சங்களில் அதிக கவனம் செலுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ச் ஓஎஸ் 5
வாட்ச் ஓஎஸ் 5 இயங்குதளத்தில் உடல்நலம் மற்றும் ஆக்டிவிட்டி சார்ந்த புதிய அம்சங்கள் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை ஆப்பிள் வாட்ச் சாதனத்தை உடல்நலத்தை மேம்படுத்த ஏதுவான சாதனமாக விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இம்முறை உடற்பயிற்சி சார்ந்த அம்சங்களும், டிராக் செய்ய புதிய வசதிகளை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
இத்துடன் உறக்கத்தை டிராக் செய்யும் அம்சம் வாட்ச் ஓஎஸ் இயங்குதளத்தில் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு உறக்கத்தை டிராக் செய்யும் பெடிட் நிறுவனத்தை கைப்பற்றிய நிலையில், புதிய வாட்ச் ஓஎஸ் இயங்குதளத்தில் இந்த அம்சம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதவிர ஆப்பிள் வாட்ச் சாதனத்தில் மூன்றாம் தரப்பு ஃபேஸ்களை இன்ஸ்டால் செய்யும் வசதி அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. வாட்ச் ஓஎஸ் 4.3 தளத்தில் இருக்கும் மறைக்கப்பட்ட குறியீட்டில் இந்த அம்சம் வழங்கப்படலாம் என்றே தெரிகிறது.

மேக் ஓஎஸ் 10.14
மேக் சாதனங்களில் ஐஓஎஸ் செயலிகள் வேலை செய்வது சார்ந்த தகவல் சமீபத்தில் வெளியான நிலையில், இந்த அம்சம் 2019 ஆண்டில் தான் வழங்கப்படும் என கூறப்படுகிறது. மற்ற அம்சங்களை காட்டிலும், இந்த அம்சம் மேக் ஓஎஸ் தளத்தில் பலரும் விரும்பும் அம்சமாக இருக்கும்.
ஐஓஎஸ் இயங்குதளத்துடன் ஒப்பிடும் போது மேக் ஆப் ஸ்டோரில் அதிகளவு செயலிகள் இல்லாததே இதற்கு முக்கிய காரணமாக கூறமுடியும். மேலும் நெட்ஃப்ளிக்ஸ், ஹாட்ஸ்டார், கானா, சாவன் மற்றும் யூடியூப் போன்ற செயலிகள் மேக் ஆப் ஸ்டோரில் இதுவரை வழங்கப்படாமல் உள்ளது.
ஐஓஎஸ் தளத்தில் கிடைக்கும் செயலிகளை மேக் சாதனத்தில் பயன்படுத்தும் வசதி வழங்கப்படும் பட்சத்தில் பாடல்கள், வீடியோக்களை டவுன்லோடு செய்ய முடியும்.

டிவி ஓஎஸ் 12
ஆப்பிள் டிவி பெட்டியை இயக்கும் டிவி ஓஎஸ் 12 இயங்குதளம் மற்ற தளங்களுடன் ஒப்பிடும் போது வேகம் குறைவாக அப்டேட்களை வழஹ்குகிறது. முந்தைய டிவி ஓஎஸ் தளத்தில் சில அம்சங்கள் வழங்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு மேலும் புதிய அம்சங்களை பயனர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த பட்டியலில் முதன்மையானதாக இருப்பது பிக்சர்-இன்-பிக்சர் மோட் எனலாம், இந்த அம்சம் ஒரே சமயத்தில் இரு அளவுகளில் இருவேறு வீடியோக்களை பிளே செய்யும். ஒரு வீடியோ அளவில் சிறியதாகவும், மற்றொன்று பின்னணியிலும் ஓடிக்கொண்டிருக்கும்.
இதேபோன்று பிரத்யேக ஹோம் ஆப் அதிகம் எதிர்பார்க்கப்படும் அம்சமாக இருக்கிறது. டிவி ஓஎஸ் பயனர்கள் ஆப்பிள் நியூஸ் செயலியின் வீடியோ-சென்ட்ரிக் பதிப்பையும் பயனர்கள் நிச்சயம் விரும்புவர். இத்துடன் டால்பி அட்மோஸ் வசதி, டிவி செயலியில் நெட்ஃப்ளிக்ஸ் இன்டகிரேஷன், மேம்படுத்தப்பட்ட ரிமோட் ஆப் உள்ளிட்டவை அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் தனது மென்பொருள் அப்டேட் சார்ந்த முக்கிய அறிவிப்புகளை டெவலப்பர் நிகழ்வில் தெரிவித்து வருகிறது. அந்த வகையில் 2018 டெவலப்பர் நிகழ்வு இன்று (ஜூன் 4) துவங்குகிறது. அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் அந்நாட்டு நேரப்படி காலை 10.00 மணிக்கு (இந்திய நேரப்படி இரவு 10.30 மணி) துவங்குகிறது. ஆப்பிள் 2018 டெவலப்பர் நிகழ்வு ஜூன் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது.
ஆப்பிள் டெவலப்பர் நிகழ்வு 2018
ஆப்பிள் நிறுவனம் இம்முறை அதிக அம்சங்களை அறிமுகம் செய்வதை காட்டிலும் பிழை திருத்தங்களில் அதிக கவனம் செலுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் புதிய அம்சங்களை விட பிழைகளை சரிசெய்வதில் அதிக முக்கியத்துவம் வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த ஆண்டு ஐபோன் மற்றும் ஆப்பிள் வாட்ச்களில் என்எஃப்சி சிப்களை திறக்கலாம் என கூறப்படுகிறது. இதை கொண்டு ஆப்பிள் பே சேவையை தவிர அக்சஸ் கார்டுகளை போன்று கதவுகளை திறக்க பயன்படுத்த முடியும்.

ஐஓஎஸ் 12
ஐஓஎஸ் 12 இயங்குதளத்தில நோட்டிஃபிகேஷன் சென்டரை மாற்றுவதை பெரும்பாலானோர் எதிர்பார்க்கின்றனர். சமீப காலங்களில் நோட்டிஃபிகேஷன்களை ஐபோன் இயக்கும் விதம் கவலை கொள்ளும் வகையில் இருக்கிறது. ஆன்ட்ராய்டு இயங்குதளத்துடன் ஒப்பிடும் போது ஐஓஎஸ்-இல் நோட்டிஃபிகேஷன் சென்டர் மோசமாக இயங்குவதாக பலரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இத்துடன் புதிய இயங்குதளத்தில் உடல்நலம் சார்ந்த அம்சங்களில் அதிக கவனம் செலுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ச் ஓஎஸ் 5
வாட்ச் ஓஎஸ் 5 இயங்குதளத்தில் உடல்நலம் மற்றும் ஆக்டிவிட்டி சார்ந்த புதிய அம்சங்கள் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை ஆப்பிள் வாட்ச் சாதனத்தை உடல்நலத்தை மேம்படுத்த ஏதுவான சாதனமாக விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இம்முறை உடற்பயிற்சி சார்ந்த அம்சங்களும், டிராக் செய்ய புதிய வசதிகளை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
இத்துடன் உறக்கத்தை டிராக் செய்யும் அம்சம் வாட்ச் ஓஎஸ் இயங்குதளத்தில் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு உறக்கத்தை டிராக் செய்யும் பெடிட் நிறுவனத்தை கைப்பற்றிய நிலையில், புதிய வாட்ச் ஓஎஸ் இயங்குதளத்தில் இந்த அம்சம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதவிர ஆப்பிள் வாட்ச் சாதனத்தில் மூன்றாம் தரப்பு ஃபேஸ்களை இன்ஸ்டால் செய்யும் வசதி அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. வாட்ச் ஓஎஸ் 4.3 தளத்தில் இருக்கும் மறைக்கப்பட்ட குறியீட்டில் இந்த அம்சம் வழங்கப்படலாம் என்றே தெரிகிறது.

மேக் ஓஎஸ் 10.14
மேக் சாதனங்களில் ஐஓஎஸ் செயலிகள் வேலை செய்வது சார்ந்த தகவல் சமீபத்தில் வெளியான நிலையில், இந்த அம்சம் 2019 ஆண்டில் தான் வழங்கப்படும் என கூறப்படுகிறது. மற்ற அம்சங்களை காட்டிலும், இந்த அம்சம் மேக் ஓஎஸ் தளத்தில் பலரும் விரும்பும் அம்சமாக இருக்கும்.
ஐஓஎஸ் இயங்குதளத்துடன் ஒப்பிடும் போது மேக் ஆப் ஸ்டோரில் அதிகளவு செயலிகள் இல்லாததே இதற்கு முக்கிய காரணமாக கூறமுடியும். மேலும் நெட்ஃப்ளிக்ஸ், ஹாட்ஸ்டார், கானா, சாவன் மற்றும் யூடியூப் போன்ற செயலிகள் மேக் ஆப் ஸ்டோரில் இதுவரை வழங்கப்படாமல் உள்ளது.
ஐஓஎஸ் தளத்தில் கிடைக்கும் செயலிகளை மேக் சாதனத்தில் பயன்படுத்தும் வசதி வழங்கப்படும் பட்சத்தில் பாடல்கள், வீடியோக்களை டவுன்லோடு செய்ய முடியும்.

டிவி ஓஎஸ் 12
ஆப்பிள் டிவி பெட்டியை இயக்கும் டிவி ஓஎஸ் 12 இயங்குதளம் மற்ற தளங்களுடன் ஒப்பிடும் போது வேகம் குறைவாக அப்டேட்களை வழஹ்குகிறது. முந்தைய டிவி ஓஎஸ் தளத்தில் சில அம்சங்கள் வழங்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு மேலும் புதிய அம்சங்களை பயனர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த பட்டியலில் முதன்மையானதாக இருப்பது பிக்சர்-இன்-பிக்சர் மோட் எனலாம், இந்த அம்சம் ஒரே சமயத்தில் இரு அளவுகளில் இருவேறு வீடியோக்களை பிளே செய்யும். ஒரு வீடியோ அளவில் சிறியதாகவும், மற்றொன்று பின்னணியிலும் ஓடிக்கொண்டிருக்கும்.
இதேபோன்று பிரத்யேக ஹோம் ஆப் அதிகம் எதிர்பார்க்கப்படும் அம்சமாக இருக்கிறது. டிவி ஓஎஸ் பயனர்கள் ஆப்பிள் நியூஸ் செயலியின் வீடியோ-சென்ட்ரிக் பதிப்பையும் பயனர்கள் நிச்சயம் விரும்புவர். இத்துடன் டால்பி அட்மோஸ் வசதி, டிவி செயலியில் நெட்ஃப்ளிக்ஸ் இன்டகிரேஷன், மேம்படுத்தப்பட்ட ரிமோட் ஆப் உள்ளிட்டவை அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது.






