என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பயனர்களிடம் மன்னிப்பு கேட்கும் ஃபேஸ்புக்
Byமாலை மலர்8 Jun 2018 5:35 AM GMT (Updated: 8 Jun 2018 5:35 AM GMT)
ஃபேஸ்புக் தளத்தில் கண்டறியப்பட்டு இருக்கும் புதிய பிழை அதன் பயனர்கள் பதிவிட்ட போஸ்ட்களை பொதுவெளியில் அனைவரும் பார்க்க செய்கிறது.
புதுடெல்லி:
உலகின் பிரபல சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் சமீப காலங்களில் அதிக சர்ச்சைகளுக்கு ஆளாகி வரும் நிலையில், ஃபேஸ்புக் தளத்தில் கண்டறியப்பட்டு இருக்கும் புதிய பிழை அந்நிறுவனத்துக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.
ஃபேஸ்புக்கின் புதிய பிழை (பக்) அதன் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை பொதுவெளியில் பதிவிட்டிருக்கிறது. இந்த பிழை ஃபேஸ்புக் போஸ்ட் பிதிவிட்டோர், அதனை யாருடன் பகிர்ந்து கொள்ள வேண்டுமென கட்டுப்பாடுகளை செட் செய்திருந்தாலும், அனைவருக்கும் பகிர்ந்து இருக்கிறது.
“தற்சமயம் நடைபெற்றிருக்கும் பிழைக்கு பயனர்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறோம்,” என ஃபேஸ்புக் நிறுவன தனியுரிமை பிரிவு தலைவர் எரின் எகன் தெரிவித்துள்ளார்.
கோப்பு படம்
புதிய பிழை மூலம் பாதிக்கப்பட்ட பயனர்களுக்கு தகவல் அவர்களின் நியூஸ் ஃபீடில் தெரிவிக்கப்படும். “ஃபேஸ்புக்கில் போஸ்ட் செய்வோருக்கு போஸ்ட்களை பொதுவாக போஸ்ட் செய்யக்கோரும் பரிந்துரைகள் தானாக செயல்படுவது தெரியவந்துள்ளது.” என எகன் தெரிவித்துள்ளார்.
“இந்த பிழை சரிசெய்யப்பட்டு விட்டது, இன்று முதல் இந்த பிழை மூலம் பாதிக்கப்போட்டுருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த பிழையில் ஏற்கனவே பயனர்கள் ஏற்கனவே பதிவிட்ட போஸ்ட்களில் எவ்வித மாற்றங்களும் ஏற்படாது.
மேலும் பயனர்கள் முன்பை போன்று தங்களது போஸ்ட்களை யாருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதை தேர்வு செய்ய முடியும். இந்த பிழைக்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறோம்.” என அவர் மேலும் தெரிவித்தார்.
கோப்பு படம்
இந்த பிழை என்ன செய்யும்?
ஃபேஸ்புக்கில் பயனர்கள் போஸ்ட் செய்யும் போது, குறிப்பிட்ட போஸ்ட்-ஐ யார் யார் பார்க்க வேண்டும் என்பதை தேர்வு செய்யக்கோரும் மெனு தெரியும். இதில் பயனர் பப்ளிக் என தேர்வு செய்யும் பட்சத்தில் போஸ்ட்-ஐ அனைவரையும் பார்க்க முடியும். மற்ற ஆப்ஷன்கள் பயனர் தேர்வு செய்வதற்கு ஏற்ப போஸ்ட்-ஐ பார்ப்போர் பிரிக்கப்படுவர்.
எனினும் மே 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை அதிகம் பேர் பார்க்கக்கூடாது என கட்டுப்படுத்தப்பட்ட போஸ்ட்களையும் ஃபேஸ்புக் தானாக மற்றவர்கள் பார்க்கும் படி செய்துள்ளது. செட்டிங் மாற்றப்பட்டு இருப்பதை பயனர்கள் கவனிக்காத பட்சத்தில், அவர்களின் போஸ்ட் அதிகம் பேருக்கு பகிர்ந்து கொள்ளப்படும்.
ஃபேஸ்புக்கின் புதிய பிழை 1.4 கோடி பயனர்களை பாதித்து இருக்கலாம் என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. இதில் பாதிக்கப்பட்ட போஸ்ட்களுக்கான செட்டிங் மாற்றப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்பு படம்
ஃபேஸ்புக்கின் சமீபத்திய சொதப்பல்கள்
முன்னதாக கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்துடனான விவகாரம் ஃபேஸ்புக் தளம் மீது பல்வேறு கேள்விகளை எழுப்பியதோடு, உலக நாடுகளின் எச்சரிக்கைக்கு ஆளானது. இந்த விவகாரத்தில் ஃபேஸ்புக் அதிகாரிகள் மற்றும் நிறுவனர் இன்று வரை பதில் அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என அமெரிக்க புலனாய்வு நிறுவனங்களால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட சீன நிறுவனங்களுடன் வாடிக்கையாளர்கள் தகவல்களை பகிர்ந்து கொள்ள ஃபேஸ்புக் நிறுவனம் ஒப்பந்தம் போட்டதாக அறிவித்தது பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியது. அந்த வகையில் ஹூவாய், லெனோவோ, ஒப்போ மற்றும் டிசிஎல் போன்ற நிறுவனங்களுடன் ஃபேஸ்புக் ஒப்பந்தம் மேற்கொண்டது.
பயனர் தகவல் பகிர்ந்து கொள்ளப்பட்ட விவகாரத்தில், ஹூவாய் நிறுவனம் ஃபேஸ்புக் பயனர் தகவல்களை சேகரிக்கவோ, சேமிக்கவோ இல்லை என்றும், ஃபேஸ்புக் நிறுவனத்துடனான ஒப்பந்தம் சேவையை மேம்படுத்தும் நோக்கில் போடப்பட்டது என தெரிவித்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X