search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bug"

    • திட்டக்குடி அருகே பூச்சி கடித்து வாலிபர் பலியானர்.
    • வீட்டுக்கு வந்த அவர் மயங்கி விழுந்தார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் தொழுதூர் அடுத்துள்ள மேல் ஐவனூரை சேர்ந்த அருள் வேந்தன் மகன் அருள்தாஸ் (26). இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர். மேலும் மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இவர் இயற்கை உபாதை கழிக்க சென்றபோது விஷ பூச்சி கடித்து விட்டது.  வீட்டுக்கு வந்த அவர் மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலே அருள்தாஸ் இறந்துவிட்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

    ஃபேஸ்புக் தளத்தில் கண்டறியப்பட்டு இருக்கும் புதிய பிழை அதன் பயனர்கள் பதிவிட்ட போஸ்ட்களை பொதுவெளியில் அனைவரும் பார்க்க செய்கிறது.
    புதுடெல்லி:

    உலகின் பிரபல சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் சமீப காலங்களில் அதிக சர்ச்சைகளுக்கு ஆளாகி வரும் நிலையில், ஃபேஸ்புக் தளத்தில் கண்டறியப்பட்டு இருக்கும் புதிய பிழை அந்நிறுவனத்துக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.

    ஃபேஸ்புக்கின் புதிய பிழை (பக்) அதன் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை பொதுவெளியில் பதிவிட்டிருக்கிறது. இந்த பிழை ஃபேஸ்புக் போஸ்ட் பிதிவிட்டோர், அதனை யாருடன் பகிர்ந்து கொள்ள வேண்டுமென கட்டுப்பாடுகளை செட் செய்திருந்தாலும், அனைவருக்கும் பகிர்ந்து இருக்கிறது.  

    “தற்சமயம் நடைபெற்றிருக்கும் பிழைக்கு பயனர்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறோம்,” என ஃபேஸ்புக் நிறுவன தனியுரிமை பிரிவு தலைவர் எரின் எகன் தெரிவித்துள்ளார்.


    கோப்பு படம்

    புதிய பிழை மூலம் பாதிக்கப்பட்ட பயனர்களுக்கு தகவல் அவர்களின் நியூஸ் ஃபீடில் தெரிவிக்கப்படும். “ஃபேஸ்புக்கில் போஸ்ட் செய்வோருக்கு போஸ்ட்களை பொதுவாக போஸ்ட் செய்யக்கோரும் பரிந்துரைகள் தானாக செயல்படுவது தெரியவந்துள்ளது.” என எகன் தெரிவித்துள்ளார். 

    “இந்த பிழை சரிசெய்யப்பட்டு விட்டது, இன்று முதல் இந்த பிழை மூலம் பாதிக்கப்போட்டுருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த பிழையில் ஏற்கனவே பயனர்கள் ஏற்கனவே பதிவிட்ட போஸ்ட்களில் எவ்வித மாற்றங்களும் ஏற்படாது. 

    மேலும் பயனர்கள் முன்பை போன்று தங்களது போஸ்ட்களை யாருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதை தேர்வு செய்ய முடியும். இந்த பிழைக்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறோம்.” என அவர் மேலும் தெரிவித்தார். 


    கோப்பு படம்

    இந்த பிழை என்ன செய்யும்?

    ஃபேஸ்புக்கில் பயனர்கள் போஸ்ட் செய்யும் போது, குறிப்பிட்ட போஸ்ட்-ஐ யார் யார் பார்க்க வேண்டும் என்பதை தேர்வு செய்யக்கோரும் மெனு தெரியும். இதில் பயனர் பப்ளிக் என தேர்வு செய்யும் பட்சத்தில் போஸ்ட்-ஐ அனைவரையும் பார்க்க முடியும். மற்ற ஆப்ஷன்கள் பயனர் தேர்வு செய்வதற்கு ஏற்ப போஸ்ட்-ஐ பார்ப்போர் பிரிக்கப்படுவர். 

    எனினும் மே 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை அதிகம் பேர் பார்க்கக்கூடாது என கட்டுப்படுத்தப்பட்ட போஸ்ட்களையும் ஃபேஸ்புக் தானாக மற்றவர்கள் பார்க்கும் படி செய்துள்ளது. செட்டிங் மாற்றப்பட்டு இருப்பதை பயனர்கள் கவனிக்காத பட்சத்தில், அவர்களின் போஸ்ட் அதிகம் பேருக்கு பகிர்ந்து கொள்ளப்படும்.

    ஃபேஸ்புக்கின் புதிய பிழை 1.4 கோடி பயனர்களை பாதித்து இருக்கலாம் என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. இதில் பாதிக்கப்பட்ட போஸ்ட்களுக்கான செட்டிங் மாற்றப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


    கோப்பு படம்

    ஃபேஸ்புக்கின் சமீபத்திய சொதப்பல்கள்

    முன்னதாக கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்துடனான விவகாரம் ஃபேஸ்புக் தளம் மீது பல்வேறு கேள்விகளை எழுப்பியதோடு, உலக நாடுகளின் எச்சரிக்கைக்கு ஆளானது. இந்த விவகாரத்தில் ஃபேஸ்புக் அதிகாரிகள் மற்றும் நிறுவனர் இன்று வரை பதில் அளித்து வருகின்றனர். 

    இந்நிலையில், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என அமெரிக்க புலனாய்வு நிறுவனங்களால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட சீன நிறுவனங்களுடன் வாடிக்கையாளர்கள் தகவல்களை பகிர்ந்து கொள்ள ஃபேஸ்புக் நிறுவனம் ஒப்பந்தம் போட்டதாக அறிவித்தது பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியது. அந்த வகையில் ஹூவாய், லெனோவோ, ஒப்போ மற்றும் டிசிஎல் போன்ற நிறுவனங்களுடன் ஃபேஸ்புக் ஒப்பந்தம் மேற்கொண்டது.

    பயனர் தகவல் பகிர்ந்து கொள்ளப்பட்ட விவகாரத்தில், ஹூவாய் நிறுவனம் ஃபேஸ்புக் பயனர் தகவல்களை சேகரிக்கவோ, சேமிக்கவோ இல்லை என்றும், ஃபேஸ்புக் நிறுவனத்துடனான ஒப்பந்தம் சேவையை மேம்படுத்தும் நோக்கில் போடப்பட்டது என தெரிவித்தது.
    வாட்ஸ்அப் செயலியில் புதிய பிழை கண்டறியப்பட்டுள்ளது. இது என்ன செய்யும் என்ற தகவலை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    வாட்ஸ்அப் செயலியில் புதிய பிழை கண்டறியப்பட்டுள்ளது. இது செயலியில் நீங்கள் பிளாக் செய்தவர்களையும் உங்களுக்கு குறுந்தகவல் அனுப்ப வழி செய்கிறது.

    தற்சமயம் கண்டறியப்பட்டு இருக்கும் புதிய பிழை வாட்ஸ்அப் செயலியில் நீங்கள் பிளாக் செய்த கான்டாக்ட்கள், எப்படியோ உங்களுக்கு குறுந்தகவல் அனுப்ப முடிகிறது. புதிய பிழையை வாட்ஸ்அப் உறுதி செய்யவோ இதை சரி செய்வதற்கான அப்டேட் வழங்குவது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை. 

    எனினும் நீங்கள் பிளாக் செய்தவர்கள் உங்களுக்கு குறுந்தகவல் அனுப்பாமல் இருக்க இந்த வழிமுறையை பின்பற்றலாம். முதலில் நீங்கள் பிளாக் செய்த கான்டாக்ட்-ஐ அன்பிளாக் செய்து பின் மீண்டும் பிளாக் செய்யலாம். இவ்வாறு செய்தால் பிளாக் செய்த கான்டாக்ட் உங்களுக்கு அனுப்பும் குறுந்தகவல்கள் எதுவும் வராது.

    பிளாக் செய்த கான்டாக்ட்களுக்கு குறுந்தகவல் அனுப்புவதோடு இந்த பிழை அவர்களின் ஸ்டேட்டஸ், ப்ரோஃபைல் தகவல் உள்ளிட்ட தகவல்களையும் பார்க்க வழி செய்கிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் பிளாக் செய்த கான்டாக்ட், பிளாக் செய்யாத கான்டாக்ட் பெறும் அனைத்து அம்சங்களையும் பெற முடிகிறது. இந்த பிழை ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களில் கண்டறியப்பட்டுள்ளது.

    கடந்த வாரம் வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட்ட அப்டேட் வாட்ஸ்அப் க்ரூப்களில் டிஸ்க்ரிப்ஷன் சேர்ப்பது, க்ரூப் அட்மின்களுக்கு கூடுதலாக புதிய வசதிகள், மென்ஷன்ஸ் அம்சம் மற்றும் க்ரூப்களில் உள்ளவர்களை தேடும் அம்சங்களை வழங்கியது. சமீபத்தில் க்ரூப் வீடியோ காலிங் அம்சம் சர்வர் சார்ந்த அப்டேட் மூலம் வழங்கப்பட்டது.
    ×